Saturday, June 13, 2020

அமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரசு!

அமெரிக்காவில் சியாட்டில்(Seattle) நகரில் Capital Hill வட்டாரத்தில் ஒரு பகுதியில் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கடைசியாகக் கிடைத்த தகவலின் படி, குறைந்தது 6 அடுக்கு மாடி குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து பாரிஸ் கம்யூன் பாணியிலான விடுதலைப் பிரதேசம் அமைத்துள்ளனர். அங்குள்ள பொலிஸ் நிலையம் "மக்கள் நிலையம்" எனப் பெயர் மாற்றப் பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் கம்யூன் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளன. அனைவருக்கும் இலவச உணவு வழங்கப் படுகிறது. 


நிறவெறிக்கும், பொலிஸ் வன்செயலுக்கும் எதிரான போராட்டத்தை Antifa அமைப்பினர் ஒரு கம்யூனிசப் புரட்சியை நோக்கி நகர்த்த தொடங்கி உள்ளனர். கம்யூன் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலைப் பிரதேசத்தை சுற்றிவர தடையரண்கள் போடப் பட்டுள்ளன. தெருக்களில் இருந்த கமெராக்கள் அகற்றப் பட்டுள்ளன. ஆயுதமேந்திய மக்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். 

 சியாட்டில் நகரில் காப்பிட்டல்ஹில் பகுதியில் ஒரு "கம்யூனிச தனி நாடு" உருவாகி விட்டதாக அமெரிக்க வலதுசாரி ஊடகங்கள் அலறுகின்றன. ஜனாதிபதி டிரம்ப் இராணுவத்தை அனுப்பி நசுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜூன் 9 முதல் அமெரிக்காவில் இருந்து விடுதலை பெற்ற பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது? அதைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தீவிர இடதுசாரி ஆன்டிஃபா இயக்கத்தின் பின்னணி என்ன? 

பொலிஸ் இல்லாத சமுதாயம் சாத்தியமே என்பதை சியாட்டில் நகரில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கம்யூனிச புரட்சியாளர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். "காவல்துறைக்கு நிதி வழங்காதே!" என்பது அமெரிக்க மக்கள் எழுச்சியின் கோஷமாக மாறியுள்ளது.

Seattle protesters take over city blocks to create police-free 'autonomous zone' 

மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள எனது இரண்டு வீடியோக்களையும் பார்க்கவும்:
பகுதி : ஒன்று


 பகுதி: இரண்டு

No comments: