Tuesday, March 31, 2020

கொரோனாவின் இரும்புப் பிடிக்குள் ஆம்ஸ்டர்டாம் நகரம்


நெதர்லாந்தில் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை எந்தளவு தூரம் பாதித்துள்ளது? அங்கே இன்னமும் ஊரடங்கு சட்டம் இல்லை. பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் இருந்தாலும் வெளியில் நடமாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஒன்றரை மீட்டர் இடைவெளி விட்டு நடக்க வேண்டும் என்பது மட்டுமே சட்டம்.

தமிழ்நாட்டில் வேந்தர் டிவியில் தவறான தகவல்களை கொண்ட வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது. அதில் உள்ள வீடியோவில் ஒருவர் நெதர்லாந்தில் இருந்து பேசுவதாக சொல்கிறார். "நெதர்லாந்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு இருக்கிறது... பொதுமக்கள் வெளியே வந்தால் பொலிஸ் சுடுவார்கள்..." என்பன போன்ற பொய்யான தகவல்களை கூறுகின்றார். அதில் பேசும் நபர் தான் நெதர்லாந்து நகர தெரு ஒன்றில் நடப்பதாக கூறினாலும், அந்த வீடியோப் பதிவு முழுவதும் அவரது முகம் மட்டுமே தெரிகின்றது. பின்னணியில் சுற்றாடலில் நடக்கும் எதுவும் தெளிவாகத் தெரிய விடாமல் மறைக்கப் பட்டுள்ளது. இது குறித்து வேந்தர் டிவி கவனமெடுக்க வேண்டும்.

இந்த வீடியோவை நானே ஆம்ஸ்டர்டாம் நகரில் நேரில் சென்று படமாக்கி உள்ளேன். ஏற்கனவே ஆம்ஸ்டர்டாம் வந்தவர்கள், பின்னணியில் தெரியும் காட்சிகளை கொண்டே அதை அறிந்து கொள்ளலாம். வழமையாக சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் தான் படமாக்கி இருக்கிறேன். ஆகவே இங்குள்ள உண்மை நிலைமை என்னவென்று நீங்களே வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் ஒரு பல்தேசிய தொற்று நோயாக பரவிக் கொண்டிருக்கும் பேரிடர் காலத்தில், மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் பொய்யான தகவல்களை பரப்புவது நிறுத்தப் பட வேண்டும். பரபரப்பு செய்திகளுக்காக என்ன வேண்டுமானாலும் புளுகலாம் என்ற நிலைமை மாற வேண்டும்.

நன்றி.

- கலையரசன்


1 comment:

பாபு பகத். க said...

உண்மைக்கு எதற்கு சாட்சி.