Saturday, October 24, 2009

ஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக! - இந்திய அரசுக்கு கடிதம்

சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்!
இந்தியப் பிரதமருக்கு அனுப்பப் பட்ட வெளிப்படையான கடிதம்

ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராட்டிரம், ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில் முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு, பெரும் ராணுவ தாக்குதல் நடத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை அறிந்து நாங்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளோம்.

மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியை விடுதலை செய்வது என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முன்தாக்குதலுக்கான முக்கிய காரணமாகும். இத்தகைய ராணுவ நடவடிக்கை அங்கு வாழும் இலட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையையும், வாழ்நிலை தேவைகளையும் பாதிப்புக்குள்ளாக்கி சாதாரண குடிமக்களின் பெருமளவிலான இடம்பெயர்தல், அவலநிலை, மனிதஉரிமை மீறல்களுக்கு வழிவகை செய்யும்.
உள்நாட்டு கலகத்தை ஒடுக்குகிற போர்வையில் மிகவும் ஏழ்மையான இந்திய குடிமக்களை துரத்தி சிக்கல் ஆழ்த்துவது என்பது ஒரு எதிர்மறை விளைவுகளையும், கேடு பயக்கத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாகவே அமையும். கலகக்காரர்களுக்கு எதிராக அரசாங்க முகவர்களால் நிதியுதவி அளிக்கப்பட்டு அணிதிரட்டப்பட்ட கூட்டுப்படைகளின் ஆதரவோடு துணை ராணுவ படையின் முன்னடத்திச் செல்லும் நடவடிக்கைகளினால் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து ஏற்கனவே அப்பகுதியில் உள்நாட்டு போர் என்ற நிலைக்கு சமானமான சூழல் சட்டீஸ்கரில் சில பகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் உருவாக்கியுள்ளது.

உழலும், ஏழ்மை மிகவும் மோசமான வாழ்நிலை போன்றவைதான் இந்தியாவின் ஆதிவாசி மக்கள் தொகையினர் எதிர்கொள்ளும் நிலைமையாகும். 1990களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய தாராளவாத திருப்பங்களின் பின்னர், அதிகரித்து வரும் அரசு வன்முறையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது, காடுகள், நிலங்கள், நதிகள், பொது மேய்ச்சல் நிலங்கள், கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சுரங்க வேலை, தொழிற்சாலை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற‘ வளர்ச்சி திட்டம் என்ற போர்வையில் இந்திய அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது.

இந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல்நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும், காட்டுச்செல்வங்களும், நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி, பல பெரும்நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டுள்ளது.

வேறு வழியின்றி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மரபின மக்கள் இடம்பெயர்தலுக்கும் தனது பகுதிகள் அபகரிக்கப்படுவதற்கும் எதிராக நடத்தும் செயல்பாடுகளால் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பெரு நிறுவனங்கள் இப்பகுதியில் மேலும் நுழைய இயலாமல் தடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கி பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும், அதன்மூலம் அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்குதடையின்றி சுரண்டவும் வழிவகை செய்யவே என நாங்கள் அஞ்சுகிறோம்.

விரிந்துவரும் ஏற்றத்தாழ்வும். சமூக அளவிலான உரிமை மறுப்பும், ஏழை மக்களும் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் தமது சொத்துக்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிரான அரசு வன்முறையும் போன்றவைகளே சமூக எரிச்சலும் கொந்தளிப்பும் உருவாக காரணமாகி ஏழை மக்களின் அரசியல் வன்முறை என்ற
வடிவத்தை பெறுகிறது.

பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது, அதாவது ”ஏழையைக் கொல்வோம், ஏழ்மையை அல்ல" என்பதுதான் இந்திய அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது.

இந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும். இத்தகைய முயற்சியில்
குறுகிய கால வெற்றியும்கூட சந்தேகத்திற்குரியதாயினும் ,சாதாரண மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல அனுபவங்களிருந்து இதனை காணமுடியும்.

இந்திய அரசாங்கம் ராணுவபடைகளை உடனே வாபஸ் வாங்கி, ஏழை மக்களின் துயரங்களை அதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய, அதன்மூலம்பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகைசெய்யக்கூடியதிறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதைஉடனே கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அனைத்துஜனநாயக உணர்வு கொண்ட மக்களையும் இந்த கோரிக்கையில் அணிதிரளுமாறு கோருகிறோம்.

இவண்.
அருந்ததிராய், அமித்பாதுரி, சந்திப்பாண்டே, கான் கொன்சால்வஸ், திபாங்கர் பட்டாச்சாரியா, சுமந்தா பானர்ஜி, மஹ்மூது மண்டானி, மீரா நாயர், ஆபாசுர், கியானேந்திரா பாண்டே, நோம் சோம்ஸ்கி, டேவிட் ஹார்வி, மைக்கேல் லெபோவிட்ஸ், பெல்லாமி ஃபாஸ்டர், ஜேம்ஸ் சி ஸ்காட் மற்றும் பிறர்.

(நன்றி: எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்கு)

குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.
99432 16762, 99433 11889, 94434 39869


Statement against Government of India’s planned military offensive in adivasi-populated regions: National and international signatories

1 comment:

ராஜரத்தினம் said...

எப்புழுதெல்லாம் உலக சமுதாயம் போரை நிறுத்துமாறு சொல்கிறதோ? அப்போதேல்லாம் அந்த சமுகத்தில் மதமாற்றம் செய்ய முயற்சி நடைபெறுகிறது என்று அர்த்தம்.