Saturday, July 03, 2010

பிரிட்டிஷ் - இந்திய தொழிலதிபரின் "தடுப்பு முகாம் நிறுவனம்"


தடுப்பு முகாம்களை லாபம் கொழிக்கும் வர்த்தக ஸ்தாபனமாக நிர்வகிக்கலாமா? இதோ! தடுப்பு முகாம் நடத்தி கோடீஸ்வரரான பிரிட்டனின் சிறிந்த தொழிலதிபர். Businessman of the year?
ராஜேந்திரன் - பிரிட்டனின் வெற்றிகரமான இந்திய வம்சாவழி தொழிலதிபர். ஒரு நாளைக்கு 4000 பவுன்கள் சம்பாதிக்கும் பெருமைக்குரியவர். அவரது வருடாந்த வருமானம் 1.5 மில்லியன் பவுன்கள். Serco என்ற அவுட்சோர்சிங் கம்பெனி அதிபர். அவரது கம்பெனி என்ன செய்கின்றது? ஐக்கிய இராச்சியத்தில் Yarl's Wood , Colnbrook என்ற இரு இடங்களில் தடுப்பு முகாம்களை நிர்வகிக்கின்றது. அந்த தடுப்பு முகாம்களில் அடைபட்டுக் கிடப்பவர்கள், பிரிட்டனில் தஞ்சம் கோரி வந்த அப்பாவி அகதிகள். "பாருக்குள்ளே நல்ல நாடான" பிரிட்டனில் அடைக்கலம் கோரிய குற்றத்திற்காக பெண்களையும், குழந்தைகளையும் அடைத்து வைத்து வருத்தி, கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கின்றார். சொல்ல மறந்து விட்டேன்... ராஜேந்திரன் ஒரு பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபையை சேர்ந்த விசுவாசமான தேவ ஊழியர். அகதிகளை வருத்தி சேர்த்த லாபப் பணத்தில் ஒரு பகுதியை, ஒரு நல்ல கிறிஸ்தவனாக தனது சபைக்கு கொடுக்கிறார். (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்)

தொழிலதிபர் ராஜேந்திரனுக்கும், அவர் நடத்தும் சிறைமுகாமில் இருப்பவர்களுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். ராஜேந்திரன் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்தியர். அவரது தந்தை ஒரு பிரபலமான வாகன விற்பனையாளர். தென் ஆப்பிரிக்காவில் ஒரு கணக்காளராக பணியாற்றிய ராஜேந்திரன், நெல்சன் மண்டேலா விடுதலையாவதற்கு இரு வருடங்களுக்கு முன்னர் பிரிட்டன் வந்து விட்டார். இன்று அவரது நிறுவனம் ஐரோப்பா, ஆசியா என்று கிளை பரப்பிய போதிலும், தனது தாயகமான ஆப்பிரிக்காவில் எந்த முதலீடும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்காவில் முதலாவது ஜனநாயக தேர்தலில் நெல்சன் மண்டேலா தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர், அவர் தனது தாய்நாட்டை எட்டியும் பார்க்கவில்லை. அதற்கு காரணம் அவரது குடும்பத்தினரின் கடந்த கால அரசியல் ஈடுபாடு. அன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்த பெந்தெகொஸ்தே சபைகள் வெள்ளை நிறவெறி (Apartheid) அரசுக்கு ஆதரவளித்து வந்தன. ஆச்சாரமான பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களான ராஜேந்திரன் குடும்பத்தினரும் அத்தகைய அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள். பொதுவாக அரசியலில் ஆர்வம் இல்லாதது போல காட்டிக் கொள்ளும் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்கள் , இது போன்ற சந்தர்ப்பங்களில் தம்மை வெளிப்படுத்துகின்றார்கள்.

ராஜேந்திரன் உள்ளூர் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபைக்கு தாராளமாக நன்கொடை வழங்குகிறார். பிற மக்களின் துன்பத்தில் லாபம் சம்பாதித்த ஒருவர் எப்படி கிறிஸ்தவ நன்னெறிகளை கடைப்பிடிக்கிறார்? ராஜேந்திரன் தனது செர்கோ நிறுவனத்தை வீடு மாதிரி கருதுவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். வருடம் ஒன்றரை மில்லியன் லாபம் சம்பாதிக்கும் ஒருவரால், ஏன் தடுப்பு முகாமில் (மன்னிக்கவும், வீடு) உள்ள வசதிக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை? அவரது தடுப்பு முகாம்களில் அழுகிய உணவு கொடுப்பது, நிறவெறி வசவுகள், காவலர்கள் அடிப்பது எல்லாம் சாதாரண நிகழ்வுகள். எத்தனையோ தடவை, கொடுமை தாங்க முடியாத அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மனிதர்களின் துன்பத்தில் லாபம் சம்பாதிக்கும் ராஜேந்திரன் கொடுக்கும் வருமானத்தில் பத்து வீதத்தை, மனச்சாட்சியற்ற பெந்தெகொஸ்தே சபை வாங்கிக் கொள்கின்றது. இத்தகைய நற்பண்புகள் தான், ராஜேந்திரனை "இந்த வருடத்திய சிறந்த தொழிலதிபர்" ஆக்குகின்றன. (ஆமென்)


பிரிட்டிஷ் தடுப்புமுகாமில் சிறை வைக்கப் பட்டிருந்த அகதி ஒருவருடனான நேர்காணல்

8 comments:

hayyram said...

ம்ம் நல்ல பதிவு.

anbudan
ram

www.hayyram.blogspot.com

http://rkguru.blogspot.com/ said...

எல்லாமே அரசியல் சித்து...

Sivaprathap said...

We no have enemies outside.Like this selfish indians only enemies for us...

Anonymous said...

தங்கள் கட்டுரையூடாக சொல்ல விரும்புவது என்ன?

Mohamed Faaique said...

Really great article... whre r u finding this news....

ALHABSHIEST said...

உங்கள் பதிவு ஒவ்வொன்றும் புதிய சிந்தனைக்கு வழி வகுக்கிறது.பாராட்டுக்கள் கலையரசன்.தொடரட்டும் உங்கள் பணி.

M. Azard (ADrockz) said...

natpani thodarattum, vaalththukkal

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

பரிசுத்த ஆவி இவங்கள ஒன்னும் பண்ணாதா?