Showing posts with label மாவோயிஸ்டுகள். Show all posts
Showing posts with label மாவோயிஸ்டுகள். Show all posts

Tuesday, August 01, 2017

ALO : ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் விடுதலை இயக்கம் - சில குறிப்புகள்


ஆப்கானிஸ்தானில் இருந்த சோஷலிச அரசையும், சோவியத் படைகளையும், இஸ்லாமிய முஜாகிதீன்கள் எதிர்த்துப் போராடிய வரலாற்றை எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், முஜாகிதீன் குழுக்களுடன் சேராத ஒரு மதச் சார்பற்ற இயக்கமும் அரசை எதிர்த்துப் போராடியது. அதுவும் "கம்யூனிசத்தின் பெயரால், கம்யூனிச அரசை எதிர்த்து போராடியது." என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

அதன் பெயர் "ஆப்கானிஸ்தான் விடுதலை இயக்கம்" (ALO). அவர்கள் தம்மை மாவோயிச கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால் உண்மையில் அது ஒரு மதச் சார்பற்ற தேசியவாத அமைப்பாகவே இயங்கியது. வெளிப் பார்வைக்கு கம்யூனிச புரட்சிகர கோஷங்களை முழங்கிக் கொண்டிருந்தது.

ALO இன்னொரு முஜாகிதீன் குழு அல்ல. ஆனால் அது கம்யூனிசப் புரட்சி இயக்கமும் அல்ல. உள்நாட்டு தேசிய பூர்ஷுவா வர்க்கத்தினரைக் கொண்டிருந்தது. அவர்களுக்கென்று ஒரு இராணுவப் பிரிவு இருந்தது. அதில் பெண்களையும் போராளிகளாக சேர்த்துக் கொண்டனர். (இஸ்லாமிய கடும்போக்கு முஜாகிதீன் இயக்கங்களில், பெண் போராளி என்ற கதைக்கே இடமில்லை.) சோவியத் ஆதரவு ஆப்கான் படைகளுக்கு எதிராக சில தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இருப்பினும் அந்த இயக்கம் பற்றி மேற்கத்திய நாடுகள் அக்கறை காட்டவில்லை. அமெரிக்கா இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை ஆதரித்து வந்தது.

ALO அயல்நாடான சீனாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி இருந்தது. சீனாவும் அந்த இயக்கத்திற்கு ஆயுத தளபாடங்கள் வழங்கியது. ALO வின் புரட்சிகர கொள்கை விளக்கங்கள் எல்லாம், அன்று சீனாவிடம் கற்ற பாடங்கள் தான். மாவோ இறந்து ஓரிரு வருடங்களே ஆகி இருந்ததால், அன்றைய சீனாவில் மாவோவின் கொள்கைகள் இன்னமும் மதிக்கப் பட்டு வந்தன. மாவோ வகுத்த "சமூக-ஏகாதிபத்திய கோட்பாட்டை" ALO பின்பற்றியது. (மாவோவின் கோட்பாடு அன்றைய ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு கன கச்சிதமாகப் பொருந்தியது.)

ஸ்டாலினின் மரணத்திற்கு பின்னர், குருஷேவ், பிரஷ்னேவ் போன்ற ஆட்சியாளர்களின் காலத்தில், சோவியத் யூனியன் ஒரு சமூக - ஏகாதிபத்தியமாக செயற்படுவதாக, மாவோ குற்றஞ் சாட்டினார். அதாவது சோவியத் யூனியன் சோஷலிசம் பேசிக் கொண்டே ஒரு ஏகாதிபத்தியமாக நடந்து கொண்டது. ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத் படையெடுப்பு அதனை உறுதிப் படுத்தியது. ஆகவே, "சோவியத் சமூக - ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதாக" ALO அறிவித்துக் கொண்டது.

சீனா ALO வுக்கு உதவி செய்வதற்கு, பூகோள அரசியல் காரணம் ஒன்றிருந்தது. சீனாவின் மேற்குப் பிராந்திய மாநிலத்தில் வாழும் உய்கூர் மக்களின் பிரிவினைப் போராட்டம் சீனாவுக்கு தலையிடியாக அமைந்திருந்தது. இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், துருக்கி மொழி பேசும் உய்கூர் மக்கள், ஆப்கான் இனங்களுடன் சகோதர உறவு முறை கொண்டாடினர். 

அந்தக் காலத்தில், ஆயிரக் கணக்கான உய்கூர் போராளிகள் ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆப்கான் போர்க்களத்தில் அனுபவத்தை பெற்றுக் கொண்டு, சீனாவுக்கு திரும்பிச் சென்று போராட விரும்பினார்கள். ஆகவே, ALO ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றினால், அங்கிருக்கும் உய்கூர் போராளிகளை வெளியேற்றுவதாக உறுதிமொழி அளித்தனர். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் சீனாவும் உதவியது.

துரதிர்ஷ்டவசமாக, சோவியத் படைகள் வெளியேறிய இறுதிக் காலத்தில், ALO மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. ஒரு முஜாகிதீன் குழுவுக்கு தலைமை தாங்கிய மசூத்தின் பாதுகாப்பை கோர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், மசூத் அல்லது வேறு யாராவது, அந்த இயக்கத்தை அழிப்பதற்கு திட்டம் தீட்டி இருக்கிறார்கள். வட கிழக்கே மசூத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நகரில் இருந்து, வட மேற்கே தொஸ்தம் என்ற தளபதியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு பிரயாணம் செய்த நேரம் தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

ALO இயக்கத் தலைவர்கள் அனைவரும் ஒரு விமானத்தில் (அந்த இயக்கத்தினர் தமது சொந்த ஹெலிகாப்டர் என்று கூறுகின்றனர்) ஏறிச் சென்றுள்ளனர். விமானம் தரையிறங்கும் நேரம், பாரிய குண்டு ஒன்று வெடித்ததால், ALO தலைவர்கள் அனைவரும் ஸ்தலத்திலேயே கொல்லப் பட்டனர். 

தற்போது, ஆப்கானிஸ்தானில் ALO வின் செயற்பாடுகள் ஏறக்குறைய ஸ்தம்பிதமடைந்து விட்டன. பெரும்பாலான ALO உறுப்பினர்கள், அகதிகளாக புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். (அவர்கள் மூலம் தான், எனக்கு இந்தத் தகவல்கள் கிடைத்தன.) 

ஆப்கானிஸ்தான் கம்யூனிஸ்டுகளின் செயற்பாடுகள், சர்வதேச ஊடகங்களால் தொடர்ச்சியாக இருட்டடிப்பு செய்யப் பட்டு வருகின்றன. இதற்கு இன்னொரு உதாரணத்தையும் காட்டலாம். 2000- 2001ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களை கொடுமைப் படுத்துவது பற்றிய வீடியோ ஒன்றை, CNN உட்பட பல மேற்குலக தொலைக்காட்சிகள் அடிக்கடி ஒளிபரப்பின. 

தாலிபான் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அந்த வீடியோவை எடுத்து உலகிற்கு அறிவித்தவர்கள், Revolutionary Association of the Women of Afghanistan (RAWA) என்ற, மார்க்சிய பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை மட்டும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விட்டனர். 

உலகம் முழுவதும், "இஸ்லாமிய நாடுகள்" என்று அழைக்கப்படும் நாடுகளில் கூட, இன/மதவாத சக்திகளுக்கு எதிராக மார்க்சிஸ்டுகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்திய ஊடகங்களின் தணிக்கையையும் மீறி அந்த செய்தி உலக மக்களை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும். 

Friday, February 20, 2015

காயமடைந்த பெண் போராளிகளை வன்புணர்ச்சி செய்து கொன்ற இந்தியப் படையினர்


சட்டிஸ்கார் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் காயமுற்ற பெண் போராளிகளை வல்லுறவு செய்த இந்திய பொலிஸ் படையினர், பின்னர் அவர்களை கொன்று படமெடுத்துள்ளனர். நிர்வாணமான பெண் போராளிகளின் சடலங்களை காட்டும் படங்கள், சட்டிஸ்காரில் வெளியாகும் ஹிந்தி சஞ்சிகை ஒன்றில் பிரசுரமாகி உள்ளன. அது குறித்து மாவோயிஸ்ட் ஆதரவு தகவல் மையம் வெளியிட்ட விரிவான அறிக்கை:
__________________________________________________________________________


துணை இராணுவ மற்றும் சத்தீஸ்கர் போலீஸ் படைகளால், பெண்கள் கெரில்லாக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிப்போம்!

அக்டோபர் 8, மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் சட்டீஸ்கர் காவல் படைகள், மாவட்ட காவல் படைகள் மற்றும் கோயா கமாண்டோக்கள், பிஜப்பூர் மாவட்டத்தில் பொட்டம் (பொட்டெனர்) கிராமத்தில் கொரில்லா குழுவினரை தாக்கினர். இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பெண் தோழர்கள் பூனம் ஜமிலி, மத்கம் ரம்பத்தி மற்றும் மத்கம் லட்சுமி தியாகியாயினர். மத்கம் ரம்பத்தி துப்பாக்கி சூடு நடந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

பூனம் ஜமிலி காயம்பட்டிருந்த வேளையிலே மத்கம் லட்சுமி படுகாயம் அடைந்தார். இராணுவத்தினர் காயமடைந்த பெண் கெரில்லாக்களை வன்புணர்ச்சி செய்து கொன்றனர். காவல் துறை பூனம் ஜமிலியின் நிர்வாண உடலை புகைப்படங்களை எடுத்து, பத்திரிகைகளுக்கு விநியோகித்தனர். சத்தீஸ்கரின் இந்தி பத்திரிகை இந்த புகைப்படங்களை பதிப்பித்தது.

பொட்டம் சம்பவம் தற்போது மூன்றாம் கட்டத்திலுள்ள பசுமை வேட்டை நடவடிக்கையின் (OGH) பகுதியாக மத்திய ரிசர்வ் காவல் படைகளும் சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா காவல் படைகளும் நடத்தி வரும் எண்ணிலடங்கா கொலைகள், வன்புணர்ச்சிகள் மற்றும் அழிவு நடவடிக்கைகளில் கூடுதலான ஒரு சம்பவமே. 2012 ஜூனில் சி 60 அதிரடிப்படையினர், கட்சிரோலி மாவட்டத்தின் இடபள்ளி தாலுகாவில் மெட்ரி கிராமத்தின் அருகே பெண்கள் கெரில்லாக்களை தாக்கினர். காயமடைந்த ஆறு பெண்கள் கெரில்லாக்களை பிடித்தனர், அவர்களை வன்புணர்ச்சி செய்து கொடூரமாக கொன்றனர். அதன்பின் இறந்த உடல்களுடன் அருவருப்பூட்டும் வகையில் நடந்து கொண்டனர்.

பொட்டம் சம்பவத்தில், இராணுவத்தினர் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பெண்கள் எல்லா உரிமைகளையும் தங்கள் இரும்பு பூட்சுகளினால் நசுக்கியுள்ளனர் என்பதோடு அரசமைப்பு மற்றும் சட்டங்களுக்கு எதிரான அக்கிரமங்களை புரிந்துள்ளனர். அவர்கள் நாகரீக சமூகத்தின் ஒவ்வொரு நாகரீக ஒழுக்கத்தையும் காற்று வெளிகளில் தூக்கியெறிந்ததன் மூலம் தங்களின் வெட்கமின்மையைற்றதனத்தை வெளிக்காட்டியுள்ளனர். 

அவர்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் நாகரீக சமூகத்தின் மதிப்பீடுகளை மீறியுள்ளதோடு காயமடைந்த வீரர்களும் கைதிகளும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் இன்னும் கூடுதலாய் பெண் கிளர்ச்சியாளர்கள் காயப்பட்ட நிலையில் இருக்கும் போது, அவர்கள் மிகவும் கவனமாக நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்துகின்ற யுத்த விதிகளையும் மீறியுள்ளார். இது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் படி, மனித உரிமை மீறல் மட்டுமல்ல மேலும் ஒரு போர் குற்றத்தின் நிறைவேற்றமும் கூட.

ஜெனிவா மாநாட்டு ஒப்பந்தப்படி இத்தகைய போர் குற்றத்திற்கு உள்ளாகும் நபர்கள் சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். காயமடைந்த பெண் கெரில்லாக்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது காவல் படைகளின் கொடூரமான குற்றவியல் பத்திரத்தை மட்டுமல்ல அவர்களின் மற்றும் குற்றவியல் இயல்பையும் சுட்டிக்காட்டுகிறது. ஊடகம் மற்றும் பத்திரிகை துறையும், இத்தகைய அரசாங்க படைகளின் கொடூரமான குற்றவியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை பற்றி கேள்விகள் எழுப்பினாலும் கூட பெண் கெரில்லாக்களின் நிர்வாண படங்களை வெளியிட்டதன் மூலம் அது தன் சொந்த அற நெறிகளை மீறிவருகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

தண்டகாரண்ய இயக்கத்தை ஒடுக்க மத்திய மாநில அரசாங்கங்களால் முன்னெடுத்து செல்லப்பட்ட சல்வா ஜூடுமின் போதும் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் பச்சை வேட்டை நடவடிக்கையின்போதும் எண்ணற்ற அக்கிரமங்களும் படுகொலைகளும் நடத்தப்பட்டன இன்னும் நடத்தப்பட்டுவருகின்றன. காவல்துறை குண்டர்கள் நாகரீக சமூகத்திற்கு சவால் விடும் வகையில் அவர்களின் மனிதத்தன்மையற்ற புகைப்படமெடுத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை வெளிட்டது அனைத்து எல்லைகளையும், மீறியுள்ளது. வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்ட கொடூரமானது .

நாங்கள் மக்களிடமும் ஜனநாயகவாதிகளிடமும் குடியுரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமும் இத்தகைய அருவருக்கத்தக்க குற்ற இயல்பையும் மனிதத்தன்மையற்றதுமான சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்க கோருகிறோம்.

நாங்கள் போட்டேம் அக்கிரமங்களை புரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை தண்டிக்க கோரும் இயக்கங்களை கட்ட குடியுரிமை மற்றும் மனித உரிமை அமைப்புகளை வேண்டுகிறோம்.

நாங்கள் இத்தகைய அருவருக்கத்தக்க மனிதத்தன்மையற்ற சட்டவிரோத மனித உரிமை மீறல்களை புறிந்து பின் காவல்துறையால் பிறகு வெளியிடப்பட்ட புகைப்படங்களை பதிப்பித்த சத்தீஸ்கர் இந்தி பத்திரிகையின் செயலை கண்டிக்க அனைத்து இந்திய பத்திரிகையாளர்கள் சங்கங்கள் மற்றும் பதிப்பாசிரியர்களின் கழகங்களை கேட்டுக் கொள்கிறோம்

- புரட்சிகர ஜனநாயக முன்னணி


Condemn the murders of women guerillas by the paramilitary and Chhattisgarh police forces Punish the police who raped the injured women guerillas and murdered them

On October 8, the central paramilitary forces and the Chhattisgarh police forces, district police forces and Koya commandos attacked our guerilla squad at Pottem (Pottenar) village in Bijapur district. In this firing three women comrades Punem Jamili, Madkam Rambatti and Madkam Lakshmi were martyred. Madkam Rambatti was killed on the spot in the firing. Madkam Lakshmi was seriously injured while Punem Jamili was also injured. The jawans raped the injured women guerillas and killed them. 

The police took photos of the naked body of Punem Jamili and released those to the press. A Hindi magazine of Chhattisgarh published those photos. Pottem incident is one more incident in the innumerable murders, rapes and destruction perpetrated by the CRPF and Chhattisgarh and Maharashtra police forces as part of Operation Green Hunt (OGH), now in its third phase. In June 2012 C-60 commandos attacked women guerillas near Medri village in Etapalli taluq of Gadchiroli district, caught six women comrades who were injured, raped them and murdered them in cold blood. Then they behaved obscenely with the dead bodies.

In the Pottem incident, the jawans have suppressed with their iron boots all rights to the women guaranteed by the Constitution and perpetrated these atrocities which are against the Constitution and the law. They displayed their shamelessness by throwing to winds every civilized norm of the civil society. They horribly violated the values of a civil society and rules of war which stipulate that injured soldiers and captives should be treated with respect and that too when women insurgents are in an injured state, they should be treated more sensitively.

This is not only a violation of human rights according to the international human rights law but would also constitute a war crime. According to the Geneva Convention persons perpetrating such war crimes should be tried by international courts. Raping and murdering injured women guerillas denotes the brutal and criminal character of the police forces and their criminal nature.

The media and the newspaper industry, instead of raising questions on such brutal, criminal and illegal acts of the government forces, is violating its own ethics by publishing the naked photos of the women guerilla. This is highly objectionable.

Whether during the Salwa Judum that was carried on by the central and state governments to suppress the Dandakaranya movement or during the OGH, ongoing since the past five years, countless such atrocities and murders were perpetrated and still being perpetrated. The police goons taking photos of their inhuman and criminal activities by challenging the civil society and displaying them is violating all limits and callous beyond words.

We are appealing to the people, democrats, civil rights and human rights organizations to condemn such obscene, criminal, inhuman, illegal acts that violate the Constitution too. We appeal to the civil and human rights organizations to build movements to demand the booking of cases on jawans who perpetrated the Pottem atrocities and punish them.

We are appealing to the all India journalists’ unions and editors’ guilds to condemn the act of the Chhattisgarh Hindi magazine that published the photo released by the police after perpetrating such an obscene, inhuman and illegal human rights violation.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, December 22, 2014

இந்தியாவில் மாறி வரும் மாவோயிஸ்டுகளின் போரியல் தந்திரம்


கேரளாவில், காவல்துறையினருக்கும், கந்து வட்டி மாபியாவுக்கும் இடையில் நடந்த, இரகசிய தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டுள்ள மாவோயிஸ்டுகள், அதனை மக்கள் முன்னிலையில் பகிரங்கப் படுத்தியுள்ளனர். பொலிஸ் மாவோயிஸ்டுகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது ஏற்கனவே தெரிந்த விடயம். ஆனால், மாவோயிஸ்டுகள் பொலிசின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது புதிய விடயம்!

கேரளாவில் தலைமறைவாக இயங்கும் மாவோயிஸ்ட் குழு, மக்களிடம் விநியோகித்த "காட்டுத் தீ" எனும் பத்திரிகையில், அந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தமது தொழில்நுட்பப் பிரிவினரால் ஒட்டுக் கேட்கப் பட்ட உரையாடல் எனக் குறிப்பிட்டு எழுதப் பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர், வயநாட்டில் உள்ள வெள்ளமுண்டா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. அதே பொலிஸ் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி தான் ஒட்டுக் கேட்கப் பட்டுள்ளது.

பதிவு செய்யப் பட்ட உரையாடலில், நாசர் எனும் கந்துவட்டிக் காரனுடன் தொடர்பு கொண்ட பொலிஸ் அதிகாரி, அங்கு ரெய்டு நடக்க இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நாசர், மேலதிகாரிகளுடன் பேசிப் பார்க்குமாறு கூறுகின்றார். எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கூறும் அதிகாரி, காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்கிறார்.

இந்த தகவலை வெளியிட்ட மாவோயிஸ்டுகள், பொது மக்கள் கந்து வட்டிக் காரர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்றும், "பிளேடு மாபியா" என்று அழைக்கப் படும் கந்து வட்டிக் காரர்கள் பற்றி மாவோயிஸ்ட் தளத்தில், அல்லது ஒரு செயற்பாட்டாளரிடம் முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுள்ளனர். (Deccan Chronicle, 14 dec. 2014)

பெரும் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், காண்டிராக்டர்கள்,போன்றவர்களிடம் இருந்து, மாவோயிஸ்டுகள் பெருமளவு பணத்தை வரியாக அறவிடுவதாக, இந்திய அரசு கூறுகின்றது. சரியான தொகை தெரியா விட்டாலும், வருடாந்தம் குறைந்தது 140 கோடி ரூபாய்கள் மாவோயிஸ்டுகளுக்கு வருமானமாகக் கிடைப்பதாக, பாராளுமன்றத்திற்கு பதிலளித்த அமைச்சர் Kiren Rijiju தெரிவித்துள்ளார்.

இந்திய மாவோயிஸ்டுகள், தமது போரியல் தந்திரத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதுவரை காலமும் நடத்தி வந்த கெரில்லா தாக்குதல்களில் இருந்து, நடமாடும் போர்முறைக்கு, தமது தாக்குதல்களை மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். (The Asian Age, 14 dec. 2014)

தமது பிரதேசத்தில் உள்ள பாதுகாப்புப் படைகளை அகற்றும் வகையில், தமது நடமாடும் போர் முறை அமைந்திருக்கும் என்று, ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலத்தில், மாவோயிஸ்டுகளின் ஆயுத பலம் அதிகரித்துள்ளதாக, பாதுகாப்புத்துறை நிபுணர்கள் நம்புகின்றனர்.

நடமாடும் போர் முறை கெரில்லாத் தாக்குதல்களையும் உள்ளடக்கியது. ஆனால் வித்தியாசமானது. கெரில்லாக்கள் தாக்கி விட்டு, பின்னர் தமது மறைவிடங்களில் பதுங்கிக் கொள்வார்கள். நீண்ட காலத்திற்கு வேறு தாக்குதல் எதுவும் நடக்காது. ஆனால், நடமாடும் படையணி தாக்கி விட்டு முன்னேறிச் செல்லும். 

பொதுவாக இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எங்கோ ஒருகாட்டுப் பகுதியில் இருக்கும். இடையில் உள்ள பகுதிகளில் படையினரின் கட்டுப்பாடு இருக்கும். அங்குள்ள படையினரின் காவலரண்கள், சிறுமுகாம்கள் போன்றவற்றை தகர்ப்பதன்மூலம், அவர்களைப் பின்வாங்கச் செய்ய வேண்டும். அதற்குத் தான் நடமாடும் படையணி தேவை.

கமாண்டோக்கள் மாதிரி சிறப்புப் பயிற்சி பெற்ற படையணி, ஓரிடத்தில் தாக்குதல் நடத்தி விட்டு, அதற்கு அருகில் உள்ள வேறொரு இடத்தில் தாக்குதல் நடத்தும். அப்படியே தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும். சுருக்கமாக, போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதையை உருவாக்குவது. அங்கே அவர்கள் நிலை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், படையினரின் நடமாட்டம் குறையும். மேலதிக விளக்கத்திற்கு, சேகுவேராவின் கெரில்லா யுத்தம், மற்றும் மாவோவின் இராணுவப் படைப்புகளை வாசிக்கவும்.

இது ஏற்கனவே ஈழப் போராட்டத்தில் பயன்படுத்தப் பட்ட தந்திரோபாயம் தான். 1985 ம் ஆண்டு, ஈழத்தில் ஆயுதப் போராட்டம் நடத்திய மார்க்சிய லெனினிச இயக்கமான ஈரோஸ், நடமாடும் போரியல் தந்திரோபாயத்தை பயன்படுத்தி இருந்தது. வடக்கே யாழ் குடாநாட்டில் இருந்து கிளம்பும் ஒரு படையணி, தெற்கே மட்டக்களப்புக்கு செல்ல வேண்டும். இடையில் சந்திக்கும் சிறிலங்கா படையினருடன் மோதல்கள் ஏற்படும். 

ஒரே கெரில்லா படையணி தான், அந்த மோதல்களுக்கு காரணமாக இருந்திருக்கும். அதன் மூலம் விநியோகப் பாதையை, களத் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். பல வருடங்களுக்குப் பின்னர், புலிகளும் அந்த தந்திரோபாயத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். புலிகளின் இராணுவ தந்திரோபாயங்களை வகுத்தவர்களும், மாவோவின் இராணுவப் படைப்புகளை வாசித்திருந்தார்கள். ஆனால், அதை வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை.

Tuesday, March 24, 2009

தமிழ் நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை



Growing again in the shadows

by C Shivakumar

நாயகன் கோட்டை, தருமபுரி மாவட்டம். தமிழ் நாடு மாநிலத்தில், நக்சலைட் தலைவர்களான அப்பு, பாலன் ஆகியோருக்கு சிலை வைக்கபட்டுள்ள ஒரேயொரு இடம் இது தான். "எமது இயக்கம் உச்சத்தில் இருந்த 1970 ம் ஆண்டு காலப்பகுதியில், சாதிப் பாகுபாட்டின் சின்னங்களான இரட்டைக் குவளைகள் முறையை ஒழிப்பதில் வெற்றி கண்டோம்." இவ்வாறு கூறினார் நக்சலைட் இயக்கத்தின் முன்னோடியான சித்தானந்தம். 

54 வயதான சித்தானந்தம், கடந்த 24 வருடங்களாக போலீசிடம் அகப்படாமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியையும், கம்யூனிச சீனாவின் மாற்றங்களையும் கண்டுள்ளார். இன்றைய பொருளாதார பிரச்சினை அவரது முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது. "எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த அமெரிக்க முதலாளித்துவம் தொலைந்து விட்டது. இது சோஷலிசத்தின் வெற்றி."

பல தலைவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டு, அல்லது கைது செய்யப்பட்டு விட்டதால், 2003 ம் ஆண்டு தர்மபுரியில் மாவோயிஸ்ட் இயக்கம் கலைக்கப்பட்டது. இருப்பினும் இன்று தனது தளங்களை மாவட்டத்தில் மீண்டும் கட்டி எழுப்பலாம், என்று கட்சி எதிர்பார்க்கிறது. இன்றைய நவ-லிபரலிச கொள்கைகள், சமூக-அரசியல் முரண்பாடுகளை அதிகரித்துள்ளது. இன்றைய தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். மேலும் மேலும் மக்கள் இயக்கத்துடன் வந்து இணைந்து கொள்கின்றனர். கட்சி தலைமறைவாக இருந்த போதிலும், தந்திரோபாயத்தை மாற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய நாட்களில், மாவோயிஸ்ட்கள் கிராமங்களுப் பதிலாக நகரங்களை குறி வைக்கின்றனர். காரணம்: புதிய பொருளாதாரக் கொள்கை, நகர மக்கள் மத்தியில் பிரிவினையை தோற்றுவித்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பல லட்சக் கணக்கான மக்களை, நகரங்களில் (நாட்டுப்புறங்களிலும்) இருந்து இடம்பெயர்த்துள்ளது. சேரிகளும், ஏழ்மையும் அதிகரிக்கின்றன. நகர்க்கட்டுமானப் பணிகளால், நிறுவனப்படுத்தப்படாத தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர். 

இது கண்ணியமான வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மாவோயிச கொள்கைகளை கொண்டு செல்ல உதவியுள்ளது. நக்சலைட்கள் கூறுவதன் படி: "தமிழ் நாட்டில் 40 நகரங்கள், பெருமளவு இடம்பெயர்ந்தவர்களைக் கொண்டுள்ளன. இவர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். வசதி குறைந்தவர்களை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களையும் குறி வைக்கிறோம். அவர்கள் ஊழலாலும், தமது இன்னல்களைக் களைய முடியாத அரச இயந்திரத்தின் கையாலாகாத்தனத்தாலும் விரக்தியுற்றுள்ளனர்."

"தமிழ் நாடு மாநிலம் பெருமளவு முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. பன்னாட்டு, இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி சார்ந்த தொழிற்துறைக்காக நாட்டுப்புறங்களில் கோடிக்கணக்கில் முதலிட்டுள்ளன. இதனால் விவசாயிகளும், சிறு வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்." நாட்டுப்புறங்களில் ஊடுருவுதில் இயக்கம் தோல்வி கண்டுள்ளதா? நக்சலைட்கள் ஒத்துக் கொள்கின்றனர். ஊடுருவ முடியாமைக்கு தலித் கட்சிகளும், இயக்கங்களும் தடையாக இருப்பது ஒரு காரணம். 

தலித் கட்சிகள் தமது வாக்கு வங்கியாக கருதும் மக்கள் மத்தியில் இருந்து, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது கடினமாக உள்ளது. பல தடவை அவர்கள் பொலிசிற்கு தகவல் கொடுப்பவர்களாக மாறி விடுகின்றனர். நாட்டுப்புறங்களில் வேலையின்மை, விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் இன்மை, ஆகிய காரணங்களால் பெருமளவு இளைஞர்கள் நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். இது இயக்கத்தின் பின்னடைவுக்கு இன்னொரு காரணம்.

சரியான திட்டமிடல் இல்லாததும் அண்மைக்காலமாக இயக்கத்தை முடக்கி விட்டுள்ளதாக, சில நக்சலைட்கள் நம்புகின்றனர். "தலைமையகம் அனைத்து உறுப்பினர்களையும் தருமபுரி நோக்கி நகர்த்தியது. ஆந்திர, கர்நாடக, தமிழ் நாடு மாநில போராளிகளுக்கிடையில் முக்கோண தொடர்பை பேணுவதே திட்டமாகும். ஆனால் போலிஸ் நடவடிக்கையால் கர்நாடகா மாவோயிஸ்ட்கள் தமது தளங்களை கைவிட்டு பின்வாங்கினர். சரியான பயிற்சியின்மையால், பொலிஸ் இயக்கத்தை நசுக்க முடிந்தது."

மாவோயிஸ்ட்கள் தெற்காசிய பிராந்தியத்தில் இருக்கும் பிற விடுதலை அமைப்புகளுடன் தொடர்பை பேணுவதாக ஒப்புக் கொள்கின்றனர். மாவோயிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கமிட்டியில்; பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், பலுசிஸ்தான், காஷ்மீர், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. (அசாமிய) ULFA தமக்கு ஆயுதங்கள் தருவதாக ஒரு சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்தார். "ஆனால் விடுதலைப் புலிகளிடமிருந்து வருவதில்லை. அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் எமது நடவடிக்கைகளுக்கு உகந்ததல்ல."

தமிழ் நாடு நடவடிக்கைகளுக்காக கட்சி ஒதுக்கும் 15 லட்சம் ரூபாய்களில் பெரும்பகுதி, பிரச்சாரத்திற்காகவும், முழுநேர உறுப்பினர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் செலவிடப்படுகின்றது. என்பதுகளில் நசுக்கப்பட்ட இயக்கத்தின் மீளுயிர்ப்பிற்கான காரணங்களாக, "ஊழலையும், நிலச்சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தப்படாத நிலை தொடர்வதையும்" நக்சலைட்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (அரசு நியமித்த) திட்டமிடல் கமிஷன் நிபுணர்கள் கூட மேற்குறிப்பிட்ட காரணங்களை கோடிட்டுக் காட்டியுள்ளனர். 

"அரச திணைக்களங்கள் செயற்படுத்தாது விட்ட வெற்றிடத்தில் நக்சலைட்கள் இயங்குகின்றனர். அநீதி இழைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. மாறாக சமூக-பொருளாதார பரிமாணங்களைக் கொண்டுள்ளது." மத்திய அரசு நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இதுவரை 3,677.67 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கூறுவதன் படி, பொலிஸ் மட்டும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

நகர்ப்புற பிரதேசங்களில் தமது தளத்தை விரிவுபடுத்துவதற்கு, மாவோயிஸ்ட்கள் பெண் உறுப்பினர்களை ஈடுபடுத்துகின்றனர். பெண்களை வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டே பிரச்சாரம் செய்து, புதிய உறுப்பினர்களை திரட்டிவருகின்றனர். "தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களை நடைமுறைப் படுத்தாமையும், நிறுவனப்படுத்தப் படாத தொழிலாளர், உழவர்களின் பிரச்சினையும்" மாவோயிஸ்ட்களுக்கு சாதகமான நிலைமையாகும். தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களிலும் மாவோயிஸ்ட்களின் பிரசன்னம் அதிகரித்து வருகின்றது.

மக்களை அணி திரட்டுவதற்காக, அவர்கள் ஈழப் பிரச்சினையையும் பயன்படுத்துகின்றனர். ஈழப் பிரச்சினையை தவிர்த்து விட்டு, தமிழ் நாட்டில் எந்தவொரு சக்தியும் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்கின்றனர். "நீங்கள் பாலஸ்தீனம், கொசோவோ மற்றும் பல தேசிய விடுதலைப் போராட்டங்களை உங்களால் ஆதரிக்க முடியுமானால், இலங்கையில் ஈழம் கோரும் தமிழர்களை ஏன் ஆதரிக்க முடியாது? 

மாவோயிஸ்ட்களின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு, பல புதிய உறுப்பினர்களை வழங்கியுள்ளது. "விடுதலைப் புலிகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்குமிடையில் தொடர்பு இருக்கிறதா?" இயக்கத்தை விட்டு வெளியேறிய சில முன்னாள் புலிகள் தமக்கு ஆயுதப்பயிற்சி வழங்கியதை ஒப்புக்கொண்ட சிரேஷ்ட நக்சலைட் ஒருவர், "இந்திய அரசிற்கெதிராக ஆயுதமேந்திப் போராடும் எந்தவொரு அமைப்பையும் புலிகள் ஆதரிக்கவில்லை." என்று கூறினார்.

shivakumarc@epmltd.com

(Growing again in the shadows என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

Published : 22 Mar 2009

Thanks to:

Monday, October 27, 2008

பெரு: மீண்டும் ஒளிரும் பாதை


பெரு நாட்டின் "ஒளிரும் பாதை" இயக்கம் பற்றி இன்றைய இளம்தலைமுறையினருக்கு அதிகம் தெரியாமலிருக்கலாம். ஒரு காலத்தில் புரட்சியை நோக்கி வெற்றிநடை போட்ட, பெரு கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் ஆயுதமேந்திய வடிவமே ஒளிரும் பாதையாகும். லத்தீன் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது.

தலைவர் அபிமால் குஜ்மான் (இயக்கப் பெயர்: கொன்சலோ) தலைமையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தினர். தலைநகர் லீமா, அடுத்தடுத்து இடம்பெற்ற கார் குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது. அதுவே அமெரிக்கா, ஒளிரும் பாதையை ஒரு காலத்தில் உலகின் சக்திவாய்ந்த பயங்கரவாத இயக்கமாக காட்ட காரணமாயிற்று.

என்பதுகளில் அந்த இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஒரு கட்டத்தில், மாவோயிஸ்ட் புரட்சி வென்று, விரைவில் ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோ என்று சி.ஐ.ஏ. மட்டத்தில் கூட ஐயம் நிலவியது. பெருவின் அன்றைய சர்வாதிகாரி புஜிமோரிக்கு அமெரிக்கா தேவைப்பட்ட உதவிகளை வழங்கி ஒளிரும் பாதையை அழித்தொழிக்க ஆரம்பித்தது. அரச இராணுவ நடவடிக்கையால் மட்டுமல்ல, எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்கு(சாதாரண விவசாயிகளும் அதற்குள் அடக்கம்) ஆயுதங்கள் வழங்கியும், ஒளிரும் பாதை போராளிகள், ஆதரவாளர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இறுதியில் இயக்கத் தலைவர் கோன்சலோ கைது செய்யப்பட்ட பின்னர், அந்த இயக்கத்தின் பலம் பெருமளவில் குறைந்து விட்டது. அதற்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்ற முக்கிய தலைவர்கள் ஒன்றில் கைது செய்யப்பட்டோ அல்லது சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.

தற்போது எஞ்சியிருக்கும் மத்திய குழு உறுப்பினர் ஒருவர்(அவரைப் பற்றிய விபரங்கள் குறைவு), அரச கட்டுப்பாடற்ற அமேசன் காட்டுப் பகுதியில் எஞ்சிய போராளிகளை வழிநடாத்தி வருகிறார். கடந்த பத்தாண்டுகளாக ஒளிரும்பாதை, தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்(பெருமளவு வனாந்தரப் பகுதிகள்), தன்னை மீளக் கட்டமைத்து வந்தது. அந்தப்பகுதியில் (கோகெயின் போதைப்பொருளின் மூலப்பொருளான) கொக்கோ பயிர் செய்யப்படுவதாகவும், அதைப்பயிரிடும் விவசாயிகளுக்கும், அதை கடத்தும் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு கொடுத்து, வரி அறவிட்டு வருவதாகவும், அதுவே ஒளிரும் பாதை இயக்கத்தின் பிரதான வருமானம் என்று பேரு அரசாங்கமும், அமெரிக்காவும் கூறி வருகின்றன. ஆனால் அதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

உலகெங்கும் "கம்யூனிசம் காலாவதியான சித்தாந்தமாகி விட்டதால்" மக்கள் ஆதரவும் கிட்டாது, அதனால் பெருவில் ஒளிரும் பாதை மாவோயிஸ்டுகளின் கதை முடிந்து விட்டது, என்று தான் பலர் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக ஒளிரும் பாதை கெரில்லாக்கள் மீண்டும் இராணுவ இலக்குகளை தாக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் கூட (ஒக்டோபர் 2008), பிரபலமான புரட்சியின் மையமான "ஆயாகுச்சோ" பிரதேசத்திற்கு அருகில், அரச இராணுவத் தொடரணி மீது இடம்பெற்ற அதிரடித் தாக்குதலில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். (பார்க்க : 19 killed in Peru in worst Shining Path attack in 10 years)


"ஆயகுச்சோ" சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம் என்பது குறிப்பித்தக்கது. பூர்வீக செவ்விந்தியக் குடிகள் வாழும் மலைப்பிரதேசமான ஆயகுச்சோவில் இருந்து தான் ஒளிரும் பாதை இயக்கத்தினர் தமது புரட்சியை ஆரம்பித்தனர். இப்போது கூட அந்தப் பகுதி மக்கள் யாவரும், ஒளிரும் பாதையின் தீவிர ஆதரவாளர்கள். மேலும் பெரு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

"ஒளிரும் பாதை புரட்சி" ஆரம்பமாகு முன்னர் பெருவின் சனத்தொகையில் பத்து வீதமானோர், அந்நாட்டின் என்பது வீதமான நிலங்களை சொந்தமாகக் கொண்டிருந்தனர். சனத்தொகையில் அரைவாசி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்தனர். இன்று "ஒளிரும் பாதை அழிக்கப்பட்டு", "கம்யூனிசம் காலாவதியான" காலத்திலும், நிலைமை இன்னும் மாறவில்லை.

இதற்கிடையே பிரிட்டனின் "சேனல் 4" தொலைக்காட்சி சேவை செய்தியாளர் ஒருவர் பெரு சென்று, பல சிரமங்களுக்கு மத்தியில், ஒளிரும் பாதை இயக்கத்தின் இன்றைய நிலையை படம்பிடித்து அனுப்பியுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, இதுவரை வெளியுலகம் பார்க்காத அரிய படங்களையும், தகவல்களையும் திரட்டித் தருகின்றது. பல மறைக்கப்பட்ட உண்மைகளை இந்த ஆவணப்படம் வெளிக்கொணர்கின்றது.

பூர்வீக மக்கள் மத்தியில் தற்போதும் ஒளிரும் பாதை இயங்கி வருகின்றது. அது மட்டுமல்ல, பெருமளவில் கைது செய்யப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் போராளிகள் கூட, சிறைக்குள்ளே தமது புரட்சிகர அரசியலை தொடர்கின்றனர். சிறைச்சாலையில் வைத்து பூட்டிய போதும், ஒளிரும்பாதை உறுப்பினர்களின் கொள்கைப்பற்றை உடைக்க முடியாத அரச படைகள், சிறைக்கலகத்தை அடக்குவதாக சொல்லி, நூற்றுக்கணக்கான கைதிகளை கொன்று குவித்தனர். இவையெல்லாம் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

People of the Shining Path


_______________________________________

Thursday, April 17, 2008

இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்

இன்னும் சில நாட்களில் நேபாளம் குடியரசாகி விடும். மன்னர் கியேன்த்ரா, கத்மண்டு அரண்மனையை விட்டு செல்ல மூட்டை முடிச்சுகளை கட்டிகொண்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் பத்தாம் திகதி நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், நேபாளத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி விட்டது. தெற்கு ஆசிய வரலாற்றில் ஒரு திருப்பு முனை, அந்த தேர்தல். 1996 ம் ஆண்டில் இருந்து, வெற்றிகரமான ஆயுதமேந்திய மக்கள் புரட்சியை நடத்தி, நேபாளத்தின் 80 % நிலப்பரப்பை, தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மாவோயிஸ்டுகள், தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெரும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஆளும்வர்க்கம், இந்தியா, அமெரிக்கா,பிரிட்டன் ஆகியன அதிர்ச்சியில் உறைந்து போயின. தேர்தல் கண்காணிக்க போன முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், அமெரிக்கா அரசாங்கம் மாவோயிஸ்டுகளுடன் பேச வேண்டிய தருணம் இது என்றார். (மாவோயிஸ்ட் கட்சி அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் உள்ளது) தேர்தல் முடிவுகளை அறிவிக்க தொடங்கிய பி.பி.சி. செய்தியாளர், நேபாள காங்கிரஸ் கட்சி முதல் இடத்திலும், மாவோயிஸ்டுகள் மூன்றாம் இடத்திலும் வருவார்கள், என்று தனது எதிர்பார்ப்பை செய்தியாக கூறினார். ஆனால் அடுத்த நாளே, மாவோயிஸ்டுகள் மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டு, பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் நிற்கின்றனர் என்ற உண்மையை சொல்ல வேண்டியேற்பட்டது. அவ்வளவு தான், பி.பி.சி. அதற்கு பிறகு நேபாள பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. (வாழ்க நடுநிலமை)

தொன்னூருகளின் மத்தியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் பிரச்சினைகளை மறந்து, முடியாட்சிக்கு முண்டு கொடுக்கும் சாதாரண அரசியல் கட்சியாக இருப்பதாக குறை சொல்லி, "பிரச்சந்தா தலைமையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைத்த நாளில் இருந்து தலைமறைவாக இயங்க வேண்டியேற்பட்டது. இமய மலைக் கிராமங்களை தமது தளமாக கொண்டு மக்கள் யுத்தம் ஆரம்பித்தனர். நேபாளம் உலகிலேயே வறுமையான நாடுகளில் ஒன்று. குறிப்பாக நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள், ஒன்றில் பின்தங்கிய இனங்களை சேர்ந்த, அல்லது தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த வறிய மக்கள், மாவோயிஸ்டுகளின் அரசியல் கோரிக்கைகள்,தமது நலன்களுக்கானவை என்று கண்டு கொண்டதால், பெருமளவு இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் கணிசமான அளவு பெண் போராளிகளும் இருந்தனர்.

கம்யூனிசம் இறந்து சமாதிக்குள் உறங்குகிறது, அது இந்தக்கால கட்டத்திற்கு ஒவ்வாது, என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் நடந்து, எல்லோரும் அதை நம்பிய நேரத்தில், மாவோ வழியில் ஒரு இயக்கம், நேபாளத்தில் மக்களை திரட்டி, வெற்றியும் பெற்றது. அதன் வெற்றியை ஆராய்ந்த மேற்குலக அரசியல் அறிஞர்கள் , இன்றும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதை ஒப்புக்கொண்டனர். தெற்காசிய நாடுகளுக்கே உரிய "சிறப்பம்சமான" சாதிய பாகுபாடு, பெண் அடக்குமுறை ; இவற்றுடன் ஈவிரக்கமின்றி உழைப்பு சுரண்டப்படுவதால் வறுமையில் வாடும் மக்கள், கடன் சுமையால் கஷ்டப்படும் நிலமற்ற விவசாயிகள், போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்துவது தான், என்று மாவோயிஸ்டுகள் கூறிய போது, யாரும் மறுக்கவில்லை. மேலும் அதன் பலாபலன்கள் உடனுக்கு உடனே தெரிய ஆரம்பித்தன. முடிக்குரிய நேபாள் இராணுவம், போலிசுடன் போராடி கைப்பற்றிய பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த மாவோவாதிகள், "உழுபவனுக்கே நிலம்" என்ற கோஷத்தின் கீழ், அங்கிருந்த நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கினார். அவர்களின் அவல வாழ்வுக்கு காரணமான, கடன்பத்திரங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சாதி அடக்குமுறை தடுத்து நிறுத்தப்பட்டு, சாதிக்கலப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. குறிப்பாக மக்கள் விடுதலை இராணுவத்தில் இருந்த போராளிகள் இவ்வாறு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். பெண்கள் ஆண்களுக்கு நிகரான சம அந்தஸ்து பெற்றனர். சீதனம் கொடுப்பது/வாங்குவது குற்றமாக்கப்பட்டது. இவற்றை விட தொழிற்சங்க நடவடிக்கை மூலம், நகரங்களில் கூட தொழிலாளரின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்தது. நேபாள சரித்திரத்தில் முதன் முறையாக, ஆதிக்க சாதியினர், அநியாய வட்டிக்கு கடன்கொடுப்போர், பெரும் முதலாளிகள் ஆகியோர், ஒடுக்கப்பட்ட மக்களின் உத்தரவுகளுக்கு கீழ்படிந்தனர். இந்த மாற்றங்கள் யாவும் மாவோயிஸ்டுகளின் போராட்டம் இல்லையேல் சாத்தியமாகியிருக்காது.

நேபாள இராணுவம் மாவோயிஸ்டுகளுடன் நீண்ட காலம் போரிட்டு வெல்ல முடியாத போது, அதற்கு பாராளுமன்றத்தை குற்றம் சாட்டிய மன்னர், அதிகாரம் முழுவதையும் தன் கையில் எடுத்தார். அது ஒரு முட்டாள்தனமான முடிவாக அமைந்து, "பூமராங்" போன்று மன்னரையே திருப்பி தாக்கியது. மன்னரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போது மக்கள், கிளர்ந்தெழுந்தனர். இந்தியாவும் அதனை விரும்பாததால், அழுத்தங்களுக்கு கட்டுபட்ட மன்னர் ஒதுங்கிக்கொண்டார். ஜனநாயகம் மீண்ட போது, பாரளுமன்ற கட்சிகள், மாவோயிஸ்டுகளுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது கண்ட உடன்பாட்டின் படி, முடியாட்சி ஒழிக்கப்பட்டு, குடியரசு பிரகடனம் செய்வதென்றும், புதிய அரசியல் நிர்ணய சபை அமைத்து, புதிய சட்டங்கள் எழுதுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் படி இதுவரை இருந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மிக விரைவில் நேபாளத்தின் சட்டங்களை மாற்றியமைப்பார்கள். நிச்சயமாக இதனால் மாவோயிஸ்டுகளின் பிரேரணைகள் நடைமுறைக்கு வரும்.

புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, நேபாளம் ஒரு குடியரசாக மாறும். அதற்கு பதிலாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி உருவாகும். நேபாளம் பல்வேறு மொழிகள் பேசும், பல்லின மக்கள் வாழும் நாடாக இருந்தாலும், அது ஒற்றையாட்சி அலகை கொண்டிருந்தது. புதிய அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, நேபாளம் ஒரு சமஷ்டிக் குடியரசாகும். அதிலே ஒவ்வொரு மொழி பேசும் இனங்களுக்கும், தனித்தனியாக பதினொரு மாநிலங்கள் உருவாக்கப்படும். அதிலேயும் சிறுபான்மையாக இருக்கும் இனங்களுக்கு தனியான நான்கு நிர்வாக அலகுகள் கிடைக்கும். நேபாளத்தில் வட இந்திய இனங்களே(அதிலும் பிராமண, சத்திரியர்கள் ) ஆதிக்கம் செலுத்தி வந்தன. பூர்வகுடிகளான திபெதோ-இந்திய இனக்குழுக்கள் அதிகாரமற்று இருந்தனர். அவர்கள் தங்களை ஆளும் மாநில அரசு கிடைத்தால் நன்மையடைவர். மேலும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் மேம்பாட்டிற்கு அரச சலுகைகள் கிடைக்கும். தற்போது தெரிவு செய்ய பட்ட மாவோயிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்களில், கணிசமான அளவு தலித் மக்களும், பெண்களும் இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். பிற கட்சிகளில் இவர்களின் பங்கு மிகக்குறைவு. ஊனமுற்றவர்களுக்கும், வயோதிபர்களுக்கும், வேலையற்றவர்களுக்கும் உதவிதொகை வழங்கப்படும். (இந்த திட்டம் ஐரோப்பாவின் நலன்புரி அரசை ஒத்தது) மக்கள் விடுதலைப் படை போராளிகளின் குடும்பத்தினருக்கு விசேஷ சலுகைகள். மேலும் மாவோயிஸ்டுகள் தமது இராணுவப்பிரிவை(மக்கள் விடுதலை படை), முடிக்குரிய நேபளிய இராணுவத்துடன் இணைக்குமாறு கோரி வருகின்றனர். அதனை இராணுவ உயர் அதிகாரிகள் எதிர்க்கின்றனர். பொருளாதாரம்: தனியார் நிறுவனங்கள் , மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன சமாந்தரமாக இயங்கும். அதே நேரம் நிலசீர்திருத்தம் நடைமுறை படுத்தப் படும். கூட்டுறவு பண்ணைகள் உருவாக்கப்படும். வெளிவிவகாரம்: நவீன தொழில்நுட்ப அறிவு, மற்றும் பாரிய கட்டுமானப்பணிகள் போன்றவற்றை அன்னிய நிறுவனங்களின் உதவியுடனேயே நடைமுறைப்படுத்த முடியும். இதன் நிமித்தம் சர்வதேச நாடுகளுடன் சுமுகமான உறவு பேணப்படும்.

மாவோயிஸ்டுகளின் "புதிய ஜனநாயக புரட்சி" சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை ஆண்ட கட்சிகள் வாய்ச்சொல் வீரர்கள் என்பதை நன்றாக அறிந்து கொண்ட மக்கள், மாவோயிஸ்டுகள் மாற்றத்தை கொண்டு வருவர், என நம்புகின்றனர். மக்களின் வாக்குகளை உத்தரவாக கருதி, நேபாளத்தை முன்னேற்ற பாதையில் இட்டு சென்று, அதனை இமாலய சொர்க்கமாக்குவது, மாவோயிஸ்டுகளின் கைகளில் உள்ளது. நேபாளின் மன்னர், இராணுவம், ஆண்ட வர்க்கம், முதலாளிகள், மற்றும் அமெரிக்கா ஆகியன; இந்த முன்னேற்றத்தை தடுக்க நினைக்கலாம். எதிர்பாராத சதிப்புரட்சி ஏற்படலாம். அந்த நேரத்தில், என்ன செய்ய வேண்டுமோ, அதனை மாவோயிஸ்டுகள் செய்வார்கள்.



____________________________________________________

கலையகம்