Wednesday, October 23, 2019

சிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0


தென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாத‌வாறு க‌ல‌வ‌ர‌ பூமியாக காட்சிய‌ளிக்கிற‌து. ஒரு மெட்ரோ ர‌யில், 16 பேருந்து வ‌ண்டிக‌ள் கொழுந்து விட்டு எரிந்த‌ன‌. ப‌த்துக்கும் குறையாத‌ சூப்ப‌ர் மார்க்கெட்க‌ள், ம‌ருந்துக் க‌டைக‌ள் சூறையாட‌ப் ப‌ட்ட‌ன‌. க‌ல‌வ‌ர‌த்திற்குள் அக‌ப்ப‌ட்டு ப‌தினொரு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

சிலி ஜ‌னாதிப‌தி செப‌ஸ்டியான் பிஞேரா "நாம் ஒரு யுத்த‌த்தில் ஈடுப‌ட்டிருக்கிறோம்" என‌ அறிவித்துள்ளார். "ஒரு ப‌ல‌மான‌, இண‌க்க‌மாக‌ போக‌ முடியாத‌, எவ‌ரையும் மதிக்காத‌, வ‌ன்முறை பிர‌யோகிக்க‌த் த‌ய‌ங்காத‌ எதிரியுட‌ன்" இந்த‌ யுத்த‌ம் நட‌ப்ப‌தாக‌ தெரிவித்துள்ளார்.

சிலியில் ந‌ட‌ந்த இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ கால‌க‌ட்ட‌த்திற்குப் (1973 - 1990) பின்ன‌ர், முத‌ல் த‌ட‌வையாக‌ இராணுவ‌ம் வீதிக‌ளில் ரோந்து சுற்றுகிற‌து. த‌லைந‌க‌ர் சான்டியாகோ உட்ப‌ட‌ எட்டு ந‌க‌ர‌ங்க‌ளில் ஊர‌ட‌ங்கு ச‌ட்ட‌ம் பிற‌ப்பிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. இது வ‌ரை 1500 பேர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.

யார் இந்த‌ பிஞேரா? எழுப‌துக‌ளில், ச‌ர்வாதிகாரி பினோச்சேயின் ஆட்சிக் கால‌த்தில் சிலியில் கிரெடிட் கார்ட் முறையை அறிமுக‌ப் ப‌டுத்திய‌த‌ன் மூல‌ம் கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதித்த‌வ‌ர். அதாவ‌து, பினோச்சே கால‌த்தில் வ‌ந்த‌ ந‌வ‌- தாராள‌வாத‌ பொருளாதார‌க் கொள்கையால் ப‌ல‌ன‌டைந்த‌ கோடீஸ்வ‌ர‌ன். அப்ப‌டியான‌ ஒருவ‌ர் சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் மீதே யுத்தப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌தில் என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இருக்கிற‌து? ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும், பாசிச‌ சர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும் ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌த்தின் ந‌ல‌னுக்காக‌வே அர‌சு இய‌ங்குகிற‌து.

இந்த‌ ம‌க்க‌ள் எழுச்சிக்கு நேர‌டிக் கார‌ண‌ம், அரசு கொண்டு வ‌ந்த‌ மெட்ரோ ர‌யில் டிக்க‌ட் விலை அதிக‌ரிப்பு. பிற‌ தென் அமெரிக்க‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடும் பொழுது சிலியில் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம். ஆனால் மாத‌ வ‌ருமான‌த்தில் ஐந்தில் ஒரு ப‌ங்கு போக்குவ‌ர‌த்து செல‌வுக‌ளுக்கு சென்று விடுகிற‌து.

குறிப்பாக‌ பொதுப் போக்குவ‌ர‌த்தை ந‌ம்பியிருக்கும் மாண‌வ‌ர்க‌ள் வெகுண்டெழுந்து இல‌வ‌ச‌மாக‌ ப‌ய‌ண‌ம் செய்ய‌த் தொட‌ங்கினார்க‌ள். மெட்ரோ நிலைய‌ டிக்க‌ட் மெஷின், த‌டைக் க‌ம்ப‌ங்க‌ளை அடித்து நொறுக்கினார்க‌ள்.

மெட்ரோ டிக்க‌ட் விலை உய‌ர்வை மீள‌ப் பெறுவ‌தாக‌ ஜ‌னாதிப‌தி பிஞேரா அறிவித்தும் க‌ல‌வ‌ர‌ம் அட‌ங்க‌வில்லை. அத‌ற்குக் கார‌ண‌ம் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கும் ஏழைக‌ளுக்கும் இடையிலான‌ ஏற்ற‌த்தாழ்வு ம‌ட்டும‌ல்ல‌. மிகப் ப‌ல‌மான‌ இட‌துசாரி க‌ட்சிக‌ளால், ந‌ன்றாக‌ அர‌சிய‌ல்ம‌ய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ இள‌ம் த‌லைமுறையின‌ர் எந்த‌ வித‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாராக‌ இல்லை.

நிச்ச‌ய‌மாக‌, சிலி அர‌சுக்கு இது ஒரு இக்க‌ட்டான‌ கால‌ க‌ட்ட‌ம். அடுத்த‌ மாத‌ம் Apec நாடுக‌ளின் உச்சி ம‌காநாடு ந‌ட‌க்க‌வுள்ள‌து. அமெரிக்க‌ அதிப‌ர் டிர‌ம்ப், சீன‌ அதிப‌ர் ஸிஜின்பிங் உட்ப‌ட‌ ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் சிலிக்கு வ‌ர‌ இருக்கிறார்க‌ள். அத‌ற்குள் நிலைமையை க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ‌ருவ‌து முடியாத காரியம். ஏனெனில் இது ஒரு தெளிவான இலட்சியத்துடன் தானாக சேர்ந்த கூட்டம். 

எத‌ற்காக‌ இழ‌ப்ப‌த‌ற்கு எதுவும‌ற்ற‌ ஏழைக‌ள் ம‌ட்டும‌ல்லாது, ஓர‌ள‌வு வச‌தியான‌ ம‌த்திய‌த‌ர‌வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ளும் வ‌ன்முறைப் போராட்ட‌ங்க‌ளில் ஈடுப‌டுகிறார்க‌ள்?

1973 ல் நட‌ந்த‌ இராணுவ‌ ச‌திப்புர‌ட்சிக்குப் பின்ன‌ர் சிலி ந‌வ‌- தாராள‌வாத பொருளாதார‌க் கொள்கையின் ப‌ரிசோத‌னைச் சாலையாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌து. பொருளாதார‌ம் நூறு ச‌த‌வீத‌ம் த‌னியார்ம‌ய‌ப் படுத்த‌ப் ப‌ட்ட‌து. பொருட்க‌ளின் விலைக‌ள் மிக‌ அதிக‌ம். ஆனால் செல‌விடுவ‌த‌ற்காக‌ ம‌க்க‌ளின் கையிருப்பில் ப‌ண‌ம் இல்லை. சுருக்கமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைவு. க‌ல்வி, ம‌ருத்துவ‌ செல‌வுக‌ள் ஏழைக‌ளால் நினைத்துப் பார்க்க‌ முடியாத‌ அள‌வு அதிக‌ம். வ‌ச‌தி இல்லாத‌வ‌ர்க‌ள் க‌ட‌ன் வாங்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம்.

ந‌வ‌- தாராள‌வாத‌ ப‌ரிசோத‌னைச் சாலையில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் இன்று முத‌லாளித்துவ‌த்திற்கு எதிராக‌ திரும்பி உள்ள‌ன‌ர். இந்த‌ இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌வ‌- தாராள‌வாத‌ம் என்ற‌ சொல் ஒரு கெட்ட‌ வார்த்தை போன்று க‌ருத‌ப் ப‌டுகின்ற‌து.

முன்பு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலையில், க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உறுப்பினர்க‌ள், ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒருவ‌ர் விடாம‌ல் தேடி அழிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். பாசிச‌ ஆட்சியாள‌ர்க‌ள் கம்யூனிச‌த்தை வேரோடு பிடுங்கி அழித்து விட்ட‌தாக‌ இறுமாப்புட‌ன் இருந்த‌ன‌ர்.

ப‌னிப்போர் முடிவில், "க‌ம்யூனிச‌ம் இற‌ந்து விட்ட‌து" என்ற‌ ந‌ம்பிக்கை ஏற்ப‌ட்ட‌ பின்ன‌ர், 1990 ம் ஆண்டு ஜ‌ன‌நாய‌க‌ம் மீட்க‌ப் ப‌ட்ட‌து. அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் இய‌ங்க‌ அனும‌திக்க‌ப் ப‌ட்ட‌து. பொதுத் தேர்த‌ல் ந‌ட‌ந்த‌ன‌. அதே நேர‌ம், சாம்ப‌லில் இருந்து உயிர்த்தெழுந்த‌ பீனிக்ஸ் ப‌ற‌வை போல‌ புதிய‌ த‌லைமுறை க‌ம்யூனிஸ்டுக‌ள் தோன்றினார்க‌ள்.

புதிய‌ சிலி க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உருவாகி சில‌ வ‌ருட‌ங்க‌ளில் பாராளும‌ன்ற‌த்தில் ஒரு ப‌ல‌மான‌ எதிர்க்க‌ட்சியாகிய‌து. அத்துட‌ன், அனார்க்கிஸ்டுக‌ள், ட்ராக்கிஸ்டுக‌ள், இன்னும் ப‌ல‌ சோஷ‌லிச‌ அமைப்புக‌ளும் உருவாகின‌. குறிப்பாக‌ அனார்க்கிஸ்டுக‌ள் முத‌லாளித்துவ‌த்தை ம‌ட்டும‌ல்லாது, அர‌சு என்ற‌ க‌ட்ட‌மைப்பையே எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்.
க‌ம்யூனிச‌, இட‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல செல்வாக்கு இருந்த‌து. ஆர‌ம்ப‌த்தில் இல‌வ‌ச‌க் க‌ல்வி உரிமைக்காக‌ போராடிய‌ மாண‌வ‌ர்க‌ள், கூட‌வே நியோ லிப‌ர‌ல் சிஸ்ட‌த்தையும் எதிர்க்க‌க் க‌ற்றுக் கொண்டனர். த‌ற்போது முத‌லாளித்துவ‌த்தை வீழ்த்தி விட்டுத் தான் ம‌று வேலை பார்ப்ப‌து என்று கிள‌ம்பி விட்டார்க‌ள்.

க‌ம்யூனிஸ்டுக‌ள் வேறு யாரும் அல்ல‌. அவ‌ர்க‌ளும் முத‌லாளித்துவ‌ம் வ‌ள‌ர்த்து விட்ட‌ பிள்ளைக‌ள் தான். சிலியில் முத‌லாளித்துவ‌ம் த‌ன‌து ச‌வ‌க்குழியையை தானே தோண்டி விட்டுள்ள‌து. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"!

Wednesday, October 09, 2019

ஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்


புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். படம் அனைவரையும் கவர்ந்தது. பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இது போன்ற திரைப்படம் இதற்கு முன்னர் வந்ததில்லை என்பதே எல்லோருடைய கருத்துமாக இருந்தது. குறிப்பாக கதாநாயகனாக வரும் புதியவன் ராசையா, தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் சுந்தரம் என்ற பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார்.


2009 ம் ஆண்டு இறுதிப் போரின் முடிவுடன் படம் தொடங்குகிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப் பட்ட பின்னர் தனித்து நிற்கும் கஸ்தூரி எனும் பெண் போராளியுடன் கதை தொடங்குகிறது. தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் சுந்தரம் (புதியவன் ராசையா) அவரை தனது மனைவி என்று சொல்லி கூட்டிச் சென்று இராணுவத்திடம் சரணடைகின்றனர். கூடவே அஜாதிக்கா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை்யை சுந்தரம் தனது மகள் என்று சொல்லி கூட்டிக் கொண்டு வருகிறார். (படத்தில் அஜாதிக்கா பாத்திரத்தில் நடித்திருப்பவர் டைரக்டரின் சொந்த மகள்.) இந்த மூவரும் ஒரே குடும்பமாக புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வருகிறார்கள்.

இந்தத் தொடக்கக் காட்சிகள், முன்னர் வெளிவந்த தீபன் திரைப்படத்தை நினைவுபடுத்தின. அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் குடும்பமாக ஒன்று சேரும் கதை தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் வித்தியாசமும் உள்ளது. தீபன் திரைப்படம் ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலத்தை பேசுகின்றது. அதற்கு மாறாக ஒற்றைப் பனைமரம் வன்னியில் தங்கிவிட்ட அகதிகளின் வாழ்வில் நடக்கும் அவலங்களை பற்றிப் பேசுகின்றது.

போர் முடிந்த பின்னர், யாழ்ப்பாண சமூகத்தில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஒற்றைப் பனைமரம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இது அங்குள்ள சமூக யதார்த்தம். இந்த உண்மை பலரது முகத்தில் அறைந்து முகமூடிகளை கிழித்துள்ளது. இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்குமா?

நெதர்லாந்திலும் இந்தப் படம் திரையிடப் படுவதை சிலர் தடுத்தார்கள். "தேசியத்திற்கு எதிரான படம்" என்று காரணம் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி எந்த "தேசிய எதிர்ப்பையும்" காணவில்லை. படத்தில் சொல்லப் படும் உண்மைகள் சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். சம்பவங்கள், பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் எதுவுமே கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்தவை தான். ஒருவேளை கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக வந்திருக்கும். அப்படி நடக்காமல், எல்லோரும் பார்த்து இரசிக்கும் வகையில் படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், முன்னாள் போராளிகளின் அவலங்களும், வறுமையின் கொடுமையும் சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. ஏழை, எளியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, தனது இரண்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு சம்மதிக்கும் விமலா என்ற இளம் தாய். லண்டனில் இருந்து வந்த தமிழ்ப் பணக்காரனின் காமவெறிக்கு பலியாகி தற்கொலை செய்து கொள்ள சென்ற அவலம். இவை இரக்கமற்ற வர்க்க பேதமுள்ள சமூகத்தில் நடக்கும் கொடுமைகள்.

விமலா போன்ற அபலைகள் வாழ்வதைக் கூட ஏற்றுக் கொள்ள விரும்பாத அயோக்கியர்கள் எம்மத்தியில் உள்ளனர். அப்படியானவர்கள், படத்தில் அந்த இளம் பெண்ணை சீரழித்த லண்டன் பணக்காரன் போன்ற கொடியவர்களை மறைத்து வைப்பார்கள். ஒற்றைப் பனைமரம் திரைப்படம் இது போன்ற அயோக்கியர்களின் இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. அதே நேரம், நிஜ உலகில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரும் அப்படியான மனிதர்கள் தான்.

திரைப்படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சுருக்கமாக சொன்னால், இதுவும் ஒரு விடுதலைப் போராட்டக் கதை தான். கடந்த கால போராட்டத்தில் நடந்த தவறுகளை திருத்தி, சரியான வழியில் கொண்டு செல்வதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தத் திரைப்படத்தில் கடந்த கால அரசியல் விமர்சிக்கப் படுகிறது. அதே நேரம் நிகழ்கால அரசியல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எதிர்கால அரசியலை தீர்மானிப்பது பார்வையாளர்களான எமது கைகளில் உள்ளது.

இந்தத் திரைப்படம் ஈழப்போரில் சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கிறது. அந்த விமர்சனம் ஊடாக தீர்வுகளை தேடுகிறது. உதாரணத்திற்கு, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய வரலாறு ஒரு சில காட்சிகளில் நிகழ்த்திக் காண்பிக்கப் படுகிறது. அதை முன்னாள் புலிப் போராளியான கஸ்தூரிக்கு, அவளது இஸ்லாமிய நண்பி சொல்வதைப் போன்று காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதைக் கேட்டு வருத்தப்படும் கஸ்தூரி மன்னிப்புக் கோருகிறாள். இன்னொரு காட்சியில், மாற்று இயக்கம் ஒன்றை சேர்ந்த சுந்தரம் புலிகளால் சித்திரவதை செய்யப் பட்ட கதையை கஸ்தூரி வாயால் சொல்ல வைக்கிறது.

இறுதிப்போருக்கு முன்பிருந்த, புலிகள், மாற்று இயக்கத்தினர், முஸ்லிம்கள் போன்ற அடையாளங்கள் இங்கே களையப் படுகின்றன. தற்போது அவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய அடையாளத்தை தேடுகிறார்கள். இது தான் படக் கதை கூறும் அரசியலின் சாராம்சம். வர்க்க அரசியலின் தாக்கம் பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது.

பிரான்சில் இருந்து வந்தவர் முன்னாள் போராளிக்கு உதவி செய்வதாக காட்டி போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டவுடன் அந்த உதவியை மறுக்கும் முன்னாள் போராளியான கஸ்தூரி, ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறார். அதே மாதிரி, முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்க மறுக்கும் புடவைக்கடை உரிமையாளர் உதவிக்கு கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறாள்.

ஒரு மலையகத் தமிழ்ப் பெண்ணான கஸ்தூரியின் குடும்பத்தினர், லண்டன் பணக்காரனின் காணிக்குள் கொட்டில் கட்டி வாழ்ந்தவர்கள். தற்போது லண்டனில் இருந்து திரும்பி வந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமையாளரை "வெளியே போடா!" என்று சொல்லும் தைரியம் வரக் காரணம், கஸ்தூரியின் கடந்த கால போராளி வாழ்க்கை தான். அன்று நடந்தது வெறுமனே தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற போராளிகளுக்கு, அதுவே வர்க்கப் போராட்டமாகவும் இருந்துள்ளது.

முன்னாள் போராளிகள் சிலர் பணக்காரர்களின் அடியாட்களாக வேலை செய்கிறார்கள். லண்டனில் இருந்து வந்த பணக்காரனின் வீட்டில் தான் முன்னாள் போராளி கஸ்தூரி குடியிருக்கிறாள். அவளை வெளியேற்ற அனுப்பிய அடியாட்கள் கஸ்தூரியின் பேச்சால் மனம் திருந்தி சுந்தரத்தின் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். கஸ்தூரி அவர்களை புலிகள் இயக்கத்தின் நற்பண்புகளை சொல்லி திருத்துவதாக காட்சி அமைந்துள்ளது. ஆனால், சுந்தரத்தின் அரசியலுடன் ஒன்று சேர்வதற்கு வர்க்க உணர்வு அவசியம்.

லண்டனில் புலிகளுக்காக காசு சேர்த்து பணத்தை பதுக்கியவர், இலங்கை வந்த நேரம் தனது சொந்த நலனுக்காக சிங்களப் புலனாய்வுத் துறையினருடன் கூட்டுச் சேர்கிறார். பணம் இனபேதம் பார்ப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் அதிகாரமும் கூட்டுச் சேரும். கள்ளுக் கடையில் அரசியல் பேசிய சுந்தரத்தை சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ய வேண்டிய காரணம் என்ன?

ஈழத்தில் இப்போதும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் புதிய நண்பர்கள் கூட்டுச் சேர்கிறார்கள். புதிய எதிரிகள் உருவாகிறார்கள். கூடவே துரோகிகளும் இருக்கிறார்கள். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை படுவதில்லை. அவர்கள் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தாலும் கழிவிரக்கம் கொள்வதில்லை.

படத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: "எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது." அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: "சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?" திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.

எந்தத் தலைமையையும் எதிர்பாராமல் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக ஒன்று திரண்டு போராடக் கிளம்பினால்....? ஒற்றைப் பனைமரம் தோப்பாகுமா? இது ஒரு பொழுதுபோக்கு திரைப் படம் அல்ல. இந்தத் திரைப்படம் பன்முகத்தன்மை கொண்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தத் திரைப் படத்தைப் பார்க்க வேண்டும்.

Sunday, October 06, 2019

ஏன் "திராவிட மொழிகள்" என்று சொல்ல வேண்டும்?


அரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். இது இறுதியில் தமிழ்- நாஜிச அரசியலுக்குள் கொண்டு சென்று விடும் என்பதைப் பலர் உணர்வதில்லை.

ஐரோப்பாவில் பேசப்படும் ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, டேனிஷ், நார்வீஜியன், சுவீடிஷ், ஆகிய மொழிகளை ஜெர்மனிய மொழிகள் என்று அழைக்கிறார்கள். கவனிக்கவும்: ஜெர்மனியர்கள் தமது மொழியை ஜெர்மன் என்று சொல்வதில்லை! அவர்களது மொழியில் "டொய்ச்" (Deutsch) என்பார்கள். அவர்களது நாட்டின் பெயர் "டொய்ச் லாந்து" (Deutschland).

ஆகவே "ஜெர்மனிய மொழிகள்" என்ற சொற்பதத்தில் உள்ள ஜெர்மனி என்பது இன்றைய ஜெர்மனியை குறிப்பிடும் சொல் அல்ல. ஜெர்மன், அலெமான், சாக்சன் என்பன பண்டைய ஜெர்மனிய இனக் குழுக்களின் பெயர்கள். அன்று அவர்கள் பேசிய மொழிக்கும் இன்றைய டொய்ச் மொழிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 

இருநூறு வருடங்களுக்கு முன்னர் கூட, இன்றைய ஜெர்மனி முழுவதும் ஒரே மொழி பேசப் படவில்லை. கிழக்கே "பிரஷிய டொய்ச்" (Preußisch), மேற்கே "நீடர் (தாழ்ந்த) டொய்ச்" (Niederdeutsch), தெற்கே "ஹொஹ் (உயர்ந்த) டொய்ச்" (Hochdeutsch) என்று மூன்று பிரிவுகள் இருந்தன. இறுதியில் ஹொஹ் டொய்ச் தான் அங்கீகரிக்கப் பட்ட அரச கரும மொழி ஆகியது. நீடர் டொய்ச் தான் பிற்காலத்தில் "நெடர்லான்ட்ஸ்" (டச்சு மொழி) ஆகியது. அதன் இன்னொரு பிரிவு தான் தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் "ஆபிரிக்கான்ஸ்" (Afrikaans) மொழி.

இன்றைய டொய்ச்காரர்கள் தாம் இன்றைக்கும் தொன்மையான ஜெர்மன் மொழி பேசுவதாக பெருமைப் படலாம். அதற்காக, ஆங்கிலேயர்கள், டேனிஷ்காரர்கள், டச் காரர்கள் போன்ற பிற மொழியினரும், தாம் டொய்ச் பேசுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்க முடியாது. இது தான் ஹிட்லரின் காலத்தில் நடந்தது. அதாவது, ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் டொய்ச் மட்டுமே பேச வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வும், இரண்டாம் உலகப்போரின் முடிவும் அனைவரும் அறிந்தவை.

தமிழ், திராவிடம் ஆகிய சொற்களும் இதே அரசியல்- வரலாற்றுப் பின்னணியை கொண்டவை தாம். இன்றுள்ள தமிழர்கள் தாம் ஒரு தொன்மையான மொழியை பேசுவதற்காக பெருமைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக அயலில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்களும் தாம் தமிழ் பேசுவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஐரோப்பாவில் நடந்தது போன்று ஆபத்தான நாஜிச அரசியலுக்கே இட்டுச் செல்லும்.

பதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட இன்றைய தமிழ், மலபார் மொழி என்று அழைக்கப் பட்டது. தமிழ் என்ற சொல் பண்டைய இலக்கியங்களில் எழுதப் பட்டிருக்கலாம். அதேநேரம் தமிழர் என்பது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை மட்டும் சுட்டும் சொல்லாகவும் இருந்திருக்கலாம். தற்கால நவீனத் தமிழ் பிற்காலத்தில் செழுமைப் படுத்தப் பட்ட மொழி. அதற்கும் பண்டைய தமிழுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இன்று தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் அனைத்தும் கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் செழுமைப் படுத்தப் பட்ட நவீன மொழிகள் தான். இந்த நவீன மொழிகள் முன்பிருந்த மூல மொழியுடன் பெரிதும் மாறுபடுகின்றன. இவற்றில் தமிழ் மட்டும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு தெலுங்குடன் ஆங்கிலத்தையும், தமிழுடன் டொய்ச் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரோமர்கள் காலத்தில் பிரித்தானியாவில் குடியேறிய, ஜெர்மன் மொழி பேசிய சாக்சனியர்கள், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ் மொழிகளுடனான கலப்பில் ஆங்கிலம் என்ற புதிய மொழியை உருவாக்கிக் கொண்டனர். அதே நேரம் இன்றைய ஜெர்மனியில் தங்கி விட்ட மக்கள் பெரும்பாலும் பண்டைய ஜெர்மனிய மொழியுடன் நெருக்கமான டொய்ச் மொழி பேசுகிறார்கள்.

அதே மாதிரி, தென்னிந்தியாவில் நீண்ட காலம் சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் தெலுங்கு என்ற புது மொழியை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், தமிழ்நாட்டின் பகுதிகளில் சம்ஸ்கிருதமயமாக்கல் மிக மிகக் குறைவாக நடந்த படியால், இன்றைக்கும் பண்டைய தமிழ் மொழியுடன் நெருக்கமான தமிழைப் பேசுகின்றனர்.

வரலாற்றுக் காலகட்டத்தில் மொழிகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களினால் தான், இன்று தமிழை தமிழ் என்கிறோம். அதே நேரம், தமிழுடன் தொடர்புடைய ஏனைய தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்கிறோம். உலக மொழிகளுக்கிடையிலான தொடர்புகளை இலகுவாக புரிந்து கொள்வதற்காக தான் ஜெர்மனிய மொழிகள், திராவிட மொழிகள் போன்ற சொற்பதங்கள் உருவாக்கப் பட்டன. அது அரசியலிலும் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதது.

Saturday, October 05, 2019

பூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்!


வ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர். அந்த‌ ச‌மூக‌த்தில் எல்லாவ‌ற்றிலும் பெண்க‌ளுக்கு தான் முத‌லிட‌ம்.

அல்ஜீரியா, மாலி, நைஜ‌ர், நைஜீரியா, மொரோக்கோ, மொரிட்டானியா ஆகிய‌ நாடுக‌ளை இணைக்கும் ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் நாடோடி வாழ்க்கை வாழும் துவார‌க் ம‌க்க‌ள் தனித்துவ‌மான‌ பெர்ப‌ர் மொழி பேசுகின்ற‌ன‌ர். வ‌ட‌ ஆப்பிரிக்காவுக்கு அரேபிய‌ர்க‌ள் வ‌ருவ‌த‌ற்கு முன்ன‌ர் அந்த‌ப் பிர‌தேச‌ங்க‌ளில் வாழ்ந்த‌வ‌ர்கள். த‌ற்போது ப‌ல‌ தேச‌ங்க‌ளுக்குள் பிள‌வு ப‌ட்டு, ஒடுக்க‌ப் ப‌டும் சிறுபான்மையின‌ ம‌க்க‌ளாகி விட்ட‌ன‌ர்.

அரேபிய‌ப் ப‌டையெடுப்புக‌ளுக்கு பின்ன‌ர் துவார‌க் ம‌க்க‌ள் இஸ்லாமிய‌ராக‌ மாறி விட்டிருந்தாலும், த‌ம‌து த‌னித்துவ‌மான‌ க‌லாச்சார‌த்தை கைவிட‌வில்லை. அவை எம‌க்கு ம‌ட்டும‌ல்லாது, அங்கு வாழும் அரேபிய‌ருக்கும் புதினமான‌வை.

அது ஒரு முற்றிலும் மாறுப‌ட்ட‌ ச‌முதாய‌ம். துவார‌க் பெண்க‌ள் அந்நிய‌ ஆட‌வ‌ருக்கு முன்னால் கூட‌ முக‌த்தை மூடுவ‌தில்லை. ஆனால், ஆண்க‌ள் க‌ட்டாய‌ம் முக‌த்தை மூட‌ வேண்டும். இதை அவ‌ர்க‌ள் ப‌ருவ‌ வ‌ய‌தில் இருந்தே பின்ப‌ற்றுகிறார்க‌ள்.

அதாவ‌து ஒரு துவார‌க் ஆண் த‌ன‌து ம‌னைவிக்கு முன்னால் மட்டுமே முக‌த்தை மூடாம‌ல் இருக்க‌லாம். வெளியில் எந்த‌ப் பெண்ணும் பார்க்க‌ முடியாம‌ல் முக‌த்தை மூடி இருக்க‌ வேண்டும். விருந்தின‌ருட‌ன் சாப்பிடும் பொழுது கூட‌ முக‌த்திரையை அக‌ற்றாம‌ல் உண‌வை வாய்க்குள் செலுத்த‌ வேண்டும். வீட்டில் உள்ள‌ பெண் பேச‌த் தொட‌ங்கினால் ஆண் வாயை மூடிக் கொள்ள‌ வேண்டும்!

திரும‌ண‌த்திற்கு ச‌ம்ம‌த‌மா என்று முத‌லில் பெண் தான் ஆணைக் கேட்க வேண்டும்! அதே மாதிரி ம‌ண‌ முறிவுகளும் சாதார‌ண‌ம். ஒரு பெண் ம‌றும‌ண‌ம் முடிப்ப‌து குடும்ப‌த்தில் ஒரு கொண்டாட்ட‌ நிக‌ழ்வாக‌ வ‌ர‌வேற்க‌ப் ப‌டும். விவாக‌ர‌த்து செய்தால் சொத்துக்க‌ள் அனைத்தும் பெண்ணுக்கே உரிமையாகும். அத்துட‌ன் திரும‌ணமான‌ பெண் வேறு ஆண் துணையை வைத்திருந்தாலும் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ள்.

உண்மையில் ப‌ண்டைய‌ கால‌த்தில் நில‌விய‌ தாய் வ‌ழிச் ச‌மூக‌த்தின் தொட‌ர்ச்சி தான் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ரின் ம‌ர‌பு. அதை அவ‌ர்க‌ள் ஆயிர‌மாயிர‌ம் வருட‌ங்க‌ளாக‌ பின்ப‌ற்றுகிறார்க‌ள். ஆண் மேலாதிக்க‌த்தை வலியுறுத்தும் இஸ்லாமிய‌ ம‌த‌ம் கூட‌ அதில் எந்த‌ மாற்ற‌த்தையும் கொண்டு வ‌ர‌வில்லை.

ஆனால், அண்மைக் கால‌த்தில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் அர‌சிய‌ல் இஸ்லாம் துவார‌க் ம‌க்க‌ள‌யும் விட்டு வைக்க‌வில்லை. ISIS எனும் பெய‌ரில் இய‌ங்கும் ப‌ல்வேறு ஆயுத‌க் குழுக்க‌ள் பெண்க‌ளை பூர்க்கா அணிய‌ வற்புறுத்துகின்ற‌ன‌. குறிப்பாக‌ மாலி, நைஜீரியாவின் வ‌ட‌ ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் உள்நாட்டுப் போர் கார‌ணமாக‌ த‌னித்துவ‌மான‌ துவார‌க் க‌லாச்சார‌ம் அச்சுறுத்த‌லுக்குள்ளாகி இருக்கிற‌து.