Friday, July 29, 2011

ஏழை யூதரின் எழுச்சி! இஸ்ரேலில் வர்க்கப் புரட்சி!!

"தேனும்,பாலும் ஆறாக ஓடும் நாடாக, ஆண்டவரால் வாக்களிக்கப்பட்ட" இஸ்ரேலில் வர்க்கப் போராட்டம். மூன்று லட்சம் இஸ்ரேலியர்கள் சமூக நீதி கோரி வீதியில் ஆர்ப்பாட்டம். சர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு. இஸ்ரேலில் ஆரம்பித்துள்ள மக்கள் எழுச்சியை காட்டும் வீடியோ ஆதாரம்.

விலைவாசி, வீட்டு வாடகை என்பன உயர்ந்து கொண்டே போகின்றன. அதற்கு ஈடுகட்டுமளவு ஊதியம் இல்லை. சம்பளத்தை அதிகரிக்காதது மட்டுமல்ல, பல முதலாளிகள் மாதக் கணக்காக சம்பளப் பாக்கியை கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். பொருளாதார சுமையால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பதாயிரம் ஏழை யூதர்கள், கடந்த வாரம் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக, டெல் அவிவ் நகரின் மத்தியில் கூடாரங்களை அமைத்து போராடி வருகின்றனர். துனிசியாவில், எகிப்தில் இடம்பெற்ற அரபுலக மக்கள் எழுச்சி போன்று, இஸ்ரேலிலும் முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம், மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர். இஸ்ரேலிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடைசியாக நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பங்கு பற்றியுள்ளனர். இஸ்ரேலிய பிரதமர் நேத்தன்யாஹு, போலந்துக்கு செல்லவிருந்த விஜயத்தை இரத்து செய்துள்ளார். தேசிய பத்திரிகை (Haaretz ) ஒன்றின் கருத்து கணிப்பில், 87 % இஸ்ரேலியர்கள் போராட்டத்தை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே மருத்துவத் துறை ஊழியர்கள், தாதிகள், வைத்தியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

(மேலதிக செய்திகள் தொடரும்....)




2 comments:

Mohamed Faaique said...

உடனுக்குடன் அறியத்தந்தமைக்கு நன்றிகள்

aotspr said...

வருத்தமான செய்தி :(
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com