Thursday, November 12, 2020

கமலா ஹாரிஸ் ஓர் "அமெரிக்க கதிர்காமர்"!

 

- அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி 100 வருடங்களுக்கு பிறகு தான் கமலா ஹாரிஸ் என்ற ஒரு பெண் துணை ஜனாதிபதியாக வர முடிந்துள்ளது. இது அமெரிக்கர்கள் எந்தளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. 

- உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ, இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் 2 தடவைகள் போட்டியிட்டு வென்று பிரதமர் பதவி வகித்தார். இலங்கை வாக்காளர்கள் நினைத்திருந்தால் அவர் பெண் என்பதற்காக நிராகரித்திருக்க முடியும். இந்த விடயத்தில் இலங்கையர்கள் அமெரிக்கர்களை விட முற்போக்காக இருந்துள்ளனர். 

- (குறைந்த பட்சம் ஒரு பொதுத் தேர்தலில் ஆவது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் ஒரு பெண் பிரதமராக வர முடிந்தது. இந்தோனேசியா, துருக்கி ஆகிய முஸ்லிம் நாடுகளில் கூட ஒரு பெண் ஜனாதிபதியாக வர முடிந்தது. ஆனால் அமெரிக்காவில் இன்னும் அது சாத்தியமாகவில்லை. வெட்கக் கேடு!

- ஜனாதிபதித் தேர்தலில் கமலா ஹாரிஸ் மட்டுமல்ல, வேலுப்பிள்ளை பிரபாகரன்  போட்டியிட்டாலும்  பேரினவாதத்திற்கு அடிவருடாமல் உயர்ந்த ஸ்தானத்திற்கு வர முடியாது. அது தான் யதார்த்தம். இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கும்,  இலங்கைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. பொதுவாக, உலகின் எந்த நாட்டை எடுத்தாலும் அது தான் நிலைமை. 

- கமலா தன்னை ஒரு கறுப்பின சிறுபான்மையின மக்களின் பிரதிநிதியாக காட்டிக் கொண்டே அந்த மக்களுக்கு செய்த துரோகத்தை வெளியுலகம் அறியாது. அவர் ஒரு சட்ட வல்லுனராக இருந்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். Black Lives Matter இயக்கத்தை ஆதரிக்காமல் அதை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக, "எதிராளியான" டிரம்ப் அரசின் பக்கம் நின்று, ஒரு விடுதலைக்கான போராட்டத்தை "அர்த்தமற்ற வன்முறை" என்று கண்டித்து வந்தார். 

- இலங்கையில் கதிர்காமர் மாதிரி அமெரிக்காவில் கமலாவும்   பேரினவாதத்திற்கு ஒத்தூதிய படியால் தான் இன்று துணை ஜனாதிபதியாக வந்துள்ளார். ஆகவே, அவர் இனிமேலும் சிறுபான்மையினருக்கு எதிரான தனது துரோக அரசியலை முன்னெடுப்பார். ஏற்கனவே ஒபாமா ஆட்சிக் காலத்தில் கூட கறுப்பின சிறுபான்மையின மக்களுக்கு எதிரான  ஒடுக்குமுறை குறையவில்லை.

- கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக் காலம் ஆரம்பித்ததும் தானே சிறந்த பேரினவாதி என்பதை நிரூபிப்பார். அப்போதும் நமது தமிழர்கள் சிலர் துரோகிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

No comments: