
தொடரும் ஆப்கான் போரும், அதன் விளைவாக ஏற்படும் அப்பாவி மக்களின் அவலமும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பதில்லை. அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் காரணமாக பொது மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன, நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் மரணிக்கின்றனர், அல்லது அங்கவீனர் ஆகின்றனர். அதை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தாலிபானுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகளின் தாக்குதல்களால் அனேகமாக பொது மக்களே பலியாகின்றனர். இதனால் தன் முனைப்புக் கொண்ட ஆப்கான் மக்களின் எழுச்சியானது அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேற வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆப்கான் மக்களின் துயரத்தை கண் முன் கொண்டுவரும் வீடியோ இது. இந்த நேரடி அறிக்கையை சில துணிச்சலான ஆர்வலர்கள் படம் பிடித்து அனுப்பியுள்ளனர்.