Showing posts with label ஐ.எஸ்.. Show all posts
Showing posts with label ஐ.எஸ்.. Show all posts

Tuesday, May 05, 2020

மொசாம்பிக்கில் திடீரென முளைத்த ஐ.எஸ். இயக்கம்! அமெரிக்கா, இஸ்ரேலின் சதியா?


மொசாம்பிக் வட பகுதியில் உள்ள Cabo Delagado மாகாணத்தில் ஐ.எஸ். ஜிகாதிக் குழுக்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. தமது இயக்கத்தில் சேர மறுத்த 52 இளைஞர்களை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படுகொலை இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்திருந்த போதிலும், இப்போது தான் வெளிவந்துள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக, மொசாம்பிக்கின் வட பகுதியில் "மத்திய ஆப்பிரிக்க இஸ்லாமிய தேசம்" (Islamic State Central Africa Province (ISCAP)) என்ற பெயரிலான ஒரு ஜிகாதி இயக்கத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன. மார்ச் மாதம் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அப்போது நடந்த சண்டையில் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு விழுத்தியதாக வீடியோ வெளியிட்டனர்.

அந்தப் பிரதேசங்களை ஜிகாதிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில், அங்கிருந்த வங்கிக் கிளைகளை கொள்ளையடித்து, அரச கட்டிடங்களுக்கு தீவைத்தனர். மதுபானக் கடைகளை மூடி, அங்கு இஸ்லாமிய ஷரியா சட்டம் பின்பற்றப் பட வேண்டும் என உத்தரவிட்டனர். ஐ.எஸ். சின்னம் பொறித்த கருப்பு- வெள்ளை கொடிகளை பறக்க விட்டனர். அந்தப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்த போதிலும், மக்கள் மத்தியில் ஜிகாதி தீவிரவாதிகளுக்கான ஆதரவு மிக மிகக் குறைவு. அதனால் தான் தமது இயக்கத்தில் சேர மறுத்த 52 இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர்.

மொசாம்பிக்கில் எவ்வாறு இந்த ஐ.எஸ். ஜிகாதிக் குழு திடீரென முளைத்தது? குறுகிய காலத்தில் அரச படைகளை எதிர்த்துப் போரிட்டு குறிப்பிட்ட சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது எப்படி? அதுவும் உள்நாட்டு மக்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியமானது எப்படி?

மொசாம்பிக்கில் திடீர் ஜிகாதிகள் உருவாகக் காரணம் என்ன? இவர்களை திரை மறைவில் இருந்து இயக்கும் உலக நாடுகள் எவை? இஸ்ரேல்? அமெரிக்கா? ஏனெனில் இந்த யுத்தத்திற்கு பின்னால் இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சி மறைந்துள்ளது. அண்மையில் தான் Cabo Delagado மாகாணத்தில் நிறைய எரிவாயு வளம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
ஐ.எஸ். இயக்கம் சிரியாவில் நடந்த போரில் தோற்கடிக்கப் பட்டாலும், அது இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான், லிபியாவில் ஐ.எஸ். இயங்கி வருகின்றது. ஆப்பிரிக்காவில் அண்மையில் பல நாடுகளிலும் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். உரிமை கோரியிருந்தது. மேற்கத்திய நாடுகள் அதைப் பற்றி எந்தக் கவலையுமற்று காணப் படுகின்றன.

Thursday, July 11, 2019

"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்!" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்


"கடுமையான இஸ்லாமிய மதப்பற்று காரணமாக தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்பது ஒரு மாயை. ISIS போன்ற தீவிரவாத இயக்கங்களில் மத நம்பிக்கை இல்லாதிருந்தவர்களும் நிறையப் பேர் சேர்ந்திருந்தனர். குர்ஆனில் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அப்பாவிகளை கொல்லக் கூடாது என்று விளக்கம் அளிப்பதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினையின் வேர் கடந்த கால ஐரோப்பிய காலனிய வரலாற்றில் உள்ளது. தவிர்க்கவியலாமல், நாம் எல்லோரும் அதற்குப் பலியானவர்கள் தான். ஐரோப்பிய காலனிய காலத்தில் இருந்து நீடிக்கும் பிரச்சினைகள் தீர்க்கப் படா விட்டால், மீண்டும் ஐ.எஸ். போன்ற இயக்கம் உருவாவதை தடுக்க முடியாது." இவ்வாறு மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த முன்னாள் ISIS போராளி ஒருவர் பெல்ஜிய நாட்டு பத்திரிகை ஒன்றுடனான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் சிரியாவில் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு தப்பியோடி தாயகம் வந்து சேர்ந்திருந்தார். மொரோக்கோ அரசு கைது செய்து பதினான்கு மாதங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்து விட்டு விடுதலை செய்துள்ளது. அதற்குப் பிறகு முன்னாள் தீவிரவாதிகளுக்கான புனர்வாழ்வு மையத்தில் சமூக சேவகராக செயற்பட்டு வருகிறார். 2017 ம் ஆண்டு, De Morgen பத்திரிகையில் பிரசுரமான பேட்டியை இங்கே சுருக்கமாக மொழிபெயர்த்து தருகிறேன்.

கேள்வி: சிரியாவுக்கு சென்று IS இல் சேர்வதற்கு என்ன காரணம்?

பதில்: அயலவர் மூலம் ஐ.எஸ். இற்கு ஆள் சேர்க்கும் ஒருவரின் தொடர்பு கிடைத்தது.

அதில் சேர்வதற்கு முன்னர் மதத்தை பற்றுடன் பின்பற்றி வந்தாயா?

இல்லை. நான் முன்பு ஒரு கலாச்சார முஸ்லிம். பண்டிகை நாளன்று மட்டுமே பள்ளிவாசலுக்கு சென்று வந்தேன். சில நேரம் ரமலான் நோன்பு பிடித்திருப்பேன். நிச்சயமாக நான் மதத்தை தீவிரமாக பின்பற்றவில்லை. பொதுவாக ஒருவர் இஸ்லாமிய மதநெறிகளில் பற்றுக் கொண்டு தீவிரவாதியாவதில்லை. நானும் அதில் ஈடுபாடு காட்டவில்லை. எனது பிரதானமான நோக்கம் பணமாக இருந்தது. குடும்பத்தில் எனக்கான அங்கீகாரத்தை தேடினேன். நிச்சயமாக IS கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பல வகையான நாடுகளில் இருந்து வந்த பெருமளவு இளைஞர்கள், ஐ.எஸ். இல் மதச் சார்பற்ற காரணங்களுக்காக சேர்ந்துள்ளனர். கடும் மதப்பற்று காரணமாக முஸ்லிம் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்பது ஒரு மாயை.

என்ன காரணத்தால் அவர்கள் தீவிரவாதிகள் ஆனார்கள்?

IS இன் இயங்குதளம் என்னவென்று அப்போதே புரிந்து கொண்டேன். மேற்குலகு மீதான ஆத்திரம். இருப்பினும், மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக என்னை மாற்றிக் கொண்டேன். தினசரி தொழுகைகளிலும், அனைத்து வகை சடங்குகளிலும் கலந்து கொண்டேன். நான் சிரியா போகும் விடயத்தை வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும், தங்கைக்கும் சொல்லவில்லை. மொரோக்கோவின் இன்னொரு நகரத்தில் சுற்றுலா மையம் ஒன்றில் வேலை கிடைத்திருப்பதாக கூறினேன்.

அப்போது எனக்கு 28 வயது. பிரயாண முகவர் எமக்கான விசா, மொபைல் தொலைபேசி, கொஞ்சப் பணம் எல்லாம் கொடுத்திருந்தார். துனிசியா வழியாக பிரயாணம் செய்தோம். துருக்கி- சிரியா எல்லையை அடையும் வரையில் எல்லாம் நல்ல படியாக நடந்தது. எல்லையை அடைந்ததும் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அங்கு ஓர் ஐ.எஸ். போராளியும், கட்டார் எல்லைக் காவலரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை கண்டேன். துருக்கி படையினரும் ஐ.எஸ். இயக்கத்துடன் நல்ல நட்புறவில் இருந்தனர். அந்த நேரத்தில் ஐ.எஸ். இற்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்தது. மற்றொரு பக்கத்தில் ஐ.எஸ். உடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்தார்கள்.

நான் ராக்கா நகருக்கு வந்து சேர்ந்தேன். ஒரு பெரிய வீட்டில் பிற மொரோக்கோ நாட்டுக்காரருடன் சேர்ந்து தங்கி இருந்தேன். வாரத்திற்கு ஒரு தடவை ஊருக்கு தொலைபேசி எடுத்துக் கதைத்தேன். இரண்டு மாதங்களுக்கு நான் இத்தாலியில் இருப்பதாக பொய் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு உண்மையை சொல்லி விட்டேன். அதற்குக் காரணம், ஒரு துனிசிய போராளியின் தலையை வெட்டிய சம்பவத்தை கண்ட பின்னர் மனம் மாறி விட்டேன். IS கட்டுப்பாட்டை மீறி பொருட்களின் விலையை நிர்ணயித்த கடைக்காரர் ஒருவரின் கையை வெட்டுமாறு அந்தப் போராளிக்கு உத்தரவிட்டனர். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே தலையை துண்டித்து விட்டார்கள். நான் சிரியாவில் நிற்கும் உண்மையை அம்மாவுக்கு சொன்ன பிறகு, அவர் கடும் நோய் வாய்ப்பட்டு விட்டார். அதற்காக இன்று வரையில் தங்கை என்னை மன்னிக்கவில்லை.


உங்களுக்கு அங்கே என்ன நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரியாதா? ராக்காவில் என்ன செய்தாய்?

இரண்டு மாதங்கள் முகாமில் தங்கியிருந்து இராணுவப் பயிற்சி பெற்றேன். அதற்குப் பிறகு கலாச்சாரக் கண்காணிப்புப் பொலிஸ் வேலையில் விட்டார்கள். அந்த வாழ்க்கை பரவாயில்லை. இரு மாதங்களுக்குப் பின்னர் எனக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்றில் தற்கொலைப் படையில் "விரும்பிச்" சேர்வது, அல்லது மரண தண்டனைக்கு உள்ளாவது. அதைக் கேள்விப்பட்டதும் அங்கிருந்து தப்பியோடி விட்டேன். என்னிடம் இருந்த சம்பளப் பணத்தை வைத்து ஒரு மனிதக் கடத்தல்காரரை பிடித்தேன். அவர் என்னையும், வேறு சில சிரியாக்காரர்களையும் எல்லை கடந்து கூட்டிச் சென்றார். நான் 15 செப்டம்பர் 2015 தப்பியோடும் வரையில், அங்கிருந்த 1.500 மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த போராளிகளில் 250 பேர் போரில் கொல்லப் பட்டு விட்டனர். முப்பது பேர் தற்கொலைப் படையில் சென்று செத்துள்ளனர்.

நான் அல்ஜீரியா ஊடாக மொரோக்கோ வந்து சேர்ந்த நேரம் பொலிஸ் கைது செய்தது. பதினான்கு மாதங்கள் சிறையில் இருந்தேன். கொலைக்குற்றம் செய்திருந்தால் நீண்ட காலம் சிறைத்தண்டனை விதித்திருப்பார்கள். நான் அங்கு யாரையும் கொலை செய்யவில்லை. ஆனால், சவுக்கால் அடித்திருக்கிறேன்.


சிரியாவுக்கு போவதற்கும் பணம் தான் காரணம் என்றால், எவ்வளவு சம்பாதித்திருப்பாய்?

ராக்காவில் ஒரு ஐ.எஸ். போராளிக்கு 2.500 யூரோக்கள் சம்பளம் கொடுத்தார்கள். திருமணம் முடித்திருந்தால் மேலதிக கொடுப்பனவு உண்டு. அந்த சம்பளத்தை மொரோக்கோவில் எந்தக் காலத்திலும் சம்பாதிக்க முடியாது.


இளைஞர்கள் இஸ்லாமிய தேசம் என்று சொல்லப்படும் அமைப்பில் இணைவதற்கு பணம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. உன்னை உந்தித் தள்ளியது எது?

IS ஒரு மூடப்பட்ட மதக் குழு (sect) போன்று இயங்கியது. ஆரம்பத்தில் அதனை ஆயுதமேந்திப் போராடும் விடுதலை இயக்கம் என்று காட்டினார்கள். ஆனால், உண்மையில் அது ஒழுங்கமைக்கப் பட்ட கொடூரமான பயங்கரவாத இயக்கம் என்பது பின்னர் தெளிவாகத் தெரிந்தது.

சிரியாவில் உள்ள IS இயக்கப் போராளிகள், ஆதரவாளர்களின் கோபாவேசமும், வன்முறையும் வரலாற்றில் இருந்து பிறக்கின்றது. ஒரு பயங்கரவாதக் குழு, ஒரு சில தேர்ந்தெடுத்த குரான் வசனங்களை பிழையாக பாவிப்பதன் காரணமாக பலர் அதில் சேர்வதாக நினைப்பது தவறு. மத்திய கிழக்கில் மேற்குலகின் தலையீடு தான் பலர் IS சார்பு நிலை எடுப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

வரலாற்றை இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதியாக பார்க்கப் பட வேண்டும். அதன் மூலம் IS பல்லாயிரம் இளைஞர்களின் மனங்களை கவர்கிறது. ஏற்கனவே சரித்திரத்தில் நடந்த சம்பவங்களை தேர்ந்தெடுத்து அதை ஓர் இனத்தின் ஒட்டுமொத்த அவலமாக சித்தரிக்கிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட "நாங்கள், அவர்கள்" எனும் பிரச்சாரம். அதாவது, தீவிரமான அடையாள அரசியல். ஆனால், அடிப்படையில் வரலாறு ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. உதாரணத்திற்கு, பிரான்சும், ஸ்பெயினும் மொரோக்கோவில் செய்த அட்டூழியங்களை எடுத்துப் பாருங்கள். ஸ்பானிஷ் சர்வாதிகாரி Primo de Rivera, பிரெஞ்சு ஜெனரல் Hubert Lyautey ஆகியோரின் பொறுப்பில் நடந்த இரசாயன தாக்குதல்கள் பற்றிய விபரங்களும் சரித்திர பாடநூல்களில் எழுதப் பட வேண்டும் அல்லவா?

உலகில் முஸ்லிம்கள் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற வரலாற்றுக் கதைகள்  IS இயக்கத்திற்கு மிக முக்கியமானது. ஒரு குழுவாக சேர்ந்து இயங்கும் மனப்பான்மை, இதனுடன் ஐ.எஸ்.க்கு எதிராக போரிடும் அரசுகள், இராணுவங்களின் நடவடிக்கைகளும் மிகுதிக் காரணங்கள். அதாவது, ஒடுக்கப்பட்டோர் என்ற உணர்வு தான் எதிரிக்கு எதிராக போரிடுவதற்கு முக்கியமான தேவை. IS பார்வையில் மேற்கத்திய நாட்டவருக்கும், அந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. ஒன்றில் நீ எங்களுடன் இருக்கிறாய், அல்லது எங்களுக்கு எதிராக இருக்கிறாய். ஐ.எஸ். உடன் சேர்ந்து போரிடாதவர்கள் துரோகிகளாக கருதப் படுகின்றனர்.

இயக்கத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுப்பவரிடம் யுத்தத்தில் பாதிக்கப் பட்ட  அப்பாவி மக்களின் அவலங்களைக் காட்டும் வீடியோக்கள் இருக்கும். பொஸ்னியாவில் இரத்தக் காயங்களுடன் கிடக்கும் உடல்கள், ஈராக்கில் வன்புணர்ச்சிகுள்ளான சிறுவர்கள், அபு கிரைப் சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப் பட்ட ஆண்கள், காசா மீதான குண்டுவீச்சுகள்... இவை என்னிலும் மன உளைச்சலை உண்டாக்கின. முஸ்லிம்கள் மீதான கொலை, சித்திரவதை, அழிவைக் காட்டும் படங்கள் எனது கண்களில் நிறைந்திருந்தன. அது என்னை ஆத்திரப்பட வைத்தது.

அது ஓர் உளவியல் சித்திரவதையாக இருந்தது. அத்துடன் உணர்வை தட்டி எழுப்பும் வகையில்; "அவர்கள் எங்களுக்கு என்ன கொடுமைகள் செய்கிறார்கள் என்று பார்த்தாயா? அதற்கு எதிராக நீ என்ன செய்யப் போகிறாய்? சும்மா பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா?" என்று கேட்டார்கள். அத்துடன் சொந்த நாட்டில் நிலவும் பின்தங்கிய சமூக- பொருளாதாரம் காரணமாக எதிர்காலம் சூனியமாக இருந்த நிலைமை, நல்ல குடும்பத்தில் வளர்ந்து, உயர்கல்வி கற்றிருந்த என்னையும் ஐ.எஸ். இல் சேர உந்தித் தள்ளியது. IS என்பது ஒரு பனிமலையின் வெளித்தெரியும் சிகரம் மட்டும் தான்.


மேற்குலகமும் மொரோக்கோ அரசும் ஐ.எஸ். இற்கு எதிரான போரில் சரியான பாதையில் செல்கின்றனவா?

குர்ஆனில் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அப்பாவிகளை கொல்லக் கூடாது என்று விளக்கம் அளிப்பதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. சில இளைஞர்களுக்கு மதத்தில் எந்த ஆர்வமும் கிடையாது. ஆனால், சமூகத்தில் தமக்கு ஓர் அந்தஸ்தை தேடுகிறார்கள். அவ்வளவு தான். அதை விட, தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மொரோக்கோ அரசு சரியான பாதையில் செல்வதாக நான் நினைக்கிறேன்.


இப்போது என்ன செய்கிறாய்?

முன்னாள் ஜிகாதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக இமாம், சமூகவியலாளர், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து செயற்பட்டு வருகிறோம். நாங்கள் மாதத்திற்கு ஒரு தடவை இரகசியமான இடத்தில் சந்திப்பதுடன், பெற்றோருக்கும், இளைஞர்களுக்குமான வேலைத் திட்டங்களையும் ஒழுங்கு படுத்துகிறோம். "இஸ்லாத்திற்கு ஆதரவு, ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு" எனும் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றோம். இளைஞர்களை சுயமாக சிந்திக்க வைக்கிறோம். சொர்க்கத்தில் எழுபது கன்னிகளின் கதை சாத்தியமானதா என்று யோசித்து அறிந்தால் அதையெல்லாம் யார் நம்பப் போகிறார்கள்?

ஆனால், சிரியா, ஈராக்கில் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், IS போன்ற இயக்கங்கள் அதை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது சொந்த நலன்களை பாதுகாக்கும் ஆட்சி அதிகாரம் நீண்ட காலம் நிலைக்காது என்பதை உணர வேண்டும். ஒரு புதியதொரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரல் கொண்டு வரப் பட வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மறுசீரமைக்கப் பட வேண்டும். 


(டச்சு மொழியில் உள்ள பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Ex-jihadi getuigt: "Veel jongeren hebben niet-religieuze motieven om zich bij IS aan te sluiten")

Friday, December 16, 2016

அலெப்போவின் முள்ளிவாய்க்கால்


சிரியாவின் மிகப்பெரிய தொழில்துறை நகரமான, இலட்சக் கணக்கான மக்கட்தொகை கொண்ட அலெப்போ, ஐந்து வருடங்களாக கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அது ரஷ்ய விமானக் குண்டுவீச்சுகளின் பின்னர், சிரிய அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது. சிரியாவின் ஐந்தாண்டு கால உள்நாட்டுப் போரில் இது ஒரு பெரிய திருப்புமுனை என்று கருதப் படுகின்றது. அதாவது, உள்நாட்டுப் போரின் இறுதியில் வெல்லப் போவது யார், தோற்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அலெப்போ யுத்தம் இருந்துள்ளது.

சிரியாவில், குறைந்தது ஒரு டசின் இயக்கங்கள் சிரிய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுகின்றன. அவற்றிற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன. அனேகமாக எல்லா "விடுதலை" இயக்கங்களும், அல்கைதா அல்லது ஐ.எஸ். பாணியில் அமைந்த, இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் தான். சுன்னி முஸ்லிம் சமூகத்தினரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய அந்த இயக்கங்கள், ஏற்கனவே தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும், ஷியா முஸ்லிம்களையும் இனச் சுத்திகரிப்பு செய்து விட்டன. (சிரியா அடிப்படையில் ஒரு பல்லின கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் குழுமங்களின் தேசம்.)

உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில், சிரிய இராணுவம் ஆட்பலம், ஆயுதபலம் குறைந்திருந்த படியால், அலெப்போ போன்று பல பிரதேசங்களை கைவிட்டு விட்டு ஓடிக் கொண்டிருந்தது. கிளர்ச்சிக் குழுக்களினால் கைது செய்யப் பட்ட, அல்லது அவர்களிடம் சரணடைந்த சில நூற்றுக் கணக்கான படையினர் பொது இடங்களில் கழுத்து வெட்டிக் கொல்லப் பட்டனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப் பட்டிருந்தன.

சரணடைந்த சிரியப் படையினர் மட்டுமல்ல, ஷியா, கிறிஸ்தவ மற்றும் பல சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்களும், "தவறான இனத்தில் பிறந்த காரணத்தால்" படுகொலை செய்யப் பட்டனர். வாழ்வா, சாவா போராட்டத்திற்கு மத்தியில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, சிரிய இராணுவத்தினரும், சிறுபான்மை சமூகத்தினரும் அதிபர் ஆசாத் தலைமையின் கீழ் அணிதிரண்டனர். அப்படியானவர்களுக்கு ஆசாத் மீதான விசுவாசத்தை விட, தாம் சார்ந்த சமூகங்களின் பாதுகாப்பு முக்கியமாகப் பட்டதால் போர் தீவிரமடைந்தது. கிறிஸ்தவ, ஷியா, அலாவி போன்ற சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த வீரர்களை கொண்ட National Defence Force (NDF) என்ற ஊர்காவல் படைகள் சிரிய இராணுவத்தின் பக்கம் நின்று போரிட்டன.

இதற்கிடையே லெபனான் ஹிஸ்புல்லாவும் ஆசாத்திற்கு உதவியாக வந்தது. லெபனானில் எண்பதுகளில் நடந்த தசாப்த கால உள்நாட்டுப் போரில், சிரிய அரசு ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்தை ஆதரித்திருந்தது. அந்த செஞ் சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக, ஆயிரக் கணக்கான ஹிஸ்புல்லா போராளிகள் தொண்டர் படையணியாக சிரியா போர்க்களத்தில் குதித்தனர். அவர்களுடன் ஷியா முஸ்லிம்களின் வல்லரசாக கருதப் படும் ஈரானும், தன பங்கிற்கு இராணுவ ஆலோசகர்களை அனுப்பி இருந்தது. இவர்கள் எல்லோரும் அலெப்போ யுத்தத்தில் பங்கெடுத்திருந்தனர்.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக் குழுக்கள் எவை? 
மேற்குலகால் ஆதரிக்கப் பட்ட அந்தக் கிளர்ச்சிக் குழுக்களின் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுன்னி முஸ்லிம் சமூகத்தினர். சிரியாவில் மதத்தால் முஸ்லிமாக இருந்தாலும், சுன்னி, ஷியா, அலாவி என்று ஒவ்வொரு முஸ்லிம் மதப் பிரிவினரும் தம்மை தனித் தனியான இனமாக கருதிக் கொள்கிறார்கள். ஆகையினால், இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுக்கள் கடுமையான மதக் கட்டுப்பாடுகளை சுன்னி- முஸ்லிம் பிரிவினர் மீது திணித்து வந்தன. மது பாவனை தடை செய்யப் பட்டது. இசைத்தட்டில் பாடல்கள் கேட்பது கூட தடை செய்யப் பட்டது. பெண்கள் முகத்தை மூடும் கருநிற அங்கி அணிய கட்டாயப் படுத்தப் பட்டனர்.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும், இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்திற்கும் இடையில் பெரிய கொள்கை வேறு பாடு எதுவும் கிடையாது. ஐ.எஸ். இயக்கம், சுன்னி- முஸ்லிம் சமூகத்தவரின் ஏக பிரதிநிதி தான் மட்டுமே என்று உரிமை கோருகின்றது. ஏனைய இயக்கங்களை "துரோகக் குழுக்கள்", "ஒட்டுக் குழுக்கள்" என்று குற்றஞ் சாட்டி தடை செய்துள்ளது. இதனால் அடிக்கடி சகோதர யுத்தங்கள் நடந்துள்ளன.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இயக்கங்கள் பற்றிய விபரம்:

1. சுதந்திர சிரிய இராணுவம்
சிரிய இராணுவத்தில் இருந்து வெளியேறிய சுன்னி- முஸ்லிம் அதிகாரிகள், படையினர் உருவாக்கிய இயக்கம். அவர்களை "நல்ல போராளிகள்" என்று முத்திரை குத்தி, அமெரிக்கா நேரடியாக உதவி செய்து வந்தது. மேற்கத்திய ஊடகங்களில் அவர்கள் "மிதவாதிகளாக" காட்டப் பட்டனர். ஆனால், நடைமுறையில் சுதந்திர சிரிய இராணுவம் கூட இன்னொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் தான். மொத்தப் போராளிகளின் எண்ணிக்கை முப்பதாயிரம் இருக்கலாம். ஆனால், அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்திருக்கிறார்கள். உண்மையில் சுதந்திர சிரிய இராணுவம் என்பது பல குழுக்களின் ஐக்கிய முன்னணி. அதற்கென பொதுவான தலைவர் எவரும் இல்லை.

2. நூர் அல் டின் அல் சென்கி (Nour al-Din al-Zenki)
மிகச் சிறிய இயக்கம். போராளிகளின் மொத்த எண்ணிக்கை 1500 இருக்கலாம். மத அடிப்படைவாத ஜிகாத்திற்காக போராடும் இந்த இயக்கத்திற்கு சி.ஐ.ஏ. நேரடியாக ஆயுதங்களை கொடுத்துதவி வந்தது! நிச்சயமாக, தாம் ஒரு ஜிகாதி இயக்கத்திற்கு உதவினோம் என்ற உண்மையை அமெரிக்கா வெளியில் சொல்லப் போவதில்லை. சில மாதங்களுக்கு முன்னர், சிரிய அரசுக்கு ஆதரவாக பேசிய குற்றத்திற்காக ஒரு 12 வயது சிறுவனை கழுத்து வெட்டி கொலை செய்த கோரக் காட்சி வீடியோ பதிவாக வெளியாகி உலகம் முழுவதையும் உலுக்கி இருந்தது. அந்தக் குரூரச் செயலை செய்த பெருமை இந்த இயக்கத்தை சேரும்.

3. அஹ்ரர் அல் ஷாம் (Ahrar al-Sham)
ஆப்கானிஸ்தனில் தாலிபான் செய்தது போல, சிரியா முழுவதையும் இஸ்லாமிய மயமாக்க விரும்பும் கடும்போக்கு இயக்கம். 2014 ம் ஆண்டு வரையில் ஐ.எஸ்.சுடன் சேர்ந்து இயங்கி வந்தது. ஆனால், ஐ.எஸ். காரர்கள் இந்த இயக்கத்தின் போராளிகள் சிலரை சுட்டுக் கொன்ற படியால் பிரிந்து சென்று தனியாக இயங்கியது. ஐ.எஸ். சிரியாவுக்கும் அப்பால், உலகம் முழுவதும் இஸ்லாமியப் புரட்சியை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. அதற்கு மாறாக அஹ்ரர் அல் ஷாம் சிரியாவுக்குள் நின்று கொள்கிறது. மொத்தப் போராளிகளின் எண்ணிக்கை இருபதாயிரம் இருக்கலாம்.

4. பதே அல் ஷாம் (Fateh al-Sham)
மிக முக்கியமாக, அல்கைதாவுடன் தொடர்புடைய இயக்கம் இது தான். அல் நுஸ்ரா என்றால் எல்லோருக்கும் தெரியும். அண்மைக் காலத்தில் தான் பதே அல் ஷாம் என்று பெயர் மாற்றியது. தீவிரவாதம் இல்லாத, மிதவாத இயக்கமாக காட்டுவது அதன் நோக்கம். இதன் மூலம் சர்வதேச ஆயுத, நிதி உதவி கிடைக்கும் என்று கணக்குப் போட்டது. நீண்ட காலமாக, அல்நுஸ்ராவுக்கும், ஐ.எஸ். இற்கும் அடிக்கடி சகோதர யுத்தம் இடம்பெற்று வந்தது. இத்தனைக்கும் இரண்டுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் கிடையாது. அல்நுஸ்ராவும் இஸ்லாமிய நாடுகளில் எல்லாம் ஜிகாத் போராட்டம் நடத்துவதை குறிக்கோளாக கொண்ட இயக்கம் தான். அதனால் சர்வதேச தொண்டர்களின் உதவியும் கிடைத்திருந்தது. பல உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான இஸ்லாமிய இளைஞ்ர்கள், சிரியாவுக்கு போராடச் சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் அல் நுஸ்ராவிலும், இன்னொரு பகுதியினர் ஐ.எஸ். இலும் சேர்ந்தனர். எதிர்பாராத விதமாக அவ்விரண்டு இயக்கங்களின் சகோதர யுத்தத்டிற்குள்ளும் அகப்பட்டுக் கொண்டனர்.

அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர், சிரிய அரச படையினரின் அடுத்த கட்ட படை நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பதே கேள்விக்குறி. தற்போது அதற்கு முன்னால் இரண்டு தெரிவுகள் உள்ளன. வட மேற்கில், அலெப்போவில் இருந்து வெளியேறிய கிளர்ச்சிக் குழுக்கள் இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இடிலிப் பிரதேசம். மற்றது, வட கிழக்கில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள ராக்கா பிரதேசம்.

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதி நாலாபுறமும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. அந்நிய நாடுகளுடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்டு விட்டன. அதனால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம். ஆனால், துருக்கி எல்லையோரம் உள்ள இடிலிப் என்ற நாட்டுப்புறப் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கே சனத்தொகை குறைவு. ஆனால், துருக்கி ஊடாக கிடைக்கும் உதவிகளை தடுத்து நிறுத்துவதற்கு அந்தப் பகுதியையும் கைப்பற்றுவது அவசியம்.

போருக்குள் அகப்பட்ட பொது மக்களின் நிலை என்ன? நிச்சயமாக பொது மக்களில் கணிசமான அளவு பிரிவினர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக போராளிகளின் குடும்பத்தினர் இறுதி வரையில் இயக்கங்களோடு இருந்தனர். அலெப்போ நகரின் பகுதிகளை அரச படைகள் சிறிது சிறிதாக கைப்பற்றிக் கொண்டிருந்த நேரம், இயக்கப் போராளிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். மக்களும் அவர்களோடு இழுபட்டுச் சென்றனர். தற்போது அனைவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து விட்டனர். பத்தாயிரத்திற்கும் அதிகமான போராளிகள் சரணடைந்துள்ளனர்.

அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர் நடந்ததாக சொல்லப் படும் படுகொலைகள், பாலியல் பலாத்காரம் பற்றிய தகவல்கள் உண்மையா? போரில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் அந்தத் தகவல்கள் யாவும் கிளர்ச்சி இயக்கங்களின் ஆதரவாளர்களிடம் இருந்தே வருகின்றன. அவை எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது கேள்விக்குறி தான். அவை சுதந்திரமான ஊடகவியலாளரால் உறுதிப் படுத்தப் படவில்லை. (இது மேற்குலக அணுகுமுறை)

உண்மையில் போர் நடந்த இடத்தில் எந்தவொரு மேற்கத்திய ஊடகவியலாளரும் இருக்கவில்லை. இருப்பினும், பிரித்தானியாவிலும், துருக்கியிலும் உள்ள சிரிய கிளர்ச்சியாளரின் ஊடக மையங்கள் மட்டுமே தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அவை வெளியிடும், ஒரு பக்கச் சார்பான தகவல்களுக்கு மேற்குலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. மறுபக்கத்தில், சிரிய அரச ஊடகங்களும், ரஷ்ய ஊடகங்களும் கூட ஒரு பக்கச் சார்பான தகவல்களை மட்டுமே வெளியிடுகின்றன. அவற்றில் உண்மை எது, பொய் எதுவென்பது யாருக்கும் தெரியாது.

கிளர்ச்சிக் குழுக்கள் மட்டுமல்லாது, மேற்குலகமும் எதிர்பார்த்திராத அலெப்போவின் வீழ்ச்சி ஒரு பெரிய அதிர்ச்சி. இறுதி நேரத்தில் முற்றுகையை விலக்கிக் கொள்ளுமாறு ரஷ்யா ஊடாக அழுத்தம் கொடுத்தும் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை. ஆகையினால், இனி வருங்காலத்தில் ஆசாத் அரசு மீது போர்க்குற்ற விசாரணை கொண்டு வருவதற்காக தற்போதே படுகொலைகள் பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது.

உண்மையில் சில சரணடைந்த போராளிகளும், இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கிய மக்களில் சிலரும், அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப் படலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. போர்க்குற்றங்கள் நடந்திருக்கலாம். இல்லையென்று மறுக்க முடியாது. ஆனால், இவ்வளவு காலமும், மேற்குலகம் பயங்கரவாதிகளாக சித்தரித்த, மத அடிப்படைவாத வன்முறைக் கும்பல்களின் ஆட்சி நடந்த நேரம், அங்கு நடந்த குற்றங்கள் பற்றி யாரும் கவலைப் படவில்லை. மேற்குலகின் முக்கியமான பிரச்சினை "இஸ்லாமியப் பயங்கரவாதம்" அல்ல!

சிரிய அரச படைகளினால் அலெப்போ முற்றுகைப் போர் ஆரம்பமான போதே, கிளர்ச்சிக் குழுக்களை காப்பாற்றுவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்தன. ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தைகள், யுத்த நிறுத்தம் என்று காலம் கடத்தி வந்தன. ஆனால், அந்தத் தந்திரம் பலிக்கவில்லை.

தோல்வியின் விளிம்பில் நிற்கும், கிளர்ச்சிக் குழுக்களில் உள்ள போராளிகள் அலெப்போ வீழ்ச்சியின் பின்னர் மனமுடைந்து காணப்படுகின்றனர். உண்மையில், இறுதியாக நடந்த போரில் அவர்களை வெளியேற்றுவதற்காக போர் நிறுத்தம் கொண்டுவரப் பட்டது. அரச படைகளும் அதற்கு உடன்பட்டன. அல்கைதாவுடன் தொடர்புடைய எண்ணாயிரம் போராளிகளும் மேற்குலக உதவியுடன் வெளியேற்றப் பட்டதாக அரச படைகள் தெரிவிக்கின்றன. அவர்களைத் தான், மேற்குலக ஊடகங்கள் "பதே போராளிகள்" என்று குறிப்பிடுகின்றன. அது அல்நுஸ்ரா இயக்கம் என்பதை மறைக்கின்றன.

மேற்குலக நாடுகள் மற்றும் செஞ் சிலுவைச் சங்கம் போன்றவற்றின் தலையீடு காரணமாக, கிழக்கு அலெப்போவில் இருந்து வெளியேறும் பொது மக்களையும், போராளிகளையும் கொண்டு செல்வதற்கு பேருந்து வண்டிகள் அனுப்பப் பட்டன. அவர்களை இடிலிப் பிரதேசத்தில் கொண்டு சென்று விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கிளர்ச்சிக் குழுக்கள் பொது மக்களை தம்மோடு பணயக் கைதிகளாக பிடித்துச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அதை உறுதிப் படுத்த முடியவில்லை. போராளிக் குடும்பங்கள், இயக்க ஆதரவாளர்கள் ஆகிய பொது மக்களும் அவர்களுடன் செல்லக் கூடும். அவர்களைத் தவிர ஏனைய மக்கள் பலவந்தமாக கொண்டு செல்லப் படுவதையும் தவிர்க்க முடியாது.

இறுதிப் போர் இடிலிப் பகுதியில் நடைபெறவுள்ளது என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்து விட்டது. அதாவது, அலெப்போவில் இருந்து வெளியேறிய இயக்கங்கள் அங்கு தமது பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொள்வார்கள். அவர்களுடன் போரினால் இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான மக்களும் தங்கியிருப்பார்கள். அதனால், இடிலிப் பிரதேசத்தை கைப்பற்றும் போரில் பேரழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெருமளவு பொது மக்களும் கொல்லப் படலாம். அதை இப்போதே மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் எதிர்வு கூறி விட்டனர்.

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

Friday, July 08, 2016

இறுதிப்போர்: ஐ.எஸ். அழிப்புப் போருக்கு தயாராகும் இருபது உலக நாடுகள்!

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசமான "நடைமுறை இஸ்லாமிய தேசம்" சுருங்கிக் கொண்டிருக்கிறது. அது தற்போது இறுதிப்போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 

ஒரு காலத்தில் ஐ.எஸ். இயக்கத்தை வளர்த்து விட்ட அமெரிக்கா, சவூதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகள் அதைக் கைவிட்டு விட்டன. மேற்கத்திய நாடுகள், அரபு நாடுகள், துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய எதிரும் புதிருமான நாடுகள் ஒன்று திரண்டு ஐ.எஸ். அழிப்புப் போரை ஆரம்பித்துள்ளன.

இறுதிப்போரின் முடிவில் முள்ளிவாய்க்கால் பாணியிலான படுகொலைகள் நடக்க வாய்ப்புண்டு. அதாவது, ஐ.எஸ். இயக்கத் தலைவர்கள், போராளிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தினுள் சுற்றி வளைக்கப் படலாம். கனரக ஆயுதங்களை பயன்படுத்தி அவர்கள் கொன்றொழிக்கப் படலாம். வரலாறு திரும்புகிறது. ஈழப்போரில் ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் முடிவு இம்முறை சிரியாவில் ஏற்படவுள்ளது.

ஐ.எஸ். தற்போது நாலாபுறமும் எதிரிப் படைகளால் தாக்கப் பட்டு வருகின்றது. ஈராக்கிய படைகள் முன்பு ஐ.எஸ். வசமிருந்த பல இடங்களை விடுவித்துள்ளது. மொசுல் மட்டும் தான் எஞ்சியுள்ள பெரிய நகரம் ஆகும். சிரியாவில் "இஸ்லாமிய தேசத்தின் தலைநகரம்" என்று கருதப்படும் ராக்கா நகரம் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றது. வடக்கே YPG எனும் குர்திய விடுதலைப் படையினர் பல கிராமங்களை கைப்பற்றி விட்டனர். தற்போது அவர்கள் ராக்கா நகரில் இருந்து ஐம்பது கி.மீ. தூரத்தில் நிற்கின்றனர்.

இதற்கிடையே, ரஷ்ய போர்விமானங்கள் ராக்கா நகர் மீது குண்டு வீசி வருகின்றன. சிரியா இராணுவம் தெற்குப் பக்கமாக படைநகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. சிரியா இராணுவம் முன்னேறி வந்து ராக்காவை கைப்பற்றி விட்டால், குர்தியரின் பிரதேசத்தையும் கைப்பற்ற நினைக்கலாம். ஏற்கனவே சிரிய அரசு தேசத்தை ஒன்றிணைப்பது பற்றிப் பேசி வருகின்றது. அதனால், சிரியா இராணுவம் வருவதற்கு முன்னர், YPG படைகள் கைப்பற்றி விடத் துடிக்கின்றன.

ஆசாத் அரசுக்கு எதிரான அரபு மொழி பேசும் சிறிய கிளர்ச்சிக் குழுக்கள், குர்தியர்களுடன் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளன. "சிரிய ஜனநாயகக் கூட்டணி" என்று அதற்குப் பெயரிட்டு, அமெரிக்காவும் உதவி வருகின்றது. அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவரும், இரகசியமாக சிரியாவுக்கு சென்று ஜனநாயகக் கூட்டணியினரை சந்தித்துப் பேசியுள்ளனர். சிரியா வான் பரப்பில் பறக்கும் அமெரிக்க விமானங்கள் அவர்களுக்கு ஆயுதப் பொதிகளை போட்டுள்ளன.

புலிகளுக்கு கிளிநொச்சி நகரம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ, அதே மாதிரி ஐ.எஸ்.சிற்கு ராக்கா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ராக்காவை இழந்தால் அது ஐ.எஸ். போராளிகள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். "இனி எல்லாம் முடிந்து விட்டது" என்ற சோர்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். அதானால், என்ன விலை கொடுத்தாவது ராக்கா நகரை பாதுகாப்பதற்கு ஐ.எஸ். முயன்று வருகின்றது.

இதற்கிடையே, எதிர்காலத்தில் சிரியா மீது படையெடுப்பதற்கு, துருக்கியும், சவூதி அரேபியாவும் தயாராகி வருகின்றன. அதற்கு முன்னேற்பாடாக சவூதி அரேபியா, சிரியா எல்லைக்கு அருகில் உள்ள துருக்கியின் Incirlik இராணுவ தளத்திற்கு, நான்கு F-16 போர் விமானங்களை அனுப்பவுள்ளது. துருக்கி-சவூதி படையெடுப்புக்கு தடையாக ரஷ்யா உள்ளது. ஒரு தடவை சிரியாவுக்குள் சென்று விட்டால், ரஷ்யாவுடன் மோதல் நிலைமை தோன்றுவதை தவிர்க்க முடியாது.

ஒரு காலத்தில், துருக்கியும், சவூதி அரேபியாவும் தான், ISIS இயக்கத்திற்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி வளர்த்து விட்டன. அவை எதற்காக ஐ.எஸ். அழிப்புப் போரில் இறங்க வேண்டும்? "அரசியலில் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. நிலையான நலன்கள் மட்டுமே உள்ளன." எண்பதுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி உதவிய இந்தியா, 2009 ம் ஆண்டு புலிகளை அழிக்கும் போரில் இறங்கவில்லையா? அதே கதை தான் சிரியாவிலும் நடக்கிறது.

சர்வதேச அரசியல் சூழ்நிலை தமக்கு எதிராகத் திரும்பி இருப்பதும், முன்னாள் நண்பர்கள் பகைவர்களானதும் ஐ.எஸ். உணராமல் இல்லை. அதனால் தான் ஐ.எஸ். தற்போது துருக்கி, சவூதி அரேபியாவிலும் வெடி குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

துருக்கியில் அங்காரா, இஸ்தான்புல் நகரங்களில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். காரணம் என்று துருக்கி அரசு அறிவித்துள்ளது. அதே மாதிரி, சவூதி அரேபியாவில் மெதீனா, ஜெத்தாவில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். காரணம் என்று சவூதி அரசு அறிவித்துள்ளது.

துருக்கியில் பொருளாதார இலக்கான விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலில் நூறு பேரளவில் கொல்லப் பட்டனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் துருக்கி முஸ்லிம்கள். சவூதி அரேபியாவில் இஸ்லாமிய மதத்தவரின் புனித ஸ்தலமான மெதீனாவில் குண்டு வைத்ததன் மூலம், ஐ.எஸ். உலக இஸ்லாமியரின் வெறுப்புக்கு ஆளானது.

ஐ.எஸ். இஸ்லாமிய புனித ஸ்தலங்களை தாக்குவது இதுவே முதல் தடவையல்ல. சிரியா, ஈராக்கில் இருந்த ஆயிரம் வருட கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகளை குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். அப்போது அதனை ஆதரித்து வந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், மெதீனா தாக்குதலின் பின்னர் தான் விழித்துக் கொண்டனர்.

"ஐ.எஸ். எதற்காக இஸ்லாமிய‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" இந்த‌க் கேள்வியே அறியாமை கார‌ண‌மாக‌ எழுகின்ற‌து. "புலிக‌ள் எத‌ற்காக த‌மிழ‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" "ஜேவிபி எத‌ற்காக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" ஏனெனில் இது அர‌சிய‌ல் அதிகார‌த்திற்கான‌ போர்.

ISIS தொட‌ங்கிய‌ ஆர‌ம்ப‌ கால‌த்தில் ஒரே குறிக்கோளுட‌ன் போரிட்ட‌ ச‌க‌ இய‌க்க‌ங்க‌ளை அழித்து அதிகார‌த்தை கைப்ப‌ற்றிய‌து. அப்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ள் ச‌கோத‌ர‌ யுத்த‌த்தில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அது ம‌ட்டும‌ல்லாது அவ‌ர்க‌ளது "de facto இஸ்லாமிய‌ தேச‌ம்" என்ற‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தினுள் வாழ்ந்த‌ ஷியா முஸ்லிம்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதை விட‌ "துரோகிக‌ள்" என்றும் ப‌ல‌ இஸ்லாமிய‌ர்க‌ள், சில‌ நேர‌ம் இய‌க்க‌ உறுப்பின‌ர்க‌ளும் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஒரு கால‌த்தில், ஐ.எஸ். இய‌க்க‌ம் சிரியா, ஈராக்கில் ஷியா, குர்து முஸ்லிம்க‌ளை கொன்று குவித்துக் கொண்டிருந்த‌து. அது ப‌ற்றி நான் ப‌ல‌ த‌ட‌வைக‌ள் எழுதி இருக்கிறேன். அப்போதெல்லாம், சில‌ இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர்க‌ள், ச‌வூதி- வ‌ஹாபிச‌ ஆத‌ர‌வாளர்க‌ள், என்னை க‌டுமையாக‌ எதிர்த்தார்க‌ள். "விடுத‌லைப் போராட்ட‌த்தின்" பெய‌ரால் நியாய‌ப் ப‌டுத்தி, ஐ.எஸ். ஸுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கினார்க‌ள்.

த‌ற்போது வ‌ள‌ர்த்த‌ க‌டா மார்பில் பாய்ந்த‌ மாதிரி, ஐ.எஸ். த‌ன‌து எஜ‌மானின் நாடான‌ ச‌வூதி அரேபியாவில் தாக்குத‌ல் ந‌ட‌த்தியுள்ள‌து. ஒரு கால‌த்தில் தார்மீக‌ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ளுக்கு திடீரென‌ ஞான‌ம் பிற‌ந்து "ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய‌ விரோத‌ இய‌க்க‌ம்" என்கிறார்க‌ள். அந்த‌ உண்மை இப்போது தானா தெரிந்த‌து?

சிரியா, ஈராக்கில் ஐ.எஸ். பெரும‌ள‌வு இட‌ங்க‌ளை இழ‌ந்து வ‌ருகின்ற‌து. தோல்விய‌டைந்து வ‌ரும் இய‌க்க‌த்தால் இனிப் பிர‌யோச‌ன‌ம் இல்லையென்று கொடையாளிக‌ள் கைவிட்டு விட்டார்க‌ள். புலிக‌ள் ராஜீவ் காந்திக்கு குண்டு வைத்த‌ மாதிரி, ஐ.எஸ். மெதீனாவில் குண்டு வைத்துள்ள‌து.

ப‌ல‌ வ‌ருட‌ கால‌மாக‌ புலிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கி வ‌ந்த‌ இந்திய‌ மேலாதிக்க‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள், ராஜீவ் கொலைக்கு பின்ன‌ர், "புலிக‌ள் ஒரு த‌மிழ‌ர் விரோத‌ இய‌க்க‌ம்" என்றார்க‌ள். அதே நிலைமை தான் இன்று ச‌வூதி அரேபியா - ஐ. எஸ். விட‌ய‌த்திலும் ஏற்ப‌ட்டுள்ள‌து. வ‌ல்ல‌ர‌சுக‌ள் ஆடும் ஆட்ட‌த்தில் அப்பாவி ம‌க்க‌ள் ப‌லியாகிறார்க‌ள்.

அது ச‌ரி. ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய‌ விரோத‌ இய‌க்க‌ம் என்ப‌தை ஒத்துக் கொள்ளும் ச‌வூதி வ‌ஹாபிச‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் சுய‌ விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌த் த‌யாராக‌ இருக்கிறார்க‌ளா? இப்போதாவ‌து ஷியாக்க‌ளையும், சோஷ‌லிச‌ குர்திய‌ர்க‌ளையும் முஸ்லிம்க‌ளாக‌ ஏற்றுக் கொள்கிறார்க‌ளா?

இஸ்லாமிய‌ ச‌மூக‌ங்க‌ளுக்கு இடையிலான‌ ப‌கை முர‌ண்பாடுக‌ள் க‌ளைய‌ப் ப‌ட்டு, ப‌ர‌ஸ்பர‌ புரிந்துண‌ர்வு ஏற்ப‌ட வேண்டும். ‌ இல்லாவிட்டால், எதிர்கால‌த்தில் இன்னொரு ஐ.எஸ். உருவாவ‌தை யாராலும் த‌டுக்க‌ முடியாது.

Thursday, January 14, 2016

இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?


De Telegraaf, 13-01-2016

சிரியாவில், "இஸ்லாமிய தேசம்" என்ற ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது? நெதர்லாந்து புலனாய்வுத்துறையான AIVD, கடந்த ஒன்றரை வருடங்களாக ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தில் சேரவேண்டுமென்ற அவாவுடன் செல்லும் இளைஞர்களுக்கு உண்மை நிலையை எடுத்து சொல்லி, அவர்களை சேர விடாமல் தடுப்பதே அந்த அறிக்கையின் நோக்கம்.

அந்த அறிக்கையில் இருந்து சில பகுதிகள்:


- ஐ.எஸ். பிரதேசத்தில் புதிதாக வரும் ஒவ்வொருவரும், தேசியத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.

- ஐரோப்பாவில் இருந்து செல்பவர்கள் தமக்கு அங்கே வசதியான வீடுகள் கிடைக்கும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஐ.எஸ். பரப்புரைகளுக்கு மாறாக, எந்த வசதியும் இல்லாத வீடு தான் கிடைக்கிறது. அங்கிருக்கும் குப்பை, கூளங்களை அவர்களே அப்புறப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். மேலும், சில மணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது.

- ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள், உளவாளிகள் ஊடுருவலாம் என்ற அச்சம் பரவலாக உள்ளது. எல்லோரும் சந்தேகிக்கப் படுகின்றனர், கண்காணிக்கப் படுகின்றனர். உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல அங்கிருந்து யாரும் தப்ப முடியாது. ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் என்றாலும் மரணதண்டனையில் இருந்து விதிவிலக்கு கிடையாது.

- ஐ.எஸ். படையினர் யுத்தத்தில் ஒரு கிராமத்தை கைப்பற்றினால், அங்கு கொலைகள், சித்திரவதைகள்,பாலியல் வன்புணர்ச்சிகள் நடத்துவது சாதாரணமாக நடக்கிறது.

- ஐரோப்பாவில் இருந்து புதிதாக சேரும் ஒருவர், ஏற்கனவே ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் ஒருவரைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நபர் பொறுப்பு நிற்க வேண்டும். புதிதாக சேருவோர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றனர். மேலும் அவர்களின் பாஸ்போர்ட், அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

- கல்வித் தகைமை கொண்டவர்களுக்கு உடனடியாகவே வேலை கிடைக்கிறது. உதாரணத்திற்கு, தொழில்நுட்ப பொறியியலாளர்கள், மருத்துவர்கள், பல்வேறு மொழிகளில் புலமை கொண்டவர்களுக்கு வேலை நிச்சயம். ஏனையோர் படைகளில் சேர்க்கப் படுகின்றனர்.

- குடும்பமாக பிள்ளைகளோடு செல்பவர்கள் கூட, ஆண்கள் வேறு, பெண்கள் வேறு என்று பிரித்து வைக்கப் படுகின்றனர். ஆண்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

- பெண்கள் இராணுவ சேவையில் ஈடுபடுத்தப் படுவதில்லை. ஆனால், கலாச்சாரப் பொலிஸ் (அல் கண்சா படையணி) வேலைக்கு சேர்க்கிறார்கள். தெருக்களில், பொது இடங்களில், பெண்கள் ஐ.எஸ். கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிக்கும் பணி அவர்களுடையது.

- பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப் பட்டாலும், அங்கு அவர்களுக்கு ஐ.எஸ். கொள்கைகளை கற்பிக்கிறார்கள். ஆயுதங்களை கையாள்வது எப்படி என்று சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். வருங்கால கணவனுக்கு என்னென்ன பணிவிடைகள் செய்ய வேண்டுமென்று சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

- பெண் பிள்ளைகள் ஒன்பது வயதானால் உடலை மூடும் ஆடை அணியுமாறு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். ஆண் பிள்ளைகள் ஒன்பது வயதானால், இலகுவான இராணுவ பயிற்சிக்கு அழைக்கப் படுகின்றனர். மேலும் பொது இடங்களில் நடக்கும் மரண தண்டனைக் காட்சிகளைப் பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

- பெண்கள் அதிகமான பிள்ளைகளை பெறுவதற்கு ஊக்குவிக்கப் படுகின்றனர்.

- தனியாக வாழும் இளம் பெண்களும், விதவைகளும் பெண்கள் விடுதி ஒன்றுக்கு அனுப்பப் படுகின்றனர். அங்கு நிலவும் வசதிக் குறைபாடுகள் வாழ்க்கையை கடினமாக்குகின்றன. ஊத்தை, குப்பை, கரப்பான் பூச்சிகள் ஊரும் இடங்களில் தங்க வைக்கப் படுகின்றனர். இந்தக் கஷ்டம் காரணமாக, பல பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். போராளிக் கணவனை போரில் பலி கொடுத்த விதவைகள் கூட, இன்னொரு போராளியை மறுமணம் செய்கின்றனர். தமது குழந்தைகளின் தகப்பனை நினைத்துக் கவலைப் பட்டாலும் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்கிறார்கள்.

- குறைந்த தொகையாக இருந்தாலும், போராளிகளுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் ஐ.எஸ். நடத்தி வந்த எண்ணைக் கடத்தல் வியாபாரம் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக, சம்பளம் ஒழுங்காக கொடுக்க முடிவதில்லை.

- ஐ.எஸ். பிரதேசத்தினுள் எந்த நேரமும் விமானக் குண்டு வீச்சு நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. பொது மக்கள் அடிக்கடி குண்டுவீச்சுகளுக்கு பலியானாலும், யாரும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது. இரகசியமாக தப்பியோடி பிடிபட்டால் மரண தண்டனை நிச்சயம்.

- மருத்துவ மனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வைத்தியர்களும் குறைவு. குறிப்பாக பெண் மருத்துவர்கள் மிக மிகக் குறைவாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப் படுகின்றனர். பிரசவம் பாரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்களோ, தாதியரோ இல்லாத நிலையில் சிசு மரணவீதம் அதிகமாக உள்ளது.