
(Athens, 15-5-2010)"கிரீசில் புதிய அரசியல் நிர்ணயச் சட்டம். நீதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் படுவர். தொழிலகங்களும், அலுவலகங்களும் தொழிலாளர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் தலைமை தாங்கப்படும். கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசம். பாடசாலைகளிலும், தொழிலகங்களிலும் இலவச மதிய உணவு வழங்கப்படும். வேறு பல திட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும்." - கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகம் திருமதி பபாரிகாவின் உரையில் இருந்து சில பகுதிகள். KKE அணிவகுப்பும், பபாரிகாவின் உரையும் அடங்கிய வீடியோ இது:
50000 தொடக்கம் 70000 வரையிலான KKE என்ற கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஏதென்ஸ் நகரின் மையப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தை கூட சுற்றி வளைத்திருந்தனர். கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரின் உரையானது, லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சி முன்மொழிந்த ஏப்ரல் தீர்மானத்தை ஒத்திருந்ததாக பார்வையாளர்கள் கூறினார்கள். போல்ஷெவிக் கட்சியினர், 1917 ம் ஆண்டு, இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து விட்டு "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை" நிலைநிறுத்த விரும்பினர். லெனினின் "என்ன செய்ய வேண்டும்?" கோட்பாடு கிரீசில் நடைமுறைப் படுத்தப்படுமா?
