Friday, October 02, 2009

பாலஸ்தீனத்தில் யூத இனவெறியர்களின் வன்முறை

அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது ஆயுதமேந்திய யூத காடையரின் வன்முறைகளைக் காட்டும் வீடியோக்கள் இவை.

இஸ்ரேலில் ஒரு தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தால் போதும். வரிந்து கட்டிக் கொண்டு உலகின் அத்தனை தொலைக்காட்சிகளும் 24 மணிநேரம் அதையே காட்டிக் கொண்டிருக்கும். பாலஸ்தீன வன்முறையை ஆர்வத்துடன் பதிவு செய்யும் ஊடகங்கள், பாலஸ்தீனத்தில் அத்துமீறிக் குடியேறும் யூதர்களின் வன்முறையை கண்டுகொள்வதில்லை. இத்தனைக்கும் பாலஸ்தீனர்கள் மீதான யூத குடியேற்றவாசிகளின் வன்முறை அங்கே தினம் தினம் நடந்து வருகின்றன. ஆயுதமேந்திய யூதர்கள், பாலஸ்தீன கிராமங்களை சுற்றிவளைத்து தாக்குவார்கள். பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக பாலஸ்தீன கிராமவாசிகள் இடம்பெயர்வார்கள். பின்னர் அவர்களின் வீடுகளை யூதர்கள் அபகரித்துக் கொள்வார்கள். இந்தக் கொடுமை கடந்த அறுபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இஸ்ரேலிய/யூத ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பாலஸ்தீனர்கள் சிலர் நூதனமானபோராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கையடக்க தொலைக்காட்சி கமெராக்கள் கொண்டு தமக்கு நேரும் இடர்களை படம்பிடித்து அனுப்புகின்றனர். "பெத் ஷலேம்" என்ற இஸ்ரேலிய மனித உரிமைகள் நிறுவனம் அந்த வசதியை செய்து கொடுத்துள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட யூதர்களின் வன்முறைக் காட்சிகளைக் கொண்ட வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு...

Israeli jewish settlers' violence in Hebron


Mosque and Muslim cemeteries Vandalised by Jewish settlers

4 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

யூதர்களின் இனவெறி Gaza படுகொலையின் மூலம் தெள்ளத் தெளிவாகியது.

ஆயினும் பாலஸ்தீனர்களிடையே இனவெறி இல்லை என்று கூறி விட முடியுமா? யூத பொதுமக்களின் மீது அவர்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவதில்லையா?

நான் பாலஸ்தீனத்தில் இருந்தால் அதுவே தான் செய்திருக்கக் கூடும். இருப்பினும் மேலுள்ள கேள்விகளுக்கு உங்களிடம் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

Kalaiyarasan said...

நிச்சயமாக, யூத இனவெறிக்கு பாலஸ்தீன இனவெறி தீர்வாகாது. இலங்கையிலும் இந்தப் போக்கு காணப்பட்டது. கண்ணுக்கு கண் என்று பழி வாங்கும் நடவடிக்கை, புராதன காலம் தொட்டு மனித மனங்களில் இயற்கையாகவே குடிகொண்டுள்ளது. முதலில் சாதாரண மனிதர்களின் உணர்வைப் புரிந்து கொள்ளும் அதே சமயத்தில், பின் விளைவுகளையும் எடுத்துக் கூறுவது அவசியம். தவறென்று சுட்டிக்காட்டி சரியான பாதையில் நெறிப்படுத்தக் கூடிய அரசியல் தலைமை தேவை.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

பொறுமையுடன் பதில் சொல்வதற்கு மிக்க நன்றி!!!

இது போன்று சிறுபான்மையினர் கொடுமைகளுக்கு உள்ளாகும் போது, அவர்கள் எந்த முறையில் எதிர்ப்பைக் காட்டி தங்கள் உரிமைகளை வெல்லலாம்?

உங்களுக்கு எதேனும் புலப்படுமாயின் இங்கோ அல்லது பின்வரும் பதிவுகளிலோ ‘முடிந்தால்’ விளக்குங்கள். நான் (கொஞ்சம்) படித்த வரலாற்றிலிருந்து அப்படி ஓர் நிகழ்வை என்னால் சுட்டிக் காமிக்க இயலவில்லை. மீண்டும் நன்றி!!

Kalaiyarasan said...

பிரதீப், ஒரு சிறந்த விவாதத்திற்கான கருப்பொருளை வழங்கியுள்ளீர்கள். சிறுபான்மையின பிரச்சினை உலகின் பல பாகங்களிலும் இருந்து வருகின்றது. அவர்களின் போராட்டங்களில் இருந்து நாமும் பாடம் பெறலாம். சில பூகோள வேறுபாடுகள் இருந்த போதிலும், பிரச்சினை எங்குமே ஒரே அம்சத்தை கொண்டிருப்பதைக் காணலாம். நான் அறிந்த வரையில் சிறுபான்மையினத்தவரின் நியாயமான கோரிக்கைகளுக்கு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அரசியல் சக்தி ஒன்றின் தார்மீக ஆதரவு அவசியம். இல்லாவிட்டால் இரண்டு சமூகங்களிலும் வன்மம், பகையுணர்வு, இனவெறி வளர்ந்து கொண்டு செல்லும்.