வெறுங்கையால் இராணுவத்துடன் போராடும் பாலஸ்தீன வீரப்பெண் (வீடியோ)
Tuesday, January 12, 2010
இந்திய படையினரை கல் வீசி விரட்டும் வீரப் பெண் (வீடியோ)
அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன.
வெறுங்கையால் இராணுவத்துடன் போராடும் பாலஸ்தீன வீரப்பெண் (வீடியோ)
வெறுங்கையால் இராணுவத்துடன் போராடும் பாலஸ்தீன வீரப்பெண் (வீடியோ)
Labels:
அசாம்,
இந்திய இராணுவம்,
மனித உரிமை மீறல்கள்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Monday, January 11, 2010
அகதிகளின் பாடசாலையில் சுவிஸ் பொலிஸ் வெறியாட்டம்

(Zurich, 7-1-2010) சூரிச் நகரில் சட்டவிரோதமாக்கப்பட்ட அகதிகளுக்கு ஜெர்மன் மொழிக் கல்வி போதித்து வந்த பாடசாலை, சுவிஸ் பொலிசாரினால் சூறையாடப்பட்டது. முன்னறிவித்தல் இன்றி அதிரடியாக நுழைந்த போலிஸ் பட்டாளம், பாடநூல்களையும், ஆசிரியர்களின் உபகரணங்களையும் அபகரித்து சென்றது. பாடசாலைக் கட்டடத்தை மீண்டும் பயன்படுத்த விடாமல் தடுப்பதற்காக, ஜன்னல்களை கூட உடைத்து பெயர்த்து சென்றுள்ளனர். பாடசாலைக் கட்டிடமும் சேதமாக்கப்பட்டது. "Robocop" சினிமாவில் வருவது போல உடையணிந்த கலவரத்தடுப்பு போலீஸ்காரர்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்களை "Pepper Spray" பாவித்து விரட்டி அடித்தனர்.
ஆபத்தான மின் இணைப்பு காரணமாக, அயல் வீட்டுக்காரரின் முறைப்பாட்டின் பேரில், தாம் இந்த நடவடிக்கை எடுத்ததாக, போலிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தது. அகதிகளின் பள்ளிக்கூடத்திற்கு சூரிச் நகரசபை அனுமதி கொடுக்காத காரணத்தால், சட்டபூர்வ மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சில ஆர்வலர்கள் தாமாகவே, மின்சார இணைப்புகளை அமைத்துக் கொண்டனர். இதுவே "ஆபத்தான மின்சார இணைப்பு" என்ற நொண்டிச்சாட்டை வைத்து போலிஸ் நடவடிக்கை எடுக்க காரணமானது.
சூறையாடல் குறித்து கருத்து தெரிவித்த தொண்டர் ஆசிரியர்கள், போலிஸ் கூறிய காரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. "போலிஸ் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே தமக்கு அறிவிக்கவில்லை." என்றனர். "அப்படியே ஆபத்தான மின்சார இணைப்பு காரணம் என்றாலும், பாடநூல்களையும், பிற உபகரணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?" என்று வினவினர். பல தொண்டர்கள் தமது சக்திகளை ஒன்று திரட்டி, உருவாக்கிய பாடசாலையை ஒரு சில மணித்தியாலங்களில் தகர்த்து விட்டார்கள். பல்லாண்டுகளாக பாடுபட்டு, பல ஆயிரம் செலவழித்து சேகரித்த பாடசாலை உபகரணங்கள் நொறுங்கிக் கிடக்கின்றன என முறையிட்டனர். சுவிஸ் போலிசின் அத்துமீறல், அகதிகளை படிக்க விடாமல் தடுக்கும் அடக்குமுறையாகவே பார்க்கின்றனர்.
Autonomous School Zurich (ASZ) பல வருடங்களாக அகதிகளுக்கு இலவச ஜெர்மன் மொழிக் கல்வி போதித்து வந்தது. "அனைவருக்கும் கல்வி" என்ற சுவிஸ் இடதுசாரி அமைப்பு அந்தப் பாடசாலையை நிர்வகித்து வந்தது. தஞ்சமனு நிராகரிக்கப்பட்டு, விசா இன்றி வாழும் அகதிகள் சாதாரண பாடசாலைகளில் பயில உரிமை இல்லை.
Die Schule lebt!!
Die Schule lebt!!
சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்
பள்ளிக்கூட தாக்குதல் குறித்து சுவிஸ் பத்திரிகையில் வந்த செய்தி
சுவிஸ் தொலைக்காட்சி செய்தி அறிக்கை:
Labels:
அகதிகளுக்கான கல்வி,
சுவிட்சர்லாந்து,
பள்ளிக்கூடம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Sunday, January 10, 2010
இலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள்

நெதர்லாந்தில், புதிதாக வதிவிட அனுமதி பெற்றவர்கள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கென குடியுரிமைப் பாடங்களை கற்பிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. உள்நாட்டு வேலையற்ற பட்டதாரிகளை தொண்டர் ஆசிரியர்களாக நியமித்து அரசு நடத்தும் பள்ளி அது. பன்னாட்டு குடியேறிகளுடன் நானும் ஒருவனாக அந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கூடப் படித்த மாணவர்களில் சில ஈழத் தமிழ்ப் பெண்களும் இருந்தனர். ஒரு நாள், எம்முடைய ஆசிரியை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பினார். வகுப்பில் இருந்த பல தேசங்களை பிரதிநித்துவப் படுத்தியவர்கள் தத்தமது நாடுகளில் பெண்களின் நிலை பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர்.
இலங்கையின் முறை வந்தது. அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் பேசவாரம்பித்தனர். "எமது நாட்டில் வழக்கமாக பெண்கள் வெளியே வேலைக்குப் போவதில்லை. வீட்டு வேலைகள் மட்டுமே செய்வார்கள். அது எமது கலாச்சாரம்." என்றனர். அதனை மறுதலித்த நான், "படித்த பெண்கள் வேலைக்குப் போவதும், ஏழைக் குடும்பப் பெண்கள் கூலி வேலைக்குப் போவதும், எமது நாடுகளில் வழக்கம்." என்றேன். வகுப்பில் இருந்த தமிழ் பெண்கள், இதனை ஏற்க மறுத்து வாதிட்டனர். யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பம், வகுப்பில் இருந்தவர்கள் முகங்களில் காணப்பட்டது. "தமிழ்க் கலாச்சாரத்தின் சிறப்பை" அன்னியருக்கு பறைசாற்ற விடாமல் குறுக்கீடு செய்த கோபம், தமிழ்ப் பெண்களின் குரலில் தெரித்தது. அன்று என்னோடு வாதம் செய்த அதே பெண்கள், பின்னர் வேலைக்கு சென்று வந்ததையும் கண்டேன். கணவனுடன் சேர்ந்து மேலதிகமாக சில நூறு யூரோக்களை சேகரிக்கும் கடமையுணர்வு, கலாச்சாரத்திற்கு களங்கமாக அவர்களுக்கு தெரியவில்லை.
கனடாவுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களில் யாழ்-வேளாள மேட்டுக்குடி சிந்தனை கொண்டவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரில் பேணிய பழமைவாத கலாச்சாரத்தை உலகம் முழுக்க காவித் திரிந்தவர்கள். அதனால் தான் ஆண்டாண்டு காலம் உழைக்கும் வர்க்கப் பெண்களைக் கொண்ட தமிழ் சமூகம் அவர்கள் கண்களுக்கு அகப்படவில்லை. தமதூர் வயல்களில் கூலியாட்களாக ஆண்களை விட குறைவான சம்பளம் பெறும் பெண்களைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. அவர்களது நடுத்தர வர்க்கப் பின்னணி, உழைக்கும் வர்க்க பெண்களை உதாசீனம் செய்ய வைக்கின்றது.
இலங்கையின் பொருளாதாரம் பெண்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தெற்காசியாவிலேயே இது தனித்துவமானது. "ஆசியாக் கண்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த முதலாவது நாடு." "உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு." இலங்கைக்கு கிடைத்த இது போன்ற பெருமைகளால் கூட, பெண்களின் நிலை அரசியல் அரங்கில் மாறி விடவில்லை. தங்கள் சக்தி என்னவென்று அறியாத சாதாரண உழைக்கும் வர்க்க பெண்கள். தேசத்தின் பொருளாதாரத்தில் தமது பங்கு என்னவென புரிந்து கொள்ளுமளவு படித்தவர்களுமல்ல. இருப்பினும் இலவச கல்வியினால் நன்மையடைந்த பெண் பிரஜைகளை அந்நிய நிறுவனங்கள் கண்டு கொண்டன. 1978 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, "கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையம்" இலங்கைப் பெண்களின் உழைப்பை, மலிவு விலை ஆடைகளாக ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.
கிராமப்புறங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், பழமைவாத கட்டுக்களை உடைப்பதற்கு சுதந்திர வர்த்தக வலையம் உதவியது. விவசாயத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாகவே கிடைத்ததால், பலர் நகரத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். கொழும்பு மாநகரத்திற்கு அருகில், விமான நிலைய ஓரமாக கட்டப்பட்ட தொழிற்சாலைகள், பெண்களை மட்டும் வேலைக்கு அமர்த்தின. ஏன் பெண் தொழிலாளிகளை மட்டும் வேலைக்கு சேர்க்கிறார்கள்? "பெண்கள் மிக நேர்த்தியாக வேலை செய்வார்கள்." என்கின்றனர் முதலாளிகள். ஆனால் குறைந்த கூலி வழங்குவதற்காகவும், மிரட்டி வேலை வாங்குவதற்கும் பெண் தொழிலாளிகளே வசதியானவர்கள். மேலதிக நேரம் வேலை செய்ய மாட்டார்கள் என்பதால், திருமணமான பெண்களை பணிக்கு அமர்த்துவதில்லை.
கிராமங்களில் விவசாயக் கூலியாக வேலை செய்வதை விட, சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்து பெறும் ஊதியம் அதிகம் தான். இருப்பினும் அது கொழும்பு மாநகரில் கொடுக்கப்படும் சராசரி சம்பளத்தை விடக் குறைவு. தினசரி 12 மணி நேரம் கடின வேலை செய்தாலும், மாதச் சம்பளம் நூறு டாலர்களும் இல்லை. வேலை நேரங்களில் சிறுநீர் கழிப்பதற்கு கூட இடைவேளை விடாமல் சுரண்டும் தொழிற்சாலை நிர்வாகம். தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளவோ, வேலை நிறுத்தம் செய்யவோ அனுமதிப்பதில்லை. இருப்பினும் கடுமையான அடக்குமுறை காரணமாக, வேலைநிறுத்தப் போராட்டங்கள் தானாகவே வெடிக்கின்றன.
எத்தனை கஷ்டம் இருந்தாலும், சுதந்திர வர்த்தக வலையப் பெண்கள் பல்லைக் கடித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் நின்று பிடிக்கின்றனர். ஒரே கம்பனியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் ஒருவருக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருப்பதே அதற்குக் காரணம். வாழ்க்கை நரகமாக மாறிவிட்டாலும், பலருக்கு ஊர் திரும்ப விருப்பமில்லை. சுதந்திர வர்த்தக வலயத்தில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அவர்கள் தமது ஊரில் சொல்வதில். அப்படி சொன்னால், எந்தவொரு பெற்றோரும் தமது பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற அச்சம் காரணம். சமூகத்தில் நிலவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக, ஒரு பெண் ஆண் துணை இன்றி வெளியே செல்ல முடியாது. (சிங்கள சமூகம் கூட விதிவிலக்கல்ல) இதனால் கிராமங்களில் சமூகக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த பெண்களுக்கு, சுதந்திர வர்த்தக வலய வேலைவாய்ப்பு, வேண்டிய சுதந்திரம் வழங்குகின்றது. ஒரு தொகைப் பணத்தை வீட்டுக்கு அனுப்புவது போக, மிகுதியை உடைகளுக்கும், அலங்கார சாதனங்களுக்கும் செலவிட முடிகின்றது.
ஒரு காலத்தில், இலங்கைக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தந்த பெருந்தோட்டப் பயிர்செய்கை பிற்காலத்தில் நலிவடைந்தது. முதலில் ரப்பர், பின்னர் தேயிலை விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியுற்றது. இதற்கிடையே 1977 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த யு.ஏன்.பி. தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை மும்முரமாக அமுல்படுத்தியது. உலகவங்கி, ஐ.எம்.எப். என்பன அவர்களுக்கு பின்னால் நின்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தோன்றியவை தான் சுதந்திர வர்த்தக வலையங்கள். மத்திய கிழக்குக்கு பணிப்பெண் ஏற்றுமதியும், மேற்படி பொருளாதாரக் கொள்கையின் பெறுபேறு தான். இது பற்றி பின்னர் பார்ப்போம்.
இன்று ஆயத்த ஆடை ஏற்றுமதி இலங்கையின் முக்கிய வருமானங்களில் ஒன்று. பணக்கார நாடுகில் மலிவுவிலையில் விற்கப்படும் உடுப்புகள், சுதந்திர வர்த்தக வலைய பெண்களின் உழைப்பால் உருவானவை. பருத்தி போன்ற மூலப் பொருட்கள் பிற நாடுகளில் இருந்து தருவிக்கப் பட்டாலும், அவற்றை முழு ஆடைகளாக தைத்து அனுப்புவது இலங்கைப் பெண்கள் தான். இதற்குத் தான் ஐரோப்பிய நாடுகள் GPS Plus சலுகைத் திட்டத்தை கொண்டுவந்தன. 2005 ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப் பட்ட சலுகைத் திட்டம், ஆசியாவில் இலங்கைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அனேகமாக சுனாமிக்கு பின்னரான ஐரோப்பிய உதவியின் ஓர் அங்கமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. தற்போது மனித உரிமைக் குற்றச்சாட்டில் GPS சலுகை மீளப் பெறப்படப் போவதாக கூறப்படுகின்றது. இதனால் லட்சக்கணக்கான பெண் தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.
GPS சலுகையை நம்பி சுதந்திர வர்த்தக வலையங்கள் திறக்கப்படவில்லை. சலுகையினால் சேமிக்கப்படும் பணம், அபிவிருத்தியில் உள்ள சில தடைகளை அகற்றும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. ஐரோப்பிய நாடுகளில் எதையாவது இறக்குமதி செய்ய விரும்புவோர் அதிக வரி செலுத்த வேண்டும். அத்தகைய வரியில் வழங்கப்பட்ட சலுகை சுதந்திர வர்த்தக வலைய முதலாளிகளுக்கு லாபமாகப் போய்ச் சேர்ந்தது. அல்லது ஐரோப்பிய சுப்பர் மார்க்கட்களில் மலிவு விலை உடைகளாக விற்கப்பட்டன. தற்போது வரிச் சலுகையை இரத்து செய்வதற்கு, பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதை பின்வரும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் GPS வரிச்சலுகையை இரத்து செய்யப் போவதாக தடாலடியாக அறிவித்த அதே கணம், கிழக்கிலங்கையில் ஒரு பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நிதியில் கட்டப்பட்ட அந்தப் பாடசாலையை, அவர்களின் பிரதிநிதி ஜனாதிபதி மகிந்தவுடன் சேர்ந்து திறந்து வைத்தார். அதைவிட வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்க உள்ளது.
சுதந்திர வர்த்தக வலைய வேலை பறி போனால், வெளிநாடு சென்று உழைப்பது பற்றி அந்தப் பெண்கள் சிந்திக்கிறார்கள். வளைகுடா நாடுகள், கிரீஸ் போன்ற நாடுகளில் பனிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் பலர் முன்னாள் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளிகள். உண்மையில், தேயிலை போன்ற பாரம்பரிய ஏற்றுமதி வருமானத்திற்கு சமமாக, சுதந்திர வர்த்தக வலயங்களிலும், வெளிநாடுகளிலும் பணி புரியும் பெண்கள் ஈட்டித் தருகின்றனர். பிலிப்பைன்சுடன் போட்டி போட்டுக் கொண்டு, இலங்கை வீட்டுப் பணிப் பெண்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றது. அவர்கள் மாதாமாதம் அனுப்பிவைக்கும் அந்நிய செலாவணி, இலங்கைப் பொருளாதாரத்தை வளர்க்கின்றது.
வெளிநாடுகளில் பணிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஒரு பெண்ணின் சம்பாத்தியத்தில் வாழும் குடும்பங்கள் இலங்கையில் ஏராளம். தமது பிள்ளைகளை பராமரித்து, சிறந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். குடும்பத்தின் செலவை பொறுப்பு எடுப்பதோடு மட்டும் நில்லாது, நிலம் வாங்கி, சொந்தமாக கல் வீடு கட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இலங்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பெண்களே அனேகமாக வெளிநாடு செல்கின்றனர். எனது சக்திக்குட்பட்ட ஆய்வின் படி, கொழும்பு போன்ற முன்னேறிய மாவட்டங்களில் இருந்து மிகக் குறைந்தளவு பணிப்பெண்களே செல்கின்றனர். அதற்கு மாறாக, குருநாகல், அம்பாந்தோட்டை போன்ற அபிவிருத்தி குறைந்த மாவட்ட மக்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
கணிசமான தமிழ், முஸ்லிம் பெண்களும் பணிப்பெண்களாக செல்கின்றனர். இவர்களும் பெரும்பாலும் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். வெளிநாடுகளில் தொழில் புரியும் பணிப்பெண்களில், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை காண்பதரிது. அதற்கு மாறாக, வவுனியா, மட்டக்களப்பில் இருந்து பெருந்தொகை தமிழ், முஸ்லிம் பெண்கள் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். யாழ் குடாநாட்டோடு ஒப்பிடும் போது, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வறிய மக்கள் அதிகம். சுதந்திர வர்த்தக வலையத்திலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பெண்கள் பலர் வேலை செய்வது இங்கே குறிப்பிடத் தக்கது.
மலையகத்தை சேர்ந்த தமிழ் பெண்களும், வெளிநாடு சென்று பணிப் பெண்களாகவோ, அல்லது உள்நாட்டில் சுதந்திர வர்த்தக வலையத்திலோ வேலை செய்கின்றனர். ஆனால் அந்த துறைகளில் மலையகத் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலங்கையில் மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர் வர்க்கம் மத்திய மலை நாட்டில் உள்ளது. முதன்மையான ஏற்றுமதியான தேயிலை, இன்றைக்கும் இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றது. "தேயிலைத் தமிழர்கள்" என்று அழைக்கப்படும், பெருந்தோட்டத் தமிழர்களின் வாழ்வு மலையகத்தின் உள்ளேயே முடங்கி விடுகின்றது. பிரிட்டிஷ் காலத்தில் கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்கள், இன்றைக்கும் தேயிலைக் கம்பனிகளின் தயவிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பெருந்தோட்ட தமிழர்களின் குழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப பாடசாலைகள் என்று எல்லாமே சம்பந்தப்பட்ட கம்பனியின் பொறுப்பில் உள்ளன.
தேயிலத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் எல்லோருமே பெண்கள் தான். ஆண்கள் தேயிலை பதனிடும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். பெண்கள் என்பதால் குறைந்த கூலி கொடுத்து, (ஒரு நாளைக்கு 5 டாலர்) சுரண்ட முடிகிறது. அனேகமாக ஒரு மலைநாட்டுத் தமிழ்ப் பெண், தனது 15 வது வயதிலேயே தேயிலைக் கொழுந்து பறிக்க கிளம்பி விடுவாள். பெருந்தோட்டத் தமிழர்கள் ஆரம்பப் பாடசாலைக் கல்விக்கு அப்பால் கல்வியைத் தொடருவதை, முதலாளிகளும் விரும்புவதில்லை. தொழிலாளரின் குடியிருப்புகள் "லயன்கள்" என அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வீடுகளாக உள்ளன. பிரிட்டிஷ் காலனிய சின்னங்களான லயன்கள் இன்றும் 19 ம் நூற்றாண்டிலேயே உள்ளன. நவீன அடிமைகளின் தடுப்பு முகாம்களான லயன்களில் இருந்து வெளியூர் செல்லுமளவிற்கு அவர்களிடம் வசதியும் இல்லை, தொடர்புகளும் கிடையாது. மலையகப் பெண்கள் தோட்டங்களை விட்டு வெளியேறினாலும், பெரு நகரங்களில் கூலி வேலை மட்டுமே செய்ய முடியும். கொழும்பு நகரில் பணக்கார வீடுகளில், வேலைக்காரிகளாக பல மலையகச் சிறுமிகள் சுரண்டப்படுகின்றனர்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உழைக்கும் வர்க்கப் பெண்கள் இருந்த போதிலும், அதைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. நிறுவனமயப் படுத்த முடியாத அளவுக்கு, அவர்களின் உள்மன அச்சமும், ஆதரவற்ற சூழ்நிலையும் தடுக்கின்றன. அடித்தட்டு மக்கள் திரளுக்குள், அவர்கள் பெண்கள் என மேலும் ஒடுக்கப்படுகின்றனர். சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழிற்சங்கம் அமைக்க அரசு ஆதரவளிப்பதில்லை. அந்நிய தேசத்தில், அடிமையாக வதை பட்டாலும், அதிக பட்சம் தூதுவராலயத்தில் அடைக்கலம் கோரத் தான் முடியும். இலங்கைப் பெண்கள் கடின உழைப்பாளிகள் என்ற நற்பெயரை விட பெரிதாக எந்த வெகுமதியும் கிடைப்பதில்லை.
ஒரு பணிப் பெண் தன்னை வருத்திக் கொண்டு அனுப்பும் பணம், அவரின் குடும்பத்தின் ஊதாரித்தனமான செலவால் கரைந்து போகின்றது. இதனால் ஊர் திரும்பும் பணிப் பெண், மீண்டும் விமானமேறி எங்கோ ஒரு நாட்டில் தனது வேலையை தொடர்கிறாள். மணமான பெண்களாயின், சில நேரம் பிள்ளைகளை தனியே வளர்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மனைவியின் பணத்தில் குடித்து, கும்மாளமடிக்கும் கணவன்மாரால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பொதுவாகவே உழைக்கும் வர்க்கப் பெண்கள் மத்தியில், பாலியல் சுதந்திரம் அதிகமாக காணப்படுகின்றது. ஊதாரியான கணவனை விவாகரத்து வாங்கி விட்டு, காதலனுடன் வாழும் பெண்கள் பலர் உண்டு. அதற்காக இந்தக் கலாச்சார மாற்றத்தை நமது சமூகம் ஏற்றுக் கொண்டு விட்டது என்று அர்த்தமில்லை. இலங்கையின் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் போராடுகின்றார்கள். உழைப்பு எனும் மெழுகுதிரியாக உருகி நாட்டின் பொருளாதாரத்தை ஒளிர வைக்கிறார்கள்.
இலங்கையின் முறை வந்தது. அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் பேசவாரம்பித்தனர். "எமது நாட்டில் வழக்கமாக பெண்கள் வெளியே வேலைக்குப் போவதில்லை. வீட்டு வேலைகள் மட்டுமே செய்வார்கள். அது எமது கலாச்சாரம்." என்றனர். அதனை மறுதலித்த நான், "படித்த பெண்கள் வேலைக்குப் போவதும், ஏழைக் குடும்பப் பெண்கள் கூலி வேலைக்குப் போவதும், எமது நாடுகளில் வழக்கம்." என்றேன். வகுப்பில் இருந்த தமிழ் பெண்கள், இதனை ஏற்க மறுத்து வாதிட்டனர். யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பம், வகுப்பில் இருந்தவர்கள் முகங்களில் காணப்பட்டது. "தமிழ்க் கலாச்சாரத்தின் சிறப்பை" அன்னியருக்கு பறைசாற்ற விடாமல் குறுக்கீடு செய்த கோபம், தமிழ்ப் பெண்களின் குரலில் தெரித்தது. அன்று என்னோடு வாதம் செய்த அதே பெண்கள், பின்னர் வேலைக்கு சென்று வந்ததையும் கண்டேன். கணவனுடன் சேர்ந்து மேலதிகமாக சில நூறு யூரோக்களை சேகரிக்கும் கடமையுணர்வு, கலாச்சாரத்திற்கு களங்கமாக அவர்களுக்கு தெரியவில்லை.
கனடாவுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களில் யாழ்-வேளாள மேட்டுக்குடி சிந்தனை கொண்டவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரில் பேணிய பழமைவாத கலாச்சாரத்தை உலகம் முழுக்க காவித் திரிந்தவர்கள். அதனால் தான் ஆண்டாண்டு காலம் உழைக்கும் வர்க்கப் பெண்களைக் கொண்ட தமிழ் சமூகம் அவர்கள் கண்களுக்கு அகப்படவில்லை. தமதூர் வயல்களில் கூலியாட்களாக ஆண்களை விட குறைவான சம்பளம் பெறும் பெண்களைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. அவர்களது நடுத்தர வர்க்கப் பின்னணி, உழைக்கும் வர்க்க பெண்களை உதாசீனம் செய்ய வைக்கின்றது.
இலங்கையின் பொருளாதாரம் பெண்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தெற்காசியாவிலேயே இது தனித்துவமானது. "ஆசியாக் கண்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த முதலாவது நாடு." "உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு." இலங்கைக்கு கிடைத்த இது போன்ற பெருமைகளால் கூட, பெண்களின் நிலை அரசியல் அரங்கில் மாறி விடவில்லை. தங்கள் சக்தி என்னவென்று அறியாத சாதாரண உழைக்கும் வர்க்க பெண்கள். தேசத்தின் பொருளாதாரத்தில் தமது பங்கு என்னவென புரிந்து கொள்ளுமளவு படித்தவர்களுமல்ல. இருப்பினும் இலவச கல்வியினால் நன்மையடைந்த பெண் பிரஜைகளை அந்நிய நிறுவனங்கள் கண்டு கொண்டன. 1978 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, "கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையம்" இலங்கைப் பெண்களின் உழைப்பை, மலிவு விலை ஆடைகளாக ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.
கிராமப்புறங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், பழமைவாத கட்டுக்களை உடைப்பதற்கு சுதந்திர வர்த்தக வலையம் உதவியது. விவசாயத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாகவே கிடைத்ததால், பலர் நகரத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். கொழும்பு மாநகரத்திற்கு அருகில், விமான நிலைய ஓரமாக கட்டப்பட்ட தொழிற்சாலைகள், பெண்களை மட்டும் வேலைக்கு அமர்த்தின. ஏன் பெண் தொழிலாளிகளை மட்டும் வேலைக்கு சேர்க்கிறார்கள்? "பெண்கள் மிக நேர்த்தியாக வேலை செய்வார்கள்." என்கின்றனர் முதலாளிகள். ஆனால் குறைந்த கூலி வழங்குவதற்காகவும், மிரட்டி வேலை வாங்குவதற்கும் பெண் தொழிலாளிகளே வசதியானவர்கள். மேலதிக நேரம் வேலை செய்ய மாட்டார்கள் என்பதால், திருமணமான பெண்களை பணிக்கு அமர்த்துவதில்லை.
கிராமங்களில் விவசாயக் கூலியாக வேலை செய்வதை விட, சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்து பெறும் ஊதியம் அதிகம் தான். இருப்பினும் அது கொழும்பு மாநகரில் கொடுக்கப்படும் சராசரி சம்பளத்தை விடக் குறைவு. தினசரி 12 மணி நேரம் கடின வேலை செய்தாலும், மாதச் சம்பளம் நூறு டாலர்களும் இல்லை. வேலை நேரங்களில் சிறுநீர் கழிப்பதற்கு கூட இடைவேளை விடாமல் சுரண்டும் தொழிற்சாலை நிர்வாகம். தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளவோ, வேலை நிறுத்தம் செய்யவோ அனுமதிப்பதில்லை. இருப்பினும் கடுமையான அடக்குமுறை காரணமாக, வேலைநிறுத்தப் போராட்டங்கள் தானாகவே வெடிக்கின்றன.
எத்தனை கஷ்டம் இருந்தாலும், சுதந்திர வர்த்தக வலையப் பெண்கள் பல்லைக் கடித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் நின்று பிடிக்கின்றனர். ஒரே கம்பனியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் ஒருவருக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருப்பதே அதற்குக் காரணம். வாழ்க்கை நரகமாக மாறிவிட்டாலும், பலருக்கு ஊர் திரும்ப விருப்பமில்லை. சுதந்திர வர்த்தக வலயத்தில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அவர்கள் தமது ஊரில் சொல்வதில். அப்படி சொன்னால், எந்தவொரு பெற்றோரும் தமது பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற அச்சம் காரணம். சமூகத்தில் நிலவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக, ஒரு பெண் ஆண் துணை இன்றி வெளியே செல்ல முடியாது. (சிங்கள சமூகம் கூட விதிவிலக்கல்ல) இதனால் கிராமங்களில் சமூகக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த பெண்களுக்கு, சுதந்திர வர்த்தக வலய வேலைவாய்ப்பு, வேண்டிய சுதந்திரம் வழங்குகின்றது. ஒரு தொகைப் பணத்தை வீட்டுக்கு அனுப்புவது போக, மிகுதியை உடைகளுக்கும், அலங்கார சாதனங்களுக்கும் செலவிட முடிகின்றது.
ஒரு காலத்தில், இலங்கைக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தந்த பெருந்தோட்டப் பயிர்செய்கை பிற்காலத்தில் நலிவடைந்தது. முதலில் ரப்பர், பின்னர் தேயிலை விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியுற்றது. இதற்கிடையே 1977 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த யு.ஏன்.பி. தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை மும்முரமாக அமுல்படுத்தியது. உலகவங்கி, ஐ.எம்.எப். என்பன அவர்களுக்கு பின்னால் நின்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தோன்றியவை தான் சுதந்திர வர்த்தக வலையங்கள். மத்திய கிழக்குக்கு பணிப்பெண் ஏற்றுமதியும், மேற்படி பொருளாதாரக் கொள்கையின் பெறுபேறு தான். இது பற்றி பின்னர் பார்ப்போம்.
இன்று ஆயத்த ஆடை ஏற்றுமதி இலங்கையின் முக்கிய வருமானங்களில் ஒன்று. பணக்கார நாடுகில் மலிவுவிலையில் விற்கப்படும் உடுப்புகள், சுதந்திர வர்த்தக வலைய பெண்களின் உழைப்பால் உருவானவை. பருத்தி போன்ற மூலப் பொருட்கள் பிற நாடுகளில் இருந்து தருவிக்கப் பட்டாலும், அவற்றை முழு ஆடைகளாக தைத்து அனுப்புவது இலங்கைப் பெண்கள் தான். இதற்குத் தான் ஐரோப்பிய நாடுகள் GPS Plus சலுகைத் திட்டத்தை கொண்டுவந்தன. 2005 ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப் பட்ட சலுகைத் திட்டம், ஆசியாவில் இலங்கைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அனேகமாக சுனாமிக்கு பின்னரான ஐரோப்பிய உதவியின் ஓர் அங்கமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. தற்போது மனித உரிமைக் குற்றச்சாட்டில் GPS சலுகை மீளப் பெறப்படப் போவதாக கூறப்படுகின்றது. இதனால் லட்சக்கணக்கான பெண் தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.
GPS சலுகையை நம்பி சுதந்திர வர்த்தக வலையங்கள் திறக்கப்படவில்லை. சலுகையினால் சேமிக்கப்படும் பணம், அபிவிருத்தியில் உள்ள சில தடைகளை அகற்றும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. ஐரோப்பிய நாடுகளில் எதையாவது இறக்குமதி செய்ய விரும்புவோர் அதிக வரி செலுத்த வேண்டும். அத்தகைய வரியில் வழங்கப்பட்ட சலுகை சுதந்திர வர்த்தக வலைய முதலாளிகளுக்கு லாபமாகப் போய்ச் சேர்ந்தது. அல்லது ஐரோப்பிய சுப்பர் மார்க்கட்களில் மலிவு விலை உடைகளாக விற்கப்பட்டன. தற்போது வரிச் சலுகையை இரத்து செய்வதற்கு, பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதை பின்வரும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் GPS வரிச்சலுகையை இரத்து செய்யப் போவதாக தடாலடியாக அறிவித்த அதே கணம், கிழக்கிலங்கையில் ஒரு பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நிதியில் கட்டப்பட்ட அந்தப் பாடசாலையை, அவர்களின் பிரதிநிதி ஜனாதிபதி மகிந்தவுடன் சேர்ந்து திறந்து வைத்தார். அதைவிட வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்க உள்ளது.
சுதந்திர வர்த்தக வலைய வேலை பறி போனால், வெளிநாடு சென்று உழைப்பது பற்றி அந்தப் பெண்கள் சிந்திக்கிறார்கள். வளைகுடா நாடுகள், கிரீஸ் போன்ற நாடுகளில் பனிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் பலர் முன்னாள் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளிகள். உண்மையில், தேயிலை போன்ற பாரம்பரிய ஏற்றுமதி வருமானத்திற்கு சமமாக, சுதந்திர வர்த்தக வலயங்களிலும், வெளிநாடுகளிலும் பணி புரியும் பெண்கள் ஈட்டித் தருகின்றனர். பிலிப்பைன்சுடன் போட்டி போட்டுக் கொண்டு, இலங்கை வீட்டுப் பணிப் பெண்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றது. அவர்கள் மாதாமாதம் அனுப்பிவைக்கும் அந்நிய செலாவணி, இலங்கைப் பொருளாதாரத்தை வளர்க்கின்றது.
வெளிநாடுகளில் பணிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஒரு பெண்ணின் சம்பாத்தியத்தில் வாழும் குடும்பங்கள் இலங்கையில் ஏராளம். தமது பிள்ளைகளை பராமரித்து, சிறந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். குடும்பத்தின் செலவை பொறுப்பு எடுப்பதோடு மட்டும் நில்லாது, நிலம் வாங்கி, சொந்தமாக கல் வீடு கட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இலங்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பெண்களே அனேகமாக வெளிநாடு செல்கின்றனர். எனது சக்திக்குட்பட்ட ஆய்வின் படி, கொழும்பு போன்ற முன்னேறிய மாவட்டங்களில் இருந்து மிகக் குறைந்தளவு பணிப்பெண்களே செல்கின்றனர். அதற்கு மாறாக, குருநாகல், அம்பாந்தோட்டை போன்ற அபிவிருத்தி குறைந்த மாவட்ட மக்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
கணிசமான தமிழ், முஸ்லிம் பெண்களும் பணிப்பெண்களாக செல்கின்றனர். இவர்களும் பெரும்பாலும் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். வெளிநாடுகளில் தொழில் புரியும் பணிப்பெண்களில், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை காண்பதரிது. அதற்கு மாறாக, வவுனியா, மட்டக்களப்பில் இருந்து பெருந்தொகை தமிழ், முஸ்லிம் பெண்கள் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். யாழ் குடாநாட்டோடு ஒப்பிடும் போது, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வறிய மக்கள் அதிகம். சுதந்திர வர்த்தக வலையத்திலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பெண்கள் பலர் வேலை செய்வது இங்கே குறிப்பிடத் தக்கது.
மலையகத்தை சேர்ந்த தமிழ் பெண்களும், வெளிநாடு சென்று பணிப் பெண்களாகவோ, அல்லது உள்நாட்டில் சுதந்திர வர்த்தக வலையத்திலோ வேலை செய்கின்றனர். ஆனால் அந்த துறைகளில் மலையகத் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலங்கையில் மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர் வர்க்கம் மத்திய மலை நாட்டில் உள்ளது. முதன்மையான ஏற்றுமதியான தேயிலை, இன்றைக்கும் இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றது. "தேயிலைத் தமிழர்கள்" என்று அழைக்கப்படும், பெருந்தோட்டத் தமிழர்களின் வாழ்வு மலையகத்தின் உள்ளேயே முடங்கி விடுகின்றது. பிரிட்டிஷ் காலத்தில் கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்கள், இன்றைக்கும் தேயிலைக் கம்பனிகளின் தயவிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பெருந்தோட்ட தமிழர்களின் குழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப பாடசாலைகள் என்று எல்லாமே சம்பந்தப்பட்ட கம்பனியின் பொறுப்பில் உள்ளன.
தேயிலத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் எல்லோருமே பெண்கள் தான். ஆண்கள் தேயிலை பதனிடும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். பெண்கள் என்பதால் குறைந்த கூலி கொடுத்து, (ஒரு நாளைக்கு 5 டாலர்) சுரண்ட முடிகிறது. அனேகமாக ஒரு மலைநாட்டுத் தமிழ்ப் பெண், தனது 15 வது வயதிலேயே தேயிலைக் கொழுந்து பறிக்க கிளம்பி விடுவாள். பெருந்தோட்டத் தமிழர்கள் ஆரம்பப் பாடசாலைக் கல்விக்கு அப்பால் கல்வியைத் தொடருவதை, முதலாளிகளும் விரும்புவதில்லை. தொழிலாளரின் குடியிருப்புகள் "லயன்கள்" என அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வீடுகளாக உள்ளன. பிரிட்டிஷ் காலனிய சின்னங்களான லயன்கள் இன்றும் 19 ம் நூற்றாண்டிலேயே உள்ளன. நவீன அடிமைகளின் தடுப்பு முகாம்களான லயன்களில் இருந்து வெளியூர் செல்லுமளவிற்கு அவர்களிடம் வசதியும் இல்லை, தொடர்புகளும் கிடையாது. மலையகப் பெண்கள் தோட்டங்களை விட்டு வெளியேறினாலும், பெரு நகரங்களில் கூலி வேலை மட்டுமே செய்ய முடியும். கொழும்பு நகரில் பணக்கார வீடுகளில், வேலைக்காரிகளாக பல மலையகச் சிறுமிகள் சுரண்டப்படுகின்றனர்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உழைக்கும் வர்க்கப் பெண்கள் இருந்த போதிலும், அதைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. நிறுவனமயப் படுத்த முடியாத அளவுக்கு, அவர்களின் உள்மன அச்சமும், ஆதரவற்ற சூழ்நிலையும் தடுக்கின்றன. அடித்தட்டு மக்கள் திரளுக்குள், அவர்கள் பெண்கள் என மேலும் ஒடுக்கப்படுகின்றனர். சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழிற்சங்கம் அமைக்க அரசு ஆதரவளிப்பதில்லை. அந்நிய தேசத்தில், அடிமையாக வதை பட்டாலும், அதிக பட்சம் தூதுவராலயத்தில் அடைக்கலம் கோரத் தான் முடியும். இலங்கைப் பெண்கள் கடின உழைப்பாளிகள் என்ற நற்பெயரை விட பெரிதாக எந்த வெகுமதியும் கிடைப்பதில்லை.
ஒரு பணிப் பெண் தன்னை வருத்திக் கொண்டு அனுப்பும் பணம், அவரின் குடும்பத்தின் ஊதாரித்தனமான செலவால் கரைந்து போகின்றது. இதனால் ஊர் திரும்பும் பணிப் பெண், மீண்டும் விமானமேறி எங்கோ ஒரு நாட்டில் தனது வேலையை தொடர்கிறாள். மணமான பெண்களாயின், சில நேரம் பிள்ளைகளை தனியே வளர்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மனைவியின் பணத்தில் குடித்து, கும்மாளமடிக்கும் கணவன்மாரால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பொதுவாகவே உழைக்கும் வர்க்கப் பெண்கள் மத்தியில், பாலியல் சுதந்திரம் அதிகமாக காணப்படுகின்றது. ஊதாரியான கணவனை விவாகரத்து வாங்கி விட்டு, காதலனுடன் வாழும் பெண்கள் பலர் உண்டு. அதற்காக இந்தக் கலாச்சார மாற்றத்தை நமது சமூகம் ஏற்றுக் கொண்டு விட்டது என்று அர்த்தமில்லை. இலங்கையின் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் போராடுகின்றார்கள். உழைப்பு எனும் மெழுகுதிரியாக உருகி நாட்டின் பொருளாதாரத்தை ஒளிர வைக்கிறார்கள்.
********************************************************
பெண் தொழிலாளர் பிரச்சினை பற்றிய முன்னைய பதிவுகள்:
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Saturday, January 09, 2010
ஜெர்மனி மீண்டும் உலக வல்லரசாகின்றது

ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்து சென்ற காலத்தில், மேற்கில் பலர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர். போல்ஷெவிக் புரட்சியினால் தமது செல்வங்களை இழந்த மேற்கத்திய முதலீட்டாளர்களே அவர்கள். சோவியத் செஞ்சேனையின் வெற்றிகரமான முன்னோக்கிப் பாயும் தாக்குதலின் பின்பு, நாசி படைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பின்வாங்கின. செஞ்சேனை முழு ஐரோப்பாவையும் விடுவித்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது தான், அமெரிக்க, பிரிட்டிஷ் படையணிகள் மேற்கு-ஐரோப்பாவில் தரையிறங்கின.
ஏற்கனவே பல கிழக்கைரோப்பிய நாடுகளை விடுவித்த சோவியத் படைகள், கிரீசிற்கும் செல்லலாம் என பிரிட்டன் எதிர்பார்த்தது. கிரீசின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தையும், மத்தியதரைக் கடல் மீதான கட்டுப்பாடையும் கருத்தில் கொண்டு, பிரிட்டன் முந்தி விடத் துடித்தது. பிரிட்டிஷ் படைகள் கிரீசில் தரையிறங்கின. கிரீசில் கம்யூனிச கெரில்லாக்கள் ஏற்கனவே பல பகுதிகளை விடுதலை செய்திருந்தனர். அங்கே பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்த கிரேக்க பாசிஸ்ட்கள் பிரிட்டிஷ் படைகளுடன் கூட்டுச் சேர்ந்தனர். இதனால் இரண்டாம் உலகப்போரின் பின்னரும், கிரீசில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் சில வருடங்கள் இழுத்தது.
ஐரோப்பாவில் யுத்தம் முடிவடைந்த பின்னர், பாசிஸ்ட்கள் புகலிடம் தேடி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினார்கள். ஜெர்மன் நாஸிக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், முதலில் சுவிட்சர்லாந்து சென்றனர். சுவிட்சர்லாந்து அந்நேரம் "நடுநிலை" வகித்தது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து பலர் வத்திக்கான் உதவியுடன் அர்ஜென்தீனா சென்றனர். ஹிட்லரின் இனவெறிப் பரிசோதனைகளுக்கு உதவிய ஜெர்மன் விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் அமெரிக்கா, அவுஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் சென்று குடியேறினார்கள். அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகள் அவர்களின் வெளியேற்றத்திற்கு உதவின.
ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு (மேற்கு ஜெர்மனி) உருவான போது, முன்னாள் நாசி அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்தன. நாஸிச படை அதிகாரிகள் பலர் பின்னர் 'நேட்டோ' விலும் உயர் பதவிகளை வகித்தனர். இன்று கூட ஜெர்மன் இராணுவத்தினுள், நாஸிச பரப்புரை அமோகமாக நடக்கிறது. ஜெர்மனியில் அகதி முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய நவ-நாசிகள் பலர் முன்னர் படைவீரர்களாக இருந்தவர்கள். முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் "நாஸிகள் களையெடுப்பு" பகிரங்கமாக நடந்தது. நாஸிக் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் சிறையிலடைக்கப்பட்டனர். முன்னாள் நாஸி ஆதரவாளர்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கை எதுவும் மேற்கு ஜெர்மனியில் காணப்படவில்லை. கண்துடைப்புக்காக சில நாஸிச தலைவர்கள் நியூரன்பெர்க் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.
1989 ம் ஆண்டு, பெர்லின் மதில் வீழ்ந்ததுடன், கிழக்கு-மேற்கு ஜெர்மனிகள் ஒன்றாக இணைந்தன. கிழக்கு ஜெர்மன் அரசில் அங்கம் வகித்த பலர் கைது செய்யப்பட்டனர். பெர்லின் மதிலை கடக்க முயன்ற அகதிகளை சுட்டுக் கொன்ற குற்றங்களுக்காக தண்டனை வழங்கப்பட்டது. 1989 ல் வீழ்ந்தது ஒரு சிறிய மதில். இன்று ஒன்றிணைந்த ஜெர்மனியின் எல்லையில் நீளமான கண்ணுக்குப் புலப்படாத மதில் கட்டப்பட்டுள்ளது. ஆசியா, மற்றும் பல மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளை தடுக்க கட்டப்பட்ட மதில் அது. செல்வந்த ஜெர்மனிக்குள் நுழைய முனையும் அகதிகள் எல்லையில் வைத்து தடுக்கப்படுகின்றனர். சில நேரம் சுடப்பட்டு மரணமடைகின்றனர். இந்தக் கொலைகளுக்காக யாரையும் நாம் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரான ஜெர்மனி, புதிய ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தது. ஏற்கனவே ஐரோப்பாவில் பொருளாதார பலம் மிக்க நாடான ஜெர்மனி, இராணுவரீதியாக பலவீனமாக இருப்பதாக கருதுகின்றது. (இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி இராணுவம் வைத்திருக்க தடை போடப்பட்டது.) இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவம் என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கின்றது. 19 ம் நூற்றாண்டில், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய இரண்டு வல்லரசுகள் உலகை பங்குபோட்டன. 20 ம் நூற்றாண்டில் ஹிட்லரின் ஜெர்மனி தனது பங்கை கேட்டு போரிட்டது.
"அன்றொரு நாள் ஹிட்லர் உலகை ஆள ஆசைப்பட்டான்" என பிரிட்டிஷார் பிரச்சாரம் செய்தனர். ஆனால் உண்மையில், தமக்கு போட்டியாக ஜெர்மனி வந்து விட்டதே என்ற காழ்ப்புணர்ச்சி அப்படி சொல்ல வைத்தது. முன்யோசனையற்ற ஹிட்லரின் வியூகங்களால், அன்று ஜெர்மனி மண் கவ்வியது. சாம்பலில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவை போல மீண்டும் ஜெர்மனி தலைநிமிர்கிறது. வன்முறையைக் கைவிட்டு விட்டு, ராஜதந்திரங்களை பயன்படுத்தி முன்னுக்கு வரத் துடிக்கிறது. மிக நுணுக்கமாக, ஐரோப்பிய ஒன்றியம் என்ற போர்வையின் கீழ் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றது. "ஒரே தேசம், ஒரே குடிமக்கள், ஒரே நாணயம்." போன்ற கோஷங்கள் மீண்டும் ஒலிக்கின்றன. ஆனால் பெயர்கள் மட்டும் தான் மாறியுள்ளன.
(முற்றும்)
Labels:
ஐரோப்பிய ஒன்றியம்,
வரலாறு,
ஜெர்மனி
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Friday, January 08, 2010
ஒன்றிணைந்த ஜெர்மனி : மறைந்திருக்கும் ஆபத்து

2000 ம் ஆண்டு. பெர்லின் நகரம். ஆஸ்திரியாவில் தீவிர வலதுசாரிக் கட்சியின் வெற்றியால் உற்சாகமடைந்த ஜெர்மன் நவநாசிகள் ஊர்வலம் ஒன்றை நடத்துகின்றனர். ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் ஒரேநாடாக இணைய வேண்டும் என கோஷம் போடுகின்றனர். "நாம் ஒரே தேச மக்கள்", பெர்லின் சுவர் வீழ்ந்த நேரம் எழுந்த அதே கோஷம். கம்யூனிச கிழக்கு ஜெர்மனியை ஒன்று சேர்க்க அபிலாஷை கொண்ட அதே குரல்கள். பெர்லின் தெருக்களில் மீண்டும் ஒலிக்கின்றன. கம்யூனிசம் தோற்றது. தேசியவாதம் வென்றது. அன்று அதைக் கொண்டாடினார்கள். ஒன்றிணைந்த ஜெர்மனிக்கு என்று சில கனவுகள் உள்ளன. காலத்திற்கு ஒவ்வாததாக கருதப்பட்ட ஜெர்மன் பேரினவாதத்தை மீண்டும் புதுப் பொலிவுடன் அரங்கேற்றும் தருணம் இது.
கடந்த பல வருடங்களாக பெர்லின் நகரம், ஒவ்வொரு மே தினத்தன்றும் கொந்தளிக்கின்றது. தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் மோதிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. வழக்கம் போல சண்டைக்காட்சியின் முடிவில் வரும் போலிஸ், தீவிர இடதுசாரிகளை மட்டும் கைது செய்து கொண்டு செல்லும். பெர்லின் வரலாறு இது போன்ற பல தெருச் சண்டைகளை கண்டுள்ளது. ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு முன்னர், நாசிகளும், கம்யூனிஸ்ட்களும் அடிக்கடி தெருச் சண்டைகளில் ஈடுபடுவார்கள். "கம்யூனிச காலிகள் வலுச் சண்டைக்கு இழுத்த கதைகளை" ஹிட்லர் "எனது போராட்டம்" நூலில் பதிவு செய்துள்ளார். அதே நூலில், "சிவப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான நாசிகளின் தற்பாதுகாப்பை" நியாயப்படுத்தி இருந்தார். ஹிட்லரை யாருமே பொருட்படுத்தாத அன்றைய காலகட்டத்தில், நாசிகளின் "தற்பாதுகாப்பு" பெரும் ஆக்கிரமிப்பு போராக மாறுவதை எதிர்பார்த்திருக்க முடியாது.
முதலாம் உலகப்போர் ஐரோப்பாவில் அளவிட முடியாத பேரிழப்பை ஏற்படுத்தி இருந்தது. கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். பெரும்பான்மையான மக்கள் அனைத்தையும் இழந்து ஏதிலிகளானார்கள். ரஷ்யாவிலும் அதே நிலைமை. அங்கு லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சி புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தது. உலகின் முதலாவது பொதுவுடைமை அரசு, ஆலைகளையும், தனியார் நிறுவனங்களையும் தேசியமயமாக்கியது. இதனால் ரஷ்யாவில் பெரும் முதல் இட்டிருந்த, மேற்கு ஐரோப்பிய முதலீட்டாளர்கள் அனைத்தையும் இழந்தனர். கடைசி ரஷ்ய சக்கரவர்த்தி ஜாருக்கு வழங்கிய அந்நிய நாட்டுக் கடன்கள் வேறு. "முன்னைய அரசுக்கு ரஷ்ய மக்கள் பொறுப்பேற்க முடியாது." என லெனின் கூறிவிட்டார். தங்களுக்கு ஒரு ரூபாய் தன்னிலும் திரும்ப வராது என்பதால், மேற்குலக அரசுகளும், வங்கிகளும் ஆத்திரமுற்றன.
தொலைவில் இருந்த ரஷ்யா தான் அப்படி என்றால், பக்கத்தில் இருக்கும் ஜெர்மனியும் புரட்சியாளரின் கைகளுக்கு போகும் அபாயம் தோன்றியது. பெர்லின், மியூனிச் போன்ற நகரங்களில் புரட்சி வென்றது. அங்கே "தொழிலாளரின் சோவியத்" பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் சமூக ஜனநாயகக் கட்சி புரட்சியை ஆதரிக்க மறுத்து விட்டது. ஜெர்மன் அரசு இராணுவத்தை அனுப்பி, தொழிலாளர் எழுச்சியை நசுக்கியது. சமூக ஜனநாயகக் கட்சியில் புரட்சியை ஆதரித்த பிரிவினர், கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே, அதன் தலைவர்கள் அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜெர்மன் பாராளுமன்றம், இனி வருங்காலத்திலும் புரட்சியை முளைக்க விடாமல் தடுப்பது குறித்து ஆராய்ந்தன.
இதே நேரம் போரில் தோற்ற ஜெர்மனியை தண்டிப்பதற்காக பொருளாதாரத் தடை கொண்டுவரப்பட்டது. கடன் சுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்றிருந்த ஜெர்மன் அரசியல்வாதிகள் அனைவரையும் வெறுத்தனர். "ஜெர்மனியை மீண்டும் வல்லரசாக்குவதாக" கூறிய ஹிட்லரின் உரைகளை செவிமடுத்தனர். ஒரு புறம் புரட்சிக்கு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்கள். மறுபக்கம் வீராவேச உரைகளால் மக்களைக் கவரும் ஹிட்லர். ஜெர்மன் பாராளுமன்றம், இரண்டாவது தெரிவை விரும்பியது. (கத்தோலிக்க) கிறிஸ்தவ கட்சி ஹிட்லரை அதிபராக்கும் திட்டத்தை முன்மொழிந்தது.
ஹிட்லரின் தேசிய சோஷலிசக் கட்சினர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தினர். முழு அதிகாரத்தையும் கைப்பற்றுவதற்காக ஜெர்மன் பாராளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்கள் மீது பழி போடப்பட்டது. பாராளுமன்றத்தை செயலிழக்க வைத்தாகி விட்டது. ஜென்ம விரோதிகளான கம்யூனிஸ்ட்களையும் ஒடுக்கியாகி விட்டது. இவ்வாறு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுத்தினார் ஹிட்லர்.
நாஸிஸ கொடுங்கோலாட்சி ஆரம்பமாகியது. ஹிட்லரின் இனவெறிக் கொள்கைகள் அரச ஆணைகளாகின. வெள்ளை ஆரிய இனமே உலகில் சிறந்தது, என்ற கற்பிதம் ஐரோப்பியரின் மனதில் விதிக்கப்பட்டது. "ஜெர்மன் இனம் உலகை ஆளப்பிறந்தது" என்று அறிவித்தார் ஹிட்லர். ஆங்கிலேயர்கள் ஜேர்மனிய இனத்தை சேர்ந்தவர்கள். "அங்க்லோ-சாக்சன்" இனக்குழுவில் இருந்து இங்க்லீஷ் என்ற சொல் வந்தது. பிரான்சிலும் ஜேர்மனிய இனமே மேலாதிக்கம் செலுத்துகின்றது. "பிரான்க்" என்ற ஜெர்மன் இனக்குழுவில் இருந்தே பிரான்ஸ் என்ற சொல் வந்தது. டச்சுக் காரரும், ஸ்கண்டிநேவியரும் ஒரே ஜெர்மன் மூதாதையரைக் கொண்டவர்கள் என்பதற்கு, மொழி ஒற்றுமையே சாட்சி. மேற்குறிப்பிட்ட ஆரிய இனங்களை சேராத யூத, ஸ்லாவிய, ரோம (ஜிப்சி) இனங்கள் தாழ்த்தப்பட்டன.
தாழ்த்தப்பட்ட இனங்களை சேர்ந்த மக்கள் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்த முகாம்களில் இவர்களிடம் அடிமை வேலை வாங்கப்பட்டது. ஜெர்மன் அரசு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்கள் கூட அடிமைகளின் உழைப்ப சுரண்டி லாபம் கண்டன. அன்று ரத்தம் குடித்த கம்பனிகள் சில இன்றும் இயங்குகின்றன. Volkswagen , Siemens , Deutsche Bank போன்ற ஜெர்மன் கம்பனிகளும், GE, Ford போன்ற அமெரிக்க கம்பனிகளும் பாசிசத்தால் பயனடைந்தன. இதைவிட பணம், நகை, என்று சேர்த்து வைத்திருந்த பணக்கார யூதர்களிடம் கொள்ளையடித்த பணத்தை வங்கிகள் பங்குபோட்டன.
ஹிட்லரின் அரசு உதயமான போது வாழ்த்துத் தெரிவித்தவர்களில் பாப்பரசர் முக்கியமானவர். அவர் ஏற்கனவே முசோலினியின் பாசிச அரசுக்கு தனது ஆதரவை வழங்கி இருந்தார். ரோம சாம்ராஜ்யக் கனவில் திளைத்த வத்திக்கான், பாசிஸ்ட்களுக்கு அதரவு தெரிவித்ததில் வியப்பில்லை. பாசிச சல்யூட் அடிக்கும் முறை, ரோமரின் வணக்கம் செலுத்தும் முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், சிலுவைப்படை வீரர்களால் மத்திய கிழக்கு யூதர்கள் கொல்லப்பட்டனர். ஸ்பானிய யூதர்கள் கழுவிலேற்றப்பட்டனர். இவையெல்லாம் பாப்பரசரின் ஆசீர்வாதத்துடன் நடந்தவை. ஆகவே வத்திக்கானுக்கும், ஹிட்லருக்கும் இடையில் பெரியளவு கொள்கை வேறுபாடு இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஹிட்லரின் ஜெர்மன் தேசியவாதம் மூன்று நோக்கங்களை கொண்ருந்தது. முதலாவது, அனைத்து ஜெர்மன் மொழி பேசும் மக்களுக்கும் ஒரே தேசம். இரண்டாவது, ஐரோப்பாக் கண்டத்தில் இன/மொழி அடிப்படையிலான தேசிய அரசுகளை உருவாக்குவது. மூன்றாவது, புதிய காலனியாதிக்கம். ஜெர்மானியர்களை ஒன்று சேர்ப்பதற்கு அதிக எதிர்ப்பு வரவில்லை. ஆஸ்திரியாவையும், செக்கொச்லோவியாவின் ஜெர்மன் மொழி மாகாணத்தையும் ஜெர்மனியுடன் சேர்த்ததை, அந்த பிரதேச மக்களும் வரவேற்றனர். அடுத்ததாக அண்டை நாடுகள் மீது படையெடுத்த போது, அந்த நாடுகளின் நாசிச ஆதரவு இயக்கங்கள் ஒத்துழைத்தன. அங்கெல்லாம் பொம்மை அரசுகளை ஆட்சியில் அமர்த்த முடிந்தது.
தனி நாடு கோரிய பிரிவினைவாதிகள் ஹிட்லர் ஆதரவுடன் புதிய தேசங்களை உருவாக்கினர். செக்கொஸ்லாவாக்கியாவில் இருந்து பிரிந்த ஸ்லோவாக்கியா. யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்த குரோவாசியா, போன்றன சிறந்த உதாரணங்கள். இங்கெல்லாம் ஆட்சிக்கு வந்தவர்கள் தீவிர வலதுசாரி பாசிஸ்ட்கள். முசோலினியின் பாசிச இத்தாலி ஏற்கனவே கொசோவோவை செர்பியாவிடம் இருந்து பிரித்து, அல்பேனியாவுடன் இணைத்து விட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரில் வெற்றியடைந்த நேச நாடுகள், ஹிட்லர் பிரித்த புதிய நாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பின.
எதிர்பாராவிதமாக 20 ம் நூற்றாண்டின் இறுதியில் வரலாறு திரும்பியது. மேற்குலக நாடுகள், ஸ்லோவாக்கியா, குரோவாசியா, கொசோவோ போன்ற புதிய சுதந்திர நாடுகளுக்கு ஆதரவளித்தன. புதிய சுதந்திர நாடுகளில், முன்பு நாசிச படைகளுடன் ஒத்துழைத்த அதே நபர்கள் ஆட்சிக்கு வந்தனர். மீண்டும் அதே ஜெர்மனி பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது. இந்த நாடுகளின் சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்த முதல் நாடும் ஜெர்மனி தான். ஹிட்லர் காலத்தில் இருந்து இன்று வரை, ஜெர்மனியின் வெளிவிவகாரக் கொள்கை மாறவில்லை.
(தொடரும்)
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Subscribe to:
Posts (Atom)