Thursday, May 27, 2010

தாலிபானுக்கு அமெரிக்க அரசு நிதி உதவி!

ஆப்கானிஸ்தானில் எல்லோரும் நம்பும் ஒரு தகவல்: "அமெரிக்கா தாலிபானுக்கு நிதி வழங்குகின்றது!" சாமானியார்கள் மட்டுமல்லாது, உயர் கல்வி கற்ற அறிஞர்களும் அதனை நம்புகிறார்கள். சர்வதேச ஊடக நிறுவனங்களில், ISAF , USAID போன்ற அமெரிக்க அரசு சார்ந்த நிறுவனங்களில், உயர் பதவி வகிக்கும் ஆப்கானியர்கள் கூட அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்களில் அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு ஆலோசனை வழங்குபவர்களும் அடக்கம்!

"ஆப்கான் தேசிய இராணுவம் கைப்பற்றிய தாலிபான் முகாம்களில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள். தாலிபான் கட்டுப்பாட்டு பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் நடைபெறும் வழமையான அமெரிக்க ஹெலிகப்டர் விநியோகங்கள். ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மதராஸாக்களுக்கு கிடைக்கும் அமெரிக்க நிதியுதவி. (அரசு சாரா) தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் உளவுத் தகவல்களை சேகரிக்கும் முகவர்கள். இராணுவம் புக முடியாத பகுதிகளில் உளவுப் பணியில் ஈடுபடுகின்றன."
ஆப்கானிஸ்தானில் அனைவருக்கும் தெரிந்த கதைகள் இவை.

Daniella Peled என்ற பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தானில் பலரிடம் கேட்டு அறிந்தவற்றை Gurdian (Tuesday 25 May 2010 ) பத்திரிகையில் எழுதியுள்ளார். இந்த தகவல்களை உறுதி செய்த அவரது நண்பர் ஒருவர்: "ஆப்கானிஸ்தான் பிரச்சினையை தொடருவதன் மூலம், அமெரிக்கா நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க விரும்புகின்றது. கூட்டுப் படையணிகளுக்கும் தாலிபானுக்கும் இடையில் நடக்கும் முடிவுறாத யுத்தமே அதற்கு சாட்சி." என்றார். காபுல் வானொலி ஊடகவியலாளர் ஒருவரின் கூற்று இது: "(அண்மையில் ஹெல்மன்ட் பிரதேசத்தில் நடந்த யுத்தத்தில்) 15000 சர்வதேச படையணிகளும், ஆப்கான் இராணுவமும் சேர்ந்து சில ஆயிரம் தாலிபானை தோற்கடிக்க முடியாமல் போன காரணம் என்ன?"

அமெரிக்க நலன்களுக்கு காரணம் ஆப்கானிஸ்தான் இயற்கை வளங்களல்ல. அதனுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம். அமெரிக்கா அங்கே ஆதிக்கம் செலுத்துவதன் மூலம், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மீது செல்வாக்கு செலுத்த முனைகிறது. அரபு நாடுகளை பயன்படுத்த அமெரிக்கா இஸ்ரேலை வைத்திருப்பதைப் போல, ஆப்கானிஸ்தானை மாற்ற விரும்புகின்றது. யார் எதிர்காலத்தில் ஆசியாவை கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள் உலகத்தையே கட்டுப்படுத்துவார்கள்.

இந்தக் கருதுகோள் வழக்கமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவுவதைப் போன்ற காழ்ப்புணர்ச்சியின் பாற்பட்ட சூழ்ச்சி கோட்பாடாக தெரியவில்லை. நன்கு கட்டமைக்கப்பட்ட ஆய்வு பொதிந்துள்ளது. "தாலிபானை அழித்தொழித்து விட்டால், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருப்பதற்கு வேறு எந்த காரணமும் கிடைக்காது."

செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க இந்த சுட்டியை சொடுக்கவும்:
Afghans believe US is funding Taliban

1 comment:

Anonymous said...

இது உண்மையாகவும் இருக்கலாம். ஒரு வேளை, ஈழப் போரில் புலிகள் தாக்குப் பிடித்திருந்தால்- இம்மாதிரியான அமெரிக்க உதவிகள் புலிகளுக்கு கிடைத்திருக்கலாம்.