Thursday, April 25, 2024

பு‌லிக‌ளி‌ன் ஈழத்திலும் சாதிக்கொரு நீதி!


புலிகளின் காலத்தில் சாதி வெறியர்களுக்கு மிக மென்மையான "தண்டனை" கொடுத்து சாதிய கட்டமைப்பை பாதுகாத்து வந்துள்ளனர். இதனை "அதி தீவிர புலி விசுவாசி" ஒருவர் தானாகவே உறுதிப் படுத்தி உ‌ள்ளா‌ர். 

ஒரு கோவிலில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சாமி தூக்க விடாமல் உயர்த்தப் பட்ட சாதியை சேர்ந்த நிர்வாகத்தினர் தடுத்துள்ளனர். அதற்கு தண்டனை என்ன? 
தாழ்த்தப்பட்ட சாதியினர் முதுகில்/கையில் சீனியை கொட்டி நக்க வைத்து ஒரு வேடிக்கையான, மிகவும் மென்மையான தண்டனை கொடுத்துள்ளனர்! 

ஏனென்றால் அந்தக் குற்றவாளிகள் சாதியால் உயர்ந்தவர்கள். அவ‌ர்களு‌க்கு கடுமையான தண்டனை கொடுக்க முடியாது. குறைந்த பட்சம் துரோகிகள், ஒட்டுக் குழு என்று முத்திரை குத்தி சமூகத்தில் இருந்து ஒதுக்க முடியாது. காரணம் அவர்கள் சாதியால் உயர்ந்தவர்கள்! பண வசதி படைத்த ஆதிக்க சாதியினரின் நிதி போராட்டத்திற்கு தேவை. அதனால் அவர்களை பகைக்க கூடாது.
இது தான் புலிகளின் நீதி! 
சாதிக்கொரு நீதி.

சரி, அதற்கு பிறகாவது சாமி தூக்க அனுமதித்தார்களா? 
இல்லை. கோயிலை மூடி விட்டார்கள். இதனால் யாருக்கு இலாபம்? நிச்சயமாக ஆதிக்க சாதியினருக்கு தான் ஆதாயம். போர் நடந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பங்களிப்பு அவ‌சிய‌ம். அதனால் அவர்களை திருப்திப் படுத்த தற்காலிகமாக கோயிலை மூடி விட்டனர். போர் முடிந்த பின்னர் திறக்கப் படும். ஆனால் பழைய நிலைமையே தொடரும். அதுவும் புலிகளுக்கு நன்றாகத் தெரியும். 

புலிகள் உண்மையிலேயே சாதியத்தை ஒழிக்க விரும்பி இருந்தால் சாதி வெறியர்களுக்கு மரண தண்டனை வழங்க எது தடையாக இருந்தது? 

கண்டிக்கு சென்று சிங்கள இனவெறி யின் சின்னமாக கருதப்பட்ட தலதா மாளிகைக்கு குண்டு வைக்க தெரிந்தவர்களுக்கு, அருகில் இருந்த சாதி வெறிக் கோயிலுக்கு குண்டு வைக்க முடியவில்லை. 
என்ன காரணம்? 

#அறிவோம்ஈழம்


No comments: