
("தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"
பகுதி : இரண்டு)
பகுதி : இரண்டு)
"பைபிளை ஆதாரமாக கொண்டு இஸ்ரேலியர்கள் 2000 ஆண்டுக்கு முன்னர் இழந்த தேசத்தை உரிமை கோருகிறார்கள்." கவனிக்கவும்: "ஆதாரம்", ஒரு மத நூலான பைபிள். இந்த வாதம் அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. இராமாயணத்தை ஆதாரமாக கொண்டு இந்துத்துவவாதிகள் இராமர் அணைக்கும், பாபர் மசூதிக்கும் உரிமை கோருகின்றனர். மகாவம்சத்தை ஆதாரமாக கொண்டு பௌத்த-சிங்கள அடிப்படைவாதிகள், முழு இலங்கைக்கும் உரிமை கோருகின்றனர். விஞ்ஞானம், மெய்ஞானம் வளர்ச்சியடைந்த 21 ம் நூற்றாண்டிலும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய புராணங்களை ஆதாரமாக அடுக்குகிறார்கள். இதை எல்லாம் இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கும் "தமிழ் சியோனிஸ்ட்கள்" ஏற்றுக் கொள்கிறார்களா?
விவிலிய நூலில் வரும் டேவிட் மன்னன் ஸ்தாபித்த ராஜ்ஜியம் பின்னர் இஸ்ரேல், ஜுதேயா என இரண்டாக உடைந்தது. யூதர்கள் என்றால், யூதேயா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் பொருள்படும். பாபிலோனியர்களின் படையெடுப்பின் பின்னர் அந்த ராஜ்ஜியம் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டது. யூதர்களின் தேசம் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதையிட்டு விவிலிய நூல் என்ன கூறுகின்றது? "பாபிலோனியர்கள் இஸ்ரேலியர்களை எழுபது ஆண்டுகள் அடிமைகளாக வைத்திருப்பார்கள்," என்று ஆண்டவர் ஜோசுவா என்ற தீர்க்கதரிசிக்கு அருள்வாக்கு வழங்கினார். இஸ்ரேலியர்களின் தீய செயல்களுக்கு தண்டனையாக ஆண்டவர் பாபிலோனியர்களை படையெடுக்க வைப்பார் என்று ஜோசுவாவின் தீர்க்கதரிசனத்தில் எழுதப்பட்டுள்ளது. “இஸ்ரேலியர்கள் ஓரிறைக் கொள்கையை மறந்து பல தெய்வங்களை வழிபட்டது, யூதர்களின் கடவுளால் பொறுக்க முடியாத குற்றம்.” இத்தால் விவிலிய நூல் கூறும் நீதிமொழி என்னவெனில், யூதர்கள் அகதிகளாக உலகம் முழுக்க அலைய நேரிட்டதற்கு அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும்.
சியோனிச அரசியல் ஆதரவாளர்கள் 3000 ஆண்டுகளுக்கு முந்திய பைபிள் கதைகளை வைத்து இஸ்ரேலுக்கு உரிமை கோரவில்லை. அவர்களைப் பொறுத்த வரை, கடைசி இஸ்ரேலிய அரசு, ரோமர்களால் தூக்கியெறியப் பட்டது. 1900 அல்லது 2000 வருடங்களுக்கு முன்னர் அது நடந்தது. அந்த கால கட்டத்தில் நடந்த சம்பவங்களை ரோம, கிரேக்க சரித்திர ஆசிரியர்கள் குறித்து வைத்துள்ளனர். அந்த குறிப்புகளில் இருந்து மக்கபீ என்ற யூத அரசு (கி.மு.164 -63 ) இருந்துள்ளமை நமக்குத் தெரிய வருகின்றது. யார் இந்த மக்காபீ? சுருக்கமாக சொன்னால். அந்தக் கால "யூத தாலிபான்கள்"! இஸ்ரேலில் மக்காபீக்களின் ஆட்சிக்கும், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு ஆட்சியாளர்களும் தமது மத சட்டங்களை கடுமையாக அமுல் படுத்தினார்கள். ஒவ்வொரு பிரஜையும் மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க காவலர்களை நியமித்தார்கள். மதச்சார்பற்றவர்களும், பிற மதத்தவர்களும் ஒன்றில் கொல்லப்பட்டார்கள், அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தாலிபான்கள் புத்தர் சிலைகளை தகர்த்தனர், மக்காபீக்கள் கிரேக்க மதக் கடவுள் சிலைகளை உடைத்தார்கள்.
மக்காபீக்கள் தமது வரலாற்றை நூல்களாக(Books of the Maccabees) எழுதி வைத்துள்ளனர். அவற்றில் இருந்து மக்காபீ தலைமையிலான யூதர்களின் எழுச்சிக்கு காரணம், மத அடிப்படைவாதம் என்பது தெட்டத் தெளிவாகின்றது. மாசிடோனியா சக்கரவர்த்தி அலெக்சாண்டர் ஆசியா முழுவதையும் தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான். யூதர்களின் நாடும் அதில் அடக்கம். அலெக்சாண்டரின் மரணத்தின் பின்னர், அவன் தளபதிகள் சாம்ராஜ்யத்தை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டனர். யூதர்கள் செலியுசிட் என்ற புதிய ராஜ்யத்தின் கீழ் வந்தார்கள். செலியுசிட் ராஜ்யத்தை ஆண்டவர்கள் கிரேக்கர்கள். (அலெக்சாண்டரும் ஒரு கிரேக்கன் தான்) அவர்கள் செயுஸ் போன்ற தமது மதக் கடவுள்களுக்கு ஆலயங்களை கட்டினார்கள். கிரேக்க மதமே அரச மதமாக இருந்தது.
கிரேக்க செலியுசிட் ஆட்சிக் காலத்தில் யூத சமூகம் இரண்டாகப் பிரிந்திருந்தது. (யூதர்கள் ஒற்றுமையானவர்கள் என்ற கட்டுக்கதைகளை கேள்விப்பட்டவர்கள் கவனிக்கவும்.) நகரங்களில் வாழ்ந்த படித்த யூதர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். நிர்வாகத்துறையில் கிடைத்த பதவிகளுக்காகவும், வசதி வாய்ப்புகளுக்காகவும் அவ்வாறு நடந்து கொண்டனர். இன்றைக்கும் நமது சமூகத்தில் ஆங்கிலத்தில் பேசி, ஐரோப்பிய கலாச்சாரத்தில் வாழும் ஒரு பிரிவு இருக்கிறதல்லவா? அது போலத் தான் இதுவும். நமது நாடுகளில் அவ்வாறானவர்கள் மெல்ல மெல்ல கிறிஸ்தவ மதத்தை தழுவியதைப் போலவே, அன்றைய யூதர்கள் பலர் கிரேக்க கடவுள்களை வழிபட்டும் வந்துள்ளனர்.
ஜெருசலேம் நகரில் யூதர்களின் பெரிய ஆலயம் அமைந்திருந்தது. அந்த ஆலயத்தின் தலைமை மதகுருவை கத்தோலிக்கர்களின் பாப்பரசரோடு ஒப்பிடலாம். அந்த அளவுக்கு யூதர்கள் ஆனவர் மீது செல்வாக்கு செலுத்தக் கூடிய ஒருவர். மேலும் ஒவ்வொரு யூதனும் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அந்த ஆலயத்திற்கு நிதி வழங்க வேண்டும். இந்தியாவின் திருப்பதி கோயில் போல, ஜெருசலேம் ஆலயமும் அன்று "பணக்கார ஆலயம்" என்று அழைக்கப்பட்டது. இது போன்ற காரணங்களால், கிரேக்க ஆதரவு யூதர்கள் ஜெருசலேம் ஆலயத்தின் தலமைப் பதவிக்காக போட்டியிட்டனர். ஒரு கட்டத்தில் கிரேக்க மன்னனுக்கு லஞ்சம் கொடுத்தேனும் அந்தப் பதவியைப் பெற முடிந்தது. இதனால் பழமைவாத யூதர்கள் அதிருப்தியுற்றனர். பழமைவாத யூதர்கள் கிளர்ச்சி செய்தனர். கிரேக்க மன்னன் Antiochus IV, பெரும்படை அனுப்பி அந்தக் கிளர்ச்சியை அடக்கினான்.
கிரேக்கமயப்பட்ட யூதர்களும் அதற்கு ஒத்துழைத்தனர். ஜெருசலேம் ஆலயம் சூறையாடப்பட்ட சம்பவத்தில் அவர்களும் ஈடுபட்டனர். யூதர்கள் எவ்வாறு யூதக் கோயிலை உடைத்தார்கள் என்று ஆச்சரியப்படலாம். பிரெஞ்சுப் புரட்சியில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உடைக்கப்படவில்லையா? லூதரின் புரட்டஸ்தாந்து எழுச்சியின் போது கத்தோலிக்க தேவாலயங்களை உடைக்கவில்லையா? அப்படியானவர்கள் தம்மை முற்போக்கானவர்கள் என்று கருதிக் கொள்கிறார்கள். கடும்போக்கு மதவாதிகளை பழமைவாதிகளாக கருதி வெறுக்கிறார்கள். (From the Maccabees to the Mishnah)
மொடைன் என்ற கிராமத்தில் நடந்த அசம்பாவிதம் யூதர்களின் புனிதப்போருக்கான தூண்டுதலாக அமைந்தது. கிரேக்க அதிகாரிகள் அந்த கிராமத்தின் யூத மதகுருவான மத்ததியாசை அழைத்து, கிரேக்க முதற்கடவுள் செயுசுக்கு பூஜை செய்ய உத்தரவிட்டனர். மத்ததியாஸ் மறுக்கவே, இன்னொரு யூதர் முன்வந்து பூஜையை நடத்தினார். யூத மதம் தவிர்ந்த பிற தெய்வங்களுக்கு பூஜை செய்த குற்றத்திற்காக, அவரை மத்ததியாஸ் அந்த இடத்திலேயே படுகொலை செய்தார். படுகொலைச் சம்பவத்தை தொடர்ந்து தனது மகன்மாருடன் பாலைவனத்திற்கு சென்று ஒளிந்து கொண்ட மத்ததியாஸ், (யூதர்களின்) புனிதப்போரை பிரகடனம் செய்தார். புனித நூலான தோரா வை பின்பற்றுவோர் அனைவரும் தான் பின்னால் அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்தார். வரலாற்றில் அது மக்காபீக்களின் எழுச்சி என அழைக்கப்படுகின்றது. கெரில்லாப் போராட்டம் மூலம் கிரேக்கர்களின் ஆதிக்கத்தில் இருந்து ஜெருசலேமை விடுவித்தனர்.(Maccabees, the revolt)
இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது. மக்காபீக்களின் ஆட்சி மன்னராட்சி அல்ல. அது ஒரு யூத தேசிய குடியரசும் அல்ல. மாறாக, ஆப்கானிஸ்தானில், ஈரானில் இருந்ததைப் போல மதத்தின் ஆட்சி. நாட்டின் தலைவர்களாக ஆட்சி செய்தவர்கள் அனைவரும் மதகுருக்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இஸ்ரேலியரிடம் இருந்து எதையாவது கற்றுக் கொண்டிருந்தால், அது மக்காபீக்களின் வரலாறாக இருந்திருக்கும். தாலிபான் தலைவர் முல்லா ஒமார் கூட மத்ததியாஸ் போல ஒரு கிராமிய மதகுரு என்பதும், மக்காபீக்கள் போல தாலிபான்களும் புனித நூலான குரானை பின்பற்றியவர்கள் என்பது ஆச்சரியமான ஒற்றுமைகள்.
இருபதாம் நூற்றாண்டில், மதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட இரு தேசிய அரசுகள் தோன்றின. ஒன்று, இஸ்ரேல். மற்றது, பாகிஸ்தான். இரண்டுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. மக்கள் பல மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தார்கள். அனைத்து பிரஜைகளும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரு புதிய மொழியை கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் உருது, இஸ்ரேலில் ஹீபுரு. இரண்டுமே வெளியில் இருந்து இறக்குமதியான மொழிகள் தாம். அனைவரையும் இணைக்கும் ஒரே மதம் மட்டும் இல்லையென்றால், பாகிஸ்தானும், இஸ்ரேலும் எப்போதோ துண்டு, துண்டாகி இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அத்தகைய மதத்-தேசிய அரசு, நவீன மத அடிப்படைவாதிகள் உருவாகும் விளைநிலமாக உள்ளது.
(தொடரும்)
விவிலிய நூலில் வரும் டேவிட் மன்னன் ஸ்தாபித்த ராஜ்ஜியம் பின்னர் இஸ்ரேல், ஜுதேயா என இரண்டாக உடைந்தது. யூதர்கள் என்றால், யூதேயா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் பொருள்படும். பாபிலோனியர்களின் படையெடுப்பின் பின்னர் அந்த ராஜ்ஜியம் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டது. யூதர்களின் தேசம் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதையிட்டு விவிலிய நூல் என்ன கூறுகின்றது? "பாபிலோனியர்கள் இஸ்ரேலியர்களை எழுபது ஆண்டுகள் அடிமைகளாக வைத்திருப்பார்கள்," என்று ஆண்டவர் ஜோசுவா என்ற தீர்க்கதரிசிக்கு அருள்வாக்கு வழங்கினார். இஸ்ரேலியர்களின் தீய செயல்களுக்கு தண்டனையாக ஆண்டவர் பாபிலோனியர்களை படையெடுக்க வைப்பார் என்று ஜோசுவாவின் தீர்க்கதரிசனத்தில் எழுதப்பட்டுள்ளது. “இஸ்ரேலியர்கள் ஓரிறைக் கொள்கையை மறந்து பல தெய்வங்களை வழிபட்டது, யூதர்களின் கடவுளால் பொறுக்க முடியாத குற்றம்.” இத்தால் விவிலிய நூல் கூறும் நீதிமொழி என்னவெனில், யூதர்கள் அகதிகளாக உலகம் முழுக்க அலைய நேரிட்டதற்கு அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும்.
சியோனிச அரசியல் ஆதரவாளர்கள் 3000 ஆண்டுகளுக்கு முந்திய பைபிள் கதைகளை வைத்து இஸ்ரேலுக்கு உரிமை கோரவில்லை. அவர்களைப் பொறுத்த வரை, கடைசி இஸ்ரேலிய அரசு, ரோமர்களால் தூக்கியெறியப் பட்டது. 1900 அல்லது 2000 வருடங்களுக்கு முன்னர் அது நடந்தது. அந்த கால கட்டத்தில் நடந்த சம்பவங்களை ரோம, கிரேக்க சரித்திர ஆசிரியர்கள் குறித்து வைத்துள்ளனர். அந்த குறிப்புகளில் இருந்து மக்கபீ என்ற யூத அரசு (கி.மு.164 -63 ) இருந்துள்ளமை நமக்குத் தெரிய வருகின்றது. யார் இந்த மக்காபீ? சுருக்கமாக சொன்னால். அந்தக் கால "யூத தாலிபான்கள்"! இஸ்ரேலில் மக்காபீக்களின் ஆட்சிக்கும், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு ஆட்சியாளர்களும் தமது மத சட்டங்களை கடுமையாக அமுல் படுத்தினார்கள். ஒவ்வொரு பிரஜையும் மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க காவலர்களை நியமித்தார்கள். மதச்சார்பற்றவர்களும், பிற மதத்தவர்களும் ஒன்றில் கொல்லப்பட்டார்கள், அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தாலிபான்கள் புத்தர் சிலைகளை தகர்த்தனர், மக்காபீக்கள் கிரேக்க மதக் கடவுள் சிலைகளை உடைத்தார்கள்.
மக்காபீக்கள் தமது வரலாற்றை நூல்களாக(Books of the Maccabees) எழுதி வைத்துள்ளனர். அவற்றில் இருந்து மக்காபீ தலைமையிலான யூதர்களின் எழுச்சிக்கு காரணம், மத அடிப்படைவாதம் என்பது தெட்டத் தெளிவாகின்றது. மாசிடோனியா சக்கரவர்த்தி அலெக்சாண்டர் ஆசியா முழுவதையும் தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான். யூதர்களின் நாடும் அதில் அடக்கம். அலெக்சாண்டரின் மரணத்தின் பின்னர், அவன் தளபதிகள் சாம்ராஜ்யத்தை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டனர். யூதர்கள் செலியுசிட் என்ற புதிய ராஜ்யத்தின் கீழ் வந்தார்கள். செலியுசிட் ராஜ்யத்தை ஆண்டவர்கள் கிரேக்கர்கள். (அலெக்சாண்டரும் ஒரு கிரேக்கன் தான்) அவர்கள் செயுஸ் போன்ற தமது மதக் கடவுள்களுக்கு ஆலயங்களை கட்டினார்கள். கிரேக்க மதமே அரச மதமாக இருந்தது.
கிரேக்க செலியுசிட் ஆட்சிக் காலத்தில் யூத சமூகம் இரண்டாகப் பிரிந்திருந்தது. (யூதர்கள் ஒற்றுமையானவர்கள் என்ற கட்டுக்கதைகளை கேள்விப்பட்டவர்கள் கவனிக்கவும்.) நகரங்களில் வாழ்ந்த படித்த யூதர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். நிர்வாகத்துறையில் கிடைத்த பதவிகளுக்காகவும், வசதி வாய்ப்புகளுக்காகவும் அவ்வாறு நடந்து கொண்டனர். இன்றைக்கும் நமது சமூகத்தில் ஆங்கிலத்தில் பேசி, ஐரோப்பிய கலாச்சாரத்தில் வாழும் ஒரு பிரிவு இருக்கிறதல்லவா? அது போலத் தான் இதுவும். நமது நாடுகளில் அவ்வாறானவர்கள் மெல்ல மெல்ல கிறிஸ்தவ மதத்தை தழுவியதைப் போலவே, அன்றைய யூதர்கள் பலர் கிரேக்க கடவுள்களை வழிபட்டும் வந்துள்ளனர்.
ஜெருசலேம் நகரில் யூதர்களின் பெரிய ஆலயம் அமைந்திருந்தது. அந்த ஆலயத்தின் தலைமை மதகுருவை கத்தோலிக்கர்களின் பாப்பரசரோடு ஒப்பிடலாம். அந்த அளவுக்கு யூதர்கள் ஆனவர் மீது செல்வாக்கு செலுத்தக் கூடிய ஒருவர். மேலும் ஒவ்வொரு யூதனும் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அந்த ஆலயத்திற்கு நிதி வழங்க வேண்டும். இந்தியாவின் திருப்பதி கோயில் போல, ஜெருசலேம் ஆலயமும் அன்று "பணக்கார ஆலயம்" என்று அழைக்கப்பட்டது. இது போன்ற காரணங்களால், கிரேக்க ஆதரவு யூதர்கள் ஜெருசலேம் ஆலயத்தின் தலமைப் பதவிக்காக போட்டியிட்டனர். ஒரு கட்டத்தில் கிரேக்க மன்னனுக்கு லஞ்சம் கொடுத்தேனும் அந்தப் பதவியைப் பெற முடிந்தது. இதனால் பழமைவாத யூதர்கள் அதிருப்தியுற்றனர். பழமைவாத யூதர்கள் கிளர்ச்சி செய்தனர். கிரேக்க மன்னன் Antiochus IV, பெரும்படை அனுப்பி அந்தக் கிளர்ச்சியை அடக்கினான்.
கிரேக்கமயப்பட்ட யூதர்களும் அதற்கு ஒத்துழைத்தனர். ஜெருசலேம் ஆலயம் சூறையாடப்பட்ட சம்பவத்தில் அவர்களும் ஈடுபட்டனர். யூதர்கள் எவ்வாறு யூதக் கோயிலை உடைத்தார்கள் என்று ஆச்சரியப்படலாம். பிரெஞ்சுப் புரட்சியில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உடைக்கப்படவில்லையா? லூதரின் புரட்டஸ்தாந்து எழுச்சியின் போது கத்தோலிக்க தேவாலயங்களை உடைக்கவில்லையா? அப்படியானவர்கள் தம்மை முற்போக்கானவர்கள் என்று கருதிக் கொள்கிறார்கள். கடும்போக்கு மதவாதிகளை பழமைவாதிகளாக கருதி வெறுக்கிறார்கள். (From the Maccabees to the Mishnah)
மொடைன் என்ற கிராமத்தில் நடந்த அசம்பாவிதம் யூதர்களின் புனிதப்போருக்கான தூண்டுதலாக அமைந்தது. கிரேக்க அதிகாரிகள் அந்த கிராமத்தின் யூத மதகுருவான மத்ததியாசை அழைத்து, கிரேக்க முதற்கடவுள் செயுசுக்கு பூஜை செய்ய உத்தரவிட்டனர். மத்ததியாஸ் மறுக்கவே, இன்னொரு யூதர் முன்வந்து பூஜையை நடத்தினார். யூத மதம் தவிர்ந்த பிற தெய்வங்களுக்கு பூஜை செய்த குற்றத்திற்காக, அவரை மத்ததியாஸ் அந்த இடத்திலேயே படுகொலை செய்தார். படுகொலைச் சம்பவத்தை தொடர்ந்து தனது மகன்மாருடன் பாலைவனத்திற்கு சென்று ஒளிந்து கொண்ட மத்ததியாஸ், (யூதர்களின்) புனிதப்போரை பிரகடனம் செய்தார். புனித நூலான தோரா வை பின்பற்றுவோர் அனைவரும் தான் பின்னால் அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்தார். வரலாற்றில் அது மக்காபீக்களின் எழுச்சி என அழைக்கப்படுகின்றது. கெரில்லாப் போராட்டம் மூலம் கிரேக்கர்களின் ஆதிக்கத்தில் இருந்து ஜெருசலேமை விடுவித்தனர்.(Maccabees, the revolt)
இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது. மக்காபீக்களின் ஆட்சி மன்னராட்சி அல்ல. அது ஒரு யூத தேசிய குடியரசும் அல்ல. மாறாக, ஆப்கானிஸ்தானில், ஈரானில் இருந்ததைப் போல மதத்தின் ஆட்சி. நாட்டின் தலைவர்களாக ஆட்சி செய்தவர்கள் அனைவரும் மதகுருக்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இஸ்ரேலியரிடம் இருந்து எதையாவது கற்றுக் கொண்டிருந்தால், அது மக்காபீக்களின் வரலாறாக இருந்திருக்கும். தாலிபான் தலைவர் முல்லா ஒமார் கூட மத்ததியாஸ் போல ஒரு கிராமிய மதகுரு என்பதும், மக்காபீக்கள் போல தாலிபான்களும் புனித நூலான குரானை பின்பற்றியவர்கள் என்பது ஆச்சரியமான ஒற்றுமைகள்.
இருபதாம் நூற்றாண்டில், மதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட இரு தேசிய அரசுகள் தோன்றின. ஒன்று, இஸ்ரேல். மற்றது, பாகிஸ்தான். இரண்டுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. மக்கள் பல மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தார்கள். அனைத்து பிரஜைகளும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரு புதிய மொழியை கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் உருது, இஸ்ரேலில் ஹீபுரு. இரண்டுமே வெளியில் இருந்து இறக்குமதியான மொழிகள் தாம். அனைவரையும் இணைக்கும் ஒரே மதம் மட்டும் இல்லையென்றால், பாகிஸ்தானும், இஸ்ரேலும் எப்போதோ துண்டு, துண்டாகி இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அத்தகைய மதத்-தேசிய அரசு, நவீன மத அடிப்படைவாதிகள் உருவாகும் விளைநிலமாக உள்ளது.
(தொடரும்)
தொடரின் முதலாவது பகுதி:
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?