Saturday, May 15, 2010

ஏதென்ஸ் நகரில் பாரிய குண்டுவெடிப்பு!

(Thursday, May 13, 2010) ஏதென்ஸ் நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை (Korydalos - Central Prison of Athens) மதிலின் அருகில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. ஏதென்ஸ் மாநகரம் முழுவதும் குண்டுவெடிப்பின் சத்தம் கேட்டது. குண்டுவெடிப்பு பற்றிய அறிவுறுத்தல்கள் முன்கூட்டியே "Eleftherotypia” என்ற பத்திரிகைக்கும், "Alter TV" என்ற தொலைக்காட்சிக்கும் அனுப்பபட்டிருந்தன. இதனால் ஒரு பெண்மணி மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளானார். சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேத விபரம் தெரியவில்லை. அண்மையில் நடந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அந்த சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறைக் காவலர்கள் கைதிகளை சித்திரவதை செய்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இதற்கிடையே கிரீசின் வடக்கே உள்ள இரண்டாவது பெரிய நகரமான தெஸ்சலோனிக்கியில் உள்ள நீதிமன்றத்தின் அருகிலும் குண்டொன்று வெடித்துள்ளது. (Friday, May 14, 2010) குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து வெகுஜன ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. கிரீஸ் அபாயகரமான நாடாக காட்டப்பட்டால், உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்து விடும் என்பதால் அரசும் எந்த அறிக்கையையும் விடுக்கவில்லை.
Bombenexplosion vor griechischem Gefängnis (in German)

மேலதிக விபரங்கள் தொடரும் ....

வீடியோ 1 : ஏதென்ஸ் சிறைச்சாலை குண்டுவெடிப்பு

வீடியோ 2 : தெஸ்சலோனிக்கி நீதிமன்ற குண்டுவெடிப்பு

No comments: