Sunday, October 04, 2009

"ஐ.நா. பயங்கரவாத சபை!" - கடாபி

- "ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்தவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பு போல செயற்படுகின்றனர்."
-"புஷ், டோனி பிளேர் ஆகியோர் போர்க்குற்றவாளிகளாக தண்டனை வழங்கப்பட வேண்டும்."
- "காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்திற்கு எழு டிரில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்."

லிபிய அதிபர் கடாபி முதன்முறையாக ஐ.நா. மன்றத்தில் ஆற்றிய கன்னி உரையில், ஐ.நா. சபை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். வழங்கப்பட்ட 15 நிமிடங்களை விட அதிகமாக ஒரு மணித்தியாலமும் முப்பது நிமிடங்களும் உரையாற்றிய கடாபி, ஒரு கட்டத்தில் அவையினர் முன்பு ஐ.நா.சாசனத்தை கிழித்து வீசினார்.

1945 , ஐ.நா. ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டிலிருந்து, இதுவரை 65 போர்களை ஐ.நா. தலையிட்டு தீர்த்து வைக்க தவறி விட்டது என்று சாடினார் கடாபி. பாதுகாப்புச் சபை "பயங்கரவாத சபை" போன்று செயற்படுவதாகவும், அதன் நிரந்தர உறுப்பினர்களின் வீட்டோ அதிகாரம் இரத்து செய்யப்பட வேண்டுமென்றும், அல்லது மேலதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஐ.நா. சபையின் வருடாந்த கூட்டத்தில் கடாபி ஆற்றிய உரையின் வீடியோ கீழே;



Part 2


Part 3


Part 4

7 comments:

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றிபா

கலையரசன் said...

என்னா பி? கடாபியா?

ஆரூரன் விசுவநாதன் said...

அருமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றி தோழா

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

முழு உரை தேடினேன், கலையரசன்...
கிடைக்குமா?

Kalaiyarasan said...

பிரதீப், நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க முழுமையான உரை கொண்ட வீடியோக்களை இணைத்துள்ளேன்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

அட, சத்தியமா தேடினேங்க... :)
அப்போ கிடைக்கல... மக்கு ஆயிட்டு வரேன். ஹிஹி

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

Text of Gadafi's speech (English)

http://www.btinternet.com/~davidbeaumont/msf/gadafi.htm