Saturday, November 21, 2009

இந்த ஏழைகள் வாழ்வது அவுஸ்திரேலியாவில்

"வெறும் பாலைவனக் கட்டாந்தரையில் பாய் போட்டு படுக்கும் இடத்திற்காக அரசாங்கத்திற்கு வாடகை கொடுக்கிறோம்." Elise என்ற பெண்மணி தன்னைக் காண வந்த சர்வதேச மன்னிப்புசபை செயலதிபரிடம் கூறியவை. The unheard truth in the heart of Australia
முதலாம் உலகம் என்று அழைக்கப்படும் பணக்கார நாடான அவுஸ்திரேலியாவில், "Utopia" என்ற பெயரிலான பூர்வீக குடிகளுக்கான பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் "அபோரிஜன்" என்றழைக்கப்படும் அவுஸ்திரேலிய குடிமக்கள் சேரிகளில் அவள் வாழ்க்கை வாழ்கின்றனர். "அவுஸ்திரேலியாவிலும் ஒரு மூன்றாம் உலகம்" இருப்பதை கண்டதாக அண்மையில் உதொப்பியாவிற்கு விஜயம் செய்த சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலதிபர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் இன்றும் இனரீதியிலான பாகுபாடு காட்டப்படுகின்றது. பெரும்பான்மை அபோரிஜின் மக்கள் நிரந்தர வறுமைக்குள் வாழ்கின்றனர். இங்குள்ள புகைப்படங்களிலும், வீடியோவிலும் நீங்கள் பார்ப்பது சோமாலியாவோ, எத்தியோப்பியாவோ அல்ல. அவுஸ்திரேலியா என்ற சொர்க்கம்.

1 comment:

Muruganandan M.K. said...

இனரீதியிலான பாகுபாடு இல்லாத உலகம் ஒன்றைக் கற்பனையில்தான் காண முடியும் போலும்.