Saturday, July 31, 2010

வெற்றி எப்.எம். மீதான தாக்குதல், ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

வெள்ளிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் வொய்ஸ் ஒப் ஏசியா நெட்வேர்க் நிறுவனத்தின் ஊடக செய்திப்பிரிவு எரித்தழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் மூவர் படுகாயமடைந்ததோடு பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களும் எரிந்து நாசமாகின.
இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் முற்றுப்புள்ளி வைப்பது அரசின் கடமையாகும்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக அந்நிறுவனத்தில் இயங்கும் வெற்றி எப்.எம். இன் நிகழ்ச்சி முகாமையாளர், செய்தியாசிரியர் மற்றும் சம்பவத்தினை நேரில் கண்ட அறிவிப்பாளர் ஆகியோரின் கருத்துக்களையும் சேதமடைந்த செய்திப்பிரிவினையும் காணொளியில் காணலாம்.



(www.tamilmirror.lk)

1 comment:

Mohamed Faaique said...

எப்போதாவது இலங்கையை நினைத்து சந்தோசப்படும் போது இப்படி ஏதாவது கேவலம்மான வேலை செய்து மானத்தை போக்கி கொள்கிறது.