Showing posts with label சதிப்புரட்சி. Show all posts
Showing posts with label சதிப்புரட்சி. Show all posts

Friday, January 08, 2021

அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்!

அமெரிக்காவில் "தேடப்படும்" தீவிர வலதுசாரி பயங்கரவாதிகள்.  
 

"டிரம்ப் ஆதரவாளர்கள்" என்ற பெயரில், அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தை சூறையாடி ஜனநாயகத்தை வீழ்த்திய தீவிர வலதுசாரி, பாஸிச, நிறவெறிக் கும்பல்கள் பற்றிய விரிவான தகவல்கள். அமெரிக்காவிலும் பாஸிஸ்டுகள் ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகள் என்பதால் ஊடகங்கள் இனிவரப்போகும் பாசிச அபாயத்தை குறைத்து மதிப்பிட்டு வருகின்றன. 

 

 

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையில் ஒரு சதிப்புரட்சி நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னரே கணிப்பிட்டு, அது குறித்து கீழேயுள்ள காணொளிப் பதிவை வெளியிட்டிருந்தேன். மேலதிக விபரங்களுக்கு அதையும் பார்க்கவும்: 

 

அமெரிக்காவில் டிரம்பின் பாசிச சதிப்புரட்சி! 

//- சனவரி 20 அளவில் புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும். அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், அங்கு எதுவும் நடக்கலாம்.// (11 November 2020)

Wednesday, November 15, 2017

சிம்பாப்வே இராணுவ சதிப்புரட்சி - பின்னணித் தகவல்கள்


சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில், இராணுவம் அரச கட்டிடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனாலும் "அது சதிப்புரட்சி இல்லையாம்!" என்று இராணுவத் தளபதி தெரிவித்தார். 93 வயதான ஜனாதிபதி முகாபேயும், அவரது குடும்பத்தினரும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

சமீப காலங்களில் முகாபே சுகயீனமுற்று இருந்த படியால், தேசத்தின் உண்மையான நிர்வாகத்தை அவரது 52 வயதான மனைவி கிரேஸ் தான் கவனித்து வந்தார். முகாபே குடும்பத்தினர் முன்னிலைப் படுத்தப் பட்டதற்கு ஆளும் ZANU-PF கட்சிக்குள் அதிருப்தி இருந்ததையும் மறுக்க முடியாது.

கடந்த சில வாரங்களாக, சிம்பாப்வே ஆளும் கட்சிக்குள் களையெடுப்புகள் நடந்து வந்தன. "களையெடுப்பு தொடர்ந்தால் இராணுவ சதிப்புரட்சி நடக்கும்" என்று ஒரு இராணுவ ஜெனரல் நேற்றுத் தான் எச்சரித்து இருந்தார். இன்று நடந்துள்ள சதிப்புரட்சிக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதை ஊகித்தறிவது கடினமான விடயம் அல்ல.

நேற்று முன்தினம், திங்கட்கிழமை தான், துணை அதிபர் எமர்சன் (Emmerson Mnangagwa) பதவி விலக்கப் பட்டார். "அதிபர் பதவியை கைப்பற்ற சூனியம் செய்ததாக" முகாபே அவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். (ஆப்பிரிக்காவில் இன்றும் பல மக்கள் சூனியம் செய்வதை உண்மை என்று நம்புகிறார்கள்.) ஆகவே, துணை அதிபர் எமர்சன் "தனக்கு பாதுகாப்பு இல்லை" என்று கூறி, அன்றைய தினமே நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

சதிப்புரட்சி நடந்த தினமான இன்று, பதவியிறக்கப் பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி எமர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கி உள்ளார். அவரே சிம்பாப்வே ஆட்சியை பொறுப்பேற்று நடத்துவார் என ஊகிக்கப் படுகின்றது. "முகாபேயின் சர்வாதிகாரம் ஒழிந்தது" என்று மகிழ்ச்சி தெரிவிப்போர் ஒரு விடயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதே எமர்சன் தான் முகாபேயின் இரும்புக் கரமாக செயற்பட்டவர். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிராக நடந்த விடுதலைப் போராட்டத்தின் போது, எமர்சன் முகாபேயின் நம்பிக்கைக்குரிய தோழராக இருந்தவர். சுதந்திர சிம்பாப்வே அரசில் எமர்சன் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான், 1983 ம் ஆண்டு, நிதேபெலே(Ndebele) இனப்படுகொலை நடந்தது.

சிம்பாப்வே தெற்கில் வாழும் நிதேபெலே மொழி பேசும் சிறுபான்மை இனத்தவர்கள், பெரும்பான்மை மொழியான ஷோனா பேசும் முகாபே அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்தனர். இது இரண்டு மொழிகளைப் பேசும் மக்களுக்கு இடையிலான இனப்பிரச்சினையாகவும் இருந்த படியால், அரச பயங்கரவாத நடவடிக்கை மூலமே அந்த மக்களை பணிய வைக்க முடிந்தது. 

அன்று குறைந்தது இருபதாயிரம் நிதேபெலே மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர். இராணுவத்தின் ஐந்தாவது படைப்பிரிவான, குகுரஹண்டி (Gukurahundi) என்ற பெயர் தாங்கிய சிறப்புப் படையணியினரே படுகொலைகளில் ஈடுபட்டனர். ஷோனா மொழியில் குகுரஹன்டி என்றால் "குப்பைகளை ஒதுக்கும் மழை" என்று அர்த்தம். இதுவே அன்றைய இனப்பிரச்சினையின் தீவிரத் தன்மையை புரிய வைக்கப் போதுமானது.

சிம்பாப்வேயில் நடந்த இராணுவ சதிப்புரட்சியை, மேற்கத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளும் ஆதரிப்பதாகத் தெரிகின்றது. பதவியிறக்கப் பட்ட ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே, அங்கு நடந்த பொதுத் தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப் பட்டவர். ஆனால், மேற்குலகம் முகாபேயை ஒரு "சர்வாதிகாரி" என்று சொல்கிறது! அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளருக்கு, மேற்குலகம் தாராளமாக உதவிய போதிலும் தேர்தலில் வெல்ல முடியவில்லை.

மேற்குலகின் பார்வையில் "சிம்பாப்வே மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியை அகற்றி விட்டு, சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியுள்ள இனப்படுகொலையாளி" சிறந்த நண்பராக தெரிகிறார். ஆட்சியில் இருப்பது சர்வாதிகாரி, இனப்படுகொலையாளி யாராக இருந்தாலும், மேற்குலக பொருளாதார  நலன்கள் பாதுகாக்கப் பட்டால் சரி தானே?

சிம்பாப்வே நாட்டில் ஆயிரக் கணக்கான ஆங்கிலேய, டச்சு "விவசாயிகள்" வாழ்கிறார்கள். காலனிய காலத்தில் குடியேறிய அவர்களை விவசாய- தொழில் அதிபர்கள் என்று அழைப்பது தான் முறையானது. ஆயிரக்கணக்கான ஏக்கர்களை சொந்தமாக வைத்திருந்து, அவற்றில் புகையிலை பயிர் செய்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். பதினேழு வருடங்களுக்கு முன்னர், "முன்னாள் விடுதலைப் போராளிகள்" வெள்ளையரின் நிலங்களை வன்முறை மூலம் பறித்து வந்தனர்.

தற்போது பதவியிறக்கப் பட்டுள்ள ரொபேர்ட் முகாபேயும் முன்னாள் போராளிகளின் நடவடிக்கையை ஆதரித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மேற்குலக நாடுகள் சிம்பாப்வேக்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வந்தன. குறிப்பாக, அந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான புகையிலையை வாங்க மறுத்து வந்தன. அதனால், சிம்பாப்வே பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்றது. அதன் பணம் மதிப்பிறங்கி செல்லாக் காசாகியது. இதனால் அந்நிய நாணயங்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது.

அட்சி மாற்றத்தின் பின்னர் இராணுவ சதிப்புரட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முகாபேயின் மனைவியும் அரசியல் வாரிசுமான கிரேஸ் முகாபேயின் ஆதரவாளர்கள் வேட்டையாடப் படுகின்றனர். அதைத் தவிர நிலைமை சுமுகமாக உள்ளது. பொது மக்கள் தமது அன்றாட கடமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம், அங்கு நடந்த சதிப்புரட்சிக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் மக்கள் உணர்த்தி உள்ளனர். 


சிம்பாப்வே தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 
எனது முன்னைய பதிவுகளையும் வாசிக்கவும் :

Wednesday, July 27, 2016

துருக்கியில் முறியடிக்கப் பட்ட இராணுவத்தின் சதிப்புரட்சி ஒத்திகை


துருக்கியில் நடந்த இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைந்துள்ளது. சதிப்புரட்சி பற்றிய தகவல்கள் உலகம் முழுவதும் வலம் வந்த போதிலும் உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பது தெளிவாவாவதற்கு ஒரு நாள் எடுத்தது. இருப்பினும், இதை எழுதிக் கொண்டிருக்கும் வரையில், சதிப்புரட்சியை நடத்தியவர்களின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. துருக்கி அரசு கூட ஊகங்களின் அடிப்படையில் தான் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தது.

15 ஜூலை, துருக்கி நேரம் இரவு ஒன்பதரை மணியளவில், இஸ்தான்புல், அங்காரா போன்ற முக்கிய நகரங்களில் பெரும‌ள‌வு இராணுவ‌த்தின‌ர் குவிக்க‌ப் பட்டனர். இலட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் இரண்டு நகரங்களின் மீதும், போர் விமானங்கள் வட்டமிட்டன. யாரும் பயந்த படி குண்டு போடவில்லை. ஆனால், ஹெலிகாப்டர்களில் இருந்து சுட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன. தலைநகர் அங்காராவில், பாராளுமன்றம், அமைச்சுக்கள், அரசு அலுவலகங்கள், ஊடக நிறுவனங்கள் யாவும் இராணுவக் கட்டுப்பாட்டில் வந்தன. தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து சதிப்புரட்சியை பிரகடனம் செய்த இராணுவத்தினர், தாம் ச‌ர்வ‌தேச‌ ச‌ட்ட‌ங்க‌ளுக்கு ம‌திப்புக் கொடுப்ப‌தாக‌ தெரிவித்த‌ன‌ர்.

இஸ்தான்புல் ச‌ர்வதேச‌ விமான‌ நிலைய‌ம் மூட‌ப் பட்டிருந்தது. வெளிநாட்டு, உள்நாட்டு விமான‌ சேவைக‌ள் அனைத்தும் இர‌த்து செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. விமான‌ நிலைய‌த்தில் யுத்த‌ தாங்கிக‌ள் நிறுத்த‌ப் பட்டிருந்தன. இஸ்தான்புல் நநகரில் காவ‌ல்துறையின‌ர் எதிர்ப்புக் காட்டி உள்ள‌ன‌ர். இராணுவத்தினருக்கும், பொலிசாருக்கும் இடையில் நடந்த சண்டையில் பலர் கொல்லப் பட்டனர். சில மணி நேரத்தின் பின்னர், அதாவது சதிப்புரட்சி தோல்வியுற்றதும், இராணுவத்தினர் பொலிசாரிடம் சரணடைந்தனர்.

அன்றைய சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களில் பெரும்பான்மையானோர் இருபது வயது மதிக்கத் தக்க இளைஞர்கள். பலருக்கு என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை. தாம் ஒரு பயிற்சிக்கு அழைத்துச் செல்லப் படுவதாக நம்பினார்கள். இதுவும் ஓர் ஒத்திகை என்று நினைத்தார்கள். அதனால் தான், சதிப்புரட்சி தோல்வியடைந்த நேரம் மக்களைத் தாக்காமல் சரணடைந்தார்கள். சதிப்புரட்சியாளர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படலாம்.

தலைநகரில் சதிப்புரட்சி நடந்த நேரம், ஜ‌னாதிப‌தி எர்டோக‌ன் தென் துருக்கியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமான மார்மாரிஸ் நகரில் இருந்தார். ஆளும்கட்சியான, அவ‌ர‌து AK க‌ட்சிக்கு எதிராக‌வே ச‌திப்புர‌ட்சி ந‌ட‌ந்துள்ள‌து. இராணுவ‌த்தின‌ர், அங்காரா ந‌க‌ரில் AK க‌ட்சி த‌லைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்தனர். தனது ஆட்சிக் காலம் முழுவதும் மக்கள் போராட்டங்களை சகித்துக் கொள்ளாத ஜனாதிபதி எர்டோகன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்து விட்டது என்றதும், மக்களை வீதிக்கு வந்து போராடுமாறு அறைகூவல் விடுத்தார்.

தொலைக்காட்சி நிலையம் ஒன்று ஸ்கைப் மூலம் உரையாடிய ஜனாதிபதியின் பேச்சை நேரடி ஒளிபரப்புச் செய்தது. எர்டோகனின் அறைகூவலை செவி மடுத்த அவரது கட்சி ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி சதிப்புரட்சியாளர்களுக்கு எதிராக சவால் விட்டனர். யுத்த தாங்கிகளை துணிச்சலுடன் எதிர்த்து நின்றனர். "இராணுவ சதிப்புரட்சி மக்கள் சக்தி மூலம் முறியடிக்கப் பட்டதாகவும், இராணுவத்தினர் மக்களைக் கொல்லவில்லை..." என்று ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டதில் ஒரு பகுதி உண்மை தான் உள்ளது.

உண்மையில் சதிப்புரட்சியின் போது இரத்தக் களறி ஏற்பட்டது. இராணுவம் மக்களை நோக்கி சுட்டது. அதில் பல பொது மக்கள் மரணமடைந்தனர். இதைத் தவிர, பொலிசாருக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சமரில், இரண்டு தரப்பிலும் பலர் கொல்லப் பட்டனர். சதிப்புரட்சியின் விளைவாக, மொத்தம் 260 பேர் மரணமடைந்ததாக ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதிப்புரட்சி தோல்வியடைந்ததற்கு இன்னொரு காரணம் துருக்கி இராணுவம்! ஆமாம், தொண்ணூறு சதவீத படையினர் சதிப்புரட்சியில் பங்குபற்றவில்லை. அன்று இரவே, "இராணுவ‌த்தில் ஒரு பிரிவின‌ர் ம‌ட்டுமே ச‌திப்புர‌ட்சியில் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌" பிர‌த‌ம‌ர் யில்ட்ரிம் (Yildrim) தெரிவித்திருந்தார். அது உண்மை தான். படையினரே சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை தெருவில் பிடித்து வைத்து அடித்து உதைக்கும் காட்சிகளை அடுத்த நாள் காணக் கூடியதாக இருந்தது.

இதில் இன்னொரு முக்கிய விடயத்தையும் கவனிக்க வேண்டும். துருக்கியில் 1960 - 1980 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மூன்று தடவைகள் இராணுவ சதிப்புரட்சிகள் நடந்துள்ளன. பல வருட காலம் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்துள்ளது. நவீன துருக்கியின் சிற்பியாக கருதப் படும், "தேசப் பிதா" கெமால் அட்டா துர்க் காலத்தில் இருந்து, துருக்கியில் இராணுவம் ஒரு பலமான ஸ்தாபனம். ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப் படும் அரசாங்கங்கள் இராணுவத்துடன் சமரசமாகப் போகவே விரும்பும்.

துருக்கியில் மேலைத்தேய கலாச்சாரத்தை புகுத்தி, அதை ஒரு சராசரி ஐரோப்பிய நாடாக்கிய பெருமை அட்டா துர்க்கையே சேரும். துருக்கி அரசு மதச்சார்பின்மையை கறாராக பின்பற்ற வேண்டும் என்பது அவர் உத்தரவு. அதை இன்றைக்கும் நடைமுறைப் படுத்தி வரும் அரச இயந்திரம் இராணுவம் தான். இஸ்லாமியவாத எர்டோகன், பல தடவைகள் மத நம்பிக்கை சார்ந்த சட்டங்களை கொண்டு வர முயன்றார். அப்போதெல்லாம் இராணுவம் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. ஆனால், இந்த தடவை எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதிப்புரட்சியை இராணுவம் ஆதரிக்கவில்லை.

ஆகவே, தற்போது நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, சதிப்புரட்சிக்கு மக்கள் மட்டுமல்ல, துருக்கி இராணுவம் கூட ஆதரவளிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. அப்படியானால் சதிப்புரட்சியை நடத்தியவர்கள் யார்? நிச்சயமாக இராணுவத்தில் ஒரு சிறு பிரிவினர் தான். ஆனால், அவர்களது நோக்கம் என்ன? பின்னணியில் வேறு யார் இருந்துள்ளனர்? இவை இன்னும் மர்மமாகவே உள்ளன.

சதிப்புரட்சி தோல்வியடைந்ததும், அதில் ஈடுபட்ட எட்டு இராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தப்பியோடி கிரீசில் தரையிறங்கி உள்ளனர். (இஸ்தான்புல் நகரில் இருந்து கிரேக்க நாட்டு எல்லை சில மைல் தூரம் தான்.) அவர்கள் அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். கிரேக்க அரசு அவர்களை கைது செய்து விட்டு, ஹெலிகாப்டரை துருக்கிக்கு திருப்பி அனுப்பி விட்டது. ஆனால், அரசியல் தஞ்சம் கோரிய படையினர் திருப்பி அனுப்பப் படுவார்களா என்பது தெரியவில்லை. இந்தியா - பாகிஸ்தான் மாதிரித் தான், கிரீஸ், துருக்கிக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளும் உள்ளன.

துருக்கியில் இது வ‌ரையில் ஜெனர‌ல்க‌ள் உட்பட‌ இர‌ண்டாயிர‌த்திற்கும் அதிக‌மான‌ ப‌டையின‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். குறிப்பாக இரண்டாம் படைப்பிரிவு தளபதி ஆதம் ஹுடுத்தி (Adem Huduti), மூன்றாம் படைப்பிரிவு தளபதி எர்டல் எஸ்துர்க் (Erdal Öztürk) ஆகிய தளபதிகளும் கைது செய்யப் பட்ட பெரிய தலைகள் ஆவார்கள். மூன்றாம் படைப்பிரிவு இஸ்தான்புல் மாநகர காவலுக்கும், இரண்டாம் படைப்பிரிவு சிரியா எல்லைக் காவலுக்கும் பொறுப்பான இராணுவப் பிரிவுகள் ஆகும். மேலும், 2745 நீதிப‌திக‌ளும், 140 ச‌ட்ட‌மா அதிப‌ர்க‌ளும் கைது செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள். இன்னும் ப‌ல‌ர் தேட‌ப் படுகின்ற‌ன‌ர்.

எர்டோகன் அரசு எதற்காக நீதிபதிகளை கைது செய்ய வேண்டும்? அரசு, அரசாங்கம் என்பவற்றிக்கு எதிரான வித்தியாசங்களை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தேர்தலில் வெற்றி பெறும் கட்சி அரசாங்கம் அமைத்தாலும், அது விரும்பும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தடையாக அரசு இருக்கலாம். நீதிபதிகள் போன்றோர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத அரசுப் பிரதிநிதிகள். அப்படியானவர்களை அப்புறப் படுத்தினால், தான் விரும்பும் இஸ்லாமிய மதச் சார்பான மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது எர்டோகனின் நோக்கம்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில், சிரியா எல்லைக்கு அருகில் உள்ள இன்சிரில்க் (Incirlic) விமானப் படைத் தளத்தை சேர்ந்தவர்களே இராணுவ சதிப்புரட்சியின் சூத்திரதாரிகள் என்று ஒரு சந்தேகம் நிலவுகின்றது. அங்கிருந்து தான் சதிப்புரட்சிக்கு திட்டம் தீட்டப் பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப் படுகின்றது. இதனால், இன்சிரில்க் முகாம்மு சுற்றிவளைக்கப் பட்டது. முகாமுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப் பட்டது. அங்கிருந்த துருக்கிப் படையினர் விசாரணை செய்யப் பட்டனர். பலர் கைது செய்து காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

இன்சிரில்க் படைத்தளம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதியில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியில் மொத்தம் 2,200 அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர். அவர்களில் 1,500 பேர் இன்சிரில்க் முகாமில் உள்ளனர். சிரியாவில் ISIS பிரதேசம் மீது குண்டு வீசும் அமெரிக்க விமானங்கள் இன்சிரில்க் படைத் தளத்தில் இருந்து தான் புறப்படுகின்றன.

அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் குய்லன் (Gülen) என்ற அரசியல் தலைவர் தான், தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு காரணம் என்று எடோகன் குற்றம் சாட்டுகின்றார். அவர் ஒரு "பயங்கரவாதி" என்றும், துருக்கிக்கு நாடு கடத்துமாறும் அமெரிக்க அரசை கோரியுள்ளார். ஆனால், அது நடக்குமா என்பது தெரியவில்லை. எர்டோகனும், குய்லனும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள்! தற்போது ஜென்மப் பகைவர்கள்!

தற்போது ஆளும்கட்சியான AK கட்சி, முதன்முதலாக 2002 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தமைக்கு குய்லன் முக்கிய காரணம். அவரது மேற்பார்வையின் கீழிருந்த குய்லன் இயக்கம் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தது. ஆட்சியைப் பிடித்த பின்னர், எர்டோகனுக்கும், குய்லனுக்கும் இடையில் விரிசல் தோன்றியது. 

எர்டோகன் தீவிர இஸ்லாமியவாதியாக இருந்தது மட்டுமல்லாது, தனது சர்வாதிகார தலைமையின் கீழ் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயற்சித்தார். அதற்கு மாறாக, குய்லன் மிதவாத இஸ்லாமியவாதியாக, பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆதரித்து வந்தார். இது மட்டுமே, AK கட்சியின் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு. அதைத் தவிர வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பின்தங்கிய நாடாக இருந்த துருக்கி, தொண்ணூறுகளுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி கண்டது. அப்போது தோன்றி வளர்ந்த தேசிய முதலாளிகளின் செல்வாக்கும் அதிகரித்தது. அவர்கள் தான் இஸ்லாமியவாத AK கட்சியின் நிதிப் புரவலர்கள். தேசிய முதலாளித்துவமும், இஸ்லாமியவாதமும் கையோடு கைகோர்த்து ஆட்சியைப் பிடித்தன. இருப்பினும் ஆளும் வர்க்கத்தின் உள்ளேயே பிளவுகள் தோன்றின. அவற்றில் குய்லன் ஆதரவுக் குழுவினர் முக்கியமானவர்கள். இது ஒரு கோஷ்டி மோதல். குய்லன் இயக்கம் என்பது, ஒரு சமூக அரசியல் அமைப்பாக, ஏராளமான உறுப்பினர்கள், ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.

துருக்கியர்கள் ஒரே மொழி பேசினாலும், அவர்கள் ஒரு பிளவு பட்ட சமுதாயம் தான். கொள்கை முரண்பாடு காரணமாக சிலநேரம் உறவினர்களும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை. இடதுசாரிகளும், வலதுசாரிகளும் நேரில் கண்டால் கடித்து இரத்தம் குடிக்குமளவிற்கு வெறுப்பார்கள். அந்தப் பிரிவினை ஒரு புதினமல்ல. காலங்காலமாக இருந்து வருவது தான். ஆனால், இஸ்லாமியவாதிகள் (துருக்கி இடதுசாரிகள் அவர்களை "இஸ்லாமிய - பாசிஸ்டுகள்" என்றும் அழைக்கிறார்கள்) தமக்குள் பிளவு பட்டு அடிபடுவது ஒரு புதிய அரசியல் தோற்றப் பாடு என்று தான் சொல்ல வேண்டும்.

தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு குய்லன் தான் காரணம் என்று எர்டோகன் சொல்வது உண்மையானால், இது ஆளும் வர்க்கத்திற்குள் தோன்றிய முரண்பாட்டின் விளைவு என்பது தெளிவாகின்றது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர், நீதித்துறையினரில் பெரும்பான்மையானோர் குய்லன் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

குய்லன் இயக்கம் ஒரு சாதாரணமான சமூக அமைப்பு அல்ல. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள மசூதிகள், பள்ளிக்கூடங்கள், வணிக நிலையங்கள் பல குய்லன் இயக்க ஆதரவாளர்களினால் நடத்தப் படுகின்றன. உண்மையில் இன்னும் சில சமூக அமைப்புகள் அவ்வாறு இயங்குகின்றன. ஆனால், எர்டோகனின் சர்வாதிகாரத்திற்கு சவாலாக இருப்பது குய்லன் இயக்கம் மட்டும் தான். பிரபல இஸ்லாமிய அறிவுஜீவியான பெதுல்லா குய்லன், அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் வாழ்ந்து வருகிறார்.

துருக்கி அமைச்ச‌ர் சொய்லு, "இராணுவ‌ ச‌திப்புர‌ட்சியில் அமெரிக்காவுக்கு ப‌ங்கிருக்கிற‌து" என்று தெரிவித்தார். இவ்வாறு துருக்கி அர‌சு ப‌கிர‌ங்க‌மாக‌ அமெரிக்காவை குற்ற‌ம் சாட்டிக் கொண்டிருந்தால், "இர‌ண்டு நாடுக‌ளுக்கும் இடையிலான‌ இராஜ‌த‌ந்திர‌ உற‌வில் விரிச‌ல் ஏற்ப‌டும்." என்று அமெரிக்க‌ அமைச்ச‌ர் கெரி எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க - துருக்கி உறவில் விரிசல் ஏற்படுமானால், அது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். தற்போது நடந்துள்ள நடந்துள்ள இராணுவ சதிப்புரட்சி ஓர் ஒத்திகை மட்டுமே. ஆட்டம் இனித் தான் ஆரம்பமாகவுள்ளது. 

துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைந்ததும், மக்கள் சக்தி வெற்றி பெற்று விட்டதாக பலர் நினைக்கலாம். ஆனால், ஆட்சியாளர்கள் அப்படிக் கருதவில்லை. "சதிப்புரட்சி அபாயம் இன்னும் நீங்கவில்லை" என்று பிதமர் யில்ட்ரிம் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். 

வழமையாக இஸ்லாமியவாத AK கட்சியுடன் கொள்கை ரீதியாக முரண்படும், MHP (துருக்கி தேசியவாதிகள்), HDP (குர்திய உரிமைப் போராளிகள்) போன்ற எதிர்க்கட்சிகளும் சதிப்புரட்சியை கண்டித்துள்ளன. ஆனால், அமெரிக்க தூதுவராலயம் சதிப்புரட்சியை வரவேற்று அறிக்கை விட்டதாக சொல்லப் படுகின்றது. ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளும் "எர்டோகன் ஆட்சி கவிழ்க்கப் பட்டதற்கு" மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

துருக்கியில் நடந்த சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்கு என்ன? எர்டோகன் தன்னை ஒரு நவீன சுல்த்தானாக காட்டிக் கொள்வதும், ஓட்டோமான் சாம்ராஜ்யப் பெருமை பேசுவதும் மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை மாற்றும் உள்நோக்கம் கொண்டது. எர்டோகனின் இஸ்லாமியவாத அரசியல் கொள்கை அமெரிக்காவை எரிச்சலூட்டி வருகின்றது. 

ஐ.எஸ்., அல்கைதா போன்ற தீவிரவாதிகளை விட, எர்டோகன் போன்ற ஜனநாயகவாதிகள் ஆபத்தானவர்கள் என்று அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் எர்டோகனின் எதிரி குய்லன். இன்சிரில்க் இராணுவ தளத்துடன் தொடர்பு பட்டவர்களின் கைது. சிரியா எல்லைக் காவல் படைத் தளபதி கைது. இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகத் தான் வருகின்றது.

Tuesday, December 30, 2014

ருமேனியாவில் சோஷலிச அரசைக் கவிழ்த்த அமெரிக்க சதிப்புரட்சி


ருமேனியா நாட்டின் கடைசி கம்யூனிஸ்ட் தலைவர் நிகோலா ஸௌசெஸ்கு, ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று (25 december 1989) அவரது துணைவியார் எலேனாவுடன் படுகொலை செய்யப் பட்டார். சில தினங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் விளைவாகவே அது இடம்பெற்றது. அமெரிக்காவினால் ஆதரிக்கப் பட்ட சதிப்புரட்சியாளர்கள், வெளிப்படையான நீதி விசாரணை எதுவுமின்றி சுட்டுக் கொன்றனர்.

ருமேனியாவில் நடந்த இராணுவ சதிப்புரட்சியானது, மேற்குலகில் "கம்யூனிசத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி" போன்று திரிபு படுத்தப் பட்டது. அன்றைய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சின் உயர் அதிகாரியாக பதவி வகித்து வந்த Mircea Răceanu, ஒரு CIA உளவாளி என்பது பின்னர் தான் தெரிய வந்தது. அவரைப் போன்று சில இராணுவ அதிகாரிகளும் CIA க்காக உளவு பார்த்துள்ளனர்.

நிகோலா ஸௌசெஸ்குவின் முடிவானது, லிபிய அதிபர் கடாபியின் முடிவை பெருமளவு ஒத்துள்ளது. கடாபி போன்று, நிகோலா ஸௌசெஸ்குவும் மேற்குலகுடன் நட்புறவு கொண்டதன் மூலம், சிறந்த இராஜதந்திரியாக தன்னைக் கருதிக் கொண்டார். பலர் நினைப்பதைப் போன்று, அன்றிருந்த கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் ஒரே மாதிரி இருக்கவில்லை. எல்லா ஆட்சியாளர்களும், சோவியத் யூனியனின் கைப் பொம்மையாக ஆடவில்லை. ருமேனியாவும், யூகோஸ்லேவியாவும் மிகவும் சுதந்திரமாக இயங்கின.

சோவியத் தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகளின் படைகள், ஹங்கேரி கிளர்ச்சியை அடக்குவதற்காக படையெடுத்த நேரம், நிகோலா ஸௌசெஸ்கு அதனைக் கண்டித்திருந்தார். சோவியத் யூனியனுடன் மட்டுமல்லாது, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற அனைத்து உலக வல்லரசுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தார்.

மேற்குலகம் நிகோலா ஸௌசெஸ்குவுக்கு எதிரான சதிப்புரட்சியை நடத்துவதற்கான காரணம் என்ன? முதலாவதாக, நிகோலா ஸௌசெஸ்கு மேற்குலக நாடுகளிடம் வாங்கியிருந்த அந்நிய கடன்கள் ஒரு காரணம். உலகில் எந்த நாட்டு தலைவரும் செய்யாத, செய்யத் துணியாத ஒரு காரியத்தை அவர் செய்தார். அந்நிய நாடுகளின் கடன்களை எல்லாம் திருப்பிக் கட்டினார். சதிப்புரட்சி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர், ருமேனியா மேற்குலகிடம் வாங்கிய அனைத்துக் கடன்களையும் திருப்பிச் செலுத்தி விட்டிருந்தது.

இரண்டாவதாக, ருமேனியா இராணுவத்திற்குள் தேசியவெறி கொண்ட அதிகாரிகள் சிலர் தலைமையுடன் அதிருப்தி கொண்டிருந்தனர். அதற்கு காரணம், அயல்நாடான ஹங்கேரி தனது படைகளை ருமேனிய எல்லையோரம் நகர்த்தி இருந்தது. அன்றைய காலத்தில், ருமேனியாவும், ஹங்கேரியும் சோஷலிச நாடுகளாகத் தான் இருந்தன. ஆயினும், அவற்றிற்கு இடையில் தீர்த்து வைக்கப் படாத பிராந்தியப் பிரச்சினை ஒன்றிருந்தது.

முதலாம் உலகப்போரில், ஹங்கேரியும், ஆஸ்திரியாவும் ஒரே மன்னராட்சிக்கு கீழே இருந்தன. ருமேனியாவின் மேற்குப் பகுதி பிராந்தியமான Transylvania முதலாம் உலகப்போர் வரையில் ஹங்கேரிக்கு சொந்தமான மாநிலமாக இருந்தது. ஆஸ்திரிய - ஹங்கேரி போரில் தோல்வியடைந்த படியால், மேற்குலகம் முன்மொழிந்த சமாதான ஒப்பந்தம் ஒன்றின் பின்னர், Transylvania ருமேனியாவுக்கு தாரை வார்க்கப் பட்டது.

எண்பதுகளின் தொடக்கத்திலேயே ஹங்கேரியில் பல அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன. ஹங்கேரி எழுபதுகளிலேயே அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது. மேற்குலக கடன்களை வாங்கி வந்தது. எண்பதுகளின் மத்தியில், சோவியத் அதிபர் கோர்பசேவ் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்த சோவியத் துருப்புக்களை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார். அது மேற்குலகிற்கு ஆதரவான ஹங்கேரியின் போலி கம்யூனிச ஆட்சியாளர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.

எண்பதுகளின் இறுதியில், ஹங்கேரி ஒரு "சோஷலிச நாடாக" இருந்த போதே, நேட்டோவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. கனடிய விமானப் படையினர், ஹங்கேரி வான் பரப்பில் சில பயிற்சிகளை மேற்கொண்டனர். மேலும், முன்னைய மன்னராட்சியின் தொடர்ச்சியாக, ஆஸ்திரியாவுடன் இராஜதந்திர உறவுகள் புதுப்பிக்கப் பட்டன. எல்லைப் பாதுகாப்புக் கருவிகள் பழுதடைந்து விட்டதாக ஒரு சாட்டுக் கூறப் பட்டது. (எல்லையில் பொருத்தப்பட்ட சமிக்ஞை கொடுக்கும் மின்னணுக் கருவிகள் பழுதடைந்த நேரம், சோவியத் யூனியன் அவற்றை திருத்திக் கொடுக்கவில்லை.)

ஹங்கேரிய கடவுச் சீட்டுகள் ஆஸ்திரியாவினால் அங்கீகரிக்கப் பட்டன. அதன் மூலம், ஹங்கேரி பிரஜைகள் மேற்கு ஐரோப்பாவுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. "இரும்புத் திரை" அகற்றப் பட்டது. எதிர்பாராவிதமாக, பெருமளவு கிழக்கு ஜெர்மன் மக்கள் ஹங்கேரி ஊடாக மேற்கு ஜெர்மனிக்கு செல்ல அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. பெர்லின் மதில் அப்போதே விழுந்து விட்டது.

இந்தப் பின்னணியிலேயே ருமேனியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றது. ஹங்கேரி தனது படைகளை ருமேனிய எல்லை நோக்கி நகர்த்தியதும், அது Transylvania பகுதியை திரும்பவும் கைப்பற்றப் போகின்றது என்ற பதற்றம் ஏற்பட்டது. ஹங்கேரி வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும், ருமேனியாவில் பலர் அப்படி நினைத்துக் கொண்டார்கள். அதே நேரம், Timișoara நகரில் மேற்குலக தூண்டுதலினால் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. ருமேனியாவின் பாரம்பரிய ஜெர்மன் நகரங்களைப் போன்று Timișoara வும், பல்லின மக்களைக் கொண்டது. அங்கு நடந்த இனக்கலவரம் விரைவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக மாற்றப் பட்டது.

நிகோலா ஸௌசெஸ்கு தங்களை ஹங்கேரி இராணுவத்திற்கு எதிராக போரிட அனுப்புவார் என்று, தேசியவாத இராணுவ அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆயினும், Timișoara கலவரத்தை அடக்குவதற்காக படையினர் அனுப்பப் பட்டதும், அதைக் காரணமாகக் கொண்டு, இராணுவ அதிகாரிகள் சதித்திட்டம் தீட்டினார்கள். 

தலைநகர் புகாரெஸ்ட்டில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றைப் பயன்படுத்திக் கொண்ட சதிகாரர்கள், மக்களோடு மக்களாக கலந்து நின்று குழப்பம் விளைவித்தனர். அந்த நேரம், அரச மாளிகையின் உப்பரிகையில் நின்றிருந்த நிகோலா ஸௌசெஸ்குவையும், அவரது துணைவி ஏலேனாவையும், மெய்க்காவலர்கள் ஹெலிகாப்டரில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை பலர் அறிந்திருப்பார்கள்.

இராணுவ சதிப்புரட்சியாளர்கள், நிகோலா ஸௌசெஸ்கு பயணம் செய்த ஹெலிகாப்டரை தடுத்து, தமது கட்டுபாட்டில் இருந்த முகாம் ஒன்றிற்கு கொண்டு சென்றார்கள். நிகோலா ஸௌசெஸ்குவுக்கு விசுவாசமான படையினர் வந்து மீட்டுச் செல்வதற்குள் கதையை முடித்து விட தீர்மானித்தார்கள். அதனால் தான், அவர்களை மக்கள் முன்னால் நீதிமன்றத்தில் நிறுத்தாமல், தாங்களாகவே ஒரு கண்துடைப்பு விசாரணை நடத்தி சுட்டுக் கொன்றார்கள்.

நிகோலா ஸௌசெஸ்கு படுகொலைக்குப் பின்னர் சில வருடங்கள், ருமேனியாவில் இராணுவ ஆட்சி நடந்தது. அப்போது கொலை சம்பந்தமான ஆதாரங்கள், ஆவணங்கள் எல்லாம் அழிக்கப் பட்டு விட்டன. ருமேனியாவில் இன்றைக்கும், சோஷலிச கடந்த காலம் பற்றி யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதாவது, சோஷலிசத்தை எதிர்ப்பவர்கள் கூட, நிகோலா ஸௌசெஸ்கு அரசு இன்னென்ன குற்றங்களை செய்தது என்று விசாரணைகளை நடத்துவதை விரும்புவதில்லை. ஏனென்றால், அதை எல்லாம் விசாரிக்கப் போனால், கடைசியாக நடந்த இராணுவ சதிப்புரட்சி பற்றிய உண்மைகளும் வெளிவந்து விடும் என்ற அச்சம் காரணம்.

அன்றைய சதிபுரட்சியில் பங்கெடுத்த குற்றவாளிகள், இன்றைக்கும் அரசாங்கத்தில் உள்ளனர். அது மட்டுமல்ல, கிழக்கு ஐரோப்பாவில் மிகத் தீவிரமான அமெரிக்க ஆதரவு அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. இன்று ஹங்கேரி மட்டுமல்லாது, ருமேனியாவும் நேட்டோவில் அங்கத்தவராக சேர்ந்து விட்டது. ருமேனியாவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக, அந்த நாடு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. அதற்கு பின்வரும் காரணங்களை கூறலாம்:

1.அது கருங்கடலை அண்டிய நாடு. கருங்கடலில் வட கிழக்கில் கிரீமியா உள்ளது. அண்மைய உக்ரைனிய நெருக்கடியின் போது, ரஷ்யா செய்த முதல் வேலை, கிரீமியாவை தன்னோடு சேர்த்துக் கொண்டது தான். இல்லாவிட்டால், அங்கு அமெரிக்கா பாய்ந்து தளம் அமைத்திருக்கும். 

 2. எண்ணை வளம் நிறைந்த அசர்பைஜானில் இருந்து வரும் குழாய் பாதை, ருமேனியா ஊடாகத் தான் ஐரோப்பாவை அடைய வேண்டும். 

 3. பனிப்போர் காலத்தில் ருமேனியாவின் வட கிழக்கு எல்லையில் சோவியத் ஒன்றியம் இருந்தது. இன்று மோல்டாவியா, உக்ரைனுக்கு அப்பால் ரஷ்ய வல்லரசு உள்ளது. ஆயினும், புதிய பனிப்போர் யுகத்தில், ரஷ்யா உக்ரைனிலும், மோல்டாவியாவிலும் அழுத்தமாக கால் பதித்துள்ளது. அதாவது, இது ஒரு சதுரங்க ஆட்டம். அமெரிக்கா வருவதற்குள் ரஷ்யா முந்தி விடப் பார்க்கிறது. ரஷ்யா வருவதற்குள், அமெரிக்கா கிழக்கே நேட்டோவை விஸ்தரிக்க பார்க்கின்றது. 

4. ருமேனியா மத்திய கிழக்கு நாடுகளிற்கு அருகில் உள்ளது. அமெரிக்கா மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், ருமேனியாவில் உள்ள படைத் தளங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

5. ருமேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்றது. ஆயினும், அமெரிக்காவுக்கு விசுவாசமான அரசாங்கத்தை கொண்டுள்ளது. அதிலென்ன பிரச்சினை? அமெரிக்காவுக்கும், மேற்கு ஐரோப்பாவுக்கும் (ஐரோப்பிய ஒன்றியம்) இடையில் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இது பற்றி வெளியில் யாரும் பேசுவதில்லை. ஆனால், மேற்கு ஐரோப்பிய நாடுகளை நம்ப முடியாது. காலை வாரி விட்டு விடுவார்கள் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. அதனால், கிழக்கு ஐரோப்பாவில் சில அடிமை நாடுகளை கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும்.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள முன்னாள் சோஷலிச நாடுகளில், மக்கள் கிளர்ந்தெழுந்து கம்யூனிஸ்டுகளின் ஆட்சியை கவிழ்த்தார்கள் என்று தான் வெளியுலகில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அங்கே என்ன நடந்தது என்று யாரும் ஆய்வு செய்வதில்லை. மேற்குலக பிரச்சார சாதனங்கள் சொல்வதை உண்மை என்று நம்புகிறார்கள். உண்மையில், அதற்கு பல காரணங்கள் இருந்துள்ளன. 

அவற்றை சுருக்கமாக சொல்லலாம். மேற்குலகிடம் வாங்கிய கடன்கள் பொருளாதார மாற்றங்களை உண்டாக்கின. மேற்குலகுடனான இராஜந்தந்திர உறவுகள் உயர் மட்டத்தில் உளவாளிகளை உருவாக்க வழிவகுத்தன. ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்ட சர்வதேச அரசியலில் மாற்றங்களை உண்டாக்குவதன் மூலம் உள்நாட்டில் குழப்பங்கள் உருவாக்கப் பட்டன. மேற்குலகிற்கு ஆதரவாக அரசுக்குள் செயற்பட்ட துரோகிகள் இறுதிக்கட்ட திட்டங்களை நிறைவேற்றினார்கள்.


Saturday, February 11, 2012

இந்தியாவின் காலில் மிதி படும் மாலை தீவுகள்

பெப்ரவரி மாத தொடக்கத்தில் (7.2.12), மாலைதீவுகளில் ஏற்பட்ட திடீர் ஆர்ப்பாட்டங்களும், காவல்துறையின் கலகமும், அங்கே ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. முதன் முதலாக ஜனநாயக தேர்தலில் தெரிவான ஜனாதிபதி நஷீத், பதவி விலகுவதாக வந்த செய்திகள், சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தன. "அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், நஷீத் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது." இவ்வாறு தான் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வாசித்தார்கள். ஆனால், மாலைதீவுகளில் ஏற்பட்டது, "மக்கள் எழுச்சி" அல்ல, மாறாக காவல்துறையின் சதிப்புரட்சி என்பது சில நாட்களின் பின்னர் தெரிய வந்துள்ளது.

இதனை "பதவி விலகிய" (அல்லது இராஜினாமா செய்ய வைக்கப் பட்ட) முன்னாள் ஜனாதிபதி நஷீத் உறுதிப் படுத்தி உள்ளார். "கலகக்கார போலீசார், என்னை ஆயுத முனையில் வற்புறுத்தி இராஜினாமா பத்திரத்தில் கையெழுத்திட வைத்தார்கள். எனது மக்கள் இரத்தம் சிந்துவதை தடுப்பதற்காக கையெழுத்திட்டேன். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு சதிப்புரட்சி என்பதில் சந்தேகமில்லை. சதிப்புரட்சி மூலம் பதவியைப் பிடித்த புதிய (உப) ஜனாதிபதியை அமெரிக்கா அங்கீகரித்த செயல் எனக்கு வருத்தமளிக்கிறது." - நஷீத். இதே நேரம், "மாலைதீவில் நடக்கும் குழப்பங்கள், அந்நாட்டின் உள் நாட்டு விவகாரம்." என்று கூறி, இந்தியா ஒதுங்கிக் கொண்டது. மாலைதீவுகளில் நடந்தது ஒரு சதிப்புரட்சி என்றால், அந்தச் சதியில் இந்தியாவின் அல்லது அமெரிக்காவின் பங்கு என்ன? உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் காவலர்களான இந்தியாவும், அமெரிக்காவும், மக்களால் தெரிந்தெடுக்கப் பட்ட அரசை கவிழ்க்க வேண்டிய அவசியமென்ன?

ஏற்கனவே, 3 நவம்பர் 1988, மாலைதீவுகளில் திடீர் சதிப்புரட்சி ஒன்று நடந்ததாகவும், அது உடனடியாக முறியடிக்கப் பட்டதாகவும், அறிவிக்கப் பட்டது. அதிகாலையில் கேள்விப்பட்ட அந்த அதிர்ச்சி செய்தியினால் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. சதிப்புரட்சி பற்றி மக்கள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்தனர். "இலங்கை எல்லைகளைக் கடந்து, தென்னாசிய பிராந்தியத்திலும் தமிழர் வீரம் நிலைநாட்டப் பட்டதாக..." என்று சிலர் "தமிழினப் பெருமை" பேசினர். அதற்கு காரணம், PLOTE என்ற ஈழ விடுதலை இயக்கமொன்றின் உறுப்பினர்கள், சதிப்புரட்சியில் சம்பந்தப் பட்டிருந்தனர்.

PLOTE அமைப்பை சேர்ந்த என்பது ஆயுதமேந்திய நபர்கள், ஒரு மாலைதீவு வணிகரின் (Abdullah Luthufi) கூலிப்படையாக செயற்பட்டுள்ளனர். சதிப்புரட்சி வெற்றி பெற்றால், குறிப்பிட்ட வர்த்தகர் புதிய ஆட்சியாளராக முடி சூட்டப் பட்டிருப்பார். ஆயிரக்கணக்கான தீவுகளில் ஒன்றை அல்லது சிலதை, PLOTE அமைப்பினர் தளமமைக்க கொடுத்திருப்பார். அவ்வாறு திட்டமிடப் பட்டதாக, ஊடகங்கள் தெரிவித்தன. தலைநகர் மாலேயில், ஏற்கனவே சில ஆயுதபாணிகள் ஊடுருவியிருந்தனர். அவர்களுடன் கப்பலில் வந்த மேலதிக ஆயுதபாணிகள் சேர்ந்து கொண்டனர். இருட்டு அகலாத அதிகாலை வேளையில், நகரின் கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த இடங்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஒரு சில மணி நேரத்தில், சின்னஞ் சிறிய மாலைதீவு அரசு, அவர்கள் கைகளில் வீழ்ந்தது. கள முனை அனுபவமற்ற, அளவிற் சிறிய மாலைதீவு பாதுகாப்புப் படையினால், சதிகாரர்களின் தாக்குதலை தடுக்க முடியவில்லை.

மாலைதீவுகளில், சதிப்புரட்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. சதியில் ஈடுபட்டவர்களால், தொலைத்தொடர்பு நிறுவனத்தை கைப்பற்ற முடியவில்லை. ஜனாதிபதி அப்துல் கயாமையும் பிடிக்க முடியவில்லை. அப்துல் கயாம், இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு உதவி கேட்டு தந்தி அனுப்பினார். மாலைத்தீவு அதிபரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட, காலஞ் சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, 12 மணி நேரத்திற்குள், இந்திய இராணுவத்தை விமானம் மூலம் அனுப்பி வைத்தார். இந்திய கடற்படையும் மாலைதீவுகளை நோக்கி விரைந்தது. இந்திய இராணுவம் வருவதை அறிந்து கொண்ட சதியாளர்கள், சிறு படகுகளில் தப்பித்து ஓடினார்கள். ஆனால், இந்தியக் கடற்படை சுற்றி வளைத்து, அனைவரையும் சிறைப் பிடித்தது. அடுத்து வந்த சில நாட்கள், இந்தியப் படை அடித்து உதைத்து சென்ற மாலைதீவு கைதிகளின் படங்கள், உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பால் மாலைதீவு எனும் நாட்டை பிடித்த வீரம் பற்றி பேசியவர்கள், ஜனாதிபதி காயூமை கோட்டை விட்டதாலேயே, சதிப்புரட்சி தோற்றதாக நம்பினார்கள். ஆனால், அன்று ஜனாதிபதியை சிறைப் பிடித்திருந்தாலும், இந்திய இராணுவம் வந்திறங்கியிருக்கும். தென்னாசியாவின் பிராந்திய வல்லரசான இந்தியா, அயல் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை "சர்வதேச சமூகம்" எதிர்த்திருக்கப் போவதில்லை.

அண்மையில் மாலைதீவுகளில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம், சிறிய நாடுகள் மீதான இந்தியாவின் பெரியண்ணன் மனோபாவம் இன்னும் அகலவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளை தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக அமெரிக்கா கருதி வருகின்றது. அமெரிக்காவை முன்மாதிரியாக கொண்டுள்ள இந்தியாவும், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு ஆகிய அயல் நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றது. இந்தியாவின் செல்வாக்குக்கு உட்படாத ஒரேயொரு நாடு பாகிஸ்தான் மட்டுமே. அயல் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவும், அடியாட்களை உருவாக்கவும், இந்திய நலன்களை பாதுகாக்கவும் Research and Analysis Wing (RAW) என்ற ஸ்தாபனம், உத்தியோகபூர்வமாக இயங்கி வருகின்றது.

RAW அதிகாரிகளை விடப் பெரிய "சதிகாரர்கள்" தெற்காசியப் பிராந்தியத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. 1988 ல் நடந்த, மாலைத்தீவு சதிப்புரட்சி கூட RAW வின் திட்டமிடலில் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. மாலைதீவுகளில் அப்துல் காயூமின் கொடூரமான சர்வாதிகார ஆட்சி, எந்தவொரு எதிர்க் கட்சியையும் அனுமதிக்கவில்லை. எதிர்ப்புக்குரல் காட்டுவோர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். இதனால், பல எதிர்ப்பாளர்கள் இலங்கையில் புகலிடம் கோரியிருந்தனர், என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், எந்தவொரு அரசியல் தொடர்புமற்ற, இலங்கையில் பண்ணை வைத்திருந்த மாலைதீவு வர்த்தகர், சதிப்புரட்சியின் சூத்திரதாரி என்பதை நம்ப முடியவில்லை. தனது இறுதிக் காலத்தில் கொழும்பில் வசித்த PLOTE தலைவர் உமா மகேஸ்வரன், "மாலைத்தீவு சதிப்புரட்சி, இந்தியாவின் ஆலோசனைப் படி நடந்ததை பகிரங்கப் படுத்தப் போவதாக" தெரிவித்திருந்தார். சில நாட்களின் பின்னர், அவரது மெய்ப்பாதுகாவலர்களால் கொலை செய்யப் பட்டார். (Indo-Chinese tensions and the ‘mutiny’ causing regime change in Maldives, http://dbsjeyaraj.com/dbsj/archives/4135)

1988 சதிப்புரட்சி முறியடிக்கப் பட்ட பின்னர், இந்தியாவுக்கும், மாலைதீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தான இராணுவ, பொருளாதார உடன்படிக்கைகள், இந்தியாவுக்கே சாதகமாக அமைந்தன. மாலைதீவு அரசு தனது பாதுகாப்புக்காக, நிரந்தரமாக இந்தியாவில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. தனது நலன்களுக்காக படுகொலைகளை செய்யத் தயங்காத இந்திய வல்லாதிக்கம், சதிப்புரட்சிகளையும் திட்டமிடும் என்பது எதிர்பார்க்க முடியாததல்ல. அதிரடியாக நடக்கும் சம்பவங்களால், இறுதியில் யாருக்கு அதிக நன்மை என்று பார்த்தால் புரிந்து விடும். தெற்காசியப் பிராந்தியத்தில் எடுக்கும் நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு நன்மை என்றால், அமெரிக்காவுக்கும் நன்மை உண்டாகும் என்ற நிலைமை காணப்படுகின்றது. அதாவது தெற்காசியாவில் அமெரிக்கா செய்ய வேண்டிய வேலைகளை, இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. (Outsourcing Imperialism?) மாலைதீவுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கும், பூகோள அரசியலுக்குமான தொடர்பு என்ன?

முப்பதாண்டுகள் மாலைதீவுகளை இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த, சர்வாதிகாரி அப்துல் காயூமின் ஆட்சியில், நீண்ட காலமாக சிறை வைக்கப் பட்டிருந்தவர் தான், முஹமட் நஷீத். ஐந்து வருடங்களுக்கு முன்னர், சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக விடுதலையானவர். அதற்குப் பின்னர் நடந்த, முதலாவது ஜனநாயகப் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், பலராலும் "தெற்காசியாவின் மண்டேலா" என்று அழைக்கப் பட்டார். பதவியேற்ற நஷீத், அரசியல் பழிவாங்கல்களை ஒதுக்கி விட்டு, புவி வெப்பமடைதல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தினார். ஏனெனில், ஆயிரக் கணக்கான தீவுக் கூட்டங்களை கொண்ட நாட்டில், பெருமளவு நிலப்பகுதி கடல்மட்டத்தில் இருந்து, ஒன்று அல்லது இரண்டு மீட்டர்களே உயரமானவை. புவி வெப்பமடைதல் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்தால், ஒரு காலத்தில் மாலைதீவுகள் காணாமல் போய் விடும் என்ற அச்சம் நிலவியது. இதனால், புவி வெப்பமடைதலுக்கு காரணமான, காபன் வெளியேற்றத்தை குறைக்கும் திட்டம் மாலைதீவுகளுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப் பட்டது. இது தொடர்பாக கொபன்ஹெகனில் நடந்த மகாநாட்டில், நஷீத் தனது முத்திரையை பதித்திருந்தார்.

அடுத்து வரும் பத்தாண்டுகளில், மாலைதீவுகளில் காபனை (Carbon) வெளியேற்றும் எரிபொருள் பாவனை முற்றாக தடை செய்யப் படும் என அறிவித்தார். அதற்கு மாறாக, காற்றாலை, சூரிய ஒளி ஆகிய வளங்களைக் கொண்டு உற்பத்தியாகும் மின் சக்தியை பயன்படுத்தப் போவதாக அறிவித்தார். (Carbon-neutral goal for Maldives, http://news.bbc.co.uk/2/hi/7944760.stm) ஏற்கனவே அதிபர் மாளிகைக்கான மின்சாரம், சூரிய ஒளி மூலம் உற்பத்தியாகின்றது. ஏழை ஆசிய நாடான மாலைதீவின் முன்னுதாரணம், வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தது. புவி வெப்பமடைதல் பிரச்சாரத்தை, அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. கியாட்டோ, கோபன்ஹெகன், டர்பன் மகாநாடுகளில் அமெரிக்காவின் ஒத்துழையாமை இதனை உறுதி செய்கின்றது.காபன் வெளியேற்றத்தை தடுப்பதில், மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகள் செயலில் காட்டுவது, அமெரிக்காவுக்கு பிடிக்காத விடயம்.
Global warming is a matter of paranoia for Maldives. Maldives has criticised the decision of US president George Bush to reject the Kyoto pact on global warming. China calls the US decision "irresponsible", though it is one of the largest emitters of the global-warming carbon dioxide gas, and Zhu Rongji said in Male that China would work with Maldives on environmental issues.
"It will," said an official, "take China next to nothing to convert an honourable campaign against global warming into an anti-American campaign in Maldives.
(Dhivehi Observer, 07 May 2008)

புவி வெப்பமடைதலை விட, பூகோள அரசியல் மாலைதீவுகளின் சதிப்புரட்சியை தீர்மானித்திருக்கலாம். மாலைதீவுகள், அடிக்கடி செய்திகளில் அடிபடாத, பணக்கார உல்லாசப் பிரயாணிகளின் மனங்கவர்ந்த, அமைதியான சிறிய நாடு. ஆனால், இந்து சமுத்திரத்தில் அதனது அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுக்கும், பிற ஆசிய நாடுகளுக்குமான எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து நடைபெறும் பாதையில் அமைந்துள்ளது. உலகின் பொருளாதாரத்தை, தனது இராணுவ பலத்தினால் அடக்கி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, மாலைதீவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாகின்றது. அந்தப் பொறுப்பு அமெரிக்காவின் விசுவாசியான இந்தியாவிடம் கொடுக்கப் பட்டுள்ளது.
The US is keen for India to hasten construction of the Far Eastern Naval Command in the Andaman Islands, and this was repeated by the chairman of the US joint chiefs, General Henry H. Shelton, who visited India recently.
Specific to the Marao base, the US sent navy chief Dennis Blair to Maldives a month after Rongji's visit to take stock of China's military diplomacy. While the US base in Diego Garcia can launch surprise offensives, the US wants to restrict Chinese presence in the Indian Ocean because of its strategic value.
According to one survey, some $260 billion worth of oil and gas will be shipped through the Indian Ocean by year 2004. The oil route stretching from the Strait of Malacca to the Strait of Hormuz will be at the mercy of any power that dominates the sealanes. A Chinese base in Marao islands puts it in a direct position to influence oil commerce. It is a prospect that daunts India, scares Southeast Asia, and alarms the US.(Dhivehi Observer, 07 May 2008)

தெற்காசிய நாடொன்றில், அது நேபாளம் ஆகட்டும், இலங்கை ஆகட்டும், இந்தியா தலையிட்டு எந்த முடிவை எடுக்கின்றதோ, அது அமெரிக்காவுக்கும் ஏற்புடையது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே, அமெரிக்காவின் ஒப்புதலுடன் தான், இந்தியா ஈழப்போரை முடித்து வைத்தது. இந்த உண்மையை, "அமெரிக்க தாசர்களும், இந்திய விசுவாசிகளும்" கவனத்தில் எடுப்பதில்லை. நெடுமாறன், வைகோ போன்ற "தமிழினத் தலைவர்கள்" கூட, "சீன அபாயம்" வர இருப்பதை சுட்டிக் காட்டித் தான் இந்திய அரசை தலையிடத் தூண்டினார்கள். அவர்களது "சீனத் தடுப்பு கொள்கை" யின் விளைவு, புலிகளின் அழிவுக்கும், தமிழ் இனப்படுகொலைக்கும் இட்டுச் சென்றதை, இங்கே நினைவு கூறத் தேவையில்லை. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வளருவதை தடுப்பதற்காகத் தான், தாம் இறுதிப் போரில் நேரடியாக பங்களித்தாக, இந்திய அரசுத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

"சீனாவைத் தடுப்பதற்கான இந்தியாவின் தலையீடு", இலங்கையில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொண்டது. இன்றைய மாலைத்தீவு சதிப்புரட்சியும், வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை தடுப்பதற்காகவே நடத்தப் பட்டது. முன்னர், சர்வாதிகாரி அப்துல் காயூம் இந்தியாவின் கைப்பொம்மையாக ஆடிக் கொண்டிருந்தார். இருப்பினும் அவரது காலத்திலேயே ஒரு தீவை சீனாவுக்கு குத்தகைக்கு விட சம்மதிக்கப் பட்டது. எதேச்சாதிகார ஆட்சி நடத்தும் ஒருவருக்கு, தனது நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கவில்லை. 2004 ல் ஜனநாயக பொதுத்தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த நஷீத், மாலைத்தீவின் இறையாண்மையை பாதுகாப்பதில் குறியாக இருந்தார். இதனால், தவிர்க்கவியலாது, இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, சீனா போன்ற பிற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவது அவசியம் என்று கருதினார். இன்று உலகில் அதிகளவு எண்ணையை நுகரும் நாடாக மாறி வரும் சீனா, எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பாதையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது. அதனால், "முத்து மாலை திட்டம்" என்ற பெயரில், மாலைதீவை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வரும் நோக்கம் சீனாவுக்கு இருந்தது.
27 July 2001: China has engineered a manner of a coup by coaxing Maldives' Abdul Gayoom government to let it establish a base in Marao. Marao is one of the largest of the 1192 coral islands grouped into atolls that comprise Maldives and lies 40 km south of Male, the capital. (Dhivehi Observer, 07 May 2008)

மேலும் மாலைதீவு அரசு திட்டமிட்டுள்ள "காபன் குறைப்பு பொருளாதாரத்திற்கு" சீனாவின் பங்களிப்பு அவசியமானது. சூரிய ஒளித் தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவை சேர்ந்தவை. இத்தகைய காரணங்களால், சீனாவுக்கும், மாலைத்தீவுக்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்திருக்கலாம். ஆனால், அதுவே அமெரிக்கா, இந்தியாவின் கண்களில் முள்ளாக உறுத்தியது. தற்போது நடந்துள்ள சதிப்புரட்சி, "உள் நாட்டுப் பிரச்சினை" என்று கூறி இந்தியா ஒதுங்குவதற்கும், சதிகாரர்களின் பொம்மை ஜனாதிபதியான வாஹிட் ஹசன் மாலிக்கை அமெரிக்கா அங்கீகரிக்கவும், வேறென்ன காரணம் இருக்க முடியும்?

மாலைத்தீவுகளில் இருந்து சீனாவை விரட்டுவதைத் தவிர, வேறு சில காரணங்களுக்காகவும் சதிப்புரட்சி நடந்திருக்கலாம். ஆயிரக்கணக் கணக்கான தீவுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர். எல்லாத் தீவுகளையும் கண்காணிப்பது, அரசினால் முடியாத காரியம். ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கம் அல்லது, போதைவஸ்துக் கடத்தல் கும்பல், ஒரு தொலைதூரத் தீவை தமது மறைவிடமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே, 1988 ல் நடந்த சதிப்புரட்சி அந்த அபாயம் இருப்பதை எச்சரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில், ஈழப் பிரதேசத்தில் PLOTE இயங்குவதை புலிகள் தடை செய்திருந்தனர். ஆனால், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் PLOTE அமைப்பு கட்டுக் குலையாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அதனால், இலங்கைக்கு அண்மையில் உள்ள மாலைத்தீவுகளை தமது புதிய தளமாக பாவிக்க எண்ணியிருக்கலாம். பிற்காலத்தில், இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஆயுதபாணி அமைப்புகளுக்கும் இந்த எண்ணம் தோன்றலாம். இந்திய அரசு, அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பியது. மாலைத்தீவு மக்கள் மிதவாத இஸ்லாமியர்கள். இருப்பினும், அங்கே சில தீவிரவாத, மத அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் பலம் பெற்று வருகின்றன. 2007 ம் ஆண்டு, மாலே நகரில் குண்டொன்று வெடித்தது. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில், உள்நாட்டு தீவிரவாத அமைப்பு இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. (Tranquillity of Maldives shattered by bomb blast, http://www.guardian.co.uk/world/2007/sep/30/terrorism.travel)

முரண்நகையாக, இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் சக்திகளை அடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பினாலும், நஷீட்டிற்கு எதிரான சதிப்புரட்சியில் அவர்களின் பங்கு அதிகம். ஊழல், வறுமை, போதைவஸ்து, ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விபச்சாரம், போன்ற சமூகச் சீரழிவுகளை காரணமாகக் காட்டி, இஸ்லாமிய அரசியல் சக்திகள் ஆதரவு திரட்டி வந்துள்ளன. கடந்த வருடம், அரசு பல "இஸ்லாமிய விரோத" சுற்றுலா விடுதிகளை மூடியது. தலைநகர் மாலேயில், கடுமையான ஷரியா சட்டம் நடைமுறைப் படுத்தக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. தற்போது எழுந்துள்ள குழப்பமான நிலைமையை பயன்படுத்தி, இஸ்லாமியவாதிகள் ஒவ்வொரு தீவையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றனர். பொது மக்கள் இதற்கெதிராக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர்.
“It’s potentially a tropical Afghanistan. The same forces that gave rise to the Taleban are there — the drugs, the corruption and the behavior of the political class,” a Colombo-based Western ambassador who is responsible for the Maldives told Reuters on condition of anonymity. (Arab News, 11.02.12)

அமெரிக்காவும், இந்தியாவும், தமது நலன்களுக்காக எத்தகைய பிசாசுடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ளன. இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியவாத முஜாஹிதின்களை ஆதரித்தார்கள். கடந்த வருடம், லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த அல்கைதா புரட்சியை ஆதரித்தார்கள். "வெறித்தனமான மதவாதிகள், தேசியவாதிகள்", அவர்களது நண்பர்களாக இருந்துள்ளதை, கடந்த கால வரலாறு பதிவு செய்துள்ளது. இவற்றை விட, உலக பொருளாதார ஆதிக்கம், உலக இராணுவ மேலாண்மை, ஆகியன தான் அவர்களுக்கு முக்கியமானவை. மாலைத்தீவு மக்களின் நலன்களும், ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமே, அவர்களது சுதந்திரத்தை உறுதிப் படுத்தும்.

Friday, October 01, 2010

எகுவடோரில் ஜனநாயக அரசைக் கவிழ்க்க சதி

"ஜனாதிபதியைக் கொல்வதற்கு உங்களுக்கு தைரியமிருந்தால் இங்கேயே இப்போதே என்னை கொலை செய்யுங்கள்." கலகம் செய்த போலிஸ் படையினருக்கு முன்னால் எக்குவடோர் ஜனாதிபதி கொறேயோஸ் ஆற்றிய உரை. ஜனாதிபதி பேசி முடிப்பதற்குள் கலகக்கார பொலிசாரின் கண்ணீர்ப் புகை வீச்சினால் காயமுற்று வைத்தியமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எக்குவடோர் இராணுவம் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஒரு சதிப்புரட்சி தடுக்கப்பட்டது.

எக்குவடோர் போலிஸ், பாதுகாப்புப் படைகள் இதுவரை காலமும் அனுபவித்து வந்த சலுகைகளை இரத்து செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. தாம் அனுபவித்து வந்த வசதிகளையும், சலுகைகளையும் இழக்க விரும்பாத காவல்துறை திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கவிக்க எத்தனித்தது. கலகக்கார போலீசார் விமான நிலையத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர். இருப்பினும் இராணுவம் ஜனாதிபதி பக்கம் நின்றதால், சதிப்புரட்சி பிசுபிசுத்துப் போனது.

எகுவடோரின் மொத்த சனத்தொகையில் அரைவாசி செவ்விந்திய பூர்வீக மக்கள். 2007 ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறிய இடதுசாரி ஜனாதிபதியான கொறேயோஸ், எக்குவடோர் நாட்டை சோஷலிச பாதையில் கொண்டு செல்ல விரும்பினார். அயல் நாடான வெனிசுவேலாவின் பொலிவார் சோஷலிஸ்ட் சாவேசுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். வெனிசுவேலா போலவே எக்குவடோர் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகும். இதனால் நேற்றைய சதிப்புரட்சியின் பின்னணியில் அமெரிக்காவின் கை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் ஜனநாயக விரோத சதிப்புரட்சியை கண்டித்துள்ளனர். இருப்பினும் ஜனநாயக காவலனான அமெரிக்க அரசு மௌனம் சாதிக்கின்றது. இதனை அவதானித்த கியூப வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், "சதிப்புரட்சியை கண்டிக்க முன்வருமாறு" அமெரிக்காவை அழைத்துள்ளார்.

Possible Correa coup involves US meddling?

வெனிசுவேலாவின் சர்வதேச தொலைக்காட்சி சேவையான Telesur எகுவடோரின் கடைசி செய்திகளை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. இங்கேயுள்ள சுட்டியை அழுத்தவும்.