Friday, April 03, 2020

முதலாளித்துவ வைரஸ் - உலகமயமாக்கப் பட்ட தொற்று நோய்


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்த "முதலாளித்துவ உலகமயமாக்கல்" வேண்டுமென்றே மூடி மறைக்கப் படுகின்றது. உலகமயமாக்கலின் ஆபத்தை மக்கள் அறியாமல் தடுப்பதற்காக, முதலாளித்துவ கைக்கூலிகளால் வேண்டுமென்றே சீனாவுக்கு அல்லது சீனர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் பரப்பப் படுகின்றன. "இது சீனாவின் சதி... திட்டமிட்டு கொரோனா நோயாளிகளை உலகம் முழுவதும் பரப்பியது..." என்பன போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கப் பட்டன. இதன் மூலம் முதலாளித்துவ உலகமயமாக்கலில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி வருகின்றனர். 

பலர் வெகுளித்தனமாக நினைப்பது போல, சீனாவில் இருப்பவர்கள் அனைவரும் சீனர்கள் அல்ல. சீனாவின் பல நகரங்களை, நியூ யோர்க், லண்டன், பாரிஸ் போன்ற மேற்கத்திய நகரங்களுடன் ஒப்பிடலாம். அதாவது பல்லின மக்கள் குடியேறியுள்ள பன்முகக் கலாச்சாரங்களை கொண்ட நகரங்கள். 

உலகில் முதன்முதலாக கொரொனோ நோய்த் தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் வசித்து வந்தனர். அதற்குக் காரணம் அங்கு நிறைய பன்னாட்டுக் கம்பனிகள் தளம் அமைத்துள்ளன. அவற்றில் வேலை செய்ய வந்த பலர் வூஹானில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அவர்களில் பலர் தமது தாயகத்திற்கு திரும்பிச் சென்றிருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் காவிச் சென்றனர் என்பது தெரியாது. 

அமெரிக்காவின் மக்டொனால்ட்ஸ், பெப்சி, ஜெர்மனியின் சீமன்ஸ், பிரான்சின் பேஜோ, சித்ரோயன், சுவீடனின் இகேயா போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் வூஹானில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமே சீனர்கள். நிர்வாக மட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பியர்கள். இந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் சீனர்களை அமர்த்துவதில்லை. அதற்குக் காரணம், அந்த நிறுவனங்களின் தொழிநுட்ப அறிவு ஒரு இராணுவ இரகசியம் போன்று பாதுகாக்கப் படுகின்றது. 




5 comments:

Yarlpavanan said...

வரவேற்கிறேன்

சுரேஷ் said...

அருமையான பதிவு...

சுரேஷ் said...

அருமையான பதிவு...

சுரேஷ் said...

அருமையான பதிவு...

சுரேஷ் said...

அருமையான பதிவு...