Wednesday, November 03, 2021

ஈழ தேச மாயையும் முஸ்லிம் தேசிய இனப் பிரச்சினையும்

திருப்பூர் குணா எழுதிய‌ "இஸ்லாமிய‌ தேசிய‌ மாயைக‌ளும் ஈழச் சிக்க‌லும்" நூலில் ப‌ல‌ த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ள் உள்ள‌ன‌. சில‌ இட‌ங்க‌ளில் த‌மிழ் மொழி அடிப்ப‌டைவாத‌ அல்ல‌து த‌மிழ்ப்பேரின‌வாத‌ ம‌ன‌நிலையுட‌ன் எழுத‌ப் ப‌ட்டுள்ள‌து. இந்த‌ த‌க‌வ‌ல் முழுக்க‌ முழுக்க‌ த‌வ‌றான‌து: 

//இந்த நேரத்தில் இசுலாமியர்கள் தமது கல்வி மொழியாக சிங்களத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தமிழ் மொழி இசுலாமியர்களின் தாய்மொழி அல்ல என்றும் இசுலாமியத் தலைமை பிரச்சாரம் செய்தது. இசுலாமிய மாணவர்கள் பெரும்பான்மையாகக் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் தமிழ் அதிபர்களை நியமிக்கக் கூடாதென்றும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.// 

உண்மையில் சிங்க‌ள‌ப் ப‌குதிக‌ளில் வாழும் முஸ்லிம் மாண‌வ‌ர்க‌ளை பெரும்பான்மையாகக் கொண்ட‌ பாட‌சாலைக‌ளில், இன்றைக்கும் த‌மிழ் தான் போத‌னா மொழியாக‌ உள்ள‌து. (ஒரு இந்து/கிறிஸ்த‌வத் த‌மிழர் கூட‌ இல்லாத‌) சிங்க‌ள‌ப் பிர‌தேச‌ங்க‌ளில் வாழும் இஸ்லாமிய‌ர்க‌ள் இன்றைக்கும் த‌மிழை தாய்மொழியாக‌ கொண்டுள்ள‌ன‌ர். அன்றாட‌ வாழ்வில் ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர். த‌ம‌து பிள்ளைக‌ளை த‌மிழ் மொழியில் ப‌டிக்க‌ வைக்கிறார்க‌ள். 

நூலில் உள்ள‌ இந்த‌ த‌க‌வ‌ல் முழுவதும் க‌ற்பனை. ஒரு புனைய‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுக்க‌தை. இப்ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்க‌வேயில்லை: 

//1986-இல் யாழ்ப்பாணத்தில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பு ஒன்று 782 உறுப்பினர்களுடன் பலமான நிலையில் இருந்துள்ளது. யாழ்ப்பாண இசுலாமியர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் அதுதான் கையாண்டு வந்திருக்கிறது. மட்டுமல்லாமல் இசுலாமிய இளைஞர்கள் எந்த தமிழீழ ஆயுதக்குழுக்களிலும் பங்குபெறக் கூடாதென்று வாய்மொழி உத்தரவும் பிறப்பித்திருந்தது. அந்த நேரத்தில் அங்கு 30-க்கும் மேற்பட்ட தமிழீழ ஆயுதக்குழுக்கள் செயற்பாட்டில் இருந்திருக்கின்றன. இவற்றில் பல இசுலாமிய இளைஞர்கள் சேர்ந்து செயல்படவும் ஆரம்பித்துள்ளனர். இது யாழ்ப்பாண இசுலாமியர் விசயத்தில் தமிழீழ ஆயுதக்குழுக்கள் தேவையின்றி மூக்கை நுழைப்பதாக கருதப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அனைத்து தமிழீழ ஆயுதக்குழுக்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. ஜின்னாஹ் வீதியிலுள்ள எஸ்.ஏ.சீ.நிலாம் அவர்கள் வீட்டு வளாகத்தில் நடந்த கூட்டத்தில் 36 தமிழீழ ஆயுதக்குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இசுலாமிய சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட கூட்டத்துக்கு ஹிஜாஸ் என்பவர் தலைமை தாங்கியிருக்கிறார். “முஸ்லிம் சமுதாயத்தை தமிழ் ஆயுதக்குழுக்களால் கையாள முடியாது. அதனால் முஸ்லிம்கள் குறித்த எந்தப் பிரச்சினையானாலும்; அதை இஸ்லாமிய இளைஞர் அமைப்பிடம் கையளிக்க வேண்டும். அதை அவர்களே தீர்த்து வைப்பார்கள். அத்துடன் முஸ்லிம் இயக்கங்கள் மீது எந்தத் தமிழ் ஆயுதக்குழுவும் அத்துமீறக்கூடாது. தன்னிச்சையாக செயல்படவும் கூடாது” என்று தமிழீழ ஆயுதக்குழுக்களுக்கு அறிவுத்தப்பட்டது. இதனை தமிழீழ ஆயுதக்குழுக்கள் ஏற்றுக்கொண்டு ஒப்பமிடவும் செய்தன.// 

1986ம் ஆண்டு அங்கே 36 த‌மிழீழ‌ இய‌க்க‌ங்க‌ள் இருக்க‌வில்லை. இது முழுக்க‌ முழுக்க‌ த‌வ‌றான‌ த‌க‌வ‌ல். 1984ம் ஆண்டு தொட‌க்க‌த்திலேயே மொத்த‌ம் 5 இய‌க்க‌ங்க‌ள் தான் இருந்த‌ன‌. 1986 ம் ஆண்டு ஏனைய‌ இய‌க்க‌ங்க‌ளை அழித்து விட்டு புலிக‌ள் ஏக‌போக‌ உரிமை கோரினார்க‌ள். எஞ்சிய‌ ஈரோஸ் ம‌ட்டும் புலிக‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொண்ட‌து. அத்த‌கைய‌ நிலையில் ஒரு "ப‌ல‌மான‌" இஸ்லாமிய‌ இளைஞ‌ர் அமைப்பு இருந்திருக்க‌ சாத்திய‌மே இல்லை. இது முழுக்க‌ முழுக்க‌ ஒரு க‌ட்டுக்க‌தை. 

 ***** 

திருப்பூர் குணா எழுதிய "இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச் சிக்கலும்" என்ற நூல் மீதான விமர்சனம். இலங்கையில் உள்ள முஸ்லிம் தேசிய இனப்பிரச்சினை பற்றிய கிளப் ஹவுஸ் கூட்டம். பகுதி - 1 

 https://youtu.be/c0HFyqGVFKw

 

No comments: