Saturday, May 02, 2015

2015 உலக மே தினக் காட்சிகளும், கலவரங்களும்


இது தான் இன்றைய அமெரிக்கா! இன்று அமெரிக்க நகரங்களில் நடப்பது (இனக்) கலவரம் அல்ல, மக்கள் எழுச்சி!

******

நெதர்லாந்தின் மிகப் பெரிய தொழிற்சங்கமான FNV ஆம்ஸ்டர்டாம் நகரில் நடத்திய மேதினம்:

******

யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலமும், அதில் கலந்து கொண்ட இளம் கம்யூனிஸ்ட்டுகளும். புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி, இந்த ஊர்வலத்தை ஒழுங்கு படுத்தி இருந்தது. சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை போன்ற பல மக்களின் பிரச்சனைகளை காட்டும், அலங்கார ஊர்திகள் எடுத்துச் செல்லப் பட்டன. 
(படத்திற்கு நன்றி: Kiri Shanth)



இந்த வருடம், ஜேவிபி கொழும்பில் நடத்திய மாபெரும் மேதின ஊர்வலத்தில், யாழ் மாவட்ட கிளையை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டமை ஒரு சிறப்பம்சம்.
(படத்திற்கு நன்றி :Ramalingam Chandrasegar)


******

துருக்கி, இஸ்தான்புல் நகரில், பொலிஸ் தடையையும் மீறி மேதின ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பொலிஸ் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முடியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மனிதச்சங்கிலி அமைத்துக் கொண்டு நின்றனர். சிவில் உடையில் நின்ற பொலிசார், பலரைக் கைது கொண்டு சென்றனர். இது வரையில் இருநூறு பேரளவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.






No comments: