Thursday, June 17, 2010

இஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)

"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமல்ல. முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் இஸ்லாமிய பாலியல் நூல்களின் இருப்பை மூடி மறைத்து தூய்மைவாதம் பேசுகின்றனர். ஆயிரத்தி ஐநூறு ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய கலாச்சாரம், எவ்வாறு எப்போதும் ஒரே தன்மையானதாக இருந்திருக்க முடியும்? உலகின் பிற கலாச்சாரங்களைப் போன்று, இஸ்லாமிய கலாச்சாரம் பல்வேறு மாற்றங்களுக்குள்ளாவது எதிர்பார்க்கக் கூடியதே. கிறிஸ்தவ வரலாற்றில் இடையில் சிறிது காலம் Renaissance என அழைக்கப்படும் அழகியல் கலையின் காலம் இருந்தது. அந்தக் காலத்தை சேர்ந்த ஓவியர்கள், கவிஞர்கள் சுதந்திரமாக எதையும் வெளிப்படுத்த முடிந்தது. இன்றைக்கும் இத்தாலியில் இவர்களின் படைப்புகள் பாதுகாத்து வைக்கப்படுகின்றன. இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், அந்தக் காலகட்டத்தில் மட்டுமே நிர்வாண ஓவியங்கள் வரையப்பட்டன. அதற்கு முன்னரும், பின்னரும் கிறிஸ்தவ மதம் அந்த அனுமதியை வழங்கவில்லை.

இஸ்லாமிய நாகரீகத்திலும் அது போன்ற Renaissance காலகட்டம் இருந்துள்ளது. குறிப்பாக பாக்தாத்தில் இருந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்த கலீபாக்களின் காலத்தில் சுதந்திரமான கலை வெளிப்பாடு அனுமதிக்கப் பட்டது. காமம் கலந்த செய்யுள்கள் அந்தக் காலத்தில் புனையப் பட்டன. அன்றைக்கு எழுதப்பட்ட "ஆயிரத்தொரு இரவுகள்" என்ற இலக்கியம், இன்றைக்கும் பலரால் விரும்பிப் படிக்கப்படுகின்றது. வாசகர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் பாலியல் வர்ணனைகள் கொண்ட கதைகள் பல அதில் உள்ளன. இந்தக் கதைகளின் பூர்வீகம் மத்திய ஆசியா. இருப்பினும், வாய் வழி இலக்கியமாக இருந்த கதைகளை அரபு மொழி செழுமைப்படுத்தியது. தலை சிறந்த இலக்கியமாக உலகிற்கு வழங்கியது. கதைகள், செய்யுள்கள் மட்டுமல்ல, பாலியல் கல்வியை போதிக்கும் நூல்களும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டன. சில நேரம் ஆன்மீகத்தை போதிக்கும் இஸ்லாமிய மதகுருக்கள் கூட அவ்வாறான நூல்களை எழுதியுள்ளனர்.

உதாரணத்திற்கு சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய நூல்களின் பட்டியலை இங்கே தருகின்றேன்.
"உங்கள் அன்புக்குரியவரை வசீகரிகரிக்கும் கையேடு" - எழுதியவர் Ahmad al Falitha
"சந்தையில் ஆபரணங்கள்" - (காதல் கதைகள்), எழுதியவர் Abdalrahman al Shauzari
"திரை விலக்கப்பட்ட உடலுறவின் ரகசியங்கள்" - எழுதியவர் Shihab al Din al Tifashi
"புத்தகங்களில் சொல்லப்படாத உலகத்தை சுற்றிப் பார்த்தல்" - எழுதியவர் Abdal Wahab Ibn Sahnun
"மகிழ்ச்சியான ஆத்மா" - எழுதியவர் Ibn Ahmad al Tijani
"காதலுக்கும் காமத்துக்குமான அறிமுகம்" - எழுதியவர் Abdal Salam al Laqani

Umar al Nafzawi எழுதிய "நறுமணம் வீசும் பூங்காவனம்" (al Raud al Atir Fi Nuzhat al Khatir ) நூல் காமசூத்ராவுடன் ஒப்பிட்டு பார்க்கத் தக்கது. ஆயிரம் வருட பழமையான நூலை இன்றைக்கும் அரேபியர்கள் இரகசியமாக படிக்கிறார்கள். 1850 ம் ஆண்டு, பிரெஞ்சுக்காரர்களால் துனீசியாவில் கையெழுத்துப் பிரதியாக கண்டெடுக்கப் பட்டது. அப்போதே அந்த நூல் பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. அரபு இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட Richard Burton அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். உடலுறவு வகை மாதிரிகளைக் காட்டும் படங்களைப் பார்த்து ஆபாசம் என்றுணர்ந்த அவரது மனைவி நூலை எரித்து விட்டார். அன்று இங்கிலாந்தில் இருந்த கிறிஸ்தவ தூய்மைவாத கலாச்சாரம், பாலியலை பேசக்கூடாத மறைபொருளாக வைத்திருந்தது. இருப்பினும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் இப்பொழுதும் ஒரு மூலப்பிரதியை பாதுகாத்து வைத்திருக்கிறது.

நறுமணம் வீசும் பூங்காவனம் உடலுறவு செய்முறைகளை விளக்குவது மட்டுமல்ல, ஆண்குறியையும், பெண்குறியையும் நாற்பது பெயர்களில் அழைக்கின்றது. "முட்டைகளின் மீது அமர்ந்து தூங்கும் புறா போன்ற ஆண்குறி", "சுவரில் உள்ள வெடிப்பை போன்ற பெண்குறி" போன்ற வர்ணனைகள் நூல் முழுவதும் பாலியல் உறுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு Nafzawi எழுதும் உடல் உறவு செய்முறை விளக்கம் ஒன்று: "விசேஷமாக குறி சிறிதாக உள்ள ஆண்களுக்கு. கலவியில் ஈடுபடும் பெண்ணின் முதுகை செங்குத்தாக சரித்து வைக்க வேண்டும். கால்களை தலைக்கு பக்கத்தில் தூக்கி வைத்திருக்க வேண்டும். கணுக்கால்கள் காதுமடல்களை முட்ட வேண்டும். அவளது யோனி மேல் எழும் நேரம் உன்னுடைய குறியை அறிமுகப் படுத்தலாம்."

மேற்குறிப்பிட்ட "இஸ்லாமிய காமசூத்ராவை" எழுதிய Al Nafzawi ஒரு மத நம்பிக்கையாளர் என்பதில் ஐயமில்லை. அவரே தனது எழுத்துக்கள் ஒன்றும் பாவகாரியமல்ல என்று தெளிவு படுத்துகிறார். நான் இறைவன் மீது சத்தியம் செய்கிறேன். இந்த நூலில் உள்ள அறிவுச்செல்வங்கள் அனைத்தும் மனிதர்க்கு அவசியமான தகவல்களைக் கொண்டவை. இறைவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆணின் இன்பம் பெண்ணின் உடல் பாகங்களில் தங்கியுள்ளது. பெண்ணின் இன்பம் ஆணின் உடல்பாகங்களில் தங்கியுள்ளது."

நறுமணம் வீசும் பூங்காவனம் நூல் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது:
The Perfumed Garden
of the Shaykh Nefwazi,Translated by Sir Richard Burton

33 comments:

EKSAAR said...

இஸ்லாமிய என்ற சொற்றோடர் பாவிக்கப்படுவதற்கு அது குர்ஆன் ,ஹதீஸ் ஆகியவற்றை கொண்டதாக இருக்கவேண்டும். யாரேனும் ஒரு முஸ்லிமின் பெயரைக்கொண்டதாக இருப்பின் அது "இஸ்லாமிய" என்ற அடிப்படைக்குள் வராது. உதாரணமாக தஸ்லீமா நஸ்றீன் எழுதியதற்காக அவரது புத்தகங்கள் இஸ்லாமிய நூல்கள் என்றாகா..

// ஆயிரத்தி ஐநூறு ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய கலாச்சாரம், எவ்வாறு எப்போதும் ஒரே தன்மையானதாக இருந்திருக்க முடியும்? //

இஸ்லாமிய அடிப்படைகள் ஒருபோதும் மாறாது. அவை எப்போதும் ஒரே அடிப்படையில்
இருக்கும். அது காலத்திற்கு ஏற்றவாறு outdate ஆகும் என்றால் அது முக்காலமும் உணர்ந்த இறைவனிடம் இருந்து வந்ததாகாது. அப்படி இறைவனிடம் இருந்து வந்திராவிட்டால் அது அழிந்துபோவதே சிறந்தது.

ramanindia_I luv India said...

வழக்கம் போல உங்கள் வலைப்பூ வில் ஒரு புதிய மற்றும் சுவாரஸ்யமான தகவல்!! இதோ எனது புதிய வலைப்பூ

நண்பர்களின் வரவுக்காக காத்திருக்கும்

www.telecomnext.blogspot.com

நிஜாம் கான் said...

சாக்கடையில் மூக்கை நுழைத்த பன்றிக்கு எதை முகர்ந்து பார்த்தாலும் அதே வாடை தான் அடிக்குமாம்.
தம்பி ரொம்ப கஷ்டப்படாதே!

Anonymous said...

//சாக்கடையில் மூக்கை நுழைத்த பன்றிக்கு எதை முகர்ந்து பார்த்தாலும் அதே வாடை தான் அடிக்குமாம்.//

சாக்கடையில் என்ன நறுமணமா வீசும்? பன்றி முகர்ந்தால் எனன பசு முகர்ந்தால் என்ன? சாக்கடை சாக்கடைதான்

Anonymous said...

//இஸ்லாமிய அடிப்படைகள் ஒருபோதும் மாறாது. அவை எப்போதும் ஒரே அடிப்படையில்
இருக்கும்.//

எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? எல்லாமே மாறுகின்றன என்பது இயற்கை விதி. விஞ்ஞானமும் மெய்யியலும் அதைத்தான் கூறுகின்றன.

Anonymous said...

//சாக்கடையில் மூக்கை நுழைத்த பன்றிக்கு எதை முகர்ந்து பார்த்தாலும் அதே வாடை தான் அடிக்குமாம்.//

You are right! மதங்கள் சாக்கடைதான!

EKSAAR said...

//இஸ்லாமிய அடிப்படைகள் ஒருபோதும் மாறாது. அவை எப்போதும் ஒரே அடிப்படையில்
இருக்கும்.//

எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? எல்லாமே மாறுகின்றன என்பது இயற்கை விதி. விஞ்ஞானமும் மெய்யியலும் அதைத்தான் கூறுகின்றன.

உங்க விஞ்ஞானமும் மெய்யியலும் பற்றி இங்கு நான் பேசவில்லையே.. எதைப்பற்றி சொல்லியிருக்கிறேன் என்பதை சரியாக விளங்க மாட்டீர்களா?

ஏறத்தாள் 1500 வருடமாக குர் ஆன் ஹதீஸ் இல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? தெரியாமல் பேசவேண்டாம்..

Kalaiyarasan said...

//ஏறத்தாள் 1500 வருடமாக குர் ஆன் ஹதீஸ் இல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? தெரியாமல் பேசவேண்டாம்..//


குரானும், ஹதீசும் மறை நூல்கள். ஆரம்ப காலங்களில் பரம்பரை பரம்பரையாக மனனம் செய்யப்பட்டு வந்த செய்யுள்கள், காலப்போக்கில் மாறக்கூடும் என்ற அச்சம் இஸ்லாமிய அறிஞர்களுக்கே தோன்றியிருக்கலாம். அதனால் தான் அவற்றை எழுதி வைத்தார்கள். அப்படி இருந்தும் குரானும் ஹதீசும் சாமானியனுக்கு புரிந்து கொள்ள கஷ்டமாக இருப்பதால் அவற்றிற்கு கொடுக்கும் விளக்கங்கள் பல வித்தியாசப் படுகின்றன. மேலும் இஸ்லாமியர்கள் முகமது காலத்தில் இருந்து இன்று வரை ஒரே மத அமைப்பாக இருக்கவில்லை. பல்வேறு பிரிவுகள் தோன்றியுள்ளன. அவர்களது மதம் சார்ந்த கருத்துகள், வாழ்க்கை நெறிமுறைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று வித்தியாசப் படுகின்றன. 1500 வருடங்களாக குரானிலும், ஹதீஸிலும் கூறப்பட்டிருப்பதைப் போல, அதாவது எந்த வித சிறு மாற்றமும் இன்றி, முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக கூறுவது சிறுபிள்ளைத் தனமானது. இன்றைய 21 ம் நூற்றாண்டு முஸ்லிம்கள்,1500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் போலவா வாழ்கிறார்கள்? வேண்டுமானால் ஆப்கானிஸ்தானில் சில பின்தங்கிய கிராமங்களில் அப்படியான முஸ்லிம்களை காணலாம். நண்பரே நீங்கள் கூட கலாச்சார மாற்றங்களுக்கு உட்பட்ட ஒருவர் தான். மாற்றம் இன்றி வாழ்வது நடைமுறைச் சாத்தியமற்றது. இஸ்லாமிய வரலாறு பற்றி எதுவுமே தெரியாத ஒருவர் மட்டுமே இவ்வாறு சிந்திக்க முடியும்.

EKSAAR said...

மதிப்புக்குரிய பதிவர் கலையரசனுக்கு, நீங்கள் கடைசியாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக எனக்கு தெரிந்த சில விடயங்களை பகிரலாம் என நினைக்கிறேன்.

//குரானும், ஹதீசும் மறை நூல்கள்//
குர் ஆன் - வேதம்
ஹதீஸ் - நபிகள் நாயகத்தின் சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றின் தொகுப்பு.

//குரானும் ஹதீசும் சாமானியனுக்கு புரிந்து கொள்ள கஷ்டமாக இருப்பதால் அவற்றிற்கு கொடுக்கும் விளக்கங்கள் பல வித்தியாசப் படுகின்றன.//

விளக்கங்கள் அவற்றுக்கு ஒன்றே. சிலரின் புரிதல்கள் வேறாகலாம். 1500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் புரிந்துகொள்ளும் நடையிலேயே குர் ஆன் வந்தது. அதன் விஞ்ஞான உண்மைகள் மக்களின் அறிவு மேம்படும்போது தெளிவாகலாம். ஆனால் அவை புதிய கருத்துக்கள் இல்லைதானே?

//மேலும் இஸ்லாமியர்கள் முகமது காலத்தில் இருந்து இன்று வரை ஒரே மத அமைப்பாக இருக்கவில்லை. பல்வேறு பிரிவுகள் தோன்றியுள்ளன. அவர்களது மதம் சார்ந்த கருத்துகள், வாழ்க்கை நெறிமுறைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று வித்தியாசப் படுகின்றன.//

இஸ்லாம் என்ற அடிப்படைக்குள் வரையறுக்கப்படுவதற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்கிறது. அதனை தாண்டியவர்கள் இஸ்லாமியர்களாக கருதப்படமுடியாது. அதேவேளை இயக்கங்களாக பிரிந்திருப்பதை இதில் சேர்க்க முடியாது. அதேபோல் இஸ்லாமியன் ஒருவன் சரியாக இஸ்லாத்தை பின்பற்றாவிட்டால் அது இஸ்லாத்தில் ஏற்பட்ட திருபாகவும் கருதப்பட முடியாது. ஆயினும் இஸ்லாம் காட்டிய வரையறைக்குள் வாழ்பவனே முஸ்லிமாகும்.

உதாரணமாக ஆடைகள் விடயத்தில் இன்று நாம் அரேபியர்போல் ஆடையணியாமல் இருக்கலாம். ஆனால் இஸ்லாம் வரையறுத்துள்ள ஆடை விதி "இன்ன இன்ன விடையங்கள் மறைக்கப்படவேண்டும்" என்று மட்டுமே கூறுகிறது. அவ்வாறு மறைக்கும் எந்த ஆடையும் இஸ்லாமிய ஆடை விதிக்குள் அங்கீகரிக்கப்பட்டதாகிவிடும்.

எனவே குறிப்பிட்ட வரையறைக்குள்ளான கலாச்சார வேறுபாடுகள் கூட இஸ்லாமிய கட்டளைகள் மாறுபட்டுவிட்டன என்றாகா..

அதேபோல் 1500 ஆண்டுகளுக்கு முன்னரான வாழ்க்கை முறையும் இன்றைய வாழ்க்கை முறையும் இதேமாதிரியான அடிப்படைக்குள் அமைவதால் இஸ்லாத்தில் திரிபு ஏற்பட்டதாக கொள்ளப்பட முடியாது.

faidh said...

//// மேற்குறிப்பிட்ட "இஸ்லாமிய காமசூத்ராவை" எழுதிய Al Nafzawi ஒரு மத நம்பிக்கையாளர் என்பதில் ஐயமில்லை. அவரே தனது எழுத்துக்கள் ஒன்றும் பாவகாரியமல்ல என்று தெளிவு படுத்துகிறார்.//////

யாரோ ஒருவர் எழதுவதற்கு எல்லாம் இஸ்லாம் பொறுப்பு ஆகாது சார் ...நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இதனை ஆண்டுகளாக இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகள் ஏதும் மாறவில்லை 1400 வருடங்களுக்கு முன் எப்படி உள்ளதோ அப்படிதான் இன்றும் உள்ளது அதில் இருந்து ஒரு வார்த்தை கூடே இன்று வரை மாற வில்லை மாறவும் போவதில்லை ...சில மனிதர்கள் புரியும் தவறுகள்கு இஸ்லாம் பொறுப்பு ஆகாது சார்.இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விசயங்கள் இருந்தும் ஒரு சில மனிதர்கள் அல்லது மத அமைப்புகளோ செய்யும் தவறுகள் மட்டும் பெரும்பாலும் மீடியாகளால் பெரிது படுத்தி காட்ட படுவது பெரும் வேதனையான விசயாமகும்

Anonymous said...

//இஸ்லாம் என்ற அடிப்படைக்குள் வரையறுக்கப்படுவதற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்கிறது. அதனை தாண்டியவர்கள் இஸ்லாமியர்களாக கருதப்படமுடியாது.//

Sunni, Shi'a, etc, etc. இவர்களில் யார் இஸ்லாமியர்கள்? எது சரியான வரைவிலக்கணம்?

Anonymous said...

//உங்க விஞ்ஞானமும் மெய்யியலும் பற்றி இங்கு நான் பேசவில்லையே.. //

விஞ்ஞானம் என்னுடையது, உன்னுடையது என்று இல்லை. இது ஒன்றும் மதம் இல்லை வேறுபடுத்திப் பார்க்க.

//அதன் விஞ்ஞான உண்மைகள் மக்களின் அறிவு மேம்படும்போது தெளிவாகலாம்.//

நீங்கள் குறிப்பிடுவது எந்த 'விஞ்ஞானம்'?

Anonymous said...

//இஸ்லாமிய அடிப்படைகள் ஒருபோதும் மாறாது. அவை எப்போதும் ஒரே அடிப்படையில்
இருக்கும். அது காலத்திற்கு ஏற்றவாறு outdate ஆகும் என்றால் அது முக்காலமும் உணர்ந்த இறைவனிடம் இருந்து வந்ததாகாது.//

எப்படி உங்களல் திடமாக கூற முடியும் இஸ்லாமிய அடிப்படைகள் இறைவனிடம் இருந்து வந்ததன என்று?

Anonymous said...

இஸ்லாத்துக்கெதிரான ஓர் கூட்டம் இங்கே செயற்படுகிறது. ஐரோப்பாவில் இருக்கும் நீங்கள் இப்படி செயற்படுவதில் ஒன்றும் வியப்பில்லை. இஸ்லாத்தை குறைகாண நீங்கள் யார்? முஸ்லிமா? உங்கள் கருத்துச் சுதந்திரம் இஸ்லாத்தை வீணாக குற்றம் காண முற்படக் கூடாது. மற்றவர்களை நோகடிக்கக் கூடாது. மற்றவர் குறை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு என்ன பிரியம்? நீங்கள் குற்றமே செய்யாத மகானா? மார்க்கம் பலவீனமான மனிதர்களைக் கொண்டது. அதற்காக மார்க்க அடிப்படை ஒன்றும் கெட்டுவிடவில்லை.

நீங்கள் கூறும் அறிவியலின்படி நீங்கள் மன நோயால் பீடிக்கப்பட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

Anonymous said...

உங்களைப் போன்றோர்தான் மனநோயால் பீடிக்கப்பட்டு கோலிச் சித்திரம் வரைவர். கேட்டால் கருத்துச் சுதந்திரம்! உங்களையும் உங்களுக்குரியவர்களையும் வரைந்து பாருங்கள். அப்போது அதன் தாக்கம் புரியும்.

முஸ்லிமாக வாழ்ந்து பார் அதன் அருமை புரியும்!!!!!!

Anonymous said...

கொய்யால! இவனுகள் திருந்தவே மாட்டானுகளா?

கேனப்பயலுகளா! ஒரு முஸ்லிம் அந்தக்காலத்தில பயனுள்ள விசயங்கள எழுதி வைச்சிருக்கான் என்று பெருமைப்படுறத விட்டுப்புட்டு கேப்மாரி மாதிரி பேசுறிங்க

நீங்க தொடருங்க சார்!

Anonymous said...

//இவனுகள் திருந்தவே மாட்டானுகளா?//

No way! They are damn fools!

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Why did u remove a post? Let it be and see. Everyone has rights to tell their opinion.

Kalaiyarasan said...

திரு. ஜமாலி, நாகரீகமான முறையில் எழுதாத படியால் உங்கள் கருத்து இங்கே எடுபடாமல் போய் விட்டது.

ஜமாலன் said...

கலையரசன் பயனுள்ள ஒரு நல்ல அறிமுகம். கீழ்திசைவியல் பண்பாட்டின் பல கூறுகளை இன்று ஐரோப்பியா தனதானதாக ஆக்கிக் கொண்டுவிட்டது. அவற்றில் ஒன்று காமம். காமம் பற்றிய அறிவை பாலியல் என்கிற விஞ்ஞானமாக்கியது ஐரோப்பா. அதன்பின் காமம் என்கிற உணர்வை பாலியல் என்கிற அறிவாக மாற்றிவிட்டது. இப்படி பலவற்றையும் விரிவாக பேசவும் சிந்திக்கவும் உள்ளது. எந்த மதமும் பாலியலை அல்லது காமத்தை மறுப்பதில்லை, மறைப்பதில்லை.. கண்காணித்து கட்டுப்படுத்தவே செய்கின்றன. முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

அபூ முப்ளிஹா said...

katturaiyaalar ondrai purindu kolla weandum alldu islam patri adanudaiya adippadaipattri mudalil padikka weandum

Aboothalib said...

இசுலாம் என்பது நபிகள் (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் குரானுமே, அதைத்தவிர வேறு எவன் எதை சொன்னாலும் அது இசுலாம் அல்ல, இவ்வளவு பொது அறிவு பேசும் உங்களுக்கு இது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் இல்லாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். அதைவிடுத்து அரைவேக்காட்டுத்தனமாக கட்டுரை என்ற பெயரில் மற்ற மதத்தினர் மனதை புண்பட எழுதுவது உங்கள் அறியாமையையும் காழ்ப்புணர்ச்சியையும் காட்டுகிறது. உங்கள் அறியாமையின் உச்சம் நீங்கள் அரபு அல்லது பாரசீக பெயர் கொண்ட எவன் எதை செய்தாலும் அதை இசுலாம் செய்ததாக ஆகுமா? சிந்திக்க தெரிந்த எவனும் இப்படி ஒரு குப்பையை கட்டுரை என்று சொல்லமாட்டான்.

Unknown said...

நல்ல பதிவு. இஸ்லாம் பற்றி பொங்கி எழும் மத தூய்மை வாதிகள், செங்கொடியில் போய் குரான், ஹதீஸ்கள் பற்றி படிக்கலாம். குரானே 120 ஆண்டுகள் வாய்மொழியாக பாடப்பட்டு, பிறகே தொகுக்கப்பட்டது. அது தொகுக்கப்பட்ட விதததை செங்கொடியில் படித்தால், குரானின் தூய்மை புரியும். ஹதீஸ்களும் அப்படியே !! ஆகவே கலையரசன் அவர்கள், மதவாதிகளைப் பற்றி கவலைப்படவேண்டாம்.

Unknown said...

அன்புள்ள சகோதரரே
இஸ்லாம் என்ற சொல்லின் அர்த்தம் இறைவனுக்கு அடிபணிதல் என்பதாகும்.
அடிபணியும் முறையை கற்றுகொடுப்பதே
குரானும் ஹதீசும் ஆகும்.அது அல்லாத முஸ்லிம் பெயர்தாங்கிளால் எழுதியதை எல்லாம் வைத்துக்கொண்டு இஸ்லாம் என்று சொல்லாதிர்கள்.

மீரான் ராமேஸ்வரம் said...

நல்ல கருத்துக்கள் சகோ....நீங்கள் குறிப்பிட்ட் விடயம் உண்மையானது....கலீபாக்களின் ஆட்சியில் விஞ்ஞானமும் ம்ருத்துவம், கனிதம் , அறிவியல் அனைத்து முன்னேற்றப்பாதையில் தான் இருந்தது. அன்றைய ஐரோப்பிய இருண்ட கண்டத்திற்கு முழு வெளிச்சமும் சிலுவை யுத்ததிற்கு பின் அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒன்று தான்....என்பது வரலாற்று பூரிவமான ஒன்று....ஒருகருத்தை இஸ்லாம் அங்கிக்ரித்த பாதையில் இருக்குமாயின் அதில் எந்த தடையும் இல்லை....பொதுவாக முஸ்லிம்கலிடத்தில் ஒரு போபியா ஒன்று உறுவாகி இருக்கின்றது....இஸ்லாம் என்ற ஒரு வார்த்தை ஒரு ஆய்வுக்கட்டுரையில் வந்தால் அந்த ஆய்வாளரையும் அந்த கருத்தையும் ஆய்வுக்குட்படுத்தாமல் ஒரே எதிர்ப்பு அல்லது நிராகரிப்பு என்ற நிலையில் தான் அதிகமான இஸ்லாமியர்கள் இருக்கின்றார்கள்...அல்லது அவ்வாறு பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்....ஏனென்றால் அமைப்பு சார்பாக இயங்கும் மனநிலையில் இருக்கின்றார்கள்....ஒரு அமைப்பு அதை பற்றி ஆதரவு கருத்து இட்டால் அது சரியா தவரா என்று கூட ஆய்வு செய்யாமல் அந்த அமைப்பைச்சேர்தவர்கள் அதை அதிகமதிகம் ஆதரவு கொடுத்து வக்காலத்துடன் தான் இருக்கும்...அதை ஒரு இஸ்லாமிய அமைப்பு எதிர்த்தால் அவர்களை சார்ந்த அண்பர்கள் அதை சற்றும் சிந்திக்ககாமல் உடனே எதிர்ப்பு....என்னை பொருத்த வரை இது ஒன்றும் இஸ்லாமிய விரோத கருத்தும் இல்லை இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றும் இல்லை,,,,,,இஸ்லாம சிந்திக்க சொல்லிதான் ஒவ்வொரு குரான் அத்தியாத்திலும் குறிப்பிட்டிறுக்கிறது....இந்த தலைவர்கள் அல்லது அவர்கள் வழிகாட்டிகள் எதை சொன்னாலும் எதை ஏற்றாலும் ஏற்கும் மனநிலையில் இருந்து மாற்பட்டு...அது எந்த அடிப்படைய்ல் இஸ்லாமை மாற்செய்கிண்றது அது எவ்வாறு செய்யும் என்பதினயும் ஆய்வுசெய்து விட்டு பதிவிடுங்கள்.....இருப்பினும்.....முஸ்லிம்கள் வேறு பட்டவர்கள் தான் சகோ பல்வேறு கலாச்சாரம் மொழிவாரியாக பிரிந்து இருக்கும் இஸ்லாம் இன்றுக்கொன்று வேறூபட்டு தெரிவதில் ஆச்சர்யம் இல்லை...ஆனால் இவர்களை இனைத்து வைப்பது எது என்றூ பார்த்தீர்கள் என்றால் மார்க்க நம்பிக்கை , தொழுகை , குர் ஆன் இவைகள் தான்...இவைகளில் இன்றளவும் மாற்றம் இல்லை மாற்றவும் முடியாது.....அது தாங்கள் அறியாத்து ஒன்றும் இல்லை......

riz said...

Dear kalaiyarasan......
Arai kuaraiyahe therindhu kondu ambalaththil aaduvadhu arivukku azhagaale.......

mufees said...

1000 manithan irikakala athu anaithum nalathundu namba mudiyathu ivanuga yelam ayokiyanunga intha booka yeluthinawanga

Unknown said...

arabic il iruppathellam islam aahi vidthu,salmanrusthi pontra islaththai vitru vairu valarporhal kalaththitku kalam irunthe vanthullanar,ithu oru athan oru vadivamaha irukkalam.

Unknown said...

பாலியல் உறவு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும்,பிறகு செய்யவேண்டிய தூய்மைபற்றியும்,வயதுவந்தோர் செய்யவேண்டிய சுத்திகரிப்பு முறை எல்லாம் ஹதிஸ் களாக தொகுக்கப்பட்டுள்ளது,மனைவியின் உணர்வை மதிக்கும் முறையில் அவள் மலதுவாரத்தில் உறவுகொள்வதும்,மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது தடுக்கப்பட்டுள்ளது,பிறப்பு உறுப்பு முடிகளை திருமணமானோர் 13 நாட்கள் ஒருமுறையும்,திருமணமாகாதவர் 40 நாட்களுக்கு ஒரு முறையும்,அக்குல் முடிகளை 1வாரத்துக்கு ஒரு முறை நீக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது இந்த அளவிற்கு வேற மதத்தில் கிடையாது.அப்படியிருக்க வேற நூல்களை ஆதரிக்க தேவை இஸ்லாத்தில் இல்லை.

Anonymous said...

மதிப்பிற்குரிய கலையரசன் அவர்களே, ஒரு முஸ்லீம் என்பவன் அல்லாஹுவையும், அவன் அனுப்பி வைத்த தூதர்களையும், அவனது மலக்குகளையும், அவனது வேதங்களையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவன்............. இதற்கு மாறாக ....வேறு எந்த அறிஞர் வந்து கதை சொன்னாலும், கட்டுரை எழுதினாலும் அவன் முஸ்லீம் அல்ல என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை.......தாங்கள் எழுதியுள்ள கட்டுரைக்கும், இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.......

Unknown said...

dear brother.you must read quran and hadees

John said...

முகமது பதினோரு பொண்டாட்டிய ஒரே நைட்ல போட்டதன் ரகசியத்தை பாய்கள் புரிந்துகொள்ள வேண்டும்