Saturday, May 07, 2022

அன்டன் பாலசிங்கம் திரிபுபடுத்திய சுயநிர்ணயம் பற்றிய லெனினின் மேற்கோள்

 

"தமிழ் மொழியின் பெயரில் ஈழம் பிரிவதையும் லெனின் எழுதிய கோட்பாடு அங்கீகரிக்கின்றது" என்பது மாதிரி தமிழ்த்தேசியம் பேசும் சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, லெனின் எழுதிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசும் இனங்கள், ஆயிரம் தேசங்களாக பிரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதைப் போன்று பிதற்றுகிறார்கள். முதலில் உலகில் இவ்வாறு ஆயிரம் மொழிவாரி தேசங்களை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமா என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

லெனின் வாழ்ந்த ரஷ்யாவில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசமான மொழிகளைப் பேசும் வேற்றின மக்கள் வாழ்கிறார்கள். அப்படியானால் லெனின் எதற்காக ரஷ்யாவை நூறு துண்டுகளாக உடைத்து தனித்தனி தேசங்களாக பிரித்து விடவில்லை? எல்லாவற்றையும் இணைத்து சோவியத் யூனியன் என்ற ஒரே நாடாக்க வேண்டும்? சோவியத் குடியரசுகளுக்குள் தனித்தனி பாஸ்போர்ட் நடைமுறை இருந்தது வேறு விடயம். அதைக் கொண்டு யாரும் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாது. அதற்கு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட USSR பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

அது போகட்டும். லெனின் தமிழீழம் பிரிவதையும் ஆதரித்திருப்பார் என்றால், அதற்கு என்ன ஆதாரம்? இதற்கு தமிழ்த்தேசியம் பேசும் புலி விசுவாசிகள் அவர்களது தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்த ஒரு கூற்றை கொண்டு வந்து காட்டினார்கள். அதில் அவர் லெனின் சொன்னதாக ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.

//"எந்தவொரு ஒடுக்கும் தேசத்தையும் சேர்ந்த ஒரு சோஷலிஸ்ட் ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுயநிர்ணய (பிரிவதற்கான) உரிமையை அங்கீகரிக்காமல், அதற்காக போராடாமல் இருப்பாரேயானால் அவர் ஒரு பேரினவாதியாக இருக்கலாமே தவிர ஒரு சோஷலிஸ்டாக இருக்க முடியாது."//

லெனின் இதை எந்த நூலில் எந்த இடத்தில் கூறியுள்ளார்? ஆதாரம் என்ன? அதற்கு அவர்கள் கொடுத்த ஆதாரத்தை இங்கே இணைத்துள்ளேன். லெனின் எழுதிய சமாதானம் குறித்து என்ற தலைப்பிலான கட்டுரை. (The Question of Peace, V.I. Lenin, July-August 1915) இது 1915ல் எழுதப்பட்ட காலனிய நாடுகளின் விடுதலை பற்றிய கட்டுரை. மிகத் தெளிவாக இருக்கிறது.

லெனின் இதை எழுதிய காலத்தில், 1ம் உலகப்போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அப்போது இன்றுள்ள மாதிரியான வரைபடத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அன்று உருவாகி இருக்கவில்லை. ஐரோப்பா, வட அமெரிக்கா தவிர உலகின் பிற நாடுகள் ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டின் காலனிகளாக இருந்தன. ஐரோப்பாவிலேயே பல நாடுகள் ஏதாவதொரு சாம்ராஜ்யத்தின் மாகாணங்களாக இருந்தன. இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் லெனின் அந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார்.

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் போன்ற ஏகாதிபத்தியங்கள் தமக்குள் நிலவிய முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக முதலாம் உலகப்போரில் ஈடுபட்டன. இந்த ஏகாதிபத்திய நாடு ஒவ்வொன்றும், தனக்குள்ளே பல நாடுகளை கொண்டிருந்தன. இவற்றை தான் ஒடுக்கும் தேசங்களாகவும், ஒடுக்கப்படும் தேசங்களாகவும் லெனின் வரையறுக்கிறார். (கட்டுரையை பார்க்கவும்.)

முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் அவை தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட போராடிக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு செர்பியா தவிர்ந்த முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசுகள், மற்றும் செக்(மற்றும் ஸ்லாவாக்கியா) ஆகியன அந்தக் காலத்தில் ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்தன. போலந்து ஜெர்மனிக்குள் இருந்தது.

பிரான்ஸ் ஆப்பிரிக்காவில் பல காலனிகளை வைத்திருந்தது. பிரித்தானியா ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல காலனிகளை வைத்திருந்தது. பிரிட்டன், பிரான்சினால் காலனிப் படுத்தப்பட்ட நாடுகளும் (உதாரணம்: இந்தியா) விடுதலைக்காக அல்லது சுயநிர்ணயத்திற்காக அல்லது பிரிவதற்காக போராடிக் கொண்டிருந்தன. இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை நினைத்துப் பார்க்கவும். இது போன்று காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதைத் தான் லெனின் ஆதரித்து எழுதி இருக்கிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம், அன்டன் பாலசிங்கம் மேற்கோள் காட்டிய கூற்றில் உள்ள "சோஷலிஸ்ட்" என்ற வார்த்தை கம்யூனிஸ்டுகளை அல்லது மார்க்சியவாதிகளை குறிப்பிடவில்லை. அது சமூக ஜனநாயகவாதிகளை குறிப்பிடுகிறது. உதாரணமாக பிரிட்டனில் தொழிற் கட்சி, பிரான்சில் சோஷலிஸ்ட் கட்சி, ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி. இவற்றைத் தான் லெனின் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

அன்று லெனின் "பேரினவாதிகள்" எனக் குற்றஞ்சாட்டிய சமூக ஜனநாயகக் கட்சிகள் இப்போதும் பல ஐரோப்பிய நாடுகளில் தேர்தலில் போட்டியிடுகின்றன. அவை முற்றுமுழுதாக முதலாளிகளை ஆதரிக்கின்றன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல. வழமையான முதலாளித்துவக் கட்சிகள். அவை எதுவும் இன்று மார்க்சியம் பேசுவதுமில்லை.

பாலசிங்கம் குறிப்பிடும் ஒடுக்கும் தேசங்களாக, உதாரணத்திற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இருந்தன. ஒடுக்கப்பட்ட தேசங்களாக போலந்து, ஸ்லோவேனியா, குரோவேசியா ஆகிய பல ஐரோப்பிய நாடுகள் இருந்தன. இவை அப்போது ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய சாம்ராஜ்யங்களின் மாகாணங்கள். அவற்றின் விடுதலைக்கு ஜெர்மனி, ஆஸ்திரியாவை சேர்ந்த சோஷலிச அல்லது சமூக ஜனநாயக (Social Democratic) கட்சிகள் ஆதரிக்கவில்லை.

சோஷலிஸ்டுகள் அல்லது சமூக ஜனநாயகவாதிகள், முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஜெர்மன்/பிரிட்டிஷ்/ஆஸ்திரிய அரசுக்களை ஆதரித்தார்கள். அதைத்தான் "ஒடுக்கப்பட்ட தேசங்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணயத்தை ஆதரிக்காத சோஷலிஸ்டுகள் பேரினவாதிகள்" என்று லெனின் சாடினார். லெனின் எழுதியதை அன்டன் பாலசிங்கம் பிழையாக திரித்துள்ளார். தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்ட புலி விசுவாசிகள் அரசியல் அறிவற்ற தற்குறிகள். அவர்களை எப்படியும் ஏமாற்றலாம் என்பது அன்டன் பாலசிங்கத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

1915 ல் லெனின் எழுதிய மாதிரி, அன்று காலனிகளாக ஒடுக்கப்பட்ட இந்தியாவும், இலங்கையும், ஒடுக்கிய பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்து விட்டன. இது நடந்தது 1947ல். அப்போது லெனின் உயிரோடு இல்லை. இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்து காலனிய தேசங்கள் சுதந்திரம் பெறப்போகின்றன என்ற விடயம், 1924 ம் ஆண்டு காலமான லெனினுக்கு எப்படித் தெரியும்? ஞானக் கண்ணால் பார்த்தாரா? அல்லது இறந்த பிறகு அவரது ஆவி எழுதியதா?

வரலாறு தெரியாத பாஸிஸ்ட்கள் தமிழ்தேசியம் பேசக் கூடாது. இப்படித் தான் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

 


Thursday, April 21, 2022

சிங்கள ராஜபக்சேக்களும் தமிழ் முதலாளிகளும்- திருடர்களின் கூட்டணி

 
ராஜபக்சே குடும்பத்தினர் கொள்ளையடித்த சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்குவதற்கு இரண்டு தமிழ் கோடீஸ்வர தொழிலதிபர்கள் உதவி இருக்கிறார்கள். ஒருவர் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சேயின் கணவர் திருக்குமரன் நடேசன். மற்றவர் புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர் வேலுப்பிள்ளை கணநாதன்.

இறுதிப்போர் முடிவில், தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் வைத்திருந்த ஏராளமான நகைகள், மில்லியன் கணக்கான இலங்கை ரூபாய்கள், மற்றும் பல்லாயிரம் டாலர்கள் அனைத்தையும் அரசுடமையாக்காமல் ராஜபக்சே குடும்பத்தினரே சொந்தமாக்கிக் கொண்டார்கள். இவற்றை ஹெலிகாப்டரில் கொண்டு சென்று ராஜபக்சேவிடம் ஒப்படைத்த பைலட் பின்னர் மர்மமான முறையில் கொல்லப் பட்டுள்ளார். 
 
அத்துடன் மகிந்த ராஜபக்சேயின் பதவிக்காலத்தில் லஞ்சமாகவும், வேறு முறைகேடான வழிகளிலும் பெற்றுக் கொண்ட பணம் ஏராளம் இருக்கும். இந்தப் பணம் யாவும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன. அங்கு பல அசையும், அசையா சொத்துக்களில் முதலிட்டுள்ளனர். போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளனர்.

இதற்கு நிருபமாவும் அவர் கணவர் திருக்குமரனும் உதவி இருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேயின் நெருங்கிய உறவினரான நிருபமா, யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் தமது அரசாங்க பொறுப்புகளை துஸ்பிரயோகம் செய்து தான், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.  
 
திருக்குமரன், நிருபமா தம்பதியினர் லண்டன் நகர மத்தியில் ஆடம்பர வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.  இவர்கள் மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியாவிலும் ரியல் எஸ்டேட்டில் முதலிட்டு உள்ளனர். இவற்றின் பெறுமதி பல மில்லியன் டாலர்கள். அதை விட பல மில்லியன் டாலர்கள் பணமாக துபாய், சீஷெல்ஸ், மற்றும் பல நாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்பிலிடப் பட்டுள்ளன.
 
உலகில் எந்த முதலாளிக்கும் தேசப்பற்று, இனப்பற்று அறவே கிடையாது. இலங்கையில் ஒரு பிரதி அமைச்சராக பதவி வகித்தவரே தனது தனது நாட்டு மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு சென்று பணக்கார நாடுகளில் முதலிட்டிருக்கிறார். குறைந்த பட்சம் அவற்றை தாய்நாட்டில் முதலிட்டிருந்தாலாவது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
 
நிருபமாவின் கணவர் திருக்குமரன் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். இவர் தனது வணிகத் தொடர்புகளை பயன்படுத்தில் பல்வேறு போலி நிறுவனங்கள், அறக்கட்டளைகளை உருவாக்கி மேற்கத்திய பணக்கார நாடுகளில் முதலிட்டுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு பதினெட்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள். இலங்கையில் ஒரு தனி மனிதனின் சராசரி வருட வருமானம் நாலாயிரம் டாலர்கள்.

திருக்குமரன் நடேசன் ஆரம்பத்தில் இருந்தே "அரசியலில் ஈடுபடாத" வணிகத்தை மட்டுமே கவனித்து வந்த தொழிலதிபராக தன்னைக் காட்டி வந்துள்ளார். அத்துடன் இலங்கையில் பல இந்துக் கோயில்களுக்கு வாரி வழங்கி தன்னை ஒரு கொடை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஈழப்போர் தீவிரமடைந்த தொண்ணூறுகளில் தான் இவரது வணிகமும் கொடிகட்டிப் பறந்துள்ளது. 
 
திருக்குமரன் நடேசன், இலங்கையில் முதலிடுவோருக்கு ஆலோசனை வழங்குவதாக சொல்லி Pacific Commodities Ltd என்ற பெயரில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார். Pacific Commodities Ltd, வரியில்லா சொர்க்கம் என்று அழைக்கப்படும் பிரித்தானியாவுக்கு சொந்தமான சேனல் மற்றும் ஜெர்சி தீவுகளில் பதிவுசெய்யப் பட்டது. அதனால் எவ்வளவு பணம் இலங்கையை விட்டு வெளியே சென்றுள்ளது என்ற விபரம் தெரிய வராது.

அத்துடன் நடேசன் அப்போதே கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹில்டன் ஹோட்டலின் உரிமையாளராகி விட்டார். கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹோட்டல் நிர்வாகக் குழுவின் (board of directors, Hotel Developers Ltd) தலைவராக இருந்து வருகிறார். இவரது மாதச் சம்பளம் அப்போதே நான்கு இலட்சம் (Rs 400,000) இலங்கை ரூபாய்கள். அவரது மனைவி நிருபமா அப்போது அரசியலில் ஈடுபடவில்லை.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள யு.என்.பி. ஆட்சியில் இருந்தது. ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் இலங்கையில் ஒரு மிகப்பெரிய முதலீட்டாளராக இருப்பதை அவர்களும் தடுக்கவில்லை. அதுவும் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போர் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரு தமிழ் தொழிலதிபரை யாரும் கண்டுகொள்ளவில்லை. 
 
இலங்கையில் அப்போதும் இப்போதும் இன உணர்வை விட பண உணர்வே பிரதானமானது. இனப்பற்று, தேசப் பற்று எல்லாம் அப்பாவி உழைக்கும் வர்க்க மக்களை ஏமாற்றுவதற்கான வார்த்தை ஜாலங்கள். ராஜபக்சே குடும்பத்தினர் பூர்வீகத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு நிலவுடைமைப் பரம்பரையை சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் பல ஏக்கர் கணக்கிலான வயல் காணிகளும், தென்னந் தோப்புகளும் இவர்களுக்கு சொந்தமாக இருந்துள்ளன. 

*****

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அடிக்கடி திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பயணச் செலவை பொறுப்பெடுத்து, தனியார் விமானத்தில் அனுப்பி வைத்தவர் கணநாதன் என்ற ஒரு தமிழ் தொழிலதிபர். மகிந்த திருப்பதிக்கு சென்ற காரணம் சாமி கும்பிடுவதற்காக அல்ல. அனேகமாக வெளிநாடுகளில் உள்ள வணிக முதலீடுகளை மேற்பார்வை செய்வதற்கான பயணங்களாக அவை இருக்க வேண்டும்.

யார் இந்த கணநாதன்? இவரைப் பற்றிய தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. பெரும்பாலும் முன்பு புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்த பினாமியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. போர் முடிந்த பின்னர் பல முன்னாள் பினாமிகள் புலிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவர்களில் பலர் தற்போது ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகிறார்கள். கணநாதனும் அவர்களில் ஒருவராக இருந்தால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வேலுப்பிள்ளை கணநாதன் ஏற்கனவே உகண்டாவில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப் பட்டிருந்தார். கோத்தபாய ராஜபக்சேயின் ஆட்சிக் காலத்தில் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது. கடந்த வருடம், அதாவது 2021 ம் ஆண்டில் இருந்து தான், உகண்டாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இலங்கையை சேர்ந்த நிறுவனங்கள் உகண்டாவில் முதலிடத் தொடங்கின. இந்த நிறுவனங்கள் யாவும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்கள் என்றே கருதப் படுகின்றன. இவற்றை எல்லாம் மேற்பார்வை செய்யும் பொறுப்பு ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியான கணநாதனிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

பெரும்பான்மை தமிழர்களிடம் ராஜபக்சே சகோதரர்கள் பற்றிக் கருத்துக் கேட்டால் "அவர்கள் சிங்கள இனவாதிகள் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதிகள்" என்று பதில் கூறுவார்கள். அதே மாதிரி பெரும்பான்மை சிங்களவர்களிடம் கேட்டால் "அவர்கள் சிங்களத் தேசியவாதிகள் அல்லது இலங்கை தேசப் பற்றாளர்கள்" என்று பதில் கூறுவார்கள். (பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சிக்கு முன்னரான நிலைமை.) இரண்டு பக்கமும் உள்ள "தேசியவாதிகள்" (அல்லது இனவாதிகள், ஏதோ ஒன்று) இப்படியான அரசியலை தான் கட்டமைத்துள்ளனர். இனப்பிரச்சினை நிலவும் நாட்டில், குறிப்பிட்ட ஒரு இனத்தவர் தாம் பேசுவது தேசியவாதம் என்றும், எதிரி இனத்தவர் பேசுவது இனவாதம் என்றும் பொதுவாக பேசிக் கொள்வார்கள்.

அந்தந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைவர்கள் தாமே சிறந்த தேசியவாதிகள் என்பது மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆகவே, ராஜபக்சே சகோதரர்களும் தாமே தலைசிறந்த தேசியவாதிகள், இனப்பற்றாளர்கள், தேசப் பற்றாளர்கள் என்பது மாதிரியான பிம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைத்து வைத்திருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்த விம்பத்தை உடைத்தெறிந்து விட்டது. 
 
ஒரு காலத்தில் தேசியத் தலைவர்கள் என்று போற்றிய அதே மக்கள் இன்று தேசத் திருடர்கள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். ராஜபக்சே சகோதரர்கள், இனிமேலும் தேசியவாதம், இனவாதத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்த முடியாத நையறு நிலையில் உள்ளனர். இது தேசியவாதம் பேசும் அத்தனை பேருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும்.

Thursday, April 14, 2022

Gota Go Home - ஊழல்மய அதிகாரிகளும் வீட்டுக்கு செல்லுங்கள்

 *சிங்கள மொழியில் வந்த ஓர் அருமையான பதிவு...... பொருத்தம் கருதி தமிழில் தருகின்றேன்*


சோவியத் நாட்டில் கல்வி கற்று விட்டு தற்போது இங்கிலாந்தில் வசித்து கொண்டிருக்கும் எனக்கு இங்கு சொல்லப்படும் எதுவும் புதிதானது அல்ல.


இங்கு சொல்லப்படும் ஒவ்வொன்றும் பிழையானது என நான் பார்க்கக் கற்றுக் கொண்டிருப்பதாலும், இவற்றை விடவும் பாரதூரமான விடயங்களை எதிர்த்துப் பேசியதால் நாட்டைவிட்டே  பாய்ந்து தப்பிச் செல்ல வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டதால் எனக்கோ எனது குடும்பத்திற்கு இங்கு உள்ள விடயங்கள் பொருந்துவதில்லை என்பதாலும், இங்கு சொல்லப்படும் தவறான விடயங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் கொஞ்சமாகவோ அதிகமாகவோ சம்பந்தப்படுவதனால் உங்களுக்கு இதனை சொல்லலாம் என்று இருக்கின்றேன்.


*நாங்கள் விடும் தவறுகளை நாங்களே இனம் கண்டு திருந்திக் கொண்டால் நாடும் தானாக திருந்தும் என நான் நம்புகின்றேன்.*


'கோடா கோ ஹோம்' என கோஷம் எழுப்பும் அதிகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது, நாட்டின் இந்த நிலைக்குக் காரணம் கோட்டாவும் அவரது 225ம் தான் என்று.


என்றாலும் அவர்களோடு சேர்த்து இதற்கு வகை கூறவேண்டிய இன்னும் சில தரத்தவரும் இருக்கின்றனர்.


*அவர்கள்.....*


◼️இவ்வளவு காலமும் தனது வயிற்றுப் பசியை மாத்திரம் கருத்திற்கொண்டு தேர்தல் காலங்களில் வழங்கும் சாராய போத்தலுக்கும் உணவுப் பொதிக்கும் ஏமார்ந்து அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்கிய *வாக்காளர்கள்......*


◼️ பொதுமக்களது வரிப்பணத்தால் சும்மா சம்பளம் எடுத்துக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டும் பொறுப்பு உணர்வின்றி மக்களை அலைக்கழிக்கும் *அரச ஊழியர்கள்.....*


◼️ப்ராடோ, டிஃபண்டர்களுக்கு ஒரு சட்டமும்  ஆட்டோ டிரைவர்களுக்கு ஒரு சட்டத்தையும் அமல்படுத்தும் *போலீசார்...,.*


◼️அரச வாகனத்தை, அதன் சாரதியை தனது மனைவிக்கு சொப்பிங் செல்ல பயன்படுத்தும் *ஆயுதப் படை வீரர்கள்......*


◼️பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு வழங்க தரும் கடதாசி களை அவர்களுக்கு கொடுக்காமல் கட்டுக்கட்டாக தனது வீட்டுக்கு  கடத்தும் *பரீட்சை மண்டப பொறுப்பாளர்கள்....*


◼️தொழில் பதவிகளைப் பெற தனது திறமையை, பட்டத்தை ஒரு புறம் தள்ளிவிட்டு கேவலம் கெட்ட அரசியல்வாதிகள் முன் *முழந்தாளிடும இளைஞர்கள்.....*


◼️சாதாரண பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி விமானத்தில் First Class ல் செல்லும் அரசியல்வாதியின் முன் நெளிந்து குழைந்தும், மத்திய கிழக்கில் வேர்வை சிந்தி நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும், அதே விமானத்தில் Economic Class ல் பயணிக்கும் உழைப்பாளிளோடு எரிந்து விழும் *விமான பணியாளர்கள்....*


◼️தமக்கு போதிய வருமானம் இருந்தும் களவில் சமூர்தி எடுக்கவும் கிராமசேவகர் ஐ பயன்படுத்தி கள்ள சான்றிதழ் பெற்று தன் பிள்ளைக்கு ஸ்கொலஷிப், மஹாபொல எடுக்கவும் முனையும் *பெற்றோர்கள்......*


◼️ஒவ்வொரு வீட்டிலும் Solar Panel பயன்படுத்தினால் மின்சார பிரச்சனை பெருமளவு தீரும் என அறிந்திருந்தும், தமது வயிற்றை வளர்ப்பதற்காக மட்டும் அத்திட்டத்தை மண்ணாக்கும் *மின்சார சபை எஞ்சினியர்கள்.....*


◼️மிளகாய் தூளில் செங்கல்லையும் மஞ்சள் தூளில் மாவையும் மிளகு விதையோடு பாப்பாசி விதையையும் கலந்தும், பழங்களுக்கு காபைட் அடித்து, பலாக்காயை ஹாப்பிக் கொண்டு குளிப்பாட்டி, அப்பாவி விவசாயிகளிடம் இரண்டு துட்டுக்கு எடுக்கும் அரிசி மரக்கறி பழங்களை நெருப்பு விலைக்கு விற்று பகற் கொள்ளை அடிக்கும், *கள்ள நிறுவை செய்யும் வியாபாரிகள்......*


◼️சீருடையில் நெஞ்சுக்கு மேல் இடது புறத்தில் அரச இலட்சினை பொருத்திய நிலையிலும், தேசிய வனாந்தரங்களில் மரங்களை வெட்டி  மொரட்டுவைக்கு களவில் அனுப்புகின்ற *வன ஜீவி பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள்.....*


◼️குறைந்த விலையில் உள்ள மருந்தை நோயாளிக்கு சிபாரிசு செய்யாமல் மருந்து கம்பெனிகளின் கமிஷனுக்காக அதிக விலையுள்ள மருந்தை சிபாரிசு செய்யும், தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற பரிசோதனைகளுக்காக அனாவசிய செலவை ஏற்படுத்தும் *வைத்தியர்கள்.....*


◼️குப்பை கூளங்களை ஏற்றிச் செல்ல வரும் போது கையில் கொஞ்சம் துட்டை திணிக்காவிட்டால் அடுத்த முறை ஏற்றாமல் போட்டு விட்டுச் செல்லும் *நகரசபை ஊழியர்கள்....,*


◼️வீடுகளில் முடங்கிக் கிடந்து அரசியல்வாதிகளை தூற்றிக்கொண்டு இருக்காமல் குறைந்தது ஒரு கொச்சிக்காய்  கன்றையாவது நடத் திராணியற்ற *முதியவர்கள், பெண்கள், பிள்ளைகள்........*


*இவர்கள் மட்டுமா.....?*


அறையில் இருந்து வெளியேறும் போது மின் சுவிட்சை அணைக்காத......


 ஒழுங்காக தண்ணீர் பைப்பை மூடாத.......


கையிலிருக்கும் டொபி பேப்பரை நிலத்தில் கண்டபடி போடுகின்ற.....


உட்காரும்  கதிரைக்குக் கீழே சுவிங்கத்தை ஒட்டுகின்ற.......


கண்ட கண்ட இடங்களில் எச்சில் உமிழுகின்ற.....


தனது குழந்தையின் பம்பஸ் ஐ நீர் நிலைகளிலும் பாதைகளிலும் எறிகின்ற.....


மனிதருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வீதி சட்டங்களை மீறுகின்ற.......


 பஸ் -  புகைவண்டி சன நெரிசலில் பெண்களை தொல்லை படுத்துகின்ற......


அடுத்த பிள்ளையின் இடத்தை பறித்து தனது  பிள்ளையை வரிசையில் முன் நிறுத்துகின்ற,.....


மின்சார மீட்டரில் வயரை மாற்றி பாவித்த  மின்சாரத்தை விட குறைந்த கட்டணத்தை களவில் செலுத்துகின்ற....


 வீட்டின் அழுக்கு தண்ணீரை பாதைக்குத் திருப்பி விடுகின்ற......


பொலித்தீன் பிளாஸ்டிக் என்பவற்றை தீ வைத்து எரித்து சூழலை மாசு ஆக்குகின்ற.......


இன்னும் இவ்வாறான அசிங்கமான செயல்களை ஒவ்வொரு நாளும் செய்கின்ற நீங்களும் கோட்டாவோடு சேர்ந்து 

*கோ ஹோம்......*


_நீங்கள் சின்ன திருடர்கள் அவர்கள் பெரும் கொள்ளைக்காரர்கள் என நினைக்க வேண்டாம்...._


*மொத்தத்தில் நீங்கள் எல்லோரும் திருடர்களே....*

Wednesday, March 16, 2022

எனது பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டுள்ளது!

 நண்பர்கள் அனைவருக்கும்அறியத்தருவது,

 

எனது பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டுள்ளது. புதிய கணக்கையும் திறக்க முடியாது. அதை Artificial Intelligence (AI) தொழில்நுட்பம் உடனே கண்டுபிடித்து விடுகிறது. 

ஆகவே இதுவரை காலமும் என்னை பேஸ்புக்கில் பின்தொடர்ந்தவர்கள் பின்வரும் தளங்களுக்கு வர வேண்டுகிறேன்:

Twitter

@kalaiy https://twitter.com/kalaiy

vk.com (இது "ரஷ்ய பேஸ்புக்". இலவசம். ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம்.) 

VK இல் எனது ID: https://vk.com/kalaiyarasan

 You Tube

கலையகம்: https://www.youtube.com/channel/UCJHMD0ISt5Laqu8mP1U_fxA

 odysee.com (இது யூடியூப் பாணியிலான வீடியோ தளம்.)

கலையகம்: https://odysee.com/@KalaiMarx:7


உங்கள் ஆதரவுக்கு நன்றி.

நன்றி, 

வணக்கம்.


Thursday, March 03, 2022

உக்ரைன் போர் Special Report - காணொளிப் பதிவுகள்

 உக்ரைன் போர் Special Report 



ரஷ்யா- உக்ரைன் போர் பின்னணி | அரண் செய் நேர்காணல்



ரஷ்யாவின் புதிய உலக ஒழுங்கு: "உக்ரைன் நாஸி எதிர்ப்பு போர்"

 


உக்ரைனில் தலைதூக்கும் நிறவெறித் தாக்குதல்கள் 



Saturday, February 19, 2022

தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்!


தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்! ஆம், நீங்கள் சரியாகத் தான் வாசித்தீர்கள். வட கொரியா அல்ல,தென் கொரியா தான். இது பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் தென்கொரியர்கள் பற்றிய தகவல் அல்ல. (அதுவும் நடக்கிறது தான்.) ஆனால், கிம்மின் "சர்வாதிகார" ஆட்சி நடக்கும் வடகொரியாவில் இருந்து தப்பியோடி, சுதந்திரமாக வாழ்வதற்காக "ஜனநாயக" ஆட்சி நடக்கும் தென் கொரியாவில் தஞ்சம் கோரிய அகதிகள் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள்.

தென் கொரியாவில் தஞ்சம் கோரி வாழ்ந்து வந்த வடகொரிய அகதியான Han Sung-ok எனும்  42 வயது தாயும், அவளது ஆறு வயது மகனும் வீட்டில் சாப்பிட எதுவுமில்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். ஆமாம், முதலாளித்துவ சொர்க்கபுரியான ஒரு "செல்வந்த" நாட்டில், ஒரு குடும்பம்  சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்தது செத்த அவலம் நடந்திருக்கிறது! (ஆதாரம்: She fled North Korea for a better life. She died with her young son in an apartment in Seoul

இந்த சம்பவம் நடந்தே மூன்று வருடங்கள் ஆகின்றன. இருப்பினும்,  இந்தக் கொடுமை தென் கொரியாவில் நடந்த படியால்பெருமளவில் ஊடகக் கவனத்தை பெறவில்லை. இதுவே வடகொரியாவில் நடந்திருந்தால், இந்நேரம் தமிழ் ஊடகங்கள் எல்லாம் மாறி மாறி ஒப்பாரி வைத்து கதறி அழுதிருப்பார்கள். என்ன செய்வது? அவர்கள் இறந்தது முதலாளித்துவ சொர்க்கபுரியான தென் கொரியாவில் அல்லவா? அதனால் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்கிறார்கள். 

அந்தத் தாயும் மகனும் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு தண்ணீர் மீட்டர் அளக்க வந்த பரிசோதகர், ஒரு வீட்டிலிருந்து வித்தியாசமான மணம், பிண வாடை வந்த படியால், உடனடியாக பொலிசிற்கு அறிவித்திருக்கிறார். அவர்கள் வந்து பார்த்த நேரம், அந்த வீட்டிற்குள் இரண்டு அழுகிய பிணங்களும் வெறுமையான குளிர்சாதனப் பெட்டியும் இருந்தன. அவர்கள் மாதக் கணக்காக சாப்பாடு எதுவும் இல்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். 

ஏற்கனவே அந்தக் குடும்பத்தினர் பல மாதங்களாக வீட்டு வாடகை, எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கட்டணங்களை செலுத்த முடியாமல் அவதிப் பட்டிருக்கிறார்கள். பில்லுக்கு மேல் பில் என, கடனுக்கு மேல் கடன் சேர்த்து வைத்திருந்திருக்கிறார்கள். வேலையுமின்றி, அரச உதவியுமின்றி, தெருவில் உணவுக்காக பிச்சை கேட்டு கையேந்த வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளே பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள். 

ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் வட கொரியாவில் இருந்திருந்தால் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்கள். வட கொரியாவில் யாரும் வீட்டு வாடகை கட்டுவதில்லை. எல்லோரும் சொந்த வீடுகளில் குடியிருக்கிறார்கள். எரிபொருள் கட்டணம் மிக மிகக் குறைவு. தண்ணீருக்கு செலவே இல்லை. எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதனால் வருமானம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானியத்தில் கிடைக்கின்றன. அதனால் யாரும் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால், நமது தமிழ் ஊடகங்கள் என்ன சொல்கின்றன? வட கொரியாவில் மக்கள் எல்லோரும் பட்டினி கிடப்பதாக புளுகுகின்றன. சாப்பாடு இல்லாமல் புல்லைத் திண்கிறார்கள் என்று ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுவார்கள். அதையும் நம்புவதற்கு நாட்டில் ஏராளமான முட்டாள்கள் இருக்கிறார்கள். 

அது சரி, தென் கொரியாவுக்கு வருவோம். பனிப்போர் காலத்தில் தென் கொரியாவுக்கு வந்த வட கொரிய அகதிகளுக்கு, அரசு தாராளமாக நிதியுதவி செய்தது. அகதிகள் வந்தவுடன் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து, வீட்டு வசதிகளையும் செய்து கொடுத்து வந்தது. உண்மையில் வடகொரியாவில் வாழ்பவர்களுக்கு வசதி, வாய்ப்புகள், பணம் மீதான ஆசை காட்டி அவர்களை தென் கொரியாவுக்கு வரவழைக்கும் வகையில் கவர்வது தான் அதன் நோக்கம். 

ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு தென் கொரிய அரசு வட கொரிய அகதிகளுக்கு நிதி ஒதுக்குவது படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பனிப்போர் முடிந்த பின்னர், உலக ஒழுங்கு மாறி விட்டது. மேலும், அந்தக் காலகட்டத்தில் வட கொரியாவில் வரட்சி, வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சம் ஏற்பட்ட படியால் பெருமளவு அகதிகள் வந்து விடுவார்கள் என்று அஞ்சி இருக்கலாம். தொண்ணூறுகளுக்கு பின்னர், வட கொரிய பொருளாதாரம் மாற்றமடைந்து, தென் கொரிய நிறுவனங்களும் முதலிடும் வகையில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் வந்து விட்டது. அதனால் தற்போது எந்தவிதமான சித்தாந்த முரண்பாடுகளும் கிடையாது. 

வட கொரியாவில் வறுமை இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதனால், வடகொரியாவில் இருந்து செல்லும் அகதிகள், தென் கொரியாவுக்கு பிழைப்பு தேடிச் செல்கிறார்கள் என்று சொன்னாலும் தவறில்லை. ஆனால், அவர்கள் அறியாத உண்மை ஒன்றுள்ளது. தென் கொரியாவிலும் வறுமை இருக்கிறது. அது வட கொரிய வறுமையை விட பல மடங்கு கொடுமையானது என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். 

உண்மையில் தொண்ணூறு சதவீதமான வட கொரிய அகதிகள், அவர்களது தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தென் கொரியா பற்றிய கற்பனைகளை வளர்த்து வந்ததாக தெரிவிக்கிறார்கள். பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கையை காட்டும் தென் கொரிய படங்கள், டிராமா சீரியல் பார்த்து விட்டு, இப்படித் தான் சாதாரண தென் கொரிய மக்கள் வாழ்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தாங்களும் அங்கே சென்றால் ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என கனவு கண்டிருக்கிறார்கள். ஆனால், தென் கொரியாவுக்கு வந்த பின்னர் தான் யதார்த்தம் அவர்களது முகத்தில் அறையும். 

வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்கள் அனைவரும் இனத்தால் கொரியர்கள் தான். ஒரே கொரிய மொழி தான் பேசுகிறார்கள். ஆனால், வட கொரியர்களின் வட்டார பேச்சு வழக்கு வித்தியாசமாக இருக்கும். அதுவே அவர்களை காட்டிக் கொடுத்து விடும். வட கொரிய பேச்சு மொழியை கேட்டால் வேலை தர மாட்டார்கள். தனியார் முதலாளிகள் வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டுவார்கள். தொழிற்துறையில் பெரும்பாலும் தனியார்மயம் கோலோச்சும் நாட்டில் அரச உதவியை எதிர்பார்க்க முடியுமா? ஏமாற்றம். மிகப் பெரிய ஏமாற்றம். 

தென் கொரிய பாடசாலைகளில் படிக்கும் வட கொரிய பிள்ளைகள் பேசும் வட்டார வழக்கு காரணமாக பிற மாணவர்களின் கேலிக்கு உள்ளாகிறார்கள். இதனால் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வேலைக்கு செல்பவர்கள் பலர். இந்தக் காலத்தில் எவனாவது டிப்ளோமா இல்லாமல் வேலை கொடுப்பானா? அதனால், அதிக உடல் உழைப்பை கோரும் அடி மட்ட வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைமை. 

ஏன், வட கொரியாவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், மேல் மட்ட பதவிகளில் இருந்தவர்களுக்கும் அது தான் நிலைமை. தென் கொரியாவில் அவர்களது தகுதிக்கேற்ற வேலை கிடைக்காது. அவர்களும் சாதாரண கூலித்தொழில் செய்து பிழைக்க வேண்டிய அவல நிலை. முன்பு வட கொரிய இராணுவத்தில் நல்ல பதவியில் இருந்த ஒருவர், இன்று தென் கொரியாவில் குப்பைகள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்வதை விட வட கொரியாவில் இருந்து செத்திருக்கலாம் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். 

வட கொரிய அகதிகள் வரும் பொழுதே கடன் சுமையுடன் தான் வருகிறார்கள்.  சட்டவிரோத எல்லை கடத்தல் மூலம் சீனா ஊடாக அழைத்து வரும் "பயண முகவர்களுக்கு" ஆயிரக்கணக்கான டாலர்கள் கடன் கொடுக்க வேண்டி இருக்கும். அந்தக் கடனை அடைப்பதற்காகவே தென் கொரியாவில் வருடக் கணக்காக வேலை செய்ய வேண்டி இருக்கும். அரச உதவித் தொகையும் மிச்சம் பிடித்து கடனை அடைப்பதற்கு செலவாகி விடுகிறது. அதனால் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. தென் கொரியாவில் தஞ்சமடைந்த வட கொரிய அகதிகள் பட்டினி கிடந்தது சாவதற்கு இதுவும் ஒரு காரணம். 

பெரும்பாலும் வட கொரிய அகதிகளுக்கு இலகுவாக தென்கொரிய நண்பர்கள் கிடைப்பதில்லை. அவர்கள் இவர்களை தாழ்வாக பார்ப்பார்கள். அதைவிட தென்கொரிய தேசியவாதிகளின் துன்புறுத்தல்கள் வேறு. வடகொரியா எப்போதாவது ஏவுகணை சோதனை செய்து விட்டால், தேசியவாதிகளின் உணர்வுகள் உச்சத்திற்கு சென்று விடும். அந்நேரம் கண்ணில் அகப்படும் வடகொரியர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். 

சரி, தஞ்சம் புகுந்த நாட்டில் தான் வரவேற்பில்லை. தாயகத்தில் இருக்கும் உறவுகளோடு பேசி துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றால், அதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். அதாவது, தென்கொரியாவில் வாழும் யாரும் வடகொரியாவில் இருப்பவர்களுடன் தொடர்பு வைக்க முடியாது.  தொலைபேசி, கடிதப் போக்குவரத்து எதுவுமே இருக்கக் கூடாது. ஆமாம், தென் கொரிய அரசு தான் இந்தளவு கடுமையான தடைகளை போட்டிருக்கிறது. 

தென்கொரியாவுக்கு வந்த அகதிகளில் குறிப்பிட்ட அளவில் சிலர் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள். ஏனையோர் வாழ்க்கையை நடத்த  முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். தென் கொரியாவில் தொட்டதெற்கெல்லாம் பணம். கையில் காசு இல்லையா? யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தெருவில் படுத்தால் என்ன, செத்துத் தொலைந்தால் என்ன கண்ணை மூடிக் கொண்டு சென்று விடுவார்கள். 

இப்படியான நரகத்தில் வாழப் பிடிக்காமல், பலர் வடகொரியாவுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள். அதுவும் சட்டவிரோதமாகத் தான்.  தென் கொரியாவில் வாழும் அகதிகளில் குறைந்தது சில ஆயிரம் பேராவது வடகொரியாவுக்கு திரும்பிச் சென்று விட்டார்கள். உண்மையில் தென் கொரிய அரசு அனுமதித்தால் இன்னும் பல ஆயிரம் அகதிகள் தாமாக திரும்பிச் சென்று விடுவார்கள். ஆனால், அதற்கான எல்லா வழிகளையும் தென் கொரிய அரசு அடைத்து வைத்திருக்கிறது.

Sunday, January 30, 2022

நாம் நரிகள் (NTK) கட்சியின் மண்டியிட்ட மானம்!



அன்பான "நாம் நரிகள்" (NTK) கட்சி உறுப்பினர்களுக்கு,

இதுவரையில் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த 400 நாம் தமிழர் கட்சி செயற்பாட்டாளர்களை, அந்நாட்டு அரசு நாடுகடத்தியுள்ளது. அங்கு அந்த கட்சி கூட்டம் நடத்தவும் தடைவிதித்துள்ளது. தடைசெய்யப்பட்ட புலிகளின் தலைவர் படம் வைத்திருந்தமை காரணமாக சொல்லப் படுகிறது. அதை விட நாம் தமிழர் கட்சியினரின் வழமையான இனவாதப் பிரச்சாரங்கள், "வந்தேறி" கதையாடல்களும் காரணமாக இருக்கலாம்.

சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்று என்றால், அதன் அர்த்தம் தமிழ் மொழியில் நடக்கும் அரசியல் கூட்டங்களையும் புலனாய்வுத்துறை கண்காணித்த படி இருக்கும். இது தெரியாமல் சிங்கப்பூரில் "தமிழன்டா!" "சீனன் வந்தேறிடா!!" என்றெல்லாம் மடத்தனமான கெத்து காட்டினால் மூக்குடை பட வேண்டி இருக்கும். அது தான் அங்கே நடந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாட்டிலிலுள்ள நாம் தமிழர் கட்சி சார்பாக எந்தவொரு கண்டன அறிக்கையும் வரவில்லை. ஒருங்கிணைப்பாளர் சீமான் வாய் மூடி மௌனியாகி விட்டார். அந்தளவு பயம்! ஏற்கனவே கனடாவில், சிங்களவர்களுக்கு எதிராக இனவாதம் பேசி நாடுகடத்தப் பட்ட கசப்பான அனுபவம் அவரது வாயை மூட வைத்திருக்கும்.

இவ்வளவு நடந்தும், இதுவரையில் நாம் தமிழர் கட்சியினர் யாரும், சிங்கப்பூர் அரசுக்கு எதிராக சென்னையில் உள்ள துணைத் தூதரகம் முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. ஆக மொத்தம் இப்படி நடந்து விட்டதே என்று சொல்லி ஒரு நாயும் குலைக்கவில்லை.

இந்தளவு தான் இவர்களது வீரம். இவர்கள் தமது வீரத்தை பலவீனமான அப்பாவி மக்களிடம் தான் காட்டுவார்கள். அந்தளவு கோழைகள். ஒரு தடவை சிங்கள பிக்குகளை அடித்து விரட்டிய மாதிரி, சிங்கப்பூர் சுற்றுலா பயணிகளிடம் உங்கள் கைவரிசையை காட்டுங்கள் பார்ப்போம்?

இந்த இலட்சணத்தில் இலங்கை மீது படையெடுத்து ஈழம் வாங்கித் தந்து விடுவார்களாம். இதற்குப் பிறகும் "மானத் தமிழர்... வீரத் தமிழர்..." என்று வெட்டிப் பெருமை பேச உங்களுக்கு வெட்கமாகவில்லை? இனிமேல் உங்கள் கட்சியின் பெயரை "நாம் நரிகள்" என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! அது தான் பொருத்தமான பெயராக இருக்கும். 

மண்டியிட்ட மானம்!

Thursday, January 27, 2022

ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவதை தடுத்தது எப்படி?

ARTE டிவியில் ரஷ்யாவின் அதிபராக போரிஸ் எல்ட்சின் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் காலம் பற்றிய ஆவணப்படம் காண்பித்தார்கள். (Crime in the Kremlin I ARTE.tv Documentary) அதில் அவர்கள் சொல்ல வரும் சேதி முக்கியமானது. எல்ட்சின் ஜனாதிபதியாக வந்திரா விட்டால், கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்திருப்பார்கள்! அதை தடுப்பதற்காக முதலாளித்துவ சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வேலை செய்துள்ளன.

சோவியத் யூனியன் வீழ்ந்து சில வருடங்களின் பின்னர் 1996 ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபாதித் தேர்தல் நடைபெறவிருந்தது. ஏற்கனவே ரஷ்ய பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அரசு அதிகாரத்தை கையில் எடுக்க முனைந்த பொழுது, எல்சினின் உத்தரவின் பேரில் பாராளுமன்றக் கட்டிடம் பீரங்கிக் குண்டுகளால் தகர்க்கப் பட்டது. 1993 ம் ஆண்டு நடந்த இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர்.

அதற்குப் பிறகு, 1996 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப் பட்டது. ஆனால் இம்முறை போரிஸ் எல்சின் நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியானவராக இருக்கவில்லை. முதுமை, கடும் சுகயீனம் காரணமாக தளர்வடைந்து இருந்தார். அப்படியான ஒருவர் நிலையான ஆட்சி நடத்துவார் என்று யாருமே நம்பவில்லை.

இதற்கிடையே ஒரே நாளில் சோஷலிச பொருளாதாரத்தை இல்லாதொழித்து முதலாளித்துவத்தை கொண்டு வந்த படியால் நாடு மிக மோசமான நிலையில் இருந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. எங்கு பார்த்தாலும் பொருளாதாரப் பிரச்சினை. வேலையில்லாதவர்களின் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே சென்றது. வேலை செய்தவர்களின் வருமானம் குறைந்து கொண்டே சென்றது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் கொடுக்கப் படவில்லை.

இந்தப் பிரச்சினைகள் போதாதென்று, ஒரு பக்கம் செச்னிய யுத்தம் வேறு நடந்து கொண்டிருந்தது. ஒரு வெல்ல முடியாத, பெருஞ்செலவு பிடித்த, யுத்தத்திற்குள் சிக்கிக் கொண்ட ரஷ்ய இராணுவம் முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அது ஏற்கனவே பலவீனமான நிலையில் இருந்த பொருளாதாரத்தையும் பாதித்தது. அத்தகைய சூழலில் பெரும்பான்மையான ரஷ்ய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை (CPRF) ஆதரித்ததில் வியப்பில்லை. ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுகானோவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. பெரும்பான்மை மக்கள் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதை விரும்பினார்கள்.

நடைபெறவிருந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் வென்று விட்டால், ரஷ்ய தேசம் மீண்டும் சோவியத் காலத்திற்கு சென்று விடும் என்று முதலாளித்துவவாதிகள் அஞ்சினார்கள். அவ்வாறு நடந்தால் உள்நாட்டுப் போர் மூளலாம் என்ற அச்சம் எழுந்தது. (அதாவது, கம்யூனிஸ்டுகள் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால், அந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முதலாளித்துவவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்த தயாராக இருந்தனர்.) ஆகவே, முதலாளித்துவத்தை ஆதரித்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள், எப்பாடு பட்டேனும், என்ன விலை கொடுத்தேனும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வர விடாமல் தடுக்க விரும்பினார்கள்.

அதுவரை காலமும் ஒருவரோடொருவர் போட்டியும், பொறாமையும் கொண்டிருந்த வங்கியாளர்கள் ஒன்று சேர்ந்தனர். அரச ஊழியர்களின் ஓய்வூதியங்களை கொடுப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்கவும் கடன் கொடுக்க சம்மதித்தார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அரசு கடன்பத்திரங்கள் பெறுமதி குறைத்து கொடுக்க வேண்டும். தனியார்மயமாக்கலை விரைவுபடுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு எல்சின் அரசு சம்மதித்தது.

அத்துடன் அமெரிக்காவும் தலையிட்டு எல்சினின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கெடுத்தது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவர்வதற்காக பிரபல பாடகர்கள், இசைக் கலைஞர்களை வருவித்து எல்சினுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தினார்கள். எல்சின் தோல்வியடைந்தால், அனைத்து மக்களினதும் தோல்வியாகும் என்று பிரச்சாரம் செய்தனர். கம்யூனிஸ்ட் கடந்த காலத்திற்கு திரும்பினால், மக்கள் சிறைகளில் வாட வேண்டியிருக்கும் என்றும் பரப்புரை செய்யப் பட்டது.

அப்படி இருந்தும், முதலாளித்துவ எல்சினுக்கும், கம்யூனிச சுகானோவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது. தேர்தலில் வென்ற எல்சின் செய்த முதல் வேலை பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுத்தது மட்டும் தான். அதற்குப் பிறகு நிரந்தர மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் சென்று ஒரேயடியாக படுத்து விட்டார். 

1999 ம் ஆண்டு, அரசு அதிகாரம் எல்சினிடம் இருந்து, புட்டினிடம் கைமாறப் பட்டது. அதற்குப் பிறகு நடந்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. எல்சினுக்கு பிறகு, அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொண்ட புட்டின், ரஷ்யாவை உலகில் பெரிய முதலாளித்துவ வல்லரசுகளில் ஒன்றாக இன்றைக்கும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

Wednesday, January 26, 2022

உறைபனியில் Snow- பெருமான் வழிபட்ட கனடாத் தமிழர்!

மதம் மக்களை மடையர்கள் ஆக்குகிறது என்பதற்கு இந்த படம் சிறந்த சான்று. 

மதங்கள் தோன்றிய பிரதேசங்களில் உள்ள காலநிலைக்கு ஏற்றவாறு தான் வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டன. அதை அப்படியே எல்லா இடங்களிலும் பிரயோகிப்பது மடத்தனம். எந்த மதக் கடவுளும் அப்படி செய்ய சொல்லி மனிதனை வற்புறுத்தவில்லை. 

 இலங்கை, தென்னிந்திய பிராந்தியம் பூமத்திய ரேகைக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ளதால் அங்கே வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும். அதனால் அங்கு வாழும் ஆண்கள், அரை நிர்வாணமாக வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு சாமி கும்பிடுவதில் எந்த அதிசயமும் இல்லை. ஐரோப்பியர் வரும் வரையில், பொதுவாக ஆண்கள் மட்டுமல்ல, பல இடங்களில் பெண்கள் கூட இடுப்புக்கு மேலே எந்த உடையும் அணிவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அந்தளவு வெயில் கொளுத்தும். 

ஆனால், வட துருவத்தை அண்டிய நாடான கனடாவின் காலநிலை அப்படியா இருக்கிறது? குளிர்காலத்தில் வெப்பம் -20°C அளவுக்கு கூட இறங்கலாம். அந்த காலநிலையில் அரை நிர்வாணமாக வேட்டி மட்டும் உடுத்திக் கொண்டு சாமி கும்பிட்டால் குளிரில் விறைத்து இறக்க நேரிடலாம். கடும் குளிரில் முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றா விட்டால் பல நோய்களாலும், உடல் உபாதைகளாலும் பாதிக்கப் படலாம். 

ஆகவே, யாரும் அசட்டுத் துணிச்சலில் இது போன்ற கேலிக்கூத்துகளில் ஈடுபடாதீர்கள். மத நம்பிக்கை தவறல்ல. ஆனால் எதுவும் அளவோடு இருக்க வேண்டும். பக்தி முற்றி பைத்தியமாகி விடக் கூடாது.

 பிற்குறிப்பு: கனடாவில் இந்த படம் எடுத்த நேரம் வெப்பநிலை -1°C ஆக இருக்கலாம்.

 


Monday, January 24, 2022

கிளப் ஹவுஸில் துள்ளிக் குதித்த சாதிவெறி பூனைக்குட்டிகள்

கிளப் ஹவுஸ் பரிதாபங்கள்: 

"ஏம்பா, சபேசன், கலை மார்க்ஸ் மாதிரியான ஆளுங்க ஈழத்தில சாதி ஒழிப்பு போராட்டம் நடத்துறதா சொல்லிக்கிறாங்க... அங்க தான் சாதி என்ற ஒன்று இல்லையே? அப்புறம் எப்படி ஒழிப்பாங்க?" 

"அது வந்து.... அவங்களாகவே அங்க மொதல்ல புதுசா சாதிகளை உருவாக்கி வளர்த்து விடுவாங்களாம்.... அதுக்கு அப்புறம் அதையெல்லாம் அவங்களே வந்து ஒழிப்பாங்களாம்!" 

"இதெல்லாம் ஒரு ஏஜெண்டா கீழே நடக்குதில்லே?" 

"ஆமாம்மா... தமிழர்க ஒற்றுமையாக இருந்தா சீனாவை விடப் பெரிய ஒலக வல்லரசா மாறிடுவாங்க... அதை தடுக்கனும்னு நெனைக்கிறாங்க!"

 
கிளப் ஹவுஸில் துள்ளிக் குதித்த ஈழத்து சாதிவெறி பூனைக்குட்டிகள்

1. இந்தியாவில் பார்ப்பனர்கள் மாதிரி, ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக ரிசர்வேஷன் (தரப் படுத்தல்) கொண்டு வந்தார்களாம். அவரைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர் என்றால் யாழ் வெள்ளாளர்கள் என்று அர்த்தம். 

2. ஈழத்தில் சாதிக்கொரு கோயில், திருவிழாவில் சாதிப் பாகுபாடு இருக்கிறது தான். அதனால் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள். ஈழத்தில் நிறைய கலப்பு மணம் நடப்பதாகவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சாதி பார்க்காமல் திருமணம் செய்வதாக கம்பி கட்டும் கதை பேசுகிறார்கள். 

3. இவர்கள் பெரும்பாலும் (95%) புலிகளை முகத்திரையாக மூடிக் கொண்டு சாதிவெறிக் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதனால் சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான விமர்சனத்தை, மிக இலகுவாக புலிகளுக்கு எதிரான கருத்தாக மடைமாற்ற முடிகிறது. இவர்கள் தமது சாதிவெறியை மறைப்பதற்காக மட்டுமே புலிகளை ஆதரிக்கிறார்கள். சில அறிவுஜீவிகள் கூட இதைக் கண்டிக்காமல் வக்காலத்து வாங்குகிறார்கள்.

ஈழத்து சங்கிகளின் கிளப் ஹவுஸ் கூட்டம் ஒன்றில், "ஈழத்தில் சாதிப் பிரச்சினை இருக்கிறது" என்று சொன்ன குற்றத்திற்காக, புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழ் பெரியாரிஸ்டான சபேசனை எல்லோரும் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். "சாதி இருப்பதை ஒத்துக் கொள்கிறார்களாம்.... ஆனால் அதைப் பற்றி பேசாது விட்டால் அது தானாக மறைந்து விடும்" என்பது அவர்களது சங்கித்தனமான நிலைப்பாடு. 

அப்போது ஒருவர், ஒரு அவுஸ்திரேலிய வாசி, "சபேசன் என்ன சாதி என்று சொல்ல வேண்டும்" என்று நேரடியாகவே கேட்டார். சாதியின் பெயரை சொல்லா விட்டாலும், "உயர்ந்த பிரிவா, தாழ்ந்த பிரிவா" என்று குறிப்பிட வேண்டுமாம். "உயர்த்தப்பட்ட சாதி என்றால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்... தாழ்த்தப்பட்ட சாதி என்றால் பேசலாம்..." என்று விளக்கமும் சொன்னார். 

நல்ல வேளை, அங்கிருந்த பிற சங்கிகளே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிக் கேட்பது தவறு என்று கேட்டவரை அடக்கி விட்டார்கள். நல்லது. வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஒரு பிரான்ஸ்வாசி "வெள்ளாள பெண்களை வசியப் படுத்தும் நோக்கில் பெரியாரிசம் பேசுகிறார்கள்..." என்று வெளிப்படையாக சாதித் திமிருடன் பேசினார். அப்போது இவர்கள் எல்லோரும் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள்.

ஈழத்தில் சாதி பிரச்சினை பற்றி பேசினாலே அது "இலுமினாட்டிகளின் சதி" என்று பதறும் ஒரு கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்தில் ஒருவர், "சதியை" முறியடிக்க ஒரு நல்ல ஐடியா சொன்னார். சிங்களவர்கள் மத்தியில் உள்ள அக முரண்பாடுகளை, சாதிப் பிரிவினைகளை வெளிப்படுத்தி கூர்மைப் படுத்த வேண்டுமாம். அதை பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டுமாம். இனிமேல் யாராவது தமிழர்கள் மத்தியில் உள்ள சாதிப்பிரச்சினை பற்றி பேச வந்தால் "சிங்களவர்களை பாருங்கள்" என்று சொல்லி திருப்பி அனுப்ப வேண்டுமாம். சங்கிகள் என்றோர் பிரிவுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு.

"நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு முன்னுரிமை, மிகுதி பிற இனத்தவருக்கு என்று இட ஒதுக்கீடு கொடுக்க படும்." இவ்வாறு ஒருவர் கிளப் ஹவுஸ் கூட்டத்தில் தெரிவித்தார். அந்தக் கூட்டம் நடத்தியதும் நாதக தம்பிகள் தான்.

கவனிக்க: 1971 ம் ஆண்டு இலங்கையில் தரப்படுத்தல் கொண்டு வந்தார்கள். அதுவும் இன அடிப்படையில் சிங்களவர்களுக்கு முன்னுரிமை, மிகுதி தமிழர், முஸ்லிம்களுக்கு என்று ஒதுக்கப் பட்டது. நாம் தமிழர் கட்சியும் அதையே சொல்கிறது. இவர்களை பேரினவாதிகள் என்று அழைப்பதில் என்ன தவறு?  

****

Sunday, January 23, 2022

கிளப் ஹவுசில் புலி வேடமிட்டு களமாடுவோரின் வர்க்கப் பின்னணி

கிளப் ஹவுஸ் கூட்டங்களில் அவதானித்தவை: 

- மிகச் சிறிய எண்ணிக்கையிலான ஈழத்தமிழர்கள் தான் புலிகளுக்கு ஆதரவாக களமாடுவதாக காட்டிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது இன உணர்வு அல்ல. அவர்களது வர்க்க உணர்வு சார்ந்த அரசியல்.

- இவர்கள் ஒன்றில் பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று அங்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் இலங்கையிலேயே அதிக சம்பளம் வாங்கும் white-collar work எனப்படும் மத்தியதர வர்க்க தொழில்களை செய்து கொண்டிருப்பார்கள்.

- இவர்களுக்கு இடையிலான பொதுவான அம்சம், இவர்கள் எல்லோரும் சமூகத்தில் வசதியாக வாழ்பவர்கள். மேட்டுக்குடி மனப்பான்மை கொண்டவர்கள். தாம் ஒன்றில் ஆதிக்க சாதி அல்லது ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருப்பார்கள்.

- இவர்களது நோக்கம் புலிகளை ஆதரிப்பது அல்ல. புலிகளை மீளுருவாக்கம் செய்வதோ, மீண்டும் ஒரு போருக்கு செல்வதோ தமது நோக்கம் அல்ல என்பதை ஒத்துக் கொள்கிறார்கள். இந்தக் குழுவில் ஒரு பகுதியினர் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடும் மிதவாத தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்ட நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறார்கள். அதுவே இவர்களது வர்க்க நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விடுகிறது.

- உண்மையில் ஏதோ ஒரு வகையில் புலிகளினால் பாதிக்கப்பட்ட பிரிவினர் தான், இன்று தீவிர புலி ஆதரவாளர் வேஷம் போடுகிறார்கள். ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகளின் நிர்வாகம் "போராடக் கூடிய வயதில் இருந்த" யாரையும் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தை விட்டு வெளியே செல்ல விடவில்லை. அவர்களது உத்தரவை மீறிச் சென்றவர்கள் துரோகிகளாக, எதிரியுடன் ஒத்துழைப்பவர்களாக கருதப்பட்டனர்.

- யாழ் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்றவர்களும், படித்து பட்டம் பெற்று உயர்தொழில் பார்த்தவர்களும் தான் இன்று "புலி ஆதரவு அரசியல்" பேசுகிறார்கள்.

- இவர்கள் அனேகமாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட, தொண்ணூறுகளுக்கு பிறகு பிறந்தவர்கள் அல்லது வளர்ந்தவர்கள். புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழப் பிடிக்காமல் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். வன்னியில் போர் நடந்தால் பரவாயில்லை, யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற சுயநலம் காரணமாக சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்தவர்கள்.

- திருகோணமலை, மட்டக்களப்பை சேர்ந்த "புலி ஆதரவாளர்களும்" அப்படித்தான். இவர்கள் எல்லோரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் என்பது ஒரு பொதுவான அம்சம். திருகோணமலையும், மட்டக்களப்பு எழுவான்கரை பிரதேசமும் (கிழக்கு கரையோரப் பகுதி) எந்தக் காலத்திலும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை. பெரும்பாலான படித்த மத்தியதர வர்க்கத்தினர் இந்தப் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. அவர்களுக்கு மட்டும் தான் அதற்கான வசதி வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

- இன்று தீவிர புலி ஆதரவு வேஷம் போடும் நடிகர்கள், தனிப்பட்ட வாழ்வில் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். அன்று ஊரில் வாழ்ந்த காலத்தில், புலிகள் விட்டுக்கொடுக்காமல் போரிடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று விசனப் பட்டவர்கள். (ஆனால் புலம்பெயர்ந்து சென்ற பின்னர் போருக்கு நிதி திரட்டிக் கொடுத்தது ஒரு முரண்நகை.) உயர்கல்வி கற்று, பட்டம் பெற்று, உடுப்புக் குலையாத உத்தியோகம் பார்ப்பதை கௌரவமாக கருதும் மத்தியதரவர்க்க பரம்பரையில் வந்தவர்களுக்கு இது மிகப்பெரிய வருத்தம் தான்.

- மேற்படி சமூக- வர்க்கப் பின்னணி கொண்டவர்கள், கடந்த காலத்தில் தாம் ஈழ விடுதலைக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்காக தான் இன்று புலிகளுக்கு விசுவாசமானவர்கள் போன்று காட்டிக் கொள்கிறார்கள். இது அவர்களது வர்க்க நலன் சார்ந்த சுயநல அரசியல். இது ஒரு மிகச் சிறிய குழு மட்டுமே. அவர்கள் யாரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர் அல்ல.

Saturday, January 22, 2022

தமிழீழத்தின் "சிங்க(கொடி)ப்" பெண்!

 தமிழ்த்தேசிய வியாதிகளின் கவனத்திற்கு!



இது தான் நீங்கள் காட்டும் கற்பனை ஈழத்திற்கும், நிஜ ஈழத்திற்கும் இடையிலான வித்தியாசம். பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்த "ஈழத்" தமிழ்ப்பெண், தனது தாயகமான இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் சிங்கக் கொடியை பிடித்திருக்கிறார். (செய்தி கீழே) 

இது தான் அங்குள்ள கள யதார்த்தம். இதைக் காணப் பொறுக்காத தமிழ்த்தேசியவாதிகள் யாராவது "ஏன் இந்தப் பெண் தமிழீழ தேசியக்கொடியை (புலிக்கொடியா?) பிடிக்கவில்லை?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு வராதீர்கள். 

இன்று வரையில் தமிழ்த்தேசியம், புலித் தேசியம், தமிழீழ தாயகம், என்று பேசும் அத்தனை ஈழத்தமிழர்களும் தமது சிறிலங்கா பிரஜாவுரிமையை விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. உண்மையில் அவர்கள் விரும்பி இருந்தால் சிறிலங்கா பிரஜாவுரிமையை தாமாக நீக்கிக் கொள்ளலாம். சட்டத்தில் தாராளமாக அதற்கு இடமிருக்கிறது. ஆனால், அப்படி யாரும் செய்ய மாட்டார்கள். 

உண்மை நிலவரம் என்ன? புலிகள் இயக்க தலைவர் கூட அதைச் செய்யவில்லை! தலைவரின் மூன்று பிள்ளைகளுக்கும் சிறிலங்கா பிரஜாவுரிமை கிடைத்திருந்தது!! "சிங்கள பேரினவாத அரச இலச்சினை"(வாளேந்திய சிங்கம்) பொறித்த அடையாள அட்டையும் வைத்திருந்தார்கள்!!!  

குறிப்பிட்ட பிரிவினர் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று குடியேறி அந்நாட்டின் பிரஜாவுரிமை பெற்ற பின்னர் தான் சிறிலங்கா பிரஜாவுரிமையை மறுக்கிறார்கள். அது வரைக்கும் அவர்களும் இலங்கைப் பிரஜைகள் தான். சிங்கக்கொடி தான் அவர்களது தேசியக்கொடி. யாராலும் மறுக்க முடியாது.

இது தான் கள யதார்த்தம். இதை மறைத்துக் கொண்டு, "வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம்" என்று கற்பனை உலகில் மிதப்பவர்கள் பலருண்டு. தமிழ்த்தேசியவாதிகளே! ஆகாயத்தில் மிதந்தது போதும். பூமிக்கு திரும்பி வாருங்கள். 


செய்தி:

//தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.//

Tuesday, January 18, 2022

வட கொரியாவில் பிரபலமான இந்திய திரைப்படங்கள்!

 வட கொரியா நேரடி ரிப்போர்ட்



உங்களுக்குத் தெரியுமா? வட கொரியால் உள்ள திரையரங்குகளில் இந்திய சினிமாப் படங்களும் காண்பிக்கிறார்கள். வட கொரியர்கள் இந்திய சினிமாப் பாடல்களையும் விரும்பிக் கேட்கிறார்கள். வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணியாக சென்று வந்த இந்திய யூடியூபர் ஒருவர் வழங்கிய தகவல்கள் இவை. வட கொரிய மக்கள் இந்திய திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார்களாம். அதனால், இந்த வட இந்திய யூடியூபர் சென்றிருந்த நேரம் சாதாரண வட கொரிய மக்கள்அவரை "சல்மான் கான்" என்று அழைத்து பேச விரும்பினார்கள். அதை அவரது யூடியூப் சேனலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான இணைப்பு: 
https://www.youtube.com/c/TravellingMantra


மேற்கொண்டு அவர் தெரிவித்த தகவல்களை இங்கே தருகிறேன்.


வட கொரியாவில் 3 அரச தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே பார்க்கலாம் என்று ஒரு கட்டுக்கதை உலாவுகின்றது. அது உண்மை அல்ல! நீங்களே அங்கு சுற்றுலா பயணியாக சென்று நேரில் கண்டறியலாம். கீழே உள்ள படத்தில் வட கொரியாவில் பார்க்க கூடிய பத்துக்கும் மேற்பட்ட சேனல்களில் சிலவற்றை காணலாம். அவற்றில் பல வெளிநாட்டு சேனல்கள்! உதாரணத்திற்கு Russia Today, Al Jazeera, CCTV, TV Monde (பிரெஞ்ச்) இன்னும் பல.




வட கொரியாவில் ஒருவர் குற்றம் செய்தால், அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் கூட 3 தலைமுறைக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படும் கட்டுக்கதையில் எந்த உண்மையும் இல்லை. அது மட்டுமல்ல, ஒருவர் செய்த குற்றத்திற்காக அவரது வாழ்நாள் முழுவதும் தண்டிக்கப் படுவதுமில்லை. ஒருவர் முதலாவது தடவையாக செய்த குற்றம் என்றால் அரைவாசி தண்டனைக் காலத்திலேயே திருந்துவதற்காக வீட்டுக்கு அனுப்பப் படலாம். அவர் மீண்டும் குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும். இது வழமையாக பிற உலக நாடுகளிலும் உள்ள நடைமுறை தான்.



Saturday, January 15, 2022

மாட்டுப் பொங்கல்- தமிழரின் ஆப்பிரிக்க பண்பாடு!



தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்!
ஆதாரம்: தைப் பொங்கல்!



வருடந்தோறும் தமிழர்களால் கொண்டாடப் படும் தைப் பொங்கலும், மாட்டுப் பொங்கலும், அவர்கள் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன. 

இன்றைய சூடான், எகிப்திய பகுதிகளில் வாழ்ந்த பண்டைய ஆப்பிரிக்கர்கள் எருது மாட்டையும், சூரியனையும் கடவுளாக வழிபட்டனர். எருது மாட்டின் கொம்புகளுக்கு இடையில் சூரிய வட்டம் பொறிக்கப் பட்ட தெய்வச் சிலைகள், இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் படுகின்றன. 

பிற்காலத்தில் தோன்றிய எகிப்திய நாகரிகத்தில், அது ஹாதொர் என்ற தெய்வமாக வழிபடப் பட்டது. எருது மாட்டை தெய்வமாக வழிபடும் மதம் மேற்கே கிரேக்கம் வரையில் பரவியிருந்தது. கிரீஸ் நாட்டின் பகுதியான கிரேட்டா தீவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. 

அரேபிய தீபகற்பத்திலும் எருது மாட்டை வழிபடும் மதம் பரவி இருந்தது. இஸ்லாத்திற்கு முந்திய காலகட்டத்தில், இன்றைய பாஹ்ரைன் நகரில் பிரமாண்டமான கோயில் ஒன்று இருந்தது.  ஆண்டுதோறும் அங்கு நடக்கும் திருவிழாவிற்கு இன்றைய ஈரான், ஈராக், மற்றும் அரேபியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் யாத்திரை சென்றனர். 

பாஹ்ரைன் தீவின் பழைய பெயர் "அவ்வல்" ஆகும். அது அந்த எருது மாட்டுக் கடவுளின் பெயர் ஆகும். இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள, அரபு மொழியில் அவ்வல் என்ற சொல்லுக்கு சிறப்பிடம் உண்டு. அந்தச் சொல்லுக்கு முதன்மையானது, முந்தியது, பண்டைய சிறப்பு வாய்ந்தது என்று பல பொருள்கள் உண்டு. 

தமிழ் மொழியில் அவ்வை என்று குறிப்பிடும் சொல், ஔவையார் என்ற புலவரை மட்டும் குறிக்கவில்லை. பண்டைய சிறப்பு வாய்ந்தது என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப் பட்டது. மேலும், இந்து மதக் கோயில்களில் இன்றைக்கும் எருது மாட்டு தெய்வமான  நந்திக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும். இது பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் எச்சமாக இருக்க வேண்டும்.