Friday, June 18, 2021

வட கொரிய வாழைப்பழ கதை! (12+ சிறுவர்களுக்கு மட்டும்)

 

வட கொரியா - ஒரு வாழைப்பழ ஜோக் கதை! 
(12+ சிறுவர்களுக்கு மட்டும்) 
மாலைமலர் பத்திரிகையில் வட கொரியா புனைகதை எழுதும் போட்டியில் முதல் பரிசு வென்றவர் எழுதிய கற்பனைக் கதையில் ஒரு பகுதி: 
//விலைவாசியும் கடுமையாக உயர்ந்து விட்டது. 1 கிலோ வாழைப்பழம் ரூ.3,500-க்கு விற்கிறது.//

புவியியல் கற்போம்: 
வட கொரியா ஒரு குளிர் நாடு. அதாவது, புவியின் கடுங் குளிர்ப் பிரதேசமான, வட துருவத்தை அண்டிய (ரஷ்யாவின்) சைபீரிய பிராந்தியத்திற்கு சற்று கீழே உள்ளது. வாழை மரம் வெப்ப மண்டல பிரதேசத்தில் மட்டுமே வளரும் தாவரம். அது கடும் குளிர் பிரதேசத்தில் வளராது.

பொருளியல் கற்போம்: 
ஆகவே வடகொரியாவில் வாழைப்பழம் வாங்க வேண்டுமானால், அது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட வேண்டும். அதிலும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் தாண்டி வரவேண்டும். இதற்குள், கடந்த வருடத்திய கொரோனா நெருக்கடிகள் வேறு. இதை எல்லாம் தாண்டி வாழைப்பழம் வருவதற்குள் அதன் விலை பல மடங்கு உயர்ந்து விடும். மேலும் அது அத்தியாவசிய பொருள் அல்ல என்பதால் இறக்குமதிக்கான தேவையும் குறைவாக இருக்கும். சந்தையில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு இருந்தால் விலை அதிகரிக்கும். அடிப்படை முதலாளித்துவ விதி.

மாலைமலர் காமெடி: 
//1 கிலோ வாழைப்பழம் ரூ.3,500-க்கு விற்கிறது. இவற்றை வாங்கி சாப்பிட பணம் இல்லாமல் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்.// 
ஓஹோ...! வட கொரியாவில் வாழைப்பழம் தான் மக்களின் பிரதானமான உணவு போலிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சோற்றுக்கு பதிலாக வாழைப்பழம் மட்டும் சாப்பிடுவார்களாம். அத்தகைய பிரதானமான உணவு கிடைக்காமல் மக்கள் பட்டினி கிடக்கிறார்களாம். கேட்பவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓடுமாம்.

மாலைமலரின் மலையளவு புளுகு: 
//பல லட்சம் பேர் பட்டினி கிடப்பதாகவும் அவர்களில் பலர் 2 நாட்களுக்கு ஒருதடவை சாப்பிடுவதாகவும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.//

ஆங்கிலம் கற்போம்: 
மாலைமலர் காமெடி எழுத்தாளர் தான் எழுதிய புனைவுக்கு ராய்ட்டர் செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டுகிறார். ஏனென்றால் இங்கே யாருக்கும் ராய்ட்டர் செய்தி வாசிக்கும் அளவுக்கு ஆங்கிலம் தெரியாது பாருங்க! எப்படியும் ஏமாற்றலாம் என்ற எண்ணம்? இந்த சுட்டியில் ராய்ட்டர் செய்தியை இணைத்திருக்கிறேன். அதில் மாலைமலர் புளுகுவது மாதிரி எங்கே எழுதி இருக்கிறது? 


மாலைமலர் நிருபர் போதையில் உளறியது: 
//நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அதிபர் கிங்ஜாங் உன்னும் ஒப்புக்கொண்டுள்ளார்.// 
அங்கு பஞ்சம் நிலவுவதாக இதுவரை உலகில் யாரும், எந்தவொரு ஊடகமும் தெரிவிக்கவில்லை. இது மாலைமலர்க் காரன் தானாக இட்டுக் கட்டிய கதை.

சமூகவியல் கற்போம்: 
வட கொரியா பொருளாதாரத் தடைகள், கொரோனா காரணமாக எல்லைகளை மூடியமை, சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயல், வெள்ள அனர்த்தம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் உணவுப் பொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இது தான் செய்தியின் சாராம்சம். அதிலும் வட கொரியாவில் மக்கள் அனைவருக்குமான உணவுப் பங்கீட்டை அரசே பொறுப்பெடுத்து செய்கின்றது. ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. இப்படி பாரபட்சம் காட்டாமல் உணவு வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று தான் வட கொரிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த மாலைமலர் பத்திரிகை வெளியாகும் இந்தியாவில் நிலைமை அப்படியா இருக்கிறது? கடந்த வருடமும், இப்போதும் லொக் டவுன் காலத்தில், எத்தனை இலட்சம் ஏழை மக்கள் உணவில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள் என்பது இந்தப் பத்திரிகைக்கு தெரியுமா? "ஐயகோ, இந்திய மக்கள் அனைவருக்கும் எப்படி உணவளிப்பேன்?" என்று, பாரதப் பிரதமர் மோடிஜி என்றைக்காவது சொல்லி இருப்பாரா? "யோவ்! மாலைமலரு, மொதல்ல ஒன்னோட நாட்டை பாருய்யா! அதுக்கு அப்புறம் வட கொரியாவுக்காக கண்ணீர் வடிக்கலாம்!"

இந்த உணவுத் தட்டுபாட்டுப் பிரச்சினை இன்று உலகின் பல நாடுகளிலும் உள்ளது. ஏனென்றால் கொரோனா முடக்கம் காரணமாக சர்வதேச போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் Brexit காரணமாக பிரித்தானியாவில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய ஒப்பந்தங்கள் செய்து கொண்டதால் அந்த நிலைமை தவிர்க்கப் பட்டது. அதற்காக பிரித்தானியாவில் பஞ்சம் நிலவுகிறது என்று யாரும் சொல்லவில்லை. சொன்னாலும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால், வடகொரியாவை பற்றி எவனும் எப்படியும் கதை கட்டி விடலாம். நம்புவதற்கு ஏராளம் முட்டாள் பசங்க இருக்காங்க!

மாலைமலர் புளுகுக் கட்டுரையை வாசிப்பதற்கு: