Wednesday, September 29, 2010

முதலாளித்துவத்தின் சொல்லப்படாத இரகசியங்கள்


Ha-Joon Chang ஒரு முதலாளித்துவ பொருளியல் அறிஞர். முதலாளித்துவத்தை சரியான பாதையில் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையோடு "23 things they don’t tell you about capitalism" என்ற நூலை எழுதியுள்ளார்.

2008 ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி, தாராள பொருளாதாரம் என்ற சாத்தியப் படாத ஒன்றின் மீதான நம்பிக்கையின் சரிவு என்கிறார். சுதந்திரமான திறந்த சந்தை ஒரு நாளும் சாத்தியமில்லை என்று வாதிடுகின்றார்.

  • யதார்த்தத்தில் திறந்த சந்தை என்பது ஒரு கனவு மட்டுமே.
  • சந்தை எவ்வளவு சுதந்திரமானது என்பது அரசியல் தலைமையின் முடிவில் தங்கியுள்ளது.
  • சந்தையை ஒழுங்குபடுத்துவது எமது அறம் சார்ந்தது. சந்தை எமது நெறிகளை மீறுவதை ஏற்றுக் கொள்வதில்லை.
  • குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை இன்று ஏற்றுக்கொள்வதில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர், சிறுவர்கள் செய்யும் வேலையை 12 மணி நேரம் ஆக குறைத்ததையே திறந்த சந்தைக்கு ஆபத்தாக கருதினார்கள்.
  • ஏன் போதைவஸ்து, உடலுறுப்புகள், வாக்குச் சீட்டுகள் என்பனவற்றை விற்கக் கூடாது? அவற்றிற்கான திறந்த சந்தை சாத்தியமில்லையா? ஏன்?
  • அரசாங்கம் வங்கிகளை காப்பாற்றினால் திறந்த பொருளாதார சித்தாந்தவாதிகள் மகிழ்ச்சியடைய முடியுமா?
  • முரண்நகையாக முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதும் கட்டுப்பாடுகளை வரையறை செய்வதிலேயே செலவிட்டுள்ளனர்.

நூலாசிரியர் எடுத்துரைக்கும்,
கவனிக்கப்பட வேண்டிய பொருளாதாரக் குறைபாடுகள் பின்வருமாறு:

  • நிறையப் பேருக்கு அவர்களது தகுதிக்கு மீறி நிறைய ஊதியம் கொடுக்கப்படுகின்றது.
  • ஏழை நாடுகளில் மக்கள் வறுமையில் வாழ்வதற்கு அவர்கள் பொறுப்பல்ல. பணக்காரர்களே பொறுப்பேற்க வேண்டும்.
  • இன்டர்நெட் உலகை மாற்றியதை விட சலவை இயந்திரம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
  • பல்கலைக்கழக பட்டங்கள் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவில்லை.

நூலை வாசிப்பதற்கு:’23 things they don’t tell you about capitalism’

2 comments:

Anonymous said...

உண்மைதான்! 'கம்யூனிசத்தின் சொல்லப்படாத இரகசியங்கள்' பற்றியும் எழுதலாமே?

rami said...

கலைஅரசன் அவர்களே சிலை இருந்து என்ன புண்ணியம் அதை முதலில் சொல்லுங்கள்