Tuesday, May 10, 2011

எத்தியோப்பியா: ஆதி கிறிஸ்தவர்களின் அரசாட்சி

"ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர் கால் பதிக்கும் வரையில், அங்கு வாழ்ந்த மக்கள் நாகரீகமடையாத காட்டுமிராண்டிகள். ஆப்பிரிக்கர்களுக்கு வரலாறு கிடையாது. ஆப்பிரிக்காவில் எங்கேயுமே வளர்ச்சியடைந்த ராஜ்யங்கள் இருந்ததில்லை." இவ்வாறான பொய்களை வெள்ளையின நிறவெறியர்கள் திட்டமிட்டு பரப்பி வந்துள்ளனர். மூவாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எத்தியோப்பிய மன்னராட்சியை இந்த ஆவணப் படம் ஆராய்கின்றது. ஐரோப்பியர்களுக்கு முன்னரே, எத்தியோப்பியர்கள் யூத, கிறிஸ்தவ மதங்களை பின்பற்றியுள்ளனர். எத்தியோப்பிய மன்னர் பரம்பரையினர், விவிலிய நூலில் வரும் சாலமன்-ஷீபாவுக்கு பிறந்த வாரிசின் வழித்தோன்றல்கள் என்று நம்பப் படுகின்றது. பழைய ஏற்பாட்டின் கையெழுத்துப் பிரதியொன்று, எத்தியோப்பியாவில் இன்றளவும் பேணிப் பாதுகாக்கப் படுகின்றது. முதன் முதலாக எத்தியோப்பியாவை "கண்டு பிடித்த" போர்த்துக்கேயர்கள் ஐரோப்பிய பாணி கத்தோலிக்க மதத்தை திணிக்க விரும்பினார்கள். அந்நிய மத மேலாண்மைக்கு எதிரான போராட்டம், எத்தியோப்பியாவின் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைத்தது.











2 comments:

techsatish said...

நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com