Showing posts with label இனப் படுகொலை. Show all posts
Showing posts with label இனப் படுகொலை. Show all posts

Thursday, June 20, 2019

நாஸிகளுடன் ஒத்துழைத்த "யூத ஒட்டுக் குழு" பற்றிய திரைப்படம்


கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற, "சவுலின் மகன்" என்ற ஹங்கேரி நாட்டுப் படம், நாஸிகள் காலத்து யூத இனப் படுகொலையை விபரமாக சித்தரிக்கின்றது. போலந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் தடுப்பு முகாமில், யூதர்கள் வகை தொகையின்றி, நச்சு வாயு கொடுத்து படுகொலை செய்த சம்பவங்களைப் பற்றி அறிந்திருப்போம். இந்தத் திரைப் படம் அதனை மிகவும் விரிவாக எடுத்துக் காட்டுகின்றது என்பது, அதன் சிறப்பம்சம்.

ஜெர்மன் நாஸிகள், யூதர்களை படுகொலை செய்வதற்கு, யூதர்களையே பணியில் ஈடுபடுத்தினார்கள்! கொஞ்சம் பலசாலிகளான யூதர்களை தேர்ந்தெடுத்து, "சொன்டர் கமாண்டோ" (Sonder Kommando) என்று பெயரிட்டார்கள். தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப் படும் யூதர்களின், ஆடைகளைக் களைவது, அவர்களது உடைமைகளை வகைப் படுத்தி, தனித் தனியாக அடுக்கி வைப்பதில் இருந்து அவர்களது பணிகள் ஆரம்பமாகின்றன.

நிர்வாணமாக்கப் பட்ட யூதர்களை, நச்சு வாயு ஊட்டி கொலை செய்வது மட்டுமல்ல, சடலங்களை இழுத்துச் சென்று நிலக்கரி போட்டு எரிப்பதும், சாம்பலை ஆற்றில் கரைப்பதும், சொன்டர் கமாண்டோவின் பணிகள். இறந்த யூதர்களின் உடல்களை இழுத்துச் சென்று ஓரிடத்தில் குவித்து வைக்க வேண்டும். நச்சு வாயுக் குளியல் நடந்த இடத்தில், நிலத்தை சுத்தம் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் நடந்த கொடூரங்களை, வேறெந்த திரைப்படமாகிலும் இந்தளவு விபரமாக எடுத்துக் காட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

திரைப்படத்தின் கதை மிகச் சிறியது. அவுஷ்வித்ஸ் முகாமில், சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும், ஹங்கேரி நாட்டை சேர்ந்த சவுலின் மகனும் நச்சு வாயு ஊட்டி படுகொலை செய்யப் படுகிறான். தனது மகனின் உடலை, யூத மத அனுஷ்டானங்களின் படி, அடக்கம் செய்ய வேண்டும் என்பது சவுலின் விருப்பம். அதனால், சடலங்களை பரிசோதிக்கும் மருத்துவர் (மருத்துவர்களும் யூதக் கைதிகள் தான்) ஒருவரின் உதவியுடன், மகனின் சடலத்தை தனது வதிவிடத்தில் மறைத்து வைக்கிறான்.

சொன்டர் கமாண்டோக்களில் யூத ராபி (மத குரு) இருக்கிறாரா என்று, சவுல் பல இடங்களிலும் தேடுகிறான். ஆனால், ராபிக்கள் யாரும் தம்மை அடையாளப் படுத்த அஞ்சுகின்றனர். இறந்த யூதர்களின் சாம்பலை ஆற்றில் கரைக்கும் இடத்தில், ஒரு கிரேக்க யூத ராபியை கண்ட சவுல், அவரை தன்னோடு வருமாறு கெஞ்சுகிறான். ஆனால், அவர் எதுவும் பேசாமல், தான் அடையாளம் காணப் பட்டதால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அசம்பாவிதம் நடக்கும் இடத்திற்கு வரும் நாஸி இராணுவ அதிகாரி, அந்த ராபியை சுட்டுக் கொல்கிறான்.

இறுதியில், எரிப்பதற்காக கொண்டு செல்லப் பட்ட பிரெஞ்சு யூதர்களில் ஒரு ராபியை கண்டுபிடித்த சவுல், அவரை தன்னோடு வருமாறு கூட்டிச் செல்கிறார். நாஸிகளின் கெடுபிடிகளை மீறி, சொன்டர் கமாண்டோக்கள் தாங்கும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும், அங்கே வரும் பிற யூத பணியாளர்கள், சவுலின் மகனின் பிரேதம் கிடப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அப்போது "எங்களை எல்லாம் கொல்லப் பார்க்கிறாய்..." என்று சொல்லும் பொழுது, "நாங்கள் எப்போது இறந்து விட்டோம்..." என்று சவுல் பதில் கூறுகின்றான்.

அதே நேரம், நாஸிகளுக்கு எதிரான ஆயுதமேந்திய எழுச்சிக்கு, பிற சொன்டர் கமாண்டோக்கள் தயாராகிறார்கள். அவர்களுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வந்து சேருகின்றன. ஒரு தருணத்தில், தங்களில் ஒருவனை நாஸிகள் எரித்து விட்டார்கள் என்று அறிந்த சொன்டர் கமாண்டோக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்.

முகாமில் ஆயுத மோதல் நடக்கிறது. அங்கு நடக்கும் கலவரத்தை பயன்படுத்திக் கொண்டு, சவுல் தனது மகனின் சடலத்தை தூக்கிக் கொண்டு, ராபியுடன் தப்பி ஓடுகின்றான். காட்டுப் பகுதி ஒன்றில், மத அனுஷ்டானங்களுடன் சிறுவனின் சடலத்தை புதைக்கும் முயற்சி தோல்வியடைகின்றது.

ஏனெனில், முகாமை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நாஸி படையினரிடம் இருந்து தப்பியோடும், சொன்டர் கமாண்டோக்கள் அந்த வழியாக வருகின்றனர். ஓர் ஆற்றைக் கடக்கும் நேரம், சவுல் தனது மகனின் சடலத்தை பறிகொடுக்கிறான்.

காட்டுக்குள் இன்னும் சில மைல் தூரம் ஓடினால் போதும். அப்போது, ஏற்கனவே போலந்தின் சில பகுதிகளை விடுதலை செய்து விட்ட, சோவியத் செம்படையினரிடம் தஞ்சம் கோரலாம். இல்லாவிட்டால், காடுகளுக்குள் மறைந்திருக்கும் கெரில்லாக் குழுக்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.

ஓடி வந்த களைப்பில், சவுலும், யூத கிளர்ச்சியாளர்களும் ஒரு குடிசைக்குள் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால், வேட்டை நாய்களுடன் வரும் நாஸி படையினர், அந்த இடத்தை அண்மித்து விடுகின்றனர். இறுதியில் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் படுவதுடன் படம் முடிவடைகின்றது.

யூதர்களை அழித்தொழிக்கும் பணிக்கு, நாஸிகளால் ஈடுபடுத்தப் பட்ட சொன்டர் கமாண்டோக்களின் வரலாறு ஏற்கனவே தெரிந்த விடயம் தான். உண்மையில், அவர்களது ஆயுட்காலமும், வேலை செய்யும் சிறிது காலம் தான் நீடித்தது. தேவை முடிந்தவுடன், நாஸிகள் அவர்களையும் கொன்றனர்.

நாஸிகளின் காட்டாட்சியில் நடந்த கொடூரங்களை விரிவாக எடுத்துரைக்கும் இந்தத் திரைப்படம், வெளியில் அதிகம் அறியப் படாத பக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும் யூதர்கள், தமது சொந்த இனத்தவர்களை எரிக்கும் பொழுது, எந்தளவு வேதனையுடன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருப்பார்கள்? படத்தில் ஓரிடத்தில் கதாநாயகன் சொல்வதைப் போன்று, "எப்போதோ இறந்து விட்ட", நடைப்பிணமாகத் தான் வாழ்ந்திருப்பார்கள்.

இரண்டாம் போரின் முடிவில் இனப்படுகொலையில் அகப்படாமல் உயிர் தப்பிய யூதர்களில் பலர், நாஸிகளுடன் ஒத்துழைத்த "சொன்டர் கமாண்டோக்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளின்  படையினர் அவர்கள் மீது அனுதாபம் காட்டவில்லை.  அந்த யூதர்களை நாஸிகளின் ஒட்டுக் குழுவாகவே கருதினார்கள். அதனால் சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது.


Sunday, June 16, 2019

வரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை!

ராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை? 


கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்ள மக்களை இனப்படுகொலை செய்து, அவர்களது சொத்துக்களை சூறையாடிய காட்சியை சித்தரிக்கும் ஓவியம். இன்றைய கடாரம் மலேசியாவின் தனி மாகாணமாக உள்ளது. அங்கு வாழும் மக்கள் இன்றைக்கும் சோழப் படைகள் செய்த இனப்படுகொலைகளை நினைவுகூர்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், அன்றைய ராஜராஜசோழன், இன்றைய ராஜபக்சே மாதிரியான ஒருவன்.

மதிகெட்ட தமிழினவாதிகள் மறைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை! 



ராஜராஜ சோழனின் சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பாண்டிய நாட்டையும், ஈழ நாட்டையும் ஆக்கிரமித்த சோழப் படைகள் அங்கு வாழ்ந்த மக்களை பிராமணர்கள், தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த வித்தியாசமும் பாராமல் இனப்படுகொலை செய்துள்ளனர். சோழப் படைகள் சென்றவிடமெல்லாம் மக்களை இனப்படுகொலை செய்வதும், சொத்துக்களை சூறையாடுவதும் வழமையானவை. 

அயல்நாடுகளில் வாழ்ந்த மக்கள் சோழ இராணுவத்தைக் கண்டு அஞ்சினார்கள். ஆனால், படுகொலைகளையும், சூறையாடுவதையும் சோழர்கள் பெருமையாகக் கருதிக் கொண்டனர். பிற நாடுகளை ஆக்கிரமித்து கொள்ளையடித்த செல்வங்களில் ஒரு பகுதி கோயில்களுக்கு தானமாக வழங்கப் பட்டது. ஒரு கட்டத்தில் ராஜராஜசோழன் முன்னூறு கிலோ தங்கம் தானம் கொடுத்ததாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது. 

சோழ நாட்டு பொருளாதாரம் கோயில் நகரங்களில் தங்கி இருந்தது. பெருமளவு நிலங்களை கையகப் படுத்தி வைத்திருந்த, கோயிலை மையமாகக் கொண்டு இயங்கும் நகரங்களில் ஆதிக்கம் செலுத்திய வணிகர் சங்கங்கள் அரசனுக்கு வரி கட்டுவதில்லை. ஆகையினால், அரச கஜானாவை நிரப்புவதற்காக அயல் நாடுகள் மீது படையெடுத்து கொள்ளையடிப்பதை சோழர்கள் ஒரு கொள்கையாக வைத்திருந்தனர். 

(ஆதாரம்: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula, by Paul Michel Munoz) 

******

ராஜ‌ராஜ‌சோழ‌ன் - செங்கிஸ்கான் நட்புற‌வு வாழ்க‌!
 
"மொங்கோலிய- ராஜ‌ராஜ‌சோழ‌ன்" செங்கிஸ்கானை, த‌மிழின‌வாதிக‌ள் த‌ம‌து "த‌மிழ்- செங்கிஸ்கான்" ராஜ‌ராஜ‌சோழ‌னுட‌ன் ஒப்பிட்டு பெருமைப் ப‌டுவ‌தில் த‌வ‌றில்லை. அத‌ற்காக‌ "த‌மிழீழ‌த் தேசிய‌த் தலைவ‌ர் ம‌கிந்த‌ ராஜ‌பக்ச‌...." என்ற‌ மாதிரி த‌ப்புத் த‌ப்பாக‌ எழுதி ப‌திவு போடுவ‌து ந‌ல்ல‌ நகைச்சுவை.

"மொங்கோலிய‌ ராஜ‌ராஜ‌ சோழ‌ன்" செங்கிஸ்கானின் ப‌டையெடுப்புகளை த‌டுப்ப‌த‌ற்காக‌த் தான் சீன‌ப் பெருஞ்சுவ‌ர் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து. அப்ப‌டி இருந்தும் மொங்கோலிய‌ப் ப‌டைக‌ள் சீனாவை கைப்ப‌ற்றி ஆக்கிர‌மித்த‌ன‌. செங்கிஸ்கானின் பேர‌னின் ஆட்சிக் கால‌ம் வ‌ரையில் சீனா மொங்கோலிய சாம்ராஜ்ய‌த்தின் கீழான‌ அடிமை நாடாக‌ இருந்த‌து.

ஆர்.எஸ்.எஸ். பிர‌ச்சார‌ பீர‌ங்கியான‌ "ஈழ‌த்து மாரிதாஸ்" என‌ அழைக்க‌ப்ப‌டும் வாசு முருக‌வேள், மொங்கோலியாவை சீனாவுட‌ன் போட்டு குழ‌ப்பிக் கொள்கிறார். இப்ப‌டி ஒரு அரைவேக்காட்டுத் த‌ன‌மான‌ ப‌திவு எழுத‌ முன்ன‌ர் கொஞ்ச‌ம் வ‌ர‌லாறு ப‌டிக்க‌ வேண்டும். பொல்லுக் கொடுத்து அடிவாங்க‌க் கூடாது.

த‌மிழ்த் தேசிய‌த்தை த‌லைப்பாகையாக‌ க‌ட்டிக் கொண்டு "ராஜ‌ராஜ‌ சோழ‌ன் எம் முப்பாட்ட‌ன்" என்று கூவும் சில‌ த‌மிழ‌ர்க‌ள் மாதிரி, "செங்கிஸ்கான் எம் முப்பாட்ட‌ன்" என்று சில‌ மொங்கோலிய‌ர்க‌ள் கூவுகிறார்க‌ள். த‌மிழ்த் தேசிய‌த் த‌ந்தை ராஜ‌ராஜ‌சோழ‌ன் என்றால், மொங்கோலிய‌த் தேசிய‌த் த‌ந்தை செங்கிஸ்கான். இர‌ண்டுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

அது ம‌ட்டும‌ல்ல‌, உங்க‌ளுடைய‌ ராஜ‌ராஜ‌ சோழ‌னும், அவ‌ர்க‌ளுடைய‌ செங்கிஸ்கானும் ஒரே கால‌க‌ட்ட‌த்தில் ஒரே மாதிரி ந‌ட‌ந்து கொண்ட‌ன‌ர். உண்மையிலேயே அன்றைய செங்கிஸ்கானின் பேர‌ர‌சு, சோழ‌ப் பேர‌ர‌சுட‌ன் ந‌ட்பாக‌ இருந்த‌து. சீனாவில் சோழ‌ வ‌ணிக‌ர்க‌ளின் குடியிருப்பும் இருந்த‌து. அப்போது க‌ட்டிய‌ சைவ‌க் கோயில் இன்ன‌மும் இடிபாடுக‌ளுட‌ன் அங்குள்ள‌து.

த‌மிழ்நாடாக‌ இருந்தாலும், மொங்கோலியாவாக‌ இருந்தாலும் தேசிய‌வாத‌/இன‌வாத‌க் கொள்கை ஒன்று தான். இன‌ம் இன‌த்தோடு தானே சேரும்? இனி என்ன‌? மொங்கோலிய‌ இன‌வாதிக‌ளுக்கும், த‌மிழ் இன‌வாதிகளுக்கும் இடையிலான‌ மாம‌ன், ம‌ச்சான் உற‌வை புதுப்பிக்க‌ வேண்டிய‌து தானே?

Wednesday, November 15, 2017

சிம்பாப்வே இராணுவ சதிப்புரட்சி - பின்னணித் தகவல்கள்


சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில், இராணுவம் அரச கட்டிடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனாலும் "அது சதிப்புரட்சி இல்லையாம்!" என்று இராணுவத் தளபதி தெரிவித்தார். 93 வயதான ஜனாதிபதி முகாபேயும், அவரது குடும்பத்தினரும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

சமீப காலங்களில் முகாபே சுகயீனமுற்று இருந்த படியால், தேசத்தின் உண்மையான நிர்வாகத்தை அவரது 52 வயதான மனைவி கிரேஸ் தான் கவனித்து வந்தார். முகாபே குடும்பத்தினர் முன்னிலைப் படுத்தப் பட்டதற்கு ஆளும் ZANU-PF கட்சிக்குள் அதிருப்தி இருந்ததையும் மறுக்க முடியாது.

கடந்த சில வாரங்களாக, சிம்பாப்வே ஆளும் கட்சிக்குள் களையெடுப்புகள் நடந்து வந்தன. "களையெடுப்பு தொடர்ந்தால் இராணுவ சதிப்புரட்சி நடக்கும்" என்று ஒரு இராணுவ ஜெனரல் நேற்றுத் தான் எச்சரித்து இருந்தார். இன்று நடந்துள்ள சதிப்புரட்சிக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதை ஊகித்தறிவது கடினமான விடயம் அல்ல.

நேற்று முன்தினம், திங்கட்கிழமை தான், துணை அதிபர் எமர்சன் (Emmerson Mnangagwa) பதவி விலக்கப் பட்டார். "அதிபர் பதவியை கைப்பற்ற சூனியம் செய்ததாக" முகாபே அவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். (ஆப்பிரிக்காவில் இன்றும் பல மக்கள் சூனியம் செய்வதை உண்மை என்று நம்புகிறார்கள்.) ஆகவே, துணை அதிபர் எமர்சன் "தனக்கு பாதுகாப்பு இல்லை" என்று கூறி, அன்றைய தினமே நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

சதிப்புரட்சி நடந்த தினமான இன்று, பதவியிறக்கப் பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி எமர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கி உள்ளார். அவரே சிம்பாப்வே ஆட்சியை பொறுப்பேற்று நடத்துவார் என ஊகிக்கப் படுகின்றது. "முகாபேயின் சர்வாதிகாரம் ஒழிந்தது" என்று மகிழ்ச்சி தெரிவிப்போர் ஒரு விடயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதே எமர்சன் தான் முகாபேயின் இரும்புக் கரமாக செயற்பட்டவர். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிராக நடந்த விடுதலைப் போராட்டத்தின் போது, எமர்சன் முகாபேயின் நம்பிக்கைக்குரிய தோழராக இருந்தவர். சுதந்திர சிம்பாப்வே அரசில் எமர்சன் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான், 1983 ம் ஆண்டு, நிதேபெலே(Ndebele) இனப்படுகொலை நடந்தது.

சிம்பாப்வே தெற்கில் வாழும் நிதேபெலே மொழி பேசும் சிறுபான்மை இனத்தவர்கள், பெரும்பான்மை மொழியான ஷோனா பேசும் முகாபே அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்தனர். இது இரண்டு மொழிகளைப் பேசும் மக்களுக்கு இடையிலான இனப்பிரச்சினையாகவும் இருந்த படியால், அரச பயங்கரவாத நடவடிக்கை மூலமே அந்த மக்களை பணிய வைக்க முடிந்தது. 

அன்று குறைந்தது இருபதாயிரம் நிதேபெலே மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர். இராணுவத்தின் ஐந்தாவது படைப்பிரிவான, குகுரஹண்டி (Gukurahundi) என்ற பெயர் தாங்கிய சிறப்புப் படையணியினரே படுகொலைகளில் ஈடுபட்டனர். ஷோனா மொழியில் குகுரஹன்டி என்றால் "குப்பைகளை ஒதுக்கும் மழை" என்று அர்த்தம். இதுவே அன்றைய இனப்பிரச்சினையின் தீவிரத் தன்மையை புரிய வைக்கப் போதுமானது.

சிம்பாப்வேயில் நடந்த இராணுவ சதிப்புரட்சியை, மேற்கத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளும் ஆதரிப்பதாகத் தெரிகின்றது. பதவியிறக்கப் பட்ட ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே, அங்கு நடந்த பொதுத் தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப் பட்டவர். ஆனால், மேற்குலகம் முகாபேயை ஒரு "சர்வாதிகாரி" என்று சொல்கிறது! அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளருக்கு, மேற்குலகம் தாராளமாக உதவிய போதிலும் தேர்தலில் வெல்ல முடியவில்லை.

மேற்குலகின் பார்வையில் "சிம்பாப்வே மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியை அகற்றி விட்டு, சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியுள்ள இனப்படுகொலையாளி" சிறந்த நண்பராக தெரிகிறார். ஆட்சியில் இருப்பது சர்வாதிகாரி, இனப்படுகொலையாளி யாராக இருந்தாலும், மேற்குலக பொருளாதார  நலன்கள் பாதுகாக்கப் பட்டால் சரி தானே?

சிம்பாப்வே நாட்டில் ஆயிரக் கணக்கான ஆங்கிலேய, டச்சு "விவசாயிகள்" வாழ்கிறார்கள். காலனிய காலத்தில் குடியேறிய அவர்களை விவசாய- தொழில் அதிபர்கள் என்று அழைப்பது தான் முறையானது. ஆயிரக்கணக்கான ஏக்கர்களை சொந்தமாக வைத்திருந்து, அவற்றில் புகையிலை பயிர் செய்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். பதினேழு வருடங்களுக்கு முன்னர், "முன்னாள் விடுதலைப் போராளிகள்" வெள்ளையரின் நிலங்களை வன்முறை மூலம் பறித்து வந்தனர்.

தற்போது பதவியிறக்கப் பட்டுள்ள ரொபேர்ட் முகாபேயும் முன்னாள் போராளிகளின் நடவடிக்கையை ஆதரித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மேற்குலக நாடுகள் சிம்பாப்வேக்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வந்தன. குறிப்பாக, அந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான புகையிலையை வாங்க மறுத்து வந்தன. அதனால், சிம்பாப்வே பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்றது. அதன் பணம் மதிப்பிறங்கி செல்லாக் காசாகியது. இதனால் அந்நிய நாணயங்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது.

அட்சி மாற்றத்தின் பின்னர் இராணுவ சதிப்புரட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முகாபேயின் மனைவியும் அரசியல் வாரிசுமான கிரேஸ் முகாபேயின் ஆதரவாளர்கள் வேட்டையாடப் படுகின்றனர். அதைத் தவிர நிலைமை சுமுகமாக உள்ளது. பொது மக்கள் தமது அன்றாட கடமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம், அங்கு நடந்த சதிப்புரட்சிக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் மக்கள் உணர்த்தி உள்ளனர். 


சிம்பாப்வே தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 
எனது முன்னைய பதிவுகளையும் வாசிக்கவும் :

Saturday, June 24, 2017

பொய்கள், புனைவுகள், IBC ஒளிபரப்பிய உக்ரைன் பஞ்சம் பற்றிய ஆபாசப் படம்!

அமெரிக்க- சியோனிச கைக்கூலி நிராஜ் டேவிட், நாஸி இனப்படுகொலைகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கில், "ஸ்டாலின் இனப்படுகொலை செய்ததாக" திரிபுபடுத்தி தயாரித்த ஆவணப்படம் ஒன்று, 2009 ம் ஆண்டு மே மாதம் IBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. (http://www.nirajdavid.com/இன-அழிப்பு-என்றால்-என்ன-ப-5/) பொய்களும், புரட்டுகளும் நிறைந்த அந்த ஆவணப்படத்தில் சொல்லப் பட்டவை உண்மை என்று நம்பும் வடிகட்டிய முட்டாள்கள் இன்றைக்கும் இருக்கின்றனர். அவர்களுக்காக இந்தப் பதிவு. 

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில், "ஸ்டாலின் செய்த இனப்படுகொலைகள்" என்று நிராஜ் டேவிட் ஓர் ஆவணப்படத்தை தொகுத்து வழங்க வேண்டிய தேவை என்ன? இதற்குப் பின்னால் உள்ள, தமிழர்களை மூளைச்சலவை செய்யும் சி.ஐ.ஏ. இன்  சதித் திட்டங்களை சாதாரணமாக கடந்து சென்று விட முடியுமா? "ஈழத்தமிழர்கள் அனைவரும் (புரட்டஸ்தாந்து) கிறிஸ்தவர்களாக மதம் மாறி, இஸ்ரேலை பின்பற்ற வேண்டும்" என்று, தமிழ்வின் இணையத்தளத்தில் நிராஜ் டேவிட் வெளிப்படையாகவே எழுதி இருந்தார்.

ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் உக்ரைனில் ஏற்பட்ட பஞ்சம், அதனால் பலியான மக்களைத் தான், நிராஜ் டேவிட் "இனப்படுகொலை" என்று திரிக்கிறார். பஞ்சம் காரணமாக செத்தவர்களை இனப்படுகொலை கணக்கில் சேர்க்கலாம் என்றால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு, கொல்கத்தா, அயர்லாந்து பஞ்சங்களும் இனப்படுகொலை என்றே சொல்லப் பட வேண்டும். ஆனால், நிராஜ் டேவிட் தனக்கு பணம் கொடுக்கும் எஜமானுக்கு எதிராக பேச மாட்டார்.

நிராஜ்டேவிட், உக்ரைன் பஞ்சத்தை இனப்படுகொலை என்று திரிப்பதன் நோக்கம் என்ன? நாஸிகள் நடத்திய இனப்படுகொலைகளை மூடி மறைக்கும் குள்ளநரித்தனம் அன்றி வேறென்ன?

இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், சோவியத் யூனியனின் ஐரோப்பியப் பிரதேசங்கள் முழுவதும் நாஸிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டன. இன்றைய உக்ரைன் முழுவதையும் கைப்பற்றி, ரஷ்யாவில் உள்ள ஸ்டாலின்கிராட் வரையில் முன்னேறி இருந்தனர்.

இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலை, ஆக்கிரமிக்கப் பட்ட சோவியத் பிரதேசங்களில் நாஸி- ஜெர்மனி படைகளால் நடத்தப் பட்டது. ஆக்கிரமிக்கப் பட்ட உக்ரைன், பெலாருஸ், பால்ட்டிக் நாடுகளில் யூதர்களையும், ரஷ்யர்களையும் பெருமளவில் சுட்டுக் கொன்று மனிதப் புதைகுழிகளில் போட்டு மூடினார்கள். ஜெர்மன் படையினர் "துப்பாக்கியால் சுட்டுக் களைத்து விட்ட படியால்" தான், அவுட்ஸ்விட்ஷ் தடுப்பு முகாமில் அடைத்து வைத்து விஷவாயு அடித்துக் கொல்லும் திட்டம் கொண்டு வந்தார்கள்.

க‌ம்யூனிச‌ வெறுப்புக் கார‌ண‌மாக‌, ஹிட்ல‌ர் சோவிய‌த் யூனிய‌னை ஆக்கிர‌மித்து அந்நாட்டு ம‌க்க‌ளை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவிக்க‌ திட்ட‌மிட்டிருந்தான்! "அவுஷ்விட்ஸ்" எனும் நாஸி த‌டுப்பு முகாம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. அதிலிருந்து கிடைத்த‌ சில‌ முக்கிய‌ த‌க‌வ‌ல்க‌ள். 
  • இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ யூதர்களை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவித்த‌ ப‌டியால் தீய‌ வ‌ழியில் பிர‌ப‌ல‌ம‌டைந்த‌ முகாம் அது. யூத‌ர்க‌ளை அங்கு கொண்டு செல்வ‌த‌ற்கு முன்ன‌ரே ர‌ஷ்ய‌ர்க‌ள் மீது ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. 

  • IG farben என்ற‌ ஜேர்ம‌ன் ப‌ன்னாட்டுக் க‌ம்ப‌னிக்கு தேவையான‌ மூல‌ப் பொருட்க‌ள் அவுஷ்விட்ஸ் சுற்றாட‌லில் கிடைத்த‌ன‌. அடிமை உழைப்பாளிக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ளும் நோக்க‌ம் அந்த‌க் க‌ம்ப‌னிக்கு இருந்த‌து. அந்த‌ முத‌லாளித்துவ‌ சுர‌ண்ட‌லுக்கு உத‌வுவ‌த‌ன் மூல‌ம் நாஸிக‌ளும் ப‌ல‌ன‌டைந்த‌னர். 

  • சோவிய‌த் ப‌டையெடுப்புக்கு வ‌ச‌தியாக‌த் தான் அந்த‌ இட‌த்தில் முகாம் அமைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து சோவிய‌த் எல்லையில் இருந்து சில‌ நூறு கி.மீ. தொலைவில் போல‌ந்தில் அந்த‌ இட‌ம் இருந்த‌து. - ஹிட்ல‌ரும், நாஸிக‌ளும் யூத‌ர்க‌ளை வெறுத்த‌ அள‌விற்கு க‌ம்யூனிஸ்டுக‌ளை வெறுத்தார்க‌ள். ர‌ஷ்ய‌ யூத‌ர்க‌ள் ப‌ல‌ர் போல்ஷேவிக் க‌ட்சியில் இருந்த‌தாக‌ ந‌ம்பினார்க‌ள். 

  • பெலார‌ஸ் போன்ற‌ சோவிய‌த் யூனிய‌னின் ப‌குதிக‌ள் நாஸிக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்ட‌தும், 3 மில்லிய‌ன் பேர‌ள‌வில் போர்க் கைதிக‌ளாக‌ சிறைப் பிடிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர், 2 மில்லிய‌ன் பேரள‌வில் கொன்று குவிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். 

  • ஆர‌ம்ப‌த்தில் க‌ம்யூனிஸ்டுக‌ள், யூத‌ர்க‌ள் அல்ல‌து போரிடும் வ‌ய‌தில் இருந்த‌ ஆயிர‌க் க‌ண‌க்கான‌ ர‌ஷ்ய‌ர்க‌ளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற‌ன‌ர். ஆனால், பெருந்தொகையான ர‌ஷ்ய‌ர்க‌ளை இல‌குவான‌ முறையில் கொன்றொழிப்ப‌து எப்ப‌டி என்று யோசித்தார்க‌ள். அவுஷ்விட்ஸ் முகாமில் கார்ப‌ன் மொனோக்சைட் ந‌ச்சு வாயு பிர‌யோகித்து ப‌ரிசோத‌னை செய்த‌ன‌ர். அது வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் தான், ஐரோப்பிய‌ யூத‌ர்க‌ள் அங்கு கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ன‌ர்.
உக்ரைனில் யூதர்களுக்கு எதிரான இனக் கலவரமாகத் தான் இனப்படுகொலை ஆரம்பமானது. நாஸிகளுடன் ஒத்துழைத்த உக்ரைனிய தேசியவாத- பாசிஸ்டுகள் ஆயிரக் கணக்கான யூதர்களை தெருக்களில் அடித்துக் கொன்றார்கள். அப்போது உக்ரைனில் நடந்த இனப்படுகொலை எதுவென கேட்டால், அதைத் தான் குறிப்பிடலாம்.
(பார்க்க: உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள்)

ஆனால், அதையெல்லாம் நிராஜ் டேவிட் தனது ஆவணப்படத்தில் மூடி மறைக்கிறார். உக்ரைனிய இனவாதிகள் யூதர்களை மட்டும் தாக்கவில்லை. போலிஷ், ரஷ்ய மொழி பேசும் மக்களை அடித்து விரட்டி இனச்சுத்திகரிப்பு செய்தனர். இவற்றை எல்லாம் ஜெர்மன் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த தகவல் எதுவும், நிராஜ் டேவிட் தயாரித்த ஆவணப்படத்தில் சொல்லப் படவில்லை. இருட்டடிப்பு!

பஞ்சத்தில் செத்தவர்களை "இனப்படுகொலையில் கொல்லப் பட்டவர்கள்" என்று எந்த முட்டாளும் சொல்வதில்லை. எதிரிகள் கூட சொல்லத் தயங்கும் பொய்களை நிராஜ் டேவிட் தனது ஆவணப் படத்தில் சொல்கிறார்.  அதைப் பார்க்கும் தமிழர்கள் எல்லோரும் வடிகட்டிய முட்டாள்கள் என்று அவரே முடிவு செய்துவிட்டார் போலும்.

ஸ்டாலின் காலத்தில், குலாக்குகள் என்ற பணக்கார விவசாயிகள் (நமது நாட்டில் "பண்ணையார்கள்") சமூக விரோதிகளாக செயற்பட்டனர். பொதுவுடமைக் - கூட்டுறவுப் பண்ணை அமைக்கும் திட்டம் அறிவிக்கப் பட்டதும், இந்த "கிராமிய முதலாளிகள்" அல்லது பண்ணையாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். அவர்கள் தம்மிடமிருந்த கால்நடைகளை தாமே கொன்றழித்தனர். தானியக் களஞ்சியங்களை தீவைத்துக் கொளுத்தினர். உக்ரைன் பஞ்சம் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம்.

நிராஜ் டேவிட், தனது ஆவணப்படத்திற்கான "ஆதாரங்களை" எங்கிருந்து பெற்றார்? சந்தேகத்திற்கிடமின்றி நாஸி பரப்புரையாளர்களிடம் இருந்து தான்! நாஸிகள் சோவியத் யூனியன் மீது படையெடுப்பதற்கு முன்னர், பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் தாக்கத் தொடங்கி விட்டனர். அதில் ஒன்று தான் உக்ரைனிய பஞ்சத்தில் மில்லியன் கணக்கில் இறந்தனர் என்ற தகவலும். இது பின்னர் சி.ஐ.ஏ. இனரால் பிரதியெடுக்க பட்டு உலகம் முழுவதும் பரப்பப் பட்டது.
(பார்க்க: கம்யூனிச எதிர்ப்பு புளுகுகளை எழுதிய போலி "சரித்திர" ஆசிரியர் காலமானார்!)

இன்றைய உக்ரைனின் அரைவாசிப் பகுதி தான், அன்றைய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. மிகுதி, போலந்து அல்லது ஆஸ்திரியா (ஹங்கேரி)வின் பகுதியாக இருந்தது. அப்படியானால், உக்ரைனிய பஞ்சத்திற்கு ஸ்டாலின் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியுமா? அன்றைய காலத்தில் பஞ்சம் ஐரோப்பா முழுவதும் எல்லா இடங்களிலும் இருந்தது.

உக்ரைனில் மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான மக்கள் பஞ்சத்தால் இறந்து கொண்டிருந்தனர். ஒரு குறுகிய காலத்திற்குள் ஐரோப்பா பல போர்களை கண்டிருந்தது. நெப்போலியனின் போர்கள், கிரீமியா யுத்தம், முதலாம் உலகப்போர், இவை யாவும் அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக பாதித்திருந்தன. அதைவிட, ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது.

இன்று ஐரோப்பாவிலேயே அதி கூடிய வருமானம் ஈட்டுவோரைக் கொண்ட, நோர்வே, சுவிட்சர்லாந்து போன்ற பணக்கார நாடுகள் கூட பட்டினிச் சாவுகளுக்கு தப்பவில்லை. அயர்லாந்து பஞ்சத்தால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் இருக்கும். இலட்சக்கணக்கான ஐரோப்பியர்கள் பஞ்சம் பிழைப்பதற்காக அமெரிக்காவில் குடியேறினார்கள். இதெல்லாம் நிராஜ்டேவிட்டின் கண்களுக்கு தெரியவில்லை! அமெரிக்க டாலர்கள் அவரது கண்களை மறைத்து விட்டன.

ஒரு நாட்டில் பஞ்சம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நீண்ட காலம் நீடிக்கும் போர், உணவுப் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி, நிர்வாகச் சீர்கேடுகள் என்று பல காரணங்கள் உள்ளன. ஸ்டாலினிச எதிர்ப்பு எழுத்தாளர்கள் கூட தமது வரலாற்று நூல்களில் அவற்றை மட்டும் தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால், பஞ்சத்தை இனப்படுகொலை என்று திரிக்கும் அளவிற்கு முட்டாள்கள் யாரும் இல்லை. நிராஜ் டேவிட், மற்றும் அவரது அடிப்பொடிகளை தவிர.



*********


உக்ரைனிய பஞ்சம் தொடர்பாக முன்னர் எழுதிய பதிவு:

உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும்

கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பொய்ப் பிரச்சாரங்களில் ஒன்று, "உக்ரைனிய பஞ்சம்." மேற்கத்திய நாடுகளினால் holodomor என்று பெயரிடப் பட்ட உக்ரைனிய பஞ்சம், "ஸ்டாலினின் சோஷலிச பொருளாதார திட்டங்களினால் ஏற்பட்ட தீய விளைவு" என்று சுட்டிக் காட்டுவார்கள். அப்படியா?

இரண்டாம் உலகப் போர் முடிவு வரையில், உக்ரைனின் மேற்குப் பகுதி, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா, ருமேனியா ஆகிய அயல் நாடுகளினால் பங்கு போடப் பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த பெரும்பான்மை இன மக்கள் உக்ரைனியர்கள். ஆனால், போர் முடிந்த பின்னர் தான், அவை சோவியத் யூனியனின் பகுதிகள் ஆகின.


அந்தக் காலத்தில், உக்ரைனிய பஞ்சம் பற்றி அறிவித்த ஒரு பத்திரிகையின் பக்கத்தை இங்கே தருகிறேன். இது எந்த நாட்டின் செய்தித் தாள்? செக்கோஸ்லாவாக்கியா. தலைநகர் பிராஹாவின் பெயர் வந்துள்ளதை கவனிக்கவும். அதில் என்ன எழுதியிருக்கிறது? செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசமான சகர்பாத்தி (Zakarpatie) யில், 15 000 குழந்தைகள் பட்டினியால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கிறது.

இதன் அர்த்தம், அன்றைய சோவியத் உக்ரைனில் பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை என்பதல்ல. இரண்டாம் உலகப்போர் வரையில், பஞ்சம் ஐரோப்பாக் கண்டம் முழுவதற்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தது. இன்று பஞ்சம் என்று சொன்னால், பெரும்பாலானோருக்கு சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தான் நினைவுக்கு வரும்.

ஆனால், சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் வேறு. இன்று ஆப்பிரிக்கா இருக்கும் நிலைமையில், அன்று ஐரோப்பா இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சமும், இரண்டு மில்லியன் மக்களின் பட்டினிச் சாவுகளும் இன்றைக்கும் நினைவுகூரப் படுகின்றன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, பஞ்சத்தினால் பாதிக்கப் படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இன்றைக்கு வாழும் மக்கள், எவ்வாறு ஆப்பிரிக்க பஞ்சத்தை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்கிறார்களோ, அதே மாதிரித் தான் அன்றைய ஐரோப்பிய மக்களும் நடந்து கொண்டார்கள்.

Thursday, May 04, 2017

அமெரிக்கா கொரியாவில் நடத்திய இனப்படுகொலை மறைக்கப் படுவது ஏன்?


எந்தப் பெரிய மதிப்புக்குரிய ஊடகமாக இருந்தாலும், வட கொரியா விடயத்தில் பொய்களையும், புளுகுகளையும் துணிந்து சொல்லலாம். விரும்பியவாறு கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடலாம். யாரும் ஏனென்று கேட்க மாட்டார்கள். மக்களை அந்தளவுக்கு மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். 

வட கொரியா பற்றி தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கும் கட்டுக் கதைகளுக்கு "மர்ம மன்னன்", "மர்ம தேசம்" என்றெல்லாம் பெயர் வைப்பார்கள். அவற்றைப் பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள் திகில் உணர்வுடன் இரசிப்பார்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று,மெல்ல மெல்ல நச்சுக் கருத்துக்கள் மூளைக்குள் திணிக்கப் பட்டு விடும்.

தமிழகத்திலும், இலங்கையிலும் அதிகளவு விற்பனையாகும் ஆனந்த விகடன் சஞ்சிகையில் (26 Apr, 2017 ) மர்ம மன்னன்! என்ற பெயரில் ஓர் அபத்தக் கட்டுரை பிரசுரமாகி உள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் பற்றி கிண்டல் அடிக்கிறார்களாம். கட்டுரை எழுத முன்னர் இணையத்தில் தேடிப் பார்த்தார்களாம். "வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் என்ன சாப்பிடுவார்?" "கேக், கம்ப்யூட்டர், கட்டடம், கார் மற்றும் நாய்க்குட்டி." இப்படி எல்லாம் இருந்ததாம். இண்டர்வியூ என்ற ஹாலிவூட் படத்தைப் பார்த்து விட்டும் இப்படி எழுதலாம். "வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் பொழுதுபோக்கு என்ன?" "நீலப் படம் பார்ப்பது...அழகான பெண்களுடன் கும்மாளம் அடிப்பது..." இப்படி எல்லாம் பாலியல் சுவை ததும்பவும் எழுதலாம். வாசிப்பவர்களுக்கும் கிளுகிளுப்பாக இருக்கும்.

அது சரி. கட்டுரை எழுதுவதற்கு முன்னர் கொஞ்சமாவது ஆய்வு செய்து பார்க்க வேண்டாமா? அதெல்லாம் எதற்கு? தமிழர்கள் அந்தளவு அறிவாளிகளா? வட கொரியா பற்றி எப்படிப் புளுகினாலும் நம்புவதற்கு பல வடி கட்டிய முட்டாள்கள் இருக்கிறார்கள். வட கொரியா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அணுவாயுதம் தயாரித்து வைத்திருக்கிறது. ஆனால், அது அண்மையில் எழுந்த பிரச்சினை என்பது போல கட்டுரையாளர் எழுதும் புளுகுக் கதை அபாரம். 

கட்டுரையில் இவ்வாறு இருக்கிறது: 
//அமெரிக்காவைச் சீண்டிக்கொண்டே இருப்பது, கிம்முக்குப் பிடித்த பொழுதுபோக்கு. சென்ற ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அணு ஆயுதப் பரிசோதனையை வட கொரியா நிகழ்த்தியபோது, அமெரிக்கா மட்டுமல்ல உலகமே அச்சத்துடன் திரும்பிப் பார்த்தது. எப்படியாவது அணு ஆயுதப் பரிசோதனையில் வெற்றிபெற வேண்டும் என்று தீராத துடிப்புடன் இருக்கிறார் கிம். அதற்கான காரணம் புரிந்து கொள்ளக் கூடியது தான்.//

கட்டுரையாளரே! உங்களுக்கு இணையம் பாவிக்கத் தெரியும் தானே? கொஞ்சம் தேடிப் பார்க்கலாமே? தொண்ணூறுகளில், அதாவது பனிப்போர் முடிவில், வட கொரியா அணு உலைகள் கட்டுவதாக தகவல்கள் வந்தன. அப்போதே அணுவாயுதம் தயாரிக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. உலகில் எந்த நாட்டுடனும் வர்த்தகத் தொடர்பில்லாமல் தனிமைப் படுத்தப் பட்டிருந்த வட கொரியா, எரிசக்தி தேவைக்காக அணு உலை அமைப்பதாக சொல்லிக் கொண்டாலும், இன்னொரு எதிர்பாராத நோக்கமும் இருந்தது. அமெரிக்காவிடம் இருந்து பொருளாதார உதவி பெற்றுக் கொள்வது!

வட கொரியாவும், இந்தியா, இலங்கை மாதிரி ஒரு மூன்றாமுலக வறிய நாடு தான். இருப்பினும், மேற்குலக நாடுகள் இந்தியா, இலங்கைக்கு வழங்குவது வட்டியுடனான கடன். ஆனால், அதே நாடுகள் வட கொரியாவுக்கு கொடுத்தது நன்கொடை! 

வட கொரியாவின் அணு உலைத் திட்டத்தை கைவிடுமாறு, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை மூலம் அழுத்தம் கொடுத்தது. அதன் படி, சர்வதேச மேற்பார்வையின் கீழ் அணு உலை அகற்றுவதற்கு வட கொரியா சம்மதித்தது. அமெரிக்கா அதற்கு பதிலாக இலவச உணவுப் பொருட்களும், பெருமளவு பணமும் கொடுத்திருந்தது. 

நண்பர்களே இவர்களில் யார் புத்திசாலி? மேற்குலகிற்கு சமர்த்துப் பிள்ளையாக நடந்து, வாங்கிய கடனை வட்டியுடன் ஒழுங்காக கட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவா? அல்லது அணுகுண்டை காட்டி மிரட்டி செல்வந்த நாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுக் கொள்ளும் வட கொரியாவா?

அணுவாயுதம் வைத்திருப்பது தான் பிரச்சினை என்றால், பின்வரும் கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்வார்களா?

1. கொரிய‌ப் போரானது, யுத்த நிறுத்தத்தில் முடிந்து ப‌ல‌ த‌சாப்த‌ கால‌மாகியும், அமெரிக்க‌ ஆக்கிர‌மிப்புப் ப‌டைக‌ள் தென் கொரியாவை விட்டு வெளியேற‌ ம‌றுப்ப‌து ஏன்?

2. அமெரிக்கா தனது ஆயிர‌க்க‌ணக்கான‌ ப‌டையின‌ரை ம‌ட்டும‌ல்லாது, அணுவாயுத‌ங்க‌ளையும் தென் கொரியாவில் குவித்து வைத்திருந்தது ஏன்? அவற்றை இப்போதும் அங்கிருந்து அகற்ற மறுப்பது ஏன்?

3. ஏற்கனவே ஜப்பான் மீது அணுகுண்டு வீசி, பல இலட்சம் அப்பாவி மக்களைக் படுகொலை செய்த அமெரிக்கா, கொரியா மீது அணுகுண்டு வீசவும் திட்டமிட்டிருந்தது. இதனை அன்றைய அமெரிக்க படைத் தளபதி மக் ஆர்தர் உறுதிப் படுத்தி உள்ளார். அப்போதே அணுகுண்டு வீச நினைத்த எதிரி இடமிருந்து வேறு எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்?

முன்பு சோஷலிச நாடுகள் இருந்த காலத்தில், சோவியத் யூனியன், சீனா இரண்டுடனும் வட கொரியா நெருக்கமான உறவுகளைப் பேணியது அனைவரும் அறிந்த விடயம். அப்போதே அவ்விரண்டு நாடுகளிடம் இருந்தும் அணுவாயுத உதவி கோரப் பட்டது. ஆனால், இரண்டு சோஷலிச வல்லரசுகளும் அணுவாயுதம் தருவதற்கு சம்மதிக்கவில்லை.

அணுகுண்டு தயாரிப்பதற்கான அறிவு வட கொரியாவுக்கு எப்படிக் கிடைத்தது என்பது இன்று வரையில் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. அனேகமாக, பாகிஸ்தான் மூலமாக கிடைத்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. நெதர்லாந்தில் கல்வி கற்ற பாகிஸ்தானிய விஞ்ஞானி கான், அணுத் தொழில்நுட்ப இரகசியங்களை கடத்திச் சென்றிருந்தார். அதை வைத்துத் தான் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரித்தது. அனேகமாக, கான் தனது தகவல்களை வட கொரியாவுடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.

பனிப்போரின் முடிவில், அமெரிக்கா ஒற்றை வல்லரசாகியது. அது தனக்கு எதிரான நாடுகளை "தீய நாடுகளின் அச்சு" எனப் பிரகடனம் செய்திருந்தது. சர்வதேச சமூகத்தால் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கப் பட்ட நாடுகளில் வட கொரியாவும் ஒன்று. அப்போதே ஒதுக்கப் பட்ட நாடுகள் ஒன்று சேரத் தொடங்கி விட்டன. தம்மிடமிருந்த வளங்களை பகிர்ந்து கொண்டன. உதாரணத்திற்கு, வட கொரியா கடாபியின் லிபியாவுக்கு பெருமளவு ஆயுதங்களை விற்றது. ஈரானிய பாவனைப் பொருட்கள் வட கொரியாவுக்கு ஏற்றுமதியாகின.

சதாம் ஹுசைனின் ஈராக்கும், கடாபியின் லிபியாவும் அணுகுண்டு மாதிரி பேரழிவு தரும் ஆயுதங்கள் வைத்திருப்பதாக அமெரிக்காவால் குற்றஞ் சாட்டப் பட்டன. உண்மையிலேயே அங்கு இரசாயன ஆயுதங்கள் இருந்துள்ளன. சர்வதேச அழுத்தம் காரணமாக, ஐ.நா. மேற்பார்வையின் கீழ் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டன. அதற்குப் பிறகு என்ன நடந்தது? ஈராக்கில் சதாமும், லிபியாவில் கடாபியும் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டனர். அமெரிக்க இராணுவப் படையெடுப்புகளால் பாதிக்கப் பட்டு, அந்த நாடுகள் சின்னாபின்னமாகின.

வட கொரியா தனது அணுவாயுதக் கொள்கைக்கு, ஈராக், லிபியாவில் நடந்தவற்றை காரணமாக சுட்டிக் காட்டுகின்றது. அதாவது, சர்வதேச அழுத்ததிற்கு அடிபணிந்து அணுவாயுதத்தை அழிப்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தால், வட கொரியாவும் இன்று இருந்த இடம் தெரியாமல் காணாமல்போயிருக்கும். மேலும் அருகில் சீனா என்ற வல்லரசின் ஆதரவு இருப்பதும் வட கொரியாவுக்கு சாதகமாகப் போய் விட்டது.

சீனாவுக்கு வட கொரியா மீது தனிப்பட்ட பாசம் எதுவும் கிடையாது. முன்பிருந்த சித்தாந்த உறவு இப்போது இல்லை. இன்றைய சீனா ஒரு முதலாளித்துவ நாடு என்பதால், பணத்திற்கே முன்னுரிமை. இருப்பினும், வட  கொரியாவால் சீனாவுக்கு சில அரசியல் ஆதாயங்கள் உள்ளன.

முதலாவதாக, வட கொரியா நிர்மூலமானால் அங்கிருந்து வெளியேறும் பெருமளவு அகதிகள் சீனாவில் தான் தஞ்சம் கோருவார்கள். இரண்டாவதாக, கொரியா ஒரே நாடானால் அமெரிக்க இராணுவம் சீன எல்லை வரை வந்து விடும். இந்த அபாயத்தை தடுப்பதற்கு, வட கொரியா தொடர்ந்தும் இருப்பதே சீனாவுக்கு பாதுகாப்பானது.


அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் அப்படி என்ன தகராறு? நம்மில் பலருக்கு வரலாறு தெரியாது, அல்லது பழைய வரலாற்றை வசதியாக மறந்து விடுகிறோம். 1950 - 1953, இந்த மூன்று வருடங்களுக்குள் நடந்த போரில் மாத்திரம், கொரிய சனத்தொகையில் இருபது சதவீதம் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் அழித்தொழிக்கப் பட்டனர். அன்று நடந்த இனப்படுகொலையை மூடி மறைக்க வேண்டிய காரணம் என்ன? அன்று அமெரிக்க படையினர் புரிந்த போர்க்குற்றங்களுக்கு எந்த நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்தது?

இரண்டாம் உலகப்போரில், ஆசியாவில் ஜப்பானை தோற்கடிப்பதற்கு அமெரிக்கா போட்ட குண்டுகளை விட அதிகமாக கொரியா என்ற சிறிய நிலப்பரப்பினுள் போடப் பட்டன. 635,000 தொன் குண்டுகள்! அதைவிட 32,557 தொன் நேபாம் நச்சுவாயுக் குண்டுகள் போடப் பட்டுள்ளன!! வட கொரியாவில் (தென் கொரியாவிலும் சில பகுதிகளில்) இருந்த நகரங்கள், கிராமங்கள் ஒன்று விடாமல் தரைமட்டமாக்கப் பட்டன. மூன்று மில்லியன் பொதுமக்கள் குண்டுவீச்சில் கொல்லப் பட்டனர்.
(ஆதாரம்: Air Force General Curtis LeMay, head of the Strategic Air Command during the Korean War, “we killed off … 20 percent of the population”?)

இருபது, முப்பது அணுகுண்டுகளை போட்டு, கொரியப் போரை பத்து நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்ட அமெரிக்க படைத் தளபதி ஜெனரல் மக் ஆர்தர் (Douglas MacArthur) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இதிலே வேடிக்கை என்னவென்றால், அவர் ஐ.நா. சமாதானப் படையின் தளபதியாகத் தான் கொரியாவில் போரிட்டார்!

வட கொரியாவை விட்டு விடுவோம். தென் கொரியாவில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப் பட்டவர்கள் எத்தனை பேர்? தென் கொரியாவில், நோகன்ரீ எனும் இடத்தில், பாதுகாப்புத் தேடி பாலத்தின் கீழ் பதுங்கி இருந்த நூற்றுக் கணக்கான பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்றனர். (ஆதாரம்: G.I.'s Tell of a U.S. Massacre in Korean War) இது போர்க்குற்றம் அல்லவா? அதற்காக யாருக்காவது தண்டனை கிடைத்துள்ளதா? இன்று வரையில் இல்லை.

அமெரிக்க‌ப் ப‌டைக‌ள் ஆக்கிர‌மித்திருந்த‌ தென் கொரியாவில், ம‌க்க‌ள் ம‌த்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த‌‌ கொரிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி த‌டை செய்யப் ப‌ட்ட‌து. அங்கு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. அடுத்து வ‌ந்த‌ ப‌ல‌ த‌சாப்த‌ கால‌மாக‌, தென் கொரியாவில் கொடூர‌மான‌ இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்த‌து. தென் கொரியாவில் எண்ப‌துக‌ள் வ‌ரையில் தேர்த‌ல் என்ற‌ பேச்சுக்கே இட‌ம் இருக்க‌வில்லை. க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌து. ம‌னித‌ உரிமைக‌ள் மீற‌ப் ப‌ட்ட‌ன‌. கொரிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி மீதான‌ தடை இப்போதும் தொட‌ர்கின்ற‌து.

கொரிய‌ப் போருக்குப் பின் அமெரிக்கா ஆத‌ரித்த‌ கொரிய‌ இராணுவ‌ ஆட்சியாள‌ர்க‌ள், முன்பு கொரியாவை கால‌னிப் ப‌டுத்திய‌ எதிரிக‌ளான‌ ஜ‌ப்பானிய‌ருட‌ன் ஒத்துழைத்த‌வ‌ர்க‌ள். அதாவது ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் என அழைக்கப் பட்டவர்கள். அத‌னால் ம‌க்க‌ளின் வெறுப்புக்கு ஆளானார்க‌ள். தென் கொரியாவில், அமெரிக்க அரச ஒத்தோடிகள் செய்த படுகொலைகள் எத்தனை?

ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்ட் சந்தேக நபர்களை தேடிப் பிடித்து, ஜீப் வண்டிகளில் ஏற்றிச் சென்று, வெட்ட வெளிகளில் சுட்டுக் கொன்று, பெரும் மனிதப் புதைகுழிகளுக்குள் போட்டு மூடினார்கள். அன்று பலியானவர்களில்  பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளும் அடங்குவார்கள். அமெரிக்கப் படையினர் அந்தப் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். (ஆதாரம்: AP: U.S. Allowed Korean Massacre In 1950)

வ‌ட‌ கொரிய‌ பிர‌ச்சினையில் ப‌ல‌ருக்குத் தெரியாத‌ அல்ல‌து வ‌ச‌தியாக‌ ம‌ற‌ந்து விடும் விட‌ய‌ம் ஒன்றுள்ள‌து. அந் நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் மிக‌த் தீவிர‌மான‌ கொரிய‌த் தேசிய‌வாதிக‌ள். வ‌ட‌ கொரியா ஸ்தாபிக்க‌ப் ப‌ட்ட‌ நாளில் இருந்து கொரிய‌ ஒன்றிணைப்பை இல‌ட்சிய‌மாக‌க் கொண்டுள்ள‌ன‌ர்.

வ‌ட‌ கொரிய‌ தேச‌ வ‌ரைப‌ட‌ம் தென் கொரியாவையும் உள்ள‌ட‌க்கி இருக்கும்! இப்போதும் பாட‌சாலைக‌ளில் கொரியா தீப‌க‌ற்ப‌ம் முழுவ‌தையும் தாய்நாடு என்றே க‌ற்பிக்கிறார்கள். இப்போதும் தென் கொரிய‌ பிர‌தேச‌ங்க‌ளுக்கான‌ ஆளுந‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப் ப‌டுவ‌து ஒரு ச‌ட‌ங்காக‌ உள்ள‌து. ம‌று ப‌க்க‌த்தில் தென் கொரிய‌ ஆட்சியாள‌ர்க‌ளும் அவ்வாறே ந‌ட‌ந்து கொள்வ‌ர்.

விய‌ட்நாம் போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்பான‌ நிலைமையும் அவ்வாறே இருந்த‌து. வ‌ட‌ விய‌ட்நாம் சுத‌ந்திர‌ம‌டைந்து சோஷ‌லிச‌ நாடாகிய‌து. ஆனால் தென் விய‌ட்நாம் அமெரிக்க‌ப் ப‌டைக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்டிருந்த‌து. தென் விய‌ட்நாமில் இய‌ங்கிய‌ கெரில்லாக் குழுக்க‌ளுக்கு வ‌ட விய‌ட்நாமில் இருந்து ஆயுத‌ங்க‌ள் அனுப்ப‌ப் ப‌ட்ட‌ன‌. ஏராள‌மான‌ போராளிக‌ள் வட‌ விய‌ட்நாமில் இருந்து சென்ற‌வ‌ர்க‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

வ‌ட‌ கொரியாவிலும் விய‌ட்நாம் போர் முடிவு ஆர்வ‌த்தை தூண்டி விட்டிருந்த‌து. இறுதியில் விய‌ட்நாம் ஒரே நாடான‌ மாதிரி கொரியாவும் ஒன்று சேரும் என்று ந‌ம்பினார்க‌ள். ஒரு த‌ட‌வை கெரில்லாப் போராளிக‌ளை, ஒரு சிறு குழுவை அனுப்பிப் பார்த்த‌ன‌ர். ஆனால் எதிர்பார்த்த‌ ப‌டி தென் கொரியாவுக்குள் கெரில்லாப் போர் ந‌ட‌த்த‌ முடிய‌வில்லை.

வட கொரிய பிரச்சினையில் பலர் அடிக்கடி மறந்து விடும், அல்லது மறைக்கும் விடயம் ஒன்றுண்டு. தென் கொரிய மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? அதை அறிந்து கொள்வதில் யாருக்கும் அக்கறை இல்லை. அதற்குக் காரணம் தென் கொரிய மக்களில் பெரும்பான்மையினர் வட கொரியா மீதான போரை எதிர்க்கிறார்கள். தென் கொரிய அரசு இந்த விடயத்தில் ஒரு பொம்மை அரசாகவே இருக்கிறது. அதன், இராணுவம், அமெரிக்க இராணுவத்துடன் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனால் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.

வட கொரிய ஏவுகணைகள் தாக்கவிடாமல் இடையில் தடுத்து அழிக்கும் நோக்கில் அமெரிக்காவின் நவீன ஏவுகணையான THAAD தென் கொரியாவுக்கு கொண்டு வரப் பட்டு பொருத்தப் பட்டது. அப்போது அது சென்ற வழியெங்கும் கூடிய தென் கொரிய மக்கள் கற்களை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஏவுகணைக்கு பாதுகாப்பாக ஆயிரக் கணக்கான படையினர் கூடவே செல்ல வேண்டியிருந்தது.

வ‌ட‌ கொரிய‌ ம‌க்க‌ள் எப்போதும் போருக்கு எதிரான நிலைப்பாட்டுடன் தான் இருந்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து அர‌சு போர்வெறி கொண்டு அலைய‌வில்லை. அதைச் செய்வ‌து அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம். அது அந்த‌ ம‌க்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். நாளைக்கு அமெரிக்க‌ இராணுவ‌ம் ப‌டையெடுத்தால் அந்த‌ ம‌க்க‌ளை கையைக் க‌ட்டி வேடிக்கை பார்க்க‌ சொல்கிறீர்க‌ளா? அமெரிக்க‌ குண்டு வீச்சில் அப்பாவி ம‌க்க‌ள் பலியாக‌ மாட்டார்க‌ளா? த‌ங்க‌ள் நாட்டை ஆக்கிர‌மிக்க‌ வ‌ரும் அந்நிய‌ இராணுவ‌த்தை எதிர்த்து போரிடுவ‌து த‌ப்பா? உங்க‌ள் வீட்டை கொள்ளைய‌ர்க‌ள் தாக்கும் அபாய‌ம் இருந்தால் என்ன‌ செய்வீர்க‌ள்?

இங்கு யார் பக்க‌ம் நியாய‌ம் உள்ள‌து? மிக‌ப் பெரிய ப‌ல‌சாலியான‌ கோலிய‌த்திற்கு எதிரான‌ நோஞ்சான் டேவிட்டின் போராட்ட‌ம் நியாய‌மான‌து. அதை ஆத‌ரிப்ப‌து நீதியான‌வ‌ர்க‌ளின் க‌ட‌மை.

அமெரிக்கா தான் வ‌ட‌ கொரியாவை ஆக்கிர‌மிக்கும் எண்ண‌த்துட‌ன் போர்ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்கின்ற‌து. வ‌ட‌ கொரியா அல்ல. அது உலகில் எந்த‌ நாட்டின் மீதாவ‌து படையெடுத்துள்ள‌தா? அது மெக்சிகோ அல்ல‌து க‌ன‌டாவுக்கு த‌ன‌து ப‌டைக‌ளை அனுப்பியுள்ள‌தா?

அமெரிக்காவின் இராணுவ‌ ப‌ல‌த்துட‌ன் ஒப்பிடும் பொழுது வ‌ட‌ கொரியா ஒரு நாள் கூட‌ தாக்குப் பிடிக்க‌ முடியாது. அத‌ற்காக‌த் தான் அணுவாயுத‌ம் வைத்திருக்கிற‌து. அந்த‌ உரிமை எல்லோருக்கும் இருக்கிற‌து. தற்காப்பு உரிமை. விரும்பினால் அதை சர்வாதிகாரம் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

ச‌ர்வாதிகார‌ம் என்ப‌து என்ன‌? பெரும்பான்மை ம‌க்க‌ளின் விருப்ப‌த்திற்கு மாறான‌ ஒரு சிறு குழுவின் ஆட்சி. இன்று ப‌ல‌ நாடுக‌ளில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ பெய‌ரில் ச‌ர்வாதிகார‌மே நில‌வுகின்ற‌து. தேர்த‌லில் வோட்டுப் போட்ட‌வுட‌ன் ம‌க்க‌ளின் க‌ட‌மை முடிந்து விடுகிற‌து. ஆளுவ‌து எப்போதுமே ப‌ண‌ம் ப‌டைத்த‌ கிரிமின‌ல் கும்ப‌ல் தான்.

அத‌ற்கு மாற்றான‌ நேர‌டி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி பலருக்கும் தெரியாது. வ‌ட‌ கொரியாவிலும் தேர்த‌ல்க‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌. பாராளுமன்றப் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள். சமூகத்தின் பல மட்டங்களில் ஜனநாயகப் பொறிமுறை உள்ள‌து. உதார‌ண‌த்திற்கு தொழிற்சாலை நிர்வாக‌த்தில் தொழிலாள‌ர்க‌ள் ப‌ங்கெடுக்க‌ முடியும். அமெரிக்காவில் கூட‌ அத்த‌கைய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் கிடையாது.

Sunday, January 08, 2017

ஹிட்லரின் கம்யூனிச விரோத கொலைவெறி இனப்படுகொலையின் ஆரம்பம்


க‌ம்யூனிச‌ வெறுப்புக் கார‌ண‌மாக‌, ஹிட்ல‌ர் சோவிய‌த் யூனிய‌னை ஆக்கிர‌மித்து அந்நாட்டு ம‌க்க‌ளை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவிக்க‌ திட்ட‌மிட்டிருந்தான்!

 "அவுஷ்விட்ஸ்" எனும் நாஸி த‌டுப்பு முகாம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. ( Auschwitz: The Nazis and the 'Final Solution'; http://www.imdb.com/title/tt0446610/) அதிலிருந்து கிடைத்த‌ சில‌ முக்கிய‌ த‌க‌வ‌ல்க‌ளை இங்கே தருகிறேன். இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ யூதர்களை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவித்த‌ ப‌டியால் தீய‌ வ‌ழியில் பிர‌ப‌ல‌ம‌டைந்த‌ முகாம் அது.

அங்கு யூத‌ர்க‌ளை அங்கு கொண்டு செல்வ‌த‌ற்கு முன்ன‌ரே ர‌ஷ்ய‌ர்க‌ள் மீது ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவது ஜெர்மன் யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு முன்னரே, "கம்யூனிஸ்டுகள்" என்ற குற்றச்சாட்டில் இலட்சக் கணக்கான ரஷ்யர்கள் அல்லது ரஷ்ய யூதர்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.

போலந்தின் மேற்குப் பகுதியில் உள்ள பிரமாண்டமான தடுப்பு முகாமான அவுஷ்விட்ஸ் கட்டப்பட்டதன் பிரதானமான நோக்கம், தாழ்வான இனமாக கருதப் பட்ட சோவியத் மக்களை அழித்தொழிப்பது. (யூத இன அழிப்பு சில வருடங்களுக்குப் பிறகு நடந்தது.)நாஸிகளின் சோவியத் யூனியன் படையெடுப்பில் கைது செய்யப் பட்ட பத்தாயிரம் போர்க் கைதிகளை கொண்டு தான் அந்த முகாம் கட்டப் பட்டது. அந்தப் பத்தாயிரம் கைதிகளில் சில நூறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். பட்டினியாலும், தோற்று நோய்களாலும் கைதிகள் மரணித்தனர்.

IG farben என்ற‌ ஜேர்ம‌ன் ப‌ன்னாட்டுக் கம்பனி கண்டுபிடித்த செயற்கை இரப்பர் உற்பத்திக்கு அவசியமான மூல‌ப் பொருட்க‌ள் அவுஷ்விட்ஸ் சுற்றாட‌லில் கிடைத்த‌ன‌. நிலக்கரி சுரங்கங்களும் அருகில் இருந்தன. அடிமை உழைப்பாளிக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி, அதிக இலாபம் சம்பாதிக்கும் நோக்க‌ம் IG farben க‌ம்ப‌னிக்கு இருந்த‌து. அந்த‌ முத‌லாளித்துவ‌ சுர‌ண்ட‌லுக்கு உத‌வுவ‌த‌ன் மூல‌ம் நாஸிக‌ளும் ப‌ல‌ன‌டைந்த‌னர்.

சோவிய‌த் ப‌டையெடுப்புக்கு வ‌ச‌தியாக‌த் தான், போலந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் எனும் இட‌த்தில் முகாம் அமைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து சோவிய‌த் எல்லையில் இருந்து சில‌ நூறு கி.மீ. தொலைவில் அந்த‌ இட‌ம் இருந்த‌து. இதன் மூலம் சோவியத் யூனியன் மீது படையெடுக்கும் திட்டமும், அதற்குப் பிறகும் சோவியத் மக்களை இனப்படுகொலை செய்யும் திட்டமும் நாஸிகளிடம் இருந்துள்ளமை உறுதியாகின்றது.

ஹிட்ல‌ரும், நாஸிக‌ளும் யூத‌ர்க‌ளை வெறுத்த அளவிற்கு க‌ம்யூனிஸ்டுக‌ளையும் வெறுத்தார்க‌ள். ர‌ஷ்ய‌ யூத‌ர்க‌ள் ப‌ல‌ர் போல்ஷேவிக் க‌ட்சியில் இருந்த‌னர். அதனால், நாஸிகளை பொறுத்தவரையில் கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஒன்று தான். "கம்யூனிசம் என்றால் அது ரஷ்யா" தான் என்பது நாஸிகளின் பிரச்சாரமாக இருந்தது. (இன்றைக்கும் தமிழ் பேசும் நாஸி ஆதரவாளர்களுக்கு, கம்யூனிசம் என்றால் ரஷ்யா தான் மனதில் தோன்றும்.)


போலந்து எல்லையில் இருந்த பெலார‌ஸ் போன்ற‌ சோவிய‌த் யூனிய‌னின் ப‌குதிக‌ள் நாஸிக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்ட‌தும், அங்கிருந்து 3 மில்லிய‌ன் பேர‌ள‌வில் போர்க் கைதிக‌ளாக‌ சிறைப் பிடிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர், குறைந்தது 2 மில்லிய‌ன் பேரள‌வில் கொன்று குவிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஆர‌ம்ப‌த்தில் க‌ம்யூனிஸ்டுக‌ள், யூத‌ர்க‌ள் அல்ல‌து போரிடும் வ‌ய‌தில் இருந்த‌ ஆயிர‌க் க‌ண‌க்கான‌ ர‌ஷ்ய‌ர்க‌ளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற‌ன‌ர். ஆனால், அவ்வாறு அழித்தொழிப்பது அதிக நேரம் எடுப்பதாகவும், தமது போர்வீரர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்குவதாகவும் நாஸிகள் நினைத்தார்கள்.

அதற்குப் பதிலாக, பெருந்தொகையான ர‌ஷ்ய‌ர்க‌ளை இல‌குவான‌ முறையில் கொன்றொழிப்ப‌து எப்ப‌டி என்று யோசித்தார்க‌ள். அவுஷ்விட்ஸ் முகாமில் கார்ப‌ன் மொனோக்சைட் ந‌ச்சு வாயு பிர‌யோகித்து ப‌ரிசோத‌னை செய்த‌ன‌ர். அதன் மூலம் பலரை சில நிமிடங்களில் கொன்று குவிக்க முடிந்தது. ரஷ்யர்கள் மீதான நச்சுவாயு பரிசோதனை வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் தான், ஐரோப்பிய‌ யூத‌ர்க‌ள் அங்கு கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

1941 ம் ஆண்டில் கூட, யூதர்கள் அவுஷ்விட்ஸ் முகாமுக்கு அனுப்பப் பட்டிருக்கவில்லை. அந்த வருடம், வட ஜெர்மன் நகரமான ஹம்பூர்க் மீது, பிரிட்டிஷ் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. அப்போது வீடுகளை இழந்த ஜெர்மன் இனத்தவர்களுக்கு புது வீடுகள் கொடுக்கும் திட்டத்தின் கீழ், ஹம்பூர்க் யூதர்கள் போலந்தில் உள்ள லொட்ஸ் என்ற நகரில் உள்ள கெட்டோவில் (Ghetto) குடியமர்த்தப் பட்டனர்.

அந்தக் காலத்தில், போலந்து முழுவதும் யூதர்கள் நெருக்கமாக வாழ்ந்த நகர்ப்  பகுதிகள், "கெட்டோ" என்ற திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப் பட்டிருந்தன. சேரிகள் போன்று காட்சியளித்த கெட்டோவில், ஏற்கனவே அங்கிருந்த போலிஷ் யூதர்கள், மிகவும் வறுமையான நிலையில் அவல வாழ்க்கை வாழ்ந்தனர்.

ஜெர்மனியில் ஓரளவேனும் வசதியான வாழ்க்கை வாழ்ந்த ஜெர்மன் யூதர்களுக்கு அந்த இடம் அதிர்ச்சியாக இருந்தது. பொருளாதார வேறுபாடு காரணமாக, ஜெர்மன் யூதர்கள் போலிஷ் யூதர்களை தாழ்வாகக் கருதும் வழக்கம் இருந்தது. திடீரென எல்லா யூதர்களும் ஒரே நிலைமையில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் குண்டுபோட்ட பின்னர் அமெரிக்காவும் யுத்தத்தில் குதித்தது. அப்போது ஹிட்லர் "சோவியத் யூனியன் யூதர்கள் மாதிரி, அமெரிக்க யூதர்களும் ஜெர்மனிக்கு எதிராக போர் தொடுத்துள்ளதாக..." குற்றம் சாட்டினான். அன்றிலிருந்து யூதர்களையும் அழித்தொழிக்கும் திட்டம் ஆரம்பமானது.

Thursday, September 08, 2016

இனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா!


"பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது." மத்தேயு 19:24

ஏழைகளை சுரண்டிக் கொழுத்த, இனப்படுகொலைக்கும் அஞ்சாத சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா. ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய பணத்தை நன்கொடை என்ற பெயரில் வாங்குவதற்கு கூச்சப் படாதவர். இவர் ஓர் உண்மையான கிறிஸ்தவர் என்றால், விவிலிய நூல் சொல்வதன் படி அவருக்கு பரலோகத்திலும் இடம் கிடைக்காது.

அன்னை தெரேசா 1981 ம் ஆண்டு, ஹைத்திக்கு சென்று “Légion d’Honneur” என்ற கௌரவப் பட்டத்தை வாங்கிக் கொண்டார். அதைக் கொடுத்தது, அப்போது ஹைத்தியை இரும்புக்கரம் கொண்டு ஆண்ட சர்வாதிகாரி டுவாலியர். ஹைத்தி இன்றைக்கும் உலகிலேயே மிகவும் வறுமையான நாடாக உள்ளது. அன்று கோடிக்கணக்கான ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய இரத்தக் காட்டேரி தான் இந்த டுவாலியர். தனது அதிகாரத்தை நிலைநாட்ட படுகொலைகளுக்கு அஞ்சாத கொடுங்கோலன். இவர் தான் அன்னை தெரேசாவின் நண்பர்!

1979 ம் ஆண்டு, அன்னை தெரேசா குவாத்தமாலாவிற்கு விஜயம் செய்தார். அப்போது அங்கு இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. குவாத்தமாலா ஏழைகள் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். "பயங்கரவாத ஒழிப்பு" என்ற பெயரில், குவாத்தமாலா படையினர் ஏழை மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அது குறித்து குவாத்தமாலா சென்ற அன்னை தெரேசாவிடம் கேட்கப் பட்ட பொழுது, தான் அப்படி எதையும் பார்க்கவில்லை என்று பதிலளித்தார்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு, அன்று நடந்த போர்க்குற்றங்கள் குவாத்தமாலா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டன. அப்போது அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதும் நிரூபிக்கப் பட்டது. இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து, அவர்கள் கொடுத்த பணத்தை மனவுவந்து ஏற்றுக் கொண்ட அன்னை தெரேசா ஒரு புனிதரா?

அமெரிக்காவில் ஊழல் செய்வதில் பேர் போன நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள், அன்னை தெரெசாவுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். முதலாளித்துவ சுரண்டலுக்கு தாராளமாக அனுமதி வழங்கிய அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் கௌரவிக்கப் பட்டார். ரீகனின் ஆட்சிக் காலத்தில் உலகம் முழுவதும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏழைகளுக்காக சேவை செய்யக் கிளம்பிய அன்னை தெரேசா, ஏழைகளை உருவாக்கும் பிசாசுகளுடன் கூடிக் குலாவினார். இது அவரது இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது.

உலகம் முழுவதும் கிடைத்த கோடிக் கணக்கான நிதி, இந்திய ஏழைகளுக்காவது போய்ச் சேர்ந்ததா? அதுவும் இல்லை. அவரால் நிர்வகிக்கப் பட்ட கிளினிக்குகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. அன்னை தெரெசாவின் தொண்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் யாருக்கும் தெரியாது. ஒரு தடவை இந்திய ஊடகவியலாளர்கள், கணக்குகளை ஆராயக் கேட்ட நேரம் மறுத்து விட்டார். அப்படிப் பட்ட அயோக்கியர் எப்படிப் புனிதராக முடியும்?

மேற்குறிப்பிட்ட தகவல்கள் எல்லாம், அன்னை தெரேசா உயிரோடு இருக்கும் காலத்தில், எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள் தான். ஆனால், அவை மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தெரிய விடாமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த இனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகள், எந்தத் தயக்கமும் இன்றி குற்றங்களை புரிவதற்கு, அன்னை தெரேசா போன்றவர்களும் காரணம்.

கீழே உள்ள குறிப்புகள் நெதர்லாந்து பத்திரிகையில் வந்த கட்டுரை ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டன. Anton Mullink ஒரு முன்னாள் பாதிரியார். தற்போது நாஸ்திக‌ எழுத்தாள‌ர். புனித‌ர் என்று அழைப்ப‌த‌ற்கு த‌குதிய‌ற்ற‌ அன்னை தெரேசாவை, வ‌த்திகான் புனித‌ராக‌ பிர‌க‌ட‌னப் ப‌டுத்தியுள்ள‌து தொடர்பாக எழுதப் பட்ட கட்டுரை அது.

அவ‌ர் எழுதிய‌ க‌ட்டுரையில் இருந்து சில‌ குறிப்புக‌ள்:

1. ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌தை விட‌ க‌த்தோலிக்க‌ ம‌த‌ம் ப‌ர‌ப்புவ‌தே அவ‌ர‌து நோக்க‌மாக‌ இருந்த‌து. 
2. ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் நோயாளிக‌ள் மோச‌மாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ன‌ர். ம‌ருந்துக்க‌ளுக்கு த‌ட்டுப்பாடு. எப்போதாவ‌து ஒரு நாள் வ‌ரும் வைத்திய‌ர். சுத்திக‌ரிக்க‌ப் ப‌டாத‌ ஊசிக‌ள். சுகாதார‌ம‌ற்ற‌ இட‌ம். இவை ச‌ர்வ‌சாதார‌ண‌ம். 
3. பெரும்பாலும் தொண்ட‌ர்க‌ளே நோயாளிக‌ளுக்கு உத‌வினார்க‌ள். ஒரு த‌ட‌வை நோயாளியை அவ‌ச‌ர‌ சிகிச்சைக்கு கொண்டு போக‌ டாக்சியை வ‌ர‌ச் சொன்னார்க‌ள். அன்னை தெரேசா த‌டுத்து விட்டார். கார‌ண‌ம்? பிற‌கு எல்லோரையும் டாக்சியில் கொண்டு போக‌ வேண்டி இருக்கும்! 
4. அன்னை தெரேசாவுக்கு நிதிப் பிர‌ச்சினை இருந்த‌தாக‌ சொல்ல‌ முடியாது. அமெரிக்காவில் உள்ள‌ க‌த்தோலிக்க கோடீஸ்வ‌ர‌ர்க‌ள் அள்ளிக் கொடுத்த‌ன‌ர். ஹைத்தி ச‌ர்வாதிகாரி டுவாலியேர் கூட‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ டால‌ர் நிதி வ‌ழ‌ங்கினார். அந்த‌ப் பண‌ம் எல்லாம் எங்கே போன‌து? யாருக்கும் தெரியாது. 
5. போபால் Union Carbide நிறுவ‌ன‌த்தின் ந‌ச்சுவாயு க‌சிவில் 2500 பேர் ப‌லியானார்கள். பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் அமெரிக்காவிட‌ம் ந‌ஷ்ட‌ஈடு கோரினார்க‌ள். அன்னை தெரேசா அவ‌ர்க‌ளை "ம‌ன்னித்து விடுங்க‌ள்" என்று ம‌ன்றாடினார்! 
6. யூகோஸ்லேவிய‌ போர்க‌ள் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், வ‌ன்புண‌ர்ச்சிக்கு ப‌லியான‌ பெண்க‌ள் க‌ர்ப்ப‌மாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் வேண்டாத‌ க‌ர்ப்ப‌த்தை க‌லைக்க‌ முய‌ன்ற‌ பொழுது அன்னை தெரேசா த‌டுத்தார். "க‌ருக்க‌லைப்பு ச‌மாதான‌த்திற்கு விரோத‌மான‌து. தாய்மாரே கொலை செய்கின்ற‌ன‌ர்....!" இது தான் "புனித‌ர்" தெரேசாவின் வாத‌ம்.
 (ந‌ன்றி: NRC Handelsblad, 6 sep. 2016)


Tuesday, August 30, 2016

மலேசிய தமிழினப் படுகொலையும் நேதாஜியின் ஒட்டுக்குழுவினரின் துரோகமும்


வ‌ர‌லாற்றில் ப‌திய‌ப் ப‌டாத‌ ம‌லேசிய‌த் த‌மிழினப் ப‌டுகொலை! இர‌ண்டாம் உல‌க‌ப்போர்க் கால‌த்தில், ம‌லேசியாவை ஆக்கிர‌மித்த‌ ஜ‌ப்பானிய‌ப் ப‌டையின‌ர், ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளை கொத்த‌டிமைக‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி, ச‌யாம் - ப‌ர்மா ர‌யில் பாதை அமைத்த‌ன‌ர். க‌டுமையான‌ வேலைப் ப‌ளு, ஜ‌ப்பானிய‌ அதிகாரிக‌ளின் சித்திர‌வ‌தைக‌ள் கார‌ண‌மாக‌ ஒன்றரை இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். இத‌னால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் எண்ணிக்கை க‌ணிச‌மான‌ அள‌வு குறைந்த‌து.

தமிழர்கள் மட்டுமல்லாது, பர்மியர்கள், மலேயர்கள், மற்றும் சிறைப்பிடிக்கப் பட்ட ஐரோப்பியர்களும், ஜப்பானியரால் கட்டாய வேலை வாங்கப் பட்டனர். அன்று நடந்த இனப்படுகொலையில் பல்லின மக்கள் கொல்லப் பட்டனர். ஆனால், பலியான தமிழர்களின் எண்ணிக்கை மற்றைய இனத்தவரை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பிய சிறைக் கைதிகள் பற்றிய தகவல்கள், The Bridge on the River Kwai என்ற ஹாலிவூட் திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் தெரிய வந்தன. ஆனால், தமிழர்கள் பற்றிய தகவல்கள் பல தசாப்த காலமாக மறைக்கப் பட்டு வந்துள்ளன. (The real Kwai killed over 1.50 lakh Tamils

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், ஜப்பானியப் படைகள் மலாயா தீபகற்பத்தையும், சிங்கப்பூரையும் ஆக்கிரமித்திருந்தன. ஜப்பானிய படையினர் ஆரம்ப காலங்களில் ஐரோப்பியர்களை சிறைப்பிடித்து சித்திரவதை செய்து வந்தனர். அதற்கு அடுத்த படியாக சீனர்களை துன்புறுத்தினார்கள். 

மலேசியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களை அகற்றி விட்டு, அந்த இடத்தில் ஜப்பானியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதைத் தமது தேசிய இன விடுதலையாக கருதிய மலே பெரும்பான்மை சமூகத்தினர், குறிப்பாக சுல்த்தான்கள், மலே தேசியவாதிகள், இஸ்லாமியவாதிகள் ஆகியோர் ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர். 

இந்திய கூலித் தொழிலாளர்கள், மேற்குறிப்பிட்ட எந்தப் பிரிவுக்குள்ளும் அடங்கவில்லை. அதனால் தான் சயாம் - பர்மா ரயில்பாதைத் திட்டத்திற்கு தமிழர்களை அழைத்துச் சென்றனர். தமிழ்க் கூலித் தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டித் தான் கூட்டிச் சென்றனர். 

காட்டு மிருகங்கள் மாதிரி வேட்டையாடப் பட்டு, பலவந்தமாக பிடித்துச் செல்லப் பட்டவர்களும் உண்டு. அனேகமாக ஓர் ஆண் குடும்ப உறுப்பினர் பிடித்துச் செல்லப் பட்டால், கூடவே முழுக் குடும்பமும் சென்றது. அதைத் தவிர, ஜப்பானிய இராணுவப் - பொலிசார் ரோந்து நடவடிக்கைகளின் போது அகப்பட்ட இளைஞர்களையும் கட்டாய வேலை செய்ய அனுப்பினார்கள்.

சயாம் - பர்மா ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு, இலட்சக் கணக்கான இந்தியர்கள் அடிமைகளாக பிடித்துச் செல்லப் பட்ட நேரம், இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது? 

இந்திய தேசிய இராணுவம் அமைப்பதற்கு ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அதன் தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், ஜப்பானியரின் அரவணைப்பில் சுதந்திர மனிதனாக வாழ்ந்து வந்தார். மலேயாவில் திரட்டப் பட்ட போராளிகளுடன் பர்மா - இந்தியா எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து தான், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

அதாவது, ஒரு பக்கம் ஜ‌ப்பானிய‌ர்க‌ளினால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம், நேதாஜி சுபாஸ் ச‌ந்திர‌போஸ் அதே ஜ‌ப்பானிய அட‌க்குமுறையாள‌ர்க‌ளுட‌ன் கூடிக் குலாவினார். இந்திய‌ தேசிய‌ இராணுவ‌ம் பர்மா எல்லையை நோக்கிய படை நகர்வுகளுக்கு, த‌மிழ் அடிமை உழைப்பாளிக‌ள் க‌ட்டிய‌, சாலைகள், ரயில் பாதைகளை ப‌ய‌ன்ப‌டுத்திய‌து. அப்போது அந்த சாலையும், ரயில்பாதையும் இந்தியத் தமிழர்களின் அடிமை உழைப்பால் உருவானவை என்ற எண்ணம் நேதாஜியின் மனதை உறுத்தவில்லை.

த‌ன‌து க‌ண்ணெதிரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலையை க‌ண்டுகொள்ளாம‌ல் புறக்க‌ணித்த‌, பாசிச‌ இன‌ப் ப‌டுகொலையாளிக‌ளுட‌ன் கைகோர்த்த‌ நேதாஜியை த‌லையில் தூக்கிக் கொண்டாடும் த‌மிழ‌ர்க‌ள் இன்றைக்கும் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் எந்த‌க் கூச்ச‌மும் இன்றி த‌ம்மை "த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள்" என்றும் அழைத்துக் கொள்கிறார்க‌ள்!

முள்ளிவாய்க்கால் இன‌ப்ப‌டுகொலையை எதிர்த்து ஆர்ப்பாட்ட‌ம் செய்யும் த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள் வ‌ழ‌மையாக‌ ஓர் உண்மையை ம‌றைப்பார்க‌ள். வ‌ன்னியில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையின‌ர் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியினர், மலையகத் தமிழர்கள் அல்ல‌து அடித்த‌ட்டு ம‌க்க‌ள்.

ச‌யாம் - ப‌ர்மா ம‌ரண‌ ர‌யில்பாதை அமைக்கும் பணியில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையானோர் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் அல்ல‌து இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க ம‌க்க‌ள். ம‌லேசிய‌த் த‌மிழ‌ரில் வ‌ச‌தியான‌வ‌ர்க‌ளும், ஆதிக்க சாதியின‌ரும், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து ஜ‌ப்பானிய‌ ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்த‌ன‌ர். அதனால் இனப்படுகொலைக்குள் அகப்படாமல் தப்பி விட்டனர். இவர்கள் மட்டுமா தப்பினார்கள்? மலேசிய சிங்களவர்களும் தான் தப்பிப் பிழைத்தனர். அந்தச் சிங்களவர்களும் வசதியான ஆதிக்க சாதியினர் தான். சாதியும், வர்க்கமும் சரியாக அமைந்து விட்டதால் இனப்படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்து விட்டனர்.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சிங்களவர்களும் சேர்ந்திருந்தனர்! (Sinhalese who Fought with the National Army of ‘Netaji’ Subhash Chandra Bose against Britainhttp://dbsjeyaraj.com/dbsj/archives/9596) அன்று மலேயாவில் கணிசமான அளவு சிங்களவர்களும் வாழ்ந்து வந்தனர். எண்ணிகையில் குறைவாக இருந்தாலும், இலங்கையில் இருந்து சென்ற சிங்களவர்களும், ஈழத் தமிழர்களும், மலேசியாவில் ஓரளவேனும் வசதியாக வாழ்ந்தனர். அவர்கள் யாரும் இந்தியத் தமிழர்கள் மாதிரி கூலித் தொழிலாளராக செல்லவில்லை. பெருந்தோட்டங்களில் சிங்கள அல்லது ஈழத் தமிழ் மேற்பார்வையாளர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். அது அன்றிருந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் அடங்கும்.

சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்வதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் தேசிய விடுதலைப் போராட்டக் கொள்கை. இந்தியா விடுதலை அடைந்தால், இலங்கையையும் விடுதலை செய்து விடலாம் என்று நினைத்தனர். மற்றைய காரணம் சந்தர்ப்பவாதம். இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

அந்தக் காலகட்டத்தில், ஜப்பானியர்கள் பிரித்தானியாவுக்கு ஆதரவானவர்கள் என்ற சந்தேகத்தில் பலரின் தலைகளை வெட்டி பொது இடங்களில் பார்வைக்கு வைத்தனர். பிபிசி வானொலி கேட்ட சிங்களவர் ஒருவரும் கொல்லப் பட்டார். அதற்குப் பிறகு மலேயா சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து கொள்வது பாதுகாப்பானது எனக் கருதினார்கள். மரண ரயில் பாதை அமைக்கும் வேலைக்கும் செல்லத் தேவையில்லை. நேதாஜிக்கு ஜப்பானியரிடம் இருந்த செல்வாக்கு தெரிந்த விடயம் தானே?

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்த சிங்கள வீரர்களுக்கு கொத்தலாவல என்பவர் தலைமை தாங்கினார். யார் இவர்? இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சில வருட காலம் பிரதமராக பதவி வகித்த சேர் ஜோன் கொத்தலாவலையின் மைத்துனர். சிங்கள மேட்டுக்குடி உறுப்பினர். கொவிகம (வெள்ளாளர்) உயர் சாதியை சேர்ந்தவர். காலனிய எஜமானர்களையும், முதலாளித்துவத்தையும் ஆராதிக்கும் தீவிர வலதுசாரிக் குடும்பத்தை சேர்ந்தவர். இந்திய தேசிய இராணுவத்தில் இணைவதற்கு இத்தனை தகுதிகள் போதாதா? இனம் இனத்தோடு தானே சேரும்? நேதாஜியும், கொத்தலாவலையும், ஜப்பானியர்களும் ஒன்று சேர்வதற்கு அடிப்படைக் காரணம் பாஸிசம் அல்லாமல் வேறென்ன?

பாஸிஸ‌ம் என்ப‌து இருப‌தாம் நூற்றாண்டில் உல‌க‌ம் முழுவ‌தும் பர‌விய‌ அர‌சிய‌ல் கோட்பாடு. வ‌ர்க்க‌, சாதிய‌ முர‌ண்பாடுக‌ளை புற‌க்க‌ணித்து இன‌த்தின் அல்ல‌து தேசிய‌த்தின் பெய‌ரில் ஒன்று சேர‌க் கோருகின்ற‌து. ஜ‌ப்பானிய‌ பாஸிஸ்டுக‌ளுட‌ன் ஒத்துழைத்த‌, நேதாஜி எவ்வாறு தூய்மையான‌வ‌ராக‌ இருக்க‌ முடியும்? நேதாஜி ஏற்க‌ன‌வே ஹிட்ல‌ருட‌ன் கைகோர்த்த‌வ‌ர் தானே?

ஈழ‌த்தில் சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் ஒத்துழைத்த‌ த‌மிழ் துணைப்ப‌டையின‌ரை "ஒட்டுக் குழுக்க‌ள்" என்கிறார்க‌ள். அப்ப‌டிப் பார்த்தால், நேதாஜியின் இந்திய‌ தேசிய‌ இராணுவ‌மும் அதே மாதிரியான‌ ஒட்டுக்குழு தான்.

ம‌லேசிய‌ த‌மிழின‌ப் ப‌டுகொலை இவ்வ‌ள‌வு கால‌மும் ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌த‌ன் பின்னணிக் கார‌ண‌மும் அது தான். இன்றைக்கும் மேல்தட்டு வ‌ர்க்க‌த்தின‌ர், சாதிமான்க‌ள் நேதாஜியை நாய‌க‌னாக‌ ஏற்றுக் கொள்கின்ற‌ன‌ர். அதே நேர‌ம், இன‌வ‌ழிப்பில் ப‌லியான‌ அடித்த‌ட்டு, தலித் த‌மிழ‌ர்க‌ளின் இழ‌ப்பு அவ‌ர்க‌ளை உலுக்கி இருக்க‌வில்லை.

இன‌ உண‌ர்வை விட‌ சாதிய‌ - வ‌ர்க்க‌ உண‌ர்வுக‌ள் உறுதியான‌வை. கால‌ங்க‌ட‌ந்தும் நிலைத்து நிற்கும்.

Tuesday, August 09, 2016

இனப்படுகொலை தொடர்பாக ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்க மடல்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள், "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை" என்று கூறியிருக்கிறீர்கள். ஈழத்து, தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதிகள் மாத்திரம் உங்களது கூற்றை மறுத்து எதிர்வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று த‌மிழ்/ சிங்கள இடதுசாரிகளும், மேற்குலக நாடுகளை சேர்ந்த இடதுசாரிகளும் சொல்கிறார்கள்.  இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். 

"இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள்" போன்றவர்களையும் "மாற்றுக் கருத்தாளர்கள்" என்று தமிழ் தேசியவாதிகள் வசைபாடி வந்துள்ளனர். இருப்பினும் சர்வதேச அரங்கில் அத்தகைய "மாற்றுக் கருத்தாளர்கள்" தான் இனப்படுகொலை என்ற சொல்லை தொடர்ந்தும் பாவித்து வருகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் தருகின்றேன்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நகரமொன்றில், போலந்தை சேர்ந்த 19 வயது வாலிபனை சந்தித்தேன். அறிமுகத்தின் பின்னர் நான் ஓர் ஈழத் தமிழன் என்று தெரிந்ததும், அவனிடம் இருந்து வந்த வார்த்தைகள் பின்வருமாறு: "இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்." இலங்கையில் நடந்த போர் அழிவுகள் பற்றி அனைத்து விபரங்களும் அறிந்து வைத்திருந்தான். 

நீங்கள் நினைப்பது போன்று, அவனும் ஒரு ஈழத்து/தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதியாக இருந்திருந்தால் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஆனால், அவன் போலந்தை சேர்ந்த இளம் கம்யூனிஸ்டு. கடந்த ஐந்து வருடங்களில், நான் சந்தித்த ஐரோப்பிய கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் இலங்கையில் இனப்படுகொலை நடந்த விபரம் தெரிந்திருக்கிறது. அதை அவர்கள் தமது கூட்டங்களிலும், வெளியீடுகளிலும் சொல்லி வருகின்றனர். 

எதற்காக சர்வதேச இடதுசாரிகளும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்? இந்த விடயம் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழும் புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மேற்குலக நாடுகளில் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும். 2009 ம் ஆண்டு, மேற்கத்திய நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், இடதுசாரிகள் முன்னின்று ஒத்துழைத்தனர். 

இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் புலிகளை தடை செய்து விட்டன. அதனால் பெரும்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் புலிகளை ஆதரித்து யார் பேசினாலும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டியவர்கள் இடதுசாரிகள் தான். அதனால் தான் இன்று வரைக்கும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். 

"இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்." என்றொரு பழமொழி உண்டு. அந்த வகையில், புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளின் எதிர்வினைகளை எதிர்பார்த்து, நீங்கள் இனப்படுகொலை குறித்த கருத்தை கூறியிருக்கலாம். இதுவரை காலமும் அவர்கள் சொல்லி வந்த வாதங்களும் உங்களுக்கு மனப்பாடமாக இருக்கலாம். ஆனால், இனப்படுகொலை பற்றிப் பேசும் ஈழத் தமிழர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்களும் அல்ல, தமிழ் தேசியவாதிகளும் அல்ல.

நான் பிறந்ததில் இருந்து 13 வயது வரையில் கொழும்பு நகரில் வாழ்ந்து வந்தேன். எனது வாழ்நாளில் இரண்டு "இனக் கலவரங்களை" கண்டிருக்கிறேன். 1977, 1983 கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் கதைகளை கேள்விப் பட்டிருக்கிறேன். 

அவை "இனக்கலவரம்" என்று அரசு சொன்னதும் இனவாத உள்நோக்கம் கொண்டது தான். பொதுவாக, கலவரங்கள் அரசுக்கு எதிரான ஒழுங்கு படுத்தப் படாத மக்கள் எழுச்சியாக அறியப் பட்டுள்ளன. ஆனால், "தமிழர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக சிங்கள மக்களின் எழுச்சி" என்று அரசு பிரச்சாரம் செய்தது.

சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழர்களை எதிரிகளாக காட்டுவதன் மூலம், அரசு தனக்கெதிரான கலவரங்களில் இருந்து பாதுகாப்பு தேடிக் கொண்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 

அதை "இனக்கலவரம்" என்று அழைத்தார்கள்.  ஆனால், உண்மையில் அவை கலவரங்கள் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலைகள். அதற்கு ஆதாரம் என்ன? கொழும்பு நகரில் வசிக்கும் தமிழர்களின் பெயர் விபரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து பெற்றுக் கொண்டார்கள். அதன் படி தமிழர்களின் வீடுகளை தேடிச் சென்று தாக்கினார்கள். 

சிங்கள இனவெறிக் காடையர்களுக்கு வாக்காளர் பட்டியலை கொடுத்தது யார்? அப்போது ஆளும்கட்சியாக இருந்த யு.ஏன்.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள். தமிழர்களின் வீடுகள் மட்டுமல்லாது, வர்த்தக நிலையங்களும், பாடசாலைகளும், கோயில்களும் தாக்கி எரிக்கப் பட்டன. குறிப்பாக 1983 ம் ஆண்டு, தலைநகரில் இருந்த தமிழர்களின் சொத்துக்கள் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டன. இதனை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்த அதே பாணியில் தான், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையும் நடந்தது. அங்கேயும் இந்து மதவெறியர்கள், முஸ்லிம் வாக்காளர்களின் விபரங்களை கையில் வைத்திருந்தார்கள். அதுவும் குஜராத் மாநில பாஜக அரசியல்வாதிகளின் துணையுடன் நடந்தது. ஆகவே, இலங்கையில் தமிழர்கள் மாதிரி, இந்தியாவில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர் என்று சொல்வதற்கும் ஆதாரங்கள் பலமாக உள்ளன. 

மேலதிகமாக ஓர் உண்மையை இங்கே குறிப்பிட வேண்டும். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை உருவாக்கியதில் பெரும்பங்கு சிறிலங்கா அரசை சாரும்! இந்தத் தகவல் உங்களுக்கு அதிசயமாக இருக்கலாம். நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே, தென்னிலங்கையில் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்ததை அறிந்து வைத்திருக்கிறேன். அனுராதபுரத்தில் எமது உறவினர்கள் சிலர் வசித்தனர்.

"தனிச் சிங்கள மாவட்டங்கள்" என்று கருதப்படும், அனுராதபுரம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் வடக்கு, கிழக்கில் இருந்து சென்று குடியேறியவர்கள் அல்ல. நினைவு தெரிந்த நாளில் இருந்து, அவற்றை பூர்வீக பூமியாக கொண்டிருந்தனர். ஆனால், "இனக்கலவரங்கள்", அதாவது திட்டமிட்ட இனப்படுகொலைகளின் விளைவாக அவர்கள் அந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

அவ்வாறு தான் வடக்கு - கிழக்கு தமிழர்களுக்கென "ஒதுக்கப் பட்ட" பிரதேசமாகியது. அதை "தமிழீழம்" என்ற தனி நாடாக்க கோரியவர்கள், யாழ் மையவாத சிந்தனைக்குள் கட்டுப்பட்டவர்கள் மட்டும் தான். தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகள் என்று அந்தக் கொள்கை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், எண்பதுகளில் ஆயுதமேந்திய இயக்கங்களில், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் ஆகியவை மலையகத்தையும் சேர்த்து ஈழம் என்று உரிமை கோரின. குறிப்பாக ஈரோஸ் மலையகப் பகுதிகளில் சில தாக்குதல்களை நடத்தி இருந்தது. அந்தளவுக்கு மலையகத் தமிழ் போராளிகளும் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

மலையகத்தில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தவறு. கொழும்பில் மட்டுமல்லாது, மலையகத்திலும் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. அதன் விளைவாக, மலைநாட்டுப் பகுதிகளில் தமிழர்களை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் குவிய வைத்தது. பெருமளவு மலையகத் தமிழர்கள் அகதிகளாக வெளியேறி வன்னியில் குடியேறினார்கள். இன்றைக்கும் வன்னிப் பிரதேச சனத்தொகையில் கணிசமான அளவு மலையகத் தமிழர்களும் அடங்குவார்கள். 

2009 ம் ஆண்டு நடந்த, புலிகளின் அழித்தொழிப்பிற்கு பழிவாங்குவதற்காக சிலர் இனப்படுகொலை அரசியலை முன்னெடுப்பதாக தாங்கள் கருதலாம். அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். நான் முன்னர் கூறிய படி, "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்பவர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்கள் அல்ல."

1977, 1983 இனக்கலவரங்களை இனப்படுகொலை என்று அப்போதே பலர் சொல்லத் தொடங்கி விட்டனர். தமிழர்கள் மட்டுமல்ல, இடதுசாரி சிங்களவர்களும் இனப்படுகொலை என்றே சொல்லி வந்தனர். 2009 ம் ஆண்டு இனப்படுகொலை நடக்கலாம் என்று ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருந்தது.

சமாதான பேச்சுவார்த்தையின் போது, புலிகளுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதுவர் "என்ன விலை கொடுத்தேனும் புலிகளை தோற்கடிப்போம்." என்று சூளுரைத்தார். போர் முடிந்த பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க பத்திரிகைகள் பின்வருமாறு கூறின: "போர் தொடர்ந்திருந்தால் இதை விட பல மடங்கு இழப்புகள் வந்திருக்கும். இத்துடன் போர் முடிவுக்கு வந்ததால் இது ஒரு ஈடுகட்டக் கூடிய இழப்பு (collateral damage) தான்."

பெரும்பாலானோர் புலிகளும், புலி ஆதரவாளர்கள் சொல்வதும் தான் ஈழத் தமிழரின் அரசியல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. அதற்குமப்பாலும் ஓர் அரசியல் இருக்கிறது. அது ஏகாதிபத்திய நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

இலங்கையில் நடந்தது "கிளர்ச்சியை அடக்குவதற்கான அரசின் வன்முறை" என்று நீங்கள் விளக்கம் கூறலாம். அதற்கு உதாரணமாக ஜேவிபி கிளர்ச்சியை எடுத்துக் காட்டலாம். "அதுவும் இனப்படுகொலையா?" என்று கேட்கலாம். ஆம், அதுவும் இனப்படுகொலை தான்! இந்த விடயத்தில் நான் ஏற்கனவே தமிழ் தேசியவாதிகளுடன் பல தடவைகள் முர‌ண்ப‌ட்டுள்ளேன். அவர்களும் உங்களைப் போன்று "அது இனப்படுகொலைக்குள் அடங்காது" என்று நம்புகிறவர்கள் தான்.

ஜேவிபி கிளர்ச்சியின் போது, சில கிராமங்கள் முற்றாக அழிக்கப் பட்டன. சில பாடசாலைகளில் படித்து வந்த மாணவர்கள் அனைவரும் கொல்லப் பட்டு புதைகுழிகளுக்குள் புதைக்கப் பட்டனர். "தமிழர்களை படுகொலை செய்வதற்கு காரணம் வேற்றினத்தின் மீதான வெறுப்பு. சிங்களவர்களை படுகொலை செய்வதற்கு என்ன காரணம்?" என்று கேட்கலாம். 

இந்தியாவில் நக்சலைட் ஒழிப்புப் போரில்  படுகொலை செய்யப் பட்டவர்கள் யார்? கூலி விவசாயிகள், தாழ்த்தப் பட்ட சாதியினர், ஆதிவாசிகள் போன்றோர் தான். இலங்கையிலும் அது தான் நடந்தது. ஒரே சிங்கள மொழி பேசினாலும், வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு காரணமாக படுகொலை செய்யப் பட்டனர். ஆகவே, அதுவும் இனப்படுகொலைக்குள் அடங்கும்.

இந்தோனேசியா, மலேசியா, போன்ற நாடுகளில் நடந்ததும் இனப்படுகொலையா? ஆம், இனப்படுகொலை தான். இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட் சந்தேகநபர்கள் மீது நடத்தப் பட்ட இனப்படுகொலை பற்றி விரிவான கட்டுரை எழுதி இருக்கிறேன். அது மட்டுமல்ல, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பூர்வகுடிகள் அழித்தொழிக்கப் பட்ட வரலாறும் இனப்படுகொலைக்குள் அடங்கும். அவற்றைப் பற்றியும் எழுதி இருக்கிறேன்.

அன்புடன்,
- கலையரசன் 



பிற்குறிப்பு:
சிலநேரம் ஜெயமோகன் "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான்" என்று சொல்லியிருந்தால் மட்டும் தான், அந்தக் கூற்றின் உள்நோக்கம் குறித்து சந்தேகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அது அவரது அரசியல் கொள்கைக்கு முரணானது.

பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களும், ஏதாவதொரு அரசியல் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஜெயமோகன் இந்து பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர். அவர் அதை வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் காட்டியதில்லை. இப்போதும் அந்தக் கொள்கையில் உறுதியாக நின்று கொண்டு தான் பேசுகின்றார்.

உண்மையில், ஜெயமோகன் மிகவும் தெளிவாக உள்ளார். ஆனால், இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள் தான் மிகவும் குழம்பிப் போயுள்ளனர். ஜெயமோகனுக்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது என்பதை ஒத்துக் கொண்டால், குஜராத், காஷ்மீர், மணிப்பூரில் நடந்ததும் இனப்படுகொலை தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதை அவரே நேரடியாக சொல்லி இருக்கிறார்.

ஜெயமோகனின் பதிலில் இருந்து சில உதாரணங்கள்: 
//பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த ஒருவர் சொன்னார், இந்தியாவில் இஸ்லாமியர் இன அழித்தொழிப்பு செய்யப்படுகிறார்கள் என. நான் அதிர்ச்சியுடன் அதை மறுத்தேன்.// 
//மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சொன்னார், இந்தியா மணிப்பூரிகளை இன அழித்தொழிப்பு செய்கிறது என. அங்கு நடந்த இந்திய அரசுசார்ந்த அனைத்துத் தாக்குதல்களையும் பட்டியலிட்டார். இன அழித்தொழிப்புக்கு அவர் சொன்ன ஒரு வழிமுறை அதிர்ச்சி கொள்ளச் செய்தது.// 
//இதோ இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் காஷ்மீரில் இந்தியா செய்யும் இனஅழித்தொழிப்புக்கு எதிராக அறைகூவுகிறது.// 
//இப்படி அறைகூவுபவர்கள் இரண்டு விஷயங்களை மறைத்துவிடுவார்கள். ஒன்று தங்கள் சார்பில் செய்த மீறல்களை. இரண்டு, தங்கள் கொள்கையுடையவர்கள் செய்த இனஒழிப்புகளை தாங்கள் ஆதரிப்பதை.//

ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நடத்துகிறவர்கள், அது பற்றி சிந்திப்பவர்கள், முதலில் தமக்கான அரசியல் சித்தாந்தம் ஒன்றை தெளிவாக வரையறுக்க வேண்டும். "சிங்களப் பேரினவாதம் எமக்கு எதிரி. ஆனால், இந்து பேரினவாதம் எமக்கு நண்பன்." என்ற அளவில் தான் அவர்களது அரசியல் நிலைப்பாடு உள்ளது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஆக்ரோஷமாக பேசுகிறவர்கள், காஷ்மீர், குஜராத், மணிப்பூரில் நடந்தவை இனப்படுகொலை இல்லை என்று வாதிடுவார்கள். அப்படியான "தமிழ் தேசியவாதிகள்" பலரை நானே சந்தித்து இருக்கிறேன்.

இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள், இப்போதாவது தமது தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஜெயமோகன்களை கண்டிக்கும் தார்மீக பலத்தையும் இழந்து விடுவார்கள்.

இந்திய, இலங்கை பேரினவாத அரசுக்கள், எப்போதும் இனங்களை பிரித்து வைத்து, அவற்றிற்கு இடையில் பகையை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. ஜெயமோகனும் அத்தகைய பேரினவாத அரசின் நிலைப்பாடை தான் பிரதிபலித்துள்ளார்.

தேசிய இன விடுதலைக்காக போராடும் சக்திகள், இந்திய- இலங்கை அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல், சரியான அரசியல் சித்தாந்தத்தின் வழிநடத்தலின் கீழ் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதுவே ஜெயமோகன் போன்றவர்களுக்கு கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.

Thursday, March 31, 2016

இலங்கை போர்க்குற்றங்களில் பிரிட்டனின் பங்கு - வெளிவரும் இரகசியம்


முன்னாள் பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் நடந்த புலி அழிப்பு போரில் அல்லது தமிழினப் படுகொலையில் பிரிட்டனின் பங்கு என்ன? சிறிலங்கா அரசு இது குறித்து எதையும் கூறாமல் மௌனமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இவர்கள் எல்லோருக்கும் எஜமான் பிரிட்டன். எஜமான விசுவாசம் கொண்ட அடிமைகளிடம் இருந்து தமிழ் மக்கள் உண்மைகளை எதிர்பார்க்க முடியாது.

ஈழப்போரை தொடக்கி வைத்ததில் மட்டுமல்ல, முடித்து வைத்ததிலும் பிரிட்டனின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. 1977 ம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று சொல்லி தமிழர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்த நாளில் இருந்தே, பிரிட்டனின் ஒத்துழைப்பு கிடைத்து வந்தது. அன்று ஜே.ஆரின் அறிவுறுத்தலுக்கு அமைய, "மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்குவதற்கு, அன்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் தாட்சரின் அரசு உதவியது. கிழக்கிலங்கையில் அமைக்கப் பட்ட விசேட அதிரடிப் படைக்கு, பிரிட்டிஷ் கூலிப் படையான SAS பயிற்சி வழங்கியது. (பார்க்க: "மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!)

இறுதிப் போரிலும், பிரிட்டனின் இராணுவ ஆலோசகர்கள் நேரடியாக களத்தில் நின்றனர். வன்னியில் புலிகளையும், அவர்களோடு சேர்த்து ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் அழிப்பதற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இது பற்றிய தகவல்கள் யாவும் இன்று வரையும் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. VICE எனும் ஆவணப் படங்களை தயாரிக்கும் நிறுவனம் எடுத்த பெரு முயற்சியின் பயனாக அது வெளிவந்துள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்தில் இருந்த இரகசிய ஆவணங்களை பார்வையிட்டுள்ளது. (Exclusive: Secret Documents Reveal How Britain Funded Possible War Crimes in Sri Lankahttp://www.vice.com/en_uk/read/sri-lanka-british-police-training-phil-miller)

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில், பிரிட்டிஷ் அரசு நேரடியாகவே பங்கெடுத்திருந்தது என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. இன்னமும் எல்லா இரகசிய ஆவணங்களும் வெளிவரவில்லை. இதுவரை பார்வைக்கு வந்த ஆவணங்களில் இருந்தே பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அழித்தொழிப்பு போரை நடத்துவது எப்படி என்பது குறித்து, பிரிட்டிஷ் ஆலோசகர்கள் சிறிலங்கா படையினருக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். வட அயர்லாந்தில், IRA இயக்கத்தை அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்ட அதிகாரிகள், தமது அனுபவங்களில் இருந்து கற்ற பாடங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இறுதிப் போர் நடந்த காலங்களில், பொலிஸ், இராணுவம் ஆகிய பாதுகாப்புப் படைகள் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேயின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. ஆகவே, பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகர்கள் கோத்தபாயவுடன் கலந்தாலோசிக்காமல் இராணுவ நடவடிக்கைகளில் இறங்கி இருக்க முடியுமா? பிரிட்டன் ஒரு பக்கம் போர்க்குற்றங்களில் பங்கெடுத்துக் கொண்டே, ஐ.நா. சபையில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இரட்டை வேடம் போட்டது. அப்பாவித் தமிழர்களும் பிரிட்டனின் மாய்மாலங்களை நம்பி ஏமாந்தார்கள்.

இறுதிப் போரில் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு பிரிட்டன் எத்தகைய ஆலோசனைகளை வழங்கியது? அது எவ்வாறு நடைமுறைப் படுத்தப் பட்டன? யாழ் குடாநாட்டில் நடந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகள் பற்றி, ஏற்கனவே பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னரே, யாழ் குடாநாட்டில் இயங்கிய புலி உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் விடாது தீர்த்துக் கட்டப் பட்டனர். புலி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து திரிந்த நண்பர்களும் கொலை செய்யப் பட்டனர்.

ஒரு ஊரில் ஒருவர் புலிகளை ஆதரிக்கிறார் என்று சந்தேகம் வந்தால் போதும். அரச புலனாய்வுத்துறையினர், தக்க தருணம் பார்த்திருந்து சுட்டுக் கொன்றனர். அவர் புலிகளுக்கு பெருமளவு உதவி செய்தாரா,  கொஞ்சமாக உதவினாரா என்ற கணக்கே இல்லை. சிலநேரம் நண்பன் என்பதற்காக ஒரு தடவை சந்தித்து பேசி இருக்கலாம். இதனால், ஒரு கட்டத்தில் யாழ் குடாநாட்டு மக்கள் உயிர் தப்புவதற்காக புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார்கள்.

அது எப்படி சாத்தியமாகிற்று? யாழ்ப்பாண மக்களைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். சந்திக்கு சந்தி இருக்கும் சோதனைச் சாவடிகளில், சோதனை என்ற பெயரில் சில இளைஞர்கள் தடுத்து வைக்கப் படுவார்கள். அவர்கள் அப்பாவிகளாகவும் இருக்கலாம் என்பது படையினருக்கு நன்றாகத் தெரியும். தடுத்து வைக்கும் நபரை கொஞ்ச நேரம் வைத்து அடித்து உதைத்து விட்டு விட்டு விடுவார்கள். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நடக்கும்.

சிறிது காலத்தின் பின்னர், குறிப்பிட்ட இளைஞருடன் படையினர் நட்புடன் பழகுவார்கள். அவரை நண்பனாக்கிக் கொள்வார்கள். புலனாய்வுத்துறை தொலைபேசி இலக்கத்தை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். இப்படித் தான் ஒற்றர்கள் உருவாக்கப் பட்டனர். படையினரால் ஒற்றர்களாக மாற்றப் பட்ட தமிழ் இளைஞர்கள், ஊருக்குள் நடமாடும் புலி உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை கொடுத்து வந்தனர். இது ஒவ்வொரு ஊரிலும் நடந்தது. அப்போது இந்த ஆலோசனைகளை வழங்கியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

பிரிட்டிஷ் இரகசிய ஆவணங்களில் இருந்து தெரிய வருவதாவது: "புலிகளை அழிக்க வேண்டுமானால் முதலில் ஒவ்வொரு ஊரிலும் பொது மக்களின் விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்." ஆமாம், பிரிட்டிஷ் ஆலோசனை மிகச் சரியாக நிறைவேற்றப் பட்டது. வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னரே, யாழ் குடாநாட்டில் ஒரு புலி இல்லாமல் ஒழித்துக் கட்டப் பட்டனர். கிழக்கு மாகாணத்தில், TMVP என்ற பெயரில் இயங்கிய முன்னாள் புலிப் போராளிகள் அரச படைகளுக்கு உதவினார்கள். பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்ட TMVP உறுப்பினர்கள், புலிகளையும், ஆதரவாளர்களையும் இனங் கண்டு அழிப்பதற்கு உதவினார்கள். அதுவும் பிரிட்டனின் ஆலோசனை தான்.

இதே நேரம், கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பிற பகுதிகளிலும், புலிகளுக்கு ஆதரவான சிங்கள இடதுசாரி இயக்கம் ஒன்று இரகசியமாக இயங்கி வந்தது. அரசினாலும், ஊடகங்களினாலும் "சிங்களப் புலிகள்" என்று நாமகரணம் சூட்டப் பட்ட அவர்கள், கொழும்பில் சில குண்டுவெடிப்புகளை நடத்தி உள்ளனர். அரசு அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவியாக சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை உருவாக்கியது. இந்த விழிப்புக் குழுக்கள் சிங்களப் புலிகளை மட்டுமல்லாது, அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்களின் நடமாட்டங்களையும் கண்காணித்தார்கள். பொது மக்களின் விழிப்புக் குழுக்கள் வழங்கிய தகவல்களை அடுத்து பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

இதிலே முக்கியமான விடயம் என்னவெனில், சிங்கள மக்களின் விழிப்புக் குழுக்கள் சிங்களப் புலிகளை பிடிப்பதற்கு மட்டும் உதவவில்லை. அரசை விமர்சித்து வந்த ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளையும் கண்காணித்து வந்தன. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில், தென்னிலங்கையில் எத்தனை சிங்கள ஊடகவியலாளர்கள் கொலை செய்யப் பட்டனர், பயமுறுத்தப் பட்டனர் என்பதை நான் இங்கே விபரிக்கத் தேவையில்லை.

அன்று நடந்த நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு பிரிட்டிஷ் அரசும் பொறுப்பு என்பது ஆச்சரியத்திற்குரியது. சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டுமென ஆலோசனை கூறியது யார்? வேறு யார், பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகர்கள் தான்.

எதற்காக பிரிட்டன் இலங்கை அரசை ஆதரிக்க வேண்டும்? இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் பங்கெடுக்க வேண்டும்? இந்து சமுத்திரத்தின் மத்தியில், இலங்கைத் தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்து நடக்கும் இடத்தில் உள்ளது. ஆகவே, அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டியது அவசியம். இலங்கையில் எழுந்த தமிழர்களின் கிளர்ச்சியை ஒடுக்குவது, ஏகாதிபத்திய நலன் சார்ந்த விடயம்.

நாங்கள் ஈழப்போரை புலிகளின் நீதியான அறப் போராட்டமாக கருதினால், ஏகாதிபத்தியத்தின் கண்களுக்கு அது பயங்கரவாதமாகத் தெரியும். நாங்கள் அதனை ஒட்டு மொத்த ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டமாக கருதினால், ஏகாதிபத்தியம் அதனை தனக்கு எதிரான புரட்சி என்று கணித்து வைத்திருக்கும். 

நடந்து முடிந்த இனப்படுகொலையில் இருந்து, தமிழர்கள் இன்னுமா பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை? தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பதில் இன்னுமா உங்களுக்கு சந்தேகம்? தமிழ் மக்களின் எதிரி சிங்களப் பேரினவாத அரசு மட்டுமல்ல. அதனை பின்னால் நின்று இயக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியமும் தமிழர்களின் எதிரி தான்.

மேலதிக தகவல்களுக்கு:



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
தமிழ்ச்செல்வன் கொலையின் பின்னணியில் அமெரிக்கா? - இரகசிய CIA ஆவணம்