Thursday, April 09, 2015

மாசுபடுத்தும் சீமெந்து தொழிற்சாலையை மூட வைத்த சீன மக்களின் போராட்டம்


சீனா ஒரு முதலாளித்துவ நாடான பின்னர், அங்கு பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. இலாப நோக்கை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படும், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், மேற்கத்திய ஊடகங்களில் வெளிவருவதில்லை.

குவாங்டோங் (Guangdong) நகரில் உள்ள பொலிஸ் நிலையமும், பொலிஸ் கார்களும் மக்களால் அடித்து சேதப் படுத்தப் பட்டன. 

"சீனாவில் சுதந்திரம் இல்லை, சர்வாதிகார ஆட்சி நடக்கிறது" என்றெல்லாம் எமக்குப் போதிக்கும் மேற்கத்திய ஊடகங்கள், இது போன்ற தகவல்களை தெரிவிக்காமல் மறைக்கும் காரணம் என்ன? தங்கள் நாட்டு மக்களும் முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சமா?


குவாங்டொங் நகர சபை அனுமதியுடன், அங்கு ஒரு கழிவுப் பொருட்களை எரிப்பதற்கான உலை (incinerator) கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டிருந்தது. அயலில் உள்ள லங்க்தாங் (Langtang) நகர சபை "China Resources Cement Holdings" நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் செய்திருந்தது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

குறிப்பாக, லங்க்தாங் நகரவாசிகள், தமது குடியிருப்புகளுக்கு மிக அண்மையாக, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆலை கட்டப் படுவதை விரும்பவில்லை. ஏற்கனவே அங்குள்ள சீமெந்து தொழிற்சாலை சுற்றுச் சூழலை மாசடைய வைத்துள்ளது. அதற்கும் மேலாக புதிய உலை சூழலை இன்னும் அதிகமாக மாசு படுத்தும் என்று நம்பினார்கள்.


அயலில் உள்ள இன்னொரு நகரமான லுவோடிங் (Luoding) வாசிகள், உள்ளூர் பாடசாலைகளோடு சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் சீமெந்து ஆலை ஏற்கனவே தமது நீர் நிலைகளையும், வளிமண்டலத்தையும் மாசு படுத்தி விட்டதாக குறைப்பட்டுள்ளனர். இதற்கு மேலும் கழிவுப் பொருட்களை எரிக்கும் உலை வந்தால், அதனால் தமது குடும்பத்தினரின் ஆரோக்கியம் பாதிக்கப் படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். 

ஏப்ரல் 6 ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொலிஸ் அடக்குமுறை பிரயோகித்துள்ளது. கவச உடை அணிந்த பொலிஸ் படையினர், தடியடிப் பிரயோகம் செய்து கலைத்ததுடன், இருபது பேரை கைது செய்துமுள்ளனர். அஹிம்சை வழிப் போராட்டத்தில், பொலிசார் வன்முறை பிரயோகித்த செயலானது பொது மக்களை ஆத்திரமடைய வைத்தது. பொலிஸ் தடியடிப் பிரயோகத்தில் சிறுவர்களும் பாதிக்கப் பட்டனர்.

முதலாளிய நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள பொலிஸ் நடவடிக்கை, தமது நியாயமான போராட்டத்தை உதாசீனப் படுத்தியதை கண்டு பொறுக்க முடியாத மக்கள் கிளர்ந்தெழுந்து, பொலிஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கண்ணில் கண்ட பொருட்களை அடித்து நிர்மூலமாக்கினார்கள்.

மக்கள் எழுச்சி காரணமாக, தொழிற்சாலை அமைக்கும் திட்டம் கைவிடப் பட்டுள்ளது. இது மக்களின் ஒன்று திரண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப் பட வேண்டும்.

அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக, சீன சமூக வலைத் தளங்களில் பிரசுரமான படங்களை இங்கே இணைத்துள்ளேன்.




Wednesday, April 08, 2015

9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி! ரஷ்யா ஆதாரங்களை வெளியிட்டது!

9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி நாடகம். சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யாவால் ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்களுக்கு சொல்லப் பட்டுள்ளன. அநேகமாக ஸ்னோவ்டன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவின் ஆதாரங்கள் அறிவிக்கப் படவுள்ளன.


9/11: RUSSIA PRESENTS EVIDENCE AGAINST US, UK AND ISRAEL CO-CONSPIRATORS & 9/11 WAS AN INSIDE JOB!


********* 


அமெரிக்காவில் அளவுக்கு அதிகமான (கருத்துச்) சுதந்திரம் இருக்கிறதாமே? நியூ யார்க் நகரில் உள்ள புரூக்ளின் பூங்காவில், ஸ்னோவ்டனுக்கு சிலை வைக்கப் பட்டிருந்தது. இனந்தெரியாத சிற்பக் கலைஞர்களினால் இரவோடிரவாக வைக்கப் பட்டிருந்த சிலையை தற்போது பொலிசார் அகற்றி விட்டனர். அதனால், ஸ்னோவ்டன் ஆதரவாளர்கள், முன்பு சிலை இருந்த இடத்தில் ஸ்னோவ்டனின் விம்பம் விழும் ஒளிப்படக் கருவியை பொருத்தியுள்ளனர். 

THERE’S A MASSIVE, ILLICIT BUST OF EDWARD SNOWDEN STUCK TO A WAR MONUMENT IN BROOKLYN
http://animalnewyork.com/2015/theres-a-massive-illicit-bust-of-edward-snowden-stuck-to-a-war-monument-in-brooklyn/


Tuesday, April 07, 2015

ஏன் சர்வதேசம் கென்யா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கண்டிக்கவில்லை?


கென்யாவில் அல் ஷஹாப் தீவிரவாத இயக்கத்தினால், 147 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல், மேற்கத்திய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

அதே நேரத்தில், ஜெர்மன் விங்க்ஸ் விமான விபத்தில் கொல்லப் பட்ட பயணிகள் பற்றி மட்டுமே அதிக அக்கறை கொண்டிருந்தன.

பாரிஸில் சார்லி ஹெப்டோ தாக்குதலில் கொல்லப் பட்டவர்களுக்காக, "Je suis Charlie" என்று பொங்கி எழுந்தவர்கள், கென்யா படுகொலைகள் பற்றி கவலைப் படவில்லை. எந்தவொரு உலக நாட்டின் தலைவரும் அனுதாபம் தெரிவிப்பதற்காக கென்யாவுக்கு செல்லவில்லை.

இத்தனைக்கும், அல் ஷஹாப் என்ற இஸ்லாமிய மதவெறிக் கும்பல், வேண்டுமென்றே கிறிஸ்தவ மாணவர்களை தெரிவு செய்து படுகொலை செய்திருந்தது. அதைக் கண்டித்து மேற்கத்திய கிறிஸ்தவர்கள் யாரும் பொங்கி எழவில்லை. சர்வதேச முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சீறிப் பாயவில்லை.

இந்த சம்பவத்தில் கொன்றவர்களும், கொல்லப் பட்டவர்களும் கருப்பர்கள். அதனால், அவர்களின் உயிர்கள் பெறுமதியற்றவை. இது "ஒற்றுமையற்ற" கருப்பர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சினை என்ற காரணத்தால், "சர்வதேச சமூகம்" (அதாவது வெள்ளையின மேலாண்மை நாடுகள்) பாராமுகமாக இருந்துள்ளன.

"ஏன் எந்தவொரு உலக நாடும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை?" என்று அப்பாவி போலித் தமிழ்தேசியவாதிகள் கேட்கின்றனர். அதற்கும் இது தான் பதில். இலங்கையில் நடந்த ஈழப் போரில் கொன்றவர்களும், கொல்லப் பட்டவர்களும் கருப்பர்கள்.

சிங்கள - தமிழ் இனப் போரானது, ஒரே கருப்பின மக்களுக்கு இடையில், ஒற்றுமையில்லாத காரணத்தினால் நடக்கும் போராகவே மேற்குலகில் கணிக்கப் படுகின்றது. அதனால், வெள்ளையின மேலாண்மை நாடுகள் அது குறித்து கவலைப் படவில்லை. போலித் தமிழ்த் தேசியவாதிகள், இனிமேலாவது உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, April 05, 2015

சமாதானத்திற்கான நோபல் பரிசு வாங்கிய பயங்கரவாதி!


இன்றைய இஸ்ரேல் ஒரு காலத்தில் பிரிட்டனின் காலனிய ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக இருந்தது. 22 July 1946, ஜெருசலேம் நகரில் இருந்த கிங் டேவிட் ஹோட்டல் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. தொண்ணூறு பேர் கொல்லப் பட்ட குண்டுவெடிப்பில் பலியானவர்களில் 28 பேர் பிரிட்டிஷ்காரர்கள், 41 பேர் அரேபியர்கள், 17 பேர் யூதர்கள். 



அந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஹகனா என்ற யூத தீவிரவாத இயக்கம், பிற்காலத்தில் இஸ்ரேலிய இராணுவமாக மாறியது. அதன் தலைவர் மேனாகிம் பெகின் இஸ்ரேலின் ஆறாவது பிரதமரானார். சமாதானத்திற்கான நோபல் பரிசும் பெற்றுக் கொண்டார்! ஏன் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?

*******



இந்தப் படத்தில் உள்ள, மிகவும் கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்திய, சர்வதேச பயங்கரவாத இயக்கத்தின் பெயர் நேட்டோ(NATO). 12 April 1999, செர்பியாவில் பொது மக்கள் பயணம் செய்த ரயில் மீது நடந்த தாக்குதலில், பெண்களும் குழந்தைகளுமாக 14 பேர் கொல்லப் பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலை நடத்திய குற்றவாளிகள், இன்று வரையில் சட்டத்தின் முன்பு நிறுத்தப் படவில்லை. மாறாக பதவியுயர்வு கொடுத்து கௌரவிக்கப் பட்டனர்.

*******


கொலம்பியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படையினரும், இராணுவ ஒப்பந்தக் காரர்களும், 54 பருவ வயது மகளிரை வன்புணர்ச்சி செய்துள்ளனர். பாலியல் வல்லுறவு கொள்வதை வீடியோவில் ஒளிப்பதிவு செய்து விநியோகித்துள்ளனர். ஒரு தடவை, 12 வயது சிறுமியும் அமெரிக்க படையினரால் வன்புணர்ச்சி செய்யப் பட்டார். கொலம்பியாவில் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் அமெரிக்கர்கள் என்பதால், அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

தற்போது கொலம்பிய அரசுக்கும், மார்க்சிய FARC இயக்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கொலம்பியாவில் நீண்ட காலம் நடந்த ஆயுதப்போராட்டம் பற்றி நிபுணர்கள் குழுவொன்று தயாரித்த “Contribution to the Understanding of the Armed Conflict in Colombia” என்ற ஆய்வறிக்கையில் மேற்படி தகவல் எழுதப் பட்டுள்ளது.

Wednesday, April 01, 2015

இஸ்தான்புல் நகரை அதிர வைத்த கம்யூனிச கெரில்லாக்களின் நீதிமன்ற பணய நாடகம்

31 March 2015
துருக்கி, இஸ்தான்புல் நகர நீதிமன்றத்திற்குள் நுளைந்த ஆயுதபாணி நபர்கள், அரச தரப்பு வழக்கறிஞர் Mehmet Selim Kiraz பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு, குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

Revolutionary People's Liberation Party Front (DHKP-C) என்ற கம்யூனிச கெரில்லா இயக்க உறுப்பினர்களே இந்தச் சம்பவத்தில் சம்பந்தப் பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடக்குவதற்காக பொலிஸ் வன்முறை பிரயோகித்த நேரம், Berkin Elvan என்ற 13 வயது சிறுவன், கண்ணீர்ப் புகைக் குண்டு பட்டு காயமடைந்ததால் கொல்லப் பட்டான்.

தற்போது பணயக்கைதியாக பிடித்து வைக்கப் பட்டுள்ள வழக்கறிஞர் அந்த வழக்கில் அரசுக்கு சார்பாக ஆஜராகியுள்ளார். சிறுவனின் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யா விட்டால், பணயக்கைதியை கொன்று விடப் போவதாக, ஆயுதபாணிகள் எச்சரித்துள்ளனர். காவல்துறையை சேர்ந்த நான்கு குற்றவாளிகளின் விபரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவர்களை மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


அரச தரப்பு வழக்கறிஞர், கம்யூனிச கெரில்லாக்களினால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப் பட்டிருக்கும் தகவலை கேள்விப் பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் மறியல் செய்த சமூக ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் இஸ்தான்புல் நகரின் Okmeydani பகுதியில், பெருமளவு இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Okmeydani பகுதியில், கம்யூனிச கெரில்லாக்கள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். சில மணிநேரமாக அந்தப் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பொலிஸ் வர விடாமல், தெருக்களை வழிமறித்து தடையரண்கள் போடப் பட்டிருந்தன.

பணயக் கைதியை விடுவிப்பதற்கு, பொலிஸ் ஆறு மணிநேரமாக பேரம் பேசியதாகவும், இறுதியில் பெரும் பொலிஸ் பட்டாளம் ஒன்று நீதிமன்ற கட்டிடத்தினுள் நுளைந்து ஆயுதபாணிகளை கொன்று விட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பணயக்கைதியான அரச தரப்பு வழக்கறிஞர் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காரணமாக இறந்தார். நீதிமன்ற தாக்குதலை சம்பவம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த, DHKP-C ஆதரவு டிவிட்டர் கணக்குகள் தடை செய்யப் பட்டுள்ளன. 

துருக்கி பத்திரிகை ஒன்று, DHKP-C கம்யூனிச போராளிகளுடன் மேற்படி சம்பவம் பற்றி பேட்டி கண்டு எழுதியுள்ளது:
Interview with the militants: “Our barrels will bring justice”


இது  தொடர்பான முன்னைய பதிவுகள்:
துருக்கியில் கம்யூனிசப் போராளிகள், இனிமேல் ஆயுதங்கள் பேசும்
"துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி