Thursday, September 11, 2008

9/11 தாக்குதல், அமெரிக்காவின் உள்வீட்டு சதியா?

நியூயோர்க் இரட்டைக்கோபுரங்கள் தகர்ந்த 11 செப்டம்பர் தாக்குதல் நடந்து 7 வருடங்கள் கடந்தாலும், இன்றுவரை பல மர்மங்கள் துலங்கவில்லை. அமெரிக்க அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய தாக்குதலாக இருக்கலாம், என்ற சந்தேகத்தை கிளப்பும் ஆவணப்படங்கள் பல வந்து விட்டன.
9/11 Conspiracy Video

கடைசியாக கூட இத்தாலிய படத்தயாரிப்பாளர் Giulietto Chiesa எடுத்த ZERO என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் காண்பிக்க தடைவிதிக்கப்பட்ட இந்தப் படம் கூட இரட்டைக் கோபுரங்கள் விமானங்கள் மோதியதால் இடிந்து விழவில்லை, ஆனால் உள்ளிருந்தே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டது என்று கூறுகின்றது. மேலும் அதே தினத்தில் நடந்த இராணுவ தலைமையகமான 'பெண்டகன்' மீதும் விமானம் மோதி சேதமடைந்த சம்பவத்தில், அங்கிருந்த பாதுகாப்பு வீடியோக்கள் யாவும் பின்னர் மாயமாக மறைந்ததேன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் விமானக்கடத்தலில் ஈடுபட்ட "பயங்கரவாதிகளின்" பெயர் விபரம் மூன்று நாட்களுக்குள் சி.ஐ.ஏ.க்கு தெரிந்ததெப்படி? (அரசாங்கம் சொல்வது போல) கண்காணிப்பில் இருந்த அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விசா கிடைத்தது எப்படி? "நடைபெற்ற சம்பவங்களை வைத்து பார்க்கும் போது; பூகோள அரசியல், உலக எரிபொருள் பொருளியல் போன்றவற்றை அறிந்தவர்கலாலேயே இந்த 9/11 தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உலகம் எவ்வாறு மாறப்போகின்றது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்தே இருந்துள்ளது." இவ்வாறு தெரிவித்த இத்தாலிய தயாரிப்பாளர்கள், இந்த தாக்குதல் பின் லாடனால் நடத்தப்பட்டது என்பதை தாம் நம்பவில்லை என்றும், அல் கைதா என்ற அமைப்பு இருக்கின்றதா என்பதே சந்தேகத்திற்குரியது என்றும் கூறுகின்றனர்.

பிற்குறிப்பு:
11 செப்டம்பர் 2001 ம் ஆண்டு, தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்கரின் தொகை மூவாயிரம். அதற்கு பின்னர் அமெரிக்க அரசின் பழிவாங்கும் போரில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களின் தொகை இருபதாயிரம்.

1 comment:

Anonymous said...

என்னத்த சொல்ல
உலகம் இப்படி இருக்கு