Showing posts with label இனவழிப்புப் போர்க்குற்றவாளிகள். Show all posts
Showing posts with label இனவழிப்புப் போர்க்குற்றவாளிகள். Show all posts

Monday, October 26, 2009

அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் படும் பாடு

அமெரிக்காவில், சான்பிரான்சிஸ்கோவில் இஸ்ரேலிய பிரதமர் ஒல்மேர்ட் உரையாற்றிய பொதுக்கூட்டம் ஒன்றில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. காசாவில் இனவழிப்புப் போரை நடத்திய போர்க்குற்றவாளி ஒல்மேர்ட்டிற்கு பேச்சுச் சுதந்திரம் அளித்தமைக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். கூட்டத்தில் ஒல்மேர்ட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த பலர் பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். அன்று மொத்தம் 22 எதிர்க்கருத்தாளர்கள் கைது செய்யப்பட்டனர். இனவழிப்பு குற்றவாளி ஒல்மேர்ட் மாத்திரம் இன்று வரை கைது செய்யப்படவில்லை. அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் மதிக்கப்படுவதாகவும், அமெரிக்க ஜனநாயகம் போர்க்குற்றவாளிகளை அனுமதிப்பதில்லை என்றும் பெருமிதம் கொள்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.