Showing posts with label நிதி நிறுவனங்கள். Show all posts
Showing posts with label நிதி நிறுவனங்கள். Show all posts

Thursday, May 06, 2010

ஆப்பிரிக்காவில் பிணம் திண்ணும் அமெரிக்க கழுகுகள்

"வறிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன்களை, செல்வந்த நாடுகள் ரத்து செய்ய வேண்டும்." மூன்றாமுலக நாடுகள் மீது கரிசனை கொண்ட, மேற்கத்திய தொண்டு நிறுவனங்களின் அயரா முயற்சிக்கு இறுதியில் பலன் கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்னர், பிரபல பாடகர்கள் இணைந்து "வறுமையை கடந்த காலமாக்குவோம்" என்ற கோஷத்தின் கீழ் இசைக் கச்சேரி நடத்தி உலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்பினார்கள். கச்சேரியின் முடிவில் சில ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை ரத்து செய்வதாக பிரிட்டன் போன்ற செல்வந்த நாடுகள் தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னர் அறிவித்தன. ஏழைகளின் தோழர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ம்ம்ம்...கொஞ்சம் பொறுங்கள்! செல்வந்த நாடுகளின் பெருந்தன்மையைப் பாராட்டுவதற்கு முன்னர் இதையும் கேளுங்கள்!!

செல்வந்த நாடுகள் ரத்து செய்த ஆப்பிரிக்க நாடுகளுக்கான கடன் பத்திரங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கின சில அமெரிக்க நிதி நிறுவனங்கள். (BBC America: Palast Hunts the Vultures ) கடன் பத்திரம் முழுவதும் அவர்கள் கைகளுக்கு வந்த பிறகு, "வல்லூறுகள்" என அழைக்கபடும் நிதி நிறுவனங்கள் தாமே கடனை வசூல் செய்யக் கிளம்பின. அதுவும் தாம் வாங்கிய அடி மாட்டு விலைக்கு அல்ல! பத்திரத்தில் எழுதியிருந்த அசல் கடன் எதுவோ, அதை திருப்பிக் கேட்டார்கள். அதுவும் வட்டியோடு. லைபீரியா போன்ற நாடுகள் உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த காலத்தில், அந்த நாடு செலுத்த வேண்டிய கடனுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். லைபீரியா சார்பில் எந்தப் பிரதிநிதியும் சமூகமளித்திருக்கவில்லை. ஆயினும் லைபீரியா கடனை திருப்பி செலுத்தியே தீர வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. ஏழை மக்களின் ரத்தம் குடித்து உயிர் வாழும் அமெரிக்க கழுகுகளைப் பற்றிய ஆவணப்படங்கள் கீழே.


BBC America: Palast Hunts the Vultures