Sunday, November 21, 2021

துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்!

 


துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்! துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியை(TKP) சேர்ந்த Fatih Mehmet Maçoğlu கிழக்கு துருக்கியில் உள்ள துன்செலி (Tunceli) உள்ளூராட்சி சபை மேயராக இருக்கிறார். இவரது ஆட்சியில் பல சோஷலிச பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 

சுமார் 33000 பேரை சனத்தொகையாக கொண்ட துன்செலியில் சிறுபான்மையின குர்திஷ், அலாவி, ஆர்மீனிய மக்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். அங்கே வேலையில்லாதோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

கடந்த தேர்தலில் Mehmet Maçoğlu மேயராக தெரிவானார். அவர் தனது முதலாவது கடமையாக வேலையில்லா பிரச்சினையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன் படி கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன. தற்போது அந்த பண்ணைகளில் உற்பத்தியாகும் மிதமிஞ்சிய தேன் துருக்கி முழுவதும் ஏற்றுமதியாகிறது.

இதைத் தவிர நகர எல்லைக்குள் இலவச பொதுப் போக்குவரத்து சேவை, இலவச தண்ணீர் விநியோகம் செய்து கொடுக்க பட்டுள்ளது. அத்துடன் ஏழைகளுக்கான சலுகைகள் வழங்க படுகின்றன. வெளிநாடுகளில் வாழும் இடதுசாரி துருக்கியரும் சமூக நலத் திட்டத்திற்கு நிதியுதவி செய்துள்ளனர்.

துருக்கியின் ஒரேயொரு கம்யூனிச மேயரின் சாதனைகளை கேள்விப்பட்ட பலர், கடந்த காலத்தில் தாம் கொண்டிருந்த கம்யூனிசம் தொடர்பான தப்பெண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.

No comments: