Showing posts with label வத்திக்கான். Show all posts
Showing posts with label வத்திக்கான். Show all posts

Friday, October 17, 2014

அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்!


அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்! உங்களது பொது எதிரிகளான உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடாது, மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிரித்து வைத்திருப்பீராக! இனவாதிகளும், தேசியவாதிகளும் ஆண்டவரால் இரட்சிக்கப் படுவீர்கள். ஆமென்!

போப்பாண்டவர் பிரான்சிஸ், ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ச அதே மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. "தேர்தலில் உதவுபவனே உண்மையான நண்பன்!"

வத்திக்கான் திருச்சபையின் வரலாறு நெடுகிலும், போப்பாண்டவர்கள் சர்வாதிகாரிகளுடன் ஒத்துழைத்து வந்துள்ளனர். ராஜபக்சவுக்கு வத்திகானின் ஆசீர்வாதம் கிடைப்பதை எதிர்த்து, எந்தவொரு போலித் தமிழ் உணர்வாளரும் முணுமுணுக்கக் கூட இல்லை. "ஆண்டவரின் மண்ணுலக பிரதிநிதியை" பகைத்துக் கொள்ள விரும்பவில்லை போலும்.

போப்பாண்டவரின் இடத்தில், காஸ்ட்ரோ, ஏவோ மொராலேஸ், அப்பாஸ் இருந்திருந்தால், இந்நேரம் அதைப் பற்றி ஊரெல்லாம் தண்டோரா போட்டு சொல்லித் திரிந்திருப்பார்கள். என்னதான் தமிழ் தேசியவாதி வேடம் போட்டாலும், முதலாளிய வர்க்க பாசம் அவர்களை அறியாமல் தலை காட்டி விடுகின்றது.

கம்யூனிஸ்டுகளை கண்டியுங்கள் என்று சில மேட்டுக்குடி அறிவுஜீவிகள் கேட்கின்றனர். அப்படியே செய்யலாங்க... ஆனால் ஒரு பிரச்சினைங்க... "தொண்ணூறுகளில் கம்யூனிசம் இறுதி மூச்சை விட்டது. புதைகுழிக்குள் சென்று விட்டது..." என்று மெத்தப் படித்த அறிவாளிங்க சொன்னாங்க... அதை எல்லோரும் நம்பிட்டோமுங்க... இப்போது "கம்யூனிச ஆவிகள் நடமாடுகின்றன" என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க... அது எப்படி என்று அறிவுஜீவிகள் மக்களுக்கு விளக்கி சொன்னா நல்லதுங்க...

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி இவற்றைப் பற்றி யாரும் பேசக் காணோம். முழு இலங்கையிலும், வட-கிழக்கு மாகாணங்கள் தான் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையும் அங்கே அதிகம் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு தமிழ் உணர்வாளரும் பேசுவதில்லை. போலி சிங்களதேசியவாதிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அதிகாரத்தை பங்கு போடுவதை பற்றிப் பேசும் பல மணி நேரத்தில், ஒரு துளியாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு செலவளிப்பதில்லை.

தனது நலன்களை மட்டுமே பெரிதாக தூக்கிப் பிடிக்கும், மத்தியதர வர்க்கத்தின் பூர்ஷுவா அரசியலால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு எந்தப் பிரயோசனமுமற்ற வெற்று அரசியல் கோஷங்கள், காலப்போக்கில் அதே மக்களால் நிராகரிக்கப் படும்.

அனைத்து வகை அதிகாரங்களையும், தமிழ் உழைக்கும் மக்கள் கைக‌ளில் குவிப்பதற்காக போராடுவதே உண்மையான தமிழ் தேசியம். அதற்கு மாறாக, தமிழ் முதலாளிகளின் ஆட்சியை கொண்டுவர விரும்புவது போலித் தமிழ்தேசியம் ஆகும்.

Friday, January 25, 2013

வத்திக்கான்: பாசிஸ்டுகளின் முதலீட்டு வங்கி


வத்திக்கான் உலகிலேயே மிகவும் சிறிய "நாடு". அதனை நாடென்று அழைக்க முடியுமா என்பதே சந்தேகம். ஏனெனில், ரோம் நகரத்தில் ஒரு சிறிய பிரிவு தான் வத்திக்கான். அப்படியானால் அதனை எதற்காக தனி நாடு என்று அழைக்கிறார்கள். அதற்கு சரித்திரப் பின்னணி உண்டு. 20 ம் நூற்றாண்டு வரையில், அது உண்மையிலேயே ஒரு தனியான நாடு தான். ரோம் நகரமும், அதனை சுற்றியுள்ள மத்திய இத்தாலியின் சில பகுதிகளும் வத்திக்கானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியில் ஆட்சியை பிடித்த முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகள், வத்திக்கானின் ஆட்சிக்குட்பட்ட  பகுதிகளை இத்தாலியுடன் சேர்த்துக் கொண்டார்கள். அதற்கு பதிலாக, இன்றுள்ள வத்திக்கான் நகரின் சுதந்திரம் அங்கீகரிக்கப் பட்டது. அதாவது இரண்டு அரசியல் சக்திகளும், ஒருவரின் சுதந்திரத்தை மற்றவர் அங்கீகரித்தார்கள். வத்திக்கானுக்கும் பாசிஸ்டுகளுக்கும் இடையிலான உறவுகள் அவ்வாறு தான் ஆரம்பமாகின. இந்த நெருக்கத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. வத்திக்கானுக்கும், பாசிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளை கண்டால் பிடிக்காது. அன்று இத்தாலி இருந்த நிலையில், கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சி வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனை தடுப்பது அவசியம் என்று நினைத்தார்கள். கம்யூனிசத்தை வர விடாமல் தடுப்பதற்காக, வத்திக்கான் உலகம் முழுவதும் தோன்றிய  பாசிச சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டமை ஒன்றும் புதினமல்ல. சோஷலிச கிழக்கு ஐரோப்பாவின் ஒரேயொரு கத்தோலிக்க நாடான போலந்தில் சதி செய்து குழம்ப நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் "கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு" வழிவகுத்ததும் உலகம் அறிந்த விடயங்கள். 

முசோலினி, வத்திக்கானின் சுதந்திரத்தை மட்டும் அங்கீகரிக்கவில்லை. பாசிஸ்டுகள் இத்தாலி மக்களிடம் இருந்தும், எத்தியோப்பியா போன்ற காலனிகளிடம் இருந்தும் கொள்ளையடித்த பெருந்தொகை பணத்தை, பாதுகாப்பாக வத்திக்கானிடம் கொடுத்து வைத்தார்கள். இரண்டாம் உலகப்போரில் பாசிஸ்டுகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், அந்தப் பணம் வத்திக்கானிடம் பத்திரமாக இருந்தது. அதனை அவர்கள் என்ன செய்தார்கள்? பிற ஐரோப்பிய நகரங்களில், அசையா சொத்துக்களில் முதலீடு செய்தார்கள். இலண்டன், பாரிஸ் போன்ற நகரங்களில் மிகவும் செலவு பிடிக்கும் மாவட்டங்களில் உள்ள ஆடம்பர வீடுகளின், அடுக்குமாடி கட்டிடங்களின் உரிமையாளர் வத்திக்கான் என்றால் நம்புவீர்களா? பிரிட்டனில் வெளியாகும் கார்டியன் பத்திரிகை, அது சம்பந்தமான விபரங்களை வெளியிட்டுள்ளது.(How the Vatican built a secret property empire using Mussolini's millions)  

வத்திக்கான் வசம் இருக்கும் முசோலினியின் பணத்தின், இன்றைய மதிப்பு 680 மில்லியன் யூரோக்கள். அதில் ஒரு பகுதி வீட்டு மனைகளில் முதலீடு செய்யப் படுகின்றது. வத்திக்கானுக்கு விசுவாசமான வங்கியாளர்கள் அதனை நிர்வகித்து வருகின்றனர். அனேகமாக அவை வத்திக்கானுக்கு சொந்தமான பினாமி முதலீட்டு நிறுவனங்களாக இருக்கும். Paolo Mennini, மற்றும்  John Varley ஆகியோர் வத்திக்கானுக்கு விசுவாசமான குறிப்பிடத் தக்க முக்கியமான வங்கியாளர்கள் ஆவர். பிரிட்டனின் கத்தோலிக்க வங்கியாளரான John Varley, பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்திருக்கும்  Barclays வங்கியின் தலைமை நிர்வாகி ஆவர். இந்த முதலீடுகளில் கிடைக்கும் இலாபம் எங்கே போகின்றது என்பன போன்ற விபரங்கள் யாருக்கும் தெரியாது. வத்திக்கானும், அதனோடு சம்பந்தப் பட்ட நிறுவனங்களும் இரகசியமாக வைத்திருக்கின்றன. அந்த நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் எதுவும் பகிரங்கப் படுத்தப் படுவதில்லை. சுதந்திரமான கணக்காளர் எவரையும் பரிசோதிக்க அனுமதிப்பதில்லை.  

வத்திக்கானுக்கு சொந்தமான மூலதனம், பல நாடுகளுக்கு  கைமாறியுள்ளது. 1930 ம் ஆண்டு, பாசிஸ்டுகளின் பணம், லக்சம்பேர்க் நாட்டை சேர்ந்த வங்கி ஒன்றின் கணக்கில் வைக்கப் பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், அங்கிருந்து "போரில் நடுநிலை வகித்த" சுவிட்சர்லாந்துக்கு மாற்றப் பட்டது. அதில் ஒரு பகுதி, பின்னர்  அமெரிக்க வங்கிகளிலும் வைப்பிலிடப் பட்டது. லக்சம்பேர்க், சுவிட்சர்லாந்து என்பன, சர்வதேச கறுப்புப் பணத்தை கவரும் நோக்குடன், வரிச் சலுகை வழங்கும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது. முசோலினியின் பணம் வத்திக்கானிடம் இருப்பது, ஏற்கனவே தெரிந்த விடயம் தான். இது சம்பந்தமான விபரங்கள், ஏற்கனவே பல நூல்களில் வெளியாகி உள்ளன. இதை விட, "மதக் கடமைகளுக்கான நிறுவனம்" (IOR) என்ற பெயரில் வத்திக்கானின் உத்தியோகபூர்வ வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. அதன் நிலையான சொத்தின் மதிப்பு  6 கோடி யூரோக்களுக்கு மேல் தேறும். அந்த வங்கியின் நிர்வாகி  Paolo Cipriani, தாங்கள் "மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், கருப்பு பணத்தை பதுக்கி வைக்கும் நாடுகளுடன் தொடர்பு வைப்பதில்லை..." என்று கூறுகின்றார். ஆனால் உண்மை என்ன என்பது கர்த்தருக்கு மட்டுமே தெரியும். அந்த வங்கியில் முப்பத்தி ஐயாயிரம் கணக்குகள் இருப்பதாகவும், அவை யாவும் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க பங்குத் தந்தைகள் போன்றோருக்கு சொந்தமானவை என்றும் கூறுகின்றனர். 

வத்திக்கானின் வங்கியானது உலகிலேயே மிகவும் இரகசியமான வங்கி ஆகும். வத்திக்கானின் வங்கி நிர்வாகிகளில் ஒருவர், 1982 ம் ஆண்டு பாலம் ஒன்றின் கீழ் பிணமாக கண்டெடுக்கப் பட்டார். அது ஒரு கொலையா அல்லது தற்கொலையா என்ற மர்மம் இன்னும் துலங்கவில்லை. வத்திக்கான், சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுகின்றது என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. வத்திக்கான் வங்கி, கிரிமினல்களின் கறுப்புப் பணத்தை வெளுப்பதற்கு உதவுகின்றது என்ற சந்தேகம் ஏற்கனவே இருந்து வருகின்றது. ஏற்கனவே அந்த சந்தேகம் காரணமாக, 23 மில்லியன் யூரோ பெறுமதியான பங்குகள், நீதி அமைச்சின் உத்தரவின் பேரில் முடக்கி வைக்கப் பட்டுள்ளது. அமெரிக்க வங்கியான JP Morgan Chase,  வத்திக்கானின் கணக்கு ஒன்றை மூடி வைத்துள்ளது. போதுமான தகவல்கள் இல்லாத, சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த கணக்கு முடக்கப் பட்டது. 

மேலதிக தகவல்களுக்கு: 
1.How the Vatican built a secret property empire using Mussolini's millions
2.Bank Vaticaan opent de boeken: transparantie en rode cijfers
3.Vaticaan stak miljoenen van Mussolini in geheim vastgoedproject

***********************

வத்திக்கான் தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.வத்திகானை எதிர்த்து இத்தாலியர்கள் ஆர்ப்பாட்டம் 
2.வத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி!
3.கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!
4.கொடுமைக்கார கன்னியாஸ்திரிகளின் துர்நடத்தைகள்

Sunday, February 14, 2010

வத்திகானை எதிர்த்து இத்தாலியர்கள் ஆர்ப்பாட்டம்

இத்தாலியின் தலைநகரம் ரோம் முன்னொருபோதும் காணாத எதிர்ப்பு ஊர்வலத்தை கண்டது. கத்தோலிக்க மத தலைமை நிறுவனமான "வத்திக்கான் எமக்கு வேண்டாம்" என்ற பதாகைகளை ஏந்திய படி பல நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இத்தாலி அரசு ஒவ்வொரு வருடமும் ஒரு பில்லியன் டாலர் மக்களின் வரிப்பணத்தை வத்திக்கானுக்கு வழங்கி வருகின்றது. அண்மைக்காலமாக வத்திக்கான் அரசாங்க அலுவல்களில் தலையிடுவதால் மக்களில் பலர் வெறுத்துப் போய் உள்ளனர். இத்தாலியில் சர்ச்சையை தோற்றுவித்த கருணைப் படுகொலை ஒன்றிற்கு வத்திக்கான் எதிர்ப்பு தெரிவித்தது. இத்தாலி பாடசாலைகளில் சாமிப் படங்கள், மத சின்னங்கள் வைப்பதை நீதி மன்றம் தடை செய்தது. மதச்சார்பற்ற கல்வியை வலியுறுத்திய நீதி மன்ற தீர்ப்பை, வத்திக்கான் கண்டித்திருந்தது.
Anti-Vatican protest hits London
Come and protest at the Vatican’s interference in politics