Monday, October 06, 2008

மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு

போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய "கிறிஸ்தவ நாடுகள்" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது. பல நூற்றாண்டுகளாக மூர்(மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட "அல் அன்டலுஸ்" என்ற நிலப்பரப்பு, எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது. பின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழங்களில் போதித்தனர். (மேலதிக தகவல்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கவும்.)

இருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர். உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு உண்மைகளை திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.

இன்றைய ஐரோப்பா "ஜனநாயக பாரம்பரியத்தில்" வந்ததாக நாடகமாடுகின்றது. ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" போன்றவற்றை 20 ம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது.


_______________________________________________________________

When the Moors Ruled in Europe


14 comments:

Anonymous said...

துருக்கி, அல்பேனியா என்ற ஐரோப்பிய நாடுகளைத் தெரியுமா ? அவை ஒருகாலத்தில் கிறித்தவ நாடுகளாக இருந்தன. பாகிஸ்தான் ஒரு இந்து நாடாக இருந்தது. எகிப்து நாட்டில் பெருமளவில் கிறித்தவர் இருந்தனர். இவற்றையெல்லாம் இஸ்லாமுக்கு வாள்முனையில் மாற்றிய வரலாற்றையும் உங்கள் பதிவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Kalaiyarasan said...

நீங்கள் சொல்வதும் வரலாற்றில் நடந்த உண்மைகள் தான் முகமில்லா நண்பரே. அது பற்றி பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம். எந்த மதத்தின் ஆக்கிரமிப்பும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதல்ல. ஆனால் ஸ்பெயின் கிறிஸ்தவர்களைப் போல முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களும் நடந்து கொண்டிருந்தால்(கட்டாய மதமாற்றம், அல்லது மத/இனச்சுத்திகரிப்பு) ; நீண்ட காலமாக "மொகலாய பேரரசு" என்று அறியப்பட்ட இன்றைய இந்தியா, 100 சத வீதம் முஸ்லீம்களைக் கொண்ட நாடாக மாறியிருந்திருக்கும்.

Anonymous said...

hard work; nice information;leftist views; keep it up.
thevaabira

VANJOOR said...

DEAR KALAIYARASAN,

I HAVE RE-PUBLISHED THIS ARTICLE
IN MY BLOG

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/10/100.html

HOPE YOU WILL NOT HAVE ANY OBJECTION.

THANK YOU.

BEST REGARDS.
VANJOOR

Kalaiyarasan said...

Hi, Anonymous,
In fact this is European history.

Unknown said...

How about the genocide in Sudan
which is happening now.Turks massacred lakhs of christians
in the early decades of 20th century.
ஆனால் ஸ்பெயின் கிறிஸ்தவர்களைப் போல முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களும் நடந்து கொண்டிருந்தால்(கட்டாய மதமாற்றம், அல்லது மத/இனச்சுத்திகரிப்பு) ; நீண்ட காலமாக "மொகலாய பேரரசு" என்று அறியப்பட்ட இன்றைய இந்தியா, 100 சத வீதம் முஸ்லீம்களைக் கொண்ட நாடாக மாறியிருந்திருக்கும்.
mughals could not conqueor all
rulers who were against them
and the empire did not cover all
of india. there was much resistance to mughals.they did encourage conversion.But the country was too vast for them to control from one place and the population was not small enough to ensure 100% of conversion.muslim rulers also faced other problems
in india.so your argument
is nonsense.

ஆனந்தன் said...

போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய "கிறிஸ்தவ நாடுகள்" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது.
ஆனால் இவை இஸ்லாமியர்களால் பிடிக்கப்படும் முன்பு கிருஸ்தவ நாடாகத்தான் இருன்தது என்பதை வசதியாக மறப்பது சரியா?
பின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள்,

முன்னுக்கு பின் முரணாக உள்ளதெ உஙள் வாதம்,

Kalaiyarasan said...

//mughals could not conqueor all
rulers who were against them
and the empire did not cover all
of india. there was much resistance to mughals.they did encourage conversion.But the country was too vast for them to control from one place and the population was not small enough to ensure 100% of conversion.muslim rulers also faced other problems
in india.so your argument
is nonsense.//

Dear "I critisize Periyar",

You haven't read my comment propperly. I said "மொகலாய பேரரசு" என்று அறியப்பட்ட இன்றைய இந்தியா. That means the territory, which was rulled by the Moghuls, like Spain under the Christian Kings.

Your argument is not an answer to mine. Instead it tells another aspect of the history. I want to emphasize that my argument was about the ruling of Moghul emperers. The Moghuls weren't fanatic islamists, but moderate followers of Sufism. Akbar even created a new religion,which was a mix of Hinduism and Islam. The Moghuls may haven't conquered whole India, but southern states (including Tamil Nadu) were under Islamic rulers until the arrival of British. Even Hindu uprising of Rajastan, and Vijaya Nagar were later crushed by Moghuls and came under their realm. Even you agree with me by telling that Muslim rulers had other problems to tackle, than Islamization of India. In contrary to Moghuls, Spanish rulers were obsessed in Christianization of Spain, in spite of other problems.

Kalaiyarasan said...

ஆனந்த்,
நான் எந்த மதத்தையும் பின்பற்றுபவனல்ல. அதே நேரம் எனது பெற்றோர் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள் என்ற உண்மையை மறுக்கவுமில்லை, மறைக்கவுமில்லை. எந்த மக்களும் தங்களது கடந்த காலம் பற்றி தெரிந்து கொள்ள விரும்பாதது மட்டுமல்ல, அப்படி ஒன்று இருந்ததையே மறைப்பது நல்லதல்ல. நாகரீக வளர்ச்சி பல கலாச்சாரங்களின் கலப்பால் உருவாகின்றது. ஐரோப்பியரின் நாகரீகத்தில் இஸ்லாமிய மதத்தின் பங்கு கணிசமாக உள்ளதை பலர் மறைக்கிறார்கள். ஏன், நீங்கள் பாடசாலையில் கற்ற விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்கள் கூட ஐரோப்பிய-இஸ்லாமிய வேர்களை கொண்டிருக்கின்றன என்ற உண்மையை, உங்களால் மறுக்க முடியுமா? அதனைத் தான் இந்தப் பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் எந்த காலகட்டத்தில்(கி.பி. 711 - 1492) இஸ்லாமிய நாடுகளாக இருந்தன என்பதை குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கு முன்னர் கிறிஸ்தவர்களாக தானே இருந்தார்கள்? என்று நீங்கள் கேட்பது விதண்டாவாதம். அப்படி எல்லாம் கேட்டுக் கொண்டே போனால், கிறிஸ்தவம் வருவதற்கு முன்னர் ரோம மதத்தை பின்பற்றினார்கள், ரோமர்களின் வருகைக்கு முன்னர் கெல்ட்டிய அல்லது பினீசிய மதத்தை பின்பற்றினார்கள்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

மத அடையாளம் நிரந்தரமல்ல. மக்கள் காலங்காலமாக தங்கள் வசதிக்கேற்றவாறு, அல்லது கட்டாயத்தின் பேரில் வேறு வேறு மதத்திற்கு மாறி வருகிறார்கள், என்பது தான் இங்கே புதைந்திருக்கும் உண்மை. உங்கள் முன்னோர்கள் நீங்கள் தற்போது பின்பற்றும் மதத்தை பின்பற்றியிருக்கவில்லை. உங்கள் வருங்கால சந்ததி வேறு மதத்திற்கு மாறலாம், அல்லது என்னைப் போல எந்த மதத்தையும் பின்பற்றாமல் வாழலாம். இவையெல்லாம் நடக்கக் கூடியவை தான். அப்படி எல்லாம் நடக்காது என்று வாதிடுவது விதண்டாவாதம்.

Kalaiyarasan said...

Thank you for the useful link, Nazer.

fazludeen said...

hai,,,, kalai arason, i love ur thoughts,, email to me your articles and other good ones,. my id is fazlucit@gmail.com,,,,,,,,,,,,, i love muslim culture which is called now as religion.,, i like 2 get articles about indian muslims [how they differ from common muslims],,,,,,,

fazludeen said...

hi

Kalaiyarasan said...

Thank you for the comment, fazludeen.

shareef said...

i like your information.