Friday, June 18, 2010

கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் விபச்சார விடுதி!


கத்தோலிக்க திருச்சபை விபச்சார விடுதி கட்டிக் கொடுத்து சமூகத்திற்கு சேவை செய்துள்ளது! கரீபியன் கடல் பகுதியில் குரசாவோ தீவில் Campo Alegre (மகிழ்ச்சியான முகாம்) என்ற மிகப் பெரிய திறந்த வெளி விபச்சார விடுதி ஒன்றுள்ளது. 

60 ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து உருவாக்கிய விபச்சார விடுதி இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த விபச்சாரிகள் ஐரோப்பாவுக்கு செல்லும் நுழைவாயிலாக பயன்படுத்தும் அந்த விடுதி அண்மையில் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அப்பொழுது குரசாவோ தீவில் வாழும் கத்தோலிக்க இளைஞர்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் தாம் அங்கம் வகிக்கும் அதே கத்தோலிக்க திருச்சபை தான் விபச்சார விடுதியை நிர்வகித்து வருகின்றது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

வெனிசுவேலா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ள மிகச் சிறிய குரசாவோ தீவு, நெதர்லாந்துக்கு சொந்தமானது. பெரும்பான்மையான தீவுவாசிகள் கறுப்பின மக்கள். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அடிமைகளின் வாரிசுகள். அவர்கள் மத்தியில் கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கு அதிகம். 


குரசாவோ மக்கள் நெதர்லாந்தில் உள்ள வெள்ளையர்களை விட அதிக மதப் பற்றாளர்கள். இன்று வேலையில்லாப் பிரச்சினையும், கூடவே வறுமையும் அதிகரித்து வரும் குரசாவோ, ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் ஷெல் நிறுவனம் கட்டிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. 


ஆலையில் வேலை செய்வதற்கு பக்கத்து நாடுகளில் இருந்தெல்லாம் பல தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தார்கள். தீவு நெதர்லாந்துக்கு சொந்தமாக இருந்த போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கியது. இதனால் அமெரிக்க கடற்படை வீரர்களும் அந்த தீவில் நிலை கொண்டிருந்தார்கள்.

ஆலையில் வேலைக்கு வந்த வெளிநாட்டு தொழிலாளர்களும், பாதுகாப்புக்கு வந்த கடற்படை வீரர்களும் தமது பாலியல் இச்சையை பூர்த்தி செய்வதற்காக தீவில் வாழும் பெண்களை தேடிச் செல்ல விடாமல் தடுக்க வேண்டியிருந்தது. இதனால் (நெதர்லாந்து) அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து Campo Alegre விபச்சார விடுதியை கட்டினார்கள். பால்வினை நோய்கள் பரவ விடாது தடுப்பதும் நோக்கமாக இருந்தது. 


"கத்தோலிக்க திருச்சபை அதிக தீமை பயக்கும் தோற்று நோயை எதிர்கொள்வதை விட, விபச்சார விடுதி பரவாயில்லை." என்று கருதியதாக இந்த தகவலை வெளிக் கொணர்ந்த Coks van Eysden எழுதியுள்ளார். அவர் நெதர்லாந்து கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தை சேர்ந்தவர். "Verhandelingen" என்ற சஞ்சிகையில் இந்த தகவல் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

Campo Alegre யில் வேலை செய்வதற்கு, டொமினிக்கன் குடியரசு, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து அழகிய பெண்கள், பாலியல் தொழிலாளிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அந்த ஒப்பந்தம் அதிக பட்சம் மூன்று மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வாடிக்கையாளர்களுடன் நட்பு கொண்டு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ செல்லவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே அவ்வாறு குறுகிய கால ஒப்பந்தம் போடப்பட்டது. 


ஆயினும் ஒரு முறை குரசாவோ தீவில் வேலை கிடைத்து விட்டால், அந்தப் பெண்களுக்கு ஐரோப்பிய விசா எடுப்பது இலகுவாக இருந்தது. (அந்த தீவு நெதர்லாந்து நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.) இதனால் பெருமளவு கொலம்பிய பாலியல் தொழிலாளர்கள் நெதர்லாந்து விபச்சார விடுதிகளில் வந்து சேர்ந்தனர். கடந்த பத்தாண்டுகளாக நெதர்லாந்து அரசு எடுத்து வரும் கடுமையான குடிவரவு சட்டங்களின் காரணமாக அந்தப் பிரச்சினை கட்டுப்படுத்தப் பட்டது.

விபச்சார விடுதி குறித்து அங்கேயுள்ள கத்தோலிக்க திருச்சபை என்ன கூறுகின்றது? "திருமணத்திற்கு அப்பாலான உடலுறவை கத்தோலிக்க மதம் தடை செய்திருந்தாலும், நடைமுறை வேறாக உள்ளது. சமூகத்தில் விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. ஆனால் பெண்களை வற்புறுத்தி பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை, பணத்திற்காக பெண்களைக் கடத்துபவர்களை தடுக்க வேண்டியது அவசியம்." என்று நியாயம் கற்பித்தனர்.


Campo Alegre விபச்சார விடுதி குறித்து Frank Martinus Arion என்ற குரசாவாவை சேர்ந்த எழுத்தாளர் ஒரு நாவல் எழுதியுள்ளார். Dubbelspel (Double Game) என்ற அவரது நாவல் முழுவதும் அந்த விபச்சார விடுதியை சுற்றி புனையப்பட்டுள்ளது. அந்த நாவலில் ஏதாவது உண்மையிருக்கலாம் என்று சந்தேகித்த ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொண்டு ஆராய்ந்துள்ளார். அதன் பின்னரே கத்தோலிக்க திருச்சபையின் இரட்டை வேடமும் அம்பலத்திற்கு வந்தது. இது குறித்து நெதர்லாந்து பத்திரிகையில் வந்த கட்டுரையை இங்கே வாசிக்கலாம். (Rk kerk stond aan wieg bordeel
(குறிப்பு: Trouw என்ற அந்த நாளேடு நெதர்லாந்தில் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் ஊடகமாக ஆரம்பிக்கப்பட்டது.)

பிற்குறிப்பு: வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சியளிக்கும் செய்தியல்ல. இந்தியாவில் இந்து மதம் "தேவதாசி" என்ற பெயரில் கோயில்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை நடத்தியது. அதே போல ஐரோப்பாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் தேவாலயங்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை வைத்திருந்தது. புரட்டஸ்தாந்து கிளர்ச்சியாளர்கள் அதையும் ஒரு காரணமாக காட்டித் தான் பிரிந்து சென்றார்கள். மேலதிக தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டிய பின்னர் அது பற்றி தனியான பதிவு இடுகிறேன்.



*********

(டச்சு மொழிக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு:)
//De rooms-katholieke kerk heeft rond de Tweede Wereldoorlog een staatsbordeel helpen opzetten. Campo Alegre op Curaçao is nog altijd een belangrijke doorvoerhaven voor vrouwenhandelaars richting Nederland. „Zoiets zou de rk kerk nooit meer doen”, denken nonnen die zich tegen gedwongen prostitutie verzetten.// 
இரண்டாம் உலகப் போர் அளவில், ரோம கத்தோலிக்க தேவாலயம் ஒரு அரச விபச்சார விடுதி அமைப்பதற்கு உதவியுள்ளது. குரசாவோ தீவில் உள்ள Campo Alegre இன்றைக்கும் நெதர்லாந்து நோக்கி பெண்களை கடத்துவோர் தங்கிச் செல்வதற்கான துறைமுகமாக உள்ளது. பலவந்தப் படுத்தப் பட்ட பாலியல் தொழிலுக்கு எதிரான கன்னியாஸ்திரிகள், "ஒரு கத்தோலிக்க தேவாலயம் இப்படியான வேலைகளை செய்யாது" என்று நினைக்கிறார்கள். 

 //Ze had ’Dubbelspel’ van Arion gelezen – zie hieronder – dus ze wist van het bestaan van Campo Alegre. Maar Ivonne van de Kar, coördinator van de Stichting Religieuzen Tegen Vrouwenhandel wist niet dat de rooms-katholieke kerk zelf aan de wieg heeft gestaan van dit megabordeel op Curaçao.// 
அவர் Arion எழுதிய Dubbelspel வாசித்திருக்கிறார். அதனால் Campo Alegre பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால், பெண்களை விற்பதற்கு எதிரான அமைப்பின் இணைப்பாளரான Ivonne van de Kar, குரசாவோவின் மிகப் பெரிய விபச்சார விடுதிக்கு கத்தோலிக்க தேவாலயம் அடிக்கல் நாட்டியது என்பது குறித்து அறியாமல் இருந்தார். 

//Sinds kort weet ze het wel, dankzij een column in het kwartaalblad van de nonnen, Verhandelingen. Daarin memoreert publiciste Coks van Eysden de opzienbarende geschiedenis van Campo Alegre. Zij gaat in haar stuk ’vijgenblad-toerisme’ in op de opmerkelijke ontstaansgeschiedenis van Campo Alegre (’vrolijk kamp’), een bordeel dichtbij het vliegveld van Curaçao.// 
அண்மையில் தான், Verhandelingen என்ற கன்னியாஸ்திரிகளின் காலாண்டு சஞ்சிகையை வாசித்ததன் மூலம் தெரிந்து கொண்டார். Coks van Eysden என்ற ஊடகவியலாளர், குரசாவோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள Campo Alegre யின் வரலாறு குறித்து எழுதி இருந்தார். 

//Op borden langs de weg wordt het aangewezen door een mooi logo, schrijft Van Eysden: een vijgenblaadje. Het is zo’n zestig jaar geleden opgezet „door de Nederlandse overheid in samenwerking met de katholieke kerk als staatsbordeel ten behoeve van immigranten voor de olieraffinaderij, zeelieden en militairen”.// 
பாதையின் அருகில் உள்ள விளம்பர தட்டியில் அழகான இலையின் (fig leaf) படம் உள்ளது. அந்த விபச்சார விடுதி, அறுபது வருடங்களுக்கு முன்னர், எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் வேலை செய்த குடியேறிகள், கப்பல் பணியாளர்கள், இராணுவ வீரர்களுக்காக அமைக்கப் பட்டது. அதனை கத்தோலிக்க தேவாலாயத்துடன் சேர்ந்து நெதர்லாந்து அரசு உருவாக்கி இருந்தது. 

//Daar mochten de plaatselijke schonen niet werken – die zouden maar rondvertellen welke eilandgenoten er tot de klandizie behoorden. Voor de arbeid werden prostituees uit de Dominicaanse Republiek en Colombia geronseld, voor maximaal drie maanden, zodat ze geen relaties konden aanknopen met hoerenlopers.// 
அங்கே உள்ளூர் அழகான நங்கைகள் வேலை செய்ய முடியாது. அங்கு வேலை செய்வதற்காக டொமினிக்கன் குடியரசு, கொலம்பியாவில் இருந்து பாலியல் தொழிலாளிகள் தருவிக்கப் பட்டனர். அதுவும் மூன்று மாதங்கள் மாத்திரம் வேலை செய்ய முடியும். ஆகவே, வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது. 

//Helemaal onbekend was de betrokkenheid van de rk kerk niet, maar in het Nederlands taalgebeid is er nauwelijks iets over te vinden. De verantwoordelijke rk geestelijke, apostolisch vicaris van Willemstad, een dominicaan, figureert wel in een recent overzichtswerk over dominicanen, maar zijn betrokkenheid bij Campo Alegre memoreert historica Marit Monteiro niet (zie ’Dubbele moraal’).// 
கத்தோலிக்க தேவாலயத்தின் பங்களிப்பு பற்றி யாருக்கும் தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால், டச்சு மொழி பேசுவோர் மத்தியில் (குரசாவோ மக்களையும் சேர்த்து) அதைப் பற்றி அரிதாகவே அறிய முடிகின்றது. அந்தப் பிரதேச கத்தோலிக்க பிஷப் டொமினிக்கன் பிரஜைகளுடன் தொடர்பில் இருக்கிறார். ஆனால், அவர் இதைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. 

//In haar dissertatie ’Reizende sekswerkers’ wijdde de antropologe Marie-Louise Janssen er vorig jaar welgeteld één regel aan. Ze schrijft dat Nederland sinds 1911 een bordeelverbod kende, maar feitelijk koos voor gedogen van prostitutie. Deze pragmatische houding leidde op Curaçao „tot de oprichting van Campo Alegre, een gezamenlijk initiatief van de Nederlandse regering, de katholieke kerk, het Amerikaanse leger en Amerikaanse zakenmensen”. Doel was het beschermen van lokale vrouwen tegen de buitenlandse mannen die het eiland aandeden en hun seksuele behoeften wilden bevredigen, aldus Janssen.// 
"1911 ம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் விபச்சார விடுதி தடையுத்தரவு இருந்து வருகின்றது. இருப்பினும் அது கண்டுகொள்ளாத கொள்கையை பின்பற்றியது" என்று மானிடவியல் நிபுணர் Marie-Louise Janssen, "பயணம் செய்யும் பாலியல் தொழிலாளர்கள்" என்ற பெயரில் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ளார். இந்த விட்டுக்கொடா தன்மை, குரசாவோ தீவில் Campo Alegre உருவாக்கும் நடவடிக்கை வரை சென்றுள்ளது. நெதர்லாந்து அரசு, கத்தோலிக்க தேவாலயம், அமெரிக்க இராணுவம், அமெரிக்க வணிகர்கள் ஒன்று சேர்ந்து அதை அமைத்தனர். வெளிநாட்டு ஆண்கள் தமது பாலியல் தேவைகளுக்காக, உள்நாட்டு பெண்களை தொந்தரவு செய்வதை தடுக்கும் நோக்கமும் அதில் அடங்கி இருந்தது. 

//Waarom nam de rk kerk dit initiatief? Niet alleen in ’ons Oost-Indië’ greep de besmetting met geslachtsziekten om zich heen (en hielp de roep om kuisheid van de regering niets), ook in ’De West’ vormden soa’s een groot gevaar. De olie-industrie van Shell had reden tot vrees voor haar productiviteit en het Amerikaanse leger wist dat mannen niet harder gingen vechten met een doorwoekerende geslachtsziekte.// 
எதற்காக கத்தோலிக்க தேவாலயம் இந்த நடவடிக்கையை எடுத்தது? கிழக்கு இந்திய நாடுகளில் (அதாவது: இந்தோனேசியா) பாலியல் தொற்று நோய்கள் பரவி இருந்தன. (ஒழுக்கம் பேணுமாறு அரசு விடுத்த எச்சரிக்கை பயன்தரவில்லை.) அதே மாதிரி கிழக்கு இந்திய நாடுகளில் (அதாவது: கரீபியன் தீவுகள்) கூட பாலியல் நோய்த் தொற்று அபாயம் இருந்தது. அதனால், (எண்ணை சுத்திகரிப்பு ஆளை நடத்திய) ஷெல் நிறுவனம் (நோய் தோற்றிய ஊழியர்களால்) தனது உற்பத்தி பாதிக்கப் படும் என்று அஞ்சியது. அதே மாதிரி, தனது வீரர்கள் ஆக்ரோஷமாக சண்டையிட மாட்டார்கள் என்று அமெரிக்க இராணுவமும் அஞ்சியது. 

//Coks van Eysden, schrijfster van de column, deed onlangs op Curaçao archiefonderzoek naar de sporen die religieuzen op het eiland hebben nagelaten. „Wat je daarin tegenkomt is dat men in de jaren twintig al nauwelijks greep kreeg op de om zich heen grijpende geslachtsziekten. En tijdens de Tweede Wereldoorlog werd dat probleem nog veel groter.” De komst van Campo Alegre was daar het antwoord op, stelt Van Eysden. Op het overwegend katholieke Curaçao koos de kerk voor het minste van de kwaden: een bordeel met toezicht en medische begeleiding.// 
இந்தப் பத்தியை எழுதிய Coks van Eysden, குரசாவோ ஆவணங்களில் மறைக்கப் பட்ட மதகுருக்களின் பங்களிப்பு பற்றி தேடியுள்ளார். அவற்றில் அவர் கண்டறிந்த விடயங்கள் இவை. அந்தக் காலத்தில் பால்வினை நோய்கள் விடயத்தில் யாராலும் கட்டுபபடுத்த முடியவில்லை. இரண்டாம் உலகப் போர் வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது. Campo Alegre இன் வருகை அதற்கான தீர்வாக இருந்தது. "மருத்துவ வசதிகள் கொண்ட விபச்சார விடுதி": குரசாவோ கத்தோலிக்க தேவாலயம் மிகக் குறைந்த தீமையை தெரிவு செய்தது. 

//Iets omfloerster omschrijft Kamala Kempadoo dat in haar studie ’Sexing the Carribean’ (2004). Prostitutie gold als een kwaad, maar de kerk koos voor het kanaliseren van de ’perversie’, liever dan het eiland erdoor te laten overspoelen. De apostolisch vicaris, mgr. Van der Veen Zeppeveldt, sprak zich uit voor het ’treffen van maatregelen’ door de Nederlandse regering, om ’het kwaad dat de regering toch niet kan uitroeien, in banen te leiden’. Zo werd, schrijft Kempadoo, de rk kerk ’volledig medeplichtig’ aan het Nederlandse koloniale beleid dat prostitutie reguleerde. Lees: een staatsbordeel verordonneerde.// 
’Sexing the Carribean’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வு செய்த Kamala Kempadoo எழுதியதாவது. விபச்சாரம் ஒரு தீமையாக இருந்தாலும், தீவு முழுக்க அதை பரவ விடுவதை விட ஒழுங்கு படுத்துவது சிறந்தது என்பதே கத்தோலிக்க தேவாலயத்தின் தெரிவாக இருந்துள்ளது. "அந்த தீமையை ஒழிக்க முடியாது. ஆனால், ஒழுங்கு படுத்தலாம்" என்பது பிஷப் Van der Veen Zeppeveldt நெதர்லாந்து அரசுக்கு கூறிய அறிவுரையாக இருந்தது. இதன் மூலம், விபச்சாரத்தை ஒழுங்கு படுத்திய நெதர்லாந்து காலனிய கொள்கையில் கத்தோலிக்க தேவாலயம் சம்பந்தப் பட்டுள்ளமை தெளிவாகும். (volledig medeplichtig: இதன் அர்த்தம் ஒரு குற்றத்தில் முழுப் பங்களிப்பு செய்வது. அதாவது, கத்தோலிக்க தேவாலயத்திற்கு நூறு வீதப் பங்கு இருக்கிறது.) 

//Het ’hoerenkamp’ stuitte al snel op bezwaren, ook van katholieke zijde. Niet alleen was de lokale pastoor fel tegen hoerenbezoek – maar wat hij ook sprak en dreigde, zijn mannelijke parochianen bezochten er geen lichtekooi minder om. Ministers wezen er toen al vergeefs op dat Campo Alegre alle regels over vrouwenhandel aan zijn laars lapte. En een petitie van meer dan tweeduizend Curaçaose vrouwen in 1951 voor het sluiten van het kamp had hetzelfde effect als de klachten van de pastoor en de ministers: geen enkel.// 
"விபச்சாரிகளின் முகாம்" வெகு விரைவில் எதிர்ப்பை சம்பாதித்திருந்தது. கத்தோலிக்க பக்கத்தில் இருந்தும் கூட. உள்ளூர் பாதிரியார் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை கடுமையாக கண்டித்தார். Campo Alegre பெண்களை வியாபாரப் பொருளாக்குவது தொடர்பான சட்டங்களை காலில் போட்டு மிதிக்கிறது என்று அமைச்சர்கள் குற்றம் சாட்டினார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குரசாவோ பெண்கள், முகாமை மூடி விடுமாறு கோரி பெட்டிசன் எழுதிப் போட்டனர். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. 

//Campo Alegre bestaat nog steeds – het is uitgegroeid tot het grootste openluchtbordeel van het hele Caribisch gebied. Toen het bordeel een paar jaar geleden een breed aangekondigde Open Dag wilde houden, protesteerden jongeren fel, vertelt Van Eysden – katholieke jongeren, die hoogstwaarschijnlijk niet wisten dat ze dat vermaledijde bordeel dankten aan onder meer hun eigen kerk.// 
Campo Alegre இப்போதும் அங்கு இருக்கிறது. அது இன்று கரீபியப் பிராந்தியத்தில் மிகப் பெரிய திறந்த வெளி விபச்சார விடுதியாக மாறிவிட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர், அந்த விடுதி (விளம்பரத்திற்காக) திறப்புவிழா கொண்டாடியது. அப்போது கத்தோலிக்க இளைஞர்கள் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், அவர்களது தேவாலயம் தான் அந்த விபச்சார விடுதி அமைக்க உதவியது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. 

//Al decennia is Campo Alegre een belangrijk doorvoerkanaal voor Colombiaanse en Dominicaanse prostituees die in Nederland achter de ramen en in clubs zitten – tot in de jaren negentig was eenderde van hen volgens onderzoekster Marie-Louise Janssen afkomstig uit Campo Alegre. Nu ligt dat aandeel wellicht iets lager, vermoedt Janssen, door de strengere immigratieregels.// 
கடந்த பல வருடங்களாக, நெதர்லாந்து விபச்சார விடுதிகளில் வேலை செய்யும் கொலம்பிய, டொமினிக்கன் பாலியல் தொழிலாளிகள், Campo Alegre ஊடாகவே வந்துள்ளனர். தொண்ணூறுகள் வரையில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் அவ்வாறு வந்துள்ளனர் என்று Marie-Louise Janssen செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது கடுமையான குடியேற்ற சட்ட விதிகள் காரணமாக அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 

//Het zijn uitgerekend deze vrouwen waar de nonnen van de Stichting Religieuzen Tegen Vrouwenhandel voor opkomen. „Het project-Campo Alegre heeft echt verkeerd uitgepakt. Dat mag je wel de ironie van de geschiedenis noemen”, zegt Ivonne van de Kar. „Ik kan me niet voorstellen dat de rk kerk nu zoiets zou opzetten. Laten we het voortschrijdend inzicht noemen.”// 
இந்தப் பெண்களின் உரிமைகளுக்காக தான், பெண் கடத்தலுக்கு எதிரான அமைப்பின் கன்னியாஸ்திரிகள் போராடுகின்றனர். இதை நீங்கள் வரலாற்று முரண்நகை என்று கூறலாம். இந்தக் காலத்தில் கத்தோலிக்க தேவாலயம் இது போன்ற ஒன்றை அமைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 

//Zou het zin hebben om de kerkleiding aan te spreken op het oprichten van Campo Alegre? Van de Kar ziet er niet veel in. „Het is ooit met goede intenties gestart. Nu zou ik zeggen: laten we ons niet druk maken over het bestaan van bordelen. Prostitutie ban je echt niet uit. Maar laten we het het misbruik, de verkrachting en de vrouwenhandel in de prostitutie aan de kaak stellen.”// 
Campo Alegre அமைத்த குற்றத்திற்கு கத்தோலிக்க திருச் சபை தலைமையை பொறுப்பேற்க வைப்பதில் அர்த்தம் உள்ளதா? அது அன்று ஒரு நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப் பட்டது என்று சொல்வார்கள். விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. ஆகவே, விபச்சார விடுதி இருப்பது பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள் என்பார்கள். அதற்குப் பதிலாக, பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்துவது, வன்புணர்ச்சி செய்வது, துன்புறுத்துவது போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

10 comments:

shafiq said...

யார் சொன்னது விபச்சாரத்தை ஒழிக்க முடியாது என்று, போங்க சார் நீங்க வேற,

Indian said...

தேவதாசி எனபவர்கள் பெரும் கோயில்களுக்கு நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களை குறிக்கும். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள் படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வழமையாக இருந்தது. இந்த அமைப்பு நல்ல குறிக்கோளுக்காக ஏற்படுத்தப்பட்டாலும் பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது "மகாராஜா"க்களுக்கு நடனமாடியதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக இவ்வழக்கத்துக்கு 1920 முதற் தொண்டு இந்தியாவில் பாரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

யார் சார் உங்களுக்கு சொன்னது இந்து மதம் 'தேவதாசி' என்ற பெயரில் கோயில்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை நடத்தியது என்று?

Kalaiyarasan said...

இந்தியன், தேவதாசிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப் பட்டத்தை நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்கள். தேவதாசிகள் வசித்த குடியிருப்பு கோயிலுக்கு அருகிலேயே இருந்தது. அது மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், பிரபுக்கள், தர்மகர்த்தாக்கள், பூசாரிகள் அடிக்கடி வந்து போகும் இடமாக இருந்தது. அப்படி வரும் ஆண்கள் நடனத்தை மட்டும் கண்டு ரசிக்க வருவதில்லை. தமது காமப்பசியை தீர்த்துக் கொள்வது பிரதான நோக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட இடத்திற்கு நீங்கள் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? மும்பை சிவப்பு விளக்கு பகுதி போல அனைவருக்கும் தெரிந்த இடத்தில் இருந்தால் தான் அதனை விபச்சார விடுதி என்று அழைப்பீர்களா?

மேலும் இந்து மதத்திற்குள் "வரலாறு காணாத புரட்சி" ஏற்பட்டு, அதன் காரணமாக தேவதாசி முறை ஒழிக்கப் பட்டதைப் போல பேசுகின்றீர்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் தோன்றிய மதச்சார்பற்றவர்களும், மத சீர்திருத்தவாதிகளும், பிரிட்டிஷ் ஆட்சியாளரும் சேர்ந்து தேவதாசி வழக்கத்திற்கு எதிராக போராடினார்கள். அப்போது பார்ப்பனர்களும், இந்து மத பற்றாளர்களும் தேவதாசி முறையை தடுப்பது பெரும் பாவம் என்று வாதாடினார்கள். அவர்களைப் பொறுத்த வரை அது தெய்வ நிந்தனை. இன்றைக்கு இருப்பவர்கள் ஜீன்ஸ் போடும் நவீன இந்துக்கள். அவர்களது மதத்தில், பிரிட்டிஷ் கலாச்சாரத்தின் செல்வாக்கு அதிகம் கலந்துள்ளது.

Anonymous said...

Hindu religion did not promote prostitution. We cannot conclude when a few Hindus commit adultry.

Kalaiyarasan said...

அனானி நண்பரே, இந்து மதத்தை பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்? கணவன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறாத பெண்கள் விபச்சார விடுதிகளில் சேர்க்கப்பட்டார்கள். புதிதாக திருமணம் செய்து கொள்ளும் புது மணப்பெண்ணுடன் உள்ளூர் பிராமணன் தான் முதன் முதலாக உடலுறவு கொள்ள வேண்டும். 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், நாயர் சாதியினர் மத்தியில் அந்த வழக்கம் இருந்தது. இது போன்ற விசித்திரமான மதக் கட்டுப்பாடுகள் உலகில் இந்து மதத்திற்குள் மட்டுமே காணப்பட்டன.

Anonymous said...

For further study/clarification, could you tell me the evident that they were forced to adultry, particularly after husband death and bramin's sex with virgin?

Kalaiyarasan said...

நண்பர்களே, நீங்களும் தேடுதலில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் உங்களுக்காக நானே தேடித் தந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் பள்ளி மாணவனுமல்ல, நான் உங்கள் ஆசிரியனுமல்ல.

Kalaiyarasan said...

//could you tell me the evident that they were forced to adultry,//

Please watch the movie "Water" by Meera Nair.

Anonymous said...

//நண்பர்களே, நீங்களும் தேடுதலில் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் உங்களுக்காக நானே தேடித் தந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் பள்ளி மாணவனுமல்ல, நான் உங்கள் ஆசிரியனுமல்ல.//
True. I do search.
please share if u know

Thank you for the information 'water' movie

ஜான் said...

i have read all your posts. those are very informative. thank you for that sir.

And one small correction water is not by meera nair, it's by deepa mehta.