Thursday, October 08, 2009

இஸ்தான்புல்: IMF எதிர்ப்பு கலவரம், மேலதிக தகவல்கள்

(6-7 Oct.) துருக்கி, இஸ்தான்புல் நகரில் வருடாந்த கூட்டத்தொடரை நடத்திக் கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். துருக்கி கம்யூனிச கட்சிகளான Partizan,TKP/ML,TIKB மற்றும் பல இடதுசாரி குழுக்களும் சேர்ந்து நடத்திய ஊர்வலங்கள் இஸ்தான்புல் நகரை ஸ்தம்பிக்க வைத்தது. மாநகர காவல்துறை, பாசிச குண்டர்களுடன் சேர்ந்து ஊர்வலத்தை வன்முறை பிரயோகித்து முறியடித்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரருக்கும் போலீசாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் குறைந்தது நூறு ஆர்ப்பாட்டக்கரர்களை கைது செய்தனர். ஒருவர் பொலிஸ் தடியடியால் மரணமுற்றார். அதற்குப் பின்னர் இஸ்தான்புல் நகரில் கலவரம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சர்வதேச மூலதனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் பெரும் வணிக நிறுவனங்களை தாக்கினார்கள். Burger King உணவகம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது. ஆடம்பர உணவகங்களும் தாக்குதலுக்கு தப்பவில்லை. வங்கிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.





No comments: