Thursday, December 26, 2013

பின்லாந்தில் முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம்


பின்லாந்து நாட்டில், தம்பாரே (Tampere) எனும் நகரில், வரலாறு காணாத கலவரம் ஒன்று நடந்துள்ளது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பின்னிஷ் இளைஞர்கள், முதலாளித்துவத்திற்கும், தேசியவாதத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, கலவரத் தடுப்பு பொலிசார் குவிக்கப் பட்டனர். இதனால் அந்த நகரில் கலவரம் வெடித்தது. நகரில் காணப்பட்ட முதலாளித்துவ சின்னங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. பொலிஸ் வாகனங்களும் தாக்கப் பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப் பட்டனர். டிசம்பர் 6, பின்லாந்து நாட்டின் சுதந்திர தினமாகும். அன்று தம்பாரே நகரில் ஐஸ் ஹொக்கி விளையாட்டுப் போட்டி நடந்த மைதானத்தின் அருகிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 


இந்தக் கலவரம் டிசம்பர் 6 ம் தேதி இடம்பெற்ற போதிலும், இன்று தான் எனக்கு தகவல் கிடைத்தது. உலகில் எங்காவது முதலாளித்துவ எதிர்ப்பு கலவரங்கள் நடந்தால், அந்த செய்திகளை தணிக்கை செய்வதை வாடிக்கையாக கொண்ட ஊடகங்கள் இதைப் பற்றி தெரிவிக்காததில் அதிசயமில்லை.

இந்த தகவல் பின்லாந்து ஊடகங்களில் மட்டுமே வெளியாகியது. சர்வதேச ஊடகங்கள் எதுவும் கவனம் செலுத்தவில்லை. கீழே ஒரு வீடியோவை இணைத்துள்ளேன். 

மேலதிக தகவல்களுக்கு:

Alternative Independence Day: Riots and shadow celebrations

No comments: