ARTE டிவியில் ரஷ்யாவின் அதிபராக போரிஸ் எல்ட்சின் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் காலம் பற்றிய ஆவணப்படம் காண்பித்தார்கள். (Crime in the Kremlin I ARTE.tv Documentary) அதில் அவர்கள் சொல்ல வரும் சேதி முக்கியமானது. எல்ட்சின் ஜனாதிபதியாக வந்திரா விட்டால், கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்திருப்பார்கள்! அதை தடுப்பதற்காக முதலாளித்துவ சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வேலை செய்துள்ளன.
Thursday, January 27, 2022
ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவதை தடுத்தது எப்படி?
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, January 26, 2022
உறைபனியில் Snow- பெருமான் வழிபட்ட கனடாத் தமிழர்!
மதம் மக்களை மடையர்கள் ஆக்குகிறது என்பதற்கு இந்த படம் சிறந்த சான்று.
மதங்கள் தோன்றிய பிரதேசங்களில் உள்ள காலநிலைக்கு ஏற்றவாறு தான் வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டன. அதை அப்படியே எல்லா இடங்களிலும் பிரயோகிப்பது மடத்தனம். எந்த மதக் கடவுளும் அப்படி செய்ய சொல்லி மனிதனை வற்புறுத்தவில்லை.
இலங்கை, தென்னிந்திய பிராந்தியம் பூமத்திய ரேகைக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ளதால் அங்கே வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும். அதனால் அங்கு வாழும் ஆண்கள், அரை நிர்வாணமாக வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு சாமி கும்பிடுவதில் எந்த அதிசயமும் இல்லை. ஐரோப்பியர் வரும் வரையில், பொதுவாக ஆண்கள் மட்டுமல்ல, பல இடங்களில் பெண்கள் கூட இடுப்புக்கு மேலே எந்த உடையும் அணிவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அந்தளவு வெயில் கொளுத்தும்.
ஆனால், வட துருவத்தை அண்டிய நாடான கனடாவின் காலநிலை அப்படியா இருக்கிறது? குளிர்காலத்தில் வெப்பம் -20°C அளவுக்கு கூட இறங்கலாம். அந்த காலநிலையில் அரை நிர்வாணமாக வேட்டி மட்டும் உடுத்திக் கொண்டு சாமி கும்பிட்டால் குளிரில் விறைத்து இறக்க நேரிடலாம். கடும் குளிரில் முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றா விட்டால் பல நோய்களாலும், உடல் உபாதைகளாலும் பாதிக்கப் படலாம்.
ஆகவே, யாரும் அசட்டுத் துணிச்சலில் இது போன்ற கேலிக்கூத்துகளில் ஈடுபடாதீர்கள். மத நம்பிக்கை தவறல்ல. ஆனால் எதுவும் அளவோடு இருக்க வேண்டும். பக்தி முற்றி பைத்தியமாகி விடக் கூடாது.
பிற்குறிப்பு: கனடாவில் இந்த படம் எடுத்த நேரம் வெப்பநிலை -1°C ஆக இருக்கலாம்.
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Monday, January 24, 2022
கிளப் ஹவுஸில் துள்ளிக் குதித்த சாதிவெறி பூனைக்குட்டிகள்
கிளப் ஹவுஸ் பரிதாபங்கள்:
"ஏம்பா, சபேசன், கலை மார்க்ஸ் மாதிரியான ஆளுங்க ஈழத்தில சாதி ஒழிப்பு போராட்டம் நடத்துறதா சொல்லிக்கிறாங்க... அங்க தான் சாதி என்ற ஒன்று இல்லையே? அப்புறம் எப்படி ஒழிப்பாங்க?"
"அது வந்து.... அவங்களாகவே அங்க மொதல்ல புதுசா சாதிகளை உருவாக்கி வளர்த்து விடுவாங்களாம்.... அதுக்கு அப்புறம் அதையெல்லாம் அவங்களே வந்து ஒழிப்பாங்களாம்!"
"இதெல்லாம் ஒரு ஏஜெண்டா கீழே நடக்குதில்லே?"
"ஆமாம்மா... தமிழர்க ஒற்றுமையாக இருந்தா சீனாவை விடப் பெரிய ஒலக வல்லரசா மாறிடுவாங்க... அதை தடுக்கனும்னு நெனைக்கிறாங்க!"
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Sunday, January 23, 2022
கிளப் ஹவுசில் புலி வேடமிட்டு களமாடுவோரின் வர்க்கப் பின்னணி
கிளப் ஹவுஸ் கூட்டங்களில் அவதானித்தவை:
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Saturday, January 22, 2022
தமிழீழத்தின் "சிங்க(கொடி)ப்" பெண்!
தமிழ்த்தேசிய வியாதிகளின் கவனத்திற்கு!
இது தான் நீங்கள் காட்டும் கற்பனை ஈழத்திற்கும், நிஜ ஈழத்திற்கும் இடையிலான வித்தியாசம். பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்த "ஈழத்" தமிழ்ப்பெண், தனது தாயகமான இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் சிங்கக் கொடியை பிடித்திருக்கிறார். (செய்தி கீழே)
இது தான் அங்குள்ள கள யதார்த்தம். இதைக் காணப் பொறுக்காத தமிழ்த்தேசியவாதிகள் யாராவது "ஏன் இந்தப் பெண் தமிழீழ தேசியக்கொடியை (புலிக்கொடியா?) பிடிக்கவில்லை?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு வராதீர்கள்.
இன்று வரையில் தமிழ்த்தேசியம், புலித் தேசியம், தமிழீழ தாயகம், என்று பேசும் அத்தனை ஈழத்தமிழர்களும் தமது சிறிலங்கா பிரஜாவுரிமையை விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. உண்மையில் அவர்கள் விரும்பி இருந்தால் சிறிலங்கா பிரஜாவுரிமையை தாமாக நீக்கிக் கொள்ளலாம். சட்டத்தில் தாராளமாக அதற்கு இடமிருக்கிறது. ஆனால், அப்படி யாரும் செய்ய மாட்டார்கள்.
உண்மை நிலவரம் என்ன? புலிகள் இயக்க தலைவர் கூட அதைச் செய்யவில்லை! தலைவரின் மூன்று பிள்ளைகளுக்கும் சிறிலங்கா பிரஜாவுரிமை கிடைத்திருந்தது!! "சிங்கள பேரினவாத அரச இலச்சினை"(வாளேந்திய சிங்கம்) பொறித்த அடையாள அட்டையும் வைத்திருந்தார்கள்!!!
குறிப்பிட்ட பிரிவினர் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று குடியேறி அந்நாட்டின் பிரஜாவுரிமை பெற்ற பின்னர் தான் சிறிலங்கா பிரஜாவுரிமையை மறுக்கிறார்கள். அது வரைக்கும் அவர்களும் இலங்கைப் பிரஜைகள் தான். சிங்கக்கொடி தான் அவர்களது தேசியக்கொடி. யாராலும் மறுக்க முடியாது.
இது தான் கள யதார்த்தம். இதை மறைத்துக் கொண்டு, "வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம்" என்று கற்பனை உலகில் மிதப்பவர்கள் பலருண்டு. தமிழ்த்தேசியவாதிகளே! ஆகாயத்தில் மிதந்தது போதும். பூமிக்கு திரும்பி வாருங்கள்.
செய்தி:
//தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.//
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.