Friday, December 28, 2012

21.12.12, சமதர்ம உலகின் தொடக்கம்! மெக்சிகோவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

"மாயன்களின் உலக அழிவு தினமான" 21 டிசம்பர் 2012 அன்று, மெக்சிகோ, சியாப்பாஸ் மாநிலத்தில் உள்ள ஐந்து நகரங்களில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 டிசம்பர், மாயன்களின் கலண்டரில், பக்தூன் எனப்படும், 5.125 வருடங்களைக் கொண்ட ஒரு யுகத்தின் முடிவாகும். அன்றைய தினம் புது யுகம் ஒன்று ஆரம்பமாகின்றது. தற்பொழுது மலர்ந்துள்ள புது யுகத்தில், உலகம் முழுவதும் சமதர்ம சமுதாயம் உருவாகும் என்பதை குறிக்கும் முகமாக அந்த மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒழுங்கு படுத்தப் பட்டது. "21.12.12 அன்று, உலகம் அழிந்து விடும்" என்று பிதற்றிக் கொண்டிருந்த பைத்தியங்களைப் பற்றி எல்லாம் முதன்மையான செய்திகளாக தெரிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், மெக்சிகோவில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்தன.

சியாப்பாஸ் மாநிலத்தில் வாழும் பூர்வகுடி செவ்விந்தியர்கள், "சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை" (EZLN) என்ற மார்க்சிய-லெனினிச அமைப்பின் அழைப்பை ஏற்று பெருமளவில் கலந்து கொண்டனர். சுமார் நாற்பதாயிரம் பேர், இந்த அமைதியான எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றினார்கள். எல்லோரும் தமது முகத்தை மூடும், கருப்புநிற குல்லாய் அணிந்திருந்தனர். அந்தக் குல்லாயில் பொறிக்கப்பட்ட இலக்கமானது, அவர்கள் எந்த விடுதலை செய்யப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என்பதைக் குறித்தது. சியாப்பாஸ் மாநிலத்தில் பல பகுதிகள், இன்றைக்கும் EZLN கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன.

21.12.12  மெக்சிகோவில் நடந்துள்ள ஆர்ப்பாட்டமானது,  பூர்வீக மக்களின் உரிமைப் போராட்டத்தை மட்டும் எதிரொலிக்கவில்லை. மார்க்சிய- லெனினிசம் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஒரேயொரு சித்தாந்தம் என்பதையும் உறுதிப்படுத்தியது. உலகம் முழுவதும் கம்யூனிச நாடுகள் வீழ்ந்து கொண்டிருந்த தொன்னூறுகளில், மெக்சிகோவில் ஒரு மார்க்சிய-லெனினிச இயக்கம் தோன்றியது என்று சொன்னால் பலருக்கு நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அந்த இயக்கம், கடந்த இரு தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், நம்புவதற்கு இன்னும் கஷ்டமாக இருக்கும். சில நேரம், கற்பனையை விட உண்மை அதிசயமாக இருக்கும். 

மேலதிக விபரங்களுக்கு, இந்த இணையத் தளத்தை பார்க்கவும்:
EL GRITO SILENCIOSO DE 40 MIL ZAPATISTAS 

மெக்சிகோவில் பூர்வீக செவ்விந்திய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சியாப்பாஸ் மாநிலத்தில்,  "சப்பாத்திஸ்தா தேசிய விடுதலைப் படை" (EZLN) கெரில்லா இயக்கம், ஒரு சில நாட்களுக்குள், பல நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 1 ஜனவரி 1994 ம் ஆண்டு, சுமார் 3000 போராளிகள், அந்த தாக்குதல்களில் பங்குபற்றியிருந்தனர். Ocosingo, Las Margaritas, Huixtán, Oxchuc, Rancho Nuevo, Altamirano, Chanal ஆகிய நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அரச அலுவலகங்களும், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் நிர்மூலமாக்கப் பட்டன. சிறைகள் உடைக்கப் பட்டு, கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். அரசு அவர்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனால் கிராமப் புறங்களில் கணிசமான பல பகுதிகள் EZLN கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. பிற்காலத்தில், அரச படைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய போதிலும், காடுகளும், மலைகளும் சேர்ந்த பகுதிகளில், இன்றைக்கும் EZLN நடமாட்டம் காணப் படுகின்றது.

மெக்சிகோவில் தலைமறைவாக இயங்கும், "Zapatista Army of National Liberation" புரட்சிகர அமைப்பின் தளபதி மார்கோஸ், ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கை:
 

நீங்கள் அதைக் கேட்டீர்களா? 
அது அவர்களுடைய உலகம் நொறுங்கி விழுவதன் சத்தம் 
எமது புது உலகம் எழுகின்றது 
பகல் என்றிருந்த நாள், இரவாக இருந்தது 
இரவு பகலாக மாறும், அதுவே நாளாகும். 
ஜனநாயகம்! 
சுதந்திரம்! 
நீதி! 

Communiqué of the Clandestine Revolutionary Indigenous Committee — General Command of the Zapatista Army of National Liberation. Mexico. 

 21 December 2012 

To whom it may concern 

 DID YOU HEAR? 
 It is the sound of their world collapsing. 
 It is that of ours rising anew. 
The day that was the day, used to be night. 
And night will be the day, that will be the day. 
Democracy! Freedom! Justice! 

From the Mountains of the Mexican Southeast. 

On behalf of the Clandestine Revolutionary Indigenous Committee — General Command of the EZLN Subcomandante Insurgente Marcos 
Mexico, 
December 2012

1 comment:

P.P.S.Pandian said...

Marxism is the alternative the corporate ruled capitalism.Time willtell in due course...P.Sermuga Pandian