Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Saturday, September 25, 2010

இணையத்தில் மக்கள் இயக்கம் கட்டிய இத்தாலி பதிவர்

"முதலாளித்துவம் தோல்வியடைந்து விட்டது. அவர்கள் இதனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தோல்விக்கான காரணங்களை ஆராயவும், தவறுகளை ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. இப்போதும் 2007 ம் ஆண்டில் (நிதி நெருக்கடிக்கு முந்திய காலம்) வாழ்ந்து கொண்டிருப்பதாக பாசாங்கு செய்கிறார்கள்."
- இத்தாலியில் மாற்று அரசியல் இயக்கத்தை தோற்றுவித்த பிரபல பதிவர் Beppe Grillo, நெதர்லாந்து தொலைக்காட்சி (VPRO) நேர்காணலின் போது தெரிவித்த கருத்துகள்.
பெப்பே கிரிலோ ஒரு சமூக ஆர்வலர். 2007 ம் ஆண்டில் இருந்து வலைப்பூ மூலம் பல்லாயிரம் இத்தாலி இளைஞர்களின் மனங்களை வென்றெடுத்துள்ளார்.
Beppe Grillo's Blog இத்தாலி அரசுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வருகின்றது. ஐந்து வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட வலைப்பூ இன்று அறுபது மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
நேர்காணலில் பெப்பே கிரிலோ தெரிவித்த கருத்துகளில் சில:
- இன்றைய உலகில், பொது மக்கள் ஊடகம் என்ற ஒன்று இல்லை. அனைத்தும் விளம்பரதாரரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அண்மைய வரவான இணையம் மட்டுமே சுதந்திர கருத்துப் பரிமாற்றத்திற்கான ஊடகமாக உள்ளது.
- இத்தாலியர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அனைத்து தீமைகளையும் அவர்கள் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் முதலாவது வங்கி இத்தாலியில் தான் உருவானது. இத்தாலியர்கள் தான் பாசிசத்தையும் கண்டுபிடித்தார்கள்.
- தற்போதைய இத்தாலி ஜனாதிபதி பெர்லுஸ்கோனி விபச்சார தரகு அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார். இத்தாலியின் பிரதான ஊடகங்கள் பெர்லுஸ்கோனி எவ்வாறு உடலுறவு கொள்கிறார், எப்படி விந்து வெளியேற்றுகிறார், என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. எமக்கு அதெல்லாம் தேவையில்லை.
- எமது இயக்கத்திற்கு என்று ஒரு யாப்பு கிடையாது. தலைவர், செயலாளர் யாரும் இல்லை. பணப் புழக்கம் இல்லாத படியால் பொருளாளரும் கிடையாது. இது ஒரு வலைப்பின்னல். நோபல் பரிசு வென்றவர் முதல் சாதாரண தொழிலாளி வரை சமமாக கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். தமது சுற்றாடலில் நடக்கும் சமூகப் பிரச்சினைகளை விவாதிக்கின்றனர்.
- இது ஒரு மக்கள் இயக்கம். தேர்தலில் போட்டியிடும் கட்சியல்ல.