Sunday, April 12, 2015

எச்சரிக்கை : சிறுவர்களை நல்வழிப் படுத்துவது "கம்யூனிச மூளைச்சலவை" ஆகலாம்!


"சோவியத் யூனியனில், முன்னாள் சோஷலிச நாடுகளில் சிறுவர்கள், மாணவர்கள் மீதும் கம்யூனிச போதனைகளை திணிப்பார்கள்..." என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷமிகள் இன்றைக்கும் இருக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரையில், "தீமையின் வடிவமான" சோவியத் யூனியனில், "கொடுங்கோல் சர்வாதிகாரிகளினால்" சிறுவர்கள் "மூளைச்சலவை செய்யப் பட்டதை" காட்டும் சுவரொட்டிகள் இவை. "மூத்தோருக்கு உதவி செய்! வீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்! பேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு!" என்றெல்லாம் சிறுவர் நன்னடத்தை போதிப்பது கம்யூனிச கொள்கைகள் ஆகலாம்! 
எச்சரிக்கை: உங்களது பிள்ளைகளை நல்வழிப் படுத்துவது கூட "கம்யூனிச சர்வாதிகாரம்" ஆகலாம்!

வீட்டுவேலைகளில் பெற்றோருக்கு உதவி செய்!
பேருந்து வண்டிகளில் முதியோருக்கு எழுந்து இடம் கொடு!
வயதில் மூத்தோருக்கு உதவி செய்!


*******

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஐந்து மில்லியன் குழந்தைகள் பசியால் இறக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் சத்துணவு குறைபாடு காரணமாக எடை குறைவான ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 146 மில்லியன் உள்ளன. ஆனால், "கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நடப்பதாக" மேட்டுக்குடி அறிவுஜீவிகளால் வெறுக்கப்படும் கியூபாவில் மாத்திரம், சத்துணவு குறைபாடு கொண்ட குழந்தைகள் எதுவும் இல்லை. ஒரு சோஷலிச நாட்டில் எந்தக் குழந்தையும் பசியால் இறப்பதில்லை. சமீபத்திய UNICEF அறிக்கையில் இது குறிப்பிடப் பட்டுள்ளது. 

ஐ.நா. வெளியிட்ட Progress for Children, A Report Card on Nutrition என்ற UNICEF அறிக்கையை வாசிப்பதற்கு:
http://www.unicef.org/publications/files/Progress_for_Children_-_No._4.pdf

********

ருமேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில், அதன் தலைநகர் புகாரஸ்ட் பற்றிய ஆவணப்படக் காட்சிகள். மேற்குலகில் பரப்பப் பட்ட பொய்ப் பிரச்சாரத்திற்கு மாறாக, சந்தையில் உணவுப்பொருட்கள் குவிந்திருப்பதைப் பார்க்கலாம். உள்ளூர் மக்கள் யாரும் வரிசையில் நிற்கவில்லை. அது மட்டுமல்ல, "பணக்கார" மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களைப் போல, சோஷலிச ருமேனிய மக்களும் தமது ஓய்வுநேரத்தை மகிழ்ச்சியாக களிப்பதைக் காணலாம். 

இது ருமேனிய கம்யூனிச அரசின் பிரச்சார வீடியோ அல்ல. மேற்கத்திய படப்பிடிப்பாளர்களினால் எடுக்கப்பட்டது.
மன்னிக்கவும், கம்யூனிச எதிர்ப்பாளர்களை ஏமாற்றமடைய வைத்தமைக்காக வருந்துகிறேன்.

 

No comments: