Wednesday, April 29, 2020

பெல்ஜியம், பிரான்ஸில் நடந்த Lockdown கலவரங்கள்

பெல்ஜியத்தில் நடந்த லோக்டவுன் கலவரம் 

11 ஏப்ரல் 2020
பெல்ஜியத் தலைநகர் புருசல்சில் சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் Anderlecht பகுதியில் கலவரம் வெடித்தது. இளைஞர்கள் ஒன்று திரண்டு பொலிஸ் நிலையத்தை தாக்கினார்கள். பொலிஸ் கண்ணீர்ப்புகை குண்டு வீசியதும் நிலைமை மோசமடைந்தது. பொலிஸ் கார்கள் கற்களால் தாக்கி சேதமாக்கப் பட்டன. சில இடங்களில் தீவைக்கப் பட்டது.

அங்கு நடந்த கலவரத்திற்கு காரணம், முதல்நாள் நடந்த கொலை. பொலிஸ்காரர்கள் ஒரு 19 வயது இளைஞனை கைது செய்வதற்காக விரட்டி உள்ளனர். வெருண்டு ஓடிக்கொண்டிருந்த இளைஞனை எதிரில் வந்த பொலிஸ் கார் மோதியதால் அந்த ஸ்தலத்திலேயே மரணம் சம்பவித்துள்ளது. அந்த மரணத்திற்கு பழிவாங்கக் கிளம்பிய இளைஞர்கள் கும்பல் தான் பொலிஸ் நிலையத்தை தாக்கியது.

பொதுவாகவே புருசெல்ஸ் நகரில் Anderlecht பகுதி எப்போதும் பதற்றமாக இருக்கும். அங்கு பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மையின மக்கள் பெல்ஜிய பேரினவாத அரசு தம்மீது ஒடுக்குமுறை பிரயோகிப்பதாக குறைப்படுவதுண்டு. அந்த உணர்வுகள் ஒரு கட்டத்தில் கொதிநிலைக்கு வந்ததும் வன்முறைகள் வெடிப்பதுண்டு.

******

பிரான்சில் lockdown கலவரம்

20 April 2020
பாரிஸ் புறநகர்ப் பகுதியான Villeneuve-la-Garenne எனும் இடத்தில் இன்று அதிகாலை வரை கலவரம் நடந்துள்ளது. நேற்றிரவு அங்கு வாழும் அரபு சிறுபான்மையின இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. பொலிஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலவரத்தை அடக்கப் பார்த்தது. அங்கு சில வாகனங்களும் எரிக்கப் பட்டுள்ளன. பிரான்சின் பல பகுதிகளிலும் lockdown காலத்தில் பல இனவாத அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதன் விளைவாகவே நேற்று இந்தக் கலவரம் நடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நேற்றிவு நடந்த கலவரத்திற்கு காரணம் ஒரு விபத்து. அந்தப் பகுதியில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை பொலிஸ் கார் மோதியதில் கடுமையாக காயமடைந்துள்ளான். அவனது நண்பர்கள் இதனை காவல்துறையின் இனவெறித் தாக்குதல் எனக் கண்டித்துள்ளனர். Villeneuve-la-Garenne பிரதேச மேயர், முன்பு National Front என அழைக்கப்பட்ட இனவாதக் கட்சியின் உறுப்பினராக இருப்பதாலும், அந்தப் பகுதியில் இனங்களுக்கு இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.

*****


26 April 2020
பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள லிமொஜ் (Limoges) நகருக்கு அருகில் உள்ள போபிறேய் (Beaubreuil) எனும் இடத்தில் கடந்த சில நாட்களாக கலவரம் நடக்கிறது. போலிஸை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. கண்காணிப்பு கமெராக்கள் அடித்து நொறுக்கப் பட்டன. நகர சபை கட்டிடமும் எரிக்கப் பட்டது.

புதன்கிழமை லொக்டவுன் நேரத்தில் விபத்து ஒன்று தான் கலவரத்திற்கு காரணம் என தெரிய வருகின்றது. ஆப்பிரிக்க அல்லது அரேபிய சிறுபான்மையினத்தை சேர்ந்த இளைஞர் ஸ்கூட்டரில் சென்ற நேரம் ஏதோ ஒரு காரணத்திற்காக பொலிஸ் விரட்டியதால் விபத்து நடந்துள்ளது.

******

"உலகம் எரிகிறது. வங்கிகள் எப்போது எரியப் போகின்றன?" - சுவிட்சர்லாந்தில் ஒரு ரயிலில் வரையப்பட்ட வாசகம்.

***** 

No comments: