Showing posts with label ஏதென்ஸ். Show all posts
Showing posts with label ஏதென்ஸ். Show all posts

Saturday, April 26, 2014

கிரேக்க மத்திய வங்கி குண்டுவெடிப்பு : கம்யூனிச இயக்கம் உரிமைகோரல்



ஏதென்ஸ் நகரில், கிரேக்க மத்திய வங்கிக்கு முன்னால் ஒரு கார் குண்டு வெடித்துள்ளது. ஏப்ரல் 10 அன்று நடந்த இந்த சம்பவம், அன்று எந்த ஊடகத்திலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படவில்லை. அதற்குக் காரணம், குண்டுவெடிப்புக்கு அடுத்த நாள், ஜெர்மன் அதிபர் அங்கெலா மார்கல் கிரீசுக்கு விஜயம் செய்திருந்தார்.

10 ஏப்ரல் 2014, அதிகாலை 5.55 மணிக்கு, 75kg நிறையுள்ள குண்டு வெடித்துள்ளது. குண்டு வைத்தவர்கள், முன்கூட்டியே 5.15 மணியளவில் அது பற்றி அறிவித்திருந்தனர். Efimerida ton Syntakton பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், "இன்னும் 40 நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என்றும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அப்புறப் படுத்த வேண்டுமென்றும்..." அனாமதேய குரல் ஒன்று எச்சரித்திருந்தது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பொலிசார், அந்தப் பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றி, வாகனப் போக்குவரத்தை தடை செய்தனர்.

உலகில் உள்ள, வலதுசாரி தீவிரவாத இயக்கங்களுக்கும், இடதுசாரி தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையிலான வேறுபாடு இது தான். வலதுசாரி தீவிரவாத அமைப்புகள், குண்டுவெடிக்கும் இடத்தில் பொது மக்களும் கொல்லப் படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. எந்தளவு அதிகமான மக்கள் பலியாகின்றனரோ, அந்தளவு வெற்றி கிடைத்து விட்டதாக நம்புவார்கள்.

அதற்கு மாறாக, இடதுசாரி அமைப்புகள், பொது மக்களின் உயிரிழப்புகளை முடிந்த அளவுக்கு தடுக்கப் பார்ப்பார்கள். பொது மக்கள் நடமாடாத நேரமாகப் பார்த்து தான், நேரக் கணிப்பு வெடிகுண்டு வைப்பார்கள். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், குண்டுவெடிக்கப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவிப்பார்கள். ஏற்கனவே, IRA (பிரிட்டன்), ETA(ஸ்பெயின்) போன்ற இடதுசாரி தேசியவாத இயக்கங்கள், இந்த நடைமுறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வந்துள்ளன.

அன்றைய குண்டுவெடிப்பில், மத்திய வங்கிக் கட்டிடம் மட்டும் சேதமடைந்தது. யாரும் கொல்லப் படவுமில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. "புரட்சிகர போராட்டம்" என்ற இடதுசாரி ஆயுதபாணி இயக்கம், குண்டுவெடிப்புக்கு உரிமை கோரியுள்ளது.

உரிமை கோரல் துண்டுப் பிரசுரத்தில் இருந்து: 
"IMF நிரந்தரப் பிரதிநிதி Wes McGrew, மத்திய வங்கி கட்டிடத்தில் தங்கியிருக்கிறார். கிரீஸ் சர்வதேச நாணய சந்தைக்கு திரும்புவதை எதிர்ப்பதற்காகவும், 10 மார்ச் 2010 ம் ஆண்டு, பொலிசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட எமது உறுப்பினர் Lambros Foundas நினைவாகவும், இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. எமது இலட்சியம் லிபெர்ட்டேரியன் கம்யூனிசம்." 
 - Lambros Fountas கமாண்டோ அணி, 
   புரட்சிகர போராட்டம் 

"புரட்சிகர போராட்டம்" (Revolutionary Struggle) என்ற ஆயுதமேந்திய இயக்கம், Nikos Maziotis மற்றும் Panayiota (Paula) Roupa ஆகியோரால் தலைமை தாங்கப் படுகின்றது. இருவரும் 2012 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சில மாதங்கள் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். நிபந்தனையுடனான பெயிலில் விடுதலையாகி, வீட்டில் இருக்க அனுமதித்த பொழுது தலைமறைவாகி விட்டனர். இது போன்றே, சிறைத் தண்டனை அனுபவித்து வந்த, நவம்பர் 17 இயக்க உறுப்பினர் ஒருவரும் தலைமறைவாகி இருந்தார். 

மத்திய வங்கி குண்டுவெடிப்பில், நவம்பர் 17 இயக்கமும் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று, பொலிஸ் சந்தேகிக்கின்றது. புரட்சிகர போராட்ட தலைவர்களை கைது செய்ய உதவுவோருக்கு, இரண்டு மில்லியன் யூரோக்கள் சன்மானமாக வழங்குவதாக, பொலிஸ் அறிவித்துள்ளது. புரட்சிகர போராட்டம், ஏற்கனவே பல குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. ஏதென்ஸ் தலைமை நீதிமன்றம், சிட்டி வங்கி தலைமையகம், பங்குச் சந்தை கட்டிடம் என்பன கடந்த காலங்களில் வெடி குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின.

 ********* 

கிரேக்க நாட்டில் இயங்கி வந்த, இடதுசாரி புரட்சி இயக்கமாகிய "நவம்பர் 17" மீண்டும் ஆயுதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த ஆயுதபாணி இயக்கத்தின் பெயரில் முன்பு நடந்த கொலைகள், குண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப் பட்ட Christodoulos Xiros (55 வயது) ஏதென்ஸ் சிறைச்சாலையில் 25 வருட தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம், ஒரு வார விடுப்பில் வீட்டுக்கு செல்ல அனுமதித்திருந்த நேரம், அவர் தப்பிச் சென்றுள்ளார். தற்போது தலைமறைவாக ஓரிடத்தில் இருந்து கொண்டு, ஒரு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்.

"கிரேக்க நாட்டினை நாசமாக்கும் கொள்ளைக்காரர்கள், பாசிஸ்டுகளுக்கு எதிரான ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப் படும்" என்று, Christodoulos Xiros அந்த வீடியோவில் கூறுகின்றார். பின்னணியில் சேகுவேரா, மற்றும் கிரேக்க விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்கள் காணப் படுகின்றன.

வீடியோ இணைப்பு: http://www.youtube.com/watch?v=yA-EVHfdhy0

நவம்பர் 17 இயக்கம் பற்றி, முன்னர் எழுதிய கட்டுரை:
தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை; 
http://kalaiy.blogspot.nl/2008/12/blog-post_13.html

*********


கிரேக்க புரட்சிகர ஆயுதப் போராட்டம் குறித்த முன்னைய பதிவுகள்: 

Wednesday, February 15, 2012

பொருளாதார நெருக்கடி, கிரேக்கத் தலைநகரம் எரிகின்றது!

12.02.2012, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் கிரேக்க அரசு, ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிந்த சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தினுள் "மக்கள் பிரதிநிதிகள்", மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த வேளை, ஏதென்ஸ் நகரில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக, தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் வேளை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்டது. புரட்சிகர அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, இலட்சக்கணக்கான மக்கள், ஏதென்ஸ் நகரில் திரண்டனர். அரபுலக வசந்தம் பற்றிய செய்திகளை நாள் தவறாமல் அறிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், கிரேக்க மக்கள் எழுச்சியை இருட்டடிப்பு செய்தன.

12 .02 .2012 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தேசிய வரித் திணைக்களம் ஆக்கிரமிக்கப் பட்டது. அங்கிருந்த தஸ்தாவேஜுகள் நாசமாக்கப் பட்டன. நாடு முழுவதும் பின்வரும் அரச நிறுவனங்கள் மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டன. Athens Law School, Ministry of Health in Athens, Building of the Regional government. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் வங்கிகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. ஒரு வங்கிக் கட்டிடம் முற்றாக எரிந்தது. போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால், சரமாரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. இதனால் ஏதென்ஸ் நகரம் எங்கும் தீச்சுவாலைகள் பரவின. நகரம் முழுவதும் தீப்பற்றி எரிவதைப் போன்றிருந்தது. அங்கு நடந்த சம்பவங்களை, கீழேயுள்ள வீடியோக்களில் பார்வையிடலாம்.









கிரேக்க மக்கள் எழுச்சி பற்றிய முன்னைய பதிவுகள்:
1. வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது
2.ஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது
3.கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

Thursday, June 16, 2011

ஏதென்ஸ் நகரில் "மக்கள் மன்றம்", கிரேக்க அரசு நெருக்கடியில்


ஜூன் 15 , அன்று கிரீசில் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் போது திரண்ட பெருந்திரள் மக்கள், கிரேக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். போலிஸின் வன்முறைத் தூண்டுதல்களுக்கு பயந்து கலைந்து செல்லாமல், முன்றலில் கூடியுள்ளனர். அங்கே தற்போது "மக்கள் பாராளுமன்றம்" அமைக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ பாராளுன்றத்தினுள் ஜனநாயகம் கிடையாது. அதற்கு பதிலாக,
தெருவில் கூட ஜனநாயகம் மலரலாம் என்பதை கிரேக்க மக்கள் நிரூபித்துள்ளனர்.
அலையெனத் திரண்ட மக்கள் எழுச்சியைக் கண்டு மிரண்ட அரசாங்கம், மந்திரி சபையை கலைத்துள்ளது. அனைத்து கட்சிகளும் பங்குபற்றும் புதிய அரசாங்கம் அமைக்கப் படும் என்று பிரதமர் Papandreou தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உத்தரவிட்ட பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தியதால், கிரேக்க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயினும், இந்த நிமிடம் வரையில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட மக்கள், போராட்டத்தை கைவிடவில்லை. அரசாங்கம் மட்டுமல்ல, வங்கிகளும், சர்வதேச நாணய நிதியமும் கிரீசை விட்டு அகல வேண்டும் என்று, தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தலைநகர் ஏதென்சில் மட்டுமல்லாது, பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகிய நகரங்களில் உள்ள மேயரின் அலுவலகம், நகராட்சி கட்டிடங்கள் போன்றன சில மணி நேரங்கள் என்றாலும் மக்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளன. கிரேக்க மக்கள் எழுச்சியின் போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளன.


Wednesday, December 29, 2010

ஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்

டிசம்பர் 15, ஏதென்ஸ் நகரை ஸ்தம்பிக்க வைத்த மாபெரும் வேலைநிறுத்தத்தின் போது, அரச ஒடுக்குமுறை இயந்திரமான போலிசை எதிர்த்து போராடும் தொழிலாளர்கள். பெருமளவு உல்லாசப்பயணிகளை கவரும் ஏதென்ஸ் நகரம் அன்று போர்க்களமாக காட்சி அளித்தது.

Thursday, December 16, 2010

ஏதென்ஸ், ரோம்: முதலாளித்துவ பாராளுமன்றங்கள் முற்றுகை

டிசம்பர் 15 , ஏதென்ஸ், ரோம், நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, கிரேக்க, இத்தாலி பாராளுமன்றங்கள் முற்றுகையிடப்பட்டன. ஏதென்ஸ் நகரில், நவ தாராளவாத கொள்கைகளை முன்மொழிந்த வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டார். ஊர்வலத்தைக் கலைக்க போலீசார் முயன்ற பொழுது, பொது மக்கள் திருப்பித் தாக்கினார்கள். இத்தாலியில் பெர்லுஸ்கோனி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு இடமேபெற்றது. அதிகப்படியான வாக்குகளால் பெர்லுஸ்கோனி தப்பிய போதிலும், ஆத்திரமுற்ற மக்கள்திரள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டது. போலீசார் வன்முறை பிரயோகித்து போராடிய மக்களை விரட்டினார்கள். ஏதென்ஸ், ரோம் ஆர்ப்பாட்டங்களில், மாணவர்கள், தொழிலாளர்கள், வேலையற்றோர் போன்ற பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் பெருமளவில் அணி திரண்டு போராடத் தொடங்கியுள்ளதை பி.பி.சி., சி.என்.என். போன்ற ஊடகங்களே ஏற்றுக் கொண்டுள்ளன. "நவ- தாராளவாத பொருளாதார சீர்திருத்தம் மக்கள் நலனுக்கானது", என்று இப்போதும் சில பொருளாதார அறிஞர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.


வீடியோ 1: ஏதென்ஸ் நகர கலவரம். (RT video)

வீடியோ 2: ஏதென்ஸ் நகர வீதிகளில் போலீசுடன் மோதும் செங்கொடி ஏந்திய மக்கள்.

வீடியோ 3: ஏதென்ஸ் பாராளுமன்ற முன்றலில் இரசாயன, கண்ணீர்ப் புகை குண்டுகளை பாவித்து கலவரத்தை அடக்கும் போலிஸ்.




வீடியோ 4: ரோம் நகர பாராளுமன்ற முன்றலில் மக்கள் எழுச்சியை அடக்கும் போலிஸ் படைகள்.


Saturday, May 15, 2010

ஏதென்ஸ் நகரில் பாரிய குண்டுவெடிப்பு!

(Thursday, May 13, 2010) ஏதென்ஸ் நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை (Korydalos - Central Prison of Athens) மதிலின் அருகில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. ஏதென்ஸ் மாநகரம் முழுவதும் குண்டுவெடிப்பின் சத்தம் கேட்டது. குண்டுவெடிப்பு பற்றிய அறிவுறுத்தல்கள் முன்கூட்டியே "Eleftherotypia” என்ற பத்திரிகைக்கும், "Alter TV" என்ற தொலைக்காட்சிக்கும் அனுப்பபட்டிருந்தன. இதனால் ஒரு பெண்மணி மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளானார். சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேத விபரம் தெரியவில்லை. அண்மையில் நடந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அந்த சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறைக் காவலர்கள் கைதிகளை சித்திரவதை செய்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இதற்கிடையே கிரீசின் வடக்கே உள்ள இரண்டாவது பெரிய நகரமான தெஸ்சலோனிக்கியில் உள்ள நீதிமன்றத்தின் அருகிலும் குண்டொன்று வெடித்துள்ளது. (Friday, May 14, 2010) குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து வெகுஜன ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. கிரீஸ் அபாயகரமான நாடாக காட்டப்பட்டால், உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்து விடும் என்பதால் அரசும் எந்த அறிக்கையையும் விடுக்கவில்லை.
Bombenexplosion vor griechischem Gefängnis (in German)

மேலதிக விபரங்கள் தொடரும் ....

வீடியோ 1 : ஏதென்ஸ் சிறைச்சாலை குண்டுவெடிப்பு

வீடியோ 2 : தெஸ்சலோனிக்கி நீதிமன்ற குண்டுவெடிப்பு

Monday, December 07, 2009

ஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது


6 December 2009, கடந்த வருடம் கிறீஸ் பொலிஸ், தெருவில் நின்ற இடதுசாரி அமைப்பின் ஆதரவாளரான சிறுவனை சுட்டுக் கொன்றனர். அந்தக் கொலை பாதுகாப்புப் படையினருக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. கிரேக்க மக்கள் எழுச்சியின் ஓராண்டு நினைவுதினமான இன்று மீண்டும் கலவரம் மூண்டது. பத்தாயிரத்துக்குமதிகமானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், கலகத் தடுப்பு பொலிசாருக்கு எதிரான கல்வீச்சு என்பனவற்றால் ஏதென்ஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்தது. ஏதென்ஸ் தொழில்நுட்ப கல்லூரியை புரட்சிகர மாணவர்கள் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கின்றனர். கல்லூரியை சுற்றி பொலிஸ் முற்றுகையிட்டுள்ளது. இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மிகுதியை இங்கே இணைக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் பார்த்து தெரிந்து கொள்ளவும்.





Monday, November 02, 2009

ஏதென்ஸ் பொலிஸ்நிலைய தாக்குதல், கம்யூனிச புரட்சிப்படை உரிமை கோரல்

கிரீஸ் நாட்டு தலைநகர் ஏதென்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்று இனந்தெரியாத ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு ஆயுதபாணி இளைஞர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளால் ஐம்பதுக்கும் மேலான வேட்டுகளை தீர்த்து விட்டு தப்பியோடியுள்ளனர். (இத்தனைக்கும் அன்று கடமையில் இருந்த பொலிஸார் திருப்பி சுட்டதாக தகவல் இல்லை) அக்டோபர் 27 ம் திகதி, இரவு 9:40 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 போலீசார் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிரீஸ் நாட்டில் புதிதாக பதிவியேற்ற சோஷலிசக் கட்சியின் அரசாங்கம், அந்நாட்டில் வளர்ந்து வரும் "இடதுசாரி பயங்கரவாதத்தை" அழிக்க போவதாக சூளுரைத்த மறு தினம் இது நடந்துள்ளது.
Six officers wounded in Greek police station attack
கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரச எதிர்ப்பு கலவரங்கள் ஏதென்ஸ் நகரை ஸ்தம்பிக்க வைத்தன. சில நாட்களின் பின்னர் நகரம் வழமைக்கு திரும்பிய போதிலும், அவ்வப்போது அரசுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஏதென்ஸ் பங்குச் சந்தை, ஒரு சர்வதேச வங்கி தலைமையலுவலகம், ஒரு முதலாளித்துவ பத்திரிகை அலுவலகம் என்பன வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டன.

ஏதென்ஸ் பொலிஸ் நிலைய தாக்குதலுக்கு, முன்னெப்போதும் அறியப்படாத இயக்கம் ஒன்று உரிமை கோரியுள்ளது. கிரேக்க பெயரின் முன் எழுத்துகளால் "OPLA " (பாட்டாளி மக்கள் சுய பாதுகாப்புக் குழு) என்ற இயக்கம், உரிமை கோரும் பிரசுரங்களை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. OPLA என்ற பெயர் ஐம்பதுகளில் ஆயுதமேந்தி போராடிய கிரேக்க கம்யூனிச போராளிக் குழுவினை நினைவு படுத்துகின்றது. துண்டுப் பிரசுரத்தின் ஆரம்ப வாக்கியம் அன்றைய கம்யூனிச தலைவர் நிகோஸ் சகாரியாசின் கூற்றை மேற்கோள் காட்டுகின்றது. மேலும் (மார்க்ஸ், எங்கெல்சின்) "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை" வாசகம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. நிதி நெருக்கடியின் விளைவாக வளர்ந்து வரும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பாட்டாளி மக்களின் சுய-பாதுகாப்புக் குழு அமைக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. பணக்கார வர்க்க இராணுவத்தின் ஆயுத பயங்கரவாதத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்க பாதுகாப்பை வலுப்படுத்துவோம். இவ்வாறு அந்த துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

உரிமை கோரிய துண்டு பிரசுரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை கீழே தருகிறேன்.


The extreme conditions shaping up as result of the capitalist crisis, the intensification of statist and para-statal terrorism, urgently call for the setting up of structure of mass popular self-defense to deal with them.

Faced with the regime of terror that state forces of repression and fascist gangs jointly attempt to install in the spaces where the proletariat and the youth lives, works and struggles; a regime of terror that would comprise an ideal environment for the smooth operation of the passing on of the losses caused by the capitalist crisis from capital to the working people, the popular revolutionary movement must immediately take all incentives required, all the organisational and technical measures that will allow the proletariat to fight back terrorism and cancel its exploiters’ plans.

In this direction, an attack against the Office of Army-Police (translator’s note: they use a term for the state force that was used during the civil war) of North Eastern Attica was organised by a group of proletarian fighters.

Against the armed terrorism of the army of plutocracy we shall counter-position our own dynamic self-defense. Opportunist swinging, retreats and further tolerance lead to the exhaustion, weakening and eventual extermination of the proletariat and the revolutionary movement.

A call to arms, in the struggle for the dictatorship of the proletariat and communism.

Long live OPLA, long live October 28, 1946!

Tuesday, December 09, 2008

வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது


ஐரோப்பாவின் அழகிய நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், நான்காவது நாளாக எரிகின்றது. வங்கிகள் யாவும் (வெளிப்புறமாக) அடித்து நொறுக்கப்பட்டு விட்டன. நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மக்களை அடிமைகளாக்கிய, ஆடம்பர வர்த்தக நிலையங்கள் சாம்பலாக கிடக்கின்றன. துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகள் சில, இனந்தெரியாதவர்களால் சூறையாடப்பட்டுள்ளன. வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் கைகளில் துப்பாக்கிகள் காணப்படுவதாக பொலிஸ் அறிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் நாடளாவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுகின்றன. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, ஆசிரியர்களும் ஊர்வலமாக போகின்றனர். பல நகரங்களில் பொலிஸ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்படுள்ளன. நான்காவது நாளாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை சுற்றிவளைத்துள்ளனர். மக்களிடம் இருந்து அதிகாரவர்க்கத்தை பாதுகாக்கும் பணியில், பொலிஸ் படை அதிக அக்கறை காட்டுகின்றது.

தெருக்களில் போலீசுடன் மோதுபவர்களின் வயது குறைந்து கொண்டே போகின்றது. ஆர்ப்பாட்டக்காரரில் அதிகளவில் பதின்ம வயதினர் காணப்படுவதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அரசியல்மயப்படுத்தப்படாத விடலைப்பருவ சிறுவர்கள், கண்ணில் காணும் கடைகளையும், மோட்டார் வண்டிகளையும் கொளுத்துவதே போராட்டம் என்று பிழையாக புரிந்து கொள்கின்றனர். அப்படியான சம்பவங்களை ஊக்குவிப்பது போல, பொலிஸ் வேடிக்கை பார்க்கின்றது.

அரசாங்கமும் அதைக்காட்டி மக்களையும், போராட்டக்காரரையும் பிரித்து வைக்க முயற்சிக்கிறது. என்ன அதிசயம்! முதலாளித்துவத்தின் சின்னங்களான, வங்கிகளும், பெரிய வணிக நிலையங்களும் எரிக்கப்படுவதை, ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை, ஒரு சில இடதுசாரி வன்முறையாளரின் கலகமாக சித்தரித்த பி.பி.சி. செய்தியாளர், நான்கு நாட்களுக்குப் பிறகு தான், கிறீசில் வர்க்கப்போராட்டம் நடப்பதாக திருவாய் மலர்ந்திருக்கிறார்.

பொலிஸ் வன்முறைக்கு பலியான ஒரு சிறுவனின் கொலை, தேசம் முழுவதையும் கிளர்ந்து எழ வைக்கும், என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது தான். ஆனால் கிறீசில் பகை முரண்பாடுகளை கொண்ட இரண்டு வர்க்கங்கள் இருப்பது, இப்போது தான் மேற்கத்திய ஊடகவியலாளருக்கு தெரிய வந்திருக்கிறது! ஐரோப்பிய மக்கள், "வர்க்க பேதங்களை மறந்து, சகோதர பாசத்துடன் வாழ்கிறார்கள்", என்ற பரப்புரை இவ்வளவு விரைவில் அம்பலப்படும், என்று அந்த ஊடகவியலாளரைப் போலவே பலர் கனவிலும் நினைக்கவில்லை. உலகப் பொருளாதார நெருக்கடி கிறீசையும் கடுமையாக பாதித்துள்ளது. வேலையற்றோர் பிரச்சினை, ஏழைகளின் தொகை அதிகரித்தல், கல்வி கற்பது பெரும் பணச்செலவாகி விட்டதால் ஏற்பட்ட மாணவரின் அதிருப்தி, போன்ற பல பிரச்சினைகள், கிறீசில் இருக்கின்றன என்ற உண்மை, பி.பி.சி. போன்ற ஊடகங்களுக்கு இப்போது தான் தெரிகின்றதாம்.

பெரும்பான்மை கிரேக்க மக்கள்,அரசாங்கத்தின் நவீனமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்த கொள்கைகளால் வெறுப்படைந்து வருகின்றனர்.
அந்த அதிருப்தியின் வெளிப்பாடே, ஆர்ப்பாட்டக்காரருக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவும், அதனால் ஒதுங்கி நிற்கும் பொலிஸ் நடவடிக்கையும் அமைந்துள்ளது. பொது மக்களுக்கு சேவை செய்த அரசு நிறுவனங்களை, தனியார்மயமாக்கியதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பொறுத்துப் பார்த்த மக்கள் தான் பொங்கி எழுகிறார்கள். ஜனநாயகம், அமைதிவழி போராட்டம், என்று கூறி இன்றைய மக்கள் எழுச்சி அடக்கப்படுமா? அல்லது போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்கள் புரட்சிகர மாற்றங்களை கொண்டுவருவார்களா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.




முன்னைய பதிவுகள்:
கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது
தனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்


Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Sunday, December 07, 2008

கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது


Greece, நேற்றிரவு (6 டிசம்பர்), ஏதென்ஸ் நகரில், இடதுசாரிகளின் கோட்டை என கருதப்படும் எக்சர்கியா பகுதியில் ஒரு 16 வயது சிறுவன் பொலிஸாரால் சுடப்பட்டு மரணமடைந்ததை தொடர்ந்து, கிறீஸ் முழுவதும் கலவரம் வெடித்தது. தெற்கே ஏதென்ஸ் நகரம் முதல் வடக்கே தெஸ்ஸலொநிகி வரை காட்டுத்தீ போல பரவிய இந்த கலவரத்தில் பல போலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன, வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டன. ஏதென்ஸ் நகரில் மட்டும் 16 வங்கிகள், 20 கடைகள், டசின் கணக்கான கார்கள் தீக்கிரையாக்கப்படன. "அவர்கள் தமது எதிர்ப்பை காட்ட உரிமை உண்டு, ஆனால் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது." எனக் கூறிய உள்துறை அமைச்சர், இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரியவருகின்றது. தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தொடர்பான இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிறீஸ் கலவரத்தின் பின்னணி என்ன? சம்பவம் நடந்த இடத்தில் வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது பெட்ரோல் குண்டை வீசியதாலேயே, அந்த 16 வயது சிறுவன் சுடப்பட்டான், என்பது அரசதரப்பு வாதம். ஆனால் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த பிற இளைஞர்கள் வேறுவிதமாக கூறுகின்றனர். (அனார்க்கிச, கம்யூனிச) இடதுசாரிகளின் செல்வாக்கு மிக்க அந்த பகுதியில், அடிக்கடி காவல்துறையினர் அடாவடித்தனம் புரிந்துவருவது வழக்கம். அன்றைய தினம், சில இளைஞர்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், நிலைமை மோசமடைந்து, எங்கோ இருந்து வந்த கல் ஒன்று பொலிஸ் காரை பதம் பார்த்த வேளை, ஒரு பொலிஸ்காரர் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவி, ஒரு இளைஞனின் நெஞ்சுப் பகுதியை நோக்கி சுட்டதாகவும், அந்த இடத்திலேயே சூடு வாங்கிய இளைஞன் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து வீதியில் கூடிய வாலிபர்களையும், பொதுமக்களையும் நூற்றுக்கணக்கான கலவரத்தடுப்பு போலீசார் சுற்றிவளைத்தனர். இருப்பினும் ஏதென்ஸ் நகரம் பற்றி எரிவதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. இளைஞர்கள் பல இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸ் படையை எதிர்த்து சண்டை போட்டனர்.

அடுத்த நாள் பல வெகுஜன ஊடகங்கள் கலவர செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போதும், கடந்த பல நாட்களாகவே கிறீஸ் நாடாளாவிய, அதேநேரம் ஒழுங்குபடுத்தப்பட்ட மாணவர் எழுச்சிக்கு முகம் கொடுத்து வருவதை செய்தியாக கூட தெரிவிக்கவில்லை. கிரேக்க அரசு கொண்டு வந்த கல்வி சீர்திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த இரு நாட்களாகவே, மருத்துவ பீட மாணவர்களும், மருத்துவ தாதிகளும் சுகாதார அமைச்சை ஆக்கிரமித்து, தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, பதில் சுகாதார அமைச்சரை பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். (பார்க்க:Medical students held Deputy Health Minister hostage) புதிய கல்வி சட்டத்தை எதிர்த்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசார் ஒரு மாணவனை கைது செய்ததாகவும் தெரியவருகின்றது. அப்போதும் இதை எதிர்த்த மாணவர்கள் போலீசுடன் சண்டையிட்டுள்ளனர். ஆனால் ஊடகங்களுக்கு இதெல்லாம் செய்திகளல்ல. வர்த்தக நிலையங்களை, வாகனங்களை கொளுத்தினால் மட்டுமே கவனமெடுத்து செய்தி வெளியிடுவார்கள். (இதுவன்றோ பத்திரிகாதர்மம்! )

சில நாட்களுக்கு முன்னர் தான், குறைந்த கூலி கொடுத்து சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளரும், எந்த உரிமைகளுமற்ற அகதிகளும் ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிகாரிகள் குறைந்தளவு தஞ்ச விண்ணப்பங்களை மட்டுமே எடுப்பதாலும், பொலிஸ் நெருக்குதலில் ஒரு அகதி படுகாயமுற்றதாலும், ஆத்திரமடைந்த கும்பல் கலவரத்தில் இறங்கியதாக தெரியவருகின்றது. கிறீசிற்கு வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் வருகை தருகின்ற போதும், மிக மிக குறைந்தளவு விண்ணப்பங்களே ஏற்றுக் கொல்லப்படுவதாக மனித உரிமை ஸ்தாபனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு:
- Greece: 16year old murdered by police, heavy riots
- Medical students held Deputy Health Minister hostage
- Asylum seekers riot in Athens

Video: Greece Riots



கிறீஸ் தொடர்பான முன்னைய பதிவு:
தனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.