Showing posts with label மாவோயிஸ்ட். Show all posts
Showing posts with label மாவோயிஸ்ட். Show all posts

Sunday, November 24, 2019

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்

"நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்": அனைவரும் வாசித்து அறிந்திருக்க வேண்டிய ஆவணம். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிய நூலை இப்போது தான் வாசித்து முடித்தேன். 432 பக்கங்களை சில நாட்களில் வாசித்து முடிக்கும் அளவிற்கு சுவையாக எழுதப் பட்டுள்ளது.

 இது ஒருவரது சுயசரிதை தான். ஆனால், இதனூடாக பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது. அறுபதுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிளவுகள். திருத்தல்வாததிற்கு எதிரான போராட்டம். புரட்சிகர அரசியலுக்காக ஒரு புதிய கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடமைப்பாடு. அதற்கான தத்துவார்த்த விவாதங்கள். அஜிதா இது போன்ற விடயங்களை, நூலின் ஆரம்பத்தில் இலகுவான மொழி நடையில் கூறிச் செல்கிறார்.

ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பெண்ணான அஜிதா, தீவிர கம்யூனிச அரசியல் ஈடுபாடு காரணமாக நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து காடுகளில் தலைமறைவாக வாழும் அளவிற்கு துணிச்சல் உள்ள பெண்மணி. ஆரம்ப கால நக்சலைட் ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுத்த ஒரே பெண்ணாகவும் இருந்துள்ளார். அந்த வகையில் அவரது நினைவுக்குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக உள்ளன.

அஜிதாவின் தாயும், தந்தையும் கூட நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர்கள் தான். இவர்கள் ஆரம்ப காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காலத்தில் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து சென்றுள்ளனர். இவரது தந்தை கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகிய நேரம், "சி.ஐ.ஏ. உளவாளி" என்று எந்த ஆதாரமும் இன்றி அவதூறு செய்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நக்சல்பாரி புரட்சியின் தலைவர் சாரு மாஜும்தார் கூட அஜிதா குடும்பத்தினரை புறக்கணிக்கும் அளவிற்கு கட்சிக்குள் கழுத்தறுக்கும் நபர்கள் இருந்துள்ளனர்.

வட இந்தியாவில் சாரு மாஜும்தாரால் கூட்டப்பட்ட ஒருங்கிணைப்புக் கமிட்டியிலும், பின்னர் உருவாக்கப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) போன்றவற்றில் அஜிதாவின் குடும்பத்தினர் ஆர்வமாக பங்கெடுத்துள்ளனர். (பிற்காலத்தில் சாரு மாஜும்தாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன.) அதே நேரம், கேரளாவுக்கு வருகை தரும் திருத்தல்வாத மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, மகாநாட்டுக்கு அருகில் மாவோவின் நூல்களை விற்பனை செய்வது என்று இவர்களது ஆரம்ப கால கிளர்ச்சி அரசியல் இருந்துள்ளது.

மலைப் பகுதியை சேர்ந்த வயநாட்டு விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது தான் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு தயாராகிறார்கள். அப்போது மன உறுதியற்றவர்கள் விலகிச் செல்கிறார்கள். மரணத்திற்கு அஞ்சாத துணிச்சலான போராளிகள், ஆயுதப்போராட்டம் பற்றிய முன் அனுபவம் ஏதும் இல்லாத நிலையிலும் காடுகளுக்குள் முகாமிட்டு தங்கியுள்ளனர். அப்போது அவர்களது கைகளில் இரண்டு, மூன்று துப்பாக்கிகளும், நாட்டு வெடிகுண்டுகளும் இருந்துள்ளன.

நக்சலைட் போராளிகள் ஒரு போலிஸ் நிலையத்தை தாக்கியுள்ளனர். அங்கிருந்த தொலைத்தொடர்பு கருவியை சேதப் படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் நிலச்சுவாந்தர்களான ஜமீன்தார்கள் வீடுகளை தாக்கி, அங்கு அடமானம் வைக்கப் பட்டிருந்த விவசாயிகளின் கடன் பத்திரங்களை கொளுத்தி உள்ளனர். ஜமீன்தார்களிடம் இருந்த பணம், நகைகளை சூறையாடியுள்ளனர். இதனால் இயக்கத்தின் நிதித் தேவையை ஈடுகட்ட முடிந்தாலும், ஆயுதப்போராட்டம் குறித்த சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அத்தனையும் வீணாகிப் போயின.

உழைக்கும் மக்களின் வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு அந்தப் பகுதி ஆதிவாசி மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவின் பிற பாகங்களில் இருந்து வந்து குடியேறி தமது நிலங்களை பறித்துக் கொண்ட பிற மலையாளிகளை விட இந்த நக்சலைட் புரட்சியாளர்கள் வேறுபட்டுத் தெரிந்தனர். அதனால் அவர்களுக்கு ஆதிவாசி மக்கள் தமது தார்மீக ஆதரவை வழங்கி உள்ளனர். மேலும் ஆதிவாசி இளைஞர்கள் தான் காடுகளில் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். இருப்பினும் நீண்ட காலம் தலைமறைவாக வாழ முடியாத காரணத்தால், அல்லது வேறு வழி தெரியாத படியால் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்றுள்ளனர். அஜிதா உட்பட எஞ்சியோர் ஆள்நடமாட்டம் உள்ள கிராமப் பகுதிக்கு வந்த நேரம், பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வழமையான வெகுஜன அரசியலில் தெருக்களில் போராட்டம் நடத்துவதற்கும், தலைமறைவு அரசியலில் ஆயுதப்போராட்டம் நடத்துவதற்கும் இடையிலான வேறுபாட்டை, அன்று அஜிதா போன்றோர் புரிந்து கொள்ளவில்லை. இதை அவரே தனது நூலில் ஒத்துக் கொள்கிறார். இருப்பினும் "இது தனிநபர் சாகசம்" என்று சொல்வதையும் மறுக்கிறார். அவர்களது ஆயுதப்போராட்டத்திற்கு ஆதிவாசி மக்களின் ஆதரவு இருந்துள்ளது. இந்தியாவில் புரட்சிக்கான தேவையும் இருந்துள்ளது. வாயளவில் புரட்சி பற்றிப் பேசிக் கொண்டே, செயலில் எதையும் காட்டாத கபடவேடதாரிகள் ஒரு மிகப்பெரிய தடையாக (குறிப்பாக தேர்தல் அரசியலில் ஈடுபடும் வலது-இடது கம்யூனிஸ்ட் கட்சியினர்.) இருந்துள்ளனர். அரசாங்கமும் வாய்ச் சொல் வீரர்கள் தமக்கு ஆபத்தில்லாதவர்கள் என்பதால் சில விட்டுக்கொடுப்புகளை செய்கின்றது.

இந்த நூல் அறுபதுகள், எழுபதுகள் காலகட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும், அன்றிருந்த நிலைமை இன்றும் தொடர்வதை நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம். அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு மாவோயிஸ்டுகள் போலிசால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களும் சரணடைய வந்தவர்கள் என்றும், பொலிஸ் முதலில் கைது செய்து பின்னர் "என்கவுண்டர்" கொலை செய்ததாகவும் சொல்லப் படுகின்றது. இதே மாதிரியான சம்பவங்கள் அறுபதுகள், எழுபதுகளிலும் நடந்துள்ளதை அஜிதாவின் நூல் வாயிலாக அறிய முடிகின்றது.

நூலின் அரைவாசிப் பகுதி, அஜிதாவின் சிறை வாழ்க்கையை பற்றி விவரிக்கின்றது. அவர் சிறைச்சாலையில் பிற கைதிகளிடம் இருந்து அறிந்து கொண்ட கதைகளை எழுதி உள்ளார். அவை அடித்தட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் எதிர்நோக்கும் குரூரமான சமூக யதார்த்தம் பற்றிப் பேசுகின்றன. அஜிதா ஓர் ஆயுட்தண்டனை கைதியாக சிறையில் கழித்த காலத்தில் தான் மார்க்சிய நூல்களை ஆழமாகக் கற்றுள்ளார். தீராத்துயருக்குள் சிக்கிக் கொண்டாலும் மன உறுதியை காப்பாற்றுவதற்கு மார்க்சியப் படிப்பு அவருக்கு உதவியுள்ளது. இந்திரா காந்தியின் அவசர கால சட்டம் முடிவுக்கு வந்து, மத்தியில் ஆட்சி மாறியதும் பெரும்பாலான நக்சலைட் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர்.

நக்சலைட் புரட்சியாளர்கள் போலீசில் பிடிபட்டவுடன் அவர்களுக்கு நடந்த சித்திரவதைகள் பற்றியும் இந்த நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. எந்தக் குற்றமும் செய்திராதவரைக் கூட அடித்து கையை உடைக்கும் அளவுக்கு போலிசின் வன்மம் மேலோங்கி காணப்பட்டது. சிறைக்குள் கைதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை கோரினாலும் அடி, உதை, சித்திரவதை தான் பதிலாகக் கிடைக்கும். அந்தளவுக்கு நக்சலைட் புரட்சியாளர்களை கீழ்மக்கள் போன்று, காவல்துறையினரால் வெறுக்கப் பட்டுள்ளனர்.

நக்சலைட் கைதிகள் அத்தனை போரையும் நிரந்தர நோயாளியாக்கும் நோக்குடன் போலிஸ் சித்திரவதைகள் அமைந்துள்ளன. பிற்காலத்தில் அவர்கள் விடுதலையான போதிலும் நிரந்தர நோயாளிகளாக காலம் கழிக்க வேண்டிய அவல நிலை. இதை ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக கருத வேண்டும். ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றும் குழுவினர் ஒடுக்கப்படுவதும் இனப்படுகொலை தான்.

ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் மட்டுமே ஒடுக்குமுறைக்கு காரணம் அல்ல. ஒரே இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வர்க்க முரண்பாடு காரணமாக அதிகார வர்க்கம் அளவுகடந்த வன்முறையை, ஒடுக்குமுறையை பிரயோகிக்கத் தயங்காது என்பதை "நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்" நமக்கு உணர்த்துகின்றன.

Tuesday, February 26, 2013

பிரெஞ்சு மாவோயிஸ்ட் படுகொலையும், தொழிலாளர் வர்க்க எழுச்சியும்


கடந்த நூற்றாண்டில், அறுபதுகளின் இறுதியில், பிரான்ஸ் ஒரு கம்யூனிச புரட்சியின் விளிம்பில் நின்றது என்று சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். இன்றைய தலைமுறையினர், கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்துள்ளனர். இதே மாதிரியான நிலைமை தான், அறுபதுகளில் இருந்த பிரான்சிலும் காணப்பட்டது. ஸ்டாலினின் மறைவின் பின்னர், அரசினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரங்களும், அதற்கு துணையாக அமைந்த குருஷேவின் அரசியலும், ஐரோப்பிய நாடுகளில் "யூரோ கம்யூனிசம்" என்ற சீர்திருத்தவாத கட்சிகள் தோன்ற வழிவகுத்திருந்தது.

அறுபதுகளில் எல்லோரின் வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி வந்து விட்டது. அப்போது நடந்து கொண்டிருந்த வியட்நாம் போரும், அங்கே நடந்த அமெரிக்கப் படைகளின் அட்டூழியங்களும் மக்களுக்கு தெரிய வைத்ததில்,  தொலைக்காட்சி பெட்டிகளும் முக்கிய பங்காற்றின. வியட்நாம் போரை எதிர்க்கும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவியது. அந்த மாணவர்கள் தமது எதிர்ப்பரசியலுக்கு ஒரு கோட்பாட்டை தேடிய பொழுது, மாவோ பற்றி அறிந்து கொண்டனர். இதனால், அன்று தொடங்கிய மாணவர் இயக்கங்கள், பிற்காலத்தில் மாவோயிச கட்சிகளாக பரிணாம வளர்ச்சி கண்டன.

1968 ம் ஆண்டு, பிரான்சில் ஏற்பட்ட மாணவர், தொழிலாளர்கள், விவசாயிகளின் புரட்சி, பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகளால் அடக்கப் பட்டது. ஆனால், புரட்சிகர அரசியல் மறைய பல வருட காலம் எடுத்தது. "இடது-பாட்டாளிகள்" (Gauche Prolétarienne)  என்ற ஒரு மாவோயிச அமைப்பு, பிரான்சில் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது. பிரபல கார் கம்பனியான ரெனோல்ட், கார்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், நிறைய தொழிலாளர்கள் அந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர். தொழிற்சங்க நடவடிக்கை மூலம், வேலை நிறுத்தம் செய்வது, தொழிலாளர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் விநியோகிப்பது என்று பல வழிகளில் இயங்கிக் கொண்டிருந்தனர். தொழிற்சாலை நிர்வாகம், கம்யூனிச தொழிலாளர்களை திடீரென பணிநீக்கம் செய்ததால், தொழிற்சாலை போராட்ட களமாகியது.

1975 ம் ஆண்டு, பெப்ரவரி 25  அன்று, பெருந்தொகையான மாவோயிஸ்ட் தொழிலாளர்கள், ரெனோல்ட் தொழிற்சாலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் முற்றுகையிட்டனர். பாசிச எதிர்ப்புரட்சியாளர்கள் தாக்குவதற்கு வந்தால், அதற்கும் தயாராக தற்காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 26 பெப்ரவரி  1972, பியேர் ஒவெர்னி (Pierre Overney) என்ற மாவோயிச தொழிலாளி, தொழிற்சாலையின் முன்னால் நின்று கொண்டு, பாசிச எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தார். தொழிற்சாலை நிர்வாகத்தினால், காவல் கடமையில் ஈடுபடுத்தப் பட்ட முன்னாள் இராணுவவீரர் Jean-Antoine Tramoni, திடீரென துப்பாக்கி எடுத்து சுட்டார். நெஞ்சில் குண்டடி பட்ட பியேர், அந்த இடத்திலேயே மரணமடைந்தார்.

26.02.1972 அன்று பாசிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு கம்யூனிச போராளி பியேரின் மரணம், பிரான்ஸ் நாட்டை உலுக்கியது. அவரது மரணச் சடங்கில், இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாரிஸ் நகர தெருக்களில், சுமார் மூன்று இலட்சம் மக்கள், செங்கொடிகளுடன் அணிவகுத்து சென்றனர்.  பிரான்சில், இன்னமும் பெருந்தொகையான மக்கள்  மாவோயிச-கம்யூனிச புரட்சியாளர்களை ஆதரவளிக்கின்றனர் என்ற செய்தியை, அந்த ஊர்வலம் உலகுக்கு உணர்த்தியது. அன்று மாலை, பிரான்சின் பிரபல புரட்சிகர பாடகர்,  Dominique Grange கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. மயானத்தில் திரண்ட உழைக்கும் மக்கள் சர்வதேச கீதமிசைக்க, தோழர் பியேரின் பூதவுடல் விதைக்கப் பட்டது.  

இலட்சக் கணக்கான மக்களின் ஆதரவு இருந்த போதிலும், பிரெஞ்சு மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்ந்து இயங்காமல் ஸ்தம்பிதமடைந்தது. 1973 ம் ஆண்டு, சில பூர்ஷுவா வர்க்க மனப்பான்மை கொண்ட தலைவர்களால் கட்சி சீர்குலைந்தது. அவர்கள், "மாவோ முதல் மோசெஸ் வரை" என்ற புதியதொரு கொள்கையை கண்டுபிடித்து, இஸ்ரேலின் ஆதரவாளர்களாக மாறினார்கள். இந்த தலைவர்கள், இன்று அரச இயந்திரத்தின் பல்வேறு பதவிகளை அலங்கரிக்கின்றனர். இதே நேரம், பாட்டாளிவர்க்க நலன் சார்ந்த, அல்லது அந்த வர்க்க பின்னணியில் இருந்து வந்த உறுப்பினர்கள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், புரட்சிகர இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பின்னர் அதற்குள் பிளவு ஏற்பட்டது. ஒரு பகுதியினர், சோஷலிச அல்பேனியாவின் என்வர் ஹோஷாவை ஆதரித்தனர். ஹோஷாவின் மறைவுக்கு பின்னர், பெருவின் ஒளிரும் பாதை இயக்கத்தின் போராட்டத்தை ஆதரித்தனர். அந்த தருணத்தில், பிரான்சில் மாவோயிசம் கோட்பாடு வடிவம் எடுக்க ஆரம்பித்தது. 

இன்னும் சில மாவோயிஸ்டுகள், பிரான்சில் பாட்டாளி வர்க்க புரட்சியை ஏற்படுத்த வேண்டுமானால், நீண்ட கால கெரில்லா யுத்தம் ஒன்றை நடத்த வேண்டும் என முடிவெடுத்தனர். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட அந்தக் குழுவினர்,  Noyaux Armés Pour l’Autonomie Populaire (NAPAP) என்ற பெயரில் இயங்கினார்கள்.  தோழர் பியேரினை படுகொலை செய்த ரெனோல்ட் தொழிற்சாலை காவல்காரரை சுட்டுக் கொன்றமை, அவர்களது முதலாவது தாக்குதலாகும்.  Jean-Antoine Tramoni என்ற அந்தக் காவல்காரர் மீது வழக்குத் தொடுக்கப் பட்டிருந்த போதிலும், அரசின் மெத்தனப் போக்கு காரணமாக விடுதலை செய்யப் பட்டிருந்தார்.  NAPAP இயக்கமும், இன்னொரு புரட்சிகர ஆயுதக் குழுவான Groupes d’Action Révolutionnaire Internationalistes (GARI)   யும் இணைந்து,  Action Directe என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். Action Directe என்ற நகர்ப்புற கெரில்லா இயக்கம், இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர் கூட, ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்திருந்தனர். 

2002 ம் ஆண்டு, பிரான்சில் ஒரு புதிய மாவோயிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப் பட்டது. இந்திய நக்சலைட் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சில் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாது, சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த வருடம், தோழர் பியேரின் நாற்பதாவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்தனர். 

இன்று தோழர் பியேரின் 41 வது நினைவு தினமாகும்.
1972 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடந்த பியர் ஒவெர்னியின் மரணச் சடங்கில், இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டதை காட்டும் வீடியோ இங்கே இணைக்கப் பட்டுள்ளது.




பிரான்சில் கம்யூனிச புரட்சி பற்றிய முன்னைய பதிவுகள்: 

ஐரோப்பிய கலாச்சாரப் புரட்சி

Tuesday, May 29, 2012

சிதம்பரத்தின் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் தடை



ஜான் மிர்தால் (Jane Myrdal)ஒரு புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர்உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் அமைதி இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து சர்வாதிகாரகொடுங்கோல் அரசுகளைக் கண்டித்தும் இயக்கம் நடத்தி வருபவர்என்பத்தி ஐந்து வயதான இந்த உலகறிந்த அரசியல் அறிஞரை இனிமேல் இந்தியாவுக்குள் நுழையக் கூடாதுஎன அறிவித்துள்ளது இந்திய அரசுமாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார்’ என்று குற்றத்திற்காக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிதம்பரம் தலைமை அமைச்சராக இருக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.




யார் இந்த ஜான் மிர்தால்?

ஜான் மிர்தால் புகழ் பெற்ற ஆசிய நாடகம் (Asian Drama) என்ற பொருளாதார நூலை இயற்றிய மறைந்த குன்னர் மிர்தால் (Gunner Myrdal) அவர்களின் புதல்வர்அவரது தாய் ஸ்வீடன் நாட்டின் புகழ் பெற்ற அமைச்சராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணிகளுக்காகவும் பாராட்டப் பெற்ற காலம் சென்ற ஏவா மிர்தால் (Eva Myrdal). கொள்கை அடிப்படையில் இருவரும் சமுக ஜனநாயக வாதிகள், மக்களின் நல்வாழ்வுக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உடையவர்கள்இவர்கள் இருவரது பணிக்காகவும் தனித்தனியாக உலகின் அதி உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபெல் பரிசு தரப்பட்டுள்ளதுஇத்தகைய மிகவும் உயர்ந்த சமுக லட்சியங்களுக்காக வாழ்ந்து மறைந்த இந்தக் குடும்பத்தில் பிறந்தவர் ஜான் மிர்தால்.

தமது பெற்றோரைப் போலவே தாமும் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜான் மிர்தால்தம் வாழ்வின் பெரும் பகுதியை அதாவது சுமார் அறுபது ஆண்டுகளாக ஜான் மிர்தால் மக்கள் பணி ஆற்றி வருகிறார்உலகின் பலபகுதிகளில் நடைபெறும் அமைதி போராட்டங்களுக்குஇயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்போராடும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை எப்போதும் ஆதரித்து வருபவர்தமது நாட்டு அரசாங்கத்தையும் வெளிப்படையாகக் கண்டித்து இவர் பெரிய அளவில் இயக்கங்கள் நடத்தி உள்ளார்அடிப்படையில் இவர் ஒரு ஆய்வாளர்ஜனநாயகவாதி, எழுத்தாளர்பேச்சாளர்.

இவர் சில காலம் இந்தியாவில் தங்கியும்பல முறை பயணம் செய்தும் பிரபலமான நூல்களை எழுதியிருக்கிறார்1983 ம் ஆண்டு இவர் எழுதிய இந்தியா காத்திருக்கிறது(India Awaits) என்ற நூல் தமிழ் உள்பட பல மொழிகளில்பல பதிப்புகள் வெளிவந்துள்ளதுஇதே போலவே கடந்த ஆண்டில் இந்தியாவின் மீதொரு சிவப்பு நட்சத்திரம் அடிமைப்பட்ட மக்கள் விழித்தெழும்காலையில் நமது பார்வைகள்,பிரதிபலிப்புகள்விவாதங்கள்(Red Star Over India. Impressions, Reflections and Discussions when the Wretched of the Earth are Rising.) என்ற நூலை வெளியிட்டுள்ளார்இந்த நூல் இந்தியாவின் கல்கத்தாடில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இவர் நேரடியாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்மாணவர்கள்முன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
ஆங்கிலத்தில் மட்டும் தற்போது கிடைக்கும் இந்த நூல் இந்திதெலுங்குவங்காளிதமிழ்,பஞ்சாபி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் அச்சில் வெளிவர இருக்கின்றது.முன்னெப்போதும் இல்லாத அளவில் வரவேற்புப் பெற்ற இந்த நூலையும் அதன் மொழி பெயர்ப்புகளையும் கண்டு கிலி கொண்ட மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அதன் எழுத்தாளரையே தடை செய்துவிட்டனர்இது மட்டும் அல்லாது தம்மைஅறிவாளிகளாககருதிக் கொள்ளும் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளியுமான சிதம்பரமும் செய்து வரும் படுகொலைகள் பேராசை பிடித்த தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் செய்து வரும் சேவை என்ற விபரத்தை ஜான் மிர்தால் உலகின் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்பல ஐரோப்பியஆசிய மொழிகளில் வெளியாகும் அவரது எழுத்துகள் சமீப காலமாக இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் (அவ)மானப் பிரச்சனையாகியுள்ளதுஎனவே,இவரது எழுத்துகளைத் தடை செய்ய ஒரு வழியாக அவரையே தடை செய்து விட்டனர்.


மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை?

மாவோயிஸ்டுக் கட்சியினரின் கருத்துகளை இந்தியப் பத்திரிகைகள்தொலைக் காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது இயக்கம் பணி செய்யும் பகுதிகளுக்குச் சென்று இயக்கத்தின் தலைவர்களையும் மக்களையும் நேரடியாகக் கண்டு பேட்டியெடுத்து வெளியிட்டவர் ஜான் மிர்தால்அவரது பேட்டிகளும் குறிப்புகளும் மத்திய இந்தியாவில் நடக்கும் அடக்குமுறை பற்றிய விபரங்களை சர்வதேசத்திற்கும் சிறப்பாக அறிமுகம் செய்ததுஇதில் இருந்து தான் உலகம் மாவோயிஸ்டுகளின் உண்மையான நிலைபாடுகளை அவர்களின் வெட்டிச் சிதைக்கப் படாத முழுமையான பேட்டிகள் மூலம் நேரான வழியில் அறிந்து கொள்ள முடிந்ததுஅப்போதிருந்தே அவரைக் குறி வைத்திருந்த இந்திய அரசு காரணம் எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் மாவோயிஸ்டுகளுக்கு அவர் ஆலோசனை சொன்னதாக குற்றம் சாட்டியுள்ளதுதாம் ஆலோசனை எதுவும் சொல்லவில்லை என்றும் தான் பேசிய அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதுமாணவர்கள்இளைஞர்கள்,அறிவாளிகள் பங்கேற்ற அரங்கக் கூட்டங்கள் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார். 


பொய்யே தொழிலாகக் கொண்ட சிதம்பரம் இந்த மட்டும் ஒரு வரியில் தம் பொய்யை நிறுத்தியது நமக்கு வியப்பு இல்லை.

இவருடைய சமீபத்திய நூல்மத்திய இந்தியப் பழங்குடிகளுக்குச் சொந்தமான நிலங்களை சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் பிடுங்கி வருவதை விளக்குகிறது.இந்தியாவின் போலீசையும்ராணுவத்தையும் கொண்டு பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதை இந்த நூல் தமது கள ஆய்வு விபரங்களுடன் வெளியிட்டுள்ளதுமாவோயிஸ்டுகளுக்கு எதிராக போர் நடத்துகிறோம் என்று சிதம்பரம் சொல்வது உண்மையில் பழங்குடிகளின் நிலத்திற்கான போர் என்ற விபரங்களை மீண்டும் ஒருமுறை இந்த நூல் நிறுவியுள்ளதுகுறிப்பாக மாணவர்கள்அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் இந்த நூல் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு சகிக்காத சிதம்பரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.இதுவரை இந்த நூலை இந்திய அரசு தடை செய்யவில்லைஆயினும்அது குறித்துப் பேசவோ மீண்டும் ஆய்வுக்கான விபரங்கள் சேகரிக்கவோ ஜான் மிர்தால் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடையை விதித்துள்ளது.



ஸ்வீடனும் இந்தியாவும்

ஸ்வீடன் நாட்டு பீரங்கிக் கம்பெனியான போபார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் சிதம்பரத்தின் எஜமான் ராஜிவ் காந்தி லஞ்சம் பெற்றதை அறிந்த அளவுக்கு ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளை அறியவில்லைஇது துரதிர்ஷ்டமே.

ஸ்வீடன் நாட்டின் அறிவாளிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மிகப்பெரும் பங்கு ஆற்றியுள்ளனர்ஐரோப்பிய மக்களுக்கு இந்தியாஇலங்கைமலேசியா போன்ற அடிமைப்பட்ட நாடுகளில் வெள்ளையின அரசாங்கங்கள் நடத்தும் படுகொலைகளையும் கொடுங்கோல் ஆட்சியையும் வெளிக் கொண்டுவந்ததில் இவர்களது பணி மிகவும் முக்கியமானதுஇந்த வகையில் ஜான் மிர்தால் அவர்களின் குடும்பம் அளப்பறிய பணியாற்றியிருக்கிறது.

அடிப்படைப் பொருளாதாரக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள்அரசியல் ஊழியர்கள் தாம் அவசியம் படித்துத் தேற வேண்டிய அடிப்படை நூல்கள்ஆய்வுகள் பலவும் ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளால் வெளியிடப் பட்டுள்ளது என்றால் அது மிகையல்லஅதிலும் குறிப்பாகஇன்றளவும் இந்திய அரசு பொருளாதார ரீதியாக விவசாயிகளைப் பிரித்து ஆராயவும்அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தும் மூல விபரங்கள் குன்னர் மிர்தால் எழுதிய ஆசிய நாடகம்என்ற ஆய்வு நூலில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளதுஅவர் வழங்கிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தான் இந்திய அரசால் விவசாயிகள் தரம் பிரிக்கப்பட்டு சிறிய (small)நடுத்தர (medium), பெரிய (Big)விவசாயிகள்நிலச்சுவான்தார்கள்(Landlords)என்று வகைப் படுத்தப் பட்டுள்ளனர்.இதனையே அரசின் திட்டங்கள் அடிப்படியாகக் கொண்டுள்ளன.

இவரைப்போலவேவெள்ளையர் ஆட்சியின் பொழுதுஇந்தியாவின் வறுமையின் காரணம் என்ன?, நாடு எப்படி வெள்ளையர்களால் கொள்ளையிடப் படுகிறது என்பதை ஒரு நீண்ட ஆய்வின் அடிப்படையில் மிகப் பெரும் புள்ளி விபரங்களுடன்இன்றைய இந்தியா (India Today)” என்ற ஒரு மிகப் பெரிய நூல் வெளியிட்ட ரஜனி பாமி தத் (Rajani Palme Dutt) என்ற அறிஞரும் ஸ்வீடன் நாட்டு வம்சாவழியில் வந்தவரே.



சிதம்பரமும் ஜான் மிர்தாலும்

இந்தியாவை ஒட்டச் சுரண்டும் ஐரோப்பியக் கம்பெனிகள்அமெரிக்கக் கம்பெனிகளின் அதிகாரிகள்சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் ஆட்டக் காரர்கள்அழகிப் போட்டி நடத்தும் நிறுவனங்கள்மூட நம்பிக்கையைப் பரப்பும் மதவெறிப் பிரச்சாரகர்கள்ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்கள்நடிகைகள் இந்தியாவில் பயணம் செய்யவும்கூட்டங்கள் நடத்தவும்தொழில் நடத்தவும் சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சிறப்புச் செய்து அவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறதுஏன்உலகறிந்த கொலைகாரன் ராஜ பக்சேவும் அவன் சகோதரர்களும் இந்தியாவுக்கு வரவும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கவும் இதே சிதம்பரம் தயங்கியதில்லைஇப்படிக் கொள்ளையர்கள்,கொலைகாரகள்சரச சல்லாபத் தொழில் செய்வோரை வரவேற்று அவர்களுக்கு ஜமுக்காளம் விரித்துஉடனிருந்து பாதுகாப்பும் உபச்சாரமும் செய்யும் சிதம்பரத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவாளியை இந்தியாவுக்குள் வரக் கூடாது என்ற அறிவிப்புச் செய்துள்ளது நமக்கு வியப்பைத்தரவில்லை.

இந்தியப் பாரம்பரியம் பற்றி அடிக்கடி பேசும் சிதம்பரத்தின் முன்னோர்கள் கந்து வட்டிக்குக் கடன் கொடுத்து வந்த பரம்பரை என்பது தமிழர்கள் அறிந்த விஷயம்.தமிழரான சிதம்பரத்தின் முன்னோர்கள் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்இந்தியா,மலேசியாபர்மா போன்ற உலகின் பல நாடுகளில் வெள்ளையர்களின் துணையோடு வட்டிக் கடைகள் நடத்தச் சென்ற போது ஐரோப்பியரான ஜான் மிர்தாலின் குடும்பம் உலகெங்கும் உள்ள அடிமைப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்ததுபோராடியதுஅது இன்றும் தொடர்கிறதுசிதம்பரம் கொள்ளைக்காரக் கம்பெனிகளுக்கு எடுபிடியாக,துணைவனாக இருந்து நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார்மிர்தால் போராடும் மக்களுக்கு துணையாக இருந்து அவர்களது நியாயத்தை பேசுகிறார்எழுதுகிறார்.

சிதம்பரத்தின் முன்னோர்கள் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்த காலத்தில் அதற்கு எதிராக சர்வதேச மக்களுக்காகக் குரல் கொடுத்த ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளின் மரபில் வந்தவர் ஜான் மிர்தால்சிதம்பரம் தன் முன்னோர்கள் சென்ற அதே துரோகப் பாதையில் செல்கிறார்மிர்தால் மக்களுக்காக பாடுபடுகிறார்.

எப்படி வேசமிட்டாலும் சிதம்பரம் போன்றவர்கள் இனம் இனத்தோடே சேரும் என்ற விதியை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.


தடையை விலக்குக

கிடைக்கும் இடங்களில் எல்லாம் தம்மை ஒரு படிப்பாளியாக அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் சிதம்பரம் தாம் உண்மையில் ஒரு ஒரு பொய்யர் மட்டும் அல்ல அறிவாளிகளின் எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியுள்ளார்.அறிவாளிகளைஆய்வாளர்களை இந்தியாவுக்குள் நுழையவும்ஆய்வு செய்யவும்,பேசவும்எழுதவும் அனுமதியில்லை என்று அறிவிப்புச் செய்திருக்கும் மன்மோகன் சிங் சிதம்பரத்தின் கூட்டணி ஒரு நேர்மையில்லாத ஒரு அயோக்கியர்களின் கூட்டணி என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்இதை இந்திய மாணவர்கள் அறிவாளிகள் அனுமதிக்க முடியாதுகூடவும் கூடாதுஇந்திய அறிவாளிகள்,மாணவர்கள்இளைஞர்கள் பலவாறாக ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளுக்கு கடன் பட்டுள்ளார்கள்இந்த அநீதிக்கும் சிதம்பரத்தின் துரோகத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது தமிழ் நாட்டு மாணவர்கள்இளைஞர்கள்அறிவாளிகளது கடமை

இந்திய அரசின் இந்த தடையை கண்டிக்க வேண்டியது அனைத்து சனநாயக சக்திகளின் கடமையும்கூட.

ஜான் மிர்தால் தமது வாழ்வின் நீண்ட பயணம் பற்றிய பேட்டி இங்கே:

Tuesday, January 17, 2012

அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் இந்திய- மாவோயிஸ்ட் போராளிகள்

இந்தியாவில் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டுப் பிரதேசமான தண்டகாரண்யாவில், இந்த ஆவணப் படம் படமாக்கப் பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகக் குழுவினர், அடர்ந்த காட்டிற்குள் மாவோயிஸ்ட் போராளிகளின் முகாமில் நடக்கும் நிகழ்வுகளை படமாக்கியுள்ளனர்.