Wednesday, February 28, 2018

சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்


ம‌ன்னிக்க‌வும், சிரியா யுத்த‌ம் ப‌ற்றிய‌ பின்வ‌ரும் தக‌வ‌ல்க‌ளை உங்க‌ளுக்கு எந்த‌ ஊட‌க‌மும் சொல்ல‌ப் போவ‌தில்லை:

- த‌ற்போது யுத்த‌ம் ந‌ட‌க்கும், த‌லைந‌க‌ர் ட‌மாஸ்க‌ஸ் ந‌க‌ருக்கு கிழ‌க்கே உள்ள‌ புற‌ந‌க‌ர்ப் ப‌குதியான‌ கூத்தா (Ghouta) க‌ட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளாக‌ இர‌ண்டு கிள‌ர்ச்சிக்குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்து வ‌ருகின்ற‌து.

- இத‌ற்கு முன்ன‌ர் இடிலிப் பிர‌தேச‌த்தை நோக்கி சிரிய‌ப் ப‌டைக‌ள் முன்னேறிய‌ நேர‌ம், அங்கிருந்த‌ கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் துருக்கி ம‌த்திய‌ஸ்த்த‌த்தை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்ற‌ன‌.

- ஒரு வார‌த்திற்கு முன்ன‌ர், கூத்தா மீது யுத்த‌ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌ சிரிய‌ அர‌சு இடிலிப் பாணி ச‌ம‌ர‌ச‌த்திற்கு முன்வ‌ந்திருந்த‌து. ஆனால், இம்முறை கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் வெளியேற‌ ம‌றுத்த‌ன‌. அத்துட‌ன் ம‌க்க‌ளையும் வெளியேற‌ விடாம‌ல் ப‌ண‌ய‌க்கைதிக‌ளாக‌ பிடித்து வைத்துக் கொண்ட‌ன‌ர்.

- கூத்தா பிர‌தேச‌த்தை மீட்ப‌த‌ற்கான‌ சிரிய‌, ஈரானிய‌ கூட்டுப்ப‌டை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்ட‌து. சிரிய‌ இராணுவ‌ப் பிரிவான‌ "புலிப் ப‌டை" தரைவ‌ழித் தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌து. ர‌ஷ்ய‌ விமான‌ங்க‌ளும் குண்டு வீசிய‌தாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

- அமெரிக்கா ம‌ற்றும் மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் நெருக்குத‌லால் ஐ.நா. பாதுகாப்பு ச‌பை கூடி தீர்மான‌ம் எடுத்த‌து. அத‌ற்கு ர‌ஷ்யாவும் ஒத்துழைத்த‌து. உட‌ன‌டியாக‌ போர் நிறுத்த‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட‌ வேண்டும் என‌த் தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து.

- சிரிய‌ அர‌சு ம‌ட்டுமே ஒரு த‌லைப்ப‌ட்ச‌மாக‌ போர் நிறுத்த‌ம் அறிவித்த‌து. இத‌ற்கு கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளை பொறுப்பேற்க‌ வைக்க‌ முடியாது. ஏனென்றால் அவை ஐ.நா. வினால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அமைப்புக‌ளாக‌ ஏற்றுக்கொள்ள‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. சிரிய‌ அர‌சு அந்த‌ சாட்டை ப‌ய‌ன்ப‌டுத்தி மீண்டும் போரைத் தொட‌ங்கிய‌து.

- ஐ.நா., சிரிய‌ அர‌சின் மீது போர்நிறுத்த‌ மீற‌ல் குற்ற‌ம் சும‌த்த‌ முடியாது. ஏனெனில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு எதிரான‌ யுத்த‌த்தில் போர்நிறுத்த‌ம் க‌டைப்பிடிக்க‌ப் பட‌ வேண்டிய அவ‌சிய‌ம் இல்லை.

- கூத்தா பிர‌தேச‌ம் இர‌ண்டாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டு நான்கு பெரிய‌ ம‌ற்றும் சிறிய‌ இய‌க்க‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌து. Jaysh al-Islam, al-Nusra Front, Ahrar al-Sham, Faylaq al-Rahman ஆகிய‌ நான்கும் கூட்டுச் சேர்ந்தோ, த‌னித் த‌னியாக‌வோ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

- இவ‌ற்றில் மிக‌ப்பெரிய‌ இய‌க்க‌மான‌ அல் நுஸ்ராவின் முந்திய‌ பெய‌ர் அல் கைதா. மிக‌த் தீவிர‌மான‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ள் என்ப‌து சொல்லாம‌லே புரியும். ஏனைய‌ இய‌க்க‌ங்க‌ளும் அப்ப‌டித் தான்.

- சிரிய‌ப் ப‌டைக‌ளின் எறிக‌ணை வீச்சுக்கும், விமான‌க் குண்டுக‌ளுக்கும் இதுவ‌ரை ஐநூறு பொதும‌க்க‌ள் ப‌லியாகியுள்ள‌ன‌ர். அதில் நூற்றுக்க‌ண‌க்கான‌ பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் அட‌ங்குவார்க‌ள்.

- அங்குள்ள‌ ம‌க்க‌ள் விருப்பத்திற்கு மாறாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளால் தடுத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் அர‌ச‌ ஊழிய‌ர்க‌ள் ட‌மாஸ்க‌ஸ் சென்று வ‌ர‌ அனும‌தித்திருந்த‌ன‌ர். ஆனால், "பாதுகாப்புக் கார‌ண‌ங்க‌ளை முன்னிட்டு" பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் வெளியேற‌ அனும‌திக்க‌வில்லை.

- சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் ஐ.எஸ். க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீது அமெரிக்க‌ விமான‌ங்க‌ள் குண்டு போட்ட‌ன‌.ஒரு க‌ட்டிட‌ம் கூட‌ மிச்ச‌மில்லாம‌ல் த‌ரைம‌ட்ட‌மாகின‌. அன்று ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள், பெண்க‌ள், பொது ம‌க்க‌ளின் ச‌ரியான‌ எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அது ப‌ற்றி உல‌கில் யாருக்கும் அக்க‌றை இருக்க‌வில்லை. ஏனெனில் அது அமெரிக்காவின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர்.

கூத்தா (Ghouta) பிரதேசம்
******

சிரியா போர் தொடங்கிய காலத்தில் இருந்து மறைக்கப் பட்டு வரும் சில உண்மைகள்: 

1. மேற்குலகம், சிரிய அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது தெரிந்த விடயம். ஆனால், பெரும்பான்மை சிரிய மக்களின் ஆதரவைப் பெறாத பிழையான சக்திகளை தெரிவு செய்ததுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. " சிரியாவில் நடைபெறும் கிளர்ச்சிக்கு பெரும்பான்மையான சிரிய மக்களின் ஆதரவு கிட்டவில்லை. சிரிய அரசுக்கான மக்கள் ஆதரவை, மேற்குலகம் குறைத்து மதிப்பிட்டு விட்டது! ஊடகங்கள் அங்கு நடக்கும் சம்பவங்களை மிகைப் படுத்திக் கூறுகின்றன." - இதைக் கூறியது சிரியாவுக்கான பிரெஞ்சு தூதுவர் Eric Chevalier. (http://blog.lefigaro.fr/malbrunot/2012/03/syrie-un-diplomate-francais-me.html

2. "இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களால் வழிநடாத்தப்படும் சிரியாவின் கிளர்ச்சியாளர்கள், சிரிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை." அமெரிக்காவின் உளவுத் துறை ஒத்துக் கொண்டுள்ளது. (https://www.jungewelt.de/loginFailed.php?ref=/artikel/179801.im-blindflug.html)

3. சிரியாவினுள் அதிகரித்து வரும் ஜிகாத் போராளிகளின் பிரசன்னம் காரணமாக, சிரியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதை இஸ்ரேல் விரும்பவில்லை. ஆயினும், சிரியாவின் ஆதரவின்றி ஹிஸ்புல்லா பலவீனமடையும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு குறையும் என்ற காரணங்களால், இஸ்ரேல் ஆட்சி மாற்றத்திற்கு சம்மதித்தது. (http://www.jpost.com/Opinion/Op-Ed-Contributors/The-case-of-Syria-could-prove-different )

4. சிரிய அரச படையினர் மனித உரிமைகளை மீறும் விடயம் ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், கிளர்ச்சிக் குழுக்களும் குற்றங்களை இழைத்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிக்கு புறம்பான கொலைகள், இவற்றோடு சிறுவர்களை கட்டாயப்படுத்தி படையணிகளில் சேர்த்தல்... இது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. (https://www.hrw.org/news/2012/03/20/syria-armed-opposition-groups-committing-abuses

*******

சிரியாவில் நடப்பது என்ன? நாம் யாருடைய அரசியலைப் பேசுகின்றோம்?

எதிரும் புதிருமாக‌ காண‌ப்ப‌டும் முத‌லாளிய‌- த‌மிழ் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளும், சுன்னி- இஸ்லாமிய‌ அடிப்படைவாதிக‌ளும், வ‌ல‌துசாரி த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் ஓர‌ணியில் நின்று சிரியாவுக்காக‌ அழுகிறார்க‌ள் என்றால், பின்ன‌ணியில் ஏதோ ஒரு அர‌சிய‌ல் ச‌க்தி அவ‌ர்க‌ளை ஒன்றிணைக்கிற‌து என்று அர்த்த‌ம்.

ஒரு மாத‌த்திற்கு முன்ன‌ர் வ‌ட‌ மேற்கு சிரியாவில் உள்ள‌ அப்ரின் (Afrin) பிர‌தேச‌ம் துருக்கி ப‌டையின‌ரால் தாக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போதும் பொது ம‌க்க‌ளின் உயிரிழ‌ப்புக‌ள், சொத்த‌ழிவுக‌ள் அதிக‌மாக‌ இருந்த‌ன‌. விமான‌க் குண்டுத் தாக்குத‌லில் ப‌லியான‌ குழந்தைக‌ளின் ப‌ட‌ங்க‌ள் வெளியாகின‌. அது குறித்து ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் எந்த‌ எதிர்வினையும் எழ‌வில்லை. எங்கும் க‌ள்ள‌ மௌன‌ம் நில‌விய‌து.

அப்ரின் பிர‌தேச‌த்தில் ப‌லியான‌ ம‌க்க‌ளின் அவ‌ல‌க் குர‌ல் வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளின் காதுக‌ளை எட்ட‌வில்லை. அங்கு கொல்ல‌ப் ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்காக‌ யாரும் அழ‌வில்லை. அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளை யாரும் பார்க்க‌வில்லை. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் செய‌ற்ப‌டும் ஒருவ‌ர் கூட‌ கொந்த‌ளிக்க‌வில்லை. ஏன்? ஏன்? ஏன்?

குர்திய‌ர்க‌ளும் சுன்னி முஸ்லிம்க‌ள் தானே? அது த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம் ம‌த‌வாதிக‌ளின் உண‌ர்வுக‌ளை த‌ட்டி எழுப்பாத‌து ஏன்? சிரியாவில் குர்திய‌ரும் த‌னி நாடு கேட்டு போராடிய‌ தேசிய‌ விடுத‌லை இய‌க்க‌த்த‌வ‌ர் தானே? அது த‌மிழீழ‌த்தை த‌லையில் வைத்திருக்கும் த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளின் க‌ண்க‌ளை உறுத்தாது ஏனோ? அப்போது ம‌ட்டும் க‌ண்க‌ளையும், காதுக‌ளையும் மூடிக் கொண்டிருந்த‌து ஏனோ?

என‌க்கு இந்த‌ லாஜிக் என்ன‌வென்று புரிய‌வில்லை. உல‌க நாடுக‌ளை விட்டு விடுவோம். சிரியாவில் ந‌ட‌க்கும் சிக்க‌லான‌ யுத்த‌த்தில் எந்த‌ப் ப‌க்க‌த்தில் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டாலும் க‌ண்டிப்ப‌தை விட்டு விட்டு, குறிப்பிட்ட‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ட்டும் தேர்ந்தெடுத்து அழுவ‌து ஏனோ?

ட‌மாஸ்க‌ஸ் ந‌கருக்கு அருகில் உள்ள‌ கூத்தா பிர‌தேச‌ம், கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌து. அங்குள்ள‌ இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக‌ள் அமெரிக்கா, சவூதி அரேபிய நிதியில் இய‌ங்குவ‌தால், அவ‌ர்க‌ள் வெளியிடும் த‌க‌வ‌ல்க‌ளும் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் பெறுகின்ற‌ன‌. அத‌னால், போரில் வெல்ல முடியா விட்டாலும் பிர‌ச்சார‌ப் போரில் வெல்ல‌ வேண்டும் என்ற‌ வெறியுட‌ன் செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

க‌ட‌ந்த‌ ஐந்தாண்டு கால‌மாக‌ ந‌ட‌க்கும் சிரியா போரில் அடிக்க‌டி காணும் காட்சிக‌ள் இவை. அர‌சும், கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளும் மாறி மாறி பிர‌ச்சார‌ம் செய்வ‌து வ‌ழ‌மை. ஒருவ‌ர் மாறி ஒருவ‌ர் போர்க்குற்ற‌ச்சாட்டு, இன‌ப்படுகொலைக் குற்ற‌ச்சாட்டு சும‌த்தி, த‌ம‌க்கு சார்பான‌வ‌ர்க‌ளின் அனுதாப‌த்தை பெற்றுக் கொள்ள‌ விரும்புகின்ற‌ன‌ர்.

இத‌னால் க‌ளைப்ப‌டைந்த‌ மேற்கைரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ள், த‌ற்போது ந‌ட‌க்கும் கூத்தா யுத்த‌ம் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை. அன்றாட‌ம் செய்தி தெரிவிக்கும் போதும், "கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் பிர‌ச்சார‌ மைய‌த்தால் வெளியிட‌ப் ப‌ட்ட‌ உறுதிப் ப‌டுத்த‌ப் ப‌டாத‌ த‌க‌வ‌ல்க‌ள்" என்று சேர்த்தே சொல்கின்ற‌ன‌.

சிரியா இராணுவ‌ம் ஒன்றும் சிற‌ந்த‌து அல்ல‌. அர‌ச‌ ப‌டைக‌ளின் க‌ண்மூடித்த‌ன‌மான‌ எறிக‌ணைத் தாக்குத‌ல்க‌ளில் ஏராள‌ம் பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அவை போர்க்குற்ற‌ங்க‌ளுக்குள் அட‌ங்கும் என்பதில் ம‌றுப்பில்லை. இருப்பினும், கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளும் புனித‌ர்க‌ள் அல்ல‌. ஐ.எஸ். வான‌த்தில் இருந்து குதிக்க‌வில்லை. FSA க்கும் ISIS க்கும் இடையில் பெரிதாக‌ வித்தியாச‌ம் இல்லை.

ஐ.எஸ்.க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீதான‌ போரின் போதும், ஏராள‌மான‌ பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். குழ‌ந்தைக‌ளும் ப‌லியாகின‌. ஐ.எஸ். அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளைக் காட்டி பிர‌ச்சார‌ம் செய்து அனுதாப‌ம் தேடிய‌து. "உல‌க‌மே பார்த்துக் கொண்டிருக்க எம்மின‌ ம‌க்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்கிறார்க‌ள்" என்று ஓல‌மிட்ட‌ன‌ர். கொத்துக் குண்டுக‌ள் வீச‌ப் ப‌ட்ட‌தாக‌வும், இது குறித்து ஜெனீவா சென்று ஐ.நா. வில் முறையிட‌ப் போவ‌தாக‌வும் சொன்னார்க‌ள்.

இந்த‌ விட‌ய‌த்தில் சுன்னி- முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ளுக்கும், வ‌ல‌துசாரி- த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளுக்கும் இடையில் ந‌ல்ல‌ ஒற்றுமை உள்ள‌து. ச‌ரி, அது உங்க‌ளுக்கிடையிலான‌ இர‌க‌சிய‌மான‌ கொள்கை உட‌ன்பாடு. இத‌ற்குள் எத‌ற்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை இழுக்கிறீர்க‌ள்?

சிரியாக் குழ‌ந்தைக‌ளுக்காக‌ நீலிக்க‌ண்ணீர் வ‌டிக்கும் போலி மனிதநேய‌வாதிக‌ள், யேம‌ன் குழ‌ந்தைக‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் எங்கிருந்தார்க‌ள்? அங்கு ந‌ட‌க்கும் போர் ப‌ற்றி, ப‌லியான‌ ம‌க்க‌ள் ப‌ற்றி ஒரு நாளாவ‌து பேசி இருப்பார்க‌ளா?

சிரியாவுக்கும், யேம‌னுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்? இர‌ண்டுமே அரேபிய‌ தீப‌க‌ற்ப‌த்தில் தான் உள்ள‌ன‌. இர‌ண்டு நாடுக‌ளிலும் கொல்ப‌வ‌ர்க‌ளும், கொல்ல‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளும் அரேபிய‌ர்க‌ள், அல்ல‌து முஸ்லிம்க‌ள் தான்.

யேம‌னில் குண்டு போட்டு குழ‌ந்தைக‌ளைக் கொல்வ‌து ச‌வூதி அரேபிய‌ விமான‌ங்க‌ள் என்ப‌தால், யாருக்கும் அதைப் ப‌ற்றி அக்க‌றை இல்லை. ச‌வூதி அரேபியாவுக்குப் பின்னால் அமெரிக்கா இருப்ப‌தால் ச‌ர்வ‌தேச‌மும் க‌ண்ணை மூடிக் கொண்டிருக்கிற‌து. அது ப‌ற்றி விவாதிக்க‌ ஐ.நா. பாதுகாப்புச் ச‌பை கூட்ட‌ப் ப‌டுவ‌தில்லை.

யேம‌னில் ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள் ஷியா முஸ்லிம்க‌ள் என்ற‌ ஒரேயொரு கார‌ணத்திற்காக‌, த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம்க‌ள் க‌ண்டுகொள்ளாம‌ல் புற‌க்க‌ணிக்கிறார்க‌ள். ஆனால், சிரியாவில் சுன்னி முஸ்லிம்க‌ள் ப‌லியாகும் போது ம‌ட்டுமே கொந்த‌ளிக்கிறார்க‌ள். இதுவா ம‌னித‌ நேய‌ம்? இதுவா ம‌த‌ உண‌ர்வு?

ம‌னிதாபிமான‌ உண‌ர்வு கூட‌ தான் சார்ந்த‌ ம‌த‌ப் பிரிவு பார்த்து தான் வ‌ருகின்ற‌து. த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும் இத‌ற்கு விதிவில‌க்க‌ல்ல‌. த‌மிழ‌ர் கொல்ல‌ப் ப‌ட்டால் ம‌ட்டுமே அவ‌ர்க‌ளுக்கும் ம‌னித‌நேய‌ உண‌ர்வு பொங்கி எழும். ம‌ற்றும் ப‌டி மேற்க‌த்திய‌ ந‌ல‌ன் சார்ந்த‌வ‌ர்க‌ள் பாதிக்க‌ப் ப‌டும் போது ம‌ட்டுமே தாமும் சேர்ந்து அழுவார்க‌ள்.

சிரியாப் போரின் ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் அந் நாட்டின் பெரும் ப‌குதி கிள‌ர்ச்சிப் ப‌டைக‌ளின் க‌ட்டுப்பாட்டின் கீழ் வ‌ந்திருந்த‌து. அப்போது, ஆயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ அங்கு வாழ்ந்து வ‌ந்த‌ ஷியா முஸ்லிம்க‌ளும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் இன‌ச்சுத்திக‌ரிப்பு செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அந்த‌ ந‌ட‌வ‌டிக்கையின் போது ப‌ல‌ர் க‌ழுத்து வெட்டிக் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். பெண்க‌ள், குழ‌ந்தைக‌ள் என்றும் பாராம‌ல் ப‌ல‌ர் குடும்ப‌த்தோடு கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ISIS ம‌ட்டும‌ல்ல, அல் நுஸ்ரா, FSA ம‌ற்றும் சிரியாவில் போராடும் ஒரு ட‌சின் கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள், ஷியா, கிறிஸ்த‌வ‌ ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்துள்ள‌ன‌. பொதுவாக‌ எல்லா கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளின் போராளிக‌ளும் சுன்னி முஸ்லிம்க‌ள் தான். தீவிர‌ இஸ்லாமிய அடிப்ப‌டைவாதிக‌ள் தான்.

"சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹோம்ஸ் நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர். சிரிய அரசுக்கெதிரான சிரிய சுதந்திர இராணுவம், அல்கைதா குழுக்கள் கிறிஸ்தவ மக்களை இனச்சுத்திகரிப்பு செய்கின்றனர். மேற்குலகம் இதைக் கண்டும் காணாதது போல கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது." - சிரிய ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவ திருச்சபை வத்திகானுக்கு எழுதிய கடிதத்தில் இது குறிப்பிடப் பட்டுள்ளது. (http://www.politique-actu.com/osons/syrie-eglises-accusent-france-vouloir-vider-syrie-chretiens/383926/

அப்போது யாரும் சிரிய‌க் குழ‌ந்தைக‌ளுக்காக‌ அழ‌வில்லை. கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ போதிலும், ஒரு "கிறிஸ்த‌வ‌ நாடு" கூட‌ க‌ண்ட‌ன‌ம் தெரிவிக்க‌வில்லை. இஸ்லாமிய‌ அடிப்ப‌டைவாத‌ ஆயுத‌பாணிக‌ள், இர‌ண்டாயிர‌ம் ஆண்டு ப‌ழ‌மை வாய்ந்த‌ கிறிஸ்த‌வ‌ கிராம‌ங்க‌ளை தாக்கி அழித்து, அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்த‌ன‌ர். எத்த‌னை கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ விப‌ர‌ம் தெரியும்? எத்த‌னை பேர் அந்த‌ப் ப‌ட‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொண்டார்க‌ள்? பூஜ்ஜிய‌ம்.

அந்நேர‌ம் மேற்குறிப்பிட்ட‌ இன‌ப்ப‌டுகொலைக‌ளில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் சுன்னி முஸ்லிம் தீவிர‌வாதிக‌ள். அமெரிக்கா, ச‌வூதி அரேபியாவால் நிதி, ஆயுத‌ம் கொடுத்து வ‌ள‌ர்க்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள். ஆக‌வே எல்லோரும் பேசாம‌ட‌ந்தைக‌ளாக‌ வாயை மூடிக் கொண்டிருந்தார்க‌ள்.

பார‌ப‌ட்ச‌மின்றி அனைத்துக் கொலைக‌ளையும் க‌ண்டியுங்க‌ள். அது நேர்மையான‌து. ச‌ந்த‌ர்ப்ப‌ம் பார்த்து, "ந‌ண்ப‌ர்க‌ள்" பாதிக்க‌ப் ப‌டும் போது ம‌ட்டும் பொங்கி எழுவ‌து, குறுகிய‌ அர‌சிய‌ல் ஆதாய‌ம் க‌ருதி செய்ய‌ப் ப‌டும் பிர‌ச்சார‌ம். அத‌ற்குப் பெய‌ர் இர‌க்க‌ம் அல்ல‌, பிண‌த்தை காட்டி காசு வாங்கும் ஈன‌த்த‌ன‌ம்.

ஏனிந்த‌ பார‌ப‌ட்ச‌ம்?

அப்போது குழ‌ந்தைக‌ளை கொன்ற‌வ‌ர்க‌ள் தாம் சார்ந்த‌ சுன்னி இஸ்லாமிய‌ ம‌த‌ப் பிரிவின‌ர் என்ப‌தால், த‌மிழ் பேசும் சுன்னி முஸ்லிம்க‌ள் க‌ண்டுகொள்ள‌வில்லை. அதே மாதிரி, தாம் ஆராதிக்கும் அமெரிக்காவின் ஆசீர்வாத‌ம் பெற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌தால், வ‌ல‌துசாரி த‌மிழ்த்தேசிய‌வாதிக‌ளும் க‌ண்டுகொள்ள‌வில்லை. இது தான் உண்மை.

ராக்காவில் அமெரிக்க விமானங்கள் குண்டு போட்ட நேரம், "ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர் ந‌ட‌க்கிற‌து" என்று கூறி கைத‌ட்டி வ‌ர‌வேற்ற‌வ‌ர்க‌ள் தான் இன்று "குழ‌ந்தைக‌ளுக்கு எதிரான‌ போர் ந‌ட‌க்கிற‌து" என்கிறார்க‌ள். இவ‌ர்க‌ள் எப்போது யாரை ஆத‌ரிப்பார்க‌ள், யாரை எதிர்ப்பார்க‌ள், யாரின் காலை வாரி விடுவார்க‌ள் என்று தெரியாம‌ல் உள்ள‌து. ஒரு கால‌த்தில் ஐ.எஸ். விடுத‌லைப் போராளிக‌ள் என்றார்க‌ள். பிற‌கு ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்று சொல்லி காலை வாரினார்க‌ள்.

ஒன்று ம‌ட்டும் நிச்சய‌ம். நாம் என்ன‌ அர‌சிய‌லைப் பேச‌ வேண்டும் என்ப‌து வாஷிங்ட‌னில் தீர்மானிக்க‌ப் ப‌டுகிற‌து. அங்கிருந்து வ‌ரும் அறிவுறுத்த‌ல்க‌ளை எல்லோரும் பின்ப‌ற்ற‌ வேண்டும். அவ‌ர்க‌ள் எதிர்க்க‌ சொன்னால் எதிர்க்க‌ வேண்டும். ஆத‌ரிக்க‌ சொன்னால் ஆத‌ரிக்க‌ வேண்டும்.


சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்:
சிரியாவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்குமா?
அலெப்போவின் முள்ளிவாய்க்கால்
இறுதிப்போர்: ஐ.எஸ். அழிப்புப் போருக்கு தயாராகும் இருபது உலக நாடுகள்!
இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?

Tuesday, February 27, 2018

"ஏக இறைவன் சூரிய தேவனே!": எகிப்தியரின் ஓரிறைக் கோட்பாடு


ஓரிறைக் கோட்பாட்டை தாமே கொண்டு வந்ததாக, யூத-கிறிஸ்தவ-இஸ்லாமிய மதங்கள் மார் தட்டிக் கொள்கின்றன. ஆனால், பண்டைய எகிப்தில் பாரோ மன்னர்களின் வம்சாவளியில் வந்த அகநாதன், அவர்களுக்கு முன்னரே ஓரிறைக் கோட்பாட்டை உருவாக்கி விட்டிருந்தான்.

எகிப்திய மன்னனான அகநாதன், மித்தானி நாட்டை சேர்ந்த நெபர்தித்தி எனும் இளவரசியை மணம் முடித்திருந்தான். நெபர்தித்தி அகநாதனின் சிற்றன்னை என்றும் வரலாறு கூறுகின்றது. பண்டைய எகிப்தில் இரத்த உறவினர்களுக்கிடையில் திருமணம் நடப்பது சகஜமான விடயம்.

இங்கே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டியது என்னவென்றால், அகநாதன் - நெபர்தித்தி திருமணத்தின் பின்னர் தான், எகிப்தில் ஓரிறைக் கோட்பாடு உருவானது. அநேகமாக, நெபர்தித்தி ஆரிய இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவர்களது கலாச்சாரத்தில் சூரியனை வழிபடும் வழக்கம் இருந்த காரணத்தால், சூரியனே எகிப்தின் ஓரிறைக் கோட்பாட்டின் ஒரேயொரு கடவுளாக்கப் பட்டது.

ஆயினும், பிற்காலத்தில் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்திய யூத - கிறிஸ்தவ - இஸ்லாமிய மதங்கள், பல தெய்வ வழிபாட்டை கொண்டவர்களுடன் போரில் ஈடுபட்டதைப் போன்று தான், அப்போதும் நடந்துள்ளது.

எகிப்தில் ஆமுன் பூசாரிகள் தான் உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தார்கள். இந்து மதத்தில் இருப்பதைப் போன்று, பல தெய்வ வழிபாட்டை நடைமுறைப் படுத்துவதன் மூலம், தமது செல்வத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

சூரியனை ஓரிறைக் கோட்பாட்டின் நாயகனாக்கிய அகநாதன், ஆமுன் பூசாரிகளை வன்முறை கொண்டு அடக்கி வைத்திருந்தான். அதனால் ஆமுன் பூசாரிகளின் சூழ்ச்சி காரணாமாக, அகநாதன் குடும்பத்தில் பலர் கொல்லப் பட்டனர்.

இறுதியாக அகநாதனின் ஒரு புதல்வி, பெரும் படை கொண்டு கார்னாக் நகரில் உள்ள ஆமுன் பூசாரிகள் மீது போர் தொடுத்தாள். அன்று நடந்த போரில். கார்னாக் பூசாரிகள் வெற்றி பெற்றதால், ஓரிறைக் கோட்பாடும் முடிவுக்கு வந்தது.

இந்த வரலாற்றில் தமிழர்கள் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. ஆரிய - திராவிட கலப்பு இந்திய உப கண்டத்தில் மட்டும் நடக்கவில்லை. ஆப்பிரிக்காவிலும் நடந்துள்ளது. எகிப்தியர்களும் திராவிடர்கள் தான். நெபர்தித்தி என்ற ஆரிய இளவரசியுடனான தொடர்பு தான், நாகரிக வளர்ச்சியாக கருதப்படும் ஓரிறைக் கோட்பாட்டுக்கு வழிவகுத்தது.

எகிப்தில் வழிபடப் பட்ட சூரியக் கடவுளின் பெயர் "ஆதொன்". பல எகிப்திய சொற்கள் பிற்காலத்தில் மருவி வந்துள்ளன. எகிப்திய ஆதொன், தமிழ்ச் சொல்லான ஆதவன் இரண்டும் ஒரே மாதிரி இருப்பது தற்செயலானதா? இருக்க முடியாது. நிச்சயமாக, பண்டைய எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பிருந்திருக்க வேண்டும்.

எகிப்தில் தீமைகளின் கடவுளுக்குப் பெயர் செத். ஆதொன் மதம் அரச மதமான பின்னர், செத் கடவுளை வழிபடுவது தடை செய்யப் பட்டிருந்தது. பண்டைய எகிப்திய ஓவியங்களில், செத் ஒரு பாம்பு மாதிரியும் வரையப் பட்டுள்ளது. செத் என்ற சொல்லில் இருந்து தான், "சாத்தான்" என்ற சொல் வந்தது. தமிழில் செத் என்றால் மரணம் என்று அர்த்தம். செத்துப் போதல் என்ற சொல், இன்றைக்கும் சாதாரண தமிழில் புழக்கத்தில் இருந்து வருகின்றது.

அகநாதன் என்ற பெயர் கூட, தமிழ்ச் சொல் போன்று ஒலிப்பதை அவதானிக்க வேண்டும். பண்டைய எகிப்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருந்துள்ளன. இவற்றை எல்லாம், துறை சார்ந்த அறிஞர்கள் ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும்.

Tuesday, February 20, 2018

பண்டைய நாகரிகங்களிலும் வர்க்க முரண்பாடுகள் இருந்தன!


மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய எகிப்திய நாகரிகத்திலும் வர்க்கங்கள் இருந்துள்ளன. வர்க்கப் போராட்டங்கள் கூட நடந்துள்ளன. கூலி உயர்வு கோரி அல்லது சம்பளம் கிடைக்காத காரணத்தினால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள். 


இங்கேயுள்ள பாபிருஸ் ஓவியம், பாரோ மன்னனின் கீழ் வேலை செய்த எகிப்திய தொழிலாளர்கள் வரைந்தது. 

இந்தப் படத்தில், எலி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில், பூனை அதற்கு சேவகம் செய்கின்றது. நிஜ வாழ்க்கையின் எதிர்மறையான விம்பத்தை கலையாக வடித்துள்ளார்கள். நாடகத்தில் மட்டும் ராஜாவாக நடித்து திருப்தி கொள்ளும் நமது காலத்து கலைஞர்கள் போன்று தான், பண்டைய எகிப்தில் வாழ்ந்த தொழிலாளர்களும் இருந்திருக்கிறார்கள். 
(தகவலுக்கு நன்றி: Historia, 1/2015) 
 
வர்க்க அடிப்படையிலான சமுதாய அமைப்பும், வர்க்க (அ)நீதியும் ரோமர்கள் காலத்தில் கூட இருந்துள்ளது. ரோம சாம்ராஜ்யத்தில் அடிமைகளுக்கு உரிமைகள் இருக்கவில்லை. ஆனால், "சுதந்திரமான பிரஜைகள்" சமமாக நடத்தப் படவில்லை. பணக்காரர்கள், ஏழைகள் என்ற வர்க்க பேதம் அனைத்தையும் தீர்மானித்தது. 

சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்று ரோமர்களின் சட்டம் கூறியது. ஆனால், நடைமுறையில் சட்டம் பணக்காரர்களை மட்டுமே பாதுகாத்தது. நீதிபதிகளை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்க முடிந்தது. சட்டத்தை மீறும் எந்தவொரு பிரஜை மீதும், யார் வேண்டுமானாலும் வழக்குப் போடலாம் என்று சட்டம் கூறியது. அனால், நடைமுறையில் பணக்காரர்கள் ஏழைகள் மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குப் போட்டு வந்தனர். 

பணக்காரர்கள் எந்தளவு பாரதூரமான குற்றம் செய்தாலும், ஏழைகள் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாதிருந்தது. அப்படியே வழக்குப் போட்டாலும் வெல்ல முடியாதிருந்தது. நீதிபதிகள், ஜூரிகள், வழக்கறிஞர்கள் எல்லோரையும் பணக்காரர்கள் இலகுவாக வளைத்துப் போட முடிந்தது. 

நீதிபதி என்ன தீர்ப்புக் கூற வேண்டுமென்று ஒரு நிலப்பிரபு எழுதிக் கொடுக்கும் அளவிற்கு செல்வாக்கு இருந்துள்ளது. நீதித்துறையில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த படியாலும், நீதிபதிகள் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தபடியாலும், Gaius Gracchus எனும் அரசியல்வாதி சட்டங்களை திருத்த விரும்பினார். ஆனால், அதற்காகவே அவர் கொலை செய்யப் பட்டார். 
(தகவலுக்கு நன்றி: Historia, Nr.7/2014) 

கனவான்களே! வர்க்கப் போராட்டம் கம்யூனிஸ்டுகளின் "கண்டுபிடிப்பு" அல்ல. அது மார்க்சிய "வரட்டுச் சூத்திரமும்" அல்ல. அது மூவாயிரம் வருட காலப் பழமையான போராட்டம். உலக நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போராட்டம்.

Monday, February 19, 2018

ஸ்டாலின் பற்றி பலர் அறிந்திராத தகவல்கள்


எதற்காக எல்லோரும் ஸ்டாலினை "சர்வாதிகாரி" என்று சொல்கிறார்கள்? ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப் பட்ட உண்மைக் கதை இது:

ஸ்டாலினின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஒருவர், பொது மக்களின் பணத்தை சுருட்டி வந்தார். அந்தப் பணத்தில், மாஸ்கோ நகருக்கு வெளியே ஆடம்பரமான பங்களா வீடொன்றை கட்டி வந்தார். வீடு கட்டி முடிந்ததும், ஸ்டாலின் அவரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினார்.

"அமைச்சரே! உங்களுக்கு பிள்ளைகள் என்றால் விருப்பமா?"
"ஆமாம், எனக்குப் பிள்ளைகள் மீது கொள்ளைப் பிரியம் உள்ளது." என்றார் அமைச்சர் ஆர்வத்துடன்.
"நல்லது. அப்படி என்றால் நீங்கள் புதிதாக கட்டிய அந்தப் பெரிய வீட்டை, சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு தானமாக கொடுத்து விடுங்களேன்?" என்றார் ஸ்டாலின் அமைதியாக. 
(நன்றி: The Red Executive, by David Granick (1960))

ஸ்டாலின் கால சோவியத் யூனியன், இன்றைய அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட பல மடங்கு முற்போக்கானதாக இருந்துள்ளது. தனி நபர் சுதந்திரத்தை மதிப்பதில் சிறந்து விளங்கியது. இந்த 21 ம் நூற்றாண்டிலும், மேற்குலகம் அதை எட்டிப் பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

1920 ம் ஆண்டில், ரஷ்யாவின் முஸ்லிம் பிரஜைகள் விரும்பினால் ஷரியா சட்டம் வைத்திருப்பதற்கு, ஸ்டாலின் அனுமதி வழங்கி இருந்தார். இன்று மேற்குலக "ஜனநாயக நாடுகள்" செய்வதைப் போன்று, ஷரியா நடைமுறைப் படுத்தக் கேட்டவர்கள் மீது குண்டு போடவில்லை. தாராள மனதுடன் நடந்து கொண்டார்.

அதன் அர்த்தம், ஷரியா சட்டத்தின் பிற்போக்குத் தனங்களை எல்லாம், ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. ஸ்டாலின் ஒரு பக்கம், பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு மதிப்புக் கொடுத்த போதிலும், மறுபக்கம் நவீன கல்வி புகட்டுவதன் மூலம் அந்த மக்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைக்க திட்டமிட்டார்.

அதனால், காலப்போக்கில் சோவியத் முஸ்லிம்கள் தாமாகவே ஷரியாவை கைவிட்டு விட்டு, நவீன உலகிற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டார்கள். கல்வியறிவு பெற்ற மக்கள் பழமைவாதத்தில் இருந்து தம்மைதாமே விடுவித்துக் கொண்டார்கள். மேலும், பெண்களுக்கும் சம உரிமை கிடைத்த படியால், கணவனின் வன்முறைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும், உடலை மூடும் மேலங்கியை எடுப்பதற்கான உரிமை கோரவும் முடிந்தது.

இன்றைக்கும் "சுதந்திரம், ஜனநாயகம்" பேசும் மேற்கத்திய நாடுகளில், ஷரியா சட்டம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயமாக கருதப் படுகின்றது. பல இலட்சக் கணக்கில் முஸ்லிம் பிரஜைகளை கொண்டுள்ள நாடுகள் கூட, "ஷரியா என்றாலே தீவிரவாதம்" என்று, தமது மக்களுக்கு தவறான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இதிலே வேடிக்கை என்னவென்றால், சோவியத் யூனியன் தோன்றிய காலத்தில், அங்கே ஷரியா சட்டம் தடை செய்யப் பட்டதாக மேற்குலகில் பிரச்சாரம் செய்யப் பட்டது. ரஷ்யாவின் டாகெஸ்தான் மாநிலத்திற்கான சுயாட்சி வழங்குவது பற்றிய பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் பின்வருமாறு தெரிவித்தார்:

"டாகெஸ்தான் பிரதேசத்திற்கு உரிய தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசாட்சி நடக்க வேண்டும். டாகெஸ்தான் மக்களுக்கு ஷரியா சட்டம் முக்கியமானது என்று எமக்குக் கூறப் பட்டது. நாம் ரஷ்யாவில் ஷரியாவை தடை செய்து விட்டதாக, சோவியத்தின் எதிரிகள் வதந்திகள் பரப்பித் திரிவதையும் நாம் அறிவோம். அந்த வதந்திகள் பொய்யானவை. ரஷ்ய அரசு தனது மக்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய சட்டங்கள், மரபுகளின் அடிப்படையில் ஆள்வதற்கான முழு உரிமையும் கொடுக்கிறது. ஷரியா ஒரு பொதுவான சட்டம் என்பதை சோவியத் ஏற்றுக் கொள்கின்றது. டாகெஸ்தான் மக்கள் தமது சட்டங்களையும், மரபுகளையும் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால், அவற்றை அப்படியே விட வேண்டும்."

ஸ்டாலினின் முழுமையான உரையை வாசிப்பதற்கு: 
Congress of the Peoples of Daghestan
https://www.marxists.org/reference/archive/stalin/works/1920/11/13.ht

"நான் இறந்த பிறகு, எனது சமாதியின் மேல் குப்பைகளை வாரிக் கொட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், வரலாறு எனும் காற்று அவற்றையெல்லாம் கூட்டித் தள்ளி விடும்." - ஸ்டாலின்


Wednesday, February 14, 2018

இந்துக்களின் தாயகம் துருக்மேனிஸ்தானில் உள்ளது!


துருக்மெனிஸ்தான் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில், Gonur Tepe எனும் இடத்தில் நான்காயிரம் வருடங்களுக்கு முந்திய பண்டைய நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டது. எழுபதுகளில், Viktor Sarianidi என்ற ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்த பின்னர் தான் மத்திய ஆசியாவிலும் ஒரு வெண்கல கால நாகரிகம் இருந்துள்ளமை தெரிய வந்தது. அதாவது, எகிப்திய, மொஹெஞ்சேதாரோ நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது.

பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியனில் நடந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மேற்குலகால் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன. அதனால், இது தொடர்பான அகழ்வாராய்ச்சித் தகவல்கள் இன்னமும் ரஷ்ய மொழியில் தான் உள்ளன. கோனூர் தேபே நாகரிகம் தனியாக ஆராயப் பட வேண்டியது என்பதால் அதற்கு "ஒக்சுஸ் நாகரிகம்" என்று பெயரிடப் பட்டது. ஒக்சுஸ் என்பது துருக்மெனிஸ்தான் எல்லையில் ஓடும் நீண்ட நதியின் பெயர். அங்கு சுற்றுலா செல்ல விரும்புவோர், முதலில் மாரி (Mary) என்ற நகரத்திற்கு செல்ல வேண்டும். துருக்மேனிஸ்தான் நாட்டில் எண்ணை, எரிவாயு போன்ற இயற்கை வளம் நிறைந்த பகுதியில் நவீன மாரி நகரம் அமைந்துள்ளது.

கோனூர் தேபே என்பது துருக்கி மொழிப் பெயர். (துருக்மேன் மொழியானது துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.) அந்தப் பண்டைய நகரத்தின் பூர்வீகப் பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அதற்கு அருகில் இன்னொரு பண்டைய நகரமான மேர்வ் உள்ளது. அதை உருவாக்கியவர்கள் கோனூர் தேபே வாசிகளாக இருக்கலாம். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் கோனூர் தேபே நகரம் கைவிடப் பட்டு விட்டது. அதற்கு இயற்கை அழிவுகளோ, தண்ணீர்ப் பற்றாக்குறையோ காரணமாக இருந்திருக்கலாம்.

மேர்வ் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தாராளமாக கிடைக்கின்றன. ஏனெனில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கான் படைகளால் தரைமட்டமாக்கப் படும் வரையில், அங்கு ஒரு தலைசிறந்த நாகரிகம் இருந்துள்ளது. மொங்கோலிய படைகள் நடத்திய பேரழிவுகளில் மேர்வ் நகரில் இருந்த வான சாஸ்திர ஆய்வு மையம், நூலகம் எல்லாம் தீக்கிரையாகி விட்டன. தொண்ணூறு சதவீதமான குடிமக்களும் இனப்படுகொலை செய்யப் பட்டுவிட்டதால், அறிவியல் தெரிந்தவர் யாரும் எஞ்சவில்லை.

பண்டைய மேர்வ் நகரில் இருந்த அறிவியல் நூல்கள் ஒன்று விடாமல் எரிக்கப் பட்டதால், அவற்றில் எழுதப் பட்டிருந்த ஆயிரம் ஆண்டு கால அறிவுச் செல்வம் ஒரு சில நாட்களில் அழிந்து விட்டது. சில நேரம், அந்த நூல்கள் இப்போதும் இருந்திருந்தால், கோனூர் தேபே பற்றிய விபரங்களும் கிடைத்திருக்கலாம். ஏனெனில், கோனூர் தேபே நகரம் இருந்த இடத்தில் எழுத்துக்களைக் கொண்ட களிமண் தட்டு எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. சிலநேரம், அவர்கள் எதையும் எழுதி வைக்காமல் இருந்திருக்கலாம்.

நான்காயிரம் வருடங்களுக்கு முந்திய ஹரப்பா நாகரிகத்தில் இருந்ததைப் போன்று, கோனூர் தேபே நகரமும் சிறந்த நீர்ப் பாசன திட்டத்தையும், கழிவு நீர் அகற்றும் கால்வாய்களையும் கொண்டிருந்தது. அரச மாளிகை மாதிரியான ஒரு கட்டிட இடிபாடுகளும் அங்குள்ளது.

ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் விக்டர், கோனூர் தேபே வாசிகள் வழிபட்ட ஆலயம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார். அந்த ஆலயத்தில் அக்னி (நெருப்பு) கடவுளாக வழிபடப் பட்டுள்ளது. முற்காலத்தில் ஈரானில் இருந்த சொராஸ்திரிய மதத்தவர் நெருப்புக் கடவுளை வழிபட்டு வந்தனர். அந்த மத்தவர் நெருப்பை வணங்கக் கட்டிய பண்டைய ஆலயங்கள் இன்றைய ஈரானிலும், அசர்பைஜானிலும் நிறையவே இருந்துள்ளன. இருப்பினும் கோனூர் தேபே ஆலயம் காலத்தால் பழமையானது. ஆகவே, ஆரியர்களான இந்தோ- ஈரானிய மக்களின் பூர்வீக இடம் கோனூர் தேபே ஆக இருந்திருக்கலாம்.

ஈரானியர்களும், வட இந்தியர்களும் இனத்தால் ஒன்று தான். ஆரியர்கள் என்பதும் அதைத் தான் குறிக்கும். சைபீரியாவில் தோன்றி, மத்திய ஆசியா வழியாக தெற்கு நோக்கி புலம்பெயர்ந்த இனத்தவரின் வழித்தோன்றல்கள் தான், இன்றைய ஈரானியரும், வட இந்தியர்களும். அனேகமாக, மத்திய ஆசியாவில் இருந்து அவர்கள் இரண்டு வேறு கிளைகளாக பிரிந்து சென்றிருக்கலாம். இருப்பினும் தெய்வங்கள், மத வழிபாடுகள், புராணக் கதைகள் சில சிறிய மாற்றங்களோடு அப்படியே இருந்துள்ளன.

இருக்கு (Rig) வேதத்தில் சோம பானத்தை போற்றும் செய்யுள்கள் நிறைய உள்ளன. தேவர்கள் சோம பானம் அருந்தியதாக குறிப்பிடப் படுகின்றது. நீண்ட காலாக, இந்தியாவில் வாழும் இந்துக்கள் பலர் சோம பானத்தை ஒரு கற்பனையான புராணக் கதை என்றே கருதி வந்தனர். அதற்குக் காரணம், ஈரான், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஆரியர்கள் (அதாவது இந்துக்கள்/பிராமணர்கள்) பிற்காலத்தில் இஸ்லாமியராக மாறி விட்டனர். அதனால், இந்தியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையிலான பண்டைய தொடர்பு அறிந்து விட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்றைக்கும் சில இடங்களில் சோம பானம் தயாரிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். (இது பற்றி ஏற்கனவே ஒரு பிபிசி ஆவணப்படம் வெளிவந்துள்ளது. பார்க்க: http://kalaiy.blogspot.nl/2012/01/blog-post_21.html) அந்நாட்டில் வளரும் கஞ்சா செடிகளில் இருந்து பதப்படுத்தப் பட்டு வடித்தெடுக்கப் படும் திரவம் தான் சோம பானம் என அழைக்கப் படுகின்றது. பண்டைய காலங்களில் அது மதுவாக மட்டுமல்லாது, மருத்துவ பானமாகவும் அருந்தப் பட்டது. இன்றைக்கும் கஞ்சாவில் உள்ள மருத்துவ அம்சங்கள், நவீன பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு செய்து நிரூபிக்கப் பட்டுள்ளன. ஆகவே, பண்டைய காலத்து "தேவர்கள்" சோம பானத்தை "அமிர்தமாக" கருதியதில் வியப்பில்லை.

கோனூர் தேபே நாகரிகத்தை கண்டுபிடித்த ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்  விக்டர், அங்கு சோம பானம் தயாரிக்கப் பயன்படுத்திய களிமண் தட்டுகளை கண்டுபிடித்துள்ளார். அதில் கஞ்சாவில் இருந்து எடுக்கப் பட்ட மருத்துவ பதார்த்தமான Ephedrine என்ற இரசாயனக் கூறுகளும் கண்டுபிடிக்கப் பட்டன. இதன் மூலம் சோம பானம் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக கஞ்சா பயன்பட்டிருக்கலாம் என்பதும் நிரூபணமாகிறது. மேலும், சோம பானத்திற்கும், நெருப்பை வழிபடும் அக்னிக் கடவுளின் ஆலயத்திற்கும் தொடர்பிருக்கிறது.

இன்றைக்கும் இந்து மத திருமணங்களில் ஐயர் ஹோமம் வளர்ப்பதை கண்டிருப்பீர்கள். வேறு சில நோக்கங்களுக்காகவும் ஹோமம் வளர்க்கப் படுகின்றது. பிராமண பூசாரிகள் ஒரு சதுர வடிவிலான அடுப்பில் தீமூட்டி எரிப்பார்கள். அதை ஹோமம் என்பார்கள். பண்டைய காலங்களில் வாழ்ந்த ஆரியர்கள், பெரியளவில் ஹோமம் வளர்ப்பதை ஒரு மதச் சடங்காகக் கொண்டிருந்தனர். அதே நேரம், ஈரானிய சொராஸ்திரிய மதத்தவர் போன்று, நெருப்புத் தெய்வத்தை வழிபடவும் ஹோமம் வளர்த்திருப்பார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஈரானில் வாழ்ந்த சொராஸ்திரிய மதத்தவரும், ஈராக்கில் வாழும் யேசிடி மதத்தவரும், ஒரு குறிப்பிட்ட செடியை மதச் சடங்குகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அதன் தாவரவியல் பெயர்: Genus Ephedra. அதை அவர்களது மொழியில் "ஹோம்" என்று அழைப்பார்கள். 

ஹோம் என்பது பண்டைய ஈரானிய மொழிச் சொல்லான ஹோமம் என்பதில் இருந்து வந்தது. சம்ஸ்கிருத மொழியில் சோமா என்பது, ஈரானிய மொழியில் ஹோமா என்று பயன்படுத்தப் பட்டு வந்தது. இரண்டு சொற்களும் உச்சரிப்பு மாறுபட்டாலும் ஒரே பொருளைக் குறிப்பவை தான். ஆகவே, சோம பானம், ஹோமம் வளர்த்தல், அக்னி வழிபாடு எல்லாம் ஒரே மூலத்தைக் கொண்டவை தான்.

(பிற்குறிப்பு: Erika Fatland எழுதிய Sojetstan என்ற பயண நூலில் துருக்மேனிஸ்தான் பற்றியா பகுதியில் இந்தத் தகவல் கிடைத்தது. இவற்றிற்கான ஆதாரங்களை நீங்களாகவே இணையத்தில் தேடி வாசிக்கலாம். மேற்கொண்டு ஆராய்வது துறை சார்ந்த அறிஞர்களின் பொறுப்பு.)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, February 07, 2018

"தோழர் பிரபு": ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு


நம்மூரில் பண்ணையார்கள், நிலவுடைமையாளர்கள் போன்றோர், சொத்துக்களை ஆண்டு அனுபவிப்பவர்கள், ஏன் கம்யூனிசத்தை வெறுக்கிறார்கள் என்ற காரணம் தெரிய வேண்டுமா? இலங்கையிலோ, இந்தியாவிலோ கம்யூனிச ஆட்சி வந்தால், தமது சொத்துக்களைப் பறித்துக் கொண்டு சிறையில் அடைத்து விடுவார்கள் அல்லது கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். இதற்கு முன்னர் சோஷலிச நாடுகளில் தமது வர்க்கத்தினருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அஞ்சி நடுங்குகிறார்கள்.

ருமேனியாவிலும், ஹங்கேரியிலும் சொகுசாக வாழ்ந்து வந்த நிலப்பிரபுக்கள் வர்க்கம் (கவனிக்கவும்: "வர்க்கம்", மனிதர்கள் அல்ல.), எவ்வாறு கம்யூனிஸ்டுகளால் இல்லாதொழிக்கப் பட்டது என்பதை ஆய்வு செய்து எழுதப் பட்ட நூல் "Kameraad Baron" (தோழர் பிரபு). இதை எழுதிய டச்சு எழுத்தாளர் Jaap Scholten, பல மாதங்களாக ருமேனியாவில் சுற்றுப் பயணம் செய்து, அங்கு வாழ்ந்த நிலப்பிரபுக் குடும்பங்களில் இன்னமும் எஞ்சியிருக்கும் நபர்களை சந்தித்துப் பேசி, அவர்களது கதைகளை எழுதி உள்ளார்.

இந்தப் புத்தகமானது நிலப்பிரபுக்கள் மீதுள்ள கரிசனையால், ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் சாதாரண மக்களாக தெருவுக்கு வந்து விட்டார்களே என்ற சுய கழிவிரக்கம் காரணமாக எழுதப் பட்டது.  கம்யூனிஸ்டுகளால் பிரபுக் குடும்பத்தினருக்கு நடந்த கொடுமைகளை விவரித்துக் கூறுவது தான் நூலின் நோக்கம். ஆனால், நிலப்பிரபுக்கள் தமக்குக் கீழே வேலை செய்த பண்ணையடிமைகளுக்கு செய்த கொடுமைகள் பற்றி ஒரு வரி கூட  இல்லை. (ஆண்டாண்டு காலம் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வை, கம்யூனிஸ்டுகள் ஒரே நாளில் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டார்கள் என்ற உண்மையை மறைக்க வேண்டுமே?)

இன்றைக்கும் வாழும்  முன்னாள் நிலப்பிரபுக்களின் வாரிசுகள், தமது வாழ்க்கைக் கதைகளை கூறுகின்றனர். தமது பிரபுக் குடும்பத்தினரின் அருமை பெருமைகளை, சிறுவயதில் அனுபவித்த ஆடம்பரங்களை மட்டுமே நினைவுகூருகின்றனர். கிழக்கில் இருந்து மேற்கு வரையிலான, ஐரோப்பிய மன்னர் குடும்பங்களுக்குள் நடந்த கலப்புத் திருமணங்கள், பன்மொழித் தேர்ச்சி இவை போன்ற பழம் பெருமைகளை சொல்லி மகிழ்கிறார்கள்.

இன்றைக்கு ருமேனியாவுக்கு சுற்றுலா செல்வோர், ஐரோப்பாவிலேயே அழகான கோட்டைகள், மாளிகைகளை கண்டு களிக்கலாம். மன்னர் காலத்து வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நேரில் பார்க்கலாம். அவை இன்று சுற்றுலா மையங்களாக அனைவருக்கும் திறந்து விடப் பட்டாலும், 1949 ம் ஆண்டு வரையில் அங்கு உள்ளூர் நிலப்பிரபுக்களின் குடும்பங்கள் வசித்து வந்தன.

இரண்டு உலகப் போர்களை கண்ட போதிலும், நிலப்பிரபுக் குடும்பங்கள் எந்தக் குறையும் இல்லாமல் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தன. இதிலே குறிப்பிடத் தக்கவர்கள் ஹங்கேரிய நிலப்பிரபுக்கள். ஏனெனில், முதலாம் உலகப் போர் நடக்கும் வரையில், ருமேனியாவின் பெரும் பகுதி, குறிப்பாக மத்திய டிரான்ஸ்சில்வேனியா பிரதேசம், ஹங்கேரி சாம்ராஜ்யத்திற்குள் அடங்கியது. ருமேனியாவின் வட மேற்குப் பகுதியில் ஹங்கேரி மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.

இரண்டாம் உலகப் போர் முடிவில், சோவியத் செம்படைகளால் விடுதலை செய்யப் பட்ட ருமேனியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்தனர். அவர்கள் நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளை வர்க்க எதிரிகளாக பிரகடனம் செய்தனர். இதிலே இன்னொரு பிரச்சினையும் சேர்ந்து ஹங்கேரி நிலப்பிரபுக்களை ஒடுக்கியது. அவர்கள், முன்னை நாள் ஆஸ்திரிய - ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் என்பதால், பெரும்பாலான ருமேனிய மக்களால் வெறுக்கப் பட்டு வந்தனர்.

கம்யூனிஸ்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்றதும், மாளிகைகளில் வசித்து வந்த நிலைப்பிரபுக் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒரே இரவில் வெளியேற்றப் பட்டனர். அரை மணி நேரம் மட்டுமே நேரம் ஒதுக்கி, உடுப்புகள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை மட்டுமே ஒரு பெட்டியில் எடுத்துச் செல்ல அனுமதித்தார்கள். எல்லோரையும் டிரக் வண்டியில் ஏற்றி தடுப்பு முகாம்களுக்கு அனுப்பினார்கள்.

பல நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக, "ஆண்ட பரம்பரை" என்ற மிதப்பில், செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், ஒரே நாளில் "அடிமைப் பரம்பரையாக" வறுமைக்குள் தள்ளப் பட்டனர். ஆடம்பரமான மாளிகைகளில் வசதியாக வாழ்ந்த பணக்காரக் குடும்பங்கள், அடிப்படை வசதிகள் இல்லாத சிறை முகாம்களில் அடைக்கப் பட்டன. ஒரு நாள் கூட உடல் வருந்தி உழைத்திராத அரச வம்சத்தினர், இளவரசர்கள், நிலவுடைமையாளர்கள், வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் ஆனார்கள். கட்டாய வேலை முகாம்களில் கால்வாய் தோண்டுவது போன்ற கடின உடல் உழைப்பை செலுத்த நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

ருமேனியப் புரட்சியின் ஆரம்ப காலங்களில், நிலப்பிரபுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் பலர் கொல்லப் பட்டுள்ளனர். மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்க்க எதிரிகளாகவோ, அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்ததாகவோ குற்றம் சாட்டப் பட்டவர்கள். அதே நேரம், சித்திரவதை தாங்க முடியாமல், அல்லது பொருள் இழப்புகளால் மனமுடைந்து  தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

அதற்காக, ருமேனியாவின் எல்லா நிலப்பிரபுத்துவக் குடும்பங்களும் கொல்லப் பட்டனர் என்று கூறுவது ஒரு மிகைப் படுத்தல். கைது செய்யப் படுவதற்கு முன்னரே ஆஸ்திரியாவுக்கு தப்பியோடியவர்கள் பலருண்டு. அவர்கள் பின்னர் மேற்கத்திய நாடுகளில் அடைக்கலம் கோரி அங்கேயே தங்கி விட்டனர். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கம்யூனிச ஆட்சி கவிழும் வரையில் நாடு திரும்பவில்லை.

சுற்றிவளைப்பில் பிடித்துச் செல்லப் பட்டவர்களும், சில வருட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டவர்கள் ஏராளம் பேருண்டு.விடுதலை செய்யப் பட்ட பின்னர், ஒவ்வொரு வாரமும் போலிஸ் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. 

இருப்பினும் "செகுரிதாத்தே" (Securitate) என்ற உளவுப் பிரிவு அவர்களை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருந்தது. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் பட்டன. இப்படியானவர்கள் அரசில் உள்ளவர்களை குறை கூறினாலும், சந்தேகத்தில் திரும்பவும் கைது செய்யப் பட்டனர். ஒரு தடவை, பாடசாலை ஆசிரியையாக பணியாற்றிய ஒருவர் ஸ்டாலினை பற்றி அவதூறு செய்த குற்றத்திற்காக சக ஆசிரியரால் காட்டிக் கொடுக்கப் பட்டார். நல்ல வேளையாக, அந்த ஆசிரியையின் பிரியத்துக்குரிய வகுப்பு மாணவியின் தந்தை உளவுப்பிரிவில் வேலை செய்த படியால் தண்டனையில் இருந்து தப்பினார்.

பெரும்பாலும் எந்தக் குற்றமும் இல்லாமல் விடுதலை செய்யப் பட்ட நிலப்பிரபுத்துவக் குடும்பத்தினர், சாதாரண மக்களைப் போன்று ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு, அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.  அவர்களது பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும் காலத்தில், தமது நிலப்பிரபுத்துவ பின்னணியை மறைத்து வந்தனர்.

முன்னாள் நிலப்பிரபுக்களின் பிள்ளைகள் படிக்க அனுமதிக்கப் பட்டாலும், ஆரம்பப் பாடசாலைக் கல்வியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி கற்கும் உரிமை பாட்டாளிவர்க்க குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமே உண்டு. (புரட்சிக்கு முன்னர் இது நேர்மாறாக இருந்ததை இங்கே சொல்லத் தேவையில்லை.) "நிலப்பிரபுவின் பிள்ளைகள்" என்றால் அது சமூகத்தில் தாழ்வானவர்கள் என்ற அர்த்ததில் பார்க்கப் பட்டது. அதனால், தமது குடும்பம் பற்றிய உண்மை ஏனைய பிள்ளைகளுக்கு தெரிய விடாமல் மறைத்தனர். சிலநேரம், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சொல்லி இருப்பார்கள்.

முன்பு மாளிகையில் வாழ்ந்த நிலப்பிரபுக் குடும்பங்கள், தற்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இருப்பினும், வீடுகளில் தமது நிலப்பிரபுத்துவ கடந்த காலத்தை நினைவுபடுத்தும் படங்கள், நினைவுச் சின்னங்களை வைத்திருந்தனர். சிலநேரம், முன்னாள் நிலப்பிரபுக்கு விசுவாசமான சாமானியர்கள் அவற்றை பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்து கொடுத்தனர்.

நிலப்பிரபுக்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் வெளிப்படையாக நடந்தன. அந்தக் காலத்தில் ருமேனியாவில் சுற்றுப் பயணம் செய்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் Wilfred G. Burchett அவற்றை நேரில் கண்டு குறிப்பெடுத்துள்ளார். அந்தக் கட்டுரைகள் 1951 ம் ஆண்டு வெளியான Peoples Democracies சஞ்சிகையில் பிரசுரிக்கப் பட்டன. 

அதில் அவர் முன்னாள் நிலப்பிரபுக்களின் அவல நிலை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "அவர்கள் தாம் ஏழ்மையில் வாடுவதாக குறைப் படுகின்றனர். எந்தக் காலத்திலும் கஷ்டப் பட்டு உழைத்து வாழாதவர்கள், இப்போதும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு, தம்மிடம் இருந்த நகைகளை விற்று சாப்பிடுகிறார்கள் அல்லது சட்டவிரோத சந்தைகளில் பொருட்களை விற்றுப் பிழைக்கிறார்கள்."

இன்றைக்கு எஞ்சியிருக்கும் நிலப்பிரபுக்களின் வாரிசுகள், தாம் "கம்யூனிச கொடுங்கோன்மைக்கு" அடிபணியாமல் தப்பிப் பிழைத்து விட்டதாக சொல்லிப் பெருமைப் படுகின்றனர். "கொலை செய்தார்கள், சித்திரவதை செய்தார்கள், சிறுமைப் படுத்தினார்கள், ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், ருமேனிய நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் எதுவுமே கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை..." என்று இறுமாப்புடன் கூறுகின்றனர். 

இந்த நூலை எழுதியவரும் அது உண்மை என்றே நம்பி இருக்கிறார். ஆனால், நாடு முழுவதும் பலரது சாட்சியங்களை கேட்டு பதிவு செய்த பின்னர், எல்லாமே கருப்பு, வெள்ளை இல்லை என்ற உண்மை தெரிய வந்தது. பலர் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டனர். ருமேனியாவில் புதிய கம்யூனிச ஆட்சியாளர்களை ஆதரித்த முன்னாள் நிலப்பிரபுக்களும் இருந்தனர்.

பாட்டாளிவர்க்கத்தின் பக்கம் நின்ற ஒரு "கம்யூனிச இளவரசி" இன் கதை பிரபலமானது. மார்கிட் (Margit Odescalchi), ஒரு குறுநில மன்னர் குடும்பத்தில் இளவரசியாக பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் காலத்தில், நாஸிகள் இவரது சகோதரனை சித்திரவதை செய்ததை கண்டதில் இருந்து தீவிர பாசிச எதிர்ப்பாளராக மாறியவர். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததும் தனது பரிபூரண ஆதரவை வழங்கினார். 

அதற்காக, கம்யூனிச ஆட்சியாளர்கள் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 150 ஹெக்டேயர் நிலத்தை வைத்திருக்க அனுமதித்து இருந்தனர். இருப்பினும், அவர் அந்த நிலங்களை தானாகவே ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து விட்டு, ஒரு தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வாழ்ந்தார். ஒரு நிலப்பிரபுக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பாட்டாளிவர்க்கத்தில் ஒருவராக மாறிய இளவரசி மார்கிட், சோஷலிச ஹங்கேரி நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

(நன்றி: Kameraad Barron, Jaap Scholten நூலில் இருந்து சில பகுதிகள்.) 


ருமேனியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

Sunday, February 04, 2018

சோழர்கள் என்றால் கொள்ளையர்கள் என்றும் பொருள் உண்டு!

சோழர்கள் கொள்ளையடித்த நாடுகளைக் காட்டும் வரைபடம். 

சோழர்களின் சர்ச்சைக்குரிய வரலாற்றை, ஐரோப்பாவில் வைக்கிங்(Viking) வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஸ்கண்டிநேவிய வைக்கிங் படைகள், கடல் கடந்து கப்பல்களில் சென்று, பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து, பெருமளவு செல்வத்தை கொள்ளையடித்து வந்தனர். அவர்கள் சென்ற இடமெல்லாம் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராது படுகொலை செய்தனர். இருப்பினும், அதே வைக்கிங் கொள்ளையர்கள் பிற்காலத்தில் நிலையான அரசமைத்து சிறப்பாக ஆண்டு வந்தனர். சோழர்களை "ஆசியாவின் வைக்கிங்" என்றும் குறிப்பிடலாம்.

சோழர்களின் பூர்வீகம் என்ன, அந்தப் பெயர் வர என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாது. சோழர்கள் காலத்தில் தமிழகத்திற்கு பயணம் செய்த கிரேக்க நாட்டு தாலமி, தனது பயணக் குறிப்புகளில் "சோரை"(சோரர்) என்று எழுதியுள்ளார். பண்டைய கால தமிழ்க் கல்வெட்டுகளில் கூட "சோரர்கள்" என்று தான் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தமிழ் மொழியில் சோரர் என்ற சொல்லுக்கு திருடர், கொள்ளையர் என்ற பொருள் உண்டு. தற்காலத் தமிழில் "சோரம் போதல்" என்று பயன்படுத்தப் படுகின்றது. ஆகவே, ஆதி கால சோழர்கள் தமிழராக இருந்திருக்க முடியாது.

சோழர்களை தெலுங்கு மொழியில் சோடர்கள் என்று அழைத்து வந்தனர். தெலுங்கில் "ர", "ட" ஆகி, அது பின்னர் சோழர்கள் என்று திரிபடைந்திருக்கலாம். மேலும், சோழர்களின் ஆட்சிப் பிரதேசம் இன்றைய வட தமிழ்நாட்டையும், தென் ஆந்திராவையும் கொண்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா என்ற மாநில எல்லைகள் இருபதாம் நூற்றாண்டில் தான் பிரிக்கப் பட்டன. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஒரே பிரதேசமாக இருந்துள்ளது.

"தமிழ்ச் சோழர்கள்", "தெலுங்குச் சோழர்கள்" என்று இரண்டு சோழ அரச வம்சத்தினர் இருந்ததாக சிலர் இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விளக்கம். இந்தக் குளறுபடிக்கு காரணம், இன்று நாங்கள் மொழி வழி தேசியத்தின் ஊடாகத் தான் உலகைப் பார்க்கிறோம். ஒரே பிரதேசத்தில் இரண்டு மொழிகளைப் பேசும், இரண்டு வெவ்வேறு அரச வம்சங்கள் அருகருகே இருந்திருக்க சாத்தியமே இல்லை. இது உலகில் வேறெந்த நாட்டிலும் இருந்திராத விசித்திரமான வரலாறு. மொழி மாறுபட்டாலும் அரச வம்சம் மாறுவதில்லை. உதாரணத்திற்கு, ஸ்பானிஷ் அரச வம்சத்தினர் பூர்வீகத்தில் ஜெர்மன் அரச வம்சமாக இருந்தனர். அதாவது இரத்த உறவினர்கள். ஆனால், வெவ்வேறு மொழிகளை (ஜெர்மன், ஸ்பானிஷ்) பேசினார்கள்.

பண்டைய காலங்களில் வாழ்ந்த யாருக்கும் இன/மொழி உணர்வு இருக்கவில்லை. மன்னர் குடும்பம் முதல், சாதாரண குடிமக்கள் வரையில், குறிப்பிட்ட பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்திய மொழியை பயன்படுத்தி வந்தனர். ஆதனால் தான், சோழர்களின் கல்வெட்டுகள் ஒரு இடத்தில் தமிழிலும், இன்னொரு இடத்தில் தெலுங்கிலும் எழுதப் பட்டுள்ளன. அது மட்டுமல்லாது, சோழர்கள் பற்றிய வரலாறு தெலுங்கிலும் எழுதப் பட்டுள்ளது. அதே பெயர்கள், அதே சம்பவங்கள்... மொழி வேறு படுவதால் மனிதர்கள் மாறுவதில்லை.

ஆகவே சோழர்கள் தமிழராக மட்டுமல்லாது, தெலுங்கராகவும் இருந்திருக்கலாம்.சில நேரம், இரண்டும் இல்லாத வேறொரு மொழியை பூர்வீகமாக கொண்டிருக்கலாம். உதாரணத்திற்கு, நடிகர் ரஜனிகாந்தை குறிப்பிடலாம். மராட்டிய பூர்வீகத்தை கொண்டவர், கர்நாடகாவில் கன்னடராக வாழ்ந்து, பிற்காலத்தில் தமிழ்நாட்டில் நடிகரானதும் தமிழராகி விட்டார். இந்தக் காலத்திலும் மனிதர்கள் தாய்மொழியை மாற்றிக் கொள்வது சர்வ சாதாரணமான விடயம். மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திராத பண்டைய காலம் பற்றி சொல்லத் தேவையில்லை.

பெயர் பற்றிய ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். அதை விட, சோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம். ஆச்சரியப் படத் தக்கவாறு, ஐநூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய காலனியாதிக்க வாதிகள் உலகம் முழுவதும் கொள்ளையடித்து செல்வம் சேர்த்த மாதிரி தான், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழர்களும் நடந்து கொண்டுள்ளனர்! பண்டைய காலத்து தெற்காசிய ஏகாதிபத்தியவாதிகள் சோழர்களே என்றால் அது மிகையாகாது.

உண்மையிலேயே, சோழர்கள் அயலில் இருந்த நாடுகள் மீது படையெடுத்து கொள்ளையடிப்பதை தமது பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தனர். முதலில் தமக்கு அயலில் இருந்த எதிரி நாடுகளை அடக்கி கொள்ளையடித்தனர். தெற்கில் இருந்த பாண்டிய நாட்டையும், வட- மேற்கில் இருந்த சாளுக்கிய நாட்டையும் ஆக்கிரமித்து சூறையாடினார்கள்.

அத்தோடு நின்று விடவில்லை. "கங்கை கொண்டான்", "கடாரம் கொண்டான்" என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் அளவிற்கு கண்ட இடமெல்லாம் சென்று கொள்ளையடித்து பொருள் திரட்டி வந்தார்கள். அந்த அருமை பெருமைகளை தஞ்சாவூர் கல்வெட்டுகளில் எழுதி வைத்தனர். வடக்கே ஒட்ட தேசம் (ஒடிசா), வங்கதேசம் என்று கங்கையாறு வரை சென்று இந்தியா முழுவதையும் கொள்ளையடித்து முடிந்ததும், கடல் கடந்து ஈழ மண்டலத்தின் (இலங்கை) மீது படையெடுத்தனர்.

இலங்கை, கடாரம் மீதான சோழப் படையெடுப்புகளை, "கொள்ளையடிக்கும் கொள்கை" என்றும், "திரவியங்களை அபகரித்து அள்ளிக் குவித்தல்" என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

//"G.W Spencer (1976) interprets the eleventh century Chola invasion of Sri Lanka as “Politics of Plunder”. The prasasti that speaks about the Kadaram expedition, mentions large “heaps of treasure” accumulated by Rajendra in his war with Kadaram.// - Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions

//The most spectacular Chola military campaigns in southern and eastern India during the late 10th century and early 11th centuries were, in fact, plundering raids. In 1025 Rajendra Chola launched naval attacks on the ports of Srivijaya in maritime Southeast Asia and conquered Kadaram (modern Kedah) and occupied it for some time. Historian George Spencer states that the Chola expedition into Ceylon and the Straits of Malacca -the attack upon Srivijaya -must be viewed not as a military campaign to expand the kingdom but as a continuation of the sustained plundering activity in India. The Chola-Chalukya wars -a series of battles fought from 992 CE to 1120 CE -resulted in the winning Cholas looting the Chalukaya kingdom. Spencer argues that the Cholas needed to engage in these plundering campaigns to let them maintain the flow of resources into their states and strengthen their hold over their local chieftains.// - M D Muthukumaraswamy


சோழர்கள் அயலில் இருந்த நாடுகளை மட்டும் சூறையாடவில்லை. பெரிய கப்பல்கள் கட்டி, இந்து சமுத்திரத்தை கடந்து தூர கிழக்காசிய நாடுகளுக்கு கடற் கொள்ளையராக சென்று வந்தனர். அந்தமான் தீவுகள், பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா வரை சென்று, நாடு நாடாக கொள்ளையடித்து திரவியம் சேர்த்தனர்.

சுமாத்ரா தீவில் இருந்த ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத் தலைநகர் பலம்பங் சோழர்களால் தாக்கி அழிக்கப் பட்டது. அங்கு அரச மாளிகையில் இருந்த நவரத்தினக் கற்கள் பொறிக்கப் பட்ட கதவுகளை பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். சுமாத்ரா அந்தக் காலத்தில் "சுவர்ண துவீபம்"(தங்கத் தீவு) என்று அழைக்கப் பட்டது. மலாயா, சுமாத்ரா இரண்டும் வெளிநாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யும் வர்த்தம் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தன. அதற்காகவே, தங்கம் கொள்ளையடிப்பதற்காகவே சோழர்கள் படையெடுப்பு நடந்திருக்கலாம்.

இதனை நிரூபிக்க ஒரு வரலாற்று ஆதாரம் காட்டலாம். (இந்தோனேசிய) ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம், சோழர்களுடன் நட்புறவைப் பேணி வந்தது. சோழ நாட்டிற்குள், நாகபட்டினத்தில் இருந்த பௌத்த ஆலயம் ஸ்ரீவிஜய மன்னர் வழங்கிய நிதியில் தான் பராமரிக்கப் பட்டு வந்தது. ஸ்ரீவிஜய நாட்டின் தலைநகரான பலம்பங்கில் இருந்து நாகபட்டினத்திற்கு கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. பலம்பங்கில் இருந்து வந்த பௌத்த துறவிகள், முதலில் நாகபட்டினத்தில் வந்திறங்கித் தான் வட இந்தியாவில் இருந்த நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு சென்றனர்.

ஆகவே, ஸ்ரீ விஜயமும், சோழ தேசமும் சிறந்த இராஜதந்திர உறவைப் பேணிக் கொண்டிருந்த காலத்தில், சோழர்கள் ஸ்ரீவிஜயம் மீது படையெடுப்பதற்கு எந்தவொரு அரசியல் காரணமும் இருந்திருக்க முடியாது. அனேகமாக, வணிகம் தொடர்பாக எழுந்த பிரச்சினை இராணுவ நடவடிக்கையில் முடிந்திருக்கலாம்.

பதினாறாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவை காலனிப் படுத்திய ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து தங்கம் தங்கமாக அள்ளிச் சென்றனர். அதே மாதிரித் தான் மலேயா, சுமாத்ரா மீது படையெடுத்த சோழர்களும் கப்பல் கப்பலாக தங்கத்தை அள்ளிச் சென்றுள்ளனர். ஒரேயொரு வித்தியாசம், சோழர்கள் கொள்ளையடிப்பதுடன் நின்று விட்டனர். அயலில் இருந்த ஈழ மண்டலம் தவிர வேறெங்கும் காலனி அமைக்கவில்லை.

இதிலே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. சோழர்கள் படையெடுத்து சென்று வென்று வந்த நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்திருக்கவில்லை. அவர்கள் அங்கே நிரந்தரமாக தங்கியிருக்கவில்லை. அவற்றை தமது காலனிகள் ஆக்கவில்லை. உண்மையில், அதற்கான தேவை இருக்கவில்லை என்றே கூற வேண்டும்.

தங்கம், வெள்ளி, நவரத்தினக் கற்கள் என்று, அந்த நாடுகளில் கிடைத்த திரவியங்களை எல்லாம் கொள்ளையடித்து முடிந்ததும் தாயகத்திற்கு திரும்பி வந்தனர். சோழ நாட்டு தலைநகரமான தஞ்சாவூரும் அதை அண்டிய பகுதிகளும் காவிரி ஆற்றின் கொடைகளால் வளம் மிக்க விவசாய பூமியாக இருந்தது. ஆகையினால், ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளில் பொருளாதாரக் காலனி அமைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.

இதனை ஐரோப்பிய காலனியாதிக்கத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும். பதினாறாம் நூற்றாண்டிலும் ஐரோப்பிய நாடுகள் எந்த வித இயற்கை வளமும் இல்லாத வறிய நாடுகளாக இருந்தன. உலகம் முழுவதும் பொருளாதாரக் காலனிகளை உருவாக்கி சுரண்டாமல் விட்டிருந்தால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் பணக்கார நாடுகளாக வந்திருக்க முடியாது.

சோழர்கள் எதற்காக கொள்ளையடிப்பதை தமது பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தனர்? அதற்குக் காரணம், சோழ நாட்டுப் பொருளாதாரம் வரி அறவிடுவதில் தங்கியிருக்கவில்லை. சைவக் கோயில்கள் அரசியல் அதிகாரம் பெற்ற நிறுவனங்களாக இருந்தன. அவற்றிற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், பல கிராமங்களும் சொந்தமாக இருந்தன. அவற்றில் இருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் கோயிலுக்கே சொந்தமாகும்.

அந்தக் காலத்தில் சக்தி வாய்ந்த வணிகர் சங்கங்கள் இருந்தன. அந்த வணிகர்களும் தமக்கென நிலங்களை சொந்தமாக வைத்திருந்தனர். சோழ மன்னர்களுக்கு தேவைப் படும் போதெல்லாம் கடன் கொடுத்து வந்த வணிகர் சங்கங்கள், தேசத்திற்குள் இன்னொரு தேசமாக சுயாதீனமாக இயங்கினார்கள். நாணயக் குற்றிகளை புழக்கத்தில் விடுவதுடன், அந்நிய நாணயங்களை மாற்றிக் கொடுப்பதும் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அதனால், சோழ அரசர்கள் வேறு இடங்களில் வருமானம் தேட வேண்டி இருந்தது. பாண்டிய நாடு, ஈழ மண்டலம் என்று சோழநாட்டிற்கு அருகில் நிறைய "பணக்கார நாடுகள்" இருந்தன. அங்கெல்லாம் படையெடுத்து சென்று கொள்ளையடித்த செல்வங்களை கொண்டு வந்து கோயில்களுக்கு தானம் செய்தனர்.

ஒரு தடவை, கோயிலுக்கு முன்னூறு கிலோ தங்கம் கொடுத்ததாகவும் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. கோயில்களுக்கே அந்தளவு அள்ளிக் கொடுத்தனர் என்றால், சோழ மன்னர்கள் எந்தளவு செல்வம் சேர்த்திருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.

ராஜராஜ சோழனும் அவனது வாரிசுகளும் இந்தியா முதல் இந்தோனேசியா வரையில் கொள்ளையடித்து செல்வம் சேர்த்தனர். அத்துடன், செல்லுமிடமெங்கும் பெண்களையும், குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து, அந்நாட்டு மக்களிடம் கெட்ட பெயரையும் சம்பாதித்திருந்தனர். இந்தத் தகவல்கள், சோழப் படையெடுப்புகளால் பாதிக்கப் பட்ட நாடுகளின் வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளன.
(ஆதாரம்: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz)

"இந்தியா முதல் இந்தோனேசியா வரை விரிந்திருந்த சோழ சாம்ராஜ்யம்" பற்றிய கதைகள் உண்மைக்கு புறம்பானவை. அது இருபதாம் நூற்றாண்டில் தமிழ்த் தேசியர்களின் அரசியல் நோக்கங்களுக்காக திரிபுபடுத்தப் பட்ட, ஒரு பக்கச் சார்பான வரலாறு. சோழர்கள் படையெடுத்து சென்ற நாடுகளில் எல்லாம், "கொள்ளையர்கள், படுகொலையாளர்கள்..." என்று உள்நாட்டு மக்களால் தூற்றப் பட்ட போதிலும், எதற்காக தமிழ்த் தேசியவாதிகள் சோழர்களை தூக்கிப் பிடிக்கிறார்கள்?

உலகம் முழுவதும் தேசியவாதக் கோட்பாடு ஒரே மாதிரித் தான் செயற்படுகின்றது. செங்கிஸ்கான் என்றால் பல ஆசிய நாடுகளில் வில்லன் என்று அர்த்தம். செங்கிஸ்கான் படையெடுத்து சென்ற நாடுகளை சேர்ந்த மக்கள், தமது அழகான நகரங்களை தரைமட்டமாக்கி, பெண்களையும், குழந்தைகளையும் விட்டு வைக்காமல் இனப்படுகொலை செய்த கொடியவன் என்று சொல்வார்கள். ஆனால், மொங்கோலியாவில் அதே செங்கிஸ்கான் ஒரு பெருமைக்குரிய சரித்திர நாயகன்!

மொங்கோலியா நாட்டில் எங்கு பார்த்தாலும் செங்கிஸ்கான் பெருமை கூறும் பெயர்ப் பலகைகளை காணலாம். தலைநகர் உலான் பட்டாரில் பெரியதொரு செங்கிஸ்கான் சிலை உள்ளது. அதற்குக் காரணம் மொங்கோலிய தேசியவாதம். உலகம் முழுக்க வில்லனாக தென்படும் ஒருவன், தேசியவாதிகளின் கண்களுக்கு நாயகனாகத் தெரிகிறான். இதே தான் தமிழ்த் தேசியவாதிகள் விடயத்திலும் நடக்கிறது. உலகம் முழுவதும் சோழர்களை கொள்ளையர்களாக கருதினாலும், அவர்களைப் பொறுத்தவரையில் சோழர்கள் நாயகர்கள் தான். அதற்குப் பெயர் தேசியவாதம். அது குறுகிய மனப்பான்மை கொண்டது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா?

Saturday, February 03, 2018

மொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான்!


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மொங்கோலியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. பெருமளவில் நாடோடி இடையர்களை கொண்ட மக்கள் சமூகத்தில் இருந்து சோஷலிசப் புரட்சி வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

முதலில், மொங்கோலிய சோஷலிசப் புரட்சிக்கு காரணமாக இருந்த, டம்டின் சுக்பதார் பற்றி சில குறிப்புகள். டம்டின் சுக்பதார் ஒரு சாதாரண ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில், முகாமில் நிலவிய ஊழல், வசதிக் குறைபாடுகளுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்தில் பங்கெடுத்தவர். பிற்காலத்தில் பௌத்த மத நூல்களை அச்சிடும் அரசு அச்சகத்தில் வேலை செய்த பொழுது மார்க்சியத்தை அறிந்து கொண்டார். 

அப்போது தலைநகர் உலான் பட்டாரில் தங்கியிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுகள் மூலம் மார்க்ஸிய நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கலாம். டம்டின் சுக்பதார் பிற மார்க்ஸிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் புரட்சிகர கட்சியை உருவாக்கினார். மொங்கோலிய நாடோடி இன மக்களை அணிதிரட்டி, கெரில்லாப் படை ஒன்றை அமைத்தார். 

இதே நேரம், ரஷ்யப் புரட்சியின் தாக்கம் மொங்கோலியாவில் எதிரொலித்தது. போல்ஷெவிக் செம்படைகளால் தோற்கடிக்கப் பட்ட ஸார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள், மொங்கோலியாவுக்குள் நுழைந்து பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினர். அதற்கெதிராக மொங்கோலிய மக்கள் கிளர்ச்சி செய்தனர். டம்டின் சுக்பதார் தலைமை தாங்கிய மொங்கோலிய நாடோடிகளின் கெரில்லா இராணுவம், ரஷ்ய செம்படை உதவியுடன் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மொங்கோலியாவில், 1924 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக, அந்த நாடு கம்யூனிசப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகில் சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக தோன்றிய, இரண்டாவது சோஷலிசக் குடியரசு அதுவாகும்.

அதுவரை காலமும், திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றும் மதத் தலைவர்களாலும், சீன மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த மொங்கோலியா நாட்டில், எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. பெரும்பாலான மொங்கோலிய மக்கள், நாடோடி கூட்டங்களாக வாழ்ந்ததால், பாடசாலைகளும் கட்டப் படவில்லை. பௌத்த துறவிகளும், மேட்டுக்குடியினரும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.

மொங்கோலியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், மாலை நேர பாடசாலைகள் அமைக்கப் பட்டன. பகலில் வேலை செய்து விட்டு வரும், தொழிலாளர்கள், விவசாயிகள், இடையர்கள் அந்த மாலை நேரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்றனர். உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் "மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்" அமைக்கப் பட்டது.

இது பிற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்டது. கல்வி கற்கும் வயதில் உள்ள சாதாரண மாணவர்களுக்காக அமைக்கப் படவில்லை. வறுமை காரணமாக இளம் வயதில் வேலைக்கு போக வேண்டியிருந்த இளம் வயதினர் முதல், முதுமையிலும் அறிவைத் தேடுபவர்கள் வரையிலான பலதரப் பட்டோர் அங்கே கல்வி கற்றனர். மாலை நேர பாடசாலைகளில் சித்தி பெற்ற தொழிலாளர்களும் மேற்படிப்புக்காக வந்தனர்.

மார்க்சிய - லெனினிய பல்கலைக்கழகத்தில், வெறும் கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே போதிப்பார்கள் என்று, தவறாக நினைத்து விடக் கூடாது. சாதாரண பல்கலைக் கழகத்தில் போதிக்கப் படும் அனைத்து பாடங்களையும் அங்கே பயில முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர், பொறியியலாளர்களாக, பொருளியல் நிபுணர்களாக, விவசாய நிபுணர்களாக, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றனர். 1953 ம் ஆண்டு, உலான் பட்டார் நகரில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, பத்து வருடங்களுக்குள் 900 பேர் பட்டதாரிகளாக வெளியேறினார்கள்.

(மேலேயுள்ள படத்தில் : மார்க்சிய - லெனினிய பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள். தகவல்: Mongolia Today, January 1963)