Wednesday, April 01, 2015

இஸ்தான்புல் நகரை அதிர வைத்த கம்யூனிச கெரில்லாக்களின் நீதிமன்ற பணய நாடகம்

31 March 2015
துருக்கி, இஸ்தான்புல் நகர நீதிமன்றத்திற்குள் நுளைந்த ஆயுதபாணி நபர்கள், அரச தரப்பு வழக்கறிஞர் Mehmet Selim Kiraz பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு, குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

Revolutionary People's Liberation Party Front (DHKP-C) என்ற கம்யூனிச கெரில்லா இயக்க உறுப்பினர்களே இந்தச் சம்பவத்தில் சம்பந்தப் பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடக்குவதற்காக பொலிஸ் வன்முறை பிரயோகித்த நேரம், Berkin Elvan என்ற 13 வயது சிறுவன், கண்ணீர்ப் புகைக் குண்டு பட்டு காயமடைந்ததால் கொல்லப் பட்டான்.

தற்போது பணயக்கைதியாக பிடித்து வைக்கப் பட்டுள்ள வழக்கறிஞர் அந்த வழக்கில் அரசுக்கு சார்பாக ஆஜராகியுள்ளார். சிறுவனின் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யா விட்டால், பணயக்கைதியை கொன்று விடப் போவதாக, ஆயுதபாணிகள் எச்சரித்துள்ளனர். காவல்துறையை சேர்ந்த நான்கு குற்றவாளிகளின் விபரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவர்களை மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


அரச தரப்பு வழக்கறிஞர், கம்யூனிச கெரில்லாக்களினால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப் பட்டிருக்கும் தகவலை கேள்விப் பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் மறியல் செய்த சமூக ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் இஸ்தான்புல் நகரின் Okmeydani பகுதியில், பெருமளவு இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Okmeydani பகுதியில், கம்யூனிச கெரில்லாக்கள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். சில மணிநேரமாக அந்தப் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பொலிஸ் வர விடாமல், தெருக்களை வழிமறித்து தடையரண்கள் போடப் பட்டிருந்தன.

பணயக் கைதியை விடுவிப்பதற்கு, பொலிஸ் ஆறு மணிநேரமாக பேரம் பேசியதாகவும், இறுதியில் பெரும் பொலிஸ் பட்டாளம் ஒன்று நீதிமன்ற கட்டிடத்தினுள் நுளைந்து ஆயுதபாணிகளை கொன்று விட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பணயக்கைதியான அரச தரப்பு வழக்கறிஞர் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காரணமாக இறந்தார். நீதிமன்ற தாக்குதலை சம்பவம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த, DHKP-C ஆதரவு டிவிட்டர் கணக்குகள் தடை செய்யப் பட்டுள்ளன. 

துருக்கி பத்திரிகை ஒன்று, DHKP-C கம்யூனிச போராளிகளுடன் மேற்படி சம்பவம் பற்றி பேட்டி கண்டு எழுதியுள்ளது:
Interview with the militants: “Our barrels will bring justice”


இது  தொடர்பான முன்னைய பதிவுகள்:
துருக்கியில் கம்யூனிசப் போராளிகள், இனிமேல் ஆயுதங்கள் பேசும்
"துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி

No comments: