Monday, August 31, 2020

நாஸிகள் ஆக்கிரமித்த நெதர்லாந்து, அறியாத தகவல்கள்

Part - 1 

2ம் உலகப் போர் காலத்தில் நாஸி ஜெர்மனி நெதர்லாந்து மீது படையெடுத்த காலத்தில் அங்குள்ள நிலைமை எப்படி இருந்தது என்பது பற்றிய சிறு விளக்கம். ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள இந்த மியூசியம், நாஸி ஆக்கிரமிப்புக் காலகட்டத்தையும், அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தையும் காட்சிப் படுத்தி உள்ளது. நீங்கள் அறிந்திறாத பல முக்கியமான வரலாற்றுத் தகவல்களை ஆவணப் படங்களுடன் தமிழில் எடுத்துக் கூறி இருக்கிறேன். 

 

 

Part - 2  

ஜேர்மன் நாஸிகளுடன் ஒத்துழைத்த டச்சு நாஸி கட்சியான NSB, அதன் "தேசியத் தலைவர்" முசெர்ட் பற்றிய அரிய தகவல்கள். ஐரோப்பாவில் நாஸிகள் தான், அனைவரும் அடையாள அட்டை கொண்டு திரிய வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தார்கள்! அத்துடன் அடையாள அட்டையில் விரல் ரேகை பதிவு செய்வதும் நாஸிகளின் கண்டுபிடிப்பு தான் என்பது பலர் அறியாத தகவல். 

 

 

Part - 3 

யூதர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக சொல்லி கூட்டிச் சென்றனர். ஆரம்ப காலங்களில் நெதர்லாந்தை ஆக்கிரமித்த ஜெர்மன் நாஸிகள் யூதர்களை தனிமைப் படுத்தினார்களே தவிர கொடுமைப் படுத்தவில்லை. அதனால் அவர்கள் இலகுவாக ஏமாற்றப் பட்டனர். 

 

 

Part - 4 

நெதர்லாந்தை ஆக்கிரமித்த ஜெர்மன் நாஸிகளுக்கு எதிராக நடந்த விடுதலைப் போராட்டம் துரோகி அழிப்புடன் தொடங்கியது. அதாவது ஜெர்மன் ஆக்கிரமிப்பு அரசுடன் ஒத்துழைத்த டச்சுக் காரர்கள் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

 

No comments: